Tagged: அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

சமஸ்கிருதப் பண்பாடு – தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை விளக்கிடும் அறிஞர்கள் கருத்து. விவேகானந்தர் எதிர்ப்பு “நான் என் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண் டிருக்கின்றேன். எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத் தோன்றுகிறதெனில், சாதாரண மக்களுக்கு அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொது மக்களுடைய சொந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.” (விவேகானந்தர் – இந்திய பிரசங்கங்கள் பக்கம் 183-84) வள்ளலார் எதிர்ப்பு வடலூர் இராமலிங்க அடிகளார் பின்வருமாறு சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதியுள்ளார். “இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பொழுதுபோக்கையும் உண்டு பண்ணு கின்ற மொழி.” (வள்ளலார் ஒருமைப்பாடு பக்கம் 284) இப்படி எழுதிய வள்ளலார், “இத்தகைய ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் என் மனம் செல்லாமல், எளிய இனிய தமிழ் மொழியில் மனம் செல்லுமாறு பணித்தாயே” என்று மனமுருகி இறைவனைப் புகழ்கிறார். கால்டுவெல் எதிர்ப்பு வடமொழி, தமிழ் முதலான பல மொழிகளில்  சிறந்த பயிற்சியும், புலமையும் உடைய...