Tagged: இம்மானுவேல் சேகரன்

தோழர் கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!!

தோழர்.கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!! ************************* முத்துராமலிங்கத்தைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசியதாக தோழர்.கொளத்தூர் மணி மீது இந்து மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட சாதி வெறியர்கள் தங்களது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முத்துராமலிங்கம் குறித்த அவரது பேச்சிற்கு சாதிப் பாசம் அப்பட்டமாக வெளிப்படும் வண்ணம் இதுகாறும் தங்களை முற்போக்காளராகக் காட்டி வந்த பலரும் ்எதிர்வினையும் அறிவுரையும் வாரி வழங்கி வருகிறார்கள். முத்துராமலிங்கத்தைப் முக்கி முக்கி புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்நிலையில் சாதிவெறித்தனத்தின் உச்சபட்ச நடவடிக்கையாக தோழர்.மணி கடந்த 01.08.2017 அன்று மதுரைக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். முத்துராமலிங்கம் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர். சனநாயகப்பூர்வமாக சாதியாதிக்கத்திற்கு எதிராக தனது தன்மான உணர்வை வெளிப்படுத்திய காரணத்திற்காகவே இமானுவேல் சேகரனை கொலை செய்வதற்கு துணை நின்றவர். தன் சாதியைச் சார்ந்த அப்பாவி உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியூட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியவர். இதனால் மறவ்ர்,பள்ளர்...