கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை
நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும், மதச் சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்து வரும் கேடுகளுக்கும் தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கி சீரழிந்து சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப்படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நமது கதி என்னவாகும்? “அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று” என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவே கூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. “காலானிக்கு வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு” என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது. அதுபோல் கோவிலுக்குள் வர வேண்டாம் என்பதாகவே...