Tagged: உடுப்பி

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

நாட்டின் பெரிய கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. கோயில் வழிபாட்டு முறைகளை தீர்மானிக்கிறவர்கள் பார்ப்பனர்கள்தான். தமிழ்நாடு கோயில்களில் உரிய ஆகமப் பயிற்சி பெற்ற எவரும் கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர்களால் இன்று வரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால், கேரளாவில் இப்படி ஒரு தடை இல்லை. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட சைவ வைணவ மதத் தலைவர்கள் இடம் பெற்ற குழு பரிந்துரை செய்த பிறகும் கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் ஒரு முறை நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் தாங்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய முடியும். ‘சூத்திரர்’ நுழைந்தால் தீட்டு என்று சாதிக்கிறார்கள். இது மத சுதந்திர உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் தடை ஆணை வாங்கி விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் ஊறித் திளைத்திருக்கும் சொரணையுள்ள ‘தமிழர்’...