உத்ரகாண்ட்டில் இஸ்லாமிய வெறுப்பரசியல்

இந்து கடவுளர்கள் வாழும் உத்ரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழக்கூடாது என்று சங்கிகள் இஸ்லாமியர்களை வன்முறையால் வெளியேற்றி வருகிறார்கள். அவர்கள் வீடுகளைப் பறிமுதல் செய்து வருகிறார்கள், புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ள இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. விசுவ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பும் ’தெய்வங்கள் வாழும் பூமி’ என்ற அமைப்பை நடத்தி வரும் தட்சண் பாரதி என்பவர் தலைமையிலான மத வெறியர்களும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த இன வெறி ஆட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாஜக ஆட்சி அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த வெறிச்செயலை அனுமதித்துக் கொண்டு இருக்கிறது.

 

2019 – லேயே இந்த இன ஒதுக்கல் என்ற மத வெறுப்பு அரசியல் இங்கே தொடங்கிவிட்டது. ’இந்து தெய்வங்கள் வாழும் பூமி’ அமைப்பு உத்ரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று ஒன்றரை லட்சம் துண்டு பிரசுரங்களை அச்சடித்து பகிரங்கமாக விநியோகித்தது. மாநில ஆட்சி கண்துடைப்புக்காக தட்சண் பாரதியை கைது செய்து பிறகு விடுதலை செய்து விட்டது. அவர் இப்போது மீண்டும் வன்முறை வெறியாட்டத்தை தொடங்கி இருக்கிறார், இந்த மத வெறி பாசிஸ்ட்டுகள் தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூச்சல் போட்டு வருகிறார்கள்.

பெரியார் முழக்கம் 22062023 இதழ்

You may also like...