கரூரில் மதவெறி அரசியல் கண்டன கருத்தரங்கம்

பா.ஜ.க. மதவெறி அரசியலை தோலுரிக்கும் கருத்தரங்கம் 7.6.2017 அன்று மாலை கரூர் திருநீலகண்டர் திருமண மண்டபத்தில் ‘கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ தலைவர் மா. இராமசாமி தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். உரையாற்றிய தோழர்கள் விவரம்:

ம. காமராசு (தமிழர் பண்பாட்டுப் பேரவை), இரா. முல்லையரசு (கரூர் மாவட்ட செயலாளர், ஆதி தமிழர் பேரவை), மலையூர் ஆறுமுகம் (கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு), பழனிச்சாமி (சமூக செயற்பாட்டாளர்) ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.  இரா. காமராஜ் (கரூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். மற்றும் திருமதி கிறிஸ்டினா சாமி (தலைமைக் குழு உறுப்பினர், சுயராஜ் இந்தியா), முகிலன் (சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கம்), வழக்கறிஞர் பெ. ஜெயராமன் (மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி), எம்.எம். ஷேக் அமானுல்லா (மாவட்ட தலைவர் மனிதநேய மக்கள் கட்சி), ஜாபர் (sdbi பள்ளபட்டி), வழக்கறிஞர் இராம. இராஜேந்திரன் (தலைவர், கரூர் தமிழ்ச் சங்கம்), ந. விஸ்வநாதன் (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்), பால சசிக்குமார் (மாநில ஊடகப் பிரிவு செயலாளர்), தலித் பாண்டியன் (குடியரசு கட்சி). வழக்கறிஞர் இரா. முருகேசன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), எம். ஜாகீர் உசேன் (மாவட்ட பொறுப்பாளர், மனிதநேய ஜனநாயக கட்சி), மோகன் குமார் (மாவட்ட தலைவர், ஆதி தமிழர் கட்சி), கு.கி. தனபால் (மாவட்ட தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் உரையாற்றினர். ம.முத்து நன்றியுரை ஆற்றினார். முடிவில் அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 22062017 இதழ்

You may also like...