பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம், திருவள்ளுவர் திடலில் மடத்துக்குளம் மோகன் நினைவு மேடையில், 24.06.2023 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கமாக கோவன் தலைமையிலான ம.க.இ.க மய்யம் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடனும், கண்ணையா திவிக-விற்கு என்று அவரே எழுதிய பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கியது.

சபரிகிரி வரவேற்புரையாற்ற, பொள்ளாச்சி நகரமன்ற தலைவர். சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து மாரிமுத்து மக்கள் விடுதலை முன்னணி, தி.செ.கோபால் ஆதித்தமிழர்பேரவை, வானுகன் தமிழ்ப்புலிகள்கட்சி, வழ.சேதுபதி தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம், ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுந்தரவள்ளி – த.மு.எ.க.ச, இராஜீவ் காந்தி தலைவர் – திமுக மாணவரணி, காசு. நாகராசன் – அமைப்புச் செயலாளர் – தி.இ.த.பே., இரா.நவநீதகிருஷ்ணன் – நகரசெயலாளர் – திமுக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்வானது கோவை மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகரம் : வெங்கட், ஜெயந்த். திருப்பூர்: துரைசாமி, முகில்ராசு,ஆசிரியர் சிவகாமி,மகிழவன்,பாண்டியநாதன், அய்யப்பன்,சிவானந்தம்,கணக்கன். ஆனைமலை : அரிதாசு, அப்பாத்துரை, கணேசு, அனுசுயா, மணி, வினோதினி, நிறைமதி ஆகியோருடன், திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, நல்விடியல் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 06072023 இதழ்

You may also like...