Author: admin

கோவை சேர்மென் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியாரின் துணிபு 0

கோவை சேர்மென் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியாரின் துணிபு

கோயமுத்தூர் டவுன் எக்சைஸ் லைசென்சிங் போர்டுக்கு சென்ற வாரத் தில் தலைவரை தெரிந்தெடுப்பதற்காக கோவை கலெக்டர் ஆபீசில் மேற்படி போர்டு மெம்பர்களால் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது. அம்மீட்டிங்குக்கு ஏழு மெம்பர்களே ஆஜரானார்கள். அவர்கள், ஸ்ரீமான்கள் கலெக்டர் காக்ஸ் துரை, சேர்மென் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல்.சி., வைஸ்சேர்மென் அருணாசலம் செட்டியார்,தேவசகாயம், சால்ட் சர்க்கிள் இன்பெக்டர், போலீஸ்டிஸ்ட்ரிக்ட் சூப்ரண்டெண்ட், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியவர்களே. இந்த எழு வரில் ஸ்ரீமான் கலெக்டர் காக்ஸ் துரை அவர்களை போலீஸ் சூப்பிரண்டு துரை அந்த போர்டுக்கு தலைவராக பிரேரேபிக்க சால்டு சர்க்கில் இன்ஸ் பெக்டர் ஆதரித்தார் . உடனே ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எழுந்து உத்தியோகப்பற்றில்லாதவர் தலைவராக இருக்கவேண்டும் என் கின்ற கொள்கையின் பேரில் ஸ்ரீமான் தேவசகாயம் அவர்களை பிரேரேபிக்க ஸ்ரீமான் அருணாசலம் செட்டியார் ஆதரித்தார். ஓட்டுக்கு விட்டதில் ஸ்ரீமான்கள் காக்ஸ் துரையவர்களுக்கு மூன்று ஓட்டுகளும் தேவசகாயம் அவர்களுக்கு மூன்று ஓட்டுகளும் கிடைத்தன. இந்த...

யார் பொய்யர் 0

யார் பொய்யர்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் வீட்டில், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளின் தேவதாசிகளின் தீர்மானம் விஷயமாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்துவ கன்னியா ஸ்திரிகளைப் பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிய பேச்சுக் களை இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘தமிழ்நாடு’, பத்திரிகை அய்யர் சொன்னதாக குறிப்பிட்ட விஷயங்களை ருஜுபடுத்து வதாக பந்தயம் கூறிற்று. அய்யர் அடங்கிவிட்டார். ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளும், அய்யர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை பற்றி பேசியதும் மற்றும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் கண்ட விஷயங்களும் உண்மை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் அவர் களும் மேலொப்ப மிட்டிருக்கிறார். இந்நிலையில் ‘தமிழ்நாடு’நிருபர், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள், ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆகிய இம்மூவர்கள் சொல்வது பொய்யா அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் சொல்வது பொய்யா என்பதை உணர பொது ஜனங்கள் ஆவலாயிருப்பார்கள். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் இதற்கு முன் எத்தனையோ...

தமிழ்நாடு 0

தமிழ்நாடு

தமிழ்நாடு பத்திரிகையானது மறுபடியும் சென்னை பார்ப்பன தெய்வங் களுக்குள் இரண்டறக் கலரத் தீர்மானித்து விட்டதாக நினைக்க வேண்டி இருக்கிறது. அதின் முழு கவனம் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதில் மாத்திரமில்லாமல் பெசன்டம்மையை தலைவியாக்குவதிலும் அரசியல் பார்ப் பனர்களை காப்பாற்றுவதிலும் கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. கமிஷன் பஹிஷ்காரத்தைப் பற்றி அவரவர்கள் அரசியல் அபிப்பிராயம் என்று சமாதானம் செய்து கொண்டு வாதாடலாமாயினும், பெசன்ட் அம்மையாரை தலைவியாக்க ஆசைப்படுவதில் பார்ப்பனர் களுடன் போட்டிப் போடுவதான இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளிவிடுவதானாலும் பார்ப்பனரல்லா தார்களுக்கு கடுந்துரோகிகளாகிய அரசியல் பார்ப்பனர்களுடன் குலாவுவதும் அவர்களை காப்பாற்றுவதும் பற்றி காரணம் அறியாமலிருக்க முடியவில்லை. சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் அரசியல் பார்ப்பனர்கள் நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி தமிழ்நாடு பத்திரிகை தனது அபிப்பிரா யமாக ஒரு வரி கூட எழுத முடியாத நிர்பந்தம் இப்போது திடீரென்று அதற்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பன...

ஸ்ரீமதி பெசன்டம்மையார் 0

ஸ்ரீமதி பெசன்டம்மையார்

ஸ்ரீமதி பெசன்டம்மையார் நாம் முன் நினைத்தது போலவே திக் விஜயம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியின் வரவேற்புகளும், உபசாரங்களும் தடபுடலாக நடைபெறுவதாக விளம்பரமாகி வருகின்றது. இந்த சமயத்தில் எதற்காக பெசண்டம்மையாரை பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என் பதை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் உணரக்கூடும். ஆனால் பார்ப்பனரல்லாதார்களில் முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு முதலிய ஸ்தானங்களில் பதவி வகிக்கும் சுயமரியாதை அற்ற பலர் இப்பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமாய் இருப்பது நமக்கு மிகவும் அவமானமாக இருக் கின்றது. அநேக பார்ப்பனரல்லாதார்கள் கொள்கையே இல்லாமல் இரண்டு பக்கமும் வாயை வைத்துக் கொண்டு தம்முடைய வாழ்வையே பிரதானமாகக் கருதி திரியும் இழிதன்மை மாறினாலொழிய பார்ப்பனரல்லாதாருக்கு சுய மரியாதை ஏற்படுவதென்பது கனவேயாகும். ஒவ்வொரு பார்ப்பனரல்லா தாரும் பதவி கிடைக்கும்வரை தான் பார்ப்பனரல்லாதார் என்றும், பார்ப்பன ரல்லாதார் நன்மைக்கு பாடுபடுகின்றவனென்றும், பார்ப்பன அக்கிரமங்களை அடக்கவே இப்பதவிகளுக்கு ஆசைபடுகிறேன் என்றும் சொல்லிக் கொண்டு பல்லைக் காட்டி பதவி பெற்றதும், பெற்ற...

கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும் 0

கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும்

சென்னையில் 16.11.27 தேதி நடந்த கார்ப்பரேஷன் (முனிசிபல் சபை) தலைவர் தேர்தலில் வகுப்பு வாதம் என்ன என்பதும் அது யாரிடத்தில் இருக்கின்றது என்பதும் நன்றாய் விளங்கிவிட்டது. இனிமேல் கடுகளவு அறிவுள்ளவருக்கும் கூட அதைப்பற்றி எவ்வித சந்தேகமும் இருக்க நியாயம் இல்லை என்றே எண்ணுகின்றோம். சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலை நினைத்த உடனே இந்த வருஷம் பார்ப்பனரல்லாதார் கக்ஷி யாராகிய ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும், பார்ப்பனக் கக்ஷியாகிய சுயராஜ்ஜியக் கக்ஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும் கருதியே வெள்ளைக்கார கவுன்சிலருடைய தயவு இருந்தால்தான் எந்தக் கக்ஷியாரும் வெற்றி பெறமுடியும் என்கின்ற எண்ணத்தின் பேரில் இருக்கக்ஷியாரும் வெள்ளைக்கார கவுன்சிலரை அணுகி கெஞ்சிப் பார்த்தார்கள். வெள்ளைக் காரர், இவர்கள் இவருடைய யோக்கியதையும் பார்த்து தனித்தனியே இரு கக்ஷித்தலைவரையும் தங்கள் தங்கள் அரசியல் கொள்கையைப் பற்றி தங்கள் முன் பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். அதற்கும் உடன்பட்டு பார்ப்பன ரல்லாதார் கக்ஷிக்காக பனகால் ராஜாவும், பார்ப்பன கக்ஷிக்கு...

ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது எதற்காக? 0

ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது எதற்காக?

அடங்கிக் கிடந்த அரசியல் உலகத்திற்கு இரண்டு விஷயங்கள் கிடைத்து விட்டன. ஒன்று மறுபடியும் பெசண்டம்மை ஆதிக்கம். இரண்டு ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது. இந்த வியாசத்தில் இரண்டாவதான ராயல் கமிஷன் பஹிஷ்காரத் தைப் பற்றியே பேசுவோம். எதற்காக ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது? 1. ராயல் கமிஷனில் இந்தியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதற் காகவா? 2. அல்லது இது சமயமல்ல என்பதற்காகவா? 3. அல்லது கமிஷன் நியமித்து பரீiக்ஷ செய்து சீர்திருத்தம் கொடுப்பது இந்தியருக்கவமானம் என்பதற்காகவா? 4. கமிஷனில் நியமிக்கப்பட்ட கனவான்கள் நம்பிக்கைக்கு பாத்திர மானவர்கள் அல்ல என்பதற்காகவா? என்று பார்ப்போமானால் ஒவ்வொரு தலைவர்கள் என்போர்கள் ஒவ்வொருவிதம் சொல்லுகிறார்கள். தலைவர்கள் அறிக்கை என்பதில், வெள்ளைக்காரர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், இந்தியர்களின் யோக்கியதையை ஆராயப் பார்லிமெண்ட் கமிஷன் நியமித்தது இந்தியாவின் சுயமரியாதைக்கு விரோதமென்றும், ராயல் கமிஷன் என்பதே இப்போது மாத்திரமல்ல எப்போதுமே வேண்டாம் என்றும், இக்கமிஷனில் இந்தியர்களுக்கு இடமளிக்காததால் இந்தியர் கமிஷனை பஹிஷ்கரிக்க வேண்டும் என்றும்...

பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப் பிரசாரம் 0

பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப் பிரசாரம்

நான் இவ்வூருக்கு இதற்கு முன் இரண்டு தடவை வந்திருக்கின்றேன். இது மூன்றாம் தடவை. தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல இடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால் சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலைப் பெற்று வாழும் மக்களிடம் சுயமரி யாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப் பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நாம் பல ஆயிரம் வருஷங்களாக விடுதலையின்றி அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பது நன்கு விளங்கும். முன்னர் சுமார் 500 வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள் இருந்த நிலைமையையும், இப்போது அவர்கள் இருக்கும் நிலைமையையும் கவனிக்கையில் அவர்கள் எங்ஙனம் மாறுதலடைந்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இவர்கள் அக்காலத் தில் நம்மைவிட பக்தி, மூடக் கொள்கை முதலிய படுகுழிகளில் ஆழ்ந்து கிடந்தார்கள். நாம்...

ஞானசூரியன் 0

ஞானசூரியன்

ஸ்ரீலஸ்ரீ சிவாநந்த சரஸ்வதி ஸ்வாமிகளால் எழுதப்பட்டு ஸ்ரீமான் கானாடுகாத்தான் வயிசு ஷண்முகம் செட்டியார் அவர்களால் பொது நன்மையை உத்தேசித்து அச்சிடப்பட்ட “ஞானசூரியன்” என்னும் புத்தகம் நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகம் தமிழ்நாட்டு மக்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டியவைகளில் ஒன்று என்றே சொல்லுவோம். இதைப் படித்து பார்த்தால் வேதம் என்று சொல்லுவதில் உள்ள ஆபாசங்கள் வெளியாவதுடன் வேதத்தை ஏன் ஒரு வகுப்பார் தவிர மற்ற வர்கள் படிக்கக் கூடாதென்று ஆதியிலிருந்தே பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். ஸ்ரீலஸ்ரீ சுவாமி அவர்கள் இதில் பெரும்பாகம் வேதத்தில் உள்ள சுலோகங்களையும் மற்றும் வேதத்தை ஆதாரமாய் கொண்ட சமஸ்கிருத நீதிநூல்கள் என்பவைகளில் உள்ள சுலோகங்களையும் எடுத்து எழுதி அதற்கு அர்த்தம் எழுதியிருப்பதுடன் ஆரியர்களான பார்ப்பனர்களின் அநாகரிகத்தையும் அவர்களது காட்டு மிராண்டித்தனத்தையும் சுயநலத்தையும் நன்றாய் விளக்கி இருக்கின்றார். இதை ஒரு தடவை வாசித்துப் பார்த்தவன் நேருக்கு நேராக விமானம் வந்து தன்னை கூட்டோடு...

சேலம் மகாநாடு 0

சேலம் மகாநாடு

சேலம் மகாநாடு சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு விறோதமாக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி கொஞ்சமல்ல. இது விஷயத்தில் ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடுவும் ஜி. ராமசந்திர நாயுடுவும் எடுத்துக் கொண்ட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. பார்ப்பனர்கள் இவர்கள் முயற்சிக்கு செய்த கொடுமைகளையும் இடையூறுகளையும் பார்த்து மனம் பொறுக்காமலேயே பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் அநேகர் சேலம் மகாநாட்டிற்கு வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் சேலம் மகாநாட்டால் வெளியா யிற்று. அதென்னவெனில் காங்கிரசை பார்ப்பனர்களிடமிருந்து பார்ப்பன ரல்லாதார் லேசில் கைப்பற்றிவிடலாம் என்று வெகு சுலபமாக சிலர் வாயில் பேசிக் கொண்டிருந்தது தப்பு என்பதும் அது சுலபத்தில் முடியக்கூடிய காரியம் அல்ல என்பதும் நன்றாய் வெளியாய்விட்டது. பார்ப்பனரல்லாதார் சேலம் ஜில்லா மகாநாட்டு வரவேற்புக் கமிட்டியைக் கைப்பற்ற மாத்திரம் 1000ரூ. சிலவு செய்ய வேண்டியிருந்தது. அப்படிக் கைப்பற்றியும் கூட அநேகமாய் எல்லா பார்ப்பனர்களும் வெளியேறியதுடன் சில கோடரிக் காம்புகளையும் பிடித்து இது...

மாயவரம் மகாநாடு 0

மாயவரம் மகாநாடு

மாயவரத்தில் பார்ப்பனரல்லாதார் மகாநாடும் சமரச சன்மார்க்க மகா நாடும் இளைஞர் மகாநாடும் கூடிக் கலைந்து விட்டது. அதற்குச் சரியென்றும் அவசியமென்றும் தோன்றிய பல தீர்மானங்களும் நிறைவேற்றியிருக்கிறது. இம்மகாநாடு நடந்த சிறப்பும் வந்திருந்த பிரதிநிதிகளும் தமிழ்நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்திருந்த பெரியோர்களும் அவர்கள் ஒவ்வொரு தீர்மானத்தின் மீது பேசிய பேச்சுக்களும் மக்களுக்குப் பிறந்த உற்சாகங் களும் நேரில் பார்த்தவர்களே அறியக்கூடுமேயல்லாமல் மற்றபடி எவ் விதத்திலும் அதை அப்படியே தெரியப் படுத்துவதென்பது மிகவும் கஷ்ட மான காரியமென்றே சொல்லுவோம். இம்மகாநாட்டை நடத்த தஞ்சை ஜில்லா தேசபக்தர்களும் பிரமுகர்களும் உழைத்த உழைப்பு மிகவும் பாராட்டத்தக்க தென்றே சொல்லுவோம். இந்நிலையில் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தினிடத்தில் பொறாமையும் துவேஷமும் கொண்டு “தமிழ்நாடு” பத்திரிகை செய்த எவ்வளவோ சூழ்ச்சிகளையும் தாண்டி எவ்வளவோ தூரம் சிறப்பாய் நடந்துவிட்டதென்று சொன்னால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதுதான். மதுரையில் நடந்த மகாநாட்டின் போதும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் காங்கிரசில் உழைத்து வந்த சில தேச...

சென்னை கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும் 0

சென்னை கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும்

சென்னை கார்ப்பரேஷனுக்குத் தலைவர் தெரிந்தெடுக்க வேண்டிய சடங்கு இம்மாதத்தில் நடக்க வேண்டும். சென்னை முனிசிபாலிட்டியில் இதுசமயமுள்ள 50 கவுன்சிலர்களில் பார்ப்பன கக்ஷியில் சுயராஜ்யக் கக்ஷிக்கும் சுயேச்சை கக்ஷிக்குமாக சுமார் 20 கவுன்சிலர்கள் இருக்கின்றார்கள். பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்கும் சுமார் 20 கவுன்சிலர்கள் இருக்கின்றார்கள். மீதி வெள்ளைக்காரர்களாக இருக்கின் றார்கள். ஆகவே, எந்த கக்ஷியாரும் வெள்ளைக்காரர்கள் தயவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் வெள்ளைக்கார கவுன்சிலர்கள் இரண்டுக் கக்ஷித் தலைவர்களையும் தங்கள் முன் வந்து அவரவர்கள் கொள்கைகளை உபந்நியாசம் செய்யும்படிக்கும் அதில் யார் வெள்ளைக் காரர்களுக்கு அனுகூலமாயிருக்கிறார்களோ அவர்களுக்குத் தங்கள் ஓட்டை கொடுப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் பேச்சை நம்பி இரண்டு கக்ஷிக் காரர்களும் அதாவது பார்ப்பனரல்லாத கக்ஷிக்காக முக்கியமாய் பனகால் ராஜாவும் பார்ப்பன கக்ஷிக்காக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரும் பேசினார் கள். மற்றும் ஸ்ரீமான்கள் பாத்ரோவும், சாமி வெங்கிடாசலம் செட்டியாரும் முறையே பேசி இருந்தாலும் முன்சொன்ன இருவர்கள் பேசினதையே பிரதானமாய்...

சந்தேகம் உறுதியாய் விட்டது 0

சந்தேகம் உறுதியாய் விட்டது

ஸ்ரீமதிகள் துரைகண்ணு அம்மாள், பார்வதியம்மாள் ஆகிய இரு பெண்கள் பெயரால் பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்கு கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்பிரசாரமும் செய்ய வந்த காரியங்களை நாம் பார்த்தவு டனேயே இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆண்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படி சந்தேகப்பட்டது சரியென்று மெய்ப் பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. என்னவென்றால் சுயராஜ்ஜி யக் கக்ஷி உயிர்நிலையான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் கக்ஷித் தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால் இம்மாதிரி ஆnக்ஷபங் களை பொது ஜனங்கள் லக்ஷ்யம் செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின் றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.11.1927

பார்ப்பன சூழ்ச்சி 0

பார்ப்பன சூழ்ச்சி

நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள் நாட்டில் தங்களுக்கும் இக்காரியத்திற்கும் ஆதரவில்லை என்று தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்களின் பெயரை வைத்துக்கொண்டு, வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்கள். இது காங்கிரசின்போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற் காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங் களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்து விட்டால் நாளைக்கு பார்ப்பன கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கும் ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரிய மென்றுமே சொல்லுவோம். இனியும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும் ஏமாற்றமும் செய்யக்கூடும் என்பதையும் இக்கூட்டத் திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக. குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.11.1927

ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒரு வார்த்தை 0

ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒரு வார்த்தை

ராயல் கமீஷனைப்பற்றி ஜஸ்டிஸ் கக்ஷியார்கள் ஒருவித அபிப் பிராயமும் இதுசமயம் தெரிவிக்கக்கூடாது என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். பார்ப்பன அரசியல் தந்திரத்தை நாம் பின் பற்றுவதும் அவர்களது இயக்கங்களை நாம் பின்பற்றுவதும் பார்ப்பனரல்லாத சமூகத்தின் தற்கொலையேயாகும். நம் நாட்டில் பார்ப்பனர்கள் சம்மந்தப்பட்ட அரசியல் இயக்கங்கள் என்பது எதுவும் கொஞ்சமும் நாணயமுடையதல்ல. அக்கூட்டத்திற்கே இவ்விஷயங்களில் மானம், வெட்கம், நாணயம் முதலியவைகள் கடுகளவும் கிடையாது என்றே சொல்லுவோம். ஏனெனில் இன்று பஹிஷ்காரம் என்பார் கள் நாளை ஏற்றுக்கொள்ளுவது என்பார்கள் இன்று ஒத்துழையாமை என்பார் கள் நாளை ஒத்துழைப்பு என்பார்கள். இன்று முட்டுக் கட்டை என்பார்கள் நாளை சன்னைக் கட்டைப்போட்டு நடத்திக் கொடுப்பது என்பார்கள், இன்று நம்பிக்கை இல்லை என்பார்கள். நாளை சம்மந்தம் செய்து கொள்ளுவது என்பார்கள். இன்று காங்கிரஸ் கட்டளை என்பார்கள் நாளை காற்றில் பறக்க விடுவார்கள். இன்று வைவார்கள். நாளைக்கு பல்லைக் காட்டுவார்கள். இவ்வளவும் தங்கள் சுயநலத்திற்காகவே செய்வார்கள். எனவே, இம்மாதிரி கூட்டத்தில்...

ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை                II 0

ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை II

சென்ற வாரம் மேல்கண்ட தலைப்புடன் ஒன்று இலக்கமிட்டு ஒரு தலையங்கம் எழுதி இருந்தோம். இவ்வாரம் அதே தலைப்புடன் இரண் டாவது வியாசம் எழுதுகின்றோம். சென்ற வாரம் ராயல் கமீஷன் என்பது சர்க்காரும் அரசியலின் பேரால் வாழும் சில தலைவர்கள் என்னும் படித்தக் கூட்டத்தாரும் சேர்ந்து இந்திய ஏழை மக்களை வஞ்சித்து கொடுமைக்குள்ளாக்கி வாழச் செய்யும் சூழ்ச்சி என்கின்ற கருத்துக்கொண்டே அதைக் கூட்டுக் கொள்ளை என்று சொன் னோம். அந்தப்படி சொல்லியவைகளையெல்லாம் இவ்வாரத்திய சம்ப வங்கள் உறுதிப்படுத்தியதோடு இந்தியத் தலைவர்கள் என்று சொல்லப்படும் கூட்டம் எவ்வளவு தூரம் உண்மையும் யோக்கிய பொறுப்பும் அற்றவர்க ளென்பதும் எவ்வளவு தூரம் நாணயக் குறைவுகளுமுடையவர்கள் என்ப தையும் விளக்கி விட்டது. காங்கிரஸ் என்பதும் மற்றும் அதுபோன்ற அரசியல் இயக்கங்கள் என்பதும் அடியோடு ஏழை மக்களை சில அறிவாளிகள் ஏமாற்றவும் கொடுமைப்படுத்தவும் ஏற்பட்டன என்றும் அவைகளின் பலன் அவைகள் ஏற்பட்ட நாள் தொட்டு இந்திய நாட்டையே அடியோடு பல...

மாயவரம் மகாநாட்டின் எதிரிகளின் சூக்ஷியும்  திரு. வி.கலியாணசுந்திர முதலியாரின்  விஜயமும் 0

மாயவரம் மகாநாட்டின் எதிரிகளின் சூக்ஷியும் திரு. வி.கலியாணசுந்திர முதலியாரின் விஜயமும்

ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மாயவரம் மகாநாட்டுக்கு வந்ததும் மகாநாட்டில் அதுசமயம் கூடியிருந்த சுமார் 3000 பேருக்கு மேல்பட்டுள்ள மகாஜனங்கள் செய்த ஆரவாரத்திற்கும் அடைந்த சந்தோஷத்திற்கும் அளவு சொல்ல யாராலும் முடியாது என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் முதலியார் அவர்களை மாயவரம் மகாநாட்டுக்குப் போகவிடக்கூடாது என்று செய்த சூட்சிகள் கொஞ்சமும் பலிக்கவே இல்லை. உண்மையான தேசபக்தர்கள் மாயவரம் மகாநாட்டுக்குப் போகக்கூடாது என்று ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தனது ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் எழுதி இருந்தது யாவருக்கும் தெரியும். அதோடு ‘தமிழ்நாடு’ பத்திரிகை ஏஜண்டு ஒருவர் ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கு ஒரு பயமுருத்தல் கடிதம் எழுதி அதில் மாயவரத்திற்கு வரக்கூடாது என்றும், வந்தால் கலகம், அடிதடி, மரியாதைக் குறைவு முதலியதுகள் நடக்குமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

பார்ப்பனரல்லாதார் மகாநாடு

மதுரை பார்ப்பனரல்லாதார் மகாநாட்டிற்குப் பிறகு அம்மகாநாட்டின் தீர்மானங்களைத் தமிழ்நாட்டில் அமுலில் கொண்டு வருவதற்காக ஒவ் வொரு ஜில்லாவிலும் ஜில்லா மகாநாடு கூட்டவேண்டுமென்று 3, 4 மாதங் களாகவே எழுதி வந்திருப்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் சில ஜில்லாக்கள் இதைப்பற்றி எவ்விதக் கவலையும் எடுத்துக் கொண்டதாக தெரியவேயில்லை. தஞ்சை, கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஆகிய ஜில்லாக்கள் மாத்திரம் மகாநாடு கூட்டும் விஷயத்தில் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பது வெளிப்படையாய் தெரியவருகிறது. மற்றும் இரண்டொரு ஜில்லாக்கள் நமக்கு மாத்திரம் தனித்த முறையில் தெரியப்படுத்தி இருக்கிறதே அல்லாமல் காரியத்தில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாய் தெரியவில்லை. கோயமுத்தூர் ஜில்லாவில் இம்மாத மத்தியில் மகாநாட்டை நடத்துவதாயிருந்ததானது சிலரின் சௌகரியத்தை உத்தேசித்து அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. ஆனபோதிலும் மகாநாட்டிற்காக ஆக வேண்டிய விஷயங்களை கோயமுத்தூர் பிரமுகர்களான ஸ்ரீமான்கள் வெரிவாட செட்டியார், சம்மந்த முதலியார், இரத்தினசபாபதி முதலியார், சாத்தப்ப செட்டியார், இரத்தினசபாபதி கவுண்டர், ஞளுழு.வெங்கிடுசாமி நாயுடு, அருணாசலம் செட்டியார்...

சுப்பராய பிரம்மா 0

சுப்பராய பிரம்மா

டாக்டர் சுப்பராயன் ஜாதிகளை சிருஷ்டிக்கும் வேலையில் மிகுதியும் ஈடுபட்டு வருகிறார்போல் தெரியவருகின்றது. சென்ற வாரம் பார்ப்பனரல்லாதார் என்பதாக பிரித்து விஸ்வப் பிராம ணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், தீண்டாதார், தாழ்த்தப்பட்டவர் என்பதாக பல ஜாதிகளை சிருஷ்டித்தார் என்பதாக எழுதி அவற்றைக் கண்டித்து ஒரு இறுதிக் கடிதமும் எழுதினோம். இந்த வாரம் கிருஸ்தவ ஆதித் திராவிடர் என்று ஒரு புதிய ஜாதியை சிருஷ்டித்திருக்கின்றார். இந்து என்கிற ஒரு இல்லாத மதக்காரர்களைப் பிடித்த சனியன் கிருஸ்தவ மதக்காரரையும் தொத்திக் கொண்டுவிட்டதாகக் காண் கின்றது. இனி இந்த பாழும் இந்துமதம் என்னும் பொய் மான் இனியும் எந்த எந்த மக்களைப் பிடித்து ஆட்டுமோ தெரியவில்லை. கொஞ்சமும் தாக்ஷண்யம் பாராமல் இந்து மதம் என்னும் பேதமையை அடியோடு வெட்டிப் புதைத்தாலொழிய நமது நாட்டில் வைப்பாட்டி மக்க ளையும் தீண்டாதார்களையும் கீழ் ஜாதியார்களையும் உற்பத்தி பண்ணிக் கொண்டே போகும் வேலை நிற்கவே நிற்காது என்றே நினைக்கின்றோம். குடி அரசு...

பொதுப் பணம் போகும் வழி 0

பொதுப் பணம் போகும் வழி

வங்காளத்தில் கிராம சீர்திருத்தம் என்பதாக தேசபந்து தாஸ் பேரைச் சொல்லி பொது ஜனங்களிடம் நிறைய பணம் வசூலித்து கடைசியாக அந்தப் பணத்தை சுயராஜ்ஜியக் கக்ஷி தேர்தலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டதாக கோர்ட்டில் விவகாரம் நடக்கிறது. இங்கும் அதுபோலவே குறிப்பிட்ட காரியங்களுக்கென்று ஒதுக்கி வைத்த ரூபாய்களும் வசூலித்த ரூபாய்களும் தேர்தல்களுக்கே சிலவாகி வருகிறது. ஆனாலும் இங்கு கோர்ட்டில் வியாஜ் ஜியம் போட ஆளில்லை. பின்னையோ மேலும் மேலும் பணம் கொடுக்கத் தான் ஏராளமான சோணகிரிகள் இருக்கிறார்கள். குடி அரசு – செய்திக் குறிப்பு – 08.05.1927

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மென் தேர்தலானது முன் வைஸ்சேர் மென் அவர்கள் குறித்தது போலவே நவம்பர் மாதம் 1 -ந்தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாயிற்று. ஆனால் மாஜி சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் இந்த தேர்தலையும் நிறுத்துவதற்காக சர்க்காருக்கு எழுதியதில், சர்க்காரும் எலக்ஷனை நிறுத்த அனுமதி கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் சேலம் ஜில்லா போர்டு எலக்ஷனை நடத்தக்கூடாது என்று சர்க்கார் உத்தரவு வந்தும் சேலம் ஜில்லா போர்டார் அதை லக்ஷியம் செய் யாமல் தைரியமாய் நடத்தினத் தேர்தல் நிலைத்து விட்டதைக் கண்ட ஈரோடு முனிசிபாலிட்டியாரும் சர்க்கார் உத்தரவை லக்ஷியம் செய்யாமல் தைரியமாய் நடத்தி விட்டார்கள். ஏனெனில் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அன்று பகல் 12 மணிக்கு மேல் முனிசிபல் ஆபிசுக்கு வரக்கூட யோக்கியதை இல்லாது போய்விட்டதால், மற்றபடி முதலியார் கக்ஷியைச் சேர்ந்த ஆள்களில் சிலர் தேர்தலை நடத்தக்கூடாது என்று மீட்டிங்கில் ஆnக்ஷபித்தும் அது யாராலும் லக்ஷியம் செய்யப்படாமல் போய் விட்டது. தவிரவும்...

பார்ப்பன நிருபர்களின் சக்தி 0

பார்ப்பன நிருபர்களின் சக்தி

இந்திய சட்டசபையில், சட்டசபை நடந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் உள்ள “இந்து பத்திரிகை”க்கும் “மெயில் பத்திரிகை”க்கும் ஒரே நிருபர் இருந்து கொண்டு இரண்டு பத்திரிகைக்கும் இரண்டுவிதமான சமாச்சாரத்தை அனுப்பி வந்தாராம். ‘இந்து’ வுக்கு எழுதும்போது ஒரே கையில், ஒரே பேனாவில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றி எழுதும் போது ஸ்ரீமான் அய்யங்கார் வந்தவுடன் எல்லோரும் கரகோஷம் செய் தார்கள், அற்புதமாய் பேசினார். வெள்ளைக்காரர்கள் வாயை அடக்கி திக்கு முக்காட வைத்து விட்டார், புது புது யோசனைகள் வெகு யுக்தி யுக்தியாகப் பேசினாராம், அவரே தலைவர் பதவிக்குத் தகுந்தவர் என்று பேசிக் கொண்டார்கள் என்று எழுதுவதும், அதே கை அதே பேனாவில் “மெயி” லுக்கு எழுதும் போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் “குரங்கு” குல்லாயுடன் உள்ளே நுழையும் போது எல்லோரும் பரிகாசம் செய்து சிரித்தார்கள் என்றும் இவர்தானா சீனிவாசய்யங்கார்? கொஞ்சமாவது புத்தியில்லையே! சட்டசபை விதிகள் கூட தெரியவில்லையே, இவர் தலைமை வகித்ததற்குத் தானா காங்கிரஸ் என்று...

காங்கிரஸ் புரட்டு 0

காங்கிரஸ் புரட்டு

காங்கிரஸ் என்கிற புரட்டு என்றைக்கு நம்ம நாட்டை விட்டு ஒழியு மோ, அன்றுதான் நம்ம நாடு ஒரு சமயம் ஏழைகள் கஷ்ட மொழிந்து மக்கள் சமத்துவமடைந்து ஒற்றுமை ஏற்பட்டு தரித்திரம் நீங்கி விடுதலை அடைவ தானால் அடையக்கூடும் என்றும், எதுவரை இக்காங்கிரஸ் புரட்டு நமது நாட்டில் இருக்குமோ அதுவரை நமது நாட்டில் தற்காலமிருந்துவரும் கஷ்டங் கள் கொஞ்சமும் நீங்க இடமில்லாமல் மேலும் மேலும் ஊர்ந்து கொண்டே வருவதுடன் படித்த கூட்டமும், பணக்காரக் கூட்டமும் மாத்திரம் சில நாளைக்கு இனியும் கொஞ்சம் மேன்மையாய் வாழ்ந்துவிட்டு பிறகு எல்லோ ருமே நீங்கினவர் போலவும் வாலில்லாத குரங்கு போலவும் வாழவேண்டியது தானே ஒழிய வேறில்லை என்பது நமது அபிப்ராயம் என்பதாகப் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். எவ்வளவு தூரம் நாம் எடுத்துக் காட்டியும் இன்னமும் மக்களை காங்கிரஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்தார் கொஞ்சமும் இதை லக்ஷியம் செய்யாமல் மக்களின் அறியாமை யை உபயோகப்படுத்திக் கொண்டு...

இந்திய தேசீயம்  காங்கிரசுக்கு பணம் சேர்க்கும் முறை 0

இந்திய தேசீயம் காங்கிரசுக்கு பணம் சேர்க்கும் முறை

யானைக்கவுக்களிக்கடுத்த கிருஷ்ணா தியேட்டர் என்னும் நாடகக் கொட்டகையில் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்ணைக் கொண்டு வள்ளிபர்ணியம் அதாவது வள்ளி என்கின்ற குறப்பெண்ணை பரமசிவன் என்கிற இந்து மதக் கடவுளுடைய மகனான சுப்பிரமணியக்கடவுள் என்கிற மற்றொரு இந்து மதக் கடவுள் நரசோரம் செய்த (அதாவதுதிருட்டுத்தனமாய் அடித்துக்கொண்டு போன) கதையை நாடகமாக நவம்பர் மாதம் 3 -தேதி ஆடிக்காட்டி அதன் டிக்கெட் விற்பனையின் மூலம் காங்கிரசுக்கு பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தேசீயப் பத்திரிகைகள் என்பவை நாடகத்தைப்பற்றி விளம்பரம் செய்வது கூட தப்பு என்று ஒரு காலத்தில் மகாத்மாவாயிருந்த ஸ்ரீமான் காந்தி எழுதியிருந்தார். இப்போது தேசீய சபையின் தலையெழுத்து நாடகமாடி பணம் சம்பாதிக்க வேண்டியதாய்ப் போய் விட்டது. அதிலும் என்ன நாடகம் என்றால் ஒருவன் பெண்ணை ஒருவன் திருடிக்கொண்டு போகின்ற நாடகம். அதுவும் எதன் பேரால் என்றால் இந்து மதத்தின் பெயராலும், இந்துமதக்கடவுள் பெயராலும் அதுவும் யாரால் என்றால் ஸ்ரீமதி கமலம் என்கின்ற...

புதிய கட்சிகள்                                             பெசன்ட்  அம்மையாராட்சி 0

புதிய கட்சிகள் பெசன்ட் அம்மையாராட்சி

சாதாரணமாய் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி வேலைகள் மும்முரமாய் நடப்பது இயற்கை. உதாரணமாக ஒரு காலத்தில் எங்கும் பஜனைக் கூடங்கள் ஏற்படும். மற்றொரு சமயம் எங்கும் ரீடிங்ரூம் ஏற் படும். மற்றொரு காலத்தில் எங்கும் சங்கீத சபைகள் ஏற்படும். இம்மாதிரியே ஓரோர் சமயத்தில் ஓரோர் காரியம் செல்வாக்குப் பெறுவதுண்டு. அதுபோலவே நமது நாட்டில் புதுப் புது கட்சிகள் ஏற்படுவது இக்காலத்திய சம்பவமாக இருக்கின்றது. சமீப காலத்திற்குள் அரசியலின் பெயரால் அநேக கட்சிகள் ஏற் பட்டாய்விட்டது. இனியும் பல கட்சிகள் ஏற்படும் போலவும் இருக்கிறது. அதாவது தென்இந்திய நலஉரிமைச் சங்க மாகாண மகாநாடு கோயமுத்தூரில் நடந்த பின்பு, திருப்பூர் பார்ப்பனரல்லாதார் சுயேச்சை கட்சி என்பதாக ஒரு கட்சி உண்டுபண்ணி ஸ்ரீமான் திருப்பூர் ராலிங்கம் செட்டியார் முயன்று ஒன்றும் முடியாமல் கடைசியாக ஒரு மகாநாடு கூட்டி கோயமுத்தூர் தீர்மானத்தை ஆட்சேபித்து கவர்னரையும் மந்திரிகளையும் ஆதரித்து ஒரு தீர்மானம் செய்து சர்க்காருக்கு அனுப்பி, தற்கால சாந்தியாய்...

ஒரு விண்ணப்பம் 0

ஒரு விண்ணப்பம்

திருவண்ணாமலை கோவில் பிரவேச தடுப்பு வழக்கு அநேக வாய்தாக்கள் ஏற்பட்டு இதுவரை 500 ரூபாயுக்கு மேலாகவே சிலவாகி இருக்கின்றது. ஆனால் வாதி தரப்பு மாத்திரம் தான் முடிவாயிருக்கிறது. இனி எதிரி தரப்பில் சுமார் 2, 3 சாக்ஷிகள் போடப்பட்டிருக்கின்றது. தினம் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சாக்ஷிகள் மேல் விசாரணை ஆவதற்கில்லாமல் வளருகின்றது. ஆதலால் இனியும் குறைந்து 10 வாய்தாக்களாவது ஏற்படலாம். வக்கீல்கள் பீஸ் இல்லாமல் நமக்காகப் பேசியும் அவர்களுக்கு வழிச்சிலவும் சாக்ஷிகளுக்கு வழிச்சிலவுமாகவே மேல்கண்ட ரூபாய்கள் சிலவாகி இருக்கும் போது பாக்கி விசாரணைக்கு 500 ரூபாயாவது பிடிக்கும் என்பதில் சந்தேக மில்லை. ஆதலால் நண்பர்கள் தங்களால் கூடியதை சேர்த்து சீக்கிரம் அனுப்ப வேண்டுமாய் சிபார்சு செய்கின்றோம். ஏனெனில் இப்பேர்ப்பட்ட உண்மைச் சுயமரியாதைக்காக தொடரப்பட்டிருக்கும் வழக்கு நாட்டில் மக்கள் ஆதரவில்லையானால் மற்றபடி பின்னால் நடக்க வேண்டிய காரியங்களுக்கு எப்படி பொதுமக்களை நம்ப இடமுண்டாகும். ஆதலால் வெளிநாட்டு நண்பர்களும் உள்நாட்டு நண்பர்களும் கூடிய...

நமது பத்திரிகை 0

நமது பத்திரிகை

சகோதர வாசகர்களே ! நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம். இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச...

ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை               I 0

ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை I

இந்தியாவுக்கு இன்னமும் ஒருமுறை சீர்திருத்தமளிப்பதற்காக, நாட்டின் நிலையை விசாரிக்க என்பதாக, ஒரு கமீஷனை சர்க்காரார் நியமிக்கப் போகிறார்களாம். இந்தக் கமீஷனில் பலர், தாங்கள் தாங்கள் அங்கத்தினர் களாக வேண்டுமென்கின்ற ஆசையின் பேரில் “அரண்மனை நெல்லுக்கு பெருச்சாளிகள் சண்டை போட்டுக்கொள்வதுபோல்” தலைவர்கள் ஆளுக் காள் முந்துகின்றார்கள். சர்க்காரும், யாரை நியமிப்பது யாரை விட்டு விடுவது என்கிற கவலையில் மிகுதியும் ஆழ்ந்திருக்கின்றார்கள். ஏனெனில் யாராவது செல்வாக்குள்ள மனிதர் பெயர் அதில் விடுபடுமானால் அவர் மற்றவர்களை சேர்த்துக் கொண்டு கமீஷனை பஹிஷ்கரிப்பதாகவோ சீர்திருத்தத்தை பஹிஷ்கரிப்பதாகவோ கலகம் செய்தால் என்ன செய்வது என்கின்ற பயம் ஒரு புறமும், ஜனங்களிடம் செல்வாக்கில்லாதவரை நியமிக்க நேரிட்டு விட்டால் கமிட்டிக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயம் மற்றொரு பக்கமாகவும் இருந்து கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள். இந்த நிலை யில் தலைவர்களும், தேசீயச் சங்கங்கள் என்கின்றவர்களும் கமீஷனைப் பற்றி முடிவாக யாதொரு அபிப்பிராயமும் சொல்வதற்கில்லாமல் சுவற்றுமேல் பூனை போலிருக்கிறார்கள். ஆகவே, இந்தக் கமீஷன்...

எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம் 0

எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம்

தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியநாடு முழுவதிலுமே இது சமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதை பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு வடதேசத் தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களை தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம். மறுபடியும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததும், அதற்கு ஸ்ரீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனு கூலம் செய்வார்கள் என்று ஒப்புக்கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன் மதாச்சாரியார்கள் என்பவர்களையும் பஹிஷ்கரிக்க வேண்டுமென்று பம்பாய் மாணவர்கள் ஒன்றுகூடி தீர்மானித்த தும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியாதைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளை சர்க்காரார் பறிமுதல் செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்த தும், தாழ்ந்த ஜாதி, தீண்டாத ஜாதி,...

ஆதித்திராவிட மகாநாடு 0

ஆதித்திராவிட மகாநாடு

காட்பாடிக்கடுத்த பிரம்மாபுரம் என்கிற ஊரில் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஆ. ஊ. ராஜா ஆ.டு.ஹ. அவர்கள் அக்கிராசனத்தின் மீது கூட்டப்பட்ட ஆதிதிராவிட மகாநாட்டில் தலைவர் செய்த உபந்யாசத்தின் முக்கிய நோக்கத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தி சாம்பலாக்க வேண்டும் என்பதாகப் பேசியிருப்பதுடன் அதை பறிமுதல் செய்யவேண்டும் என்று தீர்மானமும் செய்திருப்பதானது அச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சுயமரியாதையை விளக்குகிறது. தவிர வீதியில் நடக்க உரிமை வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கும் தீர்மானமும் அது போன்ற மற்றும் மனித உரிமை கேட்கும் தீர்மானமும் இந்த நாட்டில் மக்கள் சுய மரியாதையடைவதற்கு தகுந்த யோக்கியதை இல்லையென்று காட்டுவதற்கு உதவியாயிருக்கின்றது. எனவே சுயமரியாதை பெற்ற பிறகுதான் சுயராஜ்யம் என்பதைப்பற்றி யோசிக்க இடமுண்டு என்பதற்கு இந்த ஆதிதிராவிட மகாநாடே போதுமான அத்தாக்ஷியாகும் என்பது நமது அபிப்பிராயம். குடி அரசு – செய்தி விளக்கம் – 30.10.1927

ஸ்ரீமான் காந்தி 0

ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று ஐரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார் கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார். நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார் கள். ஆகவே அவர் அவ்வளவு தூரம் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகின்றது. இப்படி ஐரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும் வரவேற்றுக்கொண்டாடத்தக்க வராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான ஐரோப்பியரல்லாத – பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அரிசி பதம் பார்த்தால் போதும் அல்லவா? குடி அரசு – கட்டுரை – 30.10.1927

சூத்திரன் 0

சூத்திரன்

சூத்திரன் என்கிற வார்த்தையானது இழிவான அர்த்தத்தைப் புகட்டி வஞ்சனையாக ஏற்படுத்தப்பட்டதென்றும், அது பார்ப்பனர்களின் சூழ்ச்சி யால் பார்ப்பன ஆதிக்கத்திற்காக உண்டாக்கப்பட்ட தென்றும், அவ்வார்த்தை நமது நாட்டில் எந்த விதத்திலும் நம்ம தலையில் இருக்கக் கூடாதென்றும், கிளர்ச்சி செய்து அதில் ஒரு விதமான வெற்றிக்குறி காணப்படுகிற காலத்தில் சர்க்காராரே சூத்திரன் என்கின்ற பதத்தை உபயோகித்து வருகின்றார்கள் என்றால் இந்த சர்க்காருக்கு கடுகளவாவது மக்களின் யோக்கியமான உணர்ச்சியில் கவலை இருப்பதாக யாராவது எண்ணக்கூடுமா? பார்ப்பனர் களே இப்போது சூத்திரன் என்று சொல்ல பயப்படுகிறார்கள். அவர்கள் எழுதி கட்டித் தொங்க விட்டிருந்த போர்டு பலகைகளையெல்லாம் அவிழ்த்தெறி கின்றார்கள். வாழ்க்கையில் இப்போது சூத்திரன் என்கின்ற சப்தம் பார்ப்பனப் பெண்களிடையும் கோமட்டி செட்டியார்கள் என்கின்ற ஒரு வகுப்புப் பெண்களிடையும் தான் இப்போது உச்சரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் நாளுக்குநாள் மறைந்து கொண்டே போகின்றது. அப்படி இருக்க சர்க்காரில் அதுவும் ஒரு பார்ப்பனரல்லாதாராகிய ஒருவரின் ஆதிக்கத்தில் உள்ள இலாகாவில் அதுவும்...

சென்னையில்                                பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு 0

சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு

சென்ற வாரம் 22, 23 – ம் தேதிகளாகிய சனி ஞாயிற்று கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு பெங்களுர் சட்டசபை மெம் பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது. சுமார் ஆண், பெண் உட்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய்திருந்தார்கள். அவ்வாலிப சங்கத் தலைவரும் மகா நாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபந்யாசமும், வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றன. அவற்றை ஒவ்வொரு வரும் கவனித்துப் படிக்க வேண்டியது அவசியம். தவிர இம்மகாநாடானது அளவுக்கு மேல் வெகு விமர்சையாகவும் அதி ஊக்கமாக வும்,...

தேவதாசி விண்ணப்பம் 0

தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும் மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபட வேண்டு மென்பதாக பலர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக சென்னை சட்ட சபை அங்கத்தினரும், உபத் தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால் விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக் கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும் அப்படி செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும் அதற்குப் பின்புறம் சிலரிருந்துக்கொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வ...

வருணாசிரம மகாநாடு 0

வருணாசிரம மகாநாடு

காங்கிரசின்போது காங்கிரசுப் பந்தலில் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு நடக்கப்போவதாய் பல பத்திரிகைகளில் தெரிய வருகின்றது. வருணாசிரம மகாநாடு என்பது என்ன என்று நாம் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது குறிப்பிடுவோம். என்னவெனில் உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் 6 வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதாவது:- 1. பிராமணன் 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் 5. பஞ்சமன் 6. மிலேச்சன் என்பதாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதில் பிராமணன் உயர்ந்தவன் குருவாயிருக்கத்தக்கவன், க்ஷத்திரியன் அதைவிடத் தாழ்ந்தவன் அரசனாயிருக்கத்தக்கவன், வைசியன் அதைவிடத் தாழ்ந்தவன் வியாபாரியாய் இருக்கத்தகுந்தவன், சூத்திரன் அதைவிடத் தாழ்ந்தவன் மேல்கண்ட மூவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டியதோடு சிறப்பாக பிராமணர்களுக்கு அடிமையாகவும் இருப்பதுடன் சூத்திரனது பெண்களும் பொருள்களும் பிராமணர்களுக்கே உரியது என்றும், கொடுக்காவிட்டால் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும், அவர் படிக்கவும் கடவுளை நெருங்கி வணங்கவும் உரிமையற்றவன் என்கின்றதுமான கொள் கையை கொண்டது. ஆதிதிராவிடர், ஆதிசூத்திரர், அவர்ணஸ்தர் நாம் சூத்திரர்...

போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு 0

போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே! இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப் பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மகாநாட்டுக்கு அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனா வேன். உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில் லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்க வேண்டியவனாயிருக் கிறேன். என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷ காலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு 11 வயதுக்குள்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தை விட உபாத்தியா யரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள், இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதித் தாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 – வது...

ஒரு வெளிப்படையான ரகசியம் 0

ஒரு வெளிப்படையான ரகசியம்

அடுத்த 5-5-27 தேதியில் பம்பாயில் கூடப்போகும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒரு தீர்மானம் கொண்டு போகப் போகிறாராம். அதாவது :- மாகாண சட்ட சபைகளில் காங்கிரஸ்காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தில் அந்தந்த மாகாணத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ள மாகாணச் சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்பதே. அந்தத் தீர்மானம் நிறைவேறியவுடன், சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் சில தீர்மானங்கள் கொண்டுவரப் போகிறாராம். அதாவது :- மந்திரிப் பதவியை ஒப்புக் கொள்ளலாம் என்றும், இப்போதுள்ள மந்திரி சபையை கலைத்துவிடவேண்டுமென்றும், மறு மந்திரிசபை அமைப்பதில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் முதல் மந்திரியாக வும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கல்வி, தேவஸ்தானம் மந்திரியாகவும், ஸ்ரீமான் சுப்பராயன் கலால் மந்திரியாகவும் அமைப்பது என்றும் முடிவாய் இருப்ப தாகத் தெரிகிறது. மற்ற மந்திரிகளுக்கு வேறு சில உத்தியோகங்கள் கொடுக் கும் விஷயத்தில் யோசனை செய்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஸ்ரீமான் சுப்பராயன்...

யாரிடம் வகுப்புத் துவேஷம் இருக்கிறது? 0

யாரிடம் வகுப்புத் துவேஷம் இருக்கிறது?

ஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும் சமீப காலத்திற்குள், அதாவது சுமார் 6 மாதத்திற்குள், நமது மாகாணத் திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு கனவான்கள் இந்தியாவின் பிரதிநிதி என்கிற முறையில் போயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பார்ப்பன ரல்லாத வகுப்பைச் சேர்ந்த, கோவை ஸ்ரீமான் ஆர். கே. ஷண்முகம் செட்டி யார் அவர்கள், எம். எல். ஏ. ஆவார். மற்றவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த மைலாப்பூர் அய்யங்கார் ஸ்ரீமான் டி. ரங்காச்சாரியார் ஆவார். ஸ்ரீமான் செட்டி யார் ஜனப் பிரதிநிதியாய் கவர்ன்மெண்ட்டாருடைய பணச் செலவில்லாமல் பொது அரசியல் விஷயமாய் சென்று வந்தவர். ஸ்ரீமான் ரங்காச்சாரியார் கவர்ன்மெண்ட் பிரதிநிதியாய் சர்க்கார் செலவில் ஏதோ ஒரு ஊரின் திறப்பு விழாவிற்காக “இந்திய பிரதிநிதியும் வந்திருந்தார்” என்று கணக்கு காட்டு வதற்காக போகிறவர். இந்த லட்சணத்தில் தனக்கு ஒரு உத்தியோக காரிய தரிசியாம். அதாவது தனது மகனையே காரியதரிசியாக்கிக் கொண்டார். சௌகரியத்திற்கு ஒரு ஆளாம். அதற்கு மற்றொரு...

ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்கள் 0

ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்கள்

வகுப்பு துவேஷம் ஒழித்ததற்கு இது ஒரு சாக்ஷி தமிழ் நாட்டிலுள்ள பதினொரு ஜில்லாக்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானங்களில் இது சமயம் திருச்சி நீங்கலாக (அங்கு மாத்திரம் பார்ப்பன பிரசிடெண்டு) மற்ற 10 ஜில்லாக்களில் பார்ப்பனரல்லாத பிரசிடெண் டுகளே இருந்து வருகிறார்கள். அதாவது ஸ்ரீமான்கள் செங்கல்பட்டுக்கு ஆ.மு.ரெட்டியும், தென்னாற்காட்டுக்கு சீத்தாராம ரெட்டியும், வடஆற்காட்டுக்கு கிருஷ்ணசாமி நாயுடுவும், சித்தூருக்கு முனிசாமி நாயுடுவும், சேலத்திற்கு எல்லப்ப செட்டியாரும், கோயமுத்தூருக்கு ரத்தினசபாபதி முதலியாரும், தஞ்சைக்கு பன்னீர்செல்வமும், மதுரைக்கு போக்ஸ் துரையும், இராமநாத புரத்திற்கு இராமநாதபுர ராஜாவும், திருநெல்வேலிக்கு குமாரசாமி ரெட்டி யாருமாக இருக்கிறார்கள். இது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாத கனவான்கள் வரமுடிந்தது என்பதும், அதனாலேயே பார்ப்பனர்கள் நமது ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் தலைவரான பனக்கால் ராஜாவையும் வெட்டிப் புதைக்க வேண்டு மென்று சொல்லுவதும், இப்பொழுது ஏற்பட்ட அரைப் பார்ப்பனரான சுப்பராய மந்திரிசபையின் மூலம் இதை மாற்றி இத்தனை ஜில்லா போர்டுகளையும் பார்ப்பன மயமாக...

தொழிலாளர் 0

தொழிலாளர்

சென்னைப் பார்ப்பனத் “தலைவர்கள்” தாங்கள்தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கரையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங்களும் தங்களால்தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங்களெல்லாம் தங்களால்தான் வாங்கிக் கொடுக்கக்கூடும் என்றும், சொல்லி இது காலபரியந்தம், தொழி லாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்களைப் பெற்று பதவி பெற்று வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல் களிலும் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலா ளர்கள் தங்களுடைய ஓட்டுக்களை எல்லாம் பார்ப்பன அபேட்சகர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரை தோற்கடிக்க செய்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படி இருக்க, இப்போது ³ தொழிலாள சகோதரர்களில் தங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலாம் என்பதாக கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர்தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த ³ பார்ப்பனர்கள் தொழிலாளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித்து...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

இந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் முதலியவைகளை உத்தேசித்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக் கவும் ஒற்றுமை உண்டாக்கவும் என்பதாகக் கருதி சென்ற சீர்திருத்தத்தின் போது தகுந்தபடி விசாரணை செய்து சில வகுப்புகளுக்கு பிரதிநிதித்துவ ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தும் சில வகுப்பார்களுக்கே தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத்தியும் வைத்திருப்பது யாவரும் அறிந்த விஷயமே. இதிலிருந்து சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்த விசாரணைக் கமிஷன் போது முன்பு பொது தொகுதியில் ஒதுக்கி வைத்த வகுப்பாரும் இனித் தங்களுக்குத் தனித் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பார்த்து சிறு தொகையினரான நம் நாட்டுப் பார்ப்பனர்கள் இம்முறை அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏகபோக மிராசு போய் விடுமென்றும், தங்கள் சமூகத்துக்குத் தகுந்தபடி வீதாச்சாரம் கிடைப்பதாயிருந்தால் இப்பொழுது கிடைத்துக் கொண்டிருப்பதில் 10ல் ஒரு பாகங்கூட கிடைக்காமல் போய் விடுமே என்று பயந்து இக்கிளர்ச்சியை யொழிக்க பல வழிகளிலும் சூழ்ச்சி...

ஒரு சிறு குறிப்பு 0

ஒரு சிறு குறிப்பு

சென்னையில் உள்ள முக்கிய வைத்தியர்களில் அனுபவம் பெற்ற இரண்டு கனவான்கள் நமது உடல் நிலையைப் பற்றி கவனித்து சரீரத்தில் ரத்த ஓட்ட வேகம் ( க்ஷடடிடின ஞசநளளரசந) அதிகமாயிருப்பதாகவும், சுமார் 150 டிக்கிரி பிரஷர் இருக்க வேண்டியது 200 டிக்கிரி போல் இருப்பதாகவும், இது போலவே கூடுதலாகிக் கொண்டு வருமாகில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்த ஓட்டம் நின்று கால் கை அல்லது மூளை முதலியதுகள் ஸ்தம்பித்துப் போகுமென்றும் அபிப்பிராயம் சொல்லி, அதற்கு சிகிச்சையாக குறைந்தது இரண்டு தடவை மூன்று மூன்று நாள்கள் முழுப்பட்டினி இருக்க வேண்டும் என்றும், இராத்திரி சாப்பாட்டை குறைத்துவிட வேண்டுமென்றும், மாமிச ஆகாரத்தை அறவே நீக்கி விட வேண்டும் என்றும், கண்டிப்பான சிகிச்சை சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளுமிதற்கு முன்பே இதே அபிப்பிராயத்தை இரண்டு மூன்று தடவைகளில் சொல்லி இருக்கிறார். அன்றியும் நமக்கு சரீரத்தில் முன்னை விட எடை அதிகமாயிருந்தாலும், அதிகமான பலக்குறைவும் மூச்சு வாங்குதலும்...

எது பொய்ப் பிரசாரம் ?   19-4-27 தேதி “தமிழ்நாடு” தலையங்கத்திற்கு பதில் 0

எது பொய்ப் பிரசாரம் ? 19-4-27 தேதி “தமிழ்நாடு” தலையங்கத்திற்கு பதில்

“தமிழ்நாடு” தனது ஏப்ரல் மீ 19 ² பத்திரிக்கையில் “பொய் பிரசாரம்” என்பதாக பேரிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் தமிழ்நாட்டைப் பற்றி “சுதேசமித்திரனும்” “குடி அரசும்” “தமிழ்நாடு” யோக்கியதைக் குறித்து எழுதிய குறிப்புகளுக்கு பதில் எழுதியதாக ஜனங்கள் நினைக்கும்படி என்ன என்னமோ உளறிக் கொட்டி இருக்கிறது. அவற்றுள் மித்திரனைப் பற்றி எழுதியிருப்பவைகளை நாம் கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஸ்ரீமான்கள் அய்யங்காரும், நாயுடுகாரும் நினைத்தால் சண்டை போட்டுக் கொள்வார்கள், நினைத்தால் ராஜியாகி விடுவார்கள். ஏனென்றால், மித்திரன் ராஜீய அபிப்பிராயத்திற்கும் கொள்கைக்கும் “தமிழ்நாடு” வுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை என்று “தமிழ்நாடு”வே எழுதியிருக் கிறபடியால் நாம் அதை கவனிக்க வேண்டியதில்லை. தவிர “தமிழ்நாடு” “குடிஅரசு”வைப் பற்றி எழுதியதை மாத்திரம் எடுத்து கொள்ளுவோம். உண்மையும் யோக்கியதையும் பெருமையும் உள்ள பத்திரிகை களாயிருந்தால் தன்னைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினால் அதுகளை எடுத்து சரியாய் போட்டு அதற்கு சமாதானம் சொல்ல வேண்டியது கிரமம். அப்படிக் கில்லாமல்...

பழய கருப்பனே கருப்பன் 0

பழய கருப்பனே கருப்பன்

சென்னையில் இருந்து டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் வெளியிடப் போகும் “தமிழ்நாடு” தினசரிப் பத்திரிகை வெளியாக வேண்டும், வெளியாக வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களில் யானும் ஒருவன். அதனால் நமது சமூகத்திற்கோ, நாட்டிற்கோ, பெருத்த அனுகூலம் ஒன்றும் ஏற்பட்டு விடாது என்ற முடிவு ஏற்கெனவே இருந்தாலும், சுதேசமித்திரனால் நாட்டுக்கும் நமது சமூகத்திற்கும் ஏற்படும் கெடுதியையாவது கொஞ்சம் குறைக்காதா என்று எதிர்பார்த்தோம். கடைசியாக வெளிவந்தது. வெகு ஆவலாய்ப் படித்துப் பார்த்தோம். பழய கருப்பனே கருப்பனல்லாமல் வேறு ஒரு சங்கதியையும் காணோம். மறுபடியும் பார்ப்பனர்கள் காலுக்குள் நுழையும் தந்திரங்களே நிறைந்திருப்பதும் சுதேசமித்திரன் காலில் விழுந்து அதை ஆதரித்து அதனால் தான் வாழப் பார்ப்பதும் அல்லாமல் வேறு ஒன்றையுங் கண்டு பிடிக்கமுடியவில்லை. அதோடு வழக்கம் போல் ஜஸ்டிஸ் கட்சியை வைவ தின் மூலம் பார்ப்பனர்களின் தயவைச் சம்பாதிப்பதில் கண்ணுங் கருத்துமாய் காணப்படுகிறது. உதாரணமாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் எடுத்துக் காட்டுகிறோம். ஏனென்றால், கோயமுத்தூரில் நாயுடு கான்பரன் சிலிருந்து இந்த...

* உண்மையான சுத்தவீரன் “ பார்ப்பனர் கீழ் வேலை செய்வதைக் காட்டிலும் சாவதே மேல்” 0

* உண்மையான சுத்தவீரன் “ பார்ப்பனர் கீழ் வேலை செய்வதைக் காட்டிலும் சாவதே மேல்”

செங்கல்பட்டு ஜில்லா பொன்னேரியில் காஞ்சீபுரம் ரிடயர்ட் சால்ட் சப்இன்ஸ்பெக்ட்டருடைய குமாரரான பி. சுப்பரமணிய முதலியார் என்கிற 22- வயதுள்ள ஒரு வாலிபர் ஒரு பார்ப்பனருக்குக் கீழ் இருந்து வேலை செய்வதைப் பார்க்கிலும் செத்துப்போவதே மேல் என்பதாகக் கருதி தன்னுடைய நண்பர் ஒருவருக்கு கீழ்க்கண்ட விதமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பாஷாண சம்பந்தமான மருந்தைச் சாப்பிட்டு விட்டு, உயிர் துறந்தார். அக்கடிதமாவது;- பொன்னேரி லோகல் பண்டு ஆஸ்பத்திரி 7-4-27. அன்புமிக்க மாணிக்கம்! இந்தமாதம் 8- தேதி எனக்கு குறிப்பிடத்தக்க ஒரு அதிர்ஷ் டவசமான நாளாகும். அது என்னவென்றால் நான் இந்த உலகத்தையும், உன்னையும், எனது பந்துக்களையும் விட்டு சந்தோஷமாகவும், திருப்தி யாகவும் பிரியும் நாளாகும். ஒரு பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை செய்ய இனி என்னால் முடியாது. பார்ப்பன எஜமானன் கீழ் வேலைசெய்து ஜீவிப்பதைக் காட்டிலும், செத்துப்போவது மேலானதெனவும், புத்திசாலித்தனமான தெனவும் நான் தெரிந்து கொண்டேன். என்னுடைய பார்ப்பன எஜமானனுடைய...

பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்த வீரன் 0

பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்த வீரன்

பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை பார்த்து வயிறு பிழைப் பதை விட சாவதே மேல் என்பதாகக் கருதி ஒரு சுத்த வீரன் பாஷாணத்தைச் சாப்பிட்டு உயிர்விட்டுத் தனது சுயமரியாதையைக் காத்துக் கொண்ட செய்தியை வேறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வீரனை நாம் உண்மை யான சுத்த ரத்தோட்டமுள்ள சுத்தவீரனென்றே சொல்லுவதோடு, மனமாரப் பாராட்டுகிறோம். இவ்வீரனின் தியாகமானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்காக இதுவரை பாடுபட்ட எல்லாப் பெரியார்களின் தியாகத்தை விட மிகப்பெரிய தியாகமென்றும், மற்றவர்கள் செய்த வேலைகளையெல்லாம் விட மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது என்றும் சொல்லுவோம். நாயர் பெருமானின் பிராமணத் தியாகமும், தியாகராய பெருமானின் தன்னலமற்ற சேவையும் மற்றும் பலரின் சிறைவாசமும் இவ்வீரனின் தியாகத் திற்கு ஒரு விதத்திலும் சமானமாகாதென்றே சொல்லுவோம். இதைப்பற்றி எழுதும் போது நமது உடம்பு சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இவ்வீரனைக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் போட்டு அவனைப் பாராட்டித் தீர்மானங் கள் செய்தனுப்ப...

காங்கிரஸ் பைத்தியம் 0

காங்கிரஸ் பைத்தியம்

மகாத்மா காந்தி அவர்களாலும், அவர் பேச்சைக் கேட்டு சிறைக்கு சென்ற பதினாயிரக்கணக்கான தேசபக்தர்களாலும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் செய்ததின் பலனாலும் பாமர மக்களிடையே காங்கிரஸ் என்கிற பதத்திற்கு நமது நாட்டில் ஒருவித மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்ட தோடு படித்த வகுப்பார்களுக்கு அதன் மூலம் உத்யோகம், பதவி, பட்டம், அதிகாரம் முதலியதுகள் கிடைப்பதற்கு இடமிருப்பதால், அதனிடத்தில் ஒருவித பைத்தியமும் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒரு கூட்டத்தார் காங்கிரசின் பெயரை சொல்லிக் கொண்டு பிழைப்பதையும் மறைக்க முடியாது. ஆகவே, காங்கிரசின் பேரில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையில், அதனால் தேசத்திற்கும், தேசத்தின் பெரும்பான்மை மக்களான குடியானவர்கள், தொழிலாளிகள், ஏழை மக்கள் முதலியவர்களுக் கும் ஏற்பட்ட கெடுதியையும், சர்க்காருக்கு அதனால் ஏற்படும் ஆதிக்கத் தையும் பலத்தையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட பயப்படுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் எடுத்துச் சொல்ல வந்தாலும் அது மிகக் கஷ்டமாக இருக்கிறது. அதாவது மத சம்மந்தமான புரட்டுகளை வெளியில்...

வாலாஜாபாத் சொற்பொழிவு 0

வாலாஜாபாத் சொற்பொழிவு

ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் இதுவரை செய்த வேலைகளையும் செய்யப்போகும் வேலைகளையும் பற்றி சொன்னது தமக்கு மிகுந்த திருப்தி அளிக்கின்றதெனவும் இவ்வளவு வேலைகள் அவர் செய்திருந்தாலும் தற்கால பார்ப்பன அகராதிப்படி அவர் பெரிய தேசத்துரோக ஜாப்தாவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9 பார்ப்பன ரல்லாத ஜில்லா போர்டு மெம்பர்களில் இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்கள் தான் “ தேசத்துரோகிகள்” என்று சொல்லப்படுகிறார்கள் என்றும், அவர்கள் செங்கல்பட்டு போர்டு ஸ்ரீமான் ரெட்டியாரும் தஞ்சாவூர் போர்டு ஸ்ரீமான் பன்னீர் செல்வமுமே யாவார்கள் என்றும், ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தைவிட ஸ்ரீமான் எம்.கே. ரெட்டியாரே அதிகமான அதாவது பிராயசித்தமே இல்லாத “ தேசத்துரோகி” என்றும் ஸ்ரீமான் பன்னீர் செல்வம் தன்னுடைய ஆட்சியில் பல பார்ப்பனருக்கு உத்தியோகம் சோறு, படிப்பு முதலியவைகள் கொடுக்கிறார் என்றும், இவர் அடியோடு மறுக்கிறார் ஆதலால் தான் பெரிய “ தேசத்துரோகியாகி”விட்டார் என்றும் அப்பேர்பட்ட தேசத்துரோகியை பாராட்டும் கூட்டத்திற்கு தேசத்துரோகிகளுக்கு உபாத்தியாயரான ஸ்ரீமான்...

மகாத்மாவின் தேக அசௌக்கியம் 0

மகாத்மாவின் தேக அசௌக்கியம்

மகாத்மா காந்தி அசௌக்கியமாக இருப்பதாகவும் அவருடைய தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணம் பாதிக்கப்படும் என்பதாகவும் பொதுவாய் தெரிய வருகிறது. ஆனாலும் அவருடைய சிஷ்ய கோடிகள், அதாவது அவரைக் கொண்டு வந்து ஆட்டி வைத்து யோக்கியதையும் பணமும் சம்பாதித்துக் கொள்ள நினைத்திருப்பவர்கள் அந்த விபரத்தைப் பற்றி ஜனங்கள் சரியாய் உணருவதற்கு இடமில்லாமல் குழப்பமடையும்படி யாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் ஏமாற்றுத் தந்திகள் அடித்தவண்ண மாயிருக்கின்றார்கள். காயலாவினுடைய உண்மையையும் சரியாய்த் தெரியப் படுத்தாமல் ஏதேதோ தந்திரமாயும் மூடு மந்திரமாயும் தெரிவித்து வரு கிறார்கள். ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரி தந்தியை விட்டு விட்டு, ஸ்ரீமான் தேசாய், நியானியிலிருந்து கொடுத்திருக்கும் தந்தியை பார்க்கும் பஷத்தில் மகாத்மாவுக்கு மூளைக்கொதிப்பும், ரத்தோட்டக் குரைவும், கைக்கால் சரியான சுவாதீனமற்ற தன்மையும் காட்டுகிறதாகவும், தக்க ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று டாக்டர்கள் அபிப்பிராயம் கொடுத்திருப்பதாகவும் குறைந் தது இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு அதாவது கோடைகால முழுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணத்தை நிருத்த...

ஒரு விசேஷம் 0

ஒரு விசேஷம்

சென்னை சட்ட சபையில் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விவாதம் நடந்த காலத்தில் ஜனாப் அப்பாசலி பேசும் போது “இண்டிபெண்டண்ட் கட்சியார்களும் மந்திரிகளும் யாதொரு முக்கியமான வேலை செய்யாவிட்டாலும் வேட்டை நாய்கள் போன்ற சுயராஜ்யக் கட்சி யாரை பெட்டிக்குள் பாம்பு அடங்கினது போல் செய்து அவர்களின் தடை வேலைகளையும் தேசீய வேஷங்களையும் மூட்டை கட்டி வைக்கச் செய்து விட்டோமே, இதைவிட வேறு என்ன செய்யவேண்டு”மென்று பேசிக் கொண்டே வரும்போது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மந்திரி கணம் சுப்பராயனைப் பார்த்து உங்களுக்கு உள் உளவாயிருந்ததற்கு இப்படித்தானா சபையில் எங்கள் மானத்தைக் கெடுப்பது என்று ரகசியமாய் கெஞ்சினாராம். கணம் சுப்பராயன் உடனே ஜனாப் அப்பாசலிக்கு ஜாடைகாட்டி, கண்ணைச்சிமிட்டி உட்காரச்சொன்னாராம். இந்த காட்சியைப்பார்த்து சட்ட சபையிலுள்ள மந்திரிகளுள்பட எல்லாக் கட்சியாரும் சிரித்தார்களாம். ஐயோ பாவம். சுயராஜ்யக் கட்சியின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.! குடி அரசு – துணைத் தலையங்கம் – 10.04.1927

வெட்கப்படுகிறார்கள் 0

வெட்கப்படுகிறார்கள்

சென்னை சுயராஜ்யக் கட்சியில் உள்ள பல பார்ப்பனரல்லாதார் அக்கட்சி யில் இருப்பதற்காக இப்போது வெட்கப்படுகிறார்கள் என்று நன்றாய்த் தெரிகிறது. அவர்கள் யார் என்று பொது ஜனங்கள் அறிய ஆசைப்படுவது சகஜம் தான். நாம் அதை தெரிய ஒறே ஒரு சூசனை காட்டு கிறோம். அதாவது சுயராஜ்யக் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் யார் யார் உள்ளதற்குள் யோக்கியர்கள் என்று பெரும்பான்மையோர்களால் நினைக்கப்பட்டார்களோ, அவர்களில் பெரும்பான்மையோரும், இனி அந்தக் கட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஸ்தானம் கிடைக்காமல் போய்விடுமோ என்பவர்களில் சிறுபான்மையோரும் சேர்ந்து இப்போது தனிக்கட்சி ஏற்படுத்தலாமா அல்லது ஜஸ்டிஸ் கட்சியையே சுவாதீனப் படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் புத்திசாலிகளாகவும் உண்மையாய் பார்ப்பன ரல்லாதாருக்கும் உழைப்பவர்களாயிருந்தால் ராஜீய அபிப்பிராய பேதத்தை யும், சுயநலத்தையும், சொந்த விரோதத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு வருகிறவர்களை மனப்பூர்வமாக வரவேற்பார்களாக. குடி அரசு -– துணைத் தலையங்கம் – 10.04.1927