Author: admin

மேட்டூர் திட்டப் புரட்டு 0

மேட்டூர் திட்டப் புரட்டு

சட்டசபையில் கோவை ஸ்ரீமான்கள் ராவ் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் கேள்வியும், சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் பதிலும், சி.எஸ். ஆர். முதலியார்:- மேட்டூர் அணைக்கு அஸ்திவாரம் வெட்ட வாங் கப் போகும் குறிப்பிட்ட மாதிரி இயந்திரம் தாங்கள் வாங்க உத்தேசித் திருக்கும் கம்பெனியில் மாத்திரம் தான் கிடைக்கக் கூடியதா? அல்லது வேறு கம்பெனிகளிலும் கிடைக்குமா? சர்.சி.பி. அய்யர் :- அது ஒரு குறிப்பிட மாதிரி என்று நான் நினைக்கவில்லை. இந்த குழிதோண்டும் இயந்திரம் மிகவும் பேர்போனது, சுக்கூர் பம்பாய் முதலிய இடங்களில் குழி வெட்ட இதையே உபயோகிக் கிறார்கள். ( மற்ற இடத்தில் இது போன்றது கிடைக்குமா கிடைக்காதா என்று முதலியார் கேட்டதற்கு பதில் இல்லை.) சி.எஸ்.ஆர். முதலியார் :- அது ஒரு குறிப்பிட்ட மாதிரியாய் இல்லா மல் சாதாரணமானதாயிருந்தால் தாங்கள் ஏன் மற்ற கம்பெனிகளிலிருந்தும் அதன் விலையை தெரிந்து விலை குறைவாய்க் கிடைக்கும் இடத்தில்...

வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை 0

வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை

புதிய சீர்திருத்தத்தின்படி அரசியலில் மகமதியர்களுக்கு கொடுத்திருக்கும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக சென்னை பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வருவதும் தங்கள் பணச் செலவில் சில மகமதி யர்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு அவர்களுக்கு தேர்தல்களில் தாங்கள் உதவி செய்து மகமதிய சமூகத்திற்கு அனுகூலமில்லாமல் தங்களது சுயநலத்திற்காக அவர்களை உபயோகித்து வருவதும் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் டில்லியில் இது விஷயமாய்க் கூட்டம் கூடியதில் தங்களுக்கு வகுப்புவாரித் தொகுதி வேண்டாம் என்றும், கலப்புத் தொகுதியில் தங்களுக்கு என்று சில ஸ்தானங்கள் ஒத்தி வைத்தால் போதுமென்றும், சில மகமதியர்கள் ஒப்புக்கொண்டதாக விஷயங்கள் வெளியாயிருக்கின்றன. ஆனால் பல நிபந்தனைகளின் மேல் அம்மாதிரி ஒப்புக்கொண்டதாக பின்னால் விஷயங்கள் வெளிவருகின்றன. ஆனால் பல சுவாதீன முஸ்லீம்களும் சமூக விஷயத்திலும் மார்க்க விஷயத்திலும் அபிமானமும் பொறுப்பும் உள்ள முஸ்லீம்களும், இந்த விஷயத்தை ஆnக்ஷபித்து தங்களுக்கு இப்போதுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அதாவது முஸ்லீம்களாலேயே தெரிந்தெடுக் கும் பாத்தியமே வேண்டுமென்று சொல்லி வருவதோடு மேல்படி ஒதிக்கி வைக்கும்...

வேண்டுகோள் 0

வேண்டுகோள்

தஞ்சை ஜில்லாவில் சுற்று பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப்பிற்கிரையாக்கியதாக ‘திராவிடன்’ பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆnக்ஷபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு மனித சமூகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங்களையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதம் கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம் மாதிரியான சம்பவங் கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்ல வென்றே நினைக்கிறோம். யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடங்கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மையிருந்தால் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும் பேசவும்...

சுயராஜ்யக் கட்சியாரின் சமாதானம் 0

சுயராஜ்யக் கட்சியாரின் சமாதானம்

சுயராஜ்யக் கட்சியார் என்கிற தமிழ் நாட்டுப் பார்ப்பனக் கட்சியாரின் பூளவாக்கு சென்ற மாதம் சட்டசபை வரவு செலவு திட்டத்தின் போது வெளியாய் விட்டதால், அதை மறைக்க என்னென்னமோ தந்திரங்களும் மந்திரங்களும் செய்கிறார்கள். என்ன செய்தும் அதை மறைக்க மறைக்க நாற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. இவர்களின் நடவடிக்கையைப் பற்றி இவர்களுக்கு உதவி செய்து வந்த தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தேசிய பத்திரிகைகள் என்று சொல்லப்படும் “தமிழ்நாடு” “நவசக்தி” “தேசபந்து” முதலிய பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும் “சுயராஜ்யா” “ஹிந்து” முதலிய பார்ப்பன பத்திரிகைகளும், “வசுமதி” “மராட்டா” முதலிய வெளி மாகாண பத்திரிகைகளும் கண்டித்திருக்கும் சாராம்சத்தை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். இதுகளிலிருந்து “சுதேசமித்திரன்” என்கிற ஒரு பார்ப்பனப் பத்திரிகை போக, மற்றபடி பார்ப்பனர் தயவில் நடக்கும் பத்திரிகைகள் கூட வேஷத்திற்கானாலும் கண்டிக்காமல் விடவேயில்லை. ஆகவே இப்பார்ப்பனர்களின் நடத்தை மோசமான தென்பதும் வஞ்சகமான தென்பதற்கும் இனி யாரும் சந்தேகப்பட இடமேயில்லை. ஆனால் இக்கூட்டத்தார் கொஞ்சமும் தங்கள் காரியத்திற்கு வெட்கப்படாமல்,...

தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும் 0

தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்

இன்றைக்கு 40, 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையை விட தற்பொழுது தேசம் மிகக் கேவல நிலையடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ் மகாசபை, ராஜீயத் தலைவர்கள்,முட்டுக்கட்டைத் திட்டம், சர்க்காருடன் யுத்தம் முதலியவை ஏற்பட்டதின் பலன் சர்க்காரின் வரியும் குடிகளின் வறுமையும் அதிகரித்ததேயொழிய வேறு நாட்டின் நலத்திற்கானவை ஒன்றும் ஏற்பட வில்லையென்றும், தேசத்தின் பெயரையும் மகாஜனங்களின் பெயரையும் சொல்லிக் கொண்டு படித்தவர்களில் ஒரு வகுப்பார் தங்கள் சுயநலத்துக்கான சவுகரியங்களை ஏற்படுத்திக் கொள்ளவே ராஜீயக் கிளர்ச்சி செய்து வந்தார் கள் என்றும், நாடு வறுமையினின்றும் விடுபட அவர்கள் ஒன்றும் செய்யவே யில்லையென்றும், இந்நிலையில் ராஜீய சுதந்திரம் கிடைக்கினும் தேசம் விடுதலை பெற்று விட்டதாகக் கருதப்படமுடியாதென்றும், சுயராஜ்யம் ஏழை களுக்கே மிக அவசியமானதென்றும், தனவந்தர்களுக்கும் உயர்ந்த அந்தஸ் திலிருப்பவருக்கும் சுயஆட்சியினால் இப்பொழுதுள்ளதை விட அதிகமான அநுகூலங்கள் ஏற்பட இடமில்லையாதலால் அவர்களுக்கு தேசவிடுதலை யைப் பற்றிய கவலை ஏற்படாதென்றும், ஏழை மக்களின் நிலைமை மேன்மை படுத்துவதே சுயராஜ்யத்துக்கான வேலை செய்வதாகும்...

காங்கிரஸ் 0

காங்கிரஸ்

காங்கிரஸ் என்னும் பதத்திற்கு கூட்டம் என்பது பொருள். நமது நாட்டில் இது அரசியல் சம்பந்தமான கூட்டமென்பதற்கே குறிக்கப்படுகிறது. அரசியல் என்பதற்கு பொருள் அரசாட்சி, ராஜரீக முறை என்று இருந்தாலும் அது அரசாங்கத்துடன் ராஜரீக முறை விஷயமாய் செய்யும் கிளர்ச்சி என்ப தற்கே சொல்லப்படுகிறது. காங்கிரஸ் என்பதும் அரசியல் கிளர்ச்சி என்பதும் நமது நாட்டு வார்த்தையும் தத்துவமும் அல்ல. அது மேல் நாடுகளில் பாமர மக்களின் பேரில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற விஷயமாய் ஏற்படும் கிளர்ச்சிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதே அல்லாமல் இங்கே சொல்லிக் கொள்ளப்படுகிற சுயராஜ்யம், சுதந்திரம் என்கிற போலி வார்த்தைகளுக்கும் அதன் தத்துவத்திற்கும் ஏற்பட்டதல்ல. மேல் நாடுகளில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கு சரியான பொருளே ஒரு தேசம் அனேகமாய் அரசன் என்பவனால் ஆளப்படாமல் அந்தந்த நாட்டு மக்களாலேயே நிர்வகிக் கப்படுவது. நமது நாட்டில் முதல் முதல் அதாவது காங்கிரஸ் ஆரம்பித்த காலத்தில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கே இன்ன பொருள்...

பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் 0

பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம்

ஆரம்பப் பிரசங்கம் சகோதரிகளே! சகோதரர்களே! நான் இன்று பேசத் துணிந்த விஷயமாகிய பார்ப்பனீயப் புரோகித பகிஷ்கார விஷயம் சாமானியமானதல்ல. ஆயிரக்கணக்கான வருஷங் களாய் அநேக தலைமுறையாய் நம்மவர்கள் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டு மதத்தின் பேரால் ஆத்மார்த்தம் என்றும், மோக்ஷம் என்றும், தர்மம் என்றும், புண்ணியம் என்றும், கடமை என்றும் கருதி சுயமரியாதை இழந்து நடந்து வந்திருக்கும் அர்த்தமற்ற ஒரு காரியத்தைப் பற்றி உங்கள் முன் பேசுவதென்பது சுலபமான காரியமென்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இம்மூட நம்பிக்கையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளும் நமது மக்கள் ரத்தத்திலேயே கலந்து விட்டது. இதுகளைப் பற்றி யோசிப்பதுவே மிகப்பாவம் என்பதாக கருதப்படுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன் இம்மாதிரி விஷயங்களுக்கு ஒரு கூட்டம் கூட்டுவது என்றால் கூட்டத்திற்கு வந்து என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்கு கூட மனிதர்களுக்கு பொறுமை இருக்காது. ஒரே அடியாய் “காலம் கெட்டுவிட்டது, கலியின் வக்கிரம் இம்மாதிரி நாஸ்திகம் வளருகிறது” என்று எவ்வளவோ வெறுப்பார்கள். ஆனால் இப்போது...

தஞ்சை ஜில்லா போர்டு 0

தஞ்சை ஜில்லா போர்டு

தஞ்சை ஜில்லா போர்டு, போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக் கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான் இவ்வித சௌகரியம் செய்ய முடிந்தது. இதற்காக ³ போர்டாரைப் பெரிதும் பாராட்டுகிறோம். குடி அரசு – பெட்டிச் செய்தி – 27.03.1927

“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லிதிரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம் 0

“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லிதிரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்

நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப் பட்டிருக்கின்றன. நமது சர்க்கார் உத்தியோகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வ ளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங் களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால்...

புரசைவாக்கம் பார்ப்பனரல்லாத                     வாலிபர் சங்கம் 0

புரசைவாக்கம் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம்

அன்புள்ள வாலிபர்களே! அவைத் தலைவர் என்னைப்பற்றி பெருமைபடுத்தி பேசிய தெல்லாம் அவர்கள் என்மீது கொண்ட அன்பேயன்றி வேறல்ல. அவர்கள் சொல்லிய வற்றிற்கு நான் சிறிதும் பொருத்தமுடையவனன்று. ஆனால் எனது கொள்கை களையும் தொண்டுகளையும் ஆதரித்து பேசியிருக்கின்றதிலிருந்து என் கொள்கைக்கு சிறிதாவது நாட்டில் மதிப்பிருக்கிறதென்றும் மக்கள் ஆதரிக் கிறார்களென்றும் ஏற்படுவதோடு, இதனால் என் தொண்டுக்குப் பின் பல மிருக்கிற தென்றும் நான் உணர்கிறேன். வாலிபர்கள் எனது எண்ணமெல்லாம் எப்பொழுதும் வாலிபர்கள்களாகிய உங்கள் மீதுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏனெனில் மோட்ச லோகத்தில் ஒரு காலும் பூலோகத்தில் ஒரு காலும் வைத்துக் கொண்டு வீண் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கிற பெரியோர்களைப் பற்றி எனக்கு அதிக கவலை இல்லை. ஆகையால் வாலிபர்களாகிய உங்கள் முன் பேச எனக்கு அளவில்லா ஆசை யுண்டாகின்றது. சமீபத்தில் இரண்டு வாலிப மகாநாடுகள் கூடப் போகின்றன. அவைகளில் ஒன்று அகில இந்திய வாலிபர் மகாநாடென்றும், மற்றொன்று பார்ப்பனரல்லாதார் வாலிபர் மாகாண மகாநாடு என்றும்...

சூத்திரன் 0

சூத்திரன்

“தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, மெள்ள மெள்ள வேட்டை நாய் ஆகிவிட்டது” என்பதாக தமிழ் நாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. அதுபோல் தற்காலத்திய நமது அரசாங்க நிருவாகம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை விஷயத்தில் வேண்டுமென்றே கொடுமை செய்து கொண்டு வரத் துணிந்து விட்டதென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அதிலும் இது சமயம் தமிழ் மக்கள் பெரும்பாலும் அரசியல் முதலியவைகளைக் கூட லக்ஷியம் செய்யாமல் தங்கள் சுயமரியாதையைப் பெருக்குவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு உயிரைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கம் இவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற தன்மையாய் நடக்க கூடியதாய் இருந்தால், சாதாரண காலங்களில் எப்படி நடக்க மாட்டாது என்பதைப் பொதுமக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தடவை கூட்டப்பட்ட சென்னை சட்டசபைக் கூட்டத்தில், ஸ்ரீமான் சல்டானா என்கிற ஒரு சட்டசபை அங்கத்தினர் ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் சென்ற ஆறு மாதங்களில் எத்தனை ஸ்தானங்கள் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட தென்றும், நியமனம் செய்யப்பட்டவர்கள் எந்த...

பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம் 0

பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம்

சென்ற வாரத்தில் சென்னை சட்டசபை வரவு செலவு விவாதத்தின் போது பத்திரப்பதிவு இலாக்கா சம்மந்தமாக ஜனங்களுக்கு இப்போது இருக்கும் கஷ்டத்தை நீக்கும்படி அதாவது அதிகமாயிருக்கும் கட்டண விகிதத்தை குறைக்கும் படிக்கும் முக்கியமாக வெளியில் வர சௌகரியப் படாத பெண்களின் சௌகரியத்தை ஒட்டியும் காயலா முதலியவைகளால் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு படுத்தப் படுக்கையில் கிடக்கும் ஏழை குடியானவர்களுக்கும் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமானால் ரிஜிஸ்டர் கட்டணம் முன்னையை விட இப்போது சரிபங்கு அதிகமாய் விட்டதால் அதாவது சப் ரிஜிஸ்ட்ரார் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் 10 ரூ. கட்டண மாயிருந்தது. இப்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதை குறைத்து ஜனங்களுக்கு சவுகரியம் செய்யும்படி ஒரு தீர்மானம் ஜஸ்டிஸ் கக்ஷியாரால் கொண்டு வரப்பட்டது. இதை அறிந்து சுயராஜ்யக் கக்ஷியார் இப் பெருமை ஜஸ்டிஸ் கக்ஷிக்கு விடக்கூடாது என்பதாக தாங்களும் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்ததாய் ஜனங்களுக்கு காட்டுவதற்காக வேஷத்திற்காக ஒரு தீர்மானம் அனுப்பி யிருந்தார்கள். அக்ராசனர்...

ஸ்ரீ ஜோசப் கற்ற பாடம் 0

ஸ்ரீ ஜோசப் கற்ற பாடம்

ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் மதுரையில் ஒர் பிரபல பாரிஸ்டர். நல்ல குடும்பத்தில் பிறந்து நல்லொழுக்கத்தில் சிறந்து அதிக வருமானமும் வக்கீல் தொழிலும் உடையவராய் மதுரைக்கு ஓர் மாமணியாய் விளங்கி வந்தவர். சேலம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் மேல் மதுரையில் கேசு ஏற்பட்ட போது, பொது வாழ்வில் உணர்ச்சி மேலிட்டு தீவிரமாய் ஜார்ஜ் ஜோசப் இறங்கி இடைவிடாத ஊழியம் புரிந்து வந்திருக்கிறார். மதுரை மில்களிலுள்ள தொழி லாளர்களின் கஷ்ட நஷ்ட காலங்களிலும், வேலை நிறுத்த காலங்களிலும் அவர்களுடன் கலந்து அதில் ஈடுபட்டு தம்மாலான சகல உதவிகளையும் தியாகத்துடன் செய்து வந்திருக்கிறார். மதுரை ஜில்லா கள்ள ஜன சமூகத்தா ருக்கு ஏற்பட்ட கொடுமையான சட்டதிட்டங்களுக்கு அனாவசியமாய் அவர் கள் இரையாகாதிருக்கும்படி சாக்கிரதையாய் கவனித்து வந்தார். அவர்க ளுடைய சத்தியாக்கிரகத்தின் போதும், அவர்களுடைய சில கிராமங்களைப் போலீசார் கொளுத்தி பலரை சுட்டுக் கொன்று பலரைக் கைது செய்து பெண்டு பிள்ளைகளையும் இம்சித்து வந்த அந்தக் காலத்தில்...

பார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும் 0

பார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்

நம்நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் நம் மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்பட வேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக்காலத்தில் உண்மையாயும், யோக்கிய மாயும் நடந்து வந்த சன்னியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால், இப்போது இப் பெரும் பொறுப்பேற்ற பொது நல ஸ்தாப னங்கள் எந்நிலையிலிருக்கிறது? என்பதும், இதை யார் அனுபவிக்கிறார் கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக்களாகிய சன்னியாசிகள் என்போரின் யோக்கி யதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்லவேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொது நலத்திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா? என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம் மடாதிபதிகள் தங்கள் சுயநலத்துக்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடும்...

சமய சீர்திருத்தம் 0

சமய சீர்திருத்தம்

சகோதரர்களே! “சமய சீர்த்திருத்தம்” என்பது பற்றி பேசுவது என்பது என்னைப் போன்ற ஒருவருக்கு இலேசான காரியமல்ல. அதற்குத் தக்க ஆராய்ச்சி வேண்டும். சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசவும் எனக்குப் போதுமான திறமையில்லை. நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லை. கடந்த ஆறேழாண் டுகளாக அரசியலில் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நடைபெற்று வந்த காங்கிரசில் நான் உழைத்து வந்தது அன்பர் பலர் அறிவர். அரசியலின் மூலம் நாட்டின் சீர்திருத்தத்திற்கு அரும்பாடு பட்டும் யாதொரு பலனும் அடைய இயலாமல் போனதாலும், அதற்கு காரணம் சமய சம்மந்தமான கொள்கைகளே தடை என்று உணர்ந்ததாலும் அக்குறைகளை நீக்க உழைப்ப துதான் அவசியமெனத் தோன்றிய பின்னர் அவ்வழியில் உழைத்துப் பார்க்க லாமென முற்பட்டேன். சமயத்தின் பேரால் உண்டாகும் கஷ்ட நஷ்டங் களையும் விடுதலைக்கு விரோதமானவைகளையும் மக்கள் சுயமரியாதை யற்ற வாழ்க்கையில் துன்புறுவதையும் ஒழிக்கவே முதலில் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் விடுதலை அடைய முடியும். நம் நாடு விடுதலையடைய முடியாததற்கும்...

“ திராவிடன் ” 0

“ திராவிடன் ”

“திராவிடன்” பத்திரிகையை நாம் ஏற்று அதற்கு பத்திராதிபராயிருந்து “குடி அரசு” கொள்கையின்படி நடத்தலாமா என்கிற விஷயத்தில் பொது ஜனங்களின் அபிப்பிராயத்தை அறிய “வேண்டுகோள்” என்று தலையங்க மிட்டு ஒரு விண்ணப்பம் 6.3.27 தேதி “குடி அரசின்” தலையங்கமாக எழுதி இருந்தோம். பொறுப்புள்ள நண்பர்களை நேரிலும் கலந்து பேசினோம். அதற்கு இதுவரை ஐந்நூற்றுச் சில்லரை கனவான்கள் தனி முறையிலும் 7, 8 சங்கங்களும் 3, 4 பொதுக் கூட்டங்களும் தீர்மான மூலமாகவும், தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் 500 பேர் வரையிலும் மற்றும் சங்கங்களும் பொதுக்கூட்டங்களும் “திராவிடனை” ஏற்றுக் “குடி அரசு” கொள்கைப்படி நடத்தும்படியும் 20 பேர்கள் ஒவ்வொரு வர் ஒவ்வொரு விதமாக அதாவது நிபந்தனை பேரில்தான் நடத்த வேண்டும் என்றும், உடல் நலம் கெட்டு போகும் என்றும், “குடி அரசு” குன்றி விடும் என்றும், வேறு பெயர் மாற்ற வேண்டும் என்றும், பிரசாரத்திற்கு போதுமான காலம் இல்லாமல் போய் விடுமென்றும்...

வகுப்பு வாதம் ஒழிந்ததா? 0

வகுப்பு வாதம் ஒழிந்ததா?

சென்னையில் பார்ப்பனர் கையாளாக இருந்து வந்த ஸ்ரீமான் பக்தவத் சலு நாயுடுவைப்பற்றி பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர் கார்பரேஷனில் இருக்கும் வரையும் பார்ப்பனர்கள் இஷ்டப்படி கமிஷனரை வைவதையே தொழிலாகக் கொண்டவர். அவருடைய புத்திசாலித்தனம் அறிய வேண்டு மானால் ஒரு விஷயத்தில் பார்க்கலாம். அதாவது கமிஷனர் முனிசிபல் பள்ளிக்கூடங்களுக்கு புஸ்தகங்கள் வாங்குவதில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெள்ளைக்காரர் கம்பெனியிலும் பார்ப்பனர் கம்பெனியிலும் வாங்கி வருவதைத் தெரிந்தும், ஒரு நாயுடு கம்பெனியில் நூறு ரூபாய் சில்லரைக்கு புஸ்தகம் வாங்க நேரிட்டதற்காக ஸ்ரீ பக்தவத்சலு நாயுடு அவர்கள், புஸ்தகக் கடைக்காரரும் கம்மீஷனரும் நாயுடுவாய் இருப்பதால் தானே இந்த பள்ளிக்கூடப் புஸ்தகங்கள் நாயுடு கம்பெனியாரிடம் வாங்கப் பட்டது என்பதாய் ஒரு கேள்வி கேட்டார். இந்த கேழ்வி கேட்ட ஸ்ரீ பக்தவத் சலமும் ஒரு நாயுடுதான் என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண் டால் இந்தக் கேள்வியில் எவ்வளவு புத்திசாலித்தனமிருக்கும் என்பதை அறியலாம். அவ்வளவு தூரம் பார்ப்பன மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த...

இனி செய்ய வேண்டியது என்ன? 0

இனி செய்ய வேண்டியது என்ன?

மத்திய மாகாண அரசாங்கத்தார் மந்திரிகளுக்கென்று மாற்றப்பட்டி ருந்த இலாக்காக்களை எடுத்துக்கொண்டு இனிமேல் மந்திரிகள் இல்லாமலே சகல நிர்வாகத்தையும் தாங்களே நடத்துவதென்று தீர்மானித்து விட்டார்கள். இதன் பலனாய் இரட்டையாட்சி ஒழிந்ததென்றே வைத்துக் கொள்ளலாம். மத்திய மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஒழித்த பெருமையை சுயராஜ்யக் கக்ஷியாருக்கே கொடுத்து விடலாம். சுயராஜ்யக் கட்சியாருக்கு இந்தப் பெரு மையை உண்டாக்கிக் கொடுத்த பெருமையை மகாத்மா சொற்படி நடப்பதாகச் சொல்லிக்கொண்டு சுயராஜ்யக் கட்சிக்கு உதவி செய்த ஸ்ரீமான் முதலியார் போன்ற உண்மைச் சிஷ்யர்களுக்குக் கொடுத்துவிடலாம். ஆனால் தேசத் திற்கு இதனால் என்ன லாபம். மந்திரிகளின் சம்பளம் சர்க்காருக்கு இதனால் மீதியாய் விட்டது. இரட்டை ஆட்சி ஒழிந்து சர்க்காரின் எதேச்சாதிகார ஒத்தை ஆட்சி உறுதியாய் விட்டது. சுயராஜ்யம் கிடைத்து விட்டதா? உரிமை கிடைத்து விட்டதா? சுயராஜ்யத்திற்காவது உரிமைக்காவது ஏதாவதொரு அறிகுறியாவது ஏற்பட்டிருக்கிறதா? இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு இரட்டை ஆட்சியை ஒழிக்கப் போன சுயராஜ்யக் கட்சியாருக்கு மறுபடியும் சட்டசபையில் என்ன...

சமாதானம் 0

சமாதானம்

சென்ற வாரம் ‘எது வீணான அவதூறு’ என்னும் தலையங்க முடிவில், ‘மற்ற விஷயங்களைப்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறோம்’ என்று எழுதி யிருந்தோம். ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கடிதம் கிடைத்து. அவர்களை நேரிலும் பார்த்து பேச நேர்ந்தது. அவைகளில் சம்பாஷணைகளின் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப்பார்த்தவுடன் மற்றவர்களுக்கு எப்படி படக்கூடுமோ அந்த உணர்ச்சியோடு கூடி அந்த சம்பாஷணை நடைபெறவில்லை என்று சொன்னார். உதாரணமாக ‘ஊழியன்’ பத்திரிகையில் கண்ட சம்பாஷணையில் ‘ பிராமணர்களைக் காட்டிலும் தகுதிபெற்று கதர்வேலை செய்ய முன்வரும் பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாக வைத்திருக்கிறேன்’ என்று காணும் வாசகம் அம்மாதிரி கருத்தோடு நான் சொல்லவில்லையென்றும் பிராமணர்களைவிட பிராமணரல்லாத தொண்டர் களைத்தான் ஏற்றுக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதாகவும், இனியும் அம்மாதிரி வழக்கத்தையே கையாளப்போவதாகவும் சொன்னார் என இம் மாதிரி இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட்டார். அன்றியும் முக்கியமான விஷயங்களில் நமது கொள்கைக்கு அவரது உள்ளத்தில் எவ்வித மாறுபாடும் இருப்பதாய்க் காணப்படவில்லையாத லாலும் அதை...

அரசியல் வாழ்வு 0

அரசியல் வாழ்வு

என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா? மகாத்மா காங்கிரசில் தலையிட்டு ஒத்துழையாமை கொள்கையை நாட்டில் பகிஷ்காரத் திட்டத்தையும் நிர்மாணத் திட்டத்தையும் நிறைவேற்ற உழைத்து வந்த காலத்தில் நாமும் நம்போன்ற அநேகரும் யாதொரு நிபந்தனையுமில்லாது குருட்டு நம்பிக்கையுடன் மகாத்மாவை பின்பற்றி உழைத்து வந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்குத் தெரியாமலிருக்காது. மகாத்மா ஜெயிலுக்கு போனவுடன் மேற்கண்ட பகிஷ்காரத் திட்டத்திற்கும், நிர்மாணத் திட்டத்திற்கும் விரோதமாய் நமது நாட்டு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வந்த காலத்திலும் அதுகளுக்கு இடம் கொடுக்காமல் காங்கிரஸ் கட்டளை என்றும், காங்கிரஸ் கமிட்டி கட்டளை என்றும் கூட பார்க்காமல் ³ திட்டங்களை நிலைப்பிப்பதிலும், நிறைவேற்றுவதிலுமே வேலை செய்து வந்ததும் அநேகருக்கு தெரிந்திருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில் நம்மை நமது எதிரிகளான அரசியல் பார்ப்பனர்களில் பலர் காங்கிரசுக்கு துரோகி என்றும், தேசத் துரோகி என்றும், காங்கிரசில் இருக்க யோக்கியதையற்றவன் என்றும், காங்கிரஸ் இருப்பதா இறப்பதா? என்றும் காங்கிரஸ் கமிட்டியை விட்டு நம்மை நீக்கிவிட...

திருவார்ப்பு சத்தியாக்கிரகம் 0

திருவார்ப்பு சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் திருவார்ப்பு என்கிற இடத்தில் தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் தெருவில் நடக்க சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம், அம்மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளுமுன் அச்சத்தியாக்கிரகத்தை மகாத்மா நிறுத்துமாறு உத்திரவிட்டிருப் பதாய் தெரிகிறது. நீல் சத்தியாக்கிரகத்தை விட திருவார்ப்பு சத்தியாக்கிரகம் அவ்வளவு மோசமானதா என்பது நமக்கு விளங்கவில்லை. மகாராணியும், போலீஸ் கமிஷனரும் நன்மை செய்வார்கள் என்று தாம் அறிந்ததாக மகாத்மா தெரிவித்திருக்கிறார். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தில் சர்க்கார் நாணயம் இன்னது என்று தெரிந்து போய் விட்டது. வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போதும் மகாத்மா ராணியிடமும், திவானிடமும், போலீஸ் கமிஷனரிடமும் பேசி விட்டுத்தான் போனார். கடைசியாக அது வைக்கத்திற்கு மாத்திரம் முடிவதே பெரிய கஷ்டமாய் போய்விட்டது. மற்ற இடங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இதனால் லாபம் என்ன. ஜனங்களுடைய முயற்சியையும் உணர்ச்சியையும் கட்டுப்பாடாய் எழுந்த ஆசையையும் இம்மாதிரி தடங் கல்கள் அழித்து விடுகின்றன. மறுபடியும் ஆரம்பிப்பதென்றால் இலேசான...

சத்தியமூர்த்தியும் கதரும் 0

சத்தியமூர்த்தியும் கதரும்

சில மாதங்களுக்கு முன்னர் சேலத்திலே கதர் சாலையைத் திறந்து வைத்த சென்னை டாக்டர் சி. நடேச முதலியார் அதுசமயம் கதராடை அணிந்து வராமல் சுதேச பட்டுடைகளைத் தரித்திருந்ததைப்பற்றி பிராமண சிகாமணியான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எள்ளி நகையாடினார். அதாவது, டாக்டர் முதலியார் மில்லில் நெசவான பட்டாடை தரித்துக்கொண்டு கதர் சாலையைத் திறந்து வைத்ததானது, கொள்கைக்காக நெற்றியில் விபூதியும் வயிற்றுப் பிழைப்புக்காக வயிற்றில் நாமமும் தரித்திருப்பவன் கதையாக யிருக்கிறதென்று கூறினார். அதற்கு டாக்டர் முதலியார் இந்தியாவில் கையி னால் நெசவானாலும் ஆலை நெசவானாலும் இரண்டையும் சுதேசிய மென்றே தாம் கருதுவதாகவும் ஆகையால் சுதேசியத்தை ஆதரிக்க வேண்டியதே எங்கள் கொள்கை என்றும் உள்ளதை வெளிப்படையாகக் கூறினார். ஆனால் சத்தியத்திற்கே உழைக்கிறோமென்று சொல்லும் சத்திய கீர்த்தியின் பிள்ளைகளான சத்தியவந்தர் குலத்திலுதித்த நித்தியங்கத்தி “ஸ்ரீமான் சத்தியமூர்த்தி புதுவருஷத் திருநாளன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பெருங்கூட்டத்தில் முற்றிலும் பரதேசி மயமாய் விளங் கினார்” என்று “லோகோபகாரி”யில் பாரி எழுதியிருக்கிறார். இப்படியிருக்க,...

தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகம் 0

தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்து வந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் ‘சூத்திராள்’ என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்ட தாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பல தனிப்பட்ட வாலிபர்களும் பெரியோர்களும் தங்களை சத்தியாக்கிரகி களாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக்கொண்டும் தெரிவித்துமிருக் கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்ப தாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொ ழுது கேள்வி யாயிருக்கின்றது. சமீபத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல்லாத வாலிப...

“சுதேசமித்திர”னின் தேசபக்தி 0

“சுதேசமித்திர”னின் தேசபக்தி

பெருந்தேசபக்தர்களெனப் படாடோபம் செய்து வருகின்றவர்க ளான பிராமணர்கள் இந்தியாவின் சுயராஜ்யத்திற்காகப் பாடுபடுபவர்களல்ல வென்றும், அவர்கள் செய்துவரும் ஆரவாரமனைத்தும் தங்கள் இனத்தவர் களான பிராமணர்கள் மல்கிய பிராமண ராஜ்யம் நிலைநாட்டவேயல்லாமல் வேறில்லை யென்று நாம் பன்முறை கூறிவந்திருக்கிறோம். நாளடைவில் இவ்வுண்மை புலனாகிவருகிறதென்பதை அடியிற்காணும் உரைகளால் அறிந்து கொள்ளலாம். திரு. விபினசந்திரபாலகர் சமீபத்தில் நடந்த கல்கத்தா இந்து முஸ்லீம் சச்சரவைப் பற்றி எழுதுங் காலையில், இத்தகைய அமளி நாட்டில் பரவாதிருக்க வேண்டுமானால் விரைவில் சுய ஆட்சி கொடுக்க வேண்டு மென வரைந்து விட்டு, தற்சமயம் “சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்ட பொறுப்பும் மந்திரிகள் வசம் ஒப்புவிக்கப்பட்டால் அவர்கள் ஜாதி வேற்று மை பாராமல் சரியாக வேலை நடத்துவார்கள்” என்றும் எழுதியுள்ளார். ஒருவகையில் திரு. பாலரின் கருத்து போற்றத்தக்க தொன்றாகும். ஏனெனில் மந்திரிகள் ஜனங்களின் பிரதிநிதிகளாதலாலும் அவர்கள் பாமர மக்களிடம் நெருங்கிப் பழகியவர்களாதலாலும் நாட்டில் அமைதி நிலவ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்றாப்போல் ‘சட்டம்...

துர் ஆக்கிரகம் 0

துர் ஆக்கிரகம்

சென்னையில் சிலர் சத்தியாக்கிரகம் என்னும் பேரால் நீல் துரை உருவச் சிலையை உடைத்தெறிய வேண்டுமென்று சொல்லிக் கொள்வதை ஒரு பெரும் தேசாபிமானமெனக் கருதி சில வாலிபர்கள் மூலம் போலிக் கிளர்ச்சி ஆரம்பித்து அதற்காக பல வாலிபர்களையும் சிறைக்கு அனுப்பி யாய் விட்டது. சில பெண்மணிகளையும் சிறைக்கு அனுப்பியாய் விட்டது. மகாத்மா காந்தியும் இச் சத்தியாக்கிரகத்தை ஆதரித்து ஆசிர்வதித்ததாகவும் வெளிப்படுத்தியாகி விட்டது. வரப் போகும் காங்கிரசிலும் இதை ஒரு பெரிய அகில இந்திய விஷயமாக்கவும் வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. தவிரவும் இதற்குச் சிலர் ரகசியமாய்ப் பணம் கொடுத்தது, மகாத்மா கொடுத்ததாகப் பெயர் செய்ய முயற்சிப்பதாகவும் கேள்விப் படுகிறோம். இவ்வளவும் உண்மையாகவே நடந்ததாயிருந்தாலும் இதை ஒழுங் கான காரியமென்று ஒருக்காலும் நம்மால் சொல்ல முடியாது. ஒரு சமயம் மகாத்மாவே ஒரு சத்தியாக்கிரகி ஆக வந்து தன் கையால் சம்மட்டி கொண்டு நீல் சிலையை உடைக்க முன் வந்தாலும்கூட இவற்றைத் துராக்கிரக மென்றுதான் சொல்லுவோமே...

சட்டசபைக்கு ஆள் பிடிக்கிற                                             “ தேர்தல் கங்காணிகள்” 0

சட்டசபைக்கு ஆள் பிடிக்கிற “ தேர்தல் கங்காணிகள்”

தமிழ்நாட்டிலே நிலவும் பத்திரிகைகளில் பெரும்பாலும் தனது மனசாக்ஷிக்கு விரோதமாக எழுதி தன் சுயமரியாதையை இழந்து வருகின்றன. முதுகெலும்பில்லாமல் இருக்கும் இவைகள், எவ்வளவுதான் யோக்கியதை யாயிருப்பதுபோல – போலித்தனமாக கைவீசி காலுதறி நடப்பதாகப் பாவனை செய்துவரினும் அவைகளுக்கு முதுகெலும்பில்லாத தத்துவத்தை நாட்டார் அறியாமலிருக்க மாட்டார்கள். இப்பத்திரிகைகளெல்லாம் உண்மையறிய முடி யாமலோ, பலக்குறைவாலோ வேண்டுமென்றே சூழ்ச்சிக்காரர்கள் பக்கமாக வேயிருந்து வருகின்றன. ஆனால் பிறருடைய உதவியை நாடாது தன் கால் பலத்திலேயே நிற்கக்கூடிய பத்திரிகைகளில் ஒன்றாகிய நமது “நாடார் குலமித் திரன்” சுயராஜ்யக் கக்ஷியினுடைய சூழ்ச்சியின் உண்மை கண்டு தைரியமாய் வெளிவந்து எழுதியிருப்பதில் ஒருசிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். “சட்டசபைக்கு ஆள்பிடிக்கிற கங்காணிமார்கள் (சுயராஜ்யக் கக்ஷி யார்) தேசமெங்கும் உலாவித் திரிகின்றனர். . . சொற் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கீனமென்ற பழமொழி இவர்களுக்கே தகு மென்று மகாத்மா காந்தி மௌன யோகத்திலிருந்து விட்டார். நமது நேரு கங்காணி, தமது தோழர்களையெல்லாம் பிரிய விட்டு விட்டுத் துடித்துக் கொண்டிருக்கிறார்....

மேட்டூர் திட்டம் 0

மேட்டூர் திட்டம்

“ மேட்டூர் அணை திட்டம்” விஷயமாய் அதிலுள்ள ஊழல்களையும் தனிப்பட்ட வகுப்பினர் நன்மைக்காக நமது பணம் எவ்வெவ் வழிகளில் வீணாவதாயிருக்கிறது என்பதுபற்றியும் “ ஜஸ்டிஸ்” பத்திரிகை கொஞ்ச நாளைக்கு முன் பொதுவாக சில குறிப்பு எழுதி இருந்ததற்காக சட்ட மெம்பர் ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டசபையில் வெகு ஆத்திர மாகவும் ஆணவமாகவும் அலட்சியமாகவும் அப்பத்திரிகையை பேர் சொல்லாமல் மறைமுகமாய் அவமதித்துப் பேசியதும் “ இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேண்” என்று “ வீர முழக்கம்” செய்ததும் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதன் பேரில் “ ஜஸ்டிஸ்” பத்திரிகையானது அத் திட்டத் தின் உள் ரகசியங்களையும் புரட்டுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புட்டு புட்டு விளக்கி மேட்டூர் திட்டத்தின் புரட்டு என்கிற தலையங்கத்தில் 3, 4 வியாசங்கள் எழுதினதும், சர். சி.பி அவர்களை குற்றவாளியாக்கி விசாரணை வைக்க வேண்டுமென்று எழுதி வந்ததும் வாசகர்களுக்கு தெரிந் திருக்கும். அதின் பேரில் சர்.சி.பி. அவர்கள் பெட்டியில்...

மூட்டை சோதனை  பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு 0

மூட்டை சோதனை பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன் மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருடைய சட்டைப் பையிலி ருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காக வேண்டி அவர்க ளுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும் மடியையும் சோதனைப் போட்டுப் பார்த்ததாக ஒரு நிரூபர் எழுதியிருக்கிறார். இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்துவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர். இவர்கள் இருவரும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணா மல் போனதற்காக எந்தக் காரணத்தைக் கொண்டானாலும், தங்கள் மூட்டை யைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப்படுகிறோம். அல்லாம லும் இந்தப் பிராமணர்களுக்கு இவர்களைப் பரிசோதனை செய்யும்படி யானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு...

தொழிலாளர்கள் தற்கால காங்கிரஸ் தலைவர்களை நம்பக்கூடாது; அதில் சேரவும்கூடாது 0

தொழிலாளர்கள் தற்கால காங்கிரஸ் தலைவர்களை நம்பக்கூடாது; அதில் சேரவும்கூடாது

தொழிலாளர்கள் காங்கிரசில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக் கிறவரை அவர்கள் உலகத்தாராலும், அதிகாரிகளாலும், முதலாளிகளாலும் மனிதர்களாகப் பாவிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நமது முடிவும். இதைப் பல இடங்களில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம். சமீபத்தில் சென்னை சட்டசபைக்கு ஒரு தொழிலாளியை நியமிக்க சர்க்கார் பிரயத் தினப்பட்டதில் அப்பதவிக்கு மூன்று பேர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. ஒருவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் சொல்படி நடப்பாரோ, தொழிலாளிக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டாரோ என்பதாக சந்தேகித்து சில தொழிலாளர்கள் ஆnக்ஷபித்ததினால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர் ஸ்ரீ பெசண்டம்மை கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சிலர் ஆnக்ஷபித்ததால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர் பார்ப்பன அதிகாரிகளுக்கு திருப்தி இல்லாததால் அவர் பெயர் அடிக்கப் பட்டது. ஆதலால் இனியாவது தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் தொழிலாளருக்கு ஓட்டுக் கொடுத்து அவர்களால் தெரிந் தெடுக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமே அல்லாமல் பார்ப்பனர் தயவில் சட்டசபைக்குப் போகலாம் என்பது முடியாத காரியம். போனாலும் பார்ப்பனர்...

காந்தியடிகளும்                                               திரு. கலியாணசுந்திர முதலியாரும் 0

காந்தியடிகளும் திரு. கலியாணசுந்திர முதலியாரும்

“நவசக்தி” ஆசிரியர் திரு.வி.கலியாணசுந்திர முதலியார் ஒரு பெரிய காங்கிரஸ் பக்தராம். காந்தியடிகள் கீறிய கோட்டைத் தாண்டாதவராம். இத்தகைய சீரியர் சின்னாட்களாக ‘காங்கிரஸ் தலைவர்’களெனப்படும் சிலரு டன் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டில் திக் விஜயம் செய்து வருகின்றார். இவரு டன் சேர்ந்து வருபவர்கள் உண்மையான காங்கிரஸ்வாதிகளா? என்பதையும், வாஸ்தவத்திலேயே தேச நன்மைக்கு பாடுபடுகிறவர்களா வென்பதையும் கவனிப்போம். உண்மையான காங்கிரஸ்காரர் யார் ? என்ப தைப்பற்றி காந்தி அடிகள் கூறுவதாவது. காங்கிரஸ்காரருக்கு பின்வரும் லக்ஷணங்கள் இருக்க வேண்டும். 1. கதரில் பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர் தற்காலிக உடையாகவோ அல்லது வெளி வேஷத்திற்கான உடையாகவோ கதரை அணிபவராக இருக்கக்கூடாது. உண்மையான ஆர்வத்துடன் கதர் அணிபவராக இருக்க வேண்டும். 2. தீண்டாமை விலக்கில் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். தீண்டத்தகாதவரென கூறப்படுகிறவருடன் அவர் தாராளமாகக் கலந்துறவாடக் கூடியவராயிருக்க வேண்டும். பல வகுப்பின ருள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவராக இருக்க வேண்டும். 3....

சுயராஜ்யக் கக்ஷியும் முகம்மதியரும் 0

சுயராஜ்யக் கக்ஷியும் முகம்மதியரும்

சென்ற வாரம் நமது பத்திரிகையில் இதே தலைப்பின் கீழ் வெளிவந்த விஷயத்தை நேயர்கள் அறிவார்கள். அதில் எல்லைப்புற மாகாண சீர்திருத்தத்தைக் கோரிய சுயராஜ்யக் கக்ஷியைச் சேர்ந்த முகம்மதியர்களின் பிரேரணையை, பண்டித நேரு முதலிய சுயராஜ்யக் கக்ஷியைச் சேர்ந்த தலைவர்கள் சில மொண்டிச் சமாதானங்களைச் சொல்லி முகம்மதியர்கட்கு விரோதமாய் அரசாங்கத்தார் சார்பில் வோட்டுக்கொடுத்து அத்தீர்மானத்தை வீழ்த்தியதினால் சுயமரியாதையுள்ள முகமதியர்கள் சுயராஜ்யக் கக்ஷியி னின்று விலகிக் கொண்டனர் என்று எழுதியிருந்தோம். அக்க்ஷியிலுள்ள முகமதிய பிரதமருள் ஒருவரான மௌல்வி மகமது ஷாபி அவர்கள், தான் சுயராஜ்யக் கக்ஷியிலிருந்து விலகிக் கொண்டதோடல்லாது இந்தியா சட்ட சபை ஸ்தானத்திலிருந்தும் விலகிக் கொண்டதாகத் தெரிகிறது. இது நாம் கூறி யதை பலப்படுத்தும். தன் காலில் நிற்கக்கூடிய சுயமரியாதையுள்ள எவரும் இனி அக்கக்ஷியிலிருக்க மாட்டாரென்பது துணிபு. குடி அரசு – செய்தி விளக்கம் – 25.04.1926

குடி நிறுத்தும் யோக்கியர்கள் 0

குடி நிறுத்தும் யோக்கியர்கள்

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் குடி நிறுத்தும் பேரால் தன் இனத் தாராகிய ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க பிரசாரம் செய்த காலத்தில் ஸ்ரீமான் அய்யங்காரவர்கள் குடியை அடியோடு உடனே நிறுத்திவிடப் போகிறாரென்றும், அவருக்கு ஓட்டுக் கொடுங்களென்றும் அவர் மரத்தில் முட்டி தொங்கினதைப் பார்த்த பிறகு கூட கிராமம் கிராமமாய்த் திரிந்து பிரசாரம் செய்ததும் இதற்காக மகாத்மா காந்தியின் சிபார்சு கூட வாங்கினதும் வாசகர்கள் இதற்குள் மறந்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது ஸ்ரீமான் வெங்கடரமணய்யங்கார் சட்ட சபையில் என்ன செய்கிறார் என்று பாருங்கள். குடியை உடனே ஒழித்து விடுகிறேன் என்றவர் 10 வருஷத்தில் ஒழிய வேண்டும் என்று விரும்புவதாக வும், அதற்குத் தகுந்தபடி மந்திரிகள் வேலை செய்தால் போதுமென்றும், ஆனால் இதற்காக வேண்டி இப்போதிருக்கும் மந்திரியைத் தோற்கடிக்கவோ கலைக்கவோ விடமாட்டோமென்றும் பேசியிருக்கிறார். ஸ்ரீமான் ராஜகோபா லாச்சாரியார் ஓட்டு வாங்கிக்கொடுத்த பார்ப்பன கனவானின் யோக்கியதை யும் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியால் ஏமாற்றப்பட்ட மகாத்மா காந்தியின்...

பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது 0

பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது

சென்னை மந்திரிகள் “சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்களும்”, “ஒத்துழையாமைப்” பார்ப்பனர்களும் தங்களுக்கு உள் உளவாய் இருக்கிறார் கள் என்கிற தைரியத்தினால் ஆளுக்கு ஒரு விதமாய் தலைவிரித்தான் கோலமாய் உளறிக்கொண்டு வருகிறார்கள். “கன்னா பின்னா காவரையே, கூவரையே உங்களப்பன் வீட்டுப் பெருச்சாளி” என்னும் உளறலை ஒரு விறகுத் தலையன் பாடம் செய்துகொண்டு ஒரு சமஸ்தானத்திற்குப் போய் இதை கவி என்று சொல்லி பரிசு கேட்டதாகவும், அங்கு இந்த விறகுத் தலையனுக்கு அனுகூலமாயிருந்த ஒரு வித்வான் இதற்கு வியாக்கியானம் செய்து பரிசு பெற உதவியாய் இருந்ததாகவும் தமிழ் இலக்கியத்தில் ஒரு கதை உண்டு. அதைப் போல் மந்திரிகள் உளறலுக்கு சுயராஜ்யக் கட்சியார் அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் வியாக்கியானம் செய்து அவர்கள் பதவி நிலைக்க மந்திரிகளை மெச்சி நற்சாக்ஷி பத்திரம் அளிக்கிறார். உதாரணமாக ஒரு மந்திரி ஒரு ஊரில் படிப்படியாகத்தான் குடியை ஒழிக்க முடியும் என்றும் மற்றொரு மந்திரி குடி தப்பா சரியா என்பதை பற்றியே...

சபர்மதி ராஜி 0

சபர்மதி ராஜி

சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தி முன்னிலையில் சுயராஜ்யக் கக்ஷிக்கும் பரஸ்பர ஒத்துழைப்புக் கக்ஷிக்கும் ராஜி ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், மகாத்மா அதில் கலந்து கொள்ளவே கிடையாது. மகாத்மா காந்திக்கு முன்னிலையில் சபர்மதி ஆச்சிரமத்தில் ராஜி யேற்பட்டுவிட்டதென்று சொன்னால், அதில் ஒரு பெருமையும், பொதுஜனங்களுக்கு ஒரு நம்பிக் கையும் ஏற்பட்டுவிடுமென்ற எண்ணத்தினால் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல. ராஜியால் விளைந்த பலன், நாளுக்கு நாள் நகர்ந்துதடி அம்மானே என்றபடி சுயராஜ்யக் கக்ஷியார் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதுதான். அதாவது, “மந்திரிகள் தங்களுடைய கடமைகளைச் சரியாக நடத்து வதற்கு அவசியமான அதிகாரம், பொறுப்பு, சுயமாகச் செய்வதற்கு சக்தி முதலியவை கொடுக்கப்பட்டால் கவர்ன்மெண்ட் போதுமான அளவு இணங்கிவிட்டதாகக் கருதி சுயராஜ்யக் கக்ஷியார் மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ளலாம். மந்திரி பதவிக்கு அவ்வித பொறுப் பும் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்கிற விஷயம் அந்தந்த மாகாண சட்டசபை மெம்பர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியது. திரு. ஜெயகரும் திரு. நேருவும் இதை ஊர்ஜிதம் செய்ய...

திரு. ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார் 0

திரு. ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார்

அஷ்டதிக்குப் பாலகர்களான ஐயங்கார் கோஷ்டியார் சமீபத்தில் தமிழ் நாடெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து வரும்போது திரு. ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியாரவர்களை பல கேள்விகளால் தூத்துக்குடியிலும், திருச்சியிலும் வளைத்துக் கொண்டார்கள். அக்கேள்விகளுள் முக்கியமான இரண்டிற்கு உண்மையிலே தன்னுள்ளத்திலே உறையும் அபிப்பிராயத்தை வெளிப் படையாய்க் கூறிவிட்டார். அவை வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்தைப் பற்றியும் ஹிந்துமத பரிபாலனச் சட்டத்தைப் பற்றியுமாகும். திரு.ஷண்முகஞ் செட்டியார் இவற்றிற்குப் பதிலளிக்கு முகத்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே நாட்டின் அமைதியைக் காக்கவல்ல தென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காகக் காங்கிரசிலும் போராடப் போவதாகவும் கூறியுள்ளார். மத பரிபாலனச் சட்டத்தைப்பற்றிக் கூறும்போது இச்சட்டம் அருமையானதொரு சட்டமென்றும், சட்ட சபையில் இச்சட்டம் நிறைவேற்றப் பெறுதற்குத் தன்னுடைய உதவியையும் அக்காலத்தில் கொடுத்திருப்பதாகவும், இனி காங்கிரசோ அல்லது மற்றையோர்களோ அச்சட்டத்தை அழிப்பதற்கு முற்பட்டால் தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி அச்சட்டத்தை நிலைநாட்ட முயலுவேன் என்றும் திரு.செட்டியார் விடையிறுத்துள்ளார். இவ்வாறு தன்னுள்ளத்திலே உறையும் எண்ணத்தை தைரியமாய்க் கூறியது ஆச்சரியத்தைக் கொடுக்காது. ஐயங்கார் கோஷ்டியில் சேர்ந்து...

“சுதேசமித்திரனின்” உபத்திரவம் 0

“சுதேசமித்திரனின்” உபத்திரவம்

“சுதேசமித்திரன்” என்னும் பத்திரிகையைப் பற்றி அதாவது அது பார்ப்பன பத்திரிகை என்றும், அது பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்கு இடைஞ்சலாகவும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அனுகூலமாகவும் பார்ப்பன பிரசாரம் செய்யும் பத்திரிகை என்பதாகவும் பல தடவைகளில் நாமும் மற்றும் அநேக கனவான்களும் அவ்வப்போது ஆதார பூர்வமாய் வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறோம். அதன் நிருபர்களும் ஆங்காங்கு உண்மைக்கு மாறாகவும் விஷமத்தனமானதாகவும், பார்ப்பன முன்னேற்றத்திற்கு தகுந்தாப் போலும் பார்ப்பனரல்லாதார்க்கு இழிவும் கெட்ட பெயரும் வரும்படியாகவும் அறிக்கை செய்து கொண்டு வருவதைப் பற்றியும் நாம் மாத்திரமல்லாமல் மற்றும் அநேகர்கள் கண்டித்தெழுதி வந்திருப்பதோடு அதை பகிஷ்கரித்து வந்திருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கக்கூடும். அது மாத்திரமல்லாமல் அநேக முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டு தலைவர்கள் “மித்திரன்” நிருபரை உள்ளே அனுமதிக்க மறுத்ததும், பார்ப்பன அங்கத்தினர்கள் சிபார்சு செய்திருப்பதும் அதே பத்திரிகையில் பார்த்திருக்கக்கூடும். என்ன செய்தும் பத்திரிகையினுடையவும் பத்திரிகை நிருபருடையவும் ஜாதிப் புத்தி கொஞ்ச மாவது மாற்றமடைந்ததாகக் காணமுடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன் தஞ்சை ஜில்லா...

ராஜியின் பலன்                                சுயராஜ்யக் கக்ஷியின் கதி 0

ராஜியின் பலன் சுயராஜ்யக் கக்ஷியின் கதி

“பயித்தியம் தெளிந்து போய்விட்டது. உலக்கையை எடுத்துக் கொண்டுவா கோவணங் கட்டிக்கொள்கிறேன்.” என்று ஒரு பழமொழி யுண்டு. அதாவது, ஒரு வாலிபனுக்குப் பெண்ணாசையால் பயித்தியம் பிடித் திருந்தது. அவன் கோவணமுமில்லாமல் நிர்வாணமாய்த் திரிந்து கொண்டி ருப்பது வழக்கம். அதனால் ஜனங்கள் அவனைப் பிடித்து விலங் கிட்டு ஒரு அறையில் மூடி வைத்திருந்தார்கள். கொஞ்சநாள் பொறுத்து அவ் வாலிபன் “தனக்கு பயித்தியம் தெளிந்து விட்டது. உலக்கை எடுத்துக்கொண்டு வாருங்கள், அதைக் கோவணமாகக் கட்டிக்கொள்கிறேன்” என்று சொன்னா னாம். அது போல் நமது ராஜீயக் கக்ஷிகளுக்குள் ராஜி ஏற்பட்டுப் போய் விட்டதாம்; காங்கிரசுக்கும் நல்ல காலமாம்; தங்கள் கக்ஷிக்கும் இனிமேல் குறைவில்லையாம்; இனி எல்லோரும் ஒத்து வேலைசெய்ய வேண்டியது தான் பாக்கியாம் என்பதாக இன்னும் என்னென்னவோ எழுதி பிராமணப் பத்திரிகைகள் ஏமாற்றுப் பிரசாரம் செய்கின்றன. பயித்தியம் தெளிந்ததாகச் சொல்லுபவன் எப்படி உலக்கையை கோவணம் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தானோ அதேபோல் சுயராஜ்யக் கக்ஷியார் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளுவதை...

சென்னை சட்டசபை வரவு செலவு திட்டம் 0

சென்னை சட்டசபை வரவு செலவு திட்டம்

(ஜஸ்டிஸ் கட்சி கொள்கை) கனவான்களே! சென்னை சட்டசபையிலுள்ள வரவு செலவு திட்டத் தைப் பற்றி எனக்கு கொஞ்சமாவது கவலையில்லை. அதில் கவலை செலுத்துவதில் ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? என்கிற விஷயத்திலும் அதிகமான பிரயோஜனமிருக்காது என்கிற முடிவுக்கு வந்தவன். ஏழை மக்களிடம் வசூலித்த கோடி கோடியான வரிப் பணத்தை அம்மக்களுக்கு யாதொரு கிரமமான உபயோகமும் செய்யாமலேயே வெள்ளைக்காரரும் நமது படித்தக் கூட்டத்தாரும் எப்படி பங்கு போட்டுக்கொள்ளுவது என்பது தான் பட்ஜெட் (வரவு செலவு திட்ட) விவாதம் என்பது எனது முடிவான அபிப்பிராயம். சட்டசபை மாத்திரமல்ல இந்திய சட்டசபை அரசாங்க சபை ஆகிய எதுகளின் யோக்கியதையை பற்றியும் இம்மாதிரிதான் நினைக்கிறேன். பெரிய பெரிய திட்டம் என்பதெல்லாம் கூட இப்படியே ஜால வேடிக்கை யாகத்தான் முடிகிறது. உதாரணமாக மேட்டூர் திட்டம் முதலிய யானை விழுங்கி பிசாசு போன்ற திட்டங்களின் சூதுகளை கவனித்துப் பார்த்தால் மற்ற துகளைப்பற்றி யாருக்குமே சுலபமாய் விளங்கிவிடும். அத்திட்டங்களால் என்ன லாபம் என்பதை...

தீண்டாமை 0

தீண்டாமை

“இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை, ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக்கிணறு வெட்டவேண்டும்? சிலர் ஆதி திராவிடர் களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அநுமதிக் கலாகாது? பக்ஷிகளும் மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில் லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?...

ஸ்ரீமான் சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின் தர்ம விளம்பரம் – சித்திரபுத்திரன் 0

ஸ்ரீமான் சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின் தர்ம விளம்பரம் – சித்திரபுத்திரன்

சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் வர வர அபேக்ஷகர்கள் அதிக மாய் விளம்பரமாகும்படி செய்து கொள்வது எங்கும் சகஜமானது. இதில் அபேக்ஷகர்கள் முன் செய்த வேலைகளையும் பின் செய்யப் போகிற வேலைகளையும் சொல்லுவதும் இயற்கை. ஆனால், நமது ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் அந்த இரண்டுமல்லாத புதிய ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். அதென்னவெனில்:- ஒரு பெரிய தர்ம விளம்பரம். அதாவது, தான் 2 லக்ஷம் ரூபாய் தனது சொத்திலிருந்து தர்மம் செய்ய இருப்பதாகவும், அந்த தர்மங்கள் இன்ன இன்னாருக்கு உபயோகப்படத்தகுந்தது என்றும் சில ஓட்டர்களுக்கும் வோட்டுத் தரகர்களுக்கும் வாயில் தண்ணீர் ஊரும்படி வாய்பறை, பத்திரிகை பறையடிப்பதோடு நில்லாமல் திறப்பு விழாப் பறையும் அடித்தாகிவிட்டது. ஆனால், நடந்த விஷயந்தான் என்ன? “தர்ம பிரபு” ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் திறப்புவிழா ஆரம்பத்தில் தனது தர்மத்தின் பெருமையைப்பற்றி பேசியவைகளின் சுருக்கம் இதில் குறிப்பிடுகிறோம். இதிலிருந்தே பல விஷயம் தெரிந்து கொள்ளலாம். இது 14.4.26 -ம் தேதி “சுதேசமித்திரன்” 6-வது பக்கம்...

தேசோபகாரி 0

தேசோபகாரி

நம் நாட்டில் நாளுக்கு நாள் மேல் நாடுகளைப்போல் பத்திரிகைகள் பெருகி வருகின்றன. ஆனால், அவ்வாறு தோன்றும் பத்திரிகைகளில் நாட்டின் நலங்கருதி உண்மையான தொண்டாற்றி வருவதுதான் வழக்க மில்லாமலிருந்து வருகிறது. காரணமென்ன வெனில் பத்திரிகைகள் ஆரம் பிக்கும்போது அதன் ஆசிரியர்கள் எவ்வளவு உண்மையான நோக்கத்தோடு ஆரம்பித்தாலும் ஆரம்பித்த பின்னர் பத்திரிகை வளர்ச்சியின் அவசியத்தை பத்திராதிபர் கருத வேண்டி வந்துவிடுகிறது. பத்திரிகை வளர்ச்சியையும் அதனால் தமது கால nக்ஷமத்தையும் எதிர்பார்க்கும் பத்திராதிபர்கள் பத்திரிகையின் கொள்கைகளை தங்கள் மனச்சாட்சிப்படி நடத்திக்கொண்டு போக முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பத்திரிகைகள் பொது ஜனங்களை சீர்திருத்தத் தமது கொள்கை களை ஜனங்கள் பின்பற்றும்படி செய்ய முடியா மல் எந்த சமயத்தில் எப்படி நடந்தால் தனக்குப் பெரும்பான்மையான ஜனங் களின் ஆதரவும் செல்வாக்குள்ள ஜாதியாரின் தயவும் கிடைக்குமோ அப்படி நடந்துகொண்டு தனது மனச்சாக்ஷியை விற்றுவிட வேண்டிவருகிறது. இது நம் நாட்டின் துரதிஷ்டமே. தமிழர்களின் நலங்கருதி உண்மையாக உழைக்கும் பத்திரிகைகள் நாட்டிற் சொற்பமாயினும் ரங்கூனில்...

சமாதானமும் வந்தனமும் 0

சமாதானமும் வந்தனமும்

நமது “குடி அரசு” இரண்டு வாரம் நிறுத்தப்பட்டதைப் பற்றி அநேக ஆவலாதிகள் வந்தன. அவற்றில் ஒன்று இன்று யார் முகத்தில் முழித்தேனோ “குடி அரசு” வரவில்லையென்றும், மற்றொன்று “குடி அரசு” வராததால் இன்று முழுதும் சாப்பிட மனமில்லை யென்றும், மற்றொன்று “குடி அரசை” ஒழுங்காய் அனுப்புவதானால் அனுப்புங்கள் இல்லாவிட்டால் நிறுத்திவிட்டு என் பணத்தை திருப்பி அனுப்புங்கள், பத்திரிகை திங்கட் கிழமை தபால் நேரத்திற்குக் கிடைக்காவிட்டால் மனம் வருத்தப்படும் என்றும், ஒரு மகமதிய கனவான் மற்றொன்று இந்த ஒரு பத்திரிகையை ஒழுங்காய் நடத்த முடியா விட்டால் எப்படி உங்களை பிராமணரல்லாதார் பின்பற்ற முடியும், இது ஒன்றுதான் உள்ள நிலைமையை எழுதுவதால் அது கிடைக்கா விட்டால் மனது அவ்வளவு வருத்தப்படுகிறது என்றும், மற்றொருவர் திராவிடர்க ளுக்கு ஆசையிருக்கிறதே தவிர பிராமணர்கள் போல் காரியம் நடத்தத்தக்க சக்தியில்லை, வீணாய் அவர்களுடன் போட்டி போட்டு என்ன செய்வது, இந்த ஒரு சிறிய பத்திரிகையை சரியாய் நடத்தத் தங்களால்...

போலீஸ் நிர்வாகம் 0

போலீஸ் நிர்வாகம்

கொஞ்சகாலமாக போலீஸ் நிர்வாகம் வெகு தடபுடலாக இருந்து வருவ தாகவே சொல்லலாம். வீதிகளில் முக்கு முக்குக்கு போலீஸாரை நிறுத்தி வண்டிகளையும் மோட்டார்களையும் இடம் வலம் பிரித்து அனுப்புவது வெகு மும்முரமாயிருக்கிறது. இது ஒரு விதத்தில் நன்மை ஆனாலும் 15 அடி 20 அடி உள்ள குறுகிய ரோட்டுகளில் கூட போலீஸார் நடுவில் நின்று கொண்டு வண்டிகளை இடம் வலம் பிரிப்பது வேடிக்கையாயிருக்கிறது. ஒவ்வொரு சமயங்களில் போலீஸார் பாடு உயிருக்கே ஆபத்தாய் விடும் போலிருக்கிறது. சிற்சில போலீஸார் தங்கள் மேல் வண்டி ஏறட்டுமென்றே உறுதியாய் விலகா மல் நிற்கிறார்கள். அது சமயங்களில் வண்டிக்காரர்கள் பாடு வெகு கஷ்ட மாய்ப் போய்விடுகிறது. அல்லாமல் இந்த கொடுமையான வெய்யிலில் போலீஸ்காரர்கள் அசையாமல் நின்று கொண்டிருப்பதானது போலீஸாருக்கு பெரிய தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும். பார்க்கிறவர்கள் கண் ணுக்கு இந்த போலீஸார்களின் நிலை மிகப் பரிதாபமாகவே காணப் படுகிறதும் தவிர மாதம் 20, 25 ரூபாய் சம்பளமும்...

சுயராஜ்யக் கக்ஷியும் மகமதியரும் 0

சுயராஜ்யக் கக்ஷியும் மகமதியரும்

“ மகமதியர்கள் பெரும்பான்மையாயுள்ள இந்தியாவின் வட எல்லைப் புற மாகாணங்களுக்கு இந்தியாவின் மற்ற பாகங்களைப் போலாவது சீர்திருத் தங்கள் வழங்கப்படவேண்டும்” என்ற ஒரு தீர்மானத்தை இந்தியா சட்ட சபையில் ஒரு மகமதிய கனவான் பிரேரேபித்தபோது சுயராஜ்யக் கக்ஷியார் அதை எதிர்த்துத் தோற்கடிப்பதற்கு அநுகூலமாயிருந்தார்களாம். சில மகமதிய கனவான்கள் சுயராஜ்யக் கக்ஷித் தலைவரான பண்டித நேருவை எங்கள் விஷயத்தில் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு சீர்திருத் தமே போதுமானதல்ல, உபயோகப்படக்கூடியதல்ல; ஆதலால் அது உங்க ளுக்கு ஆகாது; அதினால்தான் நாங்கள் ஆnக்ஷபித்தோம் என்று பதில் சொன்னாராம். சுயராஜ்யக் கக்ஷி பிராமணருக்கு மாத்திரம் சீர்திருத்தத்தின் பலனாய் ஏற்பட்ட சட்டசபையும், அதில் ஏற்படும் கமிட்டி அங்கத்தினர் பதவி யும் 4000, 5000 சம்பளமுள்ள சட்டசபை அக்கிராசனம் முதலிய ஸ்தானங் களும் சுயராஜ்யம் பெற உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடியதும் அதற்குப் போதுமானதுமாயிருக்கிறது. ஆனால், எல்லைப்புற மகமதியர்களுக்கு மாத்திரம் பிரயோஜனமில்லையாம், போறாதாம். இது சிறு குழந்தைகள் ஏதாவது கேட்டால்...

மகாத்மாவுக்கு                                               பொது ஜனங்களிடம்                                   உள்ள நம்பிக்கை 0

மகாத்மாவுக்கு பொது ஜனங்களிடம் உள்ள நம்பிக்கை

கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு நூல் சந்தாதாரர், தன் கைப்பட நூற்று நூற்போர் சங்கத்திற்கு அனுப்பிவரும் நூல்களை தனக்கு திருப்பி அனுப்பி னால் அதன் கிரையத்தை கொடுத்துவிடுவதாகவும், அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை அணிய தான் ஆசைப்படுவதாகவும் எழுதியிருந்தாராம். அதற்கு மகாத்மா பதில் எழுதுகையில் அவரவர்கள் நூலை அவரவர்களுக்கு திருப்பி அனுப்பிவிட்டால் மறுபடியும் அந்த நூலையே சந்தாவுக்கு அனுப்பி விடுவார்கள் ஆதலால், அந்த நூலை சலவை செய்து அனுப்பக்கூடும் என்று எழுதினாராம். தினம் நூற்று, மாதா மாதம் நூல் அனுப்புகிறோம் என்று பிரமாணம் செய்து உறுதிமொழியில் கையொப்பமிட்ட நூல் சந்தாதாரரிடமே இவ்வளவு அவநம்பிக்கை இருக்குமானால் மற்றவர் களிடம் எவ்வளவு நம்பிக்கை இருக்கும்? இதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன் மகாத்மாவுக்கு வெறும் ஆள்களிடம் இருந்த நம்பிக்கைக்கூட, உறுதிமொழி கொடுத்தவர் களிடம் இல்லைபோல் இருக்கிறது. தன்னிடம் இருக்கும் உறுதி, ஆட்டம் கொடுத்தவுடன் எல்லாரிடமும் சந்தேகப்படுவது இயற்கைதான். குடி அரசு – செய்தி விளக்கம் –...

பார்ப்பனீயப் பித்தலாட்டம் “சிரார்த்த சந்தேகம்” 0

பார்ப்பனீயப் பித்தலாட்டம் “சிரார்த்த சந்தேகம்”

ஸ்ரீ சங்கராச்சாரியர் மடம் ஆஸ்த்தான வித்துவான் ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரியை சிரார்த்த விஷயமான பல சந்தேகங்களைப் பற்றி ஒரு நண்பர் எழுதிக் கேட்டிருந்தாராம். அதற்கு பதில் எழுத சாஸ்திரிக்கும் சாவகாச மில்லையாம். குடும்ப விஷயமாக கிராமத்திற்குப் போய்விட்டாராம். மித்திர னிலும் இடம் ஒதுக்க முடியாதாம். பத்திரிகைகள் மூலம் இம்மாதிரி சந்தேகங் களும் நீங்காதாம். ஜகத்குருசாமிகள் என்பவர் ஆரியதர்மம் என்று ஒரு பத்திரிகை போடுவாராம். அதை வாங்கிப் படித்தால் சந்தேகமெல்லாம் நிவர்த்தி ஆகி விடுமாம். இது ஸ்ரீ சோமதேவ சர்மா என்கிற ஒரு பார்ப்பனர் பேரால் 10. 3. 27 தேதி மித்திரனில் பிரசுரித்திருக்கிறது. இது என்ன புரட்டு? கள்ளு, சாராயம் விற்க பத்திரிகையில் இடமிருக்கிறது. வருணாசிரம தர்மம், ஆரியதர்மம், பிராமண தர்மம், சனாதன தர்மம், இந்து தர்மம் என்கிற பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஏற்பட்ட மத விஷயங்களைப் பரப்ப மித்திரனில் இடமிருக்கிறது, சாஸ்திரிகளுக்கும் சர்மாக்களுக்கும் சாவகா முமிருக்கிறது. யாருக்காவது இதில் சந்தேகமேற்பட்டால் அதை...

சர். செட்டியாரும் டாக்டர் அம்மையாரும் 0

சர். செட்டியாரும் டாக்டர் அம்மையாரும்

ஒத்துழையாமையின் போது ஜயிலுக்கு ஜனங்கள் போய்க் கொண்டி ருந்ததை ஒப்புக்கொள்ளாத ஸர்.பி. தியாகராய செட்டியார் ஜயிலுக்குப் போன ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களுக்கு பிரத்தியேக சௌகரியம் செய்து கொடுக்க சம்மதிக்கவில்லையாம். இது குற்றமல்ல வென்று கஷ்டப்பட்ட ஸ்ரீமான் எஸ்.ராமநாதனே ஒப்புக்கொண்டாலும், மறைந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நமது பிராமணர்களுக்கு ஸர்.செட்டியார் “டயராய்” விட்டார். அவருடைய கக்ஷி தேசத்துரோக கக்ஷியாய்ப் போய்விட்டது. ஆனால் பஞ்சாப் படுகொலையானபோது ஸ்ரீமதி பெசண்டம்மையார் “ஜலி யன் வாலாபார்க்கில் நிரபராதிகளை டயர் சுட்டது சரி; இவர்கள் கல்லு போட் டார்கள்; அதற்கு டயர் குண்டு போட்டார்; இதிலொன்றும் தப்பில்லை” என்று சொன்னார். அதைப்பற்றி கேள்ப்பாரில்லை. அவருடனும் அந்தம்மாள் கக்ஷியிலும் அநேக பெரிய “மதிப்பு வாய்ந்த” பிராமணர்கள் சூழ்ந்து கொண்டு சபை நடுவிலிருத்தி ஆட்டத்துக்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஏன்? அந்தம்மாள் பிராமணர்களுக்கு அநுகூலமாய் இருந்துகொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்கிறார். தனக்குள்ள செல்வாக்கை பிராமணர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும் அதற்குத்...

சுயராஜ்யக் கக்ஷிக்கு  நற்சாக்ஷிப் பத்திரம் 0

சுயராஜ்யக் கக்ஷிக்கு நற்சாக்ஷிப் பத்திரம்

ராஜீய உலகத்திலும் சீர்திருத்த உலகத்திலும் ஸ்ரீமான் சி.விஜயராகவாச் சாரியாரும் ஸ்வாமி சிரத்தானந்தரும் முறையே பேர் போனவர்கள். முதல்வர் காங்கிரசுக்கே அக்கிராசனாதிபதியாயிருந்தவர். இரண்டாவதவர் மனித சமூகத்தின் சம உரிமைக்கு உண்மையாய்ப் பாடுபடுகிறவர். இவர்களிருவரும் சுயராஜ்யக் கக்ஷியைப் பற்றி சொல்லுவதாவது:- 1-வது, சி. விஜயராகவாச்சாரியார் : “கான்பூர் காங்கிரஸ் தீர்மானம் ஒழுங்கில்லையென்பது என் அபிப்பிராயம். காங்கிரஸ் ஒரு கோவிலுக்கு சமானம். அதை சிலர் மாத்திரம் பிடித்துக்கொண்டு பிறருக்கு அதில் தொழும் பாத்திய தையைத் தடுக்கக்கூடாது. ஒரு பெரிய சந்நியாசியாகிய மகாத்மா காந்தியை ஏமாற்றி கான்பூரில் அத்தீர்மானத்தை காங்கிரஸில் நிறைவேற்றப் பட்டிருக்கிறதென்பதே என் அபிப்பிராயம். காங்கிரஸ் 40 வருஷத்திற்கு முன்னாலேற்பட்டது. அப்பொழுது சட்டசபை இல்லை, சட்டசபைக்காக காங்கிரஸ் ஏற்படவில்லை.” 2-வது, ஸ்வாமி சிரத்தானந்தர் : “சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபை யினின்றும் வெளிவந்ததும் சட்டமறுப்பு ஆரம்பித்திருந்தால் அதை சரியான கக்ஷியென்று சொல்லலாம். பிரயோஜனமில்லையென்று வெளிவந்தபின் மறுபடியும் சட்டசபைக்குப் போகிறோமென்பதை எப்படி நாம் ஒப்புக்கொள்ள முடியும்.” குடி அரசு...

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் 0

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்

பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலை யாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக, போலீசார் இவ்விஷயமறிந்து ஸ்தலத்திற்குப் போய் பைசைக்கிளையும் வேஷ்டியையும் பிடுங்கி கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தினார்கள். அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம் விழுந்தது. அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்கள். அப்பீலில், பார்ப்பனரல்லாத இரண்டு ஐகோர்ட் ஜட்ஜிகள் பார்ப்பனர் செய்தது அக்கிரம மென்றும் ஜனங்கள் வரிப் பணத்தில் முனிசிபா லிட்டியாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும், பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியதுதான் என்றும்...

வகுப்புவாரி உரிமை 0

வகுப்புவாரி உரிமை

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி வலியுறுத்த ஆரம்பித்த பிறகு தமிழ்நாடு ராஜீய உலகத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டதோடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு அநுகூலமாயிருக்கும் சில தேசபக்தர் களுக்கு காங்கிரசில் செல்வாக்கில்லாமலடிப்பதோடு காங்கிரஸையே பிராமண மயமாக்க அவசியம் ஏற்பட்டதும், பிராமணரல்லாதாரில் யாருக்கா வது காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் பிராமணர்கள் தயவு பெற வேண்டியிருப்பதால் பிராமணர்களுக்கு பயப்பட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்கவேண்டிய அவசியமேற்படவும் ஏற்பட்டிருப்பது நேயர்களுக்குத் தெரிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒரு நாளும் பிராமணர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எங்கு ஏற்பட்டுப் போகுமோ என்கிற பயத் தால் தான் பிராமணர்கள் சர்க்காரைத் தொங்கிக் கொண்டிருப்பதும் ஒரு சர்க்கார் இவர்களுக்கு விரோதமாயிருந்தால் வேறொரு சர்க்காரை தயார் செய்வதுமாயிருக்கிறார்கள். அதற்குப் பயந்து கொண்டுதான் வரும் சர்க்கார் களும் பிராமணர்களுக்கு சுவாதீனமாய்ப் போய் விடுகிறார்கள். நம் நாடு ஏதாவது ஒரு காலத்தில் “இயற்கைக்கு விரோதமாய்” நம் நாட்டார்களாலேயே ஆளப்படுகிறது என்கிற யோக்கியதை அடையுமானால்...