Author: admin

கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை 0

கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை

நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும், மதச் சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்து வரும் கேடுகளுக்கும் தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கி சீரழிந்து சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப்படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நமது கதி என்னவாகும்? “அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று” என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவே கூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. “காலானிக்கு வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு” என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது. அதுபோல் கோவிலுக்குள் வர வேண்டாம் என்பதாகவே...

திருப்பூர்  மகாநாடு 0

திருப்பூர் மகாநாடு

திருப்பூரில் மகாநாடு கூடிக்கலைந்தாகி விட்டது. தீர்மானங்கள் கவர்னருக்கு அனுப்பியாய் விட்டது. மற்ற விஷயங்கள் எப்படிப் போனாலும் இதனால் கவர்னர் தயவு இரண்டொரு ஆசாமிகளுக்கு கிடைத்தாய் விட்டது. அதன் மூலம் சிலருக்கு உத்தியோகமும் சிலருக்குப் பட்டமும் வந்துவிடப் போகிறது. இதைப் பொறுத்தவரையில் உறுதி தான். மற்றபடி உபசரணைத் தலைவர் மகாநாட்டுத் தலைவர் பிரசங்கங்கள் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார், ஓ.கந்தசாமிசெட்டியார் முதலிய கனவான் களின் பிரசங்கங்களைப்போல் என்றே சொல்லவேண்டும். பெரும்பாலும் சர்க்காரையும் மந்திரிகளையும் புகழ்ந்து பார்ப்பனரல்லாதார் கட்சியை ஆசை தீர எழுதிக்கொடுத்தபடி வைததுதான் முக்கிய அம்சமாகும். மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் சர். முத்தைய்ய செட்டியாரைப் பற்றி நாம் விசேஷமாக சொல்ல வேண்டியதில்லை. அவரது கொள்கையைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்வதானால் பச்சயப்ப முதலியார் தர்ம ஸ்தாபன தர்மகர்த்தாக்களில் இவர் ஒருவராயிருப்பதில் அப் பள்ளிக்கூடத்திற்கு ஒடுக்கப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கட்சி கட்டிக் கொண்டிருப்பவர். ஆனால் ஒடுக்கப் பட்டவர்கள் உபாத்தியாயர்களாக இருப்பதில்...

வருணாச்சிரம தர்மம் 0

வருணாச்சிரம தர்மம்

நமது பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்”என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கடுத்தவர்கள் சிலர் கடவுளின் தோளிற் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களென்றும் மற்றும் சிலர் கடவுளின் தொடையிற் பிறந்தவர் வைசியர்களென்றும், ஆனால் கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் இல்லை என்றும் தங்களைத் தவிர மீதியுள்ளவர்களெல்லாம் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் `சூத்திரர்கள்’ என்றும், அச்சூத்திரர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள், தங்களது அடிமைகள், தங்களுக்குத் தொண்டு செய்வ தற்கென்றே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவதோடு இந்த சூத்திரர்களுக்கு எந்தவித சுதந்திரமுமில்லை என்றும், அவர்கள் சொத்து, சுகம் வைத்துக்கொள்ளுவதற்குக் கூட பாத்தியதையில்லாதவர்க ளென்றும், அப்படி மீறி வைத்திருந்தால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும் இன்னும் நினைப்பதற்கே சகிக்க முடியாததான அநேக இழிவுகளை யெல்லாம் கற்பித்து இவைகளுக் காதாரம் வேதத்திலேயே இருக்கிறதென்றும், வேதம் கடவுளால்...

பயப்படுகிறோம்               மகாத்மா காந்தியின் தமிழ்நாட்டு விஜயம் 0

பயப்படுகிறோம் மகாத்மா காந்தியின் தமிழ்நாட்டு விஜயம்

இது ஒரு சங்கராச்சாரி விஜயமாகிவிடும் என்பதாகவே பயப் படுகிறோம். மகாத்மா காந்தியவர்கள் உலகம் போற்றும் பெரியார் என்பதிலும், பரிசுத்தமான எண்ணமுடையவர் என்பதிலும், மக்களுக்கு நன்மை செய்வ தில் உண்மையான ஆசை உள்ளவர் என்பதிலும், அதே கருத்துக்கொண்டு உழைக்கிறார் என்பதிலும் யாருக்கும் எவ்வித அபிப்பிராய பேதமுமிருக்க நியாயமில்லை. ஆனபோதிலும் அதோடுகூடவே மகாத்மா காந்தியவர்கள் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் கையில் சிக்கி இருப்பவர் என்பதையும், நம் நாட்டு விஷயங்களைப் பார்ப்பனர்கள் மூலம் அறிந்து பார்ப்பனக் கண்ணாடியினால் தான் பார்த்தறியக் கூடிய நிலைமையில் இருக்கிறார் என்பதையும், நாம் மறைப்பதில் பிரயோஜனமில்லை. சாதாரணமாக இந்துமுஸ்லீம் அபிப்பிராய பேதங்கள் விஷயமாக மகாத்மா காந்தியவர்கள் எவ்வளவு பேசினார், எவ் வளவு எழுதினார், எவ்வளவு பட்டினி கிடந்தார், எவ்வளவு வருத்தப்பட்டார் என்பதைப் பற்றி வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்டவேண்டியதே இல்லை. அப்பேர்ப்பட்ட மகாத்மா பிராமணர் பிராமணரல்லாதார் அபிப்பிராய பேதம் என்பதைப்பற்றி நாளிதுவரை என்ன பேசினார், என்ன எழுதினார், என்ன பட்டினி இருந்தார், என்ன...

மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 0

மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:- 1. பொங்கல் உண்டி வசூலில் இருந்து ரூபாய் நூறு தியாகராயர் ஞாபக நிதிக்களித்து மிகுதியை இச்சங்க உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளும்படி அனுமதி கொடுக்க வேணுமாய்த் தீர்மானிக்கப்படுகிறது. 2. இச்சங்கம் மதுரைப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் நிறைவேறிய எல்லாத் தீர்மானங்களையும் மனமுவந்து ஒப்புக் கொள்வதுடன் அவற்றை அனுபவத்தில் நடைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட கனவான்கள் அடங்கிய நிர்வாக சபையை நியமிக்கிறது:- போஷகர்கள்:- ராவ்பகதூர் வீரப்ப செட்டியார், திருஞான சம்பந்த முதலியார். உப பிரஸிடெண்டுகள் :- முத்துக் குமாரசாமி முதலியார், ராஜரத்தின முதலியார். காரியதரிசி:- சாமி செட்டியார். கூட்டுக்காரியதரிசி:– முத்துச்சாமி நாயனார். நிர்மாண கர்த்தாக்கள்:- எம்.பி. ரங்கசாமி ரெட்டியார்,ஆதி மூல உடையார். பொக்கிஷதார் :- ஆறுமுக முதலியார் மற்றும் பலர் நிர்வாக சபை மெம்பர்கள் 3. தேவஸ்தான மசோதாவை சட்டமாக அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி அவர்களையும் சென்னை கவர்னர் அவர்களையும் இக்கூட்டம் சந்தோஷத்துடன் பாராட்டுகின்றது. இந்தத் தீர்மானத்தை...

அறிவை அடக்க புதிய சட்டம் 0

அறிவை அடக்க புதிய சட்டம்

மத ஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப்பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டுமென்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலா யிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக்கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம். மதம் என்று சொல்வது ஒரு மனிதனுடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல், அது உலகத்திலுள்ள மனித கோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடியதல்ல. அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப் பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லையென்பதே நமது அபிப்பி ராயம். உலக மனிதர்களில் 100 – க்கு 99 3/4 பேர்களால் ஒப்புக்கொள்ளுவ தாகச் சொல்லப்படும் கடவுளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்ப தற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை...

திருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு 0

திருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற் பும் நீங்கள் வாசித்துக் கொடுத்த பத்திரங்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி யைக் கொடுத்தன. எனினும் அத்தகைய குதூகலமான வரவேற்புக்கும் இத்தகைய பத்திரங்களுக்கும் நான் பொருத்தமுடையேன் அல்லேன் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மனதாரப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன், என் தொண்டை நீங்களெல்லோரும் ஒப்புக் கொண்டு உங்களுடைய மனமார்ந்த ஆதரவளிப்பதற்கு என் மனப்பூர்த்தியான வந்தனத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். (கரகோஷம்). இக்கூட்டம் திருவண்ணா மலை தாலூகா தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் திறப்பு விழாவின் பொருட்டு கூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட போதிலும், இங்கு ஏற்கனவே சங்கம் நிறுவப் பட்டு வேலைகளும் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது. அன்றியும் இன்று இக்கூட்டம் என்னை வரவிடுத்து என் கடனாற்றச் செய்வ தன் பொருட்டானதன்றி சில தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்பட்டதென்பது நிகழ்ச்சிக் குறிப்பினாலறியப்படலாம். ஆதலால் இது ஒரு மகாநாட்டுக்குச் சமானமானதென்றே கருதுகின்றேன். கடைசியாக உங்களுடைய வரவேற்புப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள...

பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிரசாரங்களும் 0

பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிரசாரங்களும்

அடுத்துவரும் சட்டசபைத் தேர்தல்களில் பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கவலையுள்ள எந்த பிராமணரல்லாதாரும் ஜெயம் பெற முடியாதபடி விஷமப் பிரசாரங்கள் செய்து பிராமணர்களும் அவர்கள் தாளத் திற்குத் தகுந்தபடி ஆடும்படியான பிராமணரல்லாதார்களையுமே சட்டசபை யைக் கைப்பற்றும்படியான மாதிரிக்கு வேலைகள் செய்யப்பட்டு வருகிற தைப் பிராமணரல்லாத பாமர ஜனங்கள் இன்னமும் அறியாமல் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அநுகூலமாகவே சில பிராமண ரல்லாத பத்திரிகைகளும், தலைவர்கள் என்போர்களும், தொண்டர்கள் என்போர்களும் ஒத்துப் பாடிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் இப் பத்திரிகைகளும், தலைவர்களும், தொண்டர்களும் தற்காலம் செல்வாக்கும், பெருமையும், ஜீவனோபாய மார்க்கம் அடைந்து இருந்தபோதிலும், தேர்தல் கள் முடிந்து பிராமணர்கள் காரியம் முடிந்தவுடனே காதறுந்த ஊசிபோல கருதப்படுவார்கள் என்பதில் யாதொரு சந்தேகமும் இருக்காது. ஆனாலும், இப்பொழுது ஏன் பிராமணர்களும் அவர்கள் பத்திரிகைகளும் அதிகமான பிரயத்தனங்கள் எடுத்துக்கொண்டு இவ்வளவு பணங்கள் செலவு செய்து பிரசாரங்கள் செய்கிறார்கள் என்கிற விஷயத்தில் சிலருக்கு அதன் அவசியம் விளங்காமலேயிருக்கிறது. இப்பிரசாரங்களின் முக்கியக் காரணம் அடுத்தாற்...

பாவி டயர் 0

பாவி டயர்

பஞ்சாப்பில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அநேக பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாராக கண்டபடி வைது எழுதி வருகின்றன. செத்துப்போன ஜனரல் டயர் துரையை விட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொண்டு சுகமாய் வாழுகிறார்கள். இந்த டயர்களைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன. நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதை குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு “கங்காதரா மாண்டாயோ கங்காதரா மாண்டாயோ” என்று கத்த வேண்டியது தான். பாவி டயராவது அவரது வகுப்பு பெண்மீது கல்லுப் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ மூக்கினால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனை போட்டாவது அவர்களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டிலிருக்கும் படுபாவி டயர்கள் நாம்...

காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி 0

காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி

தீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம் பெற்றிருந்தது. அதற்காக எவ்வளவோ பணங்களும் ஒதிக்கி வைத்து அத் திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது; ஆனால் அவைகள் என்ன கதி அடைந்தன என்பதை கவனிப்போம். தீண்டாமை விலக்கு நிதிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ரூ. 20000 ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அந்தப் பணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த வேலைக்கு உபயோகப்படுத்த ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் ஒரு சிறிதும் இடம் கொடுக்காமல் தனது வசம் அந்த ரூபாயை ஒப்புவித்து விடும்படிக்கும் தான் அந்த வேலை செய்து கொள்வதாகவும் சொல்லிப் பணத்தை எடுத்து தன் பெயருக்கு பாங்கியில் போட்டுக் கொண்டார். கமிட்டியில் இருந்து தான் விலகும் வரையிலும் அந்தப் பணத்தை தான் சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டு கடைசியாக அதை சீனிவாசய்யங்காருக்கு தேர்தல் செலவுக்கு ஏற்பட கமிட்டி வசம் அதை ஒப்புவித்தார். அவரும் தனக்கு பூரா அதிகாரம்...

நன்றி கெட்ட தன்மை 0

நன்றி கெட்ட தன்மை

சென்னையில் வர்த்தகர்கள் சங்கம் வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவைகள் முழுவதும் ஐரோப் பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும் சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ் சென்ற பெரியார் சர்.பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெரு முயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சௌகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் ஐரோப்பிய சங்கங்களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசிபாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும், இந்திய சட்டசபைக்கும் அங்கத்தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார். இப்போதும் மற்ற எல்லா ஸ்தாபனங்களை யும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங் களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே இதையும் கைப்பற்றிக் கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கி யதையும்...

மௌலானா அப்துல்பாரி 0

மௌலானா அப்துல்பாரி

உத்தம தேசபக்தரும், முஸ்லீம்களுள் சிறந்த ஞானவான் எனக் கொண்டாடத்தக்கவருமாகிய மௌலானா அப்துல்பாரி அவர்கள் சமீபத்தில் மரணமடைந்தாரெனக் கேள்விப்பட மிகவும் வருந்துகிறோம். இவருடைய பெருத்த ஆதரவைக் கொண்டே கிலாபத் இயக்கமாகிய மத விஷயத்தில் மகாத்மா காந்தி தலையிட்டுழைக்கும்படியாயிற்று. காலஞ் சென்ற மௌலானா அவர்கள், முஸ்லீம்களின் மத கல்வி விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தை கொஞ்சமல்ல. இத்தகைய பெரியார் காலஞ்சென்றது மகமதிய சமூகத்துக்கே பெருத்த நஷ்டமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 31.01.1926

ஓர் மறுப்பு 0

ஓர் மறுப்பு

திருப்பூரில் பார்ப்பனரல்லாதார் நபரால் கூட்டப்போகும் ஒரு போலி மகாநாட்டிற்கு எதிரிடையாய் ஒரு மகாநாடு கூட்டப் போவதாகவும் அதற்கு ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாயக்கர் முதலியோர்கள் வரப்போவதாகவும், பார்ப்பன பத்திரிகைகளில் வெளியாய் இருக்கிறது. இது கொஞ்சமும் ஆதாரமற்றது. இதற்கு மறுப்பு அசோசியேட் பிரஸ் பிரதிநிதியிடம் நேரில் தெரிவித்தும் பத்திரிகைகளில் வெளியாகவில்லை. நம்மை பொருத்தவரை அப்பேர்பட்ட மகாநாடு கூட்டுவதைப் பற்றி கொஞ்சம் கூடக் கருதவில்லை என்றும் கூட்ட லாமா என்று பலர் யோசனை கேட்பதற்குங்கூட அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். குடி அரசு – மறுப்புரை – 14.08.1927

ஈரோட்டில் முதல் மந்திரி திருவிழா 0

ஈரோட்டில் முதல் மந்திரி திருவிழா

ஈரோடு முனிசிபாலிட்டியாரால் ஒரு ஹைஸ்கூல் திடீரென்று ஏற்படுத் தினதின் கருத்தையும், அதன் பேரில் மஹாஜன ஸ்கூல்காரர்கள் முதன் மந்திரிக்கு எழுதியதின் பேரில் ³ ஹைஸ்கூலில் 4 வது 5 வது பாரங்களை எடுத்துவிட வேண்டுமென்று மந்திரி உத்திரவு போட்டார் என்பதையும், 2,3 வாரங்களுக்கு முன்பு ‘குடி அரசில்’ எழுதியிருந்தோம். முதன் மந்திரியின் இந்த உத்திரவின் பேரில் ஈரோடு சேர்மென் சில பலமான சிபார்சுகளைப் பிடித்துக் கொண்டு போய் அதாவது நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு எதிரிடையாய் கக்ஷி சேர்ப்பதாய்ச் சொல்லி, அந்த உத்திரவை மாற்றி மறுபடியும் ஒரே அடியாய் 4வது, 5வது, 6 வது பாரங்கள் வைத்துக்கொள்ள உத்திரவு போடும்படி கேட்க, நமது மந்திரியார் அதே மாதிரி உத்திரவு போட்டார். தவிரவும் இந்தப் பள்ளிக்கூடத்தை திறந்து வைக்க இதே மந்திரி யை ஆரம்பத்தில் முனிசிபல் சேர்மன் சீமான் சீனிவாச முதலியார் கேட்டுக் கொண்ட பொழுது, வருவதாய் வாக்களித்து விட்டு மறுபடி, யார் யாரோ முதல்...

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 0

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப் பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர்களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம். வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர் இடத்தில் சமத்வத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும், அக்கிரமமும் தொலைய வேண்டுமானால் வெறும் சட்டங்களா லும், எழுத்தாலும், பேச்சாலும் முடியாதென்றும், சத்தியாக்கிரகமும், தியாக முமே உற்ற சாதனமாகுமென்றும் பல தடவைகளில் வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் ஜாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு – தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும். இக்கொடு மைகளை ஓர் பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும் தன் மனசாக்ஷி அறியச் செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி...

தஞ்சை ஜில்லா பிரசாரம் 0

தஞ்சை ஜில்லா பிரசாரம்

அச்சுயமரியாதை அடையவே இப்போது நாம் ஆங்காங்கு பார்ப்பன ரல்லாதார் சங்கம் என்பதாகவும், பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கம் என்ப தாகவும் ஏற்பாடு செய்து வருகிறோம். வகுப்புப் பெயரால் ஏன் சங்கத்தை நிறுவ வேண்டும்? என சிலர் கேட்கலாம். நமது நாட்டில் வகுப்புகள் இருந்து வருவதை யாவரும் மறைக்க முடியாது. ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்புக்கு என சங்கங்கள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பாருக்கும் பொதுக் குறைகள் பலவும் மற்ற வகுப்பார்களால் சில குறைகளும் இருந்து கொண்டுதான் வருகிறது. அவற்றை நிவர்த்தித்துக் கொள்ள அந்தந்த வகுப்பார் தனித்தனியாய் முயற்சித்துத் தான் ஆக வேண்டும். நமது குறையை மற்றொரு வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு போதிய நிலைமை இன்னமும் ஏற்படவில்லை. நமது குறையை மற்ற வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு முன் அந்த மற்ற வகுப்பாரால் நாம் கொடுமை செய்யப்படாமலும் குறைகளுண்டு பண்ணப்படாமலும் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நமக்கு இருப்பதாய் சொல்லிக்...

திராவிடன் 0

திராவிடன்

‘திராவிடன்’ பத்திரிகை விஷயமாய் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி வந்தபடி அதாவது திராவிடன் பத்திரிகையின் ஆசிரியத் தொழிலையும் நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்வது என்பதாக முடிவு ஏற்பட்டு விட்டதால் அநேகமாக இம்மாத முடிவுக்குள்ளாகவே ஏற்றுக்கொள்ளக்கூடும். தன வணிக நாட்டு சுற்றுப் பிரயாணத்திற்குப் பிறகு உடல்நிலை சற்று கெட்டுப்போய் இருக்கிறது. ஆதலால் ஒரு வாரம் குற்றாலம் போய் அங்கி ருந்து கொண்டே சென்னை போக வேண்டிய விஷயங்களைப் பற்றி ஏற்பாடு செய்யலாமென்பதாக நினைத்திருக்கிறோம். அநேகமாக 17 தேதி அல்லது 18 தேதி இவ்விடமிருந்து குற்றாலத்திற்கு புறப்படுவதாயிருக்கலாம். அங்கி ருந்து இம்மாத முடிவுக்குள்ளாகவே சென்னை செல்ல உத்தேசம். ஆங்காங்குள்ள நண்பர்கள் அதற்குள்ளாக ஒரு 500 சந்தாதாரர் களையாவது சேர்த்து அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். திராவிடனை ஒப்புக் கொள்ளும்படி நமக்கு கட்டளை இட்ட சுமார் 500க்கு மேற்பட்ட நண்பர்களில் அநேகர் அதாவது ஒருவர் நாம் ஒப்புக்கொண்ட அன்றே 100 சந்தா சேர்த்துக் கொடுப்பதாகவும் மற்றவர்...

அரசியல் புரட்டு 0

அரசியல் புரட்டு

இதுகாலை இந்திய நாட்டை சுயமரியாதை அடைய முடியாமலும் விடுதலை பெறமுடியாமலும் உண்மையாய் தடுத்துக்கொண்டிருப்பவை எவை என்பதாக ஒரு அறிஞன் யோசித்துப் பார்ப்பானேயாகில் இந்துமத இயக்கமும் இந்திய அரசியல் இயக்கமுந்தான் என்பதாகவே முடிவு செய்வான். நம் மக்களின் சுயமரியாதைக்கு இடையூறாயிருப்பது இந்து மதம் என்பதை அநேக தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். இது போலவே இந்திய அரசியல் இயக்கத்தால் நமது விடுதலை தடைப்பட்டு அடிமைத்தன்மை பலப்பட்டு வருவதையும் பலதடவை பேசியும் எழுதியும் வந்திருப்பதுடன், இவ்விரண்டும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும் சுயநலத் திற்கும் பார்ப்பனர்களால் நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதென்பதையும் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். எனினும், இதுசமயம் அரசியல் புரட்டைப் பற்றியே இத்தலையங்கம் எழுதுகிறோம். உதாரணமாக அரசியல் இயக்கம் தோற்றுவித்த காலத்திலேயே இதை தோற்றுவித்தவர்கள் கருத்தென் னவென்பதை யோசித்தால் விளங்கும். அதாவது அரசாங்க உத்தியோகத்தில் இந்தியர்கள் சமஉரிமை பெறவும், அரசாங்க அதிகாரத்தில் பங்கு பெறவும், அரசாங்கத்தையே நடத்திக்கொடுப்பதற்கு கட்டுப்பட்டு அரசாங்க சேவை செய்யவுமே தான் கருத்துக்கொண்டு நமது...

‘மகாத்மாவும் வருணாச்சிரமமும்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு 0

‘மகாத்மாவும் வருணாச்சிரமமும்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு

மகாத்மா காந்தி வருணாசிரமத்தைப் பற்றி மைசூரில் பேசியதாக சென்ற வாரம் குடியரசில் குறிப்பிட்ட விஷயத்தின் விபரமாவது. “…………………….தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் இந்து சமூகத் திலிருந்து விலகுவதற்கு முன்னால் சுயராஜ்யம் சித்திக்குமென்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்து மதத்தில் நான் அறிந்த மட்டில் வருணாசிரம தர்மம் ஒரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு வருணத்தாரைவிட உயர்ந்தவர்கள் என்று நினைக்க இடமில்லை. ஒவ்வொரு வருணாத்தாருக்கும் ஒவ்வொரு தருமம் விதிக்கப் பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத் தார் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். பிராமணனுக்கு சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறை வேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமண னுடைய முக்கிய தர்மம். எளியவர்களை பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும் போது மற்ற எல்லோரிலும் மேம் பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வர்ணத்தினர்களும் தத்தம் தர்மங் களை கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். ( இந்த இடத்தில் வைசியர்,...

பொழுது புலர்ந்தது                                                பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்) 0

பொழுது புலர்ந்தது பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)

தேர்தல்களைப் பற்றி அடிக்கடி நாம் எழுதி வந்திருக்கிறோம். அதா வது தேசத்தின் பெயரையும் காங்கிரசின் பேரையும் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் பதவி பெறுவதற்காகவும், அவர்களுக்கு கிடைக்காது என்று தோன்றும் சமயங்களில் உண்மை சூத்திரர்களான, அவர்கள் அடிமைகளுக் காவது கிடைக்கும்படி பார்க்கவுமே இதுவரை வேஷம் போட்டுக்கொண்டு வந்தார்கள் இப்போதும் போடுகிறார்கள், இனியும் போடப்போகிறார்கள். இதைப்பற்றி சுமார், 5, 6 வருஷ காலமாகவே நாங்கள் வாதாடி வரு கிறோம். நாம் காங்கிரசிலிருந்த காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் காங்கிரசின் பேரால் யாரும் தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்து அனேகமாக வெற்றி பெற்றுக்கொண் டே வந்தோம். கடைசியாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடும், கல்யாணசுந்தர முதலியாரும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாகி காஞ்சீபுரம் மகாநாட்டில் இதை நிறைவேற்ற அனுமதித்து விட்டார்கள். அந்த சமயத்தில் கூட நமக்கு அதை எதிர்த்துப் பேச சவுகரியம் கொடுக்காமல் நாம் தண்ணீர் சாப்பிடுவதற் குள் இந்த தீர்மானத்தை பிரேரேபித்து ஆமோதித்து முடித்து விட்டார்கள்...

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள் 0

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்

மதுரை மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலூகா மகாநாடுகள் நடத்தப்பட வேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வட ஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட ஆற்காடு ஜில்லாக் காரர்கள் ஜில்லா மகாநாடு நடத்த கமிட்டி முதலியதுகள் நியமித்து துரிதமாய் முயற்சி எடுத்து வருகிறார்கள். இம்மகாநாடுகள் அநேக மாய் இம்மாத முடிவிலோ மார்ச்சு மாத ஆரம்பத்திலோ நடக்கக் கூடும். மற்ற ஜில்லாக்காரர்களும் அதாவது செங்கற்பட்டு, தென் ஆற்காடு, திருச்சி, ராமனாதபுரம், திருநெல்வேலி முதலிய ஜில்லாக்காரர்கள் எதுவும் செய்த தாக நமக்குத் தகவலே இல்லாமலிருக்கிறது. ஆதலால் அவர்களும் சீக்கிரம் முயற்சி எடுத்து சீக்கிரத்தில் மகாநாடுகள் நடத்தி, திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரவேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகி றோம். பார்ப்பனர்கள் பணம் சேர்க்கவோ தங்கள் ஆதிக்கத் திட்டங்களை நிறைவேற்றவோ எப்படியாவது தந்திரங்கள் செய்து அவர்கள்...

மந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம் 0

மந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம்

யாதாவது ஒரு காரியத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போனவர்களும், தனக்கென தனிமரியாதை இல்லாமல் போய் விட்டதே என்று விசனப்பட்டுக் கொண்டு இருப்பவர்களும், தனக்கென ஒரு தனிக்கட்சி சேர்க்க முயலுவது பெரும்பாலும் இயற்கை. யோக்கியமான முறையில் சமாதானம் சொல்லி எதிரிகளை வெல்ல முடியாத கூட்டத்தார்களும் தங்களது ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விட்டதாகக் கருதுகிறவர்களும், ஏதாவது சில சோணகிரி களையும் பேராசைக்காரரையும் பிடித்து தனிக்கட்சி உண்டாக்கி, அவர்களைக் கொண்டு தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளுவதற்காக மற்ற யோக்கியமான கட்சியுடன் போராடுவதும், போராடச் செய்வதும் இயல்பு. இக்காரியங்களை அடிக்கடி நாம் அனுபோகத்தில் பார்த்து வருகிறோம். பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாக ஒரு கட்சி தோன்றியது முதல் அக்கட்சிக்கு இடையூறாக நமது நாட்டில் இதுவரை எத்தனை கட்சிகள் தோன்றி மறைந்தன? அதற்கு எதிரிடையாக எத்தனை எத்தனை எதிரிகள் தோன்றி மறைந்தார்கள்? இனியும் எத்தனை தோன்றித் தோன்றி மறையப்போகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இதனுண்மை விளங்காமல் போகாது. இவ்வ ளவு எதிரிடைகள்...

இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்? 0

இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?

நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லை யென்றும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும் இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமையில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் அதாவது பார்ப்பனர்களால் சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப் படுகிறதும் 100-க்கு 97 பேருக்கும் மேலான எண்ணிக்கைக் கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும் சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசி மக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும், பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய், கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக்கூடாதது மான கொடுமை தத்துவத்தை கொண்டது என்றும் மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், ஐரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும், அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்துவிட வேண்டிய...

கதரின் தற்கால நிலை 0

கதரின் தற்கால நிலை

சென்ற மாதம் “யங் இந்தியா” பத்திரிகையில் இந்தியா ஒட்டுக்குமாக கதர் உற்பத்தியும் செலவும் குறிக்கப்பட்டிருந்தது. (அதில் உற்பத்தியை விட செலவு அதிகமாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் அதற்குக் காரணம் சில புள்ளிகளில் ஏதாவது கணக்குத் தவறுதலாக இரட்டிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.) அக்கணக்கில் இந்தியாவில் மொத்தம் சென்ற வருடத்திற்கு கதர் உற்பத்தி ரூ. 19 லக்ஷம். இப்பத்தொன்பது லக்ஷத்தில் சில பாகம் சிலோன், மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலிய இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக் குப் போன வகையில் லக்ஷ ரூபாய் கழித்தாலும் 18 லக்ஷத்திற்குக் குறையாமல் இந்தியாவில் செலவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஜனத்தொகை 31 1/2 கோடி. இவர்களுக்கு வருஷம் ஒன்றுக்கு தேவையுள்ள துணி ஏறக் குறைய 130 கோடி ரூபாய் பெறுமானமுள்ளது. இவற்றில் 65 கோடி ரூபாய் பெறுமான முள்ள துணி அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டும், 65 கோடி ரூபாய் பெறுமான துணி இந்தியாவிலேயே யந்திர நூலைக்...

பரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி 0

பரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி

நமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும் வேற்றரசர்களால் ஜயிக்கப்பட்டதற்கும் அன்னிய நாட்டரசுகள் ஆதிக்கம் பெற்றதற்கும் பார்ப்பன மந்திரித்துவம்தான் முக்கிய காரணமென்பது கர்ண பரம்பரையாகவும் சரித்திர வாயிலாகவும் அனுபோக பூர்த்தியாகவும் நாம் அறிந்த விஷயம். திருவாங்கூர் ராஜ்யம் சென்ற 100 ´ காலத்திற்கு 22 மந்திரிகளில் 93 ´ காலம் 20 மந்திரிகள் பார்ப்பன மந்திரிகளாகவே இருந்து துர் மந்திரித்துவ ஆதிக்கம் செலுத்தி வந்ததின் பலனாய் இப்போது அந்த ராஜ்யத்தில் 100 – க்கு 50 பங்கு ஜனங்கள் அன்னிய மதஸ்தர்களாவதற்கு இடம் கொடுத்து வந்திருக்கிறது. 40 லட்சம் ஜனத்தொகையில் 20 லட்சம் ஜனங்கள் அன்னிய மதஸ்தர்கள். எந்த பார்ப்பன மந்திரியாவது இதைப்பற்றி கவனித்தவரே அல்லர். அன்றியும் நமது மக்களைப் பறிகொடுத்து பாதிரிமார்களுக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து வெள்ளைக்கார கவர்னர்களது சிபார்சு பிடித்து பெரிய பட்டங்களும் உத்தியோகங்களும் சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கிறார் களே அல்லாமல் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் அதிகாரம் செலுத்த வேயில்லை....

தனித்தமிழ் கட்டுரைகள் 0

தனித்தமிழ் கட்டுரைகள்

இப்பெயர் கொண்ட புத்தகமொன்று வரப்பெற்றோம். இஃது பல்லா வரம், வித்யோதயா மகளிர் கல்லூரியின் தமிழாசிரியர் ஸ்ரீமதி நாகை நீலாம் பிகை அம்மையாரால் எழுதப்பட்டது. தமிழ் பாஷையின் வளர்ச்சி தினே தினே குறைந்துகொண்டுவரும் இக்காலத்தில் வடமொழி கலவாது, தனித் தமிழில் கட்டுரைகள் வரையப்பட்டு, அதுவும் ஓர் புத்தக ரூபமாக வெளி வந்திருப்பது தமிழுலகுக்கு ஓர் நல்விருந்தென்றே கூறுவோம். இத்தகைய புஸ்தகங்களே தமிழ் வளர்ச்சிக்கு உற்ற சாதனங்களாகும். நமக்கு அநுப்பப் பட்டுள்ள இப்புத்தகத்தின்கண் வடமொழிச் சொற்கள் எங்கணும் கண்டோ மில்லை. அதன் அருமை பெருமையை நன்கு விளக்குவான் வேண்டி “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்னும் கட்டுரையை இதனடியில் பிரசுரித்திருக்கின்றோம். இப்புத்தகத்தின் விலை ஒரு ரூபா நான்கணாவாகும். இத்தகைய பல புத்தகங்களை வெளியிடுமாறு கடவுள் அநுக்கிரகம் இச் சகோதரிக்குக் கிடைக்குமாக. குடி அரசு – நூல் மதிப்புரை – 31.01.1926

மகாத்மாவும் வருணாசிரமும் I 0

மகாத்மாவும் வருணாசிரமும் I

மகாத்மா காந்தி “தீண்டாமை ஒழிய வேண்டும், மதத்திலும், சமுதாயத் திலும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும்” என்கிற கொள்கை உடையவர் என்று ஜனங்கள் நம்பி வந்தாலும், அவரது எண்ணத்திலும் பேச்சிலும் அதற்கு நேர் விரோதமான கொள்கையை உடையவராகவே காணப்படுகிறார். இம்மாதிரி எண்ணத்தோடும் பேச்சுகளோடும் மகாத்மா காந்தியின் பிரசாரம் நடைபெற நடைபெற தீண்டாமையும் மூடக் கொள்கைகளும் நாட்டில் வலிமையோடு நிலைபெற இடம் ஏற்படுமே அல்லாமல் ஒருக்காலும் இவை ஒழிக்கப்படவே முடியாது. எந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெளிப்படையாய் பேசுகிறாரோ அதே தீண்டாமையை நிலை நிறுத்த அதே பேச்சை வியாக்கி யானம் செய்வதில் பாடுபடுகிறார். இதைப்பற்றி முன் ஒரு தடவை கூட எழுதி இருக்கிறோம். உண்மை யான தீண்டாமையை நமது நாட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டுமானால் மகாத்மா காந்தியையும் எதிர்த்து போராடித்தான் தீர வேண்டியிருக்கிறது. தீண்டாமை இன்னது என்பது மகாத்மாவுக்கு இன்னமும் சரியாய் புலப்பட இல்லை என்பதே நமது அபிப்பிராயம். அவர் மதத்தின் பெயரைச் சொல்லிக்...

தஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும் 0

தஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு நமது பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பொறாமை என்னும் போதையில் பட்டு கண்டபடி உளறு கிறார்கள். இத்தேர்தலில் நடந்த தப்பிதம் என்ன என்பதையும் இதனால் யாராவது பிரசிடெண்டு ஸ்தானத்திற்கு நிற்பது ஞாய விரோதமாய்த் தடைப் பட்டு விட்டதா என்பதையும் ஒருவராவது எழுதவேயில்லை. தலைவர் பதவி காலியாவதற்கு முன்னாலேயே தேர்தல் நடத்தி விட்டார் என்று ஒரே மூச்சாக சத்தம் போடுகிறார்கள். இது ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தானாகவே நடத்திய தேர்தலா கவர்ன்மெண்டாரே இந்தப்படி தேர்தல் போடும்படி உத்திரவு அனுப்பினார்களா என்பதை தெரிவிக்காமல் வீணாய்க் கத்துவதின் ரகசியம் என்ன? எப்படியாவது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தின் பேரில் பாமர ஜனங் களுக்கு ஒரு கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும் என்கிற அயோக்கியத்தனமே அல்லாமல் இதில் வேறு ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கிறதா? இம்மாதிரியே ஒரு பார்ப்பனப் பிரசிடெண்டும் கொஞ்ச காலத்திற்கு முன் செய்து கொண்டதைப் பற்றி இப்பார்ப்பனப்...

சென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா! 0

சென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா!

சபையோர்களே! நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப் பட்டிருக்கும் புகழ்ச்சிக்கு நான் பாத்திரனல்லன். நான் உங்களோடு சேர்ந்த ஓர் குடித்தனக்காரனாகவும், சகோதரனாகவும் பழகி வந்தவனாகையால் உங்கள் மத்தியில் நான் இவ்வளவு மதிக்கப்படுவதையும் புகழப்படுவதையும் கண்டு வெட்கம் அடைய வேண்டியவனாகவே யிருக்கிறேன். காரியதரிசி யார் வாசித்த அறிக்கை ரிப்போர்டிலிருந்தே இச்சங்கம் தனது கடமையைச் சரிவர செய்து வந்திருக்கிறதென்று தெரிய வருகிறது. நம் நாட்டில் எத்தனை யோ சங்கங்கள் தோன்றினாலும் உங்கள் சங்கங்கள் போல் 12, 14 வருடங்க ளாக உயிருடனிருக்கும் சங்கங்கள் வெகு சிலவேயாகும். ஆரம்பத்தில் ஊக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சீக்கிரம் உயிர் போய் இருந்த இடமே தெரி யாமல் போவது வழக்கமாயிருக்கின்றது. அது போலவே நம் நாட்டில் அநேகம் தோன்றி நின்று போயிருக்கின்றன. இச்சங்கத்தின் வளர்ச்சிக்குக் காரணம், இச்சமூகத்தினருக்கு தங்கள் சமூக முன்னேற்றத்திலிருக்கும் அக்கரையே காரணமாகும். நான் அநேக சங்கங்களுக்கு அழைக்கப்பட்டுப் போயிருக்கிறேன். எங்கெங்கு வியாபாரிகளால் சங்கங்கள் நடத்தப்படுகின்ற னவோ...

ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு 0

ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு

கொஞ்ச நாளைக்கு முன்பு ‘சுதேசமித்திரன்’ ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எழுதுகையில், “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் நடந்து கொண்டுவரும் நடவடிக் கையையும் பேசிவரும் பேச்சையும் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் ஸ்ரீமான் நாயக்கர் சென்னை கவர்னர் வீட்டுக்கு கட்டித் தூக்கிக் கொண்டு போகப்படு வார் என்று தோன்றுகிறது” என்று எழுதி இருந்தது, அதாவது ஸ்ரீமான் நாயக்கர் சர்க்காருக்கு அவ்வளவு தூரம் நல்ல பிள்ளையாய் போய்விட்ட தாகவும், சர்க்காருடன் சேர்ந்து விட்டதாகவும், இனி சர்க்காரையே ஆதரிப் பார் என்றும் ஜனங்கள் நினைக்கும்படியாக எழுதியிருந்தது. அது எழுதிய திலிருந்து நாயக்கரும் தனக்கு ஏதாவது சர்க்கார் “சன்மானம்” வரும் என்றே எதிர்பார்த்தார். கடசியாக அவர் பேரில் போடப்பட்டிருந்த இரகசியப் போலீசு கூட எடுபடாமல் இன்னமும் தொடருவதுடன் கலக்ட்டரும் போலீசாரும் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள். இது எப்படியோ இருக்கட்டும் ஆனால் சதா சர்வ காலம் சர்க்காரை தாக்குவதாக வேஷம் போட்டு பார்ப்பனரல் லாதாரை தாக்குவதாலேயே...

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி 0

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக் கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப் போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக் கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுய மரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டு பிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சி யாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே ருஜுப்பிக் கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு...

கீழேவிழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம் 0

கீழேவிழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம்

நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறை வேறி இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகிய வர்கள் சம்மதமும் அரசர் பெருமான் சம்மதமும் பெற்று சட்டமாகிவிட்டது. இனி மகந்துகள், மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதுபோல் மறுபடியும் இதைப் பற்றி திருத்தவோ புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம் பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல. நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார். அவர் மேஜிஸ்ட் ரேட் வீட்டிற்குப் போய் தனியாய் தன்னைப் பற்றி கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படி கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லு கிறீர் என்று கேட்டால் “எஜமானர்...

பார்ப்பனப் பத்திரிகைகளின் தொல்லை 0

பார்ப்பனப் பத்திரிகைகளின் தொல்லை

ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3 -ல் 2 பங்கு மெம்பர்களுக்கு அதிகப் பேர்களாலேயே தெரிந்தெடுக்கப் பட்டும், அவரைப் பற்றியும் அத்தேர்தல் முறையைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் கொலை பாதகத்திற்குச் சமானமான கொடுமையும் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களும் கேட்போர் மனதை பதைக்கும்படி யாகவே இருக்கும். ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் அவருடைய ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானம் காலியாகும். ஆதலால் அவர் மறுபடியும் பிரசிடெண்டு தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாகும் படியாக லோகல் போர்டு இலாக்கா மந்திரியாகிய டாக்டர் சுப்பராயன் அவர் களை ஜில்லா போர்டு மெம்பராக நியமனம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். போர்டு வைஸ்பிரசிடெண்டும் போர்டின் மூலம் கவர்ன்மெண்டுக்கு சிபார்சு செய்தார். மந்திரி, பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டோ அல்லது பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நினைத்தோ நியமனம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் மேல் ஜில்லா போர்டு மெம்பர் களில்...

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைக்க திருப்பூரில் மகாநாடு 0

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைக்க திருப்பூரில் மகாநாடு

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைப்பதற்காக ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பிரயத்தனத்தின் முதல் பாகம் ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கள் வேளாளர் என்பதாகவும், அந்த வேளாளரைக் காப்பாற்ற வேண்டி யது வேளாள கனவான்களின் கடமை என்பதாகவும் கிளப்பி விட்டு சில வேளாள கனவான்கள் பெயரால் திருப்பூரில் ஒரு மகாநாடு என்பதாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த மந்திரிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் நமது செட்டியா ருக்கு என்ன வந்தது என்பதை பொது ஜனங்கள் நன்றாய் யோசித்து பார்க்க வேண்டும். ஸ்ரீமான் செட்டியாரின் கொள்கை என்ன என்பதை பொது ஜனங்கள் முதலில் சிந்தித்தால் மற்றது விளங்கும். “உன் பிறப்போ பத்து என் பிறப்போ எண்ணத் துலையாது” என்பதாக மகா விஷ்ணுவைப் பார்த்து ஒரு புலவன் பாடினான் என்கிற கதைபோல் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் அரசியலில் தலையிட்ட பிறகு அவரது அரசியல் பிறப்பு எண்ணத் துலையாது என்றே சொல்லவேண்டும். சமீபகாலமாக அவரது...

நமது நாட்டுக்கோட்டை நகரத்து சுற்றுப்பிரயாணம் 0

நமது நாட்டுக்கோட்டை நகரத்து சுற்றுப்பிரயாணம்

இம்மாதம் 15 தேதி இரவு ஈரோட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத் துக்கு சுற்றுப் பிரயாணம் புறப்பட்ட நாம் 25 தேதி பகல் ஈரோடு வந்து சேர்ந்தோம். 16 தேதி காரைக்குடி, 17 தேதி சிவகங்கை, 18 தேதி தேவகோட்டை, 18 தேதி இரவு பள்ளத்தூர், 19 தேதி காலை புதுவயல், 19 தேதி மாலை கண்ட னூர், 20 தேதி காலை சிறாவயல், திருப்பத்தூர் 20 தேதி மாலை, 21 தேதி காலை வடக்கூர், 21 தேதி மாலை நெற்குப்பம், 22 தேதி அமராவதிப் புதூர், 23 தேதி தஞ்சை, 24 தேதி திருச்சிக்கும் சென்றுவிட்டு 25 தேதி ஈரோடு சேர்ந்தோம். சுற்றுப் பிரயாணம் சரீரத்திற்கும், மனதிற்கும் மிகவும் திருப்தியளித்து வந்த தென்றே சொல்ல வேண்டும். போகுமிடங்களிலெல்லாம் அன்று மலர்ந்த சுயமரியாதை புஷ்பங்களான தனவணிக வாலிபர்களின் உற்சாகமும் ஆவலும், எழுச்சியும் இதற்கு முன் எங்கும் கண்டதில்லை என்றே சொல்லு வோம். சுருக்கமாகக் கூற...

பத்திரிகைகள் 0

பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற் கென்று வெகு காலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோக்ஷம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங் களையும் ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர் களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசீயம், தேசீயப் பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிகைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேசபக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசீயப் பத்திரிகைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திகொண்டு நம்மை தாழ்த்தி மிதித்து மேலேறி பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக்கொண்டு விட்டார்கள். இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தா யிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக்கொண்டிருக்கிறது. பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக் கொள்ளும்...

ஓர் மறுப்பு “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது ” 0

ஓர் மறுப்பு “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது ”

‘தமிழ்நாடு’ பத்திரிகையில் “ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள்” என்றும் ‘சுதேசமித்திரனி’ல் “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் டாக்டர். சுப்பராயனைக் கண்டு பேசினார்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே ‘மந்திரிக்கு உபசாரம்’ ‘மந்திரிகளின் பிரசாரம்’ என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதி இருக்கின்றன. எனவே இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப் படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த ஒருவன் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்ப தாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும், மந்திரி தனது வேலையை காப்பாற்றிக் கொள்ளும்...

மௌலானா மகம்மதலியும்                    வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் 0

மௌலானா மகம்மதலியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அவர்கள் சமீபத்தில் தனது பத்திரி கையில் “மௌலானா மகம்மதலி அவர்கள் மகாத்மா காந்தியுடன் கொஞ்சக் காலம் தேசீய நோக்கத்தோடு வேலை செய்த பிறகு மறுபடியும் தன்னுடைய பழைய குணப்படி ஹிந்து – முஸ்லீம் வேறுபாட்டைக் கருதுகிறார்” என்று எழுதியதற்கு விடையாக மௌலானா அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பாகத்தை தமிழர்களுக்கு அறிவுருத்துகிறோம். “ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமானது ஏட்டுச் சுறக்காய் அல்லவென்று ஸ்ரீமான் சாஸ்திரியாருக்கு நான் வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். நம்முள் குறைந்த தொகுதியாயுள்ள வகுப்பாருக்கு நம்மிடத்திலுள்ள அவநம்பிக் கையும், நாம் முற்காலத்தில் செய்த அநீதிகளுடைய கர்ம பலனும்தான் இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமென்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவநம்பிக்கை ஏற்படுகிற இடங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்தே தீர வேண்டும். ஸ்தல ஸ்தாபனங்களென்றாவது பள்ளிக்கூடங்க ளென்றாவது இக்கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால், இவ்வவநம்பிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்க வேண்டுமென்பது பெரு வாரியான மற்ற சமூகங்களின் கையில்தானிருக்கிறது. முதலாவதாக ஹிந்துக் கள் தங்கள் மதத்தைச் சேர்ந்த...

இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது? தொழிலாளர்களும் மக்கள் கடமையும் 0

இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது? தொழிலாளர்களும் மக்கள் கடமையும்

நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும், அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களை தொழிலாளர் சங்கத்தில் தலைவர் களாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு தனியாக தொழிற்கட்சி என்பதாக ஒரு கட்சி அரசியல் தத்துவத்தோடு இருக்க வேண்டும் என்றும் எவ்வளவோ தடவை வெகு அழுத்தமாக வற்புறுத்தி வந்திருக்கிறோம். இவ் வலியுறுத்தலுக்கு நாகைத் தொழிலாளர் சங்கத்தாரே கொஞ்சம் காது கொடுத்து வந்தனர். மற்றபடி மற்றத் தொழிலாளர் களும் தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல அரசியல் வாழ்வுக்காரர்களும் நம்மீது பாய்ந்து வந்தனர். ஆனால் இப்போது தொழிலாளர்கள் விஷயத்தில் மிகுதியும் அறிவுள்ளவர் என்று சொல்லும் ஸ்ரீமான் ஜோஷி முதல் கொண்டு அதையே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதாவது சென்னையில் கூடின தொழிலாளர் மகாநாட்டுத் தலைவரான ஸ்ரீ ஜோஷி “ஒரு...

பொன்னம்பல சுவாமி மடம் 0

பொன்னம்பல சுவாமி மடம்

ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் குரு பூஜை மகோற்சவம் சென்ற இரத்தாஷி வருடம் தை µ 24-ந் தேதி விதேகமுக்தி எய்தின, ஸ்ரீ காசி வாசி சிதம்பர சுவாமிகளின் குருபூஜை மகோற்சவம், நாளது தை µ 13 – தேதி மங்களவாரம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருட குருபூஜை வைபவத் திருநாள் நடைபெறும். அன்பர்கள் யாவரும் வந்திருந்து இருமை நலன் பெற்று உய்ய திருவருளை விழைகின்றோம் என ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடத்து ஸ்ரீபரஞ்சோதி சுவாமிகள் எழுதுகிறார். நமது குறிப்பு:- தென்னாட்டிலுள்ள பல்வேறு மடங்களிலும் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடமானது வைதீகப் போர்வை போர்த்த லௌகீக மடமாயிராமல், உண்மையில் ஜீவன்களிடத்தில் அன்பும், சமரசத் தன்மையும் கொண்டு விளங்குவதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். அதற்குத் தற்கால மடாதிபதி யாயிருக்கும் ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமி அவர்கள் நமது மகாத்மா அவர்களின் கொள்கையைச் சிரமேற்கொண்டு அநுபவத்தில் நடைபெற உழைத்து வருபவர். அத்துடன் மடத்தில் கதர் உற்பத்தியும், பிரசாரமும் நடைபெற்று...

தஞ்சை ஜில்லா பிரசாரம் 0

தஞ்சை ஜில்லா பிரசாரம்

அக்கிராசனாதிபதியே! சகோதரி சகோதரர்களே! நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை வந்திருக்கிறேன். ஒரு காலத்திலும் இதுபோன்ற மக்கள் உணர்ச்சியும் எழுச்சியும் கூட்டமும் வரவேற்பு உபசாரம் முதலியதுகளும் நான் கண்டதே இல்லை. நம்முடைய எதிரிகள் “வகுப்பு இயக்கங்கள் மாண்டு விட்டன”, “வகுப்புப் போராட்டங்கள் குழிதோண்டி புதைக்கப் பட்டன”, “பார்ப்பன ரல்லாதார் கட்சி ஒழிந்து விட்டது”, “இனி நம் இஷ்டம்போல் கொள்ளை அடிக்கலாம்” என்று சொல்லுகிற காலத்தில் எப்போதும் இருந்ததை விட எண் மடங்கு அதிகமாய் நமது கட்சியினுடையவும், இயக்கத்தினுடையவும் உணர்ச்சி வலுத்து வருகிறதுடன் நமது கொள்கையை ஒப்புக்கொள்ளுவதாக புதிது புதிதான இடங்களில் இருந்து ஆதரவுகள் கிடைத்து வருகின்றன. இன்றைய தினம் எனக்குச் செய்யப்பட்ட வரவேற்புகளும், ஊர்வலங் களும், வரவேற்பு உபசாரப் பத்திரங்களும் அதன் மூலம் காட்டிய உணர்ச்சி களும், ஊக்கங்களும் கண்டிப்பாக எனக்காக அல்ல என்பதையும் அது களுக்கு நான் கொஞ்சமும் தகுதியுள்ளவன் அல்ல என்பதையும் எல்லோரை யும் விட...

கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும் 0

கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும்

கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும் அத னால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல் ஏற்பட்டுவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது பஞ்சாப் படுகொலையின் போது இராஜப் பிரதிநிதி அவர் களை திருப்பி அழைக்க வேண்டும், திரு ஒட்வியரைத் திருப்பி அழைத்து விட வேண்டும். திரு. டயரை தண்டிக்க வேண்டும் என்பதாக நாட்டாரெல் லோரும் ஒன்று கூடி காங்கிரசில், கான்பரசில் சந்து பொந்துகளில் எல்லாம் தீர்மானித்த காலங்களில், திரு ராஜப் பிரதிநிதிக்காவது, திரு ஒட்வியருக் காவது, திரு, டயருக்காவது ஒரு சிறு கலக்கமும் கவலையும் இல்லாமல் இத்தீர்மானங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோயமுத்தூர் மகாநாட்டில் “உத்தியோகம் கிடைக்காமல் ஏமாந்து போன யாரோ சிலர்” கூடி செய்தார்கள் என்று சொல்லும்படியான ஒரு திரு. கவர்னர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கவர்னரை தலையெடுக்க வொட்டாமல் இன்னம் படுக்க வைத்து விட்டது. யார் என்ன செய்தாலும் பயப்பட மாட்டோம் என்றுசொல்லிக்கொண்டு இருந்த மந்திரிகளை...

ஈழவர்களின் கோயிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி 0

ஈழவர்களின் கோயிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி

கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களில் சென்ற சில வருடங்களாக கவர்ன்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும் ஆலயங்களுக்கும் சென்று தொழ தங்களுக்கு அநுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள் கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. எனினும், இவர்களுக்குச் சொந்தமான கோயில்கள் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களிலிருந்தபோதிலும், இவர்கள் தங்களிலும் கீழ்ப்பட்டவர் களாகக் கருதப்படும் புலையர்களை அவற்றுள் அநுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம் பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுவதற்காக அவர்கள் தங்களுடைய எல்லா கோவில்களுக் குள்ளும் புலையர் முதலிய தாழ்ந்த ஜாதியார் என்போரை விட முயற்சி செய்து வருகின் றார்கள். அல்லாமலும் ஏற்கனவே சில கோயில்களுக்குள் புலையர்கள் செல்ல அநுமதி யளித்து விட்டனர். மற்ற கோயில்களிலும் இதே மாதிரி புலையர்களை அநுமதிக்கும்படி வைதீக கோஷ்டியாரைத் தூண்ட சீர்திருத்தக் கோஷ்டியார் சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார்கள். பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத் தெற்கே, ஸ்ரீமான் கே. நாராண னுக்குச் சொந்தமான ஈழவக் கோயிலுக்குள் செல்ல புலையர்களுக்கு முதல்...

காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பனர்களின் அக்கிரமங்களும் 0

காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பனர்களின் அக்கிரமங்களும்

கோவை மகாநாட்டில் பார்ப்பனரல்லாதாரில் சிலர், காங்கிரசில் சேர்ந்து அதைக் கைப்பற்றி காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு செய்து வரும் கொடுமைகளையாவது செய்யாமல் தடுக்கலாம் என்பதாக பேசின காலத்திலும் எழுதின காலத்திலும் நாம் அதை ஒப்புக்கொள்ளாமல் ஆnக்ஷபித்து வந்தது யாவருக்கும் தெரிந்திருக்கலாம். நாம் ஆnக்ஷபித்த தாவது, காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமையை நிறுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணங்கொண்டல்ல, மற்றென்ன வென்றால், காங்கிரசை நாம் கைப்பற்ற முடியாது என்றும், காங்கிரசுக்கு நம்மில் யாராவது போனால், பார்ப்பனர்களுக்கே அதிக பலம் ஏற்படும் என்றும், எப்படியாவது அதற்குள்ள செல்வாக்கை ஒழிக்க அதிலுள்ள அயோக்கியத்தனத்தையும், அக்கிரமத்தையும் வெளியில் இருந்து கொண்டு வெளியாக்குவது தான் மேல் என்றும் சொன்னோம். பாமர மக்கள் எல்லாரும் இதை ஒப்புக் கொண்டார் களாயினும், படித்த கூட்டத்தாரில் பலரும் அரசியல் வாழ்வுக்காரரும் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அதற்காகவே நாம் வேண்டுமென்றே நடு நிலைமை வகித்ததோடு, நாம் சொன்னது சரியா தப்பா என்று அறிய...

ஜென்மக்குணம் போகுமா? 0

ஜென்மக்குணம் போகுமா?

சுயராஜ்யக் கட்சி பார்ப்பனக் கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத் திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத் தோ, ஆசை வார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக்கொள்ளப்படுகிறதென்றும் பலதடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். அது போலவே இப்போது சட்டசபைத் தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்கபலம் இருக்கிறது என்பதாகக் கருதி இப்போது சட்டசபைக்கு பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள். அதாவது – முதலாவதாக தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது. தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமல்ல. இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லி தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுவிட்டு இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள். இத்தீர்மானம் கொண்டு வந்தது கோவை ஜில்லா பிரதிநிதி ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரே ஆவார். கோவை ஜில்லாவில்...

சமூகத்தொண்டும் அரசியல் தொண்டும் 0

சமூகத்தொண்டும் அரசியல் தொண்டும்

சமூகத் தொண்டிற்கும் “அரசியல்” தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமூகத் தொண்டிற்கு பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப் பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்லுவோம். நம்மைப் பொருத்தவரை அரசியலின் பேரால் கூடுமானவரை உழைத் தாகி விட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல் வேறில்லை. அதைவிட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும் அடிக்கடி சறுக்கி, அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு விடுகிறது. இது சகவாச தோஷமே அல்லாமல் வேறல்ல. இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்துவிட்டு, மக்க ளுக்கும் அதிலிருக்கும் மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமூகத் தொண்டில் சேர்த்து,...

ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார் 0

ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார்

“கள்ளின் வெற்றியே வெற்றி” என்ற தலைப்பின் கீழ் “அரசாங்கத்தார் நடத்திவரும் பொல்லாத கள்ளுக்கடைகளை மூட வழி தேடுங்கள்” என்று சொன்னேன். அதற்கு வகுப்புவாரிக்காரரும் ஜஸ்டிஸ் கக்ஷியாரும் இன்னும் சிலரும் தன்னைப் பற்றி சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லுகிறார். ஆனால், கக்ஷியார்கள் இவர்பேரில் சந்தேகப்படுவதற்கு சொல்லும் காரணங்களுக்கு மாத்திரம் பதில் சொல்லுவதில்லை. சந்தடி சாக்கில் ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றி சொல்லும் போது “நியாயக் கட்சி (=பிராமணரல்லாதார் – ஜஸ்டிஸ் கக்ஷி) என்று பெயர் வைத்துக் கொண்டு சிறு வகுப்பார்களை (=பிராமணர்களை ) அநியாயமாய் (= யோக்கியமான பிராமணர்களின் மேல் அபாண்டமான பழிகளைச் சொல்லி) பசு பலத்தால் (= மிருக பலத்தால்) ஒடுக்கியாள (=அவர்களுக்கு மேலே போக) முயலும் (=வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கேட்கும் ) கக்ஷியாரை (= பிரசாரம் செய்யும் கக்ஷியாரை) நான் ஆதரிப்பதாய் (=பிராமணராகப் பிறந்த நான் ஆதரிப்பதாய்) ஏன் எண்ணுகிறீர்கள்(=பிராமணர்களே பயித்தியக் காரத்தனமாய் ஏன் எண்ணுகிறீர்கள்) என்று எழுதுகிறார்.” இதிலிருந்தே ஸ்ரீமான் ஆச்சாரியாரின்...

அதுவானாலும் கிடைக்கட்டும் 0

அதுவானாலும் கிடைக்கட்டும்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் பார்ப்பனருக்கு ஒரு “வஜ்ஜிரக் கோடாரி”. அதாவது தைரியமாய் யாரையும் வைவார். அப்படி வையவும் அவருக்கு சில சௌகரியமுண்டு. என்ன வென்றால் ……….. “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட்படுத்துவதானால் உலகில் மனிதனுக்கு வேறு வேலை செய்ய நேரமே கிடைக்காது” என்று வசவு கேட்போர் ஒவ்வொரு வரும் நினைக்கும்படியாகவும், “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட் படுத்தலாமா” என்று ஊரார் வையப்பட்டவரை கேட்கும்படியானதுமான ஒரு சௌகரியம் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு உண்டு. இதனால் இன்னும் வைய முடியுமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வாய்வலித்தால் மாத்திரம் வசவுத்தடை ஏற்படுமேயொழிய மற்றவர்களால் தடை ஏற்படுத்த முடியவே முடியாது. இந்த வசவைப் பார்த்து ஆனந்தப்படும் பாக்கியம் நமது பார்ப் பனர்களுக்கு யிருப்பதால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியவர்கள் ஒரு வஜ்ஜிரக் கோடாரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ பாவம்! “அவ்வஜ் ஜிரக் கோடாரிக்கு” அவரால் வேலை வாங்கிக் கொண்ட சுயராஜ்ஜியக் கட்சியார் சட்டசபைத் தலைவர் ஸ்தானம் கொடுக்க மறுத்து விட்டார்கள். தொலைந்து போகட்டும் அதுதான் பார்ப்பனர்...

“அதனால்தான் உங்கள் வீட்டின்மேல்     காகம் பறந்தது” 0

“அதனால்தான் உங்கள் வீட்டின்மேல் காகம் பறந்தது”

சிறு பிள்ளைகள் ஒருவருக்குகொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் போது – சரியான தோஷம் சொல்லுவதற்கு வழியில்லாதபோது கோபத்தில் வெறியால் ஏதாவதொன்றைச் சொல்லி வைவதற்கு ஒருவன் மற்றவனைப் பார்த்து அதினால்தான் உங்கள் வீட்டின் மேல் காக்காய் பறந்தது என்று சொல்வதுண்டு. அதுபோலவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தைப் பற்றி குற்றம் சொல்ல வகை இல்லாமற் போனால் ஏதாவது சொல்லித் தீர வேண்டிய நிலைமைக்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் வந்துவிட்டதால், சென்ற வாரத்திற்கு முந்தின பத்திரிகையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்கிற தலைப்பின் கீழ் முஸ்லீம் லீக் தீர்மானத்தைப் பற்றி எழுதிவிட்டு வகுப்பு வாரி தீர்மானம் தப்பு என்கிறதற்கு ஆதாரமாக முஸ்லீம் லீக்கில் மௌலானா முகமதலிக்கும், ஸர். அப்துல் ரஹீமுக்கும் ³ தீர்மான விஷயத்தில் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தை எடுத்துக்காட்டி இவ்வித அபிப்பிராய பேதம் உண்டாவதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கூடாது என்கிறார். இருவருக் கும் அபிப்பிராயபேதம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமா? வேண் டாமா? என்கிற விஷயத்தில் இல்லவே இல்லை...

சிறா வயல் 0

சிறா வயல்

சகோதரர்களே! உங்கள் வரவேற்பு பத்திரத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாதானாலும், என்னைப்பற்றிய புகழுரைகள் போக மீதி உள்ள வாசகங்கள் எனது கொள் கையை தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு அதன்படி நடப்பதோடு அதை மற்று அனுபவத்திலும் கொண்டு வர தங்களுடைய சம்மதத்தை தெரிவிக்கின்றன. ஆதலால் அதைப்பொருத்தவரை வந்தனத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் ஏதோ பிரமாதமான காரியங்கள் செய்துவிட்டதாகவும், பெரும் தியாகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவ்விதமாகச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. ஜெயில் வாசத்தைப் பற்றி சொல்லியிருப் பது மிகவும் வேடிக்கையானது. ஜெயிலுக்குப் போவதனால் பெரிய கஷ்ட நஷ்டம் ஒன்று மில்லை. சந்தோஷமாகவும், சாந்தியுடனும் ஓய்வெடுத்துக் கொள்ள மனிதனுக்கு ஜெயிலை விட வேறு இடம் இல்லை. ஜெயிலில் இருக் கிற காலம் வரை வெளியில் தொண்டு செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறதே என்கிற ஒரு கவலை தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. ஆனால் வெளியில் வந்தால் முன்னிலும் அதிகமாக வேலை செய்யக்கூடிய ஆற்றலும் எழுச்சியும்...