Author: admin

மறுபடியும் பெசண்டம்மையார் 0

மறுபடியும் பெசண்டம்மையார்

ஒரு விதத்தில் மறைந்து போன ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் அரசியல் செல்வாக்கை மறுபடியும் உயிர்ப்பிக்க கொஞ்ச நாளாகவே அந்தரங் கத்தில் பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றதை நாம் அறிவோம். அதற்காக பல பத்திரிகைகளையும் வசப்படுத்த செய்துவரும் முயற்சியையும் நாம் அறிந்துவருகிறோம். பெசண்டம்மையாரின் ஆதிக்கம் அல்லது தலைமை என்பது பெரிதும் விபூதி பூசும் அய்யர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். மகாத்மா காந்தி யின் ஆதிக்கமென்பது பெரிதும் நாமம் போடும் அய்யங்கார்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். “நாட்டுக்கு எந்த துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பது போல் பார்ப்பன சூழ்ச்சி யால் எந்த தலைவர் போய் எந்த தலைவர் வந்தாலும் பார்ப்பனர்களுக்கு யோகமே தவிர நமது கதி இவர்கள் காலை நக்கிக் கொண்டு திரிய வேண்டிய தாய்தான் இருக்குமேயல்லாமல் ஒருக்காலும் சுயமரியாதையுடன் வாழ முடியாது. இதற்கு சாட்சி மகாத்மா ஆதிக்கத்தால் ஏற்பட்ட பலனே போது மானது. இனி நமக்கு மகாத்மாக்களும் வேண்டாம், உலக ரக்ஷகிகளும்...

இந்திய சட்டசபையில்                                     மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு அறிவின் வளர்ச்சிக்கு ஆபத்து 0

இந்திய சட்டசபையில் மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு அறிவின் வளர்ச்சிக்கு ஆபத்து

“மதாச்சாரியார்களை தூஷிப்பதை தடுக்க வேண்டியதற்காக” என்னும் பெயரால் இந்திய சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்தாய் விட்டது. இனி, “சட்டமாய் விட்டது”என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி. இந்த சட்டத்தைப் போல் ஒரு முட்டாள் தனமானதும் மனித சமூகத் தின் அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தானதுமான சட்டம் உலகத்தில் எந்த சட்ட புஸ்தகத்திலுமே இருக்காது என்பது நமது அபிப்பிராயம். இதைப்பற்றி முன்னமே ஒரு தடவை எழுதியுமிருக்கிறோம். மகமது நபிகளை எவனோ ஒருவன் கண்டித்து விட்டான் என்கிற காரணத்திற்காக உலகத்தையே குருடர்களும் செவிடர்களுமாக்க ஒரு சட்டம் கொண்டு வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை யாரும் யோசிக் காமல் இம்மாதிரியான அவிவேகமான காரியத்தில் இறங்குவது நமக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது. ஒரு யோக்கியனை ஒரு அயோக்கியன் கண்டித்து விட்டதற்காக உலகத்திலுள்ள அயோக்கியர்களை எல்லாம் எந்த யோக்கியனும் கண்டிக்கக் கூடாது என்று சட்டமியற்றுவது பிசாசுகள் அரசாங் கத்தில் கூட நடைபெற முடியாத காரியம் என்பதே...

மகாத்மாவும் காங்கிரசும் 0

மகாத்மாவும் காங்கிரசும்

காங்கிரஸ் ஏற்பட்டது முதல் நாளது வரை பொது மக்களுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதையும் பல கெடுதிகள் ஏற்பட்டி ருக்கிறது என்பதையும் மகாத்மா மனதார அறிந்திருந்தும், அக்கெடுதிகளை ஒழிக்க தன்னால் கூடியவரை பாடுபட்டுப் பார்த்தும் முடியவில்லை என்று ஒப்புக்கொண்டும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டத்தார் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொண்ட பிறகும், மகாத்மா எல்லோரையும் காங்கிரசில் சேருங்கள் என்பதும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு மகாநாட்டார் மகாத்மாவை அழைத்தால் அதற்கு பதிலாக “நல்ல எண்ணத்தோடு எல்லோரும் காங்கிரசில் சேருங்கள்” என்று தந்தி அடிப்பதும் நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்களே காங்கிரஸ் முத்திரை (லேபிள்) இல்லாமல் மகாத்மாவாக இருக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் காங்கிரஸ் முத்திரையைப் போட்டுக் கொண்டு வாழ்வதில் நமக்கு அதிசயம் எப்படி தோன்றும். குடி அரசு – செய்தி விளக்கம் – 11.09.1927

சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன் கமிஷனர் அவர்கள் திட்டம் 0

சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன் கமிஷனர் அவர்கள் திட்டம்

சென்னையில் பரவி வரும் காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகளைத் தடுப்பதற்காக சென்னை நகர சபைக் கமிஷனர் ஸ்ரீமான் ச. வெங்கிட்டநாராயணா அவர்கள் செய்த ஏற்பாடுகளைப் பற்றிய குறிப்பு ஒன்று வரப்பெற்றோம். அதில் வைத்திய இலாகா தலைமை அதிகாரிகள் அபிப்பிராயப்படியே தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காகவும் வைசூரி, காலரா பரவிய பாகங்களை சுத்தம் செய்வதற்காகவும், ³ வியாதிகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதற்காகவும், வியாதி வராமல் தடுக்கவும் நகர சபைக் கமிஷனர் எடுத்துக் கொண்ட முயற்சியும், அநுசரிக்கும் முறைகளும் மிகவும் பாராட்டத்தக்கவைகளாகவே இருக்கின்றன. நகர சபை அங்கத் தினர்கள் நகரத்தின் nக்ஷமத்தில் உண்மையில் அக்கரையுள்ளவர்களா யிருந்தால் நகர nக்ஷமத்தைக் கருதி கமிஷனர் செய்திருக்கும் ஏற்பாடுகளை ஆதரித்து அவ்வேற்பாடுகள் அமுலில் கிரமமாய் நடைபெறுவதற்கும் உதவியாயிருக்க வேண்டியவர்கள் என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் நகர சபையில் உள்ள ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களில் சிலர் நகரத்தின் nக்ஷமங்களில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் கார்ப்பரேஷன் ஸ்தாபனம் பார்ப்பன அக்கிராரமாகவும், பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும்...

தமிழிற்குத் துரோகமும்                        ஹிந்தி பாஷையின் இரகசியமும் 	– சித்திரபுத்திரன் 0

தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் இரகசியமும் – சித்திரபுத்திரன்

நமது நாட்டின் nக்ஷமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப் பட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு அதனால் தாங்கள் பிழைக்கும்படியாகவும், நமக்கு பெரிய ஆபத்து விளையும்படியாகவே செய்து விடுகிறார்கள். எதுபோலென்றால்; நமது சர்க்கார் நமக்குச் சுயராஜ்யம் கொடுப்பதாய் சொல்லி முதல் தடவை, இரண்டாந் தடவையாகக் கொடுக்கப்பட்டு வந்த சீர்திருத்தங்கள் என்பது, நமது நாட்டுக்கு அதிக வரி போடவும், ஜாதிச் சண்டைகளும், பொறாமையும் மேலிட்டு ஒருவரையொருவர் ஏமாற்றுவதன் மூலம் ஒற்றுமைக் குறைவு ஏற்படவும், கைத்தொழில்கள் அற்றுப் போய் நாளுக்கு நாம் மனச்சாக்ஷி யையும், கற்பையும் விற்று ஜீவிக்கும்படி ஏழைகள் அதிகமாகவும், அரசாங்கத் தார் உத்தேசம் நிறைவேறத்தக்க வண்ணம் நமது நாட்டுப் பணம் கொள்ளை போகவும், உபயோகப்படுவது போலவும், நமது மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சர்க்காரை பள்ளிக் கூடம் வைக்கும்படி நாம் கேட்டுக் கொள்வதினால் அந்தப்படிப்பு நம் நாட்டுக்குத் துரோகம் செய்யத் தக்க அளவுக்குச் சர்க்கார் ஆக்ஷிக்கு...

சுயமரியாதைக்கு லாபம் இல்லை  ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம் 0

சுயமரியாதைக்கு லாபம் இல்லை ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்

காங்கிரஸ் என்பது ஒரு பெரிய தேசத் துரோகமான சபை என்றும், அது பார்ப்பனர்களும் படித்தவர்களுமான சிலர் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட சபை என்றும், நாட்டில் எத்தனைக் கெத்தனை காங்கிரசுக்கு செல்வாக்கிருக்கிறதோ அத்தனைக்கத்தனை தேசத் துக்கும் குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கும், ஏழை மக்களுக்கும் துரோகமும் கஷ்டமும் ஆபத்துமே அதிகரிக்குமென்றும், எவ்வளவோ ஆதாரங்களுடன் முழு மூடர்களுக்கும் புரியும்படியாக புள்ளி விபரங்களுடனும் உண்மை சம்பவங்களுடனும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். இது இன்று நேற் றல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதார மூலமாய் அறிய வேண்டுமென்கிற ஆவலுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபக மூட்டு கிறோம். சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பாக சென்னை மைலாப்பூர் மந்தைத் தெருவில் நாம் ஒரு பிரசங்கம் செய்ததற்காக சர்க்கார் ராஜ துவேஷத் திற்காகவும், வகுப்புத் துவேஷத்திற்காகவும் நம்மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பிரசங்கத்திலேயே இந்த விஷயமாய் யோசிப்பது ஆதாரத்தில் இருக்கிறது. ஆதாரத்தில் இன்றும் இருக்கிறது. ஆனாலும்...

பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம்            உஷார் ! உஷார்!! உஷார்!!! -சித்திரபுத்திரன் 0

பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம் உஷார் ! உஷார்!! உஷார்!!! -சித்திரபுத்திரன்

பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்ப தற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமை உடையவர்களாயும், இத் தேசத்தையே ஆண்டவர் களாயும், பராக்கிரமசாலிகளாகவும் இருந்து வந்திருந்த போதிலும் இன்றையத் தினம் “பிற்பட்டவர்”களாகவும், “சூத்திரர்”களாகவும் இருப்பது ஏன்? இதற்குப் பொறுப்பாளி யார் என்று பார்த்தால் அது நமது நாட்டுப் பத்திரிகை களேயாகும். தற்காலம் நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று பெரும்பாலோர் கையிலும் ஊசலாடுவது பிராமணப் பத்திரிகைகளே அல்லவா? அப்பத் திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின் சமாச்சாரங்களை எழுதியனுப்பும் நிரூபர்களும் பிராமணர்களே அல்லவா? அப் பத்திரிகைகளுக்கு ஏஜெண்டு களாயிருந்து விற்றுக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே அல்லவா? அப்படி இருந்தும் அதற்குப் பணம் கொடுத்து வாங்கிப்...

பிராமண உபாத்தியாயர்களின் பேரில் உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம் 0

பிராமண உபாத்தியாயர்களின் பேரில் உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம்

பிப்ரவரி மாதம் 19-ந் தேதி கோயமுத்தூரில் நடந்த ஜில்லாக் கல்விச் சபைக் கூட்டத்தில் சட்டசபை மெம்பரான ஸ்ரீமான் ஆர்.வீரய்யன் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதாவது, “அழுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் அதிகமாகப் படிப்பதற்காகப் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு, தாலூகாபோர்டு, ஜில்லாபோர்டு, முனிசிபல் கவுன்சில் முதலிய வற்றின் தலைவர்கள் பிராமணரல்லாத உபாத்தியாயர்களையே நியமிக்க வேண்டும். இப்பொழுதுள்ள ஒரு பிராமண உபாத்தியாயர் வேறு பள்ளிக் கூடங்களுக்கு மாற்றி விட வேண்டும்” என்பதாகப் பிரேரேபித்தார். இதை ஜனாப் கலந்தர் சாயபு ஆமோதித்தார். இதை ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார் இத்தீர்மானம் பிராமணர்களைக் குறைகூறுவதாயிருக்கிறது என்ற காரணத்தால் ஒழுங்குத் தவறென்ற ஆnக்ஷபனை கிளப்பியதில் தலைவர் இவ்வித தீர்மானம் கொண்டுவர யாருக்கும் அவகாசம் உண்டென் றும் ஒழுங்கானதுதான் என்பதாகவும் சொல்லி விட்டார். பிறகு இது வெளிப்படையாய் ஒரு வகுப்பாரைப் பாதிக்கிறது என்று சிலர் கருதியதால், கோயமுத்தூர் ஜில்லாபோர்டு பிரசிடெண்டும் – அந்நகர் முனிசிபல் சேர் மெனுமான ஸ்ரீமான் சி.எஸ்....

பிராமணர்களின் சங்கங்கள் 0

பிராமணர்களின் சங்கங்கள்

பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும், அவற்றில் பிராமணர் களாகிய தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதையும் நிலை நிறுத்த இதுசமயம் நமது நாட்டில் ஆங்காங்கு பிராமண சங்கங்கள் இரகசியமாயும் வெளிப் படையாயும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது தேசீய பிராமணர்கள் நம்மி டம் வரும்போது எல்லோரும் சமம் என்று சொல்லிக் கொண்டும், தீண்டாமை, உயர்வு – தாழ்வு இவைகளை ஒழிக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டும் வோட்டுப் பெறுவதும், பிராமண சங்கங்களுக்குப் போய் தீண்டா மையையும் உயர்வு தாழ்வையும் நிலை நிறுத்த அவர்களுக்கு வழி சொல்லிக் கொடுப்பதும் அதற்கநுகூலமாய் நம்முடைய வோட்டு பலன்களை உபயோகப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். இவற்றை நம்மில் பலர் அறிந்தும் தங்கள் சுய நலத்தை முன்னிட்டு அறியாதவர்போல் நடித்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்தும், பிராமண சங்கங்களை ஆதரித்தும் திரிகிறார் கள். இதை அறிய வோட்டர்களுக்கு இன்னமும் யோக்கியதை வரவில்லை என்றால் இந்த வோட்டர்களின் பிரதிநிதிகள் எப்படி நமது நாட்டுக்குப் பிரதிநிதிகளாவார்கள்? குடி...

வங்காளத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 0

வங்காளத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

இம் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வங்காள சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிராமணரல்லாத அங்கத்தினர் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது:- “இம்மாகாணத்தில் பற்பல வகுப்பினருடைய ஜனத் தொகைக்குத் தக்கபடி இந்த சபைக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்கிற தீர்மானத்தைப் பிரேரேபித்தார். குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களான ஆங்கிலோ-இந்தியர், ஐரோப்பியர், இந்திய கிருஸ்தவர் முதலியவர்கள் தங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமோ எனப் பயந்து இதை ஆnக்ஷபிக்கத் தொடங்கினார்கள். ஸர். அப்துர் ரஹிம் இவ்வகுப்பார்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கும் படியாக ஒரு திருத்தம் அசல் தீர்மானத்தோடு சேர்த்தார். அதாவது:- “குறைந்த வகுப்பினர் முதலியவர்களுக்கும் போதுமான பிரதிநிதித் துவம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்ற திருத்தத்தை பிரேரேபித்தார். இதற்கு விரோதமாயிருந்த சிலர், காஞ்சீபுரத்தில் செய்த தந்திரத்தைப் போலவே சட்டம் ஒழுங்கு என்பதன் பேரால் இதை நசுக்கிவிடப் பார்த்தார் கள். ஆனால் அக்கூட்டத்தின் தலைவர் காஞ்சீபுரத் தலைவர் போல்...

மதப்புரட்டு 0

மதப்புரட்டு

அரசியலின் பெயரால் அரசியல்காரர்கள் தேசீயக்காரர்கள் என்போர் கள் தங்கள் சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி பாழ்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லி வந்தேனோ அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல இந்த புரோகிதர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தார் மதத்தின் பேரால் நம்மை ஏமாற்றி நமது ஒற்றுமையைக் குலைத்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நமது பொருளையும் கொள்ளை கொண்டு நமது நாட்டையும் சமூகத்தையும் பாழாக்கி நம்மை சுயமரியாதையற்ற மனிதர்களாக நடைப்பிணமாய் வாழும்படி செய்து வருவது. இதன் ரகசியத்தை நாம் கொஞ்சமும் உணராமல் இம்மாதிரியான வஞ்சகச் செயலுக்கும் நாமே உதவியாயும் இருந்து நீடூழி காலம் நம்மையும் நமது பின் சந்ததியையும் நிரந்தர அடிமையாக வேண்டியதான ஆதாரங்களையும் சிருஷ்டித்து வருகிறோம். இதை விளக்குகிறபோது உங்கள் மனம் ஒரு சமயம் பதைத் தாலும் பதைக்கும். தயவு செய்து கொஞ்சம் பொறுமையோடு கவனித்து கேட்ட பிறகு உங்கள் பகுத்தறிவையும் நடுநிலைமையில் இருந்து உபயோகப் படுத்தி பார்ப்பீர்களானால் அதன் உண்மை...

ஏமாற்றுப் பிரசாரம் 0

ஏமாற்றுப் பிரசாரம்

ஸ்ரீமான்கள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காந்தியின் பிரதிநிதி யென்கிற பேரைச்சொல்லிக் கொண்டும், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் பிராமணரல்லாதார் பிரதிநிதி என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டும், ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி ஐயங்கார், எஸ். சீனிவாசய்யங்கார், எஸ். சத்திய மூர்த்தி ஆகியவர்கள் சுயராஜ்யக் கட்சியின் பேரைச் சொல்லிக்கொண்டும் காங்கிரஸ் சார்பாக தேசத்திற்கு நன்மை செய்கிறவர்கள் போல் நடித்து, நமது நாட்டில் ஏமாற்றுப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அப்படிச் செய்வதிலும், இவர்கள் சொல்லிவரும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத தாய், கொஞ்சம் புத்தியுள்ளவனும் இவர்களுடைய புரட்டுகளை அறிந்து கொள்ளக்கூடிய மாதிரியில் பேசி வருவது நமக்கே ஆச்சரியமாய் இருக் கின்றது. அதாவது:- பிராமணர்களின் கக்ஷியாகிய தமிழ்நாட்டு சுயராஜ்யக் கக்ஷிக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கும் விஷயத்தில் “பிராமணரல்லாதார் பிரதிநிதியான” முதலியார் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் ஒத்துழையாமை செய்வார் கள்; ஆதலால் அவர்களுக்கு வோட்டுக் கொடுங்களென்கிறார். ஸ்ரீமான் ஆச்சாரியாரோ சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் மதுவிலக்கு செய்வார் கள்; ஆதலால் அவர்களுக்கு வோட் செய்யுங்கள் என்கிறார். சுயராஜ்யக்...

மன்னிக்க வேண்டும் 0

மன்னிக்க வேண்டும்

அச்சு எந்திரம் ஒடிந்து போனதால் சென்ற வார பத்திரிகை அனுப்ப முடியாமல் போய்விட்டது பற்றி சந்தாதாரர்கள் மன்னிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். – ஈ.வெ.ராமசாமி குடி அரசு – அறிவிப்பு – 28.02.1926

மந்திரி சபை 0

மந்திரி சபை

தற்கால மந்திரி கட்சி அரசியல் ரீதியில் ஒன்றும் பயனுள்ளதாய் இல்லா விட்டாலும் செய்யவும் முடியாது என்பதாகவே வைத்துக் கொண்டாலும், சமூக சம்மந்தமாகவாவது ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதாக பார்த்தால் அதிலும் பார்ப்பனரல்லாதாருக்கு நமக்கு ஒரு பிரயோஜனமில்லாததோடு எதிர்க்கட்சியார் சொல்லுகிறபடி அதாவது ஸ்ரீமான் சுப்பராயன், சி. இராஜ கோபாலாச்சாரியாரும், எஸ். சீனிவாசய்யங்காரும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஏ. ரங்கநாத முதலியார், சர்.சி.பி. இராமசாமி அய்யரும், பெசண்டம் மையும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார், சர்க்காரும் மற்றும் மேற்கண்ட ஆசாமிகளும் சொல்லுகிறபடியும் ஆடுகிறவர்களேயல் லாமல் வேறென்ன? எத்தனைக்கெத்தனை இந்த மந்திரிகளை நிலைக்க வைத்திருக்கிறோமோ அத்தனைக்கத்தனை பார்ப்பன ஆதிக்கத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் நமது பார்ப்பனரல்லாதார் இதுவரை செய்து கொண்டிருந்ததையும் கெடுத்துக்கொள்ளவுமே உதவுமேயல்லாமல் மற்றபடி யாதொரு நன்மையும் உண்டாகாது. இம் மாதிரியாகப் பார்ப்பனர்கள் சொற்படி ஆடும் மந்திரிகளை வைத்துக் கொண்டிருப்பது பார்ப்பனரல்லாத சமூகத் திற்கே பெரிய அவமானமாகும். அதுமாத்திரமல்லாமல் 47 அங்கத்தினரைக் கொண்டதாக உள்ள ஒரு கட்சியானது தேசத்தின் பெயரைச் சொல்லிக்...

செங்கல்பட்டில் கதர்ச் சாலை திறப்பு விழா 0

செங்கல்பட்டில் கதர்ச் சாலை திறப்பு விழா

காங்கிரசின் பெயராலும், சுயராஜ்யமென்னும் பதத்தின் பெயராலும் மக்களை ஏய்த்து பல அக்கிரமங்கள் செய்யப்படுகிறது. சுயராஜ்யமின்ன தென்று மகாத்மா காந்தியும் இன்னும் சொல்லாமல் அதனை அடைவதற்குத் தகுதியாகுங்கள் என்றுதான் சொல்லுகின்றார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட நிர்மாணத் திட்டங்களை நம் பிராமணரல்லாத மக்கள் கைக்கொண்டு மனப் பூர்வமாகப் பாடுபடுவார்களாயின், சுயராஜ்யம் தானாகவே தேடிக்கொண்டு வந்துவிடும். நாம் சுயராஜ்யமடையக் கருதுவதற்கு முன் சுயமரியாதையை நிலை நிறுத்த வேண்டுவது முதற்கடமை. சுயமரியாதையில்லாத சுயராஜ்யம் வந்தும் பயனில்லை. இச்சுயமரியாதையை அடைவதற்கு பாமர மக்களுக் குள் போதிய பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கு “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” பத்திரிகைகளின் உழைப்பு அத்தியாவசியம். அப்பத்திரிகைகளின் வளர்ச்சி பிராமணரல்லாத சமூகத்தின் கதிமோட்சத்திற்கான வளர்ச்சி என்பதை மறக் கக் கூடாது. பிராமணரல்லாத சங்கமென்னும் பெயர் துவேஷம் காரணமெனச் சொல்லப்பட்ட போதிலும் சரி, அதற்குக் காரணமானவர்கள் அவர்கள்தான். அதில் துவேஷமெங்கிருக்கின்றதென விளங்கவில்லை. நமது சுயமரியா தைக்காக நாம்பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா? கொசுக் கள் கடிக்காமல் கொசுவலை போட்டுக்கொள்வது...

சுவாமிகளும் தேவடியாள்களும்  – சித்திரபுத்திரன் 0

சுவாமிகளும் தேவடியாள்களும் – சித்திரபுத்திரன்

நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் “நமது நாட்டு கடவுள்”களே வழிகாட்டிகளாகயிருக்கிறார்கள் . அதாவது சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபசாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள் களிடத்தில் இவையாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித் தனியாகவும் சில்லரையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வரு கிறோம். இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படி யும், மாதப் படியும், வருஷப்படியும் காலnக்ஷப மூலமாகவும், நடிப்பு மூலமாக வும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம். இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவைகள் தவறாமல் நடந்து வரச் செய்திருக்கிறார்கள் . தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன. இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி...

சுயராஜ்யக் கக்ஷியின் வேஷமும்                ஜஸ்டிஸ் கக்ஷியாரின் மனச்சாக்ஷியும் 0

சுயராஜ்யக் கக்ஷியின் வேஷமும் ஜஸ்டிஸ் கக்ஷியாரின் மனச்சாக்ஷியும்

சென்னை கார்பொரேஷனிலிருக்கும் சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர் கள் தங்களுக்கு நம்பிக்கையில்லாததும், தாங்கள் செய்யாததும், தாங்கள் எதிர்ப்பதுமான கதர் ராட்டினம் என்னும் விஷயங்களைக் கார்ப்பொ ரேஷனுக்குள் புகுத்தி, பிராமணரல்லாதார் பேரில் பழியையும் வெறுப்பையும் பொது ஜனங்களுக்கு உண்டாக்குவதற்காக பல தந்திரங்கள் செய்கின்றார்கள். அதாவது கார்பொரேஷன் சிப்பந்திகள் கட்டாயமாக கதர் உடுத்த வேண்டும் என்கிற ஓர் தீர்மானத்தையும், கார்பொரேஷன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளெல்லாம் கைராட்டினம் சுற்ற வேண்டுமென்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவ்விரு தீர்மானங்களையும் சுயராஜ்யக் கக்ஷியார் தங்கள் திட்டத்தில் ஒன்றாய் ஒப்புக் கொள்ளுவதுமில்லை; தாங்களும் நடவடிக்கையில் செய்வதில்லை. கதரைப்பற்றிக் கார்பொரேஷன் சபைக்கு வரும்போது மாத்திரமும், வோட்டுக் கேட்கும் போது மாத்திர மும்தான் கதர் கட்டிக் கொள்ளவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள். ராட்டினத்தைப் பற்றியோவென்றால், அது மகாத்மா பார்த்துக்கொள்ள வேண்டுமென்று விட்டு விட்டார்கள். இப்படி இருக்க இதை கார்பொரேஷன் சிப்பந்திகளுக்கு கட்டாயப்படுத்த சுயராஜ்யக் கக்ஷியாருக்கு யோக்கியதை ஏது? அப்படி இவர்கள் ஏதாவது தீர்மானம் கொண்டு வருவதாயிருந்தாலும், சம்பளம் வாங்கும்போது...

தற்கால நிலைமை 0

தற்கால நிலைமை

பாலக்காட்டில் சொற்பொழிவு நமது நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி பேசுவதென்றால் நினைக்கும் போதே வேதனையாகவும் துக்கமாயும் இருக்கிறது. எவ்வளவோ பெருமையாக இருந்ததாகச் சொல்லப்படும் நமது நாடு இன்று இருக்கும் நிலை, அந்நிய ஆக்ஷிக்கு அடிமையாகி- அந்நிய ஆக்ஷி என்றால் மனிதத் தன்மைக்கு அந்நிய – அதாவது, மனிதனுக்கு மனிதன் பிடித்து தின்னும் மாதிரியில் வலியவனுக்கு எளியவன் ஆகாரமாய் நடைபெற்று வருகின்றது. நமது நாட்டின் மதக் கொள்கைகளின் பலன்களில் இவ்வந்நிய ஆட்சி ஒன் றென்றும், மதத்தின் பேரால் நம் தேசத்துக்கு ஏற்பட்ட கெடுதியின் பலனாய் நமது நாடு இக்கெதியை அடைந்தது, ஆதலால் வெறும் ராஜீய சீர்திருத் தத்தைப் பேசிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை, நமது மதத்தின் பேரால் ஏற்பட்ட ஜாதி வித்தியாசங்களில் மனிதர்கள் பிறவியிலேயே பிராம ணன் உயர்ந்த ஜாதியான் என்பதும், பஞ்சமன் தாழ்ந்த ஜாதியானென்பதும் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாது நமது நாடு சுதந்திரமும், சுயமரியா தையும், சுய ஆட்சியும் பெற்று வாழ...

இன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள் 0

இன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களது விஷங்களை பெரும்பாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமாகவே கக்கி பார்ப்பனரல்லாத மக்கள் அதுகளைப் படிப்பதாலேயே அவ்விஷம் ரத்தத்தில் ஊரிப் போகின்றது. இதை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்பொழு தும் நமது பார்ப்பனர்களின் பிழைப்புக்கான சகல ஆயுதங்களும் அதாவது தேசத்தின் பேரால் காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்னும் ஆயுதமும் மதத்தின் பேரால் மோக்ஷம் என்னும் ஆயுதமும் ஏறக்குறைய அடியோடு மழுங்கிப் போய் வருகிறதென்றே சொல்லலாம். காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்பதன் மூலம் அல்லாது வயிறு வளர்க்க மார்க்கமில்லாத சில வயிற்றுச் சோற்று கூலிகள் தவிர மற்றவர்கள் இதை மதித்திருந்த காலம் மலையேரிப் போய் விட்டது. அது போலவே – மதத்தின் பேரால் அல்லது வாழ முடியாத – வெளி யில் தலைகாட்ட முடியாத – சில பாஷாண்டிகள் தவிர மற்றவர்கள் பார்ப்பனர் மூலம் அடையும் மோட்சத்தை மதிக்கும் காலமும் மலையேறிப் போய் விட்டது. ஆகவே இது சமயம் நமது...

மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும் 0

மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்

மகாத்மா காந்தியும் வர்ணாசிரமமும் என்பதாக இரண்டொரு தலையங் கங்கள் எழுதி வந்ததை நேயர்கள் படித்திருப்பார்கள் . இப்பொழுது மகாத்மா காந்தியும் பார்ப்பனீய பிரசாரமும் என்பது பற்றி எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறோமாகினும் எழுதாமலிருப்பதற்கு முடியவில்லை. இதற்கு முன் எழுதிய தலையங்கத்தில் நாம் கண்டிக்க நேர்ந்த விஷயமானது மகாத்மா அவர்கள் வர்ணாசிரம தர்மம் என்கிற ஜாதிப் பிளவுகள் உண்டு என்றும், அதுவும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்றும் அவனவன் பிறவி ஜாதிக் கேற்ற தர்மத்தையே (தொழிலையே) செய்து தீர வேண்டுமென்றும் அந்தப்படி செய்யாமல் தவறுவானேயானால் அவன் தாழ்ந்த ஜாதியான் ஆகிவிடுவான் என்றும் மகாத்மா சொல்லியும் எழுதியும் வந்த விஷயத் தைத்தான் நாம் தமிழ் நாட்டின் நிலைமையையும், நாகரீகத்தையும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், அவர்களது உரிமையையும் சுயமரியாதை யையும் உத்தேசித்து கண்டிக்க நேர்ந்தது. இப்பொழுது “குதிரை கீழே தள்ளினதல்லாமல் புதைக்குழியும் தோண்டிற்று” என்கிற பழமொழிபோல் பழய புராணப் பிரசாரம் என்கிற பார்ப்பனப் பிரசாரம் செய்ய...

பிரசாரக் கூட்டங்களில் குழப்பம் 0

பிரசாரக் கூட்டங்களில் குழப்பம்

தற்காலம் சுயராஜ்யக் கக்ஷிப் பிரசாரத்திற்காக ஸ்ரீமான்கள் சீனிவாசய் யங்கார், கலியாணசுந்தர முதலியார் முதலியோர் ஆங்காங்கு செல்லுவதும் சட்டசபை அபேக்ஷகர்களைத் தங்கள் கக்ஷிக்கு இழுப்பதுமான பிரசாரங்கள் நடந்து வருவதைப் பத்திரிகை வாயிலாக அறிகிறோம். அதோடு கூடவே ஒவ்வொரு கூட்டங்களிலும் குழப்பங்களும் கூச்சல்களும் நடப்பதும் பார்க்கிறோம். உதாரணமாக, மதுரையில் மீட்டிங்கு நடக்கவிடாமற் செய்ததும் கும்ப கோணத்தில் போலீஸ் உதவியினால் தலைவர்கள் என்போர் வீடு போய்ச் சேர்ந்ததும், காஞ்சீபுரத்தில் கேள்விகளும் குழப்பங்களும் நடந்ததும் பத்திரி கைகள் மூலமாகவும் நிருபர்கள் மூலமாகவும் தெரிய வருகிறது. இம்மா திரியான காரியங்களை நாம் மனப்பூர்த்தியாக வெறுக்கிறோம். பிரசாரகர்கள் என்ன கருத்தோடு வந்த போதிலும் அவர்கள் சொல்லுவது முழுமையும் பொறுமையாய்க் கேட்டுவிட்டு மறுப்பு ஏதாவது இருந்தால் பேசுவதற்கு அவகாசம் கேட்க வேண்டியது, அக்கூட்டத்தார் அதை மறுப்பார்களானால் பேசாமலிருந்து விட்டு அடுத்தநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி நமது அபிப்பி ராயத்தைச் சொல்ல வேண்டுமேயல்லாமல், குழப்பம் செய்வதோ, பேச முடியாமற் தடுப்பதோ போலீஸ் தயவைக்...

புதுக்கோட்டை முஸ்லீம் மகாநாடு 0

புதுக்கோட்டை முஸ்லீம் மகாநாடு

சமஸ்தான முஸ்லீம் பிரஜைகளின் முதலாவது மகாநாட்டில் சைபுல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியரான மௌலானா மௌலி அஹமது சயிது சாஹிப் அவர்கள் 15. 2. 27 ல் அக்கிராசனம் வகித்து நிகழ்த்திய அக்கிராசனப் பிரசங்கம் மிகவும் நீண்டதாகையால் நமது பத்திரிகையில் முழுதும் பிரசுரிக்க முடியாததற்கு மிக வருந்துகிறோம். நாமறிந்த வரையில் மௌலானா அவர் கள் நமது நாட்டுப் பெரும்பான்மையான அரசியல்வாதிகளைப் போல் கீர்த்திக்கும், பெருமைக்கும், சுயநலத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஆசை பட்டுக் கொண்டு தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டும், உள்ளொன்றும் புறமொன்றும் ஆகப் பேசியும், எழுதியும் காலங் கழிப்பவரல்ல. சரியோ, தப்போ தனது மனதிற்குட்பட்டதை ஒளிக்காமல் சொல்லும் சுபாவம் கொண்ட வர். அவர் தனது அக்கிராசன பிரசங்கத்தில் கூறியிருக்கும் ஒற்றுமை, கதர் முதலிய சில முக்கிய விஷயங்களை மாத்திரம் பின்னால் குறிப்பிடுவோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.02.1927

கோயமுத்தூர்                                        தொழிலாளர் வேலை நிறுத்தம் 0

கோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம்

கோயமுத்தூரில் நூலாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏற்பட்டதைப் பற்றி நாம் மிகவும் மன வருத்தமடைகிறோம். தொழிலாளர்கள் பால் நமக்குண்டான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம்மாதிரியான ஒரு சம்பவம் ஏற்பட்டதானது பார்ப்பனரல்லாத ஏழை மக்களி னது துரதிஷ்டவசமென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தொழிலாள சகோதரர்கள் தங்களை ஒழுங்காய் நடத்தித் தரத்தக்க ஒரு தலைவரை தங்க ளுக்குள் அடைய யோக்கியதையற்ற காரணத்தினாலேயே இம்மாதிரியான துரதிர்ஷ்ட்ட வசமான சம்பவம் ஏற்பட நேரிட்டதென்பதே நமதபிப்பிராயம். அல்லாமலும் கோவை தொழிலாளர்களின் தலைவரான ஸ்ரீமான் என்.எஸ். ராமசாமி அய்யங்காரவர்கள் தொழிலாளர்களுக்குத் தலைவராயிருந்து நடத்த எந்த விதத்தில் உரிமையுடையவர் அல்லது யோக்கியதை உடையவர் என்பது நமக்கு விளங்கவில்லை. தொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாள ருக்குத் தலைவராயிருக்கக் கூடாதென்று அநேகத் தடவைகளில் நாம் எழுதியும் தொழிலாளர் கூட்டங்களில் பேசியும் வந்திருப்பது நேயர்க ளுக்கு ஞாபகமிருக்கலாம். அல்லாமலும் இம்மாதிரி வேலை நிறுத்தம் செய்வதைப் பற்றியும் நாம் பலமாகக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தி...

ஓட்டர்களை ஏமாற்றுதல் 0

ஓட்டர்களை ஏமாற்றுதல்

ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் முதலிய பிராமணர்களின் தந்திரம் சென்ற சில காலமாக பிராமணரல்லாதார் பெரும்பாலும் சட்ட சபைகளிலும், தாலூகா , ஜில்லா போர்டு, முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாப னங்களிலும் மெஜாரிட்டியாராக ஏற்பட்டு, பிராமணரல்லாதாரின் முன்னேற் றத்தைக் கவனித்துக் கொண்டு வருவதில் தென்னாட்டுப் பிராமணர்கள் மனம் பொறாதவராகி பொறாமையுங் கெட்ட எண்ணமுங் கொண்டு, எப்படியாவது பிராமணரல்லாதாரைச் சட்டசபைகளிலிருந்தும், ஸ்தல ஸ்தாபனங்களிலி ருந்தும் விரட்டியடித்து, முன்போலவே தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சகல பிரயத்தனங்களையும் செய்து வருகிறார்கள். பிராமணரல்லாதாரில் சில ராஜீயவாதிகளென்போர் இவற்றை நன்றாய் அறிந்திருந்தும், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலனுக்கும், கீர்த்திக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு பிராமணர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதோடல்லாமல், பிராமணரல்லாத சமூகத்தாருக்கே கேடு சூழும்படி வாழ்ந்து வருகிறார்கள். அல்லாமலும், பிராமணரல்லாத தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் பல பத்திரிகைகளும் தங்களுக்கென ஒரு கொள்கையில்லாமலும், மனிதத் தன்மையும், ஆண்மைத் தனமும் இல்லாமலும் பத்திரிகை...

ஜஸ்டிஸ் திருநாள் 0

ஜஸ்டிஸ் திருநாள்

பிப்ரவரி 26 தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 வது வருஷ நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பணகால் ராஜா அவர்கள் பார்ப்பன ரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ் வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந் நாளைக் கொண்டாட வேண்டியவிதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடி அரசு பத்திரி கைகளுக்கு சந்தாதாரர்களை சேர்ப்பது தான். வாலிபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ள வேண்டும். ஜஸ்டிஸ் பத்திரிகையில் ராய்ட்டர் அசோசியேட் பிரஸ், பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிரூபங் கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சிலவில் வாங்கி சென்ற மாதம் முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட் பிரஸ் நிரூபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, பிப்ரவரி µ 26- தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய் பார்ப்பனரல்லாத...

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 0

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொது ஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களை சில பொதுத் தெருக்களில் நடக்க விடாமல் கொடுமைப் படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகும் அதே ராஜ்ஜியத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்களை உபத்திரவப் படுத்துவதும், சிற்சில இடங்களை அந்த சர்க்கார் அனுமதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக் கலாம். ஆனால் நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்க விடாமல் கொடுமைப் படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற ´ ஆரம்பிக் கப்பட்டது. ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆக வேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்தின தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் யெல்லோருக்கும் வழி திறந்து விடப் படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தை திடீரென்று...

குறள் 0

குறள்

நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக்கொளல். நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப்படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால், நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின்றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல்லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர் களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத்தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின் னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள்ளு வதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமை யில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன்...

மதிமோச விளக்கம் 0

மதிமோச விளக்கம்

ஸ்ரீமான். தூசி ராஜகோபால பூபதியவர்களால் இயற்றியதும், சென்னை, பெரம்பூர் பாரக்ஸ், செல்வபதி செட்டி கம்பெனியாரால் அச்சிடப் பட்டதுமான “மதிமோச விளக்கம்” என்னும் புத்தகம் நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகத்தில் பொது ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கக்கூடிய வேஷக்காரர்களும், தந்திரக்காரர்களும், பொய்யர்களும், பித்தலாட்டக்காரர் களும் எப்படி தங்களுடைய தந்திரம், புரட்டு, பொய், பித்தலாட்டம் முதலிய வைகளை எப்படி ஜனங்களிடம் உபயோகப்படுத்தி வஞ்சிக்கிறார்கள் என்ப தைப் பாமர ஜனங்களும் சுலபத்தில் அறியும்படியாக சுமார் 130 அத்தி யாயங்களாகப் பிரித்து, அவற்றில் 130 விதத் தந்திரங்களை உதாரணமாக எடுத்துக்காட்டி, பெரிய ஸைசில் 225 பக்கங்களாகவும், ³ புரட்டுகளுக்கேற்ற பல சித்திரங்களையும் கொண்டு எளிய நடையில் தெளிவாய்ப் பிரசுரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதை வாங்கிப் படித்தால், ஒவ்வொருவரும் உலகத்திலுள்ள சகல ஏமாற்றங்களையும் சுலபமாய் அறியலாம். இப்புத்தகத் தின் விலை புத்தகத்தின் அளவுக்கும் விஷயத்திற்கும் மிகக் குறைந்ததென்று சொல்லத்தகுந்த ஒரு ரூபாய்தான். ஆகையால், ஒவ்வொருவரும் இப்புத்த கத்தை வாங்கி வாசித்து புத்திசாலிகளாக...

சமூக முன்னேற்றம் 0

சமூக முன்னேற்றம்

x அரசியலின் பேரால் தொண்டு செய்து வந்த ஒருவன் அரசியலை வெறுத்து அதன் பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு சமூக முன்னேற்றமே பிரதானமானது என்பதாக இன்று உங்கள் முன் பேச வேண்டிய காரணம் என்ன என்பதைப் பற்றியும், மத சம்பந்தமாக தற்காலம் உள்ள விஷயங் களையும் ஏன் குற்றம் சொல்லுகிறேன் என்கிற விஷயத்தைப் பற்றியும், சமூக முன்னேற்றத்திற்கு உழைப்பதை அரசியலிலும் மத இயலிலும் உழைப்பது என்று ஏன் சொல்லுகிறேன் என்பதைப் பற்றியும் நீங்கள் பொறுமையோடு கவனிக்க வேண்டும். அரசியல் என்பதும் மத இயல் என்பதும் ஒரு சமூகத் தின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்டதே தவிர அரசியலுக்கும் மதத்துக்குமாக சமூகம் ஏற்பட்டதல்ல. ஆகவே அரசியல் என்பதும், மதம் என்பதும் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமாயிருப்பதாயிருந்தால் மாத்திரம் அவற்றில் ஈடுபட்டு ஒரு மனிதன் உழைக்க வேண்டுமேயல்லாமல் மனிதனுக்கு ஒரு வேலை வேண்டுமே என்கிற காரணத்திற்காக வீணானதும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் கேடு சூழ்வதுமான காரியங்களைக் கட்டிக் கொண்டு அழுது...

“தருமத்தின் மேல் தருமம்” 0

“தருமத்தின் மேல் தருமம்”

கோவை ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமண அய்யங்கார் மகாத்மா காந்திக்கு பணமனுப்பியதாகவும், மகாத்மா பெற்றுக் கொண்டு வந்தனமனுப் பியதாகவும் பல பத்திரிகைகளில் வெளியாயிருந்தும், பொது ஜனங்கள் அது ஒரு பெரிய துகையாய் அதாவது நாலு ஐந்து ஆறு ஸ்தானங்கள் கொண்ட தாயிருக்கலாம் என்று நினைத்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், இப்போது சரியான இடத்திலிருந்து வந்துள்ள தகவல்படி அத்தொகை மிகச்சிறிய தொகையென்றும் மூன்று ஸ்தானங்கள் கொண்டதுதான் என்றும் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்காய் கொடுத்த கனவான்களின் பெயரெல்லாம் மூடிவைக்கப்பட்டு நூற்றுக்கணக்காய் கொடுத்த கனவான்கள் பெயர் சந்து பொந்துகளிலெல்லாம் அடிபடும்படியாயிருப்பதும், அதுவும் உண்மைக்கு விரோதமாய் ஜனங்கள் நினைத்து ஏமாறும்படி இருப்பதும், பிராமணப் பத்திரிகைகளின் விளம்பரமும், எலெக்ஷன் தந்திரமும்தானே அல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது. இதுபோலவே ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரின் மற்றொரு தர்மம், அதாவது 2 லக்ஷ ரூபாய் தர்மம்; அதற்குக் காலும் இல்லை தலையும் இல்லை. ஆனால், அத்தர்மத்தை துவக்க ஸ்ரீமதி சரோஜினி வருகிறார்; ஸ்ரீமான் நேரு வருகிறார்...

மகாத்மாவின் ஓய்வு 0

மகாத்மாவின் ஓய்வு

மகாத்மா ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது உலகுக்கே தெரியும். ஆனால், அவர் ஓய்வெடுத்துக் கொண்டாலும் அவரின் பொல்லாத வேளை என்பது அவரை ஓயவிடுவதில்லை. அவரது நண்பர்கள் என்போர்கள் அவரை மறுபடியும் வழுக்கலில் சறுக்கி விட்டுக் கொண்டே வருகிறார்கள். சட்டசபையில் நம்பிக்கையில்லாததால் சுயராஜ்யக் கட்சியைத் தான் ஒப்புக் கொள்ளமுடியாது என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டவரை மறுபடி மறுபடியும் தொந்தரவு செய்து அவர் காலைப்பிடித்து சாணியை மிதிக்க வைக்கிறார்கள். இருந்தாலும் மகாத்மா தடியும் முறியாமல் பாம்பும் சாகாமல் அடிக்கிறார். அதை விளம்பர சவுகரியக்காரர் தங்கள் சவுகரியத்திற்குத் தக்கபடி மாற்றி விளம்பரப்படுத்தி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். மகாத்மா இவ்வாரம் “யங் இந்தியாவில்” சுயராஜ்யக் கட்சியார் மதுபானத்தை விலக்கு வதற்கு முயற்சி செய்வதைத் தங்களுடைய வேலைத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டது பற்றி ஏழைகளின் நண்பர்கள் பாராட்ட வேண்டும் என்றும், குடியினால் கெடுதி ஏழைகளுக்குத்தான் அதிகமென்றும், ஆனால் இதை சுயராஜ்யக் கட்சியாரே செய்யவேண்டு மென்பதில்லை; இதர கட்சியாரும் செய்ய வேண்டியது என்றும்...

பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும் 0

பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும்

காங்கிரசின் பெயரையும், காந்தியடிகள் பெயரையும், ஜெயிலுக்குப் போய் கஷ்டப்பட்ட தேசபக்தர்களின் பெயரையும், ஸ்ரீமான் சீனிவாசய்யங் கார் பணத்தையும், சில பிராமணரல்லாத வயிற்றுப் பிழைப்புத் தலைவர்களின் சமூகத் துரோகத்தையும், கஞ்சிக்கு வகையற்ற சில தொண்டர்களின் காலித் தனத்தையும் ஆதாரமாய் வைத்துக் கொண்டு சென்னை நகர பரிபாலன சபை யாகிய கார்பொரேஷனுக்குப் போன சுயராஜ்யக் கட்சி மெம்பர்களில் சில கனவான்கள், கார்பொரேஷனையே குட்டிச் சுவராக்குவதோடு இந்தியர்கள் சுய ஆட்சிக்கு கொஞ்சமும் அருகரல்லர் – மானமுடையவரல்லர்- விடுதலை அடையத் தகுதியற்றவர் என்பதை வைரக்கல்லில் பொன் எழுத்தால் எழுதப் பாடுபட்டு வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சியார் என்று சொல்லிக் கொண்டு கார்பொரேஷனுக்குச் சில பிராமணரல்லாத கனவான்கள் போயிருந்த போதிலும், அதற்குப் பிராம ணர்கள் பணமும் பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரமுமேதான் முக்கியமா யிருந்தபடியால், இவர்களும் அப்பிராமணர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆட வேண்டியதாய்ப் போயிற்று. அதன் பலனாகவே கார்பொரேஷன் கமிஷ னரான ஸ்ரீமான் வெங்கிட்டநாராயண நாயுடு என்கிற பிராமணரல்லாத கார்பொரேஷன் கமிஷனர்...

டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்   – சித்திரபுத்திரன் 0

டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும் – சித்திரபுத்திரன்

டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகை யில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமி யோ ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமி யாகத் தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் “தீண்டாதவர்கள்” கோவிலுக்குள் போனால் ஒடிப் போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாத வர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப் போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும். ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்யமுடியும். ஆதலால் நாம்...

‘ஏல விவசாயி’ 0

‘ஏல விவசாயி’

‘ஏல விவசாயி’ என்னும் பெயர் பெற்ற ஒரு தமிழ் மாதாந்த சஞ்சிகை எமது பார்வைக்கு வந்தது. இது எழுபது எண்பதாயிரம் ஏக்கர் ஏல விவசாய பூமிகளில் சுமார் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் பெறுமான மகசூல்களை உண்டாக்கும் 2 ஆயிரத்துக்கதிகமான ஏல விவசாயிகளை அங்கத்தினராகக் கொண்ட திருவாங்கூர் ஏல விவசாய சங்கத்தினின்றும் வெளியிடப்பட்டு வருவது பல துறைகளிலும் ஆராய்ச்சியுள்ள திரு.ஆர். நாராயணசாமி அவர் களை ஆசிரியராகக் கொண்டது. விவசாயமே எல்லாத் தொழில்களிலும் சிறந்ததாயிருந்தும் நம் நாடு விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தும் விவசாய வளர்ச்சிக்குரிய புதுவிதமான கருவிகளைக் குறித்தும் புது முறைகளைப் பற்றியும் ஐக்ய இயக்கம், கூட்டுறவு இயக்கம், விவசாய சங்கம் ஆகியவைகளைப் பற்றியும் விவசாயப் பொருள்களைச் சேகரம் செய்து செலவழிக்கும் முறைகளைக் குறித்தும் நமது நாட்டில் தாய்ப் பாஷையில் உலவும் பத்திரிகைகள் மிகச் சிலவே. ஆகவே இவ்விஷயங்களைக் குறித்தும் மிளகு, இஞ்சி, லவங்கம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, சணல் ஆகியவைகளைக்...

காங்கிரஸில் இருக்க உரிமை உண்டா? 0

காங்கிரஸில் இருக்க உரிமை உண்டா?

சுயராஜ்யக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களும், ஜஸ்டிஸ் கட்சி, மிதவாத கட்சி, தேசீயக் கட்சி ஆகியவைகளைச் சேர்ந்தவர் களும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களும், சுயராஜ்யக் கட்சி பிராமணக் கட்சி என்று முடிவு செய்துக் கொண்டிருக்கிறவர்களும், பழய ஒத்துழையாமைத் தத்துவத்திலேயே நம்பிக்கை இருக்கிறவர்களும், சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாரை ஒடுக்க வந்த கட்சியென்று நினைத்து சுயராஜ்யக் கட்சியை பஹிஷ்கரிக்கவோ அதை ஒழிக்கவோ பிரசாரம் செய்ய வேண்டுமென்கிறவர்களும், நிர்மாணத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர் களும் காங்கிரஸில் இருக்கலாமா? என்றும் இவர்களில் யாரையாவது காங்கிரஸை விட்டுப் போகச் சொல்ல யாருக்காவது உரிமை உண்டா? என்றும் இன்னும் பலர் பலவிதமாக நம்மை நேரிலும், எழுத்து மூலமாகவும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள். இந்தியா நீதியும் அமைதியுமான வழிகளில் சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்ளுபவர்களான எல்லோரும் காங்கிரஸிலிருக்க பாத்தியமுடைவர்கள். அதின் திட்டங்களில் அவநம்பிக்கையும் அபிப்பிராய பேதமும், எதிர்ப் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும் இருப்பதினாலேயே காங்கிரஸை விட்டுப் போய்விட வேண்டும்...

சட்டசபை தேர்தல் செலவுக்குப்                      பண வசூலும் நம் நாட்டின் தலை எழுத்தும் 0

சட்டசபை தேர்தல் செலவுக்குப் பண வசூலும் நம் நாட்டின் தலை எழுத்தும்

வரப்போகும் சட்டசபைக்குப் பிராமணர்களும் அவர்களுக்கடங்கின மற்ற வகுப்பாருமே சட்டசபையைக் கைப்பற்றத்தகுந்த மாதிரிக்குப் பிரசாரம் செய்ய நிதி வசூல் செய்ய வேண்டியதே காங்கிரஸ் தலைவர்கள் என்னும் நம் பிராமணத் தலைவர்களுக்கு முக்கிய வேலையாய்ப் போய்விட்டது. அதற் காகச் செய்யப்படும் பல தந்திரங்களில், மடாதிபதிகளை ஏய்த்துப் பணம் வாங்குவதும் முக்கிய சூழ்ச்சிகளில் ஒன்றாக இப்போது அமுலில் இருக் கிறதை வாசகர்கள் அறிந்ததே. அதற்கு ஆதாரமாகவே ஸ்ரீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும், சீனிவாசய்யங்காரும் அடிக்கடி மடாதிபதி களைப் போய் பார்ப்பதும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும், சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரும் சட்டசபைகளில் பிரயோஜனமில்லாத தத்துவங்களைக் கொண்டு தேவஸ்தான மசோதாவைத் திருத்தவும் மாற்றவும் அடிக்கடி பிரேரேபனைகள் கொண்டு வருவதும், உபயோகமற்ற கேள்விகளைக் கேட்பதுமான காரியங்களைச் செய்தும் மடாதிபதிகளையும் மகந்துக்களை யும் ஏமாற்றப் பார்க்கிறதைக் கவனித்தாலே உண்மை விளங்கும். சட்டசபை யில் பிராமணரல்லாதாருக்குள்ளாகவே, மந்திரி கக்ஷியார் என்றும் அவர்க ளுக்கு விரோதமாக பொறாமையின் பேரிலோ அல்லது மந்திரிகளின் நடத்தைக் குறைவினாலோ பிரிந்திருக்கும் எதிர்க்கக்ஷியாரும்...

இது சத்தியாக்கிரகமாகுமா? 0

இது சத்தியாக்கிரகமாகுமா?

சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல் துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு வருக்கும் மூன்று மூன்று மாதம் கடுங்காவலும், முன்னூறு ரூபாய் அபராத மும், அது செலுத்தப்படாவிட்டால், மேல்கொண்டு 3 µ, தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மன உறுதியையும் அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதா னாலும் இச்செய்கைக்கு சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந் தாது என்பதே நமது அபிப்பிராயம். அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும், அனுபவிக்கத் தயாரா யிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களை தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில்நடத்தி பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத் திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கல்லாத காரியங்களைச் செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம். ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப்பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காக சத்தியாக்...

திரு. முதலியார் 0

திரு. முதலியார்

இதுகாறும் திரை மறைவிலிருந்து ஒப்பாரி வைத்த திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் இப்பொழுது வெட்ட வெளிச்சத்தில் வந்துவிட்டார்கள். சென்னைக் கடற்கரையில் சமீபத்தில் கூடிய ஒரு கூட்டத் தில் வகுப்புவாரிப் பிரதிதிதித்துவத்துக்கு எதிர்ப்பிரசாரம் செய்யப்போவதாக விளம்பரம் செய்துவிட்டார். முதலியாரவர்களின் இவ்வுறுதி நிலையை மிகப்பாராட்டுகின்றோம். நெருக்கடியான சமயங்களில் ‘வழ வழ’ பாடுவதே திரு. முதலியாரவர்கள் இயல்பு. அந்நிலை மாறி தன் அபிப்பிராயத்தை முதலியாரவர்கள் ஒரு வழிப்படுத்தியது போற்றத்தக்கதே. ஆனால் இந் நிலையைக் காஞ்சி மகாநாட்டின் போது கொண்டிருக்கலாகாதா? உண்மை யாகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் முதலியாரவர்களுக்கு நம்பிக்கையில்லாதிருந்திருந்தால், திரு நாயக்கரவர்களின் தீர்மானத்தை மகாநாட்டில் பிரேரேபனை செய்ய அனுமதி கொடுத்து, தன் முழுபலத்தோடு அதை எதிர்த்திருக்கலாம். ‘ வீரம் வீரம்’ என்னும் மொழிகளை, தன் அக்கிரா சனப் பிரசங்கம் முழுதும் அடுக்கி வைத்த திரு.முதலியாரவர்களுக்கு அவ் “வீரம் இல்லாதுபோயிற்று! குறுக்குவழியிலிறங்கி தன் குலத்துக்கு வினை தேடி, தமிழுலகத்தில் தான் பெற்றிருந்த மதிப்பையும் ஹோமஞ் செய்து விட்டார்கள். இப்பொழுது முதலியாரவர்கள்கூடப்...

பேடிப் போர் 0

பேடிப் போர்

நமது நாட்டில் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் ஏற்பட்டிருக்கும் பல பத்திரிகைகளின் தலையெழுத்து உண்மையை எழுதி வீரப்போர் நடத்த யோக்கியதையின்றி பொய்யை எழுதி பேடிப் போர் நடத்தும்படியாக ஏற் பட்டுப் போய்விட்டது. உதாரணமாக, வட ஆற்காடு சட்டசபை உப தேர்த லைப் பற்றி ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடுவுக்கு விரோதமாகவும், ஸ்ரீமான் பத்மநாப முதலியாருக்கு அநுகூலமாகவும் நாம் பிரசாரம் செய்யப் போவதா கவும், அதற்குக் காரணம் “முன்னவர் சுயராஜ்யக் கக்ஷியாரென்றும் பின்ன வர் ஜஸ்டிஸ் கக்ஷியாரென்றும் சொல்லிக் கொள்ளுவதுதானென்றும்” எழுதி யிருக்கின்றன. இப்படியே இன்னும் அநேக பொய்யான விஷயங்களை எழுதியும், மெய்யான விஷயங்களை மறைத்தும் எழுதுவதை தமது தொழி லாகக் கொண்டிருக்கின்றன. சட்டசபைத் தத்துவத்தில், ஸ்ரீமான்கள் வெங்கிட் டரங்கம் நாயுடுவுக்கும் பத்மநாப முதலியாருக்கும் ஒரு வித்தியாசத்தையும் கற்பிக்க இடமிருப்பதாக நாம் கருதவில்லை. ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடு சட்டசபைக்குச் செல்வதினால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமென்றோ, ஸ்ரீமான் பத்மநாப முதலியார் சட்டசபைக்குச் செல்லுவதில் பெரிய நன்மை...

“திராவிடன்”                                         வேண்டுமா?                      வேண்டாமா? 0

“திராவிடன்” வேண்டுமா? வேண்டாமா?

சகோதரர்களே! பார்ப்பன ஆட்சியாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், பார்ப்பன மதத் தாலும், பார்ப்பன பத்திரிகை பிரசாரத்தாலும் நீங்கள் இழந்து கிடக்கும் சுய மரியாதையும், சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் திரும்பவும் அடைய வேண்டுமா? வேண்டாமா? வேண்டுமானால் அதற்கென்றே உங்கள் தொண்டர்களால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகி நடத்தப்பட்டு வரும் ‘திராவிடனை’ வாங்கிப் படியுங்கள். ‘திராவிடன்’ தான் போலி தேசீயத்தையும் சுயராஜ்யப் புரட்டையும் தைரியமாய் வெளியாக்கி சுயமரியாதைக்கென்றே உழைப்பவன். எனவே, ‘திராவிடன’ன்றிக் கண்டிப்பாய் உங்களுக்கு கதி மோட்சமில்லை; இதை நம்புங்கள். குடி அரசு – அறிவிப்பு – 28.08.1927

சதியாலோசனை 0

சதியாலோசனை

தேசீய பிராமணர்களென்போரும், தேசீயப் பிராமணப் பத்திரிகை களென்பதுவும் பிராமணரல்லாதாரை எவ்விதத்தில் அடக்கியாள்வது என் னும் விஷயமாய் பெரிய சதியாலோசனைகள் செய்து, பிராமணரல்லாதார் செலவிலும், பிராமணரல்லாதார் உழைப்பிலும் தங்கள் காரியத்தை நடத்தி வருகிறது. பிராமணரல்லாதார்களில் பாமர ஜனங்களும் (தங்களது அறியாமை யினாலும்) சோற்றுப் பிரசாரகர்களும், இவர்களுக்கனுகூலமாயிருந்து தங்கள் சமூகத்தின் சுயமரியாதையையே பாழாக்கி வருகின்றார்கள். தன்னுடைய சாமர்த்தியத்தினால் பிராமணரல்லாதாரில் பெரும்பாலோர் தன்னை நம்பும்படி செய்து, அவர்களுக்குத் தலைவருமாகி அச்செல்வாக்கால் மகாத்மாவின் பிரதம சீடராகி ஒரு நிலையான நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இப்பொழுது தமது சுயரூபத்தைக் காட்டத் துணிந்து விட்டார். ஒவ்வொரு நாளும் சட்டசபைத் தேர்தலுக்கு சுய ராஜ்யக் கக்ஷியாருக்கே வோட் செய்யுங்கள்; மதுவிலக்குச் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று விளம்பரம் போட்டு வருகிறார். சுயராஜ்யக் கக்ஷியாரால் எப்படி மது விலக்குச் செய்யக்கூடும் என்பதைப் பற்றி அநேக தடவைகளில் இவரே மறுத்துப் பேசியிருக்கிறார். சுயராஜ்யக் கக்ஷி காரிய தரிசியாகிய...

எலெக்ஷன் தந்திரம்  ( தேர்தல் வாக்குத்தத்தம் ) -சித்திரபுத்திரன் 0

எலெக்ஷன் தந்திரம் ( தேர்தல் வாக்குத்தத்தம் ) -சித்திரபுத்திரன்

தமிழ்நாட்டில் பிராமணாதிக்கம் வலுவடைவதற்காக, வரப்போகும் சட்டசபைத் தேர்தல்களில் பிராமணர்களும் மற்றும் பிராமணர்களின் பிராமணரல்லாத அடிமைகளும் பிராமணாதிக்கத்தின் சார்பாய் எப்படியாவது ஸ்தானம் பெற்று, இதுவரையிலும் பிராமணரல்லாதார் இயக்கங்களின் மூலமாகவும், மகாத்மாவின் ஒத்துழையாக் கொள்கையின் நிர்மாணத் திட்டங் கள் மூலமாகவும் ஒரு சிறிதளவு முன்னேறியிருக்கும் பிராமணரல்லாதார் முன்னேற்றத்தையும், தேச நலத்தையும், அடியோடழித்து ஆதிக்கம் பெற காங்கிரஸின் பெயரால் நமது நாட்டுப் பிராமணர்களின் சூழ்ச்சிக் கொடி வானமளாவப் பறக்கிறது. இக்கொடியை பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்கள் தாங்கித் திரிகின்றார்களெனச் சொல்ல வெட்கப்படுகின்றேனாயினும் உண்மையைச் சொல்ல அஞ்சுவது அதைவிட வெட்கக் கேடாதலின் சொல் லாமல் விடுவதற்கில்லை. 1. தற்காலம் இந்திய தேசிய காங்கிரஸ் என்று சொல்லும் விடுதலை இயக்கமானது பெரும்பாலும் பிராமணர்கள் கையில் சிக்கிக் கொண்ட தென்பதை யாவராலும் மறுக்க முடியாது. 2. காங்கிரஸின் தலைவர் ஸ்ரீமதி சரோஜனி தேவியாராவார். அந்த அம்மையார் பிராமணரல்லாதாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாலும் இவர் பிராமண ஸ்திரீ யென்பதில் எவருக்கும் சந்தேகமிருக்காது. 3. அதன் காரியதரிசிகளோ...

மகாத்மா காந்தியும் வருணாசிரமும்                   II 0

மகாத்மா காந்தியும் வருணாசிரமும் II

“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி அரசி”ல் மகாத்மாவின் வருணாசிரம அபிப்பி ராயத்தை கண்டித்தெழுதியது நேயர்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு பலர் பல பல விதமாக நமக்கு கடிதம் மூலமாய், மகாத்மாவை தாக்குவது தர்ம மல்லவென்றும், அபிப்பிராய பேதத்தை மகாத்மாவிடம் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றும், நேரில் சொன்னால் நமது அபிப்பிராயத்தை மகாத்மா ஒப்புக் கொள்வார்கள் என்றும், எப்படி இருந்தாலும் மகாத்மாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது வித்தியாசமாய் எழுதினால் நமது செல்வாக்கே அடியோடு போய்விடும் என்றும், நமது பத்திரிகை ஆகிய “குடி அரசு” கூட ஜனங்களால் மதிக்கப்படாது போய் விடுமென்றும், மகாத்மா பார்ப்பனரல்லாதார் ஆதலால் அவர் பேரில் குற்றம் சொல்லக்கூடாது என்றும் இப்படியாக பல பேர் பல விதத்தில் கடித மூலமாயும் நேரிலும் நமக்கு தெரிவிக்கிறார்கள். மற்றும் சிலர், பல பத்திரிகைகளிலும் ஜாடை ஜாடையாய் நமது அபிப்பிராயத்தை கண்டித்தும், மகாத்மாவை ஆதரித்தும் எழுதி வருகிறார் கள்....

திருவண்ணாமலை தாலூகா தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் திறப்புவிழா 0

திருவண்ணாமலை தாலூகா தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் திறப்புவிழா

காங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள்சுயமரியாதை வாழ்வே சுதந்தர வாழ்வு சகோதரர்களே! சகோதரிகளே! நீங்கள் இன்று மாலை சில மணி நேரங்களாக இங்கு நடத்தப்பட்ட சொற்பொழிவுகளை அமைதியுடன் கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டொரு தினங்களாக தேக அசௌக்கியமாயிருக்கின்றது. ஆதலால் உங்களை நெடு நேரம் காக்க வைக்காமல் நான் சொல்ல வேண்டியவைகளைச் சுருக்கமாக விளக்கி விட உத்தேசித்திருக்கிறேன். இன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீங்களே நன்கறிவீர்கள். பின்னும் இத்தகைய சங்கங்களால் ஏற்படும் நற்பலன்களைக் குறித்து அறிவாளிகள் பலரும் நன்கெடுத்துப் பேசி னார்கள். ஆதலால் இன்னும் நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்று மில்லை. எனினும் நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு கூட்ட நடவடிக்கைகளை முடித்துவிடுகிறேன். இதுகாறும் பேசியவர்கள் நம்மை பிராமணர்கள் மத சம்மந்தமான விஷயங்களிலும் அரசியலிலும் சமுதாயத் துறையிலும் ஏமாற்றி வருவதை அனுபவமாக எடுத்து நன்கு விளக்கினார்கள். அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் குறித்து பலருக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் தோன்றலாம். சிலர் அவற்றை பிராமண துவேஷம்...

நன்றி பாராட்டுதல் 0

நன்றி பாராட்டுதல்

உண்மைச் சகோதரர்களே! “குடி அரசு” 34 -வது இதழ் (27-12-25) ஒன்பதாவது பக்கத்தில் “குடி அரசு”க்குப் புது ஆண்டு சன்மானம் என்பதாக ஒரு சிறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவ்வேண்டுகோளைச் சகோதரர்கள் மதித்துக் கனப் படுத்தியதற்கு அதாவது 1-1-26 – ந் தேதியிலிருந்து 31-1-26 – ந் தேதி முடிய ஜனவரி µத்தில் 307 சந்தாதாரர்கள் ³ வேண்டுகோளை உத்தேசித்துத் தாங்களாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் சந்தாதாரர்களாகச் சேர்ந்தும், இரண்டொருவர் சிறு தொகை உதவியும் கனப்படுத்தியதோடு கொழும்பு, மதுரை, திருச்சி, நாகை, கோவை முதலிய ஊர்களில் “குடி அரசி”ன் அபிமான ஏஜண்டுகள், தங்கள் சில்லரை விற்பனையை ஜனவரி மாதத்தில் ஒன்று இரண்டாய், மூன்றாய்ப் பெருக்கியும், “குடி அரசி”ன் முன்னேற்றத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டதற்கும் குடிஅரசின் சார்பாகவும், பிராமண ரல்லாதார் பாமர மக்கள் – தீண்டப்படாத மக்கள் சார்பாகவும் நாம் நெஞ்சார நன்றி பாராட்டுகிறோம். “குடி அரசு” வாரம் இருமுறை – மும்முறை –...

பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம் 0

பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்

எல்லா மக்களின் பொது நலத்திற்கென்று ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய பட்டணங்களிலும் வாசக சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணத்தைக் கொண்டே நடப்பதாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமே அதில் தலைசிறந்து விளங்கும். சிற்சில வாசக சாலைகளில் பார்ப்பனரல்லாதவர்களே காரியதரிசிகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அவ்வூர் முனிசீப்போ, டிப்டி கலெக்டரோ, மேஜிஸ் திரேட்டோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டரோ, ரிவினியூž இன்ஸ்பெக்டரோ பார்ப்ப னர்களாயிருந்து விட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத வக்கீல்களோ, பெரிய மனிதர்களோ அப்பார்ப்பன உத்தியோக மெம்பர்களுக்கு அடிமையாயிருப் பதுடன் அப்பார்ப்பன மெம்பர்கள் செய்யும் பார்ப்பனீயப் பிரசாரத்திற்கு செகரட்ரி என்கிற பெயரால் கையாட்களாகவும் இருந்து வருகிறார்கள். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வாசக சாலையிலும் “சுதேசமித்திரன்”, “இந்து” முதலிய பார்ப்பனீயப் பிரசார பார்ப்பனப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக் கும். “இந்து”, “சுதேசமித்திரன்” இல்லாத ரீடிங்குரூம் ஒரு ரீடிங்கு ரூமாகுமா என்று சொல்லிவிடுவார்கள். தங்கள் ரீடிங்கு ரூமுக்கு மெயில் பத்திரிகை வருகிறது என்று பெருமையும் பேசிக் கொள்வார்கள். ஆனால், “திராவிடன்”,...

மகாத்மாவின் நிலை 0

மகாத்மாவின் நிலை

காந்தி அடிகளின் திரேக நிலையும் மனப்பான்மை நிலையும் அசை வுற்றுப் போய்விட்டது என்பது அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயலா மூல மாகவும் அவர் அடிக்கடி வெளிப்படுத்தும் அபிப்ராயம் மூலமாகவும் நன்கு வெளியாகிறது. அவருக்கு மன உறுதியுள்ள காலத்தில் காயலாவே ஏற்படுவ தில்லை. ஏற்பட்டாலும் இயற்கை முறைகளிலேயே சவுக்கியப்படுத்திக் கொள்வார். இப்பொழுதோ அவருக்கு கொய்னாவும் இஞ்சக்ஷனும் தேவை யாய்ப் போய்விட்டது. ஆதலால் இயற்கை சிகிச்சையில் உள்ள உறுதி ஆட்டம் கொடுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அதுபோலவே ராஜீய விஷயத்தில் இருந்த உறுதிகளும் ஆட்டம் கொடுத்து விட்டதாகவே கருத வேண்டியதாய் விட்டது. மகாத்மா ஜெயிலில் இருந்து வந்தவுடன் இருந்த மனநிலையும், ஸ்ரீமான்கள் தாஸ், நேரு இவர்கள் கேட்டுக்கொண்ட பின் ஏற்பட்ட மனநிலையும், கல்கத்தா ஒப்பந்த மனநிலையும், பாட்னா ஒப்பந்த மனநிலையும், தான் ஓய்வு எடுத்துக் கொண்ட மனநிலையும், தனக்கு நம்பிக்கையில்லாத திட்டத்திற்கு தான் தன்னால் கூடிய உதவி செய்வதாகச் சொல்லும் மனநிலையும் பார்த்தால் தயவு தாக்ஷண்ணியம்,...

தற்கால நிலை    அரசியலும் சமூகஇயலும் 0

தற்கால நிலை அரசியலும் சமூகஇயலும்

கனவான்களே! அரசியலும், சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களை பத்திரிகை மூலம் தெரிந்திருப்பீர்கள். அதாவது, அரசியல்வேறு சமூக இயல் வேறு என்பதாக இரண்டுமே தனித்தனி இயல்கள் கிடையாது. இவ்விரண்டும் வேறு வேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும் சமூக இயல் என்றாலும் இரண்டும் ஒரு நாட்டின் ஒரு சமூகத்தின் முன்னேற் றத்திற்குத்தானே யல்லாமல் வேறு காரியத்திற்கல்ல. எனவே ஒரு நாட்டின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று வைத்துக்கொண்டு அரசியல் என்றால் அதில் சமூக முன்னேற்றம் இல்லாமலிருக்க முடியாது. அது போலவே சமூக இயல் என்றாலும் அரசியல் முன்னேற்றம் அதில் இல்லாமலிருக்க முடியாது. இரண்டும் தனித்தனி பிரிக்கப்படாத தன்மை யுடையது. நமது நாட்டில் இப்போது இவ்விரண்டும் வேறு வேறாக காணப்படுவதின் காரணம் உண்மை யான அரசியல் தொண்டும் உண்மையான சமூக இயல் தொண்டும் இல்லாமல் வெறும் வேஷத்தில் பாமர மக்களை ஏய்த்து, சிலர் தங்கள் சுயநலத்தை வளர்க்கவும் பாடுபடுவதினால், அதாவது நம் நாட்டு...

தலைவர்களின் யோகம் 0

தலைவர்களின் யோகம்

சட்டசபை வோட்டுப் பிரசாரத்திற்கு µ 30 ரூபாய் சம்பளத்திலும் µ 30 ரூபாய் பத்தாவிலும் ஆக µ 60 ரூபாயில் பிரசாரகர்களை நியமிக்க தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அதன் அக்ராசனருக்குப் பூரண அதிகாரம் கொடுத்திருக்கிறது. இனி தேசியத் தொண்டர் என்போருக்கு இது கை முதலில்லாத வியா பாரமாய்ப் போய்விட்டது. ஒத்துழையாமை மும்மரமாக நடந்த காலத்தில் ஆவேசத்தின் காரணமாய் ஜெயிலுக்குப் போய்வந்து பட்டணங்களிலும், கிராமந்தரங்களிலும் செல்வாக்குப் பெற்று இப்போது கஞ்சிக்கில்லாமல் திருட வும், ஒருவரிடம் கூலி வாங்கிக் கொண்டு ஒருவரைத் திட்டவும், அடிக்கவும் செய்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது தொண்டர்களின் யோகம்தான். ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் போன்ற தலைவர்கள், இப்படி ஒரு தீர்மான மில்லாமலிருக்கும் போதே இம்மாதிரியான தொண்டர்களைக் கொண்டு தலைவராகியிருக்க, காங்கிரஸிலே இம் மாதிரி ஓர் தீர்மானமும் அதன் அதிகா ரமும் அவர் கையிலே இருக்க ஏற்பட்டதானது, தொண்டர்களின் யோகத்தை விட தலைவர்களின் யோகமே பெரிதெனச் சொல்ல...

பார்ப்பனர் அக்கிரமம் 0

பார்ப்பனர் அக்கிரமம்

பார்ப்பனர்கள் உத்தியோகத்திலும் சட்ட சபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், பெரிய ஜமீன்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங் கள் இன்னவை என்பது நமது மக்களுக்கு சரிவர விளங்குவதேயில்லை. ஏதோ அவர்கள் படித்தார்கள். அதனால் உத்தியோகம் பார்க்கிறார்கள். யார் உத்தியோகம் பார்த்தால் தான் என்ன, யார் சட்டசபைக்கு போனால் தான் என்ன, யார் கவுன்சிலர் ஆனால் தான் என்ன என்பதாக தர்ம நியாயம் பேசி விட்டு பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள். இந்த ஏமாளித்தனத்தைப் பார்த்தே பார்ப்பனர் களும் நம்மவர்களை சுலபமாய் ஏமாற்றி பதவி பெற்று நம்மையே அழிக்கப் பாடுபடுகின்றார்கள். எந்தப் பதவியில் பார்ப்பனர் இருந்தாலும் அதன் மூலம் நமது கழுத்தை அறுக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதை நமது ஜனங்கள் உணர்வதே இல்லை. அல்லாமலும் நம்மில் அநேகர் கொஞ்சமாவது சகோதர அபிமானமின்றி மானம் வெட்கம் எல்லா வற்றையும் துறந்து பார்ப்பனர்களுக்கு...