Author: News DVK

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிரதமர் மோடியால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு 60% நிதிச்சுமையை ஒன்றிய அரசும், 40% மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக...

தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!

தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!

ஜவகர்லால் நேருவின் ஆட்சிக்காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் வரையில் இந்தியாவில் 188 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பிறகு ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை. அதற்கு மாறாக, பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கூறுபோட்டு விற்கப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்று, 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமென்று 2 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline). தற்போது மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலம் தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 2023-2024ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 19,000 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருக்கிறது பாரத் பெட்ரோலியம். “வணிகம் செய்வது ஆட்சியாளர்களின் வேலையல்ல, அரசை நிர்வகிப்பது...

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கு என்றென்றும் துணைநின்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. திராவிட மாடலின் அடித்தளமான ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டில் உறுதியோடு இருந்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து அவருடைய மானுடப் பணிகளை போற்ற வேண்டியது திராவிட இயக்கத்தின் கடமை. குன்றக்குடி அடிகளார் குறித்து 2018ஆம் ஆண்டு நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அவருடைய நூற்றாண்டின் தொடக்கதில் பகிர்கிறது புரட்சிப் பெரியார் பெரியார் முழக்கம். கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறைகளையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும்,...

இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 08.07.2024 அன்று இளம்பிள்ளையில் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் 05.07.2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி இளம்பிள்ளையில் பொதுக் கூட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட், மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் (கி) மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், சௌந்தரராஜன், தனசேகர், கோபி, திவ்யா, தமிழ்மணி, தமிழ், கவியரசு, சேகர்,...

கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 30.06.2024 அன்று நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார், கெலமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் சிறப்புரையாற்றினார்.. நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை பட்டியலிட்டு நிறைவுரையாற்றினார். செந்தில் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூர் புதூரில் குடிஅரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் – கொடியேற்றம் – இல்லத் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் புதூரில் குடி அரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 06.07.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு மடத்துகுளம் ஒன்றியக் கழகத் தோழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தொடக்கமாக காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை கவனித்தனர். பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் வரவேற்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், கழகத் தோழர்கள் சரவணன், இலக்கியா, சங்கீதா, செல்வி, ஆரியமாலா, சிந்தனை செல்வி, தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, விசிக மாவட்ட செயலாளர் சதீசு, திராவிடத் தமிழர் கட்சி கொள்கை பரப்புச்...

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

23.06.2024 அன்று கொளத்தூரில் நடைபெற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாள் விழாவில் மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் ஆற்றிய வாழ்த்துரை. கடந்த இதழின் தொடர்ச்சி… காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரைக்கும் இருவரும் பேசினார்கள். அந்த பேச்சில் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க உக்கம்பருத்திக்காடு, செங்கப்பாடி என சுற்றுவட்டார ஊர்களைப் பற்றியே பேசினார்கள். கடைசியாக மணி அண்ணன், ராஜ்குமாரை எப்போது வெளியில் விடுவீர்கள் என்று வீரப்பனை பார்த்து கேட்டார். நீங்கள் வேண்டுமானால் இப்போதே கூட்டிச் செல்லுங்கள் என்றார் வீரப்பன். அப்போது அண்ணன், வேண்டாம் நான் வந்ததே யாருக்கும் தெரியாது. தமிழ் (சிவசுப்பிரமணியம்) வரச் சொன்னார் என்று வந்தேன். நாம் சந்திச்சதுக்கு அடையாளமாக ஆடியோ கேசட் மட்டும் பேசி பதிவு செய்து கொடுங்கள் என்று மணி அண்ணன் கேட்டுக்கொண்டார். கேசட்டை வாங்கிக் கொண்டு அண்ணன் புறப்பட்டார். கொளத்தூர் மணியின் அணுகுமுறை வீரப்பனின் இந்த...

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

இந்தியாவில் பாபாக்கள், கடவுள் அவதாரங்கள் பெருகி வருவதற்கான காரணம் என்ன? Times Of India நாளேடு (ஜூலை7) ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளது. பெரும்பாலான பாபாக்கள் சமூகத்தில் விளிம்புநிலையில் இருந்தே வருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் போலே பாபாவின் பேச்சைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலும் தலித் மக்கள். அதில் பெண்களே அதிகம். பாபாவோ ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்துக் கொண்டவர். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள மேல்தட்டு மக்களும் அவருக்கு சீடர்களாக இருக்கிறார்கள். தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாபாக்களை நோக்கி வருவதற்கான காரணம் ஜாதியக் கட்டமைப்பு தான் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். சமூகவியல் பேராசிரியரான கல்யாணி இது குறித்து கூறுகையில்:- ஜாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளையும், சுமைகளையும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள். பாபாவின் சீடர்களாக மாறும்போது இந்த தடைகளில் இருந்து விலகி நிற்க முடிகிறது. ‘தேவி...

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக காய்ச்சப்படுவதும், அதனால் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, சாராய வியாபாரிகளுடன் திரைமறைவு உடன்படிக்கைகளை செய்துகொண்டு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுகிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. எனவே காவல்துறை நியாயமாக செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதோ, அதுகுறித்த கோரிக்கைகளை எழுப்புவதோ அவசியமற்றது. இருப்பினும் அரசியலுக்காக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒருவேளை மதுவை ஒழிப்பதுதான் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்கான ஒரே தீர்வு என்று கூறுவார்களேயானால், மது மட்டுமே போதை இல்லை. ஆன்மீகம் அதைவிட மிகப்பெரிய போதையாக இந்த நாட்டில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக ஜூலை இரண்டாம்...

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

ஒன்றிய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற் கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடை முறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா – 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம் – 2023’ என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள...

நேரில் மரியாதை

நேரில் மரியாதை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இதில் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

‘அறிவுஜீவி ஆம்ஸ்ட்ராங்’

‘அறிவுஜீவி ஆம்ஸ்ட்ராங்’

பெரும் மதிப்பிற்குரிய பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வளர்ந்து வரும் இளம் தலைவர் ஆவார். நம்முடைய பார்வையில் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு ‘அறிவு ஜீவி’ அவர் பவுத்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அம்பேத்கரியத்தை முழுமையாக கற்றறிந்து அதில் கரைதேர்ந்தவர் ஆவார். அம்பேத்கர் எந்த அத்தியாயத்தில் என்ன பேசியிருக்கிறார் என்பதை நினைவில் வைத்து பேசக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர் தோழர் ஆம்ஸ்ட்ராங். அவர் ஒரு அரசியல் கட்சியில் இருந்தாலும், ஒரு போதும் அரசியல் முரண்களில் சிக்கிக்கொள்ளவில்லை. தன்னுடைய கட்சித் தோழர்களை அம்பேத்கரிய சிந்தனையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் முழு ஈடுபாடுக் கொண்டு பணியாற்றியவர் தோழர் ஆம்ஸ்ட்ராங். அவர் பொதுக்கூட்டங்களை விட அதிகளவில் பயிற்சி வகுப்புகளைத் தான் நடத்துவார். மேலும் தோழர் ஆம்ஸ்ட்ராங், திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு மிகவும் நெருக்கமானவராகத்தான்...

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகத்திற்கான பேரிழப்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் செய்தி!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 05.07.24 அன்று இரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்கின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது. தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமை குறித்து தெளிவான பார்வைக் கொண்டவர். அவரிடம் நெருங்கி பழகும் பொழுது தான் அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளை அறிய முடிந்தது. சமூகம் குறித்தான பெரிய அக்கறையையும் இந்த சமூகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தெளிவும் சமூக சிக்கல்களை தீர்க்கும் பேரார்வம் கொண்டவராகவும் அவர் இருந்தார். தோழரின் இழப்பு அவரது கட்சிக்கான இழப்பாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கான ஒரு இழப்பாகவே நாம் பார்க்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தன்னை ஜாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த...

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

சமூக நீதிக் காவலரும், முன்னாள் ஒன்றியப் பிரதமருமான வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாளையொட்டி, சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

வட சென்னை கழகத் தோழர் விஜயனின் தந்தை ஏகாம்பரம் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.06.2024 அன்று புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.. தோழர் அருள்தாஸ் தலைமையில், தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏகாம்பரம் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், சிபிஐ (எம்) அன்பு, விசிக தமிழ்மணி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். தோழர் விஜயன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

ஜூன் 25, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாள். இந்தியாவில் முதல்முறையாக அவருக்கு சிலை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அவருக்கு முழு உருவச்சிலையை நிறுவி தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை இந்திய ஒன்றியத்திற்கே உணர்த்தியது. இந்தியாவில் எந்தவொரு வீதிக்கும் வி.பி.சிங் பெயர் சூட்டியதாக வரலாறு கிடையாது. எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் அவர் பெயரை சூட்டியது இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது. வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியான அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தான் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ராமன் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வி.பி.சிங் அரசை கவிழ்த்தது பாஜக. அந்த நிலையில் தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உங்களின் பின்னால் நிற்கிறது என்பதை வி.பி.சிங்கிற்கு...

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் 2024 தேர்வு முடிவுகள், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த வரு டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று வந்த நிலை யில், இந்த வருடம் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள் ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட ‘இறுதி விடைகளுடன்’ மாணவர்கள் தனது OMR (Optical Mark Recognition Sheet) நகலை ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த மதிப்பெண்ணுக்கும், அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனையடுத்து உச்சநீதி மன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்க ளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளைக் கசியவிட்டது, ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றது, 1563...

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 28.5.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி வசந்தம் மகாலில் மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் உரையாற்றினார்கள். மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி இயக்க நிலை குறித்தும், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ப.அறிவழகன் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் பேசினார். நிறைவாக கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் “இன்றைய அரசியல் சூழலில் பெரியார் இயக்கத்தின் தேவை, எதிர்கால செயல்பாடுகள், இயக்க தோழர்களின் செயல்பாடுகள்” குறித்து விரிவாக உரையாற்றினார்கள். நிறைவாக முத்துகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடலூர் மாவட்டத்தில் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தோழர் மதன்குமார் மாவட்ட அமைப்பாளராக நியமனம்...

தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!

தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜாதிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் விளக்கியிருக்கிறார். அத்துடன், “சமூகநீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி – சமஉரிமை – ஜாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜாதிப்புனிதம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதில் தான் இந்து மதத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அத்தகைய ஜாதிப் புனிதத்தை காக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக பெண்களிடமே இருக்கிறது என்கிறது மனு சாஸ்திரம். “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள்...

பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளி மாணவரை, சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். பள்ளிச்சூழலில் ஜாதிய மோதல்கள், விவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பல நல்ல ஆலோசனைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு : • ‘கள்ளர் மறுசீரமைப்புப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசுப் பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். • பள்ளிப் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளித் துவங்க அனுமதி அளிக்க...

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தாரமங்கலம் நகரக் கழகத்தின் சார்பில் “குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டம் 20.06.2024 அன்று தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பவளத்தனூர் சரவணன் தலைமை தாங்கினார், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் வரவேற்புரையாற்றினார், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கே.ஆர்.தோப்பூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு...

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!

பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது! ஊழலில் சிக்கி கைது நடவடிக்கைக்கு ஆளானவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதா? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்! தமிழ்நாட்டு அரசு இத்துணைவேந்தர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை! சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு‌ பெற தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இத்துணைவேந்தர் மீது தனியார் நிறுவனத்தை‌ பல்கலைக்கழகத்தில் துவங்கியது‌, பட்டியலின‌‌ மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை‌ பின்பற்றாதது‌, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு‌ மதிப்பு அளிக்காமல்‌ பதிவாளரைப் பணியில் இருந்து விடுவித்தது‌, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது‌‌ போன்ற‌ குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் ஊழல்‌ தொடர்பாக‌ கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு‌ பணி நீட்டிப்பு வழங்க முடிவு...

பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்

பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்

ஒன்றியத்தில் மைனாரிட்டி பாஜக அதிகாரத்துக்கு வந்தவுடனே தனது அடக்குமுறைகளை ஏவத் தொடங்கிவிட்டது. உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், புக்கர் பரிசைப் பெற்றவருமான அருந்ததி ராய் மீது உஃபா சட்டத்தை ஏவுவதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். அவர் மட்டுமின்றி காஷ்மீர் பேராசிரியர் சேக் சவுகத் உசைன் என்பவர் மீதும் இந்த சட்டத்தை ஏவுவதற்கான வேலைகளை செய்துவருகின்றனர். அப்படி என்ன குற்றத்தை செய்துவிட்டார் அருந்ததிராய்… சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2010ஆம் ஆண்டு டெல்லியில் காஷ்மீர் விவகாரம் குறித்து நடைப்பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அருந்ததி ராய் பேசினார். அப்போது காஷ்மீர் குறித்த தனது கருத்துகளை அங்கு பதிவு செய்தார். பேராசிரியர் சேக் சவுகத் உசைனும் இதே கருத்தை தான் பதிவுசெய்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இந்த கருத்தரங்கை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டவிரோதமாக அங்கு எதுவும் பேசப்படவிடவில்லை. தேச விரோத சட்டங்கள் பாயும்...

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம் பழனி கீரனூரில் 11.06.2024 – 12.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிலரங்கை கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் “பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பொருத்தப்பாடு” மற்றும் ”பெரியார் மீதான அவதூறுகளும்” என்கிற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பெரியாரின் பெண் விடுதலை என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொருப்பாளர் சிவகாமியும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் (இந்திய) பார்ப்பனர்களின் பங்கு என்கிற தலைப்பில் ம. கி. எட்வின் பிரபாகரனும் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் டெலஸ்கோப் மூலம் நிலவைக் குறித்து அறியும் அறிவியல் வகுப்பினை பேராவூரணி கலைச்செல்வன் நடத்தினார். முதல்நாள் நிறைவாக் சமூக ஊடகங்கள் குறித்து முகநூல் பொறுப்பாளர் பரிமளராசனும், இணையதள பொறுப்பாளர் விஜயகுமாரும் உரை நிகழ்த்தினார்கள். இரண்டாம் மற்றும் நிறைவு நாளான 12.06.2024 அன்று திராவிடர் இயக்கத்தின்...

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்காரர்களே இருக்கிறார்கள். பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப்போய் வந்துவிட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக்கொள்ள ஆள் இல்லை. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.” என்று வர்க்கத்துக்கும் வருணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீண்ட உரையாற்றினார். அந்த உரையின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு: சமீபத்திய சமத்துவமின்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்மொழிவுகள்” என்ற தலைப்பில் World Inequality Lab...

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி

அயனாவரம் மதிவாணன் – ரூ.1000/- திருச்சி சௌந்திரராசன் – ரூ.1000/- நன்கொடை அளிக்க விருப்பமுள்ளோர் கீழ்க்கண்ட ஜி-பே எண் மூலமாக செலுத்தலாம். எண் : +91 63697 76351 பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபனின் பெற்றோர் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 15.06.2024 அன்று நெமிலி பெரப்பேரி கிராமத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சிவா தலைமை தாங்கினார். நிகழ்வில் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நரேன் நன்றி கூறினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன், அன்பு, மற்றும் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

வட சென்னை மாவட்டத் தோழர் விஜயன் அவர்களின் தந்தை கோ. ஏகாம்பரம் அவர்கள் 11.06.2024 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் கொள்கை முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, எந்தவித இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கே.பி.பார்க் பகுதியில் நடந்தது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

வினா விடை

வினா விடை

• அயோத்தி ராமன் கோயிலுக்கு விடப்பட்ட அனைத்து விமான சேவைகளும் ரத்து – செய்தி ஆமாம், பூரி ஜெகநாதன் கோயிலுக்கு திருப்பி விடப் போகிறோம். இராமன் இனி சுத்த வேஸ்ட். • விருதுநகர் மறையூரில் உள்ள கிராமக் கோயிலில் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டார்கள். பெண்கள் பங்கேற்க கூடாது – செய்தி ஆமாம் நாங்கள் மாமிசம் சாப்பிடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் நாட்டார் தெய்வப் பெருமை. • பதவியேற்பு விழாவில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் எடுத்து வணங்கினார் மோடி – செய்தி என்ன இருந்தாலும் முதல்முறையாக ஒன்றை பார்க்கும் போது உணர்ச்சிப் பொங்கத்தானே செய்யும். • நீட் தேர்வு தேவையில்லாதது – அன்புமணி ஆனால் நீட் தேர்வை திணிக்கும் மோடி ஆட்சி தேசத்திற்கு தேவையானது • சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் பேரக் குழந்தையை கொன்ற தாத்தா கைது – செய்தி ஜாதி...

தலையங்கம் – ஜாதி ஒழிப்புப் பரப்புரையை கூர்மைப்படுத்துவோம்!

தலையங்கம் – ஜாதி ஒழிப்புப் பரப்புரையை கூர்மைப்படுத்துவோம்!

நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த காதல் தம்பதிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்’ என்ற ஜாதி வெறி அமைப்பு அடித்து நொறுக்கியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த பந்தல் சிவா என்பவரின் தலைமையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இதனை பெண் வீட்டாரின் வழக்கமான எதிர்ப்பு மனநிலை என்று கருதிவிட முடியாது. பந்தல் சிவா என்பவர் ஜாதியின் பெயரால் ரவுடித்தனமும், கட்டப் பஞ்சாயத்தும் செய்துகொண்டிருக்கும் நபர். “தனது சொந்த செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும், ஜாதித் திமிரை வெளிக்காட்ட வேண்டும்” என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டே இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியிலும், அகில இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியிலும் முக்கிய அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இத்தகைய தாக்குதலை துணிச்சலாக நடத்தியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஜாதிவெறி அமைப்புகளின் சட்டவிரோத துணிச்சல் போக்கை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு...

ஒரு நீதிபதியின் லவ் ஜிகாத் தீர்ப்பு

ஒரு நீதிபதியின் லவ் ஜிகாத் தீர்ப்பு

சங்கிகள் நீதிபதிகளாக அமர்ந்து கொண்டு சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து வருகிறார்கள். ம.பி மாநிலத்தில் ஒரு கூத்து நடந்திருக்கிறது. 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின் நோக்கமே ”வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் நிகழும் திருமணங்களை சட்டப்படி பாதுகாப்பது தான். ஆனால் இப்படி நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறார் ஒரு சங்கி நீதிபதி. இந்துப் பெண்ணும், முஸ்லிம் ஆணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடிவு செய்கிறார்கள். பெண் வீட்டாரின் கொலை மிரட்டலால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள் அந்த தம்பதியினர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதோடு, முஸ்லீம் மத சட்டத்தின் படி உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த திருமணம் செல்லாது என்று வழக்கின் நோக்கத்திற்கு அப்பால் சென்று தீர்ப்பு வழங்குகிறார். திருமணம் என்பது கூட ஒரு பக்கம் இருக்கட்டும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது...

ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ஜாதிவெறி கும்பல் தாக்கிய சம்பவத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்! தாக்குதல் நடத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் ஜாதி மறுப்பு காதல் இணைய ர்களுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜாதி அமைப்பு நடத்திவரும் பந்தல் ராஜா என்பவரின் தலைமையில் வந்த ஜாதி வெறி பிடித்த 25 பேர் கொண்ட கும்பல் காவல்துறை முன்பே அலுவலக கண்ணாடிகள் கதவுகள் பிரிட்ஜ் உள்ளிட்ட உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளார்கள். திருநெல்வெலி மாநகரம் பாளையங்கோட்டை நம்பிக்கை நகரில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மதன் குமார் (28) என்பவரும்,பெருமாள் புரத்தில் வசிக்கும்...

எச்சிலில் உருள்வது யாரால்?

எச்சிலில் உருள்வது யாரால்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தின்படி மக்களுக்கு பகுத்தறிவூட்டி மானமும் அறிவும் மிக்க சமுதாயமாய் இந்த திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள பிற சமுதாயங்களுக்கு ஒப்பாக கொண்டு வர தன் வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் வழியில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கோரிக்கை மனுவை உள்ளடக்கியதே இந்த சிறு வெளியீடு. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் மூடத்தனமான திர்ப்பை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கை மனுவும் அதோடு பார்ப்பனர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரள்வது புண்ணியம் என்று கட்டமைத்து வைத்திருக்கும் சனாதனத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களை கண்ணியத்தோடு வாழ வைக்க வேண்டிய முயற்சியின் ஓர் அங்கமே இந்த வெளியீடு. 32 பக்கங்கள், 30 ரூபாய். நிமிர்வோம் வெளியீடு புத்தகம் பெற ஜி பே – வாட்ஸ் அப் 94986 56683 பெரியார் முழக்கம்...

அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றது. இசுலாமிய வெறுப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இப்போது தனது அமைச்சரவையிலும் ஒரு இசுலாமியருக்கு கூட இடம் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி பாஜகவின் சார்பாக அமைச்சர்களாகி இருக்கும் அனைவரும் கடவுளின் பெயராலேயே பதவியேற்றுக் கொண்டனர். ஆனாலும் இது முழுமையான பாஜக ஆட்சி இல்லை. கூட்டணி ஆட்சிதான் என்பதை உணர்த்தும் விதமான நிகழ்வுகளும் பதவியேற்பில் நடந்திருக்கின்றன. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் ஜிதன்ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜிவ் ரஞ்சன், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா, தெலுங்குதேசம் கட்சியின் சந்திரசேகர், இந்தியக் குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே ஆகிய 5 பேரும் அரசியலமைப்பின் மீது உறுதியேற்று ஒன்றிய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் யாரும் பதவியேற்பின்போது கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவருமே பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் சார்பாக...

பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனங்களை வைக்கும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடுவது ‘வாரிசு அரசியல்’. வாரிசு அரசியலால் இக்கட்சிகள் நாட்டையே சீரழித்துவிட்டன என்பதுபோல மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போது மோடியின் மூன்றாவது ஆட்சியிலும், அமைச்சரவையிலும் வாரிசுகளாக நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பட்டியலை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பல தலைமுறைகளாக போராட்டம், சேவை, தியாக உணர்வுடன் உள்ள பாரம்பரியத்தை வாரிசு அரசியல் என சொல்லும் மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளனர். இது மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையே காட்டுகிறது. என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். பட்டியல் 1. எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். 2. ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன். 3. ராம்நாத் தாக்கூர் –...

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் ஜி.ஆர்.சாமிநாதன் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் உடனே விசாரணைக்கு எடுத்ததாகக் கூறினார் ஜி.ஆர்.சாமிநாதன். அத்துடன் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்தார். நீதிபதி பாலாஜி குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யாததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. காவல்துறைக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார். பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எந்தவொரு...

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி. இந்த வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஜி.ஆர்.சாமிநாதன் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அண்மையில் சவுக்கு சங்கர் என்பவரின் வழக்கில் கூட, 15 வழக்குகளை தள்ளிவைத்துவிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். 2 செல்வாக்கு உள்ள நபர்கள் அவருடைய அறைக்குச் சென்று, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார்கள் என்றும், அது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்பதால் உடனடியாக விசாரித்தேன் என்றும் ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். அது ஒருவேளை உண்மை என்றால், தானாகவே (suo moto) அவர்கள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை...

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திலீபனின் தாயார் தாயாரம்மாள் 03.06.2024 திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் முடிவெய்தினார். இறுதி நிகழ்வு இன்று 04.06.2024 மாலை 4.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அம்மையாரின் உடலுக்கு வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். அம்மையாரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம், 15.06.2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்கின்றனர். பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

குடிஅரசு கையேடு

குடிஅரசு கையேடு

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும். சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு வீச்சோடு களமிறங்கியது. 1938 டிசம்பர் இறுதி நாட்களில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்னும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் தலைவராக இந்தி எதிர்ப்புக்காய் சிறைப்பட்டிருந்த நிலையிலேயே பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். முற்று முழுதாக வேறு திசை விலகலின்றி சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகளை மட்டுமே ஆற்றிவந்த அருமையான காலகட்டம் 1925 முதல் 1938 வரையிலான காலமாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து ‘பெரியார்...

திருமணம் தனிநபரின் உரிமை

திருமணம் தனிநபரின் உரிமை

“திருமணம் என்பதில் சம்மந்தபட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தவிர, மற்ற எவருக்கும் அதில் முடிவெடுக்க உரிமையில்லை. கட்டாயத் திருமணங்கள் ஒழிக்கப்பட்டு, மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேசியவர் பெரியார். பேசியதோடு மட்டுமில்லாமல் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன மதச் சடங்குகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, சுயமரியாதை உணர்வோடு இணையர்களாய் கரம் கோர்ப்பதற்கான சுயமரியாதைத் திருமண முறையையும் பெரியார் அறிமுகப்படுத்தினார். முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது 1928ஆம் ஆண்டில். இன்னும் 4 ஆண்டுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனாலேயே காதல் திருமணங்களோ அல்லது ஜாதி கடந்த திருமணங்களோ...

தலையங்கம் – பாஜகவின் கலவரக் கொள்கை!

தலையங்கம் – பாஜகவின் கலவரக் கொள்கை!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜகவே மீண்டும் உருவெடுத்திருந்தாலும், அந்த கட்சி பெற்றிருக்கிற பின்னடைவு மிகப்பெரியது. பாஜகவின் இந்த பின்னடைவு குறித்து ‘ஆர்கனைசர்’ இதழில் சுட்டிக் காட்டியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ரத்தன் சாரதா, “400 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறிக்கொண்டிருந்த பாஜக தலைவர்கள் – தொண்டர்களுக்கு கள உண்மை என்ன என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது தேர்தல் முடிவுகள். எதிர்க்கட்சிகளின் தைரியத்தை பாஜகவினர் உணராமல், கருத்துக்கணிப்பு மாயையில் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மோடியின் புகழை மட்டும் ரசித்துக்கொண்டு, களத்தில் ஒலிக்கும் குரல்களை காது கொடுத்துக் கேட்காமல் விட்டுவிட்டனர். கூட்டணி விவகாரங்களில் எடுத்த தவறான முடிவால், பாஜகவின் மதிப்பு குறைந்துவிட்டது” என்று கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். ராமர் கோயிலை முன்வைத்து 30 ஆண்டு காலமாக பாஜக முன்னெடுத்து வந்த கலவர அரசியல் காலாவதியாகிவிட்டது. மோடி பிம்பமும் மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலையில், பாஜகவின் கட்டமைப்பிலேயே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதே...

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கு வதற்காக நீட் தேர்வை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ஆனால் நீட் எத்தகைய தரங்கெட்ட தேர்வு என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது தேசியத் தேர்வு முகமை. இத்தேர்வில் நடைபெற்றிருக்கிற மோசடிகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வரவைக்கும் அளவுக்கு எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன. தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எவராலும்...

தமிழ்நாடு வெற்றிக்கு கழகத் தோழர்களின் பங்களிப்பு!

தமிழ்நாடு வெற்றிக்கு கழகத் தோழர்களின் பங்களிப்பு!

பாஜகவுக்கும் அதற்கு பல்லக்கு தூக்கி வந்த அதிமுகவுக்கும் சரியான பாடத்தை தமிழ்நாடு தந்துள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் வென்று இந்தியா கூட்டணியில் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நிற்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த வெற்றிகளுக்கு பின்னால் பல இயக்கங்களின் கடும் உழைப்பு இருந்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே களமிறங்கியது. பாஜக – மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகங்களையும், தமிழக அரசின் சாதனைகளையும் தெருமுனைக் கூட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை எந்த பொருளாதார வசதியும் இல்லாத கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் நடத்திக் காட்டினார்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் இடைவிடாமல் நடத்தப்பட்டன. கழகத் தோழர்களின் இந்த உழைப்பு இந்த வெற்றிக்கு பங்களித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு மாதத்துக்கு மேல் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து இந்தக் கொள்கைப் பணியை செய்த தோழர்களின் உழைப்பு...

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” ஜுன் 11,12 ஆகிய தேதிகளில் பழனி – தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கீரனூர் S.M மினி மகாலில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பிலும், பெரியார் மீதான அவதூறுகளும், திராவிட இயக்கத்தின் இன்றைய தேவைகளும் என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தவுள்ளார். மேலும் கழக முன்னணியினர் வகுப்பெடுக்கவுள்ளனர். பயிலரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும் மருதமூர்த்தி – 9940969803 மாவட்ட அமைப்பாளர், திண்டுக்கல் பெரியார் முழக்கம் 05.06.2024 இதழ்

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணல். நெறியாளர்: ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்து உள்ளீர்களே! எதனால்? கொளத்தூர் மணி : கரூர் மாவட்டம் நெரூரில் ஒரு துறவியின் சமாதிக்கு வருகிறவர்கள் உண்ணும் எச்சில் இலைகளில் பக்தர்கள் உருளுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். அதை நீண்டகாலமான பழக்கம் என்றுசொல்லி, மனித மாண்புக்கு எதிரான ஒரு செயலை செய்துகொண்டிருந்தார்கள். இதைத் தடை செய்ய வேண்டுமென்று தலித் பாண்டியன் என்பவர் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி திரு மணிக்குமார், நீதிபதி திரு வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

தலையங்கம் – மண்ணைக் கவ்வியது மதவாதம்!

தலையங்கம் – மண்ணைக் கவ்வியது மதவாதம்!

நடைபெற்று முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் ஆணவத்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துராஷ்டிரக் கனவையும் அடித்து நொறுக்கியிருக்கிறது. “கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை, மோடி கடவுளின் அவதாரம், கடவுளுக்கு தோல்வி ஏது” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த இந்துத்துவவாதிகளை, ஆட்சியமைக்க அல்லல்படும் நிலைக்கு மக்கள் தள்ளியிருக்கிறார்கள். நானுறு தொகுதிகளுக்கு மேல் மிக எளிதாக வென்று விடலாம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அதுதான் மக்களின் தீர்ப்பு என்பதைப் போல பெரும்பாலான ஊடகங்களையும் பேச வைத்தது பாஜக. ஆனால் பாஜக வென்றிருப்பதோ வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவாத வெறுப்புப் பேச்சை நீக்கிவிட்டால் மோடியின் பரப்புரையில் வேறெதுவுமே இருக்கவில்லை. இதன்மூலம் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்டி, அவர்களின் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்பது பாஜகவின் கனவு. ஆனால் மக்கள் அந்த கனவில் மண்ணைத் தூவி பாஜகவை பெரும்பான்மை இல்லாமல் செய்துவிட்டார்கள். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவது என்ற சபதமெடுத்தது போல செயல்பட்டவர்கள், இப்போது பெரும்பான்மைக்கு...

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி! தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? இந்தியாவை ஒற்றை சர்வாதிகார மதவெறி ஆட்சியை நோக்கி இழுத்துசென்ற பாசிச சக்திகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உறுதியாக்கியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் உணர்த்தும் பாடங்கள் என்ன? 1. ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே மோடி என்ற ஆணவத்திற்கு மக்கள் சம்மட்டி அடிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தமுறை நானூறு இடங்கள் என்று முழங்கிவந்த பாஜக, கடந்தமுறை பெற்ற இடங்களை விட 59 இடங்களை இழந்திருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. 2. தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்