பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்.17 தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியைச் சார்ந்த அபிராமிக்கும், சாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக் கொண்டனர். எளிமையாக நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

பெரியார் முழக்கம் 28092017 இதழ்

You may also like...