பார்ப்பனியம் புகுத்தும் இந்தி

பார்ப்பனியம் இன்று இந்தியைத் தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதன் உண்மை கருத்து என்னவென்றால், அரசியலுக்கு அல்ல. பொருளியலியலுக்காக அல்ல. அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல.

இன்று தமிழ்மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கண்டிருக்கும் பார்ப்பனீய மதஉணர்ச்சியைத் தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி பார்ப்பனீயத்துக்குத் தமிழ் மக்களை புராணகாலம்போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்கேயாகும். 

#பெரியார்

குடியரசு 15/5/1938

You may also like...