Author: admin

எங்கும் பார்ப்பன ஆதிக்கமே 0

எங்கும் பார்ப்பன ஆதிக்கமே

கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக் காக்களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற்குட்பட்ட எல்லாத் தாலூகா போர்டிலும் பிராமண ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர். நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங்களையும், பார்ப்பனர்களே வெகுகாலமாகக் கொள்ளை யடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையாலேயேதான் நம் நாட்டில் பார்ப் பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின் பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக்கூடாது. பார்ப்பனரல்லாதார்களுக்கே கொடுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்கு சர்க்காரிலுங் கூட ஆதரவு காட்டிவந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்க நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதவர்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல் லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு லாயக்கில்லை யென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை....

மதுரைத் தீர்மானங்கள் 0

மதுரைத் தீர்மானங்கள்

மதுரைத் தீர்மானத்தைப்பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர் களும் என்னதான் பரிகாசமாகவும், அலட்சியமாகவும் பேசினாலும் பார்ப்பன ரல்லாதாரின் சுயமரியாதை, விடுதலை, செல்வநிலை ஆகிய எல்லாவற்றினது மார்க்கங்களும் அம்மதுரைத் தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை முதலியவை மாத்திரமல்லாமல் நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதையும், விடுதலையும், செல்வமும் அத்தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன. அவை மாத்திரமல்லாமல் நமது அரசியல் முறையில் கட்டுண்டு அனுபவித்து வரும் கொடுமைகளுக்கும் நிவர்த்தி மார்க்கம் அவற்றிலேயே அடங்கியிருக்கின் றன. அன்றியும் நாம் நம் நாட்டு மக்கள் என்றே சொல்லிக் கொள்ளும் பார்ப்ப னர்களால் மிதிக்கப்பட்டு அனுபவித்து வரும் இழிதகைமைகளிலிருந்து மீளும் நெறியும் அவற்றிலேயே அடங்கிக் கிடக்கின்றது. இன்னமும் இவை போன்ற மக்களின் நாட்டின் கோடிக்கணக்கான கொடுமைகள் என்னும் வறுமை முதலிய வியாதிகளுக்கும் ‘சஞ்சீவி’ என்று சொல்லத்தக்கதேதான் நமது காந்தியடிகள் இந்தியாவின் எல்லாக் குறைகளும் நீங்குவதற்காக கண்டுபிடித்த “பர்டோலி தீர்மான”மாக்கும் நமது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்

காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின காரணம் இன்னதென்பதும் அது முதல் வேறு தனிப்பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும். அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும் ராமனாதனும் அனுப்பிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர் மகாநாட்டில் பிரேரேபிக்கக் கூட அனுமதிக்காமல் சட்டத்தின் பெயரைச் சொல்லி தள்ளிவிட்டதினாலேயே மேற்கூறியவர்கள் வெளியேறினார்கள் என்பது ³ மகாநாட்டிற்குப்பிறகும், ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு ஆகியவர்கள் அவ்வகுப்புவாரி உரிமைக்கு விரோதமாய் பிரசாரம் செய்ததும் சில இடங்களில் ஆதரித்ததும் ஆகிய காரியங்களும் நேயர்களுக்குத் தெரியும். கடைசியாக கோவை மகாநாட்டில் வகுப்புவாரி உரிமையை அடிப்படையாகக் கொண்ட காங்கிரசுக்கு நம்மை அழைத்ததும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தை ஏற்றுக்கொண்டதும் வாசகர்களுக்குத் தெரிந்ததே. இப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஒரு புது ஆதரவு. அதாவது நமது நாட்டிற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் எந்த வகுப்பார் தங்களுக்கு...

தென்னிந்திய ரெயில்வே                     ஆலோசனை கமிட்டி 0

தென்னிந்திய ரெயில்வே ஆலோசனை கமிட்டி

இம்மாதம் 27-ந் தேதியன்று சென்னையில் நடைபெறப்போகும், தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக் கமிட்டிக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்களை கொண்டுவரப் போவதாக, ³ கமிட்டி மெம்பர், கோய முத்தூர் ஸ்ரீ மான் . சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரவர்கள் தெரிவிக்கிறார். (1) ரெயில்வே பிளாட்பாரத்தில் பிரயாணிகளுக்கு தண்ணீர் கொடுப் பதில் எவ்வித வித்தியாசமும் பாராட்டக்கூடாது. (2) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இங்கிலீஸ் உணவுச்சாலைக்கு, ஐரோப்பியர்களோ அன்றி இந்தியர்களோ சென்றால் அவர்கள் யாவரையும் ஒன்று போலவே நடத்தவேண்டும். மற்றும், ரெயில் வண்டியிலிருந்து கொண்டே உணவைத் தருவித்தாலும், அப்போதும் ஐரோப்பியர், இந்தியர் என்கிற வித்தியாசமின்றியே நடத்தவேண்டும். இங்ஙனம் செய்ய ³ உணவுச்சாலைகளை நிர்வகிக்கும் மெஸர்ஸ் ஸ்பென்ஸர் கம்பெனியாரை இச்சபை கேட்டுக்கொள்ளுகிறது. (3) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இந்திய உணவுச்சாலைகளில் எவ்வித ஜாதிவித்தியாசமும் பாராட்டலாகாது. ஜாதி வேற்றுமையைக் காட்டக் கூடிய – இப்போதுள்ள சாதனங்களை- உடனே நீக்கி விடவேண் டும். மேலும், ஒவ்வொரு போஜன சாலையிலும், சகல ஜாதியார்களிலும், மரக்கறி பதார்த்தங்கள் உட்கொள்ளுபவர்களுக்கென்றும், மாமிச...

செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு 0

செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு

நம்நாட்டு பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை இந்நாட்டில் நிலை நிறுத்த ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஆயுதங்களான மதத்தின் பேரால் வேதம், சாஸ்திரம், புராணம், சடங்கு, கோயில், தீர்த்தம், யாத்திரை, மடாதிபதி, குருக்கள், புரோகிதன் என்பவை போன்ற புரட்டுகளைப்போலவே, அரசியல் பெயரால் காங்கிரஸ், சுயராஜ்யம், ஒற்றுமை,தேசீயம், உரிமை அதிகாரத்தில் பங்கு, ஆங்கிலப்பள்ளிக் கூடம், வக்கீல்வேலை, நியாயஸ்தலங்கள் முதலிய புரட்டுகளையும் உற்பத்தி செய்துகொண்டு அதன் மூலமாகவும் நம்மையே ஏமாற்றி அடிமைப்படுத்தி ஆதிக்கம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள் என்ப தைப்பற்றி இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். நமது மக்களை ஏமாற்றுவதற்காக இந்த ஆயுதங்களை உபயோகப்படுத்தும்போது நமது பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரான நமது சமூகத்தாரையே அடிமை களாக்கி அவர்களைக் கொண்டே அவர்கள் மூலியமாகவே நம்மீது பிரயோ கித்து வருகிறார்கள் என்பதைப் பற்றியும் பல தடவைகளில் எழுதி வந்திருக் கிறோம். அந்த விஷயங்களை வாசகர்கள் அனுபவத்தில் உணர்வதற்கு அடிக்கடி நிகழும் பல சம்பவங்களை எடுத்துக்காட்டியும் வந்திருக்கின்றோம். அப்பேர்ப்பட்ட அனுபவ நிகழ்ச்சிக்கு உதாரணத்தை...

கோயமுத்தூர் முனிசிபால்டியில் சுயராஜ்ஜியக்கட்சியும் தீண்டாமையும் 0

கோயமுத்தூர் முனிசிபால்டியில் சுயராஜ்ஜியக்கட்சியும் தீண்டாமையும்

கோயமுத்தூர் முனிசிபல் மீட்டிங்கு 18-1-26ந் தேதி நடந்தது. அன்று ஸ்ரீமான் காலஞ்சென்ற சுல்தான் சாய்ப்பு அவர்களுக்கு அநுதாபத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றினார்கள். இரண்டாவது ஒரு முக்கியமான தீர்மானம் ஆலோசனைக்கு வந்தது. பாப்பானாயக்கன்பாளையத்தில் இரண்டு இரவு பாடசாலை யிருந்து வருகிறது. ஒன்று “ஜாதி இந்துக்கள்” இரவு பாட சாலை, இன்னொன்று “பஞ்சமர்” இரவு பாட சாலை. இரண்டு பாடசாலையும் முனிசி பால்ட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஜாதி இந்துக்கள் இரவு பாட சாலைக்கு அதிக வாடகை வேண்டுமென்றும் இன்னொரு உதவி உபாத்தி யாயர் வேண்டு மென்றும், பஞ்சமர் பாடசாலைக்கு 5 ரூபாய் வாடகை வேண்டுமென்றும், அப்பாடசாலைக் கட்டிடக்காரர்கள், விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்விஷயம் மீட்டிங்கில் ஆலோசனைக்கு வந்த போது ஸ்ரீமான் வி. அருனாசலம் செட்டியாரவர்கள் பஞ்சமர் பாட சாலையில் 8 பிள்ளைகள் தானிருப்பதால் அதற்கு தனிப் பாடசாலை வேண்டியதில்லை யென்றும் ஜாதி இந்து பாடசாலையில் இந்த 8 பிள்ளை களைச் சேர்த்துக் கொண்டு ஒரு...

யாருக்கு புத்திவந்தது? 0

யாருக்கு புத்திவந்தது?

சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக் கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கு இப்பொழுது தான் புத்திவந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள். இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்ஜியக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுது தான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் கதரைக் கட்டாயமாக உடுத்த வேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது. பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும் போது கட்டிக் கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள் மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக் கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லாரும் கதர் கட்டி விடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும் கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப் பனர்கள் ஒரு...

பார்ப்பனர்களின் ஒற்றுமை 0

பார்ப்பனர்களின் ஒற்றுமை

கொஞ்ச நாளைக்கு முன் இந்தியாவிலிருந்து இந்தியர்களின் ஊழிய ராகவும், ஒரு இந்தியராகவும், இந்துவாகவும் உள்ள ஸ்ரீமான் சர்.டி. விஜய ராகவாச்சாரியார் இந்திய பிரதிநிதியாக கனடாவுக்கு அனுப்பியதும் அங்கு போய் தென்னை மரம் இருக்கும் வரை குடித்துத்தான் தீருவோம். பிரிட்டி ஷாரின் ஆதிக்கத்தையே இந்தியர்கள் விரும்புவதோடு, இதைக் கடவுள் அனுப்பியதாக இந்தியர்கள் பாவிக்கிறார்கள் என்றும், ஆங்கில நாகரீகத் தையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்கு உதாரணமாக எனது குமாரத்தியே தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் சொன்னதாக பத்திரிகைகளில் வந்தது ஞாபகமிருக்கும். அதையே ஸ்ரீமான் சு.மு. ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு திருப்பூர் முனிசிபல் சங்கத்தார் வரவேற்புப் பத்திரம் வாசித்துக்கொடுத்த காலையில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எடுத்துச்சொல்லி நமது ஸ்ரீமான் செட்டியார் அப்படிப் பேசாமல் சுதந்திரத்தோடும் ஆண்மையோடும் பேசினதாக குறிப்பிட்டிருந்தார். இதை மறுப்பதற்கு, இதில் யாதொரு சம்பந்தமும் இல்லாதவரும் இன்னமும் ஒத்துழையாதாரென்று வேஷம் போட்டுக்கொண்டிருப்பவ ருமான ஸ்ரீமான் ஊ. இராஜகோபாலாச்சாரியார் மகாத்மாவின் “யங்...

பார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும் 0

பார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்

இம்மாதம் 15-ந்தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டி பிரசாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார் கள். ஆனால், ஸ்ரீமான் ஞ.கூ. ராஜன் அவர்கள் சென்னையிலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும் அதற்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்ப தாலும் குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவதை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலூகா, கான்பரன்சுகள் கூடப் போவதாகவும், பல இடங்களில் பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல்லா தார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப் பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே. ஆனால், ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதை தெரிவித்துக்...

காங்கிரஸ் தலைவர் பதவி வினியோகம் 0

காங்கிரஸ் தலைவர் பதவி வினியோகம்

இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட் டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என அறிகிறோம். சென்ற வருடக் காங்கிரசுக்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான். சீனி வாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்கு செலவு செய்தது போல் பணம் கொடுக்காவிட்டாலும் டாக்டர். அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்ட தான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக்கொண்ட பிறகுதான் நமது பார்ப்பன “தேச பக்தர்கள்” என்போர்கள் டாக்டரை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். அந்த விலை எது என்றால் அதுதான் “மகமதியர்களுக்கு தனித் தொகுதி வேண்டியதில்லை” என்று சொன்னதாகும். டாக்டர். அன்சாரி அவர் கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாக சொல்வதை மற்ற மகமதி யர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி நமது பார்ப் பனர்களுக்கு அவசியமில்லை. எப்படியாவது அவர் காரியத்தை சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும். இப்போது ஸ்ரீமான்கள் ஒரு கந்தசாமி செட்டியாரையும், ஒரு முத்துரங்க முதலியாரையும், ஒரு குப்புசாமி முதலியா...

பார்ப்பனரின் அரசியற் புரட்டு 0

பார்ப்பனரின் அரசியற் புரட்டு

இரட்டை ஆட்சியும் வகுப்பு வாதமும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஒழிந்ததா? அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா? என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் பகுத்தறிவு கொண்டு கவனித்துப் பார்க்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். ஒத்துழையாமை என்பது மும்மர மாய் இருந்த காலத்தில் நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகளின் மூலம் அதை ஒழிப்பதற்கு பிரயத்தனப்பட்டது வாசகர்கள் அறிந்ததுதான். அதாவது கல்கத்தா தனிக் காங்கிரசின் போது தெருவில் போகும் பிச்சைக் காரரையெல்லாம் பிடித்து அவர்களுக்கு நாமம் போட்டு சென்னை மாகாணப் பிரதிநிதி என்று ஏமாற்றி ஆள்களைச் சேர்த்தும் அங்கும் தோற்றுப் போனதும், சென்னையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், காரியதரிசி களாகவும், இருந்த பார்ப்பனர்களான ஸ்ரீமான்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார் , ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் ராஜீநாமாக் கொடுத்து வெளியேறி ஒத்துழையாமையையும், மகாத்மாவையும், வாய் கொண்ட மட்டும் வைதும், பழி சுமத்தியும் பார்த்தும் முடியாமல் போனதும், அட்வொ கேட் ஜெனரலாயிருந்து மந்திரி உத்தியோகம் பெற ஆசைப்பட்டு அதை ராஜீனாமாக் கொடுத்து...

தென் ஆப்பிரிக்கா பிரதிநிதிகள் 0

தென் ஆப்பிரிக்கா பிரதிநிதிகள்

தென் ஆப்பிரிக்காப் பிரதிநிதிகள் நாளது 24-ந் தேதி கோயமுத்தூர் ஜில்லாவாகிய நமது ஜில்லாவுக்கு வரப்போவதாக அறிந்து மிகவும் சந்தோஷிப்பதோடு, மனப் பூர்த்தியாய் வரவேற்கிறோம். தென் ஆப்பிரிக்காக் கவர்ன்மெண்டார் தென் ஆப்பிரிக்காவிற்குக் குடியேறின இந்திய சகோதரர் களுக்குச் செய்து வரும் ஆணவம் பொருந்திய கொடுமைகள் சுயமரியாதை யுள்ள சமூகத்தாருக்குச் சகிக்க முடியாதிருப்பினும் – உயிரைத் துறந்தாவது தங்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசிய முள்ளதாயிருப்பினும், இக்கஷ்டத்தை நீக்குவதற்குத் தென் ஆப்பிரிக்கா இந்தியர்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்வதில் காதறுந்த ஊசியளவு பிரயோஜனமாவது உண்டாகுமாவென்பது நமக்குச் சந்தேகமாகவேயிருக் கிறது. ஆயிரம் தென்னாப்பிரிக்கா கவர்ன்மெண்டைக் கசக்கிப் பிழிந்து சத்து எடுத்ததற்குச் சமானமான தமிழ்நாட்டுப் பிராமணர்கள் சிலர், அதாவது, தமிழ் நாட்டில் தங்களுக்கு முந்தியுள்ள பூர்வீகக் குடிகளாகவும் தங்கள் நாட்டா ராகவும் இருக்கிற ஜனங்களைத் தொடக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள், கண்ணில் தென்படக் கூடாதவர்கள், அவர்கள் தெய்வத்தைக் காணக் கூடாதவர்கள், அவர்கள் மத – வேத மென்பதைப்...

மந்திரிகளின் நிலை 0

மந்திரிகளின் நிலை

கோவை மகாநாட்டில் இரட்டை ஆட்சி அழியும் வரை மந்திரி முதலிய உத்தியோகம் ஒப்புக்கொள்ளுகிறதில்லை என்கிற தீர்மானம் செய்யப்பட்ட வுடன் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. எதனாலென்றால் மதுரை மகாநாட்டிலேயே “இந்த சட்டசபை உள்ள வரை மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவதில்லை” என்று தீர்மானித்திருந்தும் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை ஆதரித்து வந்தார்கள். அதற்கு உண்மை யான காரணம் “இந்த மந்திரி சபையை ஆதரிப்பதின் மூலம் பார்ப்பனரல்லா தார்களுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளால் சென்ற 6 வருட காலமாய் ஏற்பட்ட நன்மைகளையும், முற்போக்குகளையும் ஒழித்து பழையபடியே அரசாங்க பதவிகளையும், மற்றுமுள்ள ஸ்தாபனங்களையும், பார்ப்பன அக் கிரகாரத்திற்கே சுவாதீனமாக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் மேல் அதை ஆதரித்து வந்ததோடல்லாமல்” “ஜஸ்டிஸ் கட்சியார் இந்த கவுன்சிலில் மந்திரி உத்தியோகம் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், அடுத்த கவுன்சிலிலாவது உத்தியோகம் பெற்றுக் கொள்வார்களாதலால் நாங்கள் தற்கால மந்திரிகளை ஆதரிக்கிறோம்” என்று (ஓணாய் ஆட்டுக்குட்டி கதைபோல்) சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சொல்லுவதன் மூலம் இன்னும்...

பிறப்புரிமையும் அதன்  தடைகளும் 0

பிறப்புரிமையும் அதன் தடைகளும்

மனிதப்பிறவி பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நான் எடுத்துக்கொண்டது மனிதனுடைய பிறப்புரிமை என்பது தான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத்தான் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது” என்று பெரியோர்கள் சொன்னதாகச் சொல்வார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். “கொடுமை கொடுமை மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை” என்பது எனது தாழ்மையான அபிப் ராயம். உலகில் உள்ள ஜீவகோடிகளில் எல்லாவற்றினும் மனிதப்பிறப்பே மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும் மனிதராகப் பிறப்பது மிகவும் கொடியது என்பதும் மனிதனைப்போல் அடிமை, உலகில் வேறு ஜீவன்கள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம். மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் எவ்வ ளவோ சந்தோஷத்துடனும் அடிமை உணர்வில்லாமலும் சுதந்திரமாய் வாழ் வதை நாம் பார்க்கிறோம். அவைகளில் சிலவற்றிற்கு கஷ்டமும் அந்நியரால் கஷ்டப்படுத்தத் தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும் மனிதனைப் போல் உணர்ந்து துக்கிக்கிற சக்தியாகிய கொடுமை...

பிறப்புரிமை                                     சுயராஜ்யமா?  சுயமரியாதையா? 0

பிறப்புரிமை சுயராஜ்யமா? சுயமரியாதையா?

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமைச் செய்து வருவதின் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும். நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தே சித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப் படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார்களேயல்லாமல், அதற்காகச் செய்ய வேண்டிய காரியங்களில் தங்களுக்குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டா லும் வேறு யாராவது...

நமது வேலை 0

நமது வேலை

“குடி அரசு” பத்திரிகை தோன்றி 27 மாதங்கள் ஆகின்ற தெனினும் அதன் மூலம் தேசத்திற்கும் சமூகத்திற்கும் நமக்கு சரி என்று தோன்றிய வழியில் நம்மால் கூடிய தொண்டை ஆற்றி வந்திருக்கிறோம் எனினும் செய்யவேண்டிய வேலை எவ்வளவோ பாக்கி இருக்கிறது. முன் ஒரு சமயம் நாம் எழுதியதுபோல் “குடி அரசு” பத்திரிகை வேலை மாத்திரம் அல்லாமல் அதன் கொள்கையைப் பரப்ப மக்கள் மனதில் பதியச் செய்ய ஊர் ஊராய் திரிந்து பிரசாரமும் செய்ய வேண்டிய பொறுப்பு இனியும் எவ்வளவோ மடங்கு அதிகமாயிருந்து வருகிறது. கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குள் இனி அபிப்பிராய பேதம் இருக்காது என்றும், பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்போர்களும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நமது கொள்கைகளை பிரசாரம் செய்யும் என்றும், நமக்கும் போதிய ஓய்வு கிடைக்கும் என்றும், பல நண்பர்கள் கருதினார்கள். இப்போது அவைகள் ஒரு வினாடி கனவு போலவே முடிந்து விட்டது. பார்ப்பன ரல்லாதார் கக்ஷியிலேயே யார் யாரை நமது...

ஸ்ரீமான் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் 0

ஸ்ரீமான் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

ஐயா, தாங்கள் தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருப்பது பற்றி மிகவும் சந்தோ ஷமே. ஆனால், அதில் தாங்கள் இருந்து கொண்டு செய்கிற வேலைகள் ஒன்றும் புதிதாயாவது, முக்கியமானதாகவாவது தெரியவில்லை. அதாவது, கக்கூஸ் ரிப்பேர் செய்வதும், வண்டியில் சிற்றுண்டி வழங்கு வதும், வண்டியின் நேரங்களை மாற்றுவதுமான காரியங்கள் ஆகிய எதுவும் பொது ஜனங்களுக்கு விசேஷ நன்மை எதுவும் செய்துவிடாது. தங்கள் காலத்தில் ஏதாவது ஒரு நிரந்தரமான நன்மை செய்ததாயிருக்க வேண்டு மானால் – பெரும்பான்மையான ஜனங்களின் உணர்ச்சிகளைத் தாங்கள் மதித்தவர்களாயிருக்க வேண்டுமானால் – ஒரு காரியம் செய்தால் போதும். அதைச் செய்துவிட்டு தங்கள் வேலையை ராஜீநாமா செய்துவிட்டாலும் சரி அல்லது அந்தப்படி செய்ய தாங்கள் பிரயத்தனப்பட்டு முடியாமல் போனால், தாங்கள் ராஜீநாமா கொடுத்துவிட்டு வந்துவிட்டாலும் சரி. அதாவது, தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல்...

ஈரோட்டில் புதிய ஹைஸ்கூல் – சித்திரபுத்திரன் 0

ஈரோட்டில் புதிய ஹைஸ்கூல் – சித்திரபுத்திரன்

ஈரோட்டில் மகாஜன ஹைஸ்கூல் என்பதாக ஒரு பள்ளிக்கூடம் பல பெயர்களுடன் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. இது இருக்கும் போதே லண்டன் மிஷின் என்கிற ஒரு கிருஸ்தவ மத ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் மேல்கொண்டு ஒரு ஹைஸ்கூலை சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாக ஆரம்பித்தர்கள். அந்த மிஷின்காரர் தங்களது செல்வாக்கால் கல்வி இலாக அதிகாரிகளையும் நீதிநிர்வாக இலாகா அதிகாரி களையும் கொண்டு தங்களாலான உபத்திரவமெல்லாம் செய்து பார்த்தும் மேற் படி மகாஜன ஹைஸ்கூலை அசைக்க முடியவே இல்லை. சில பையன் களுக்கு சம்பளத்தைக் குறைத்தார்கள். பையன்கள் பெற்றோர்களுக்கு அரசாங்கத்தில் சிபார்சு செய்து உத்தியோகம் வாங்கிக்கொடுப்பதும் கௌரவ உத்தியோகம் செய்வித்துக் கொடுப்பதும், ஆண்பிள்ளைகள் வகுப்புக்கு பெண்களை உபாத்தியாயர்களாக வைப்பதும், உள்ளூர்கட்சி பிரதிகட்சிகளில் கலந்து கொண்டு கட்சிக்கு விரோதமாய் மற்றொரு கட்சிக்கு அனுகூலமாக உண்மையற்ற விஷயங்களை கோர்டில் சாட்சி சொல்லுவதும் இன்னும் எவ்வளவோ கூடா ஒழுக்கமான காரியங்களை எல்லாம் செய்து பார்த்தார்கள். எவ்வளவு...

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம் 0

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம்

ஜுலை µ 16 ² “மித்திர”ன் “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள் சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டு மென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று எழுதியிருக் கிறான். மதவிஷயத் தில் அரசாங்கத்தார் பிரவேசிக்கக் கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதாவது சர்க்காரால் சட்டம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்படியான புத்தி வந்ததற்கு நாம் மகிழ்கிறோம். ஆனால் இந்தப்புத்தி தானாகத் தோன்ற வில்லை. ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகாரும், ஈ.வெ.இராமசாமி நாயக் கரும் தேவஸ்தானச் சட்டத்தை ஆதரித்தும் அதை எதிற்கும் பார்ப்பனர் களின் சூழ்க்ஷியைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ததின் பலனாகவும் இதை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஓட்டுக்கிடைக்காமல் போகு மோ என்கிற பயமும் பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர”னை “இந்துமத ஸ்தாபனம் சரியாக நடக்க ஒரு சட்டம் அவசியம்” என்று சொல்லும்படி செய்து விட்டது. ஆனால் “மித்திரன்” அதின் கீழாகவே “இந்த சட்டமானது தர்மங்கள்...

கதர் பரீiக்ஷயில் தவறு 0

கதர் பரீiக்ஷயில் தவறு

எல்லாம் நன்மைக்கே அந்தணர்பேட்டை கதர் விஷயமாய் கதர் போர்டு அதிகாரிகள் பரீiக்ஷ செய்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால், அவ் விடம் தயார் செய்யப்பட்ட கதர்த் துணிகளில் சிலது நூல் சன்னமாயும் ஒரே மாதிரியாயும் இருந்ததோடு, அதிகக் கெட்டியாகவும், பார்வைக்கு மில் துணி போலவும் இருந்தது. இவ்வளவு நல்ல துணி சுத்தமான கதர் துணியாய், இவ்வளவு குறைந்த அதாவது சாதாரண கதர்த் துணி விலைக்கு கொஞ்சம் ஏறக்குறைய இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் அதை அநுபோக சாலிகளான இரண்டொருவருக்கு பரீiக்ஷக்காக அனுப்பப்பட்டது. பரீiக்ஷ யில், பரீக்ஷகர்கள் அது கதராயிருக்க முடியாதென்று அபிப்ராயப்பட்டதால், உடனே அதற்கு கதர் போர்டாரால் அளிக்கப்பட்டிருந்த நற்சாக்ஷிப் பத்திரத்தை வாப்பீசு அனுப்பும்படி எழுதிவிட்டு பத்திரிகைகளுக்கும் அந்தணர்பேட்டை கதர் சுத்தமான கதர் அல்ல என்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகு அந்தணர்பேட்டைக் கதராலயத்தார் தங்கள் ஆவலாதியைத் தெரிவித்துக் கொண்டதன் பேரில், காரியதரிசி ஸ்ரீமான் ராமநாதன் நேரில் போய் பார்த்து அந்தணர்பேட்டைக் கதர்...

கோவை மகாநாடு 0

கோவை மகாநாடு

தலைவருக்கு :- கோவை மகாநாடு ஜில்லா மகாநாடாக கூட்டுவதா யிருந்த காலத்தில் முதல் முதல்ஸ்ரீமான் குமாரசாமிரெட்டியாரவர்கள் பெயரை வரவேற்புக் கமிட்டிக்கு சொன்னவுடன் வெகு குதூகலமாக ஏற்றுக்கொண் டார்கள் என்றும், ஸ்ரீமான்கள் ரெட்டியாரவர்களுக்கு எழுதினவுடன் தேசத் திற்கு ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடனைச்செய்யும்படி கூப்பிடும் போது தான் எவ்விதத்திலும் ஆnக்ஷபனை சொல்லுவதில்லை என்று சொல்லி ஒப்புக்கொண்டார்கள். மறுபடி இது மாகாண மகாநாடாய் மாறினவுடன் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள்தான் ஜில்லா மகாநாடென்று ஒப்புக் கொண்டதா கவும் இப்போது மாகாண மகாநாடாய்விட்டதால் வேறு யாரையாவது தெரிந்தெடுத்துக்கொள்ளும்படி எழுதிவிட்டாறென்றும் மறுபடி சென்னை தென்னிந்திய நலஉரிமைச்சங்கமும் வரவேற்புக் கமிட்டியும் ஸ்ரீமான் ரெட்டி யாரவர்களையே வேண்டிக்கொண்டதாகவும், அவர் யாதொரு தடையும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாறென்றும் சட்டசபையில் ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை வெட்டவெளியாக்கிவிட்ட வீரர் என்றும் மற்றவர்களைப் போல் அவர் படாடோபம் செய்து கொள்ளாமல் அடக்கத்திலிருப்பவர் என்றும் இம்மகாநாடு நடத்தும் விஷயத்தில் யாதொரு பிரயாசையும் எடுத்துக் கொள்ளாமல் தனது...

திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம் 0

திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம்

தயார் – தயார் தமிழ்நாடு தனது கடமையைச் செய்யத் தயாராயிருக்கிறது ( டாக்டர் ஆ.நு.நாயுடு எழுதுகிறார்) திருவாங்கூர் சமஸ்தானத்தில் புண்ணிய nக்ஷத்திரங்களாக பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவைகளில் வடக்கே வைக்கமும், மத்தியில் திருவனந்தபுரமும், தெற்கே சுசீந்திரமும் முக்கிய nக்ஷத்திரங்களாகும். வைக்கம் சத்தியாக் கிரகத்தின் பயனாய் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள ரோட்டுகள் ஜாதி உயர்வு தாழ்வு இன்றி சகல பிரஜைகளுக்கும் சமமாய் உபயோகிக்க விட்டாய் விட்டது. மற்றும் சில ரோட்டுகளை சமமாய் உபயோ கிக்க அரசாங்கத்தார் வேண்டிய உதவி செய்திருக்கிறார்கள், ஆதலால் திருவாங்கூரிலும், சுசீந்திரத் திலும், கோயிலைச்சுற்றியுள்ள பொது ரோட்டு களில், மகாராஜாவின் எல்லாப் பிரஜைகளுக்கும் நடக்க உரிமை வேண்டு மென்று முயற்சிகள் நடந்து வரு கின்றன. இந்த தை µ 5-ந் தேதி மாலை 4 மணிக்கு சுசீந்திரம் கோவிலைச் சுற்றி சகல இந்து ஜாதியாரையும் அழைத் துச் செல்லுவதாய் தீர்மானம் செய்திருக்கிறது. இதைப்பற்றிச் சர்க்காருக்கும், கோவில் அதிகாரிகளுக்கும், மார்கழி µ...

மகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும் 0

மகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும்

இம்மாதம் நடந்த மகாநாடுகளில் உபசரணை அக்கிராசனர். மகா நாட்டுத் தலைவர் ஆகியவர்களின் பிரசங்கங்களைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் ஆதிக்கத்திற்கு அநுகூலமாய் பேசியவற்றையும் பேசினவர்களையும் புகழ்ந்தும் அதற்கு விரோதமாய் பேசியவர்களை இகழ்ந்தும் எழுதியிருக்கின்றன என்றாலும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகை களில் பெரும்பாலும் தங்களுக்கென கொள்கையும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாமல் அவற்றையே பின்பற்றித் திரிகின்றன. இதற்காக பொதுமக்கள் பணமும் நேரமும் எவ்வளவு வீணாய்போகிறதென்பதைக் கவனிப்பவர்களுக்கு துக்கம் ஏற்படாமலிருக்க முடியாது. சிலபத்திரிகைகள் “பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர் ஒத்துழைப்பைப்பற்றி பேசிவிட்டார். ஆதலால் பார்ப்பனரல்லாதாருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது” என்பதாக அளவுக்கு மீறி துக்கப் படுவதாகவும் வெட்கப்படுவதாகவும் வேஷம் போட்டிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களில் சிலர் அதாவது மாதம் 5000, 10000 சம்பளம் வாங்கியவர் களும் தங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கு முதல் சர்க்காரில் மாதம் 500, 1000, 2000, 3000 உத்தியோகம் பெற்று கொள்ளை அடிக்கிறவர்களும் ஒன்று சேர்ந்து மிதவாத மகாநாடு என்பதாகக் கூட்டி “சர்க்காரோடு ஒத்துழைக்க வேண்டும். தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும்...

சத்தியாக்கிரகம் 0

சத்தியாக்கிரகம்

சத்தியாகிரகம் என்பது பற்றி 3, 4 வாரங்களுக்கு முன் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தோம். அதைப் பார்த்து பலர் வருத்தப்பட்டார்கள். மற்ற பத்திரி கைகாரர்கள் யாரும் அதை கொஞ்சமும் கவனிக்காமல் சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகம் என்பதாக பெரும் தலைப்பு இட்டு எழுதிவந்தார்கள். நாகபுரி ஆயுத சத்தியாக்கிரகம் ஸ்ரீ அவாரி ஜயிலுக்கு போனதும் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் நமது நாட்டு சத்தியாக்கிரகப் பேச்சும் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது. இம்மாதிரி பொறுப்பில்லாமல் நடக்கும் காரியங்களால் நமது நாட்டுக்கு வரும் கெடுதிகளை பலர் உணர்வதில்லை. தொண்டர்கள் என்போர்களின் நிலைதான் இப்படி என்றாலும் பத்திராதி பர்களின் யோக்கியதை இதைவிட மோசமானதாயிருப்பதோடு இப்பேர்பட்ட பொறுப்பற்ற சங்கதியை அனுமதிப்பதற்கு அனுகூலமாகவே இருந்து வருகிறது. இனியாவது தங்கள் கடனை உணர்வார்களாக. குடி அரசு – குறிப்புரை – 10.07.1927

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி 0

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி

டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற்பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற்றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி விடுவார்களோவெனப் பயந்து கொண்டு ஸ்ரீமான் சத்திய மூர்த்தியும் அவர் கோஷ்டியாரும் ஒவ்வொரு பிரசங்கத்திலும், “டாக்டர் நடேச முதலியார் அந்நிய ஆடையை அணிந்து கொண்டு கதர்ச் சாலையைத் திறந்து வைத்தார். இது பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்த வேலை”யென்று ஓயாமல் பேசியும் வருகிறார்கள்; எழுதியும் வருகிறார்கள். இப்படிச் செய்வது வெறும் விஷமப் பிரசாரமே தவிர, இதில் யோக்கி யதை கொஞ்சமுமில்லை. முதலாவது, டாக்டர் நடேச முதலியார் கதர்ச் சாலையை திறந்து வைக்கும்போதே டாக்டர் வரதராஜுலு நாயுடு ஓர் சீட்டில் நீங்களேன் கதர் உடுத்தவில்லை என்று எழுதி அவரைக் கேட்டார். அதற்கு பதிலாய் டாக்டர் நடேச முதலியார் பேசுகையில், தான் அணிந்திருப்பது கதர் தானென்றும்,...

கோயமுத்தூர் டவுன் ஹாலில் மாபெருங்கூட்டம் 0

கோயமுத்தூர் டவுன் ஹாலில் மாபெருங்கூட்டம்

சகோதரர்களே! என்னைப்பற்றி ஸ்ரீமான் ராமசாமி முதலியார் அதிகமாக கூறிவிட்டார். என்னை தங்களது இயக்கத்தின் தலைவர் என்றும் நான் சொல்லுகிறபடியே நடக்கப் போவதாகவும் சொன்னார். இவ்விஷயம் எனக்கு மிகவும் வெட்கத் தையும் பயத்தையும் கொடுக்கிறது. ஒரு காலத்திலாவது நான் தலைவனாய் இருந்ததே கிடையாது. தலைமைத்தனமும் எனக்குத் தெரியாது. அதற் குண்டான குணங்களும் என்னிடத்தில் இல்லை. நான் ஒரு தொண்டனாகவே இருந்து வர பிரியப்படுகிறேன். எனக்கு தொண்டு செய்வதில் அதிக ஆசை இருக்கிறது. ஆதலால் என்னை ஒழுங்கான வழியில் நடத்தி என்னிடம் சரியானபடி வேலை வாங்கிக்கொள்ளுங்கள். நேற்றைய மகாநாட்டில் தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தார்களில் இஷ்டப்பட்டவர்கள் காங்கிரசில் சேரலாமென்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இவ்வித தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமே நமக்கு ஏற்பட்டிருக் கவில்லை. தெ. இ. ந. உ. சங்கத்தாரில் தனிப்பட்ட நபர்கள் காங்கிரசில் சேர்வதை இச்சங்கத்தின் எந்த விதியும் தடுப்பதில்லை. காங்கிரசில் சேர்ந்தவர்களும் ஏற்கனவே இதிலிருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்....

மதுரைக் கோயில் பிரவேசம் 0

மதுரைக் கோயில் பிரவேசம்

லேடி கோஷனும் – நாடார்களும் மதுரை ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் என்கிற ஒரு பிராமணர் சென்னை கவர்னரின் மனைவியாரை, மதுரை மீனாக்ஷியம்மன் கோவிலுக்குள் அழைத்துப் போய் எல்லா இடங்களையும் கூட்டிக் காட்டினதாகவும், மிகுந்த மரியாதை செய்ததாகவும் அதற்கு நன்றியறிதலாய் அம்மையார், கோவிற் புத்தகத்தில் தம்மை மிக்க மரியாதையாக கோயிலுக்குள் அழைத்துச்சென்று பல இடங்களையும், நகைகளையும், பொக்கிஷங்களையும் காட்டின ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் முதலியோருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று எழுதி நற்சா க்ஷிப் பத்திரமும் கொடுத்துவிட்டுப் போனார்களாம். இதை நாம் ஆnக்ஷபிக்க வில்லை. ஆனாலும், அந்த அம்மையார் எவ்வளவு பெரிய அந்தஸ்து உடையவரானாலும், அந்நிய நாட்டார் – அந்நிய மதஸ்தர்- நமது மதத்தையும் சாமிகளையும் பார்த்து பரிகாசம் பண்ணுகிறவர்கள்- நமது மதத்துக்கு விரோதமாய் பிரசாரம் செய்து நம்மவர்களை தங்கள் மதத்துக்குச் சேர்க்கி றதை ஆதரிப்பவர்கள்- நம்மை அஞ்ஞானிகளென்று சொல்லுகிறவர்கள் – நம்மை அடக்கியாண்டு நமது இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஜாதியைச் சேர்ந்த வர்கள்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்வம்

தேசபக்தர்களின் யோக்கியதை “வகுப்புவாரிப் பிரதிநிதித்வம்” என்கிற பதத்தை நாம் பொது ஜனங்களின் ஞாபகத்திற்குக் கொண்டுவந்தவுடனே, அதனால் பிரதிகூலம் அடையக்கூடிய ஜனங்கள், தங்களால் கூடிய தடைகளை யெல்லாம் செய்ய மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்கிற உரிமையைப் பற்றி நமது நாட்டில் வெளிப்படையாக நாம் அறிய சுமார் 20 வருட காலங்களுக்கு மேலாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருந்தாலும், சுமார் 10 வருடங்களுக்கு முன்பாகவே ராஜீய ஸ்தாபனங்களில் அது பிரவேசித்து முஸ்லீம் சமூகத்தாருக்கு நமது தேசீய காங்கிரசின் மூலமாகவே, அதாவது “தேசம்தான் பிரதானம்; வகுப்புகள் அதற்குப் பிற்பட்டது” என்கிற தத்துவத் தையே கொள்கையாக உடைய காங்கிரஸின் மூலமாகவே அதை ஒப்புக் கொண்டு சர்க்கார் மூலமாய் அதை அமுலுக்குக் கொண்டு வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்பொழுது புழக்கத்திற்கு வந்துவிட்டது. அதோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் ஸ்தாபனங்களிலேயும், அதி லுள்ள ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அதாவது, காங்கிரஸ் என்பதை ராஜீய ஸ்தாபன நிர்வாகமாக வைத்துக்கொண்டால், அகில இந்திய...

பார்ப்பனர் விஷமப் பிரசாரம் 0

பார்ப்பனர் விஷமப் பிரசாரம்

மதுரை முனிசிபல் சேர்மனுக்குµ 1க்கு ரூ. 900 சம்பளம் கவுன்சிலர் களால் நிர்ணயிக்கப்பட்டவுடன் அச்சேர்மென் ஒரு பார்ப்பனரல்லாதாரா யிருப்பதோடு பார்ப்பனர்களின் தாளத்திற்குத்தகுந்தபடி ஆட மறுப்ப வராயிருப்பதால் நமது பார்ப்பனர்கள் ஒப்பாரி வைத்தழுது கூச்சல் போட்டு விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மதுரை முனிசிபாலிட்டி யானது சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும் லக்ஷத்து நாற்ப தினாயிரம் ஜனத்தொகையும், சுமார் 3. 4 லக்ஷ ரூபாய் வரும்படிக்கு மேற் பட்டதுமான பெரிய முனிசிபாலிட்டி. அதன் சேர்மென் ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடு பாரிஸ்டர் பரீiக்ஷ தேரினவரும் பாரம்பரியமாய் பெரிய குடும்பத் தைச் சேர்ந்தவருமான ஒரு கண்ணியமான கனவான். மதுரை மகா ஜனங் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு அவரது வேலையையும் மதுரைப் பட்டணத்தின் நிலைமையையும் உத்தேசித்து பெரும்பான்மையான கவுன்சிலர்களால் µ 1க்கு ரூ. 900 கொடுக்க வேண்டும் என்று அபிப்பி ராயப்பட்டு அந்தப்படி தீர்மானித்து இருக்கிறார்கள். இதனால் பொறாமை கொண்ட பார்ப்பனர்களிற் சிலர் தங்கள் ஜாதிப்...

கோயமுத்தூர் முனிசிபாலிட்டி 0

கோயமுத்தூர் முனிசிபாலிட்டி

கோயமுத்தூர் முனிசிபாலி ட்டியின் சென்ற வருடத்திய நிர்வாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அவ்வறிக்கையிலிருந்து பொதுவாக கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் நிர்வாகம் ஒழுங்காய் நடைபெற்றிருப் பதாகவே காணப்படுகிறது. ரோடுகள் நன்றாயிருப்பதாகக் கலைக்டர் அபிப் பிராயப்பட்டிருக்கிறார். கல்வி விஷயத்தில் கல்வி கற்க வேண்டிய சிறுவர் களில் 100-க்கு 99 பேர் வீதம் வாசிக்கின்றார்களென்றும் பள்ளிக் கூடங்களில் சிறுவர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நூல் நூற்கவும் நெய்யவும், கற்றுக்கொடுக்கப்படுகின்றதென்றும், ஆயுள்வேத வைத்தியசாலை மிகவும் உபயோகப்பட்டு வருகின்றதென்றும், அதில் இவ்வருடத்தில் 20,000 பேர் களுக்கு மேலாக நோயாளிகள் உதவிபெற்றிருக்கின்றார்களென்றும், பிளேக் நோய் சென்ற வருடம் கோயமுத்தூருக்குள் வராமலே தடுக்கப்பட்டிருக் கின்றதென்றும், காலறா முதலிய தொத்து வியாதிகளும் முன்னைய வருடங் களைவிட மிகக் குறைவாய் இருந்திருக்கின்றதென்றும், முனிசிபல் செல்வ நிலை ஒழுங்காய் இருக்கின்றதென்றும், சப் கமிட்டியார்கள் ஊக்கத்துடன் வேலை செய்திருக்கின்றார்களென்றும், கவுன்சிலர்களும் சேர்மனும் ஒற்று மையாயிருப்பதால் கவுன்சிலில் சமாதானம் ஏற்பட்டிருக்கின்றதென்று கலைக்டர் எழுதியிருக்கின்றாரென்றும் மற்றும் பல விஷயங்களும் குறிப் பிட்டிருக்கிறது. இதற்காக சேர்மென்...

கோவை மகாநாட்டின் முடிவு 0

கோவை மகாநாட்டின் முடிவு

சிறிது காலமாய் நமது மக்கள் இடையில் பிரஸ்த்தாபப்படுத்திக் கொண்டிருந்த கோவை மகாநாடு முடிவு பெற்றுவிட்டது. இதனால் நமது நாட்டுக்காவது சமூகத்திற்காவது ஏற்பட்ட பலன் என்ன என்று யோசிப்போமானால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லி ஆக வேண்டும். தீர்மானத்தின் வாசகங்கள் சர்வ ஜாக்கிரதையாக அமைக்கப் பட்டிருந் தாலும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எவ்வளவு சாமார்த்தியமுள்ளதாயிருந்தாலும் தீர்மானத்தின் பலன் நமது முன்னேற்றத்தை தடுத்து விட்டதென்றே சொல்லுவேன். தீர்மானத்திற்குப் பிறகு இந்த ஒரு வாரத்திற்குள் மக்கள் நிலைமையும் மனப்பான்மையையும் பார்க்கும் போது பொது ஜனங்களுக்குள்ளாக ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள் என்கிற உணர்ச்சி பரவுவதற்கு ஆதாரங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த உணர்ச்சிக்கு நமது பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரம் ஒரு புறமிருந்தாலும், இப்போது நம்முடன் வந்து புதிதாக சேர்ந்தவர்கள் தங்களது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள இம்மாதிரி திரித்து கூற வேண்டிய தவசியமாயிருந்தாலும், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ளவர்களின் மனப்பான்மை யும் நடத்தையுமே முக்கிய காரணமாயிருக்கிறது என்பதையும் நான்...

நல்ல இடி 0

நல்ல இடி

சேலம் பார்ப்பனருக்கும் அவர்களது வால் பிடித்துத் திரிபவர்களுக் கும் நமது முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் நல்ல இடி கொடுத்ததாக தெரிந்து நாம் மிகவும் சந்தோஷப்படுகிறோம். ஆனாலும் காண்டா மிருகத்தோல் படைத்த அப்பார்ப்பனருக்கும் அவர்களது அடிமைகளுக்கும் அது கொஞ்சமாவது சொரணை உண்டாகுமா என்பதுதான் நமது கேள்வி? அதாவது கனம் சுப்பராயனவர்களை சேலம் பார்ப்பனர்கள் தங்கள் டிக்கட் பாக்கட்டில் போடுவதற்காக “லிட்டரரி சொசைட்டி” என்கிற ஒரு பார்ப்பனக் கூட்ட நிலையத்தில் ஒரு கூட்டம் கூட்டி அவரை வானமளாவப் புகழ்ந்தும் இதற்கு முன் மந்திரியாய் இருந்தவர்களை ஆசைதீர வைதும் பேசினார்களாம். இதற்குப் பதிலளிக்குமுகத்தான் கனம் சுப்பராயன் இம்மாதிரி ஒருவரை, உத்தியோகம்விட்டுப் போனபின் வைவது இழிவு என்றும், நாளைக்கு என்னையும் இப்படித்தான் வைவீர்கள் என்றும், இப்படிச் செய்வது உங்களுக்கு யோக்கியதை அல்ல வென்றும் சொன்னாராம். வைததில் பெருமை கொண்டவர்களும் வைததைக் கேட்டு ஆனந்தம் கொண்டவர் களும் வெட்கித் தலைகுனிந்தார்களாம். இதோடு இந்தப் புத்தியை விட்டு...

கதர் இலாகா சிப்பந்திகள் 0

கதர் இலாகா சிப்பந்திகள்

தமிழ்நாட்டில் கதர் ஸ்தாபனங்களுக்கு சம்பந்தப்பட்ட உத்தியோகங் களில் இருப்பவர்களில் சிலர் கதர் கட்டாமல் இருக்கிறார்கள் என்றும், கதர் கிளை டிப்போக்களில் கதர் விற்பவர்கள் கூட கதர் கட்டாமல் அன்னிய நாட்டுத் துணியை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அடிக்கடி நமக்குப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்காலம் காங்கிரசிலிருப் பவர்கள் எப்போதும் கதர் அணிய வேண்டியது அவசியமில்லை என்று ஏற்பட்டு விட்டாலும் கதர் ஸ்தாபனங்களுக்கு அந்த சட்டம் எட்டும்படியான காலம் இன்னமும் வரவில்லை என்றே நினைக்கிறோம். அல்லாமலும் கதர் ஸ்தாபனங்களில் ஊதியம் பெற்றானாலும், ஊதியம் பெறாமலானாலும், தொண்டு செய்பவர்கள் கதர் உடுத்தியாக வேண்டும் என்கிற நிபந்தனை ஏற்படுத்துவது பாவமல்லவென்றே நினைக்கிறோம். ஆதலால், தமிழ்நாட்டு கதர் கவர்னர், கதர் ஸ்தாபன சிப்பந்திகளுக்கு இதைப்பற்றி ஓர் சுற்றுத்திரவு அனுப்ப வேணுமாய் கோருகிறோம். குடி அரசு – அறிக்கை – 10.01.1926

தஞ்சை ஜில்லா போர்டை பார்ப்பன அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி ! 0

தஞ்சை ஜில்லா போர்டை பார்ப்பன அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி !

தஞ்சை ஜில்லா போர்டைப் பற்றி பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் விஷமப் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள் என்பது பார்ப்பனப் பத்திரிகை களைப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது. ஆனால், அதன் காரணம் என்ன என்பதை வெகு பேர்கள் அறியா மல், விஷமப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து போவார்கள் என்றே நினைக் கிறோம். தஞ்சை ஜில்லா போர்டுக்கு இப்பொழுது பிரசிடெண்டாய் இருக்கும் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்திற்கு முன் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் அதாவது ஸ்ரீமான் வி.கே. ராமாநுஜாச்சாரியார் என்பவர் பிரசிடெண்டாய் இருந்த காலத் தில் தஞ்சை ஜில்லா தாலூகா போர்டுகள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாகவும், பார்ப்பனர்கள் அக்கிரஹாரமாகவும், பார்ப்பனர்கள் சாப்பிடும் அன்ன சத்திர மாகவும் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. ஆனால், அந்தக் காலத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைப் புகழ்ந்தது வானம் கூட ஓட்டையாய்ப் போயிருக்கும். ஸ்ரீமான் பன்னீர் செல்வம் வந்த பிறகு பார்ப்பன தனி ஆதிக் கத்தை ஒழித்து எல்லோருக்கும் பங்கு இருக்கும்படி செய்து...

கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடிய  ஓர் பிராமண வக்கீல் 0

கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடிய ஓர் பிராமண வக்கீல்

இரண்டொரு வாரங்களுக்கு முன்புதான், சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல் ஸ்ரீமான் எம்.ஆர். சுந்தரம் ஐயர் என்கிறவர் ஆறுமாதக் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் பெற்றிருந்ததை எழுதியிருந்தோம். இந்த வாரம் மற்றொரு பிராமண வக்கீலின் தண்டனையைப் பற்றி எழுத நேர்ந்திருக்கிறது. அதாவது:- சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல் ஸ்ரீமான் ஏ. துரைசாமி ஐயர் என்பவர் தனது கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடியதாக அவர் மீது ஓர் வழக்கு ஏற்பட்டு ருசுவானதின்பேரில், அவர் இனிமேல், வக்கீல் வேலையே செய்ய லாயக்கில்லையென்று சொல்லி அவருடைய பெயரை வக்கீல் ஜாப்தாவிலி ருந்து நீக்கிவிடுமாறு ஐக்கோர்ட் ஜட்ஜ் தீர்ப்புச் செய்துவிட்டார். கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல், வக்கீல் வேலைக்கே லாயக்கில்லையென்று ஓர் பழமொழி சொல்லுவதுண்டு. அதற்கேற்றாற் போலவே நமது பக்கங்களில் கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல்கள் மிகவும் அபூர்வம். இப் பொழுது எத்தனையோ வக்கீல்கள் கக்ஷிக்காரர்களின் பணத்தைப் பல வழிகளிலும் சாப்பிட்டுவிட்டு, கல்லுப் போலிருக்கிறார்கள். அப்படியிருக்க, ஸ்ரீமான் ஏ. துரைசாமி ஐயருக்கு மாத்திரம்...

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும் 0

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ்விடத்திய வெள்ளைக் காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக்குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக்காரர்கள் சட்டம் செய் திருப்பதாகவும், இக்காரணங்களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லக்ஷம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து கொடுக்கும்படி நமது தேசீய காங்கிரஸை கேட்டுக் கொள்வதற்காக சிலர் அங்கிருந்து வந்திருந்ததும், அதற்கிணங்கி நமது தேசீய காங்கிரசும் மகாத்மா அவர்களின் அபிப்ராயப்படி ஓர் தீர்மா னத்தையும் நிறைவேற்றி, வந்திருந்தவர்கள் கண்ணைத் துடைத்து அநுப்பி விட்டதும் வாசகர்கள் அறிந்த விஷயம். இதை அநுசரித்தே பிராமணரல்லாதார் காங்கிரசும் ஓர் தீர்மானத்தைச் செய்துவிட்டது. பத்திரிகைகளும் இதைப்பற்றி எழுதி தங்கள் கலங்களை நிரப்பிக் கொள்ளுவதற்கு ஓர் சந்தர்ப்பத்தையும் அடைந்து கொண்டது. முடி வென்ன? இவ்வித தீர்மானங்களால் வெள்ளைக்காரர்கள் பயப்படப் போகிறார்களா? அல்லது தேசீய காங்கிரசினிடமாவது வெள்ளைக்காரர்க ளுக்கு மதிப்பிருக்கப் போகிறதா? நமது தேசீய காங்கிரஸோ ஜாலவித்தைக் காரனுடைய செய்கைகள் போலாகிவிட்டது. ஜாலவித்தைக்காரன்...

செத்த பாம்பாட்டம் 0

செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசீய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங் களையும், தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளி யாகும் படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசி யத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தமிழ் நாட்டிலுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வ ளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு வந்திருந்தாலும், தமிழ்நாட்டி லுள்ள பிராமணரல்லாதார் பத்திரிகைகளும், பிராமணரல்லாதார் தலைவர் களும் எவ்வளவோ உதவி செய்ததின் பலனாய் முடிவில் வெற்றி கிடைத்த தோடு தமிழ் நாட்டிற்கே ஓர் புதிய உணர்ச்சியையும் உண்டாக்கி வைத்து சேரன்மாதேவி குருகுலமும் கலைந்து போய்விட்டது என்பது உலகமே அறியும். அப்படியிருக்க, செத்த பாம்பை எடுத்து ஆட்டுவது போல் குருகுலத்தால் வயிறு வளர்த்த சில பிராமணர்கள், குறிப்பாய் ஸ்ரீமான் தி.ரா. மகாதேவய்யர் கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு விளம் பரம் அனுப்பியிருக்கிறார். அதில் குருகுலம் ஒழுங்காய் நடந்து வருகிற பாவனையாகவும், தானே அதில் ஆச்சாரியாராய் இருக்கிறது போலும், சுயராஜ்யக்...

பிராமணர்கள் சூழ்ச்சி 0

பிராமணர்கள் சூழ்ச்சி

“ஸ்ரீமான். சத்தியமூர்த்தியின் தன்னை அறியா மெய்யுரைகள்” ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அவர்களின் ராஜீய வாதத்தைப் பற்றி நாம் அநேக விஷயங்களில் மாறான அபிப்ராயம் கொண்டிருந்தாலும், அவருக்கு ஆவேசம் வரும் காலங்களில் தன்னை அறியாமலே ராஜ தந்திரத்தைக் கையாளாமல் உண்மையைக் கொட்டிவிடுகிறார் என்கிற சந்தோஷம் நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. சமீப காலத்திற்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு உண்மையை தாராளமாய் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று மிகவும் முக்கியமானது. இது பிராமணரல்லாத பொது ஜனங்கள் நன்றாய் அறிய வேண்டிய விஷயம். அதாவது, காங்கிரஸ் தினம் என்று டிசம்பர் 26- ² சென்னை சவுந்தர்ய மகாலில் ஸ்ரீமான். யூ.ராமராவ் அக்ராசனத்தின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பேசுகை யில் ஒரு பெரிய ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு:- “ஸ்ரீமான் யாதவர் இங்கு வந்து வகுப்புத் துவேஷத்தை மூட்டப் பார்த்தார். சட்ட மெம்பர் ( மனு.சர். ஊ.ஞ. ராமசாமி அய்யர்) தாம் பிராமண ரென்று பயந்து சட்டப்பிரகாரம் கவனிக்காது...

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதினாலேயே கலியாணம் நின்று போகுமா? 0

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதினாலேயே கலியாணம் நின்று போகுமா?

நமது ‘குடி அரசு’ பத்திரிகைக்கு விரோதமாக சில பிராமணர்களும், பிராமணரல்லாத சில வாரப் பத்திராதிபர்களும், வயிற்றுக்கில்லாமல் கஷ்டப் படும் சில காங்கிரஸ் தொண்டர்களென்போருக்குப் பணம் கொடுத்தும், தங்களுடைய வாரப் பத்திரிகைகளை இலவசமாக அனுப்பிக் கொடுத்தும், ஆட்களை ஏவிவிட்டு நாம் ஜஸ்டிஸ் கக்ஷியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு பத்திரிகை நடத்துவதாகவும் ஜெயிலுக்குப் பயந்து கொண்டும் பதவிகளுக் காசைப்பட்டும் சர்க்காருக்கனுகூலமாய்த் திரும்பி விட்டதாகவும், இன்னும் பல இழிவான காரணங்களையும் சொல்லி அதனால் “குடி அரசை” வாங்கி வாசிக்கக் கூடாதென்றும் ஆங்காங்கு திண்ணைப் பிரசாரங்கள் நடத்தி வருவ தாய் அடிக்கடி நமக்குத் தகவல்கள் எட்டிக்கொண்டே வருகின்றன. இவற் றைப் பற்றி நமது உப பத்திராதிபர் இரண்டொரு இடங்களில் நேரிலும் பார்த் திருக்கிறார். “குடிஅரசு”க்கும் அதன் பத்திராதிபருக்கும் செல்வாக்கு குறைத்தும் போவதினாலேயே பிராமணரல்லாதாருடைய முன்னேற்றத்தை அடக்கி விடலாமென்று நினைப்பது “சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் கலியாணத்தையே நிறுத்திவிடலாம்” என்று நினைக்கிற அறி வீனத்தைப் போற்தான் முடியும்....

பொங்கல் வசூல் பார்ப்பனரல்லாத வாலிபர்களே! 0

பொங்கல் வசூல் பார்ப்பனரல்லாத வாலிபர்களே!

பொங்கல் தினங்களில் உண்டி மூலம் வீடு வீடாய்ச் சென்று பணம் வசூல் செய்யுங்கள். பார்ப்பனரல்லாத பெரியோர்களே ! வாலிபர்கள் உங்களைத் தேடி உண்டிகைக் கொண்டு வந்தால் இல்லை யென்று சொல்லாமல் உங்களுக்குத் தோன்றியதை உண்டியில் போடுங்கள். வசூலான தொகையை அந்தந்த ஜில்லா ஸ்தாபனங்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் கட்டளைப்படி உபயோகப்படும். குடி அரசு – அறிவிப்பு – 09.01.1927

கான்பூர் தேசீய காங்கிரஸ் தீர்மானம் 0

கான்பூர் தேசீய காங்கிரஸ் தீர்மானம்

கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்தைப் பற்றி தேசீயப் பத்திரிகைகளென்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகளெல்லாம் “கங்காதரா மாண்டாயோ! கங்காதரா மாண்டாயோ!” என்கின்ற கதைபோல் ஒரே மூச்சாக கொஞ்சமும் விசாரிக்காமலும் யோசனையின்றியும் “நல்ல தீர்மானம்! நல்ல தீர்மானம்!” என்றே எழுதிக்கொண்டு வருகின்றன. பொது ஜனங்களும் இவற்றைப் பற்றி சரிவரச் சிந்திக்காமல் பத்திரிகைகளை நம்பியே ஏமாந்து போகிறார்கள். காங்கிரஸ் தீர்மானத்தின் முக்கிய தத்துவங்களெல்லாம் இரண்டு, மூன்று விஷயங்களிலேயே அடங்கிப்போயிருக்கிறது. அதாவது, சட்டசபைகளைக் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டியது; அதற்காகக் காங்கிரஸ் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது. சட்ட மறுப்புத்தான் நல்ல ஆய்தம்; ஆனால், தேசம் அதற்கு லாயக்கில்லை. நிர்மாணத் திட்டத்தைப் பொது ஜனங்களையே நிறைவேற்றி வைக்கச் சொல்லிவிட வேண்டியது. சர்க்காரை இறுதியாகச் சில விஷயங்களைக் கேட்பது, அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் சட்டசபைகளை விட்டு விலகிவிடுவதுமான விஷயங்கள் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சட்டசபை செல்லும் நோக்கத்துடன் ஸ்ரீமான் தாஸ் தலைமையாக யிருந்து, காங்கிரஸுக்கு விரோதமான பிரசாரம் செய்து வரும் காலத்திலேயே சட்டசபை...

இனிச் செய்ய வேண்டிய வேலை 0

இனிச் செய்ய வேண்டிய வேலை

மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக் கடிதங்கள் வந்த வண்ண மாயிருக்கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சி யுடன் இருக்கிறார்கள் என்பதும் சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கி றார்கள் என்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயை யில் விழுந்து தங்கள் சமூகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கிவிட்டது. ஆனால் இந்த விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரசாரத்தினாலும் சுவாதீன புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும், சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம் உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வரவும் உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும் ஏற்கனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக்கூடிய உற்சாக மென்றாவது சொல்லிவிடமுடியாது என்றே நினைக்கிறோம். நமது...

ஸ்ரீமான் சு. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம் 0

ஸ்ரீமான் சு. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம்

தீண்டாதார் வகுப்புப் பிரதிநிதியாய் சர்க்காரால் நியமிக்கப் பட்ட சட்ட சபை மெம்பரான ஸ்ரீமான் ஆர்.வீரய்யன் அவர்கள் சென்னை கிராமப் பஞ் சாயத்து சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப் போவதாக சட்டசபைக்கு ஒரு முன்னறிக்கை அனுப்பியிருக் கிறார். அதாவது, அச்சட்டத்தின் ஒரு பாகத்தில் கிராமப் பஞ்சாயத்து மெம்பர்கள் ஸ்தானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பாரிலிருந்து சில பிரதிநிதிகளை சர்க்கார் நியமிக்க வேண்டும் என்கிற வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளும்படி அதில் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் காரணம் சொல்லுகையில் தேர்தல்கள் மூலமாக தீண்டா தார் என்போர்கள் ஸ்தானம் பெற முடியாமலிருக்கிறபடியால் முனிசிபாலிட்டி, ஜில்லா, தாலூகா போர்டுகள் போல் கிராமப் பஞ்சா யத்து சபைக்கும் தீண்டாதா ருக்கும் சர்க்கார் நியமனம் கிடைத்தால் அல்லாமல் ஸ்தானம் பெற முடியா தாதலால் சட்டத்தில் இவ்வித திருத்தம் இருக்க வேண்டியது உடன் அவசிய மாகிறது என்று எழுதுகிறார். நமது குறிப்பு:- இவற்றை நாம் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். புருஷன் பெண் ஜாதியாய் வாழுகின்றவர்களே...

தியாகமூர்த்தியின் இறுதித் தியாகம் 0

தியாகமூர்த்தியின் இறுதித் தியாகம்

பாரத தேவியின் மணிவயிறு வாய்த்த துணிவுடை வீரமைந்தன் – தாய்த்திருநாட்டின் தவப்பேறு – வங்கநாட்டுச் சிங்கம் – உலகில் தியாகம் அனைத்தும் ஒரு வடிவு எடுத்தாலன்ன விளங்கிய விழுமியோன் – இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வள்ளல் – தேசபந்து சித்தரஞ்சன் தாஸர் ஆருயிர் அன்னையாம் பாரதியைப் பரிதவிக்க விட்டு வானுலகு ஏகின கொடுஞ் செய்தி இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து வெந்துயர்க் கடலில் வீழ்த்திவிட்டது. இடிமுழக்கம் கேட்ட நாகமே போன்று கொடுங்காலன் இடி கேட்டு இந்தியமக்கள் நவிலொணா நடுக்கத் திற்காளாயினர். இந்திய நாட்டின் – இந்திய மக்களின் வல்வினைதான் இருந்த வாறு என்னே! நம தருமைத் தாய்த்திருநாட்டிற்கு இஃதோர் எண்ணுதற்கரிய பெருஞ் சோதனைக் காலம் போலும்! கொடுங் கூற்றுவனின் கூத்தினைக் கண்டு தமிழ் நாடும், தமிழ் மக்களும் துயருழந்து வாடுங்காலையில், தனது வண்மையைக் காட்டுவான் விரும்பி அக்கொடியோன் வங்க நாடுற்றனன் போலும். வங்க நாட்டுச்சிங்கத்தின் வீர முழக்கம் ஓய்ந்துவிட்டது;...

கோவை மகாநாடு ( ஈ.வெ.கி ) 0

கோவை மகாநாடு ( ஈ.வெ.கி )

நமது மாகாண பார்ப்பனரல்லாதாரின் விசேஷ மகாநாடு இன்று கோவையில் கூடுகிறது. நீண்ட காலமாக நம்முள் சிதரிக் கிடந்த அபிப்பிராய பேதமுடைய ராஜீய பார்ப்பனரல்லாதார்களான கனவான்கள் யாவரும் விஜயம் செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நன்முடிவுக்கு நாம் வராவிட்டால் நமது நிலை என்ன ஆகுமென்பதை முன்பே எழுதி இருக்கிறோம்.“ சுயமரியாதை” வேண்டுமென்றும் அதற்கு நமக்கென ஒரு தனி இயக்கம் வேண்டுவது அவசியமென்றும், காலம்சென்ற நமது தலைவர்களான திரு. நாயர் பெருமானாலும், தியாகராயர் பெருமானாலும் முதன் முதல் எந்த இடத்தில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே இடத்தில்தான் அவ்வியக் கத்தின் நெருக்கடியான காலத்தில் ஒரு முடிவு காணவும் இன்று கூடி இருக்கிறோம். மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடும், ஜில்லா இளைஞர்கள் மகாநாடும் ஒரே இடத்தில் கூடி இருக்கிறது. இவ்விரு மகாநாடுகளின் வரவேற்புக் கழகத் தலைவர் பிரசங்கமும், மகாநாட்டுத் தலைவர் பிரசங்கமும், நமது பார்வைக்கு வந்து விட்டது. திருவாளர் ரெத்தின சபாபதிக் கவுண்டர் மகாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரவர்கள் பார்ப்பனர்...

சுவாமி சிரத்தானந்தர் 0

சுவாமி சிரத்தானந்தர்

சுவாமி சிரத்தானந்தர் என்னும் பெரியாரை உலகம் முழுதும் தெரியும். இவர் தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களின் உயர் முன்னேற்றத்திற்காகவும் தனது தொழில், செல்வம், குடும்பம் முதலிய வற்றைத் தியாகம் செய்து தனது ஜீவிதத்தின் பெரும்பான்மையான பாகத் தையும் சந்நியாசியாகவிருந்தே தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்காக அஞ்சாநெஞ்சத்தோடும், இளையா ஊக்கத்தோடும் தொண்டாற்றினார். இவர் ஒரு முஸ்லீமால் படுகொலையுண்டிறந்தது ஒவ்வொரு மனிதனுடைய மனதையும் பெரும் துன்பத்திற்குள்ளாகுமென்பதற்கு சிறிதேனும் ஐய மில்லை. சுவாமிகளது மரணத்தால் இந்தியா தனது உண்மை புத்திரர்களில் ஒருவரை இழந்ததென்று சொல்வது மிகையாகாது. ஆயினும் இதை ஆராயு மிடத்து இதுவும் ஒரு நன்மைக்கென்றே கொள்ள நேரும். ஏனெனில் பிறப் பெய்திய ஒவ்வொரு மனிதனும் இறக்க வேண்டியதவசியமே. அங்ஙனம் சுவாமிகள் சாதாரணமாக ஏதோ ஒரு நோயின் பேரால் இறந்திருப்பாரே யாயின் இன்றிருக்கும் உணர்ச்சிக்கும் அவரது தொண்டில் மக்களுக்கிருக்கும் ஊக்கத்திற்கு இத்தனை ஏதுவில்லாமலிருக்கும். இப்படுகொலையினால் அனாவசியமாய் ஒரு கூட்டத்திற்கு பழியேற்பட நேரிட்டதேயன்றி சுவாமி களுக்கேனும் அவர் கொண்ட தொண்டிற்கேனும்...

தமிழ் மாகாண கோ-வம்சத்தினரின் 0

தமிழ் மாகாண கோ-வம்சத்தினரின்

( கோவில் பண்டாரங்கள் ) இரண்டாவது மகாநாடு நாளது தை µ 11, 12 (1926 ஜனவரி 24,25) தேதி ஞாயிறு திங்கள்கிழமைகளில் கொடுமுடி மகுடேஸ்வர சுவாமி கோவிலுக் குப் பக்கத்தில் உள்ள சத்திரத்தில் காரமடை ஸ்ரீமான் சூ.கருப்பண்ண பண்டாரம் அவர்கள் தலைமையின் கீழ் தமிழ் மாகாண கோ – வம்சத்தினரின் 2-வது மகாநாடு நடைபெறும்:- அதே சந்தர்ப்பங்களில் ஸ்ரீமதி லக்ஷிமி அம்மாள் அக்ராசனத் தின் கீழ் ஸ்ரீகள் மகாநாடும், ஸ்ரீ கணபதி அக்ராசனத்தின் கீழ் மாணவர் கள் மகாநாடும் நடைபெறும். பலவிடங்களிலிருந்தும் அநேக பிரபலஸ்தர்கள் விஜயம் செய்வதாய் வாக்களித்திருக்கிறார் கள். ஆதலால் எல்லா குலாபிமானி களும் இதர சமூக கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டப்படுகிறார்கள்:- – கொடுமுடி வரவேற்புக் கமிட்டியார். நமது குறிப்பு: – நமது தாலூக்காவில் உள்ள சைவப் பண்டாரங்களின் முக்கிய கூட்ட மிதுவாகையால், இத்தாலூக்கா வேளாள சமூகத்தார் அனைவரும் விஜயம் செய்து அவர்கள் முன்னேற்றத்துக்கான...

கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு 0

கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு

நமது நாட்டில் செங்குந்தர் குலமானது தக்க பெருமையுடனும், செல்வாக்குடனும் இருந்து வருகிறது. ஆனாலும், அதில் பெண்களை கோவில்களின் பேரால் பொட்டுக்கட்டி தாசி வேசித் தொழில் செய்ய அநுமதிப்பதால் அக்குலத்திற்கு ஒரு இழிவு இருக்கிறது என்பது மறைக்க முடியாத காரியமானாலும், இச்சங்கம் ஏற்பட்ட சென்ற 10 வருஷங்களுக் குள்ளாக எவ்வளவோ சீர்திருத்தமடைந்துவிட்டது. இவ்வளவு தூரம் முன் னேற்றமடையும்படியான காரியம் வேறு எந்த குல சங்கமும் செய்யவே யில்லை. இக்குல முன்னேற்றத்திற்கு இச்சங்கத்தின் மூலமாய் பல குலாபி மானிகள் உண்மையில் பாடுபட்டதனால்தான் இந்த யோக்கியதைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இது மாத்திரம் போதாது. இக் குலத்தின் சில ஆண்களிடமும் உள்ள சில குறைவுகளையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதாவது, நமது நாட்டில் இக் குலத்தாரில் சிலர் மேளம் வாசிக்கும் தொழிலை ஜீவனமாய்க் கொண்டிருப்பதால் ஒரு குறைவான பெயர் இருந்து வருகிறது. இத் தொழில் காரணமாகவே ஆண்கள் சுயமரியா தையைக் கவனிக்காமல் தங்களுக்குள்ளாகவே சிலர் தங்களைத்...

பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

பார்ப்பனரல்லாதார் மகாநாடு

சென்ற மாதம் 25, 26 ² சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூடிக் கலைந்து விட்டது. மகாநாடா னது சென்னை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தினரால் பார்ப்பனரல்லாதார் மகாநாடென்று முறையாகச் சென்ற பத்து வருஷ காலமாய் நடந்து வந்ததை அனுசரித்தே கூட்டப்பட்டது என்பதாகக் கருதி, “பார்ப்பனரல்லாதார் 10வது மகாநாடு” என்னும் பேரால் கூட்டப்பட்டது என்று சொல்வதானாலும் இவ்வருஷம் பார்ப்பனரல்லாதார் முதல் மகாநாடென்றே சொல்ல வேண்டும். இந்த மகாநாட்டிற்கு வந்தால் தங்கள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ, பெருமை குறைந்துவிடுமோ, பார்ப்பனர்கள் அழித்து விடுவார்களோ என்று பயந்தவர்களும், தவிர்க்க முடியாதபடி பார்ப்பனர்களின் தாக்ஷண்ணியத் திற்கு கட்டுப்பட்டவர்களும், எப்போதும் பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் சேருவதில்லை என்பதாக பார்ப்பனருக்கு வாக்குறுதி கொடுத்து அப்புறம் இப்புறம் ஒப்பந்தம் பேசிக்கொண்டவர்களும், தவிர்க்க முடியாத அசந்தர்ப் பத்தில் பட்டவர்களும் தவிர, மற்றெல்லா முக்கியஸ்தர்களும் பிரதிநிதிகளும் விஜயம் செய்திருந்தார்கள். இம்மகாநாடு கூட்ட வேண்டு மென்று “குடி அரசி”ன்...

துக்கம் கொண்டாடும் வகை 0

துக்கம் கொண்டாடும் வகை

ஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் அய்யர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என் போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சி யில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள் முன் இருக்கக்கூடாது என்று நினைத்துப் போய்விட்டீர்களோ என்றும், பணம் எவ்வளவு வேண்டுமானா லும் சம்பாதிக்கலாம் ஒரு அய்யரை சம்பாதிக்க முடியுமா என்று வரதராஜுலு நாயுடுவைக் கேட்பது போலவும் எத்தனையோ விதமாய் பெண்கள் ஜாடை பேசுவதுபோல் பேசி மகிழ்கிறார்கள். இதே ஆசாமிகள், இதே சமயத்தில், வரதராஜுலு நாயுடும், ராமசாமி நாயக்கரும் பிரயாணத்தில் ரயில் எங்காவது விழுந்து ஒழிந்து போயிருப்பார்களானால் அப்போது என்ன பேசியிருப் பார்கள்? டாக்டர் நாயர் லண்டனில் இறந்தபொழுது சிலர் பேசியதையும் பொது ஜனங்கள் நினைத்து பார்க்கட்டும். இவர்கள் இப்படிப் பேசி மகிழ்ந்தால் எதிர் கட்சியிலிருக்கிறவர்கள் என்ன பேசி மகிழ்வார்கள் என்பதையும், இப்படிப் பேசுகிறவர்கள் இறந்தவர்களுக்கு...