கழகக் கூட்டங்கள் முரசொலி ஏடு பாராட்டுகிறது!

சமூகநீதிப் போராட்டங்கள் பெற்றுத்தந்த உரிமைகள், நமது தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது. திராவிடக் கொள்கைகளே நமது மாற்றங்கள், கட்டமைப்புகள் அனைத்துக்கும் காரணமாக உள்ளன. இந்த நிலையில் தான் வல்லூருகள் போல நம்மைச் சூழ்ந்துகொள்ள துடிக்கின்றன வகுப்புவாத அரசியல் சக்திகள்.
சனாதனத்தை விரட்டி சமூகநீதி காத்த திராவிட நிலத்தில் மீண்டும் சனாதனத்தை நிறுவ விரும்புகின்றனர். முயற்சி செய்கின்றனர். அதற்காக பல மட்டங்களில் அரசியல் செய்து வருகின்றனர். கிடைக்கும் மேடைகளில் சனாதன கருத்துக்கு ஆதரவாக பேசி, மக்களை திசை திருப்புகின்றனர். இந்த வேளையில் திராவிடர் விடுதலைக் கழகம் எது திராவிடம்? எது சனாதனம்? என நடத்தும் தெருமுனைக் கூட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் 200 இடங்களில் நடத்த திட்டமிட்டு, அதற்கான பிரச்சார வாகனத்தையும் வடிவமைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன.
தேர்தல் காலம் நெருங்கி வருவதால் முன் எப்போதை விடவும் வகுப்புவாத சக்திகளும் சாதிய சக்திகளும் தமிழ்நாட்டைச் சூழ்ந்து நாளொருவண்ணம் குழப்பங்களை உருவாக்கி வருகின்றன. இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்த முயற்சி மக்கள் மனதில் கொள்கையை பாய்ச்சும், சிறந்த பாய்ச்சல்!
பெரியார் முழக்கம் 20072023

You may also like...