கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!
இன்றைய இந்தியாவின் மிக முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்திய ஒன்றியத்தை அந்த அமைப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்கலைக் கழகங்கள் முதல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது இந்த அமைப்பு உலகின் பிற நாடுகளிலும் பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனித்த அமைப்பு மட்டுமல்ல, பல நூறு அமைப்புகளுக்கான அமைப்பு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டில் எப்படி இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ் அடைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கோல்வாக்கரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான படைப்புதான் “Golwalkar: The Myth Behind the Man, The Man Behind the...
