Tagged: இலக்கியம்

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு – மயிலை பாலு

அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள், வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள். புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங் களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா “இந்திய நாத்திகம்” என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார், “உலகாயதம்” துவேகம் ஆகியவற்றின் பொருண்மைநாத்திகவாதமேஆகும்.இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாய வைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மையக் கருத்துக்களாக கொண்டிருந்தன. வேத வேள்விகளையும் வருணா சிரமங் களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன. உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன் படவில்லை. வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்தி களுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரை யறுத்தன. இயற்கை இறந்த...

நமக்கு இலக்கியம் உண்டா

நமக்கு இலக்கியம் உண்டா

பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான். அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால் சுவாமிகள், அடிகள், நாயன்மார், ஆழ்வார் ஆகிவிடுவார்கள். அவர்கள் அதிகமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்து பக்கத்தில் உள்ள கடவுள்களைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் பிரபந்தங்கள் ஆகிவிடுகின்றன. அக்கோவில்கள்பாடல்பெற்றகோவில்‘ஸ்தலங்கள்’ஆகிவிடுகின்றன. பாட்டு ‘தேவ ஆரங்கள்’ ஆகிவிடுகின்றன. யாரோ ஒரு சில புலவர்கள் வள்ளுவர், அவ்வை, கபிலர் போன்றவர்கள் நீதிநூல், நீதி மஞ்சுரி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம், நாலடி முதலிய பல நீதிகளைப் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்கள். 60, 70 ஆண்டுகளுக்கு முன் நான் திண்ணைப் பள்ளிகளில் படிக்கும்பொழுது இவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பைமேட்டிற்கு போகச் செய்யப்பட்டு விட்டன....