Author: admin

நமது நிருபர்களுக்கு 0

நமது நிருபர்களுக்கு

நமது ‘குடி அரசு’ மீது அன்பு கொண்டு அடிக்கடி பற்பல முக்கிய விடயம் பற்றி கட்டுரை வரைந்து வரும் அன்பர்களுக்கு நமது நன்றியறி தலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வங் கொண்டு எழுதப்பெறும் அவர்களின் ஒவ்வொரு வாக்கியத்தையும் போற்றுகிறோம். ஆனால் “குடி அரசு”க்கு விஷயதானம் செய்வோரில் பலர் , நமது பத்திரிகை வாரப் பத்திரிகை என்பதையும் சிறிய அளவில் பெரிய விஷயங் களை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் கருதுவ தில்லையென்றே நினைக்கவேண்டி யிருக்கிறது. நமது கட்டுரைக் கர்த்தாக் கள் பக்கம் பக்கமாய் வரைந்த நீண்ட கட்டுரைகளை அனுப்பிவிடுகிறார்கள். நாள்தோறும் வரும் இக்கட்டுரைகளை மட்டிலும் பூராவும் பிரசுரிப் பதாக வைத்துக் கொண்டாலும் 12 பக்கங்களுக்கு மேலாகி விடும். அக் கட்டுரைகளைச் சுருக்கி வெளியிடுவதென்றாலும் அதனை ஆக்கியோரின் கருத்து புலனாகாது போய்விடுமென அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆகவே, மிகுந்த மன வருத்தத்துடன் கஷ்டத்தோடு இத்தகைய கட்டுரைகளை தள்ளி விட நேருகிறது. ஆகையால்,...

மாயவரத்தில் மும்மூர்த்திகள் 0

மாயவரத்தில் மும்மூர்த்திகள்

சில தினங்களுக்கு முன்பாக மாயவரத்தில் மும்மூர்த்திகள் வந்து சபை கூடி ரகசிய யோசனைகள் செய்து முடிவான தீர்மானங்கள் செய்து கொண்டு போயிருக்கிறார்கள். அவர்கள் 1. ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் 2. சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி ஐயர் 3. அட்வகேட் ஜெனரல் கனம் வெங் கட்டராம சாஸ்திரியார் ஆகிய மூவருமேயாகும். இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து தற்கால நிலைமையில் பிராமணர்கள் எப்படி உத்தியோகங்கள் பெறுவது, பிராமண வக்கீல்கள் இனி எப்படி பிழைப்பது, பிராமணரல்லா தார்களை ஏய்ப்பதற்கு வழி யென்ன என்று யோசித்து முடிவு செய்துகொண்டு போயிருக்கிறார்களென்றே நினைக்கிறோம். எல்லாம் ரகசியத்திலேயே யிருக்கிறது. குதிரை எப்பொழுது முட்டையிடுமோ பார்ப்போம். குடி அரசு – செய்தி விளக்கம் – 02.05.1926

புது இறக்குமதி 0

புது இறக்குமதி

இந்தியாவுக்குப் புதிதாக ஒரு கவர்னர் உத்தியோகம், ஒரு லார்ட் பட்டம், ஒரு ரைட் ஆனரபிள் பட்டம் ஆக மூன்று புதுமைகள் இறக்குமதி ஆகிவந்தது. அந்த மூன்றும் பிராமணர்களுக்கே போய்விட்டது. அதாவது ளு.ஞ. சின்னா, லார்ட் சின்னா, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆகிய மூன்று பிராமணர்களுக்கும், பிளேக்கோ, இன்புளுவென்சாவோ, எக்ஸ் சேஞ்சு நாணய மாற்றுப் பஞ்சமோ முதலிய புதுவியாதிகள் இறக்குமதி யானால் அது முழுமையும் பிராமணரல்லாதாருக்குத்தான் கிடைக்கிறது. பிராமணரல்லா தாரின் பாக்கியமே பாக்கியம். குடி அரசு – பெட்டிச் செய்தி – 02.05.1926

“வரதராஜுலு அறிக்கை” க்கு ராமசாமியின் அபிப்பிராயம் 0

“வரதராஜுலு அறிக்கை” க்கு ராமசாமியின் அபிப்பிராயம்

தமிழ்நாடு” பத்திரிகையின் ஜுன் µ 3 – ம் தேதி தலையங்கமாகிய “வரதராஜுலு அறிக்கை” என்னும் விஷயத்திற்கு நான் ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டும் என்பதாக நமது வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமென் பதாக நினைத்தே அதே தலையங்கமிட்டு இவ்வியாசத்தைத் துடங்குகிறேன். ஸ்ரீ வரதராஜுலு அறிக்கையின் முதல் வாக்கிய ஆரம்பத்தில் “காங்கிரஸ் மகாசபையே தேசத்தில் பிரதானமானது” என்பதாக ஆரம்பிக்கப்பட் டிருக்கிறது. அது எந்த விஷயத்தில் யாருக்குப் பிரதானமானது? எந்த தேசத்திற்குப் பிரதானமானது? தேசத்தில் உள்ள 33 கோடி மக்களில் எந்த வகுப்பாருக்கு எந்தக் கூட்டத்தாருக்கு பிரதானமானது? தென்னாட்டில் படித்த வகுப்பாரான பார்ப்பனருக்கும், வடநாட்டில் படித்த கூட்டத்தாரான சிலருக்கும் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதற்கும், அவர்களை வாழ வைக்கவும் பிரதானமானதே அல்லாமல் வேறு யாருக்கு? எதற்கு? அதனால் என்ன பிரயோஜனமுண்டென்றும் கேழ்க்கிறேன்? காங்கிரஸ் ஏற்பட்டு 40 வருஷத்திற்கு மேலாகியும் தேசமக்களின் பெரும்பாலோரான விவசாயி, தொழிலாளி, குடியானவன் ஆகிய கூட்டத்தாருக்கு என்ன நன்மை செய்திருக் கிறது?...

“நவசக்தி” யின் துக்கம் 0

“நவசக்தி” யின் துக்கம்

“சுயராஜ்யக் கக்ஷி அழிந்து ஒழிய வேண்டுமென்பது திரு. ராஜ கோபாலாச்சாரியாரின் கருத்தெனத் தெரிய வருகிறது” என்று ‘நவசக்தி’ தன் 30.4.26 ² தலையங்கத்தில் துக்கப்பட்டு ஆச்சாரியார் மீது சீறுகிறது. சுய ராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் காந்தியடிகள் ஒடுங்கினார், ஒற்றுமை குலைந்தது, ஒத்துழையாமை மறைந்தது, வகுப்புப் பூசல் கிளம்பியது என்று சதா ஓலமிட்டுக் கொண்டிருந்த ‘நவசக்தி’க்கு இப்பொழுது சுயராஜ்யக் கட்சி ஒழிந்து போவதில் இவ்வளவு கவலை வரக் காரணம் தெரியவில்லை. சுய ராஜ்யக் கட்சி ஒழிந்தால் உலகம் முழுகிப் போகுமோ அல்லது ‘நவசக்தி’க்கு செல்வாக்கு குறைந்துப் போகுமோ என்கிற இரகசியத்தை நாம் அறிய வில்லை. குடி அரசு – செய்தி விளக்கம் – 02.05.1926

பிராமண அகராதி  வினா – விடை 0

பிராமண அகராதி வினா – விடை

வினா : ஆச்சிரமம் என்றால் என்ன? விடை : காந்தர்வ விவாகமும் ராக்ஷச விவாஹமும் நடக்கு மிடங்கள். வினா : சுயராஜ்யம் என்றால் என்ன? விடை : பிராமணர்கள் உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் பெறுவதுதான் சுயராஜ்யம். வினா : பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன? விடை : அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அன்னிய ஆட்சி. வினா : தேச சேவை யென்றால் என்ன? விடை : பிராமணர்கள் பின்னால் திரிந்துகொண்டு ஜஸ்டிஸ் கட்சி யைத் திட்டுவது போல் பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், பிராமணர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை ‘தலைவர்’, ‘தமிழ்நாட்டுக் கர்ணன்’, ‘கலியுகக் கர்ணன்’, ‘மகாத்மாவின் சிஷ்யர்’ என்று சொல்லி பிராமண ரல்லாதாரை வஞ்சித்து பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதுதான் தேச சேவை ஆகும். வினா : தேசத் துரோகம் என்றால் என்ன? விடை : பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தேசத்...

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 0

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே தற்கால அரசியல் முறைக்கு ஏற்ற தென்றும், வகுப்புப் பூசலும் சமயச் சண்டையும் கிளம்பாமலிருப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நல்குவதே ஏற்ற மருந்தென்றும் அறிஞர் பலரும் கூறுகின்றனர். சென்ற ஏப்ரல் மாதம் 10 – ² பெங்களூர் முனிசிபல் சபையார் இத்தகைய சிறந்ததொரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அச்சபையில் இனி எவரேனும் ஓர் எஞ்சினீர் நியமனஞ் செய்யப்படுவாரெனின் அவர் பிராமணரல்லாதவராயிருத்தல் வேண்டுமென தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டு பல பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. மற்ற நகரசபைகளுக்கெல்லாம் ஓர் வழி காட்டியாய் நடந்து கொண்ட பெங்களூர் நகரசபையைப் போற்றுகிறோம். நம் நாட்டிலுள்ள இதர முனிசிபல் சபை, ஜில்லா போர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களும் பெங்களூர் நகரசபையைப் போன்று உத்தியோகம் நியமிப்பதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாடினால் பெரிதும் நலம் பயக்குமென்று கூறுகிறோம். நாட்டிலே தற்காலம் வகுப்புப் பகை வளர்ந்து வருவதற்குக் காரணம் சமூக வாரியாக உத்தியோகம் நல்கப்படவில்லை என்பது பற்றியேயாகும். ஆதலால், தற்காலம் குடிமக்கள் கையிலிருக்கக் கூடிய...

மகாத்மாவின் நன்றியறிதல் 0

மகாத்மாவின் நன்றியறிதல்

சபர்மதியில் ராஜி ஒப்பந்தம் முடிந்த பிறகு ஸ்ரீமான் ஜெயக்கர் மகாத்மா விடம் சென்று ”இந்த ராஜீயை உண்டு பண்ணியதிற்காக தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று சொன்னாராம் . அதற்கு மகாத்மா “நானும் உங்க ளுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்று சொன்னாராம். மகாத்மா எதற்காக இந்த விஷயத்தில் ஸ்ரீ ஜெயக்கருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற கேள்வி இதில் பிறக்கக் கூடும். அது எதற்கு என்று யோசிப்போமானால், சுயராஜ்யக் கக்ஷியார் உத்தி யோகம் ஒப்புக்கொள்ளாத தன்மையின் திருட்டுத்தனத்தை வெளியாக்கிய தற்காகத்தான். குடி அரசு – பெட்டிச் செய்தி – 02.05.1926

இந்தியா சட்டசபையும்                           சென்னை பிராமணர்களும் 0

இந்தியா சட்டசபையும் சென்னை பிராமணர்களும்

ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியார்கள் இந்தியா சட்டசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தியாய் விட்டது. அதாவது, மூன்று ஸ்தானங்களுக் கும் மூன்று பிராமணர்களையே நிறுத்தியாய் விட்டது. அவர்களின் பெயர் களாவன:- 1. வி.வி. ஜோகைய பந்துலு 2. டி. பிரகாசம் பந்துலு 3. சி. துரைசாமி அய்யங்கார் முதல் இரண்டு பேர்களும் தெலுங்குப் பிராமணர்கள்; மூன்றாவதவர் தமிழ் அய்யங்கார் பிராமணர். ஆக மூன்று பேரும் பிராமணர்களேயாவார் கள். ஆந்திரா தேசம் சுமார் 10 ஜில்லாக்களையுடையது. இதில் நூற்றைம்பது லக்ஷம் ஜனங்களுக்கு மேல் மகமதியரல்லாதவர்கள். அதாவது (பிராமண ரல்லாத) இந்துக்கள். இந்த ஒன்றே முக்கால் கோடி பிராமணரல்லாதவர்கள் அடங்கிய சமூகத்தில் இந்தியா சட்டசபைக்கு அபேக்ஷகராய் நிற்பதற்கு ஒரு பிராமணரல்லாதார்கூட கிடைக்கவில்லை என்றால், அதாவது இந்தியா சட்டசபைக்கு நிற்க ஒரு பிராமணரல்லாதாருக்குக் கூட யோக்கியதை இல்லை என்றால் இவர்கள் சுயராஜ்யம் அடைய எப்படி யோக்கியதை உடைய வராவார்கள். மகமதியர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்த வர்களில் யோக்கியதை...

நமது பத்திரிகை 0

நமது பத்திரிகை

“குடி அரசு” ஆரம்பமாகி ஒரு வருஷம் முடிந்து இரண்டாம் வருஷம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வொரு வருஷ காலமும் “குடி அரசு” தன்னால் கூடியதை ஒளிக்காமல் உண்மையோடு உழைத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி நாமே உணர்ந்து திருப்தி அடைகிறோம். “குடி அரசை” ஆதரித்தும் ஆசி கூறியும் வரும் சமாசாரக் கடிதங்களிலிருந்தே இதை உணரு கிறோம். இதுவரை “குடிஅரசி” ன் தொண்டைப் பற்றிச் சிலாகித்து சுமார் முந்நூறு நானூறு கடிதங்களும் “குடிஅரசி”ன் மீது குற்றம் சுமத்தி சுமார் 3,4 கடிதங் களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சிலாக்கியமாய் எழுதியவர் களைப் பற்றி இதில் எழுத இடமில்லை; எழுதினாலும் தற்புகழ்ச்சியாக முடியும். ஆனாலும் குற்றங் கூறி எழுதியவர்களைப் பற்றி எழுதுவதற்கு இதில் இடமுண்டு. அதாவது, குற்றங்கண்டு எழுதிய கனவான்கள் நான்கு பேர்; யாரென்றால், 1. ஸ்ரீமான் எ. ரெங்கராம் நாயக்கர், ஆனைமலை. 2. ஸ்ரீமான் சுப்பிரமணிய ஐயர், நெரூர். 3. ஸ்ரீமான் இராஜரெத்தின முதலியார், காஞ்சீவரம். 4. ஸ்ரீமான்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அதைரியம் – பயம் அத்தியந்த – நம்பகமான அவிவேகம் – அறிவற்று, பகுத்தறிவு இன்றி அனாமத்து – தனி, தனி நிலை, வேறு நிலை அஸ்வார்சமாய் – ஈடுபாடின்றி ஆவலாதி – குறை கூறுகை ஆஸ்பதமான – இடமான, பற்றுக்கோடான கலர – கலந்துகொள்ள, கலந்து வாழ கொம்பு தம்பட்டம் – தாரை தப்பட்டை சிலாசாசனம் – கல்வெட்டு சுசீலமாக – நற்பண்புடன் தத்துக்கள் – தடைகள் துராக்கிரகம் – வீண்பகை, வீணாசை, பேராசை துர்ராக்கிரகம் துரந்தரர்கள் – பொறுப்பாளர்கள், தாளாளர்கள் நியமம் – சமயக் கடைமை, நன்னெறி பரியந்தம் – அதுவரை, எல்லை பால்யை – இளம்பெண் பிரக்யாதி – நன்கு அறியப்படுதல், கீர்த்தி, பிரீதி – விருப்பம், விழைவு மனக்கிலேசம் – மனக்கலக்கம், துயரம் ஜன்மிகள் – நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்

ஸ்ரீ சு.மு. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா? 0

ஸ்ரீ சு.மு. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா?

காங்கிரஸ் கிரீட் என்னும் முக்கிய கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதையும் ஒரு கொள்கையாகத் திருத்த வேண்டு மென்று காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக சேலம் மகாநாட்டில் தீர்மானித்த தீர்மானத்தை காங்கிரசில் பிரேரேபிப்பதாய் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஒப்புக் கொண்ட படி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பிரேரேபணை கொண்டு வருவாரா? என்று கேட்கின்றோம். இப்பிரேரேபணை காங்கிரசில் நிறைவேறாது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், நிறைவேறினாலும் அதனாலேயே பிரமாதமான பலன் ஏற்பட்டுவிடாது என்பது உறுதியானாலும் மக்களுக்குள் சமத்துவம் ஏற்பட வேண்டியது காங்கிரசின் நோக்கமல்ல என்பதையும், சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று சொல்லி படித்தவர்கள் உத்தியோகம் பெறவேண்டியதுதான் அதன் நோக்கம் என்பதையும் ருஜுவாக்க இதுவும் ஒரு சந்தர்ப்பமாகுமே என்கின்ற ஆசையால்தான் இதை ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு ஞாபகமூட்டி கவனிக்கும்படி வேண்டுகின்றோம். குடி அரசு – வேண்டுகோள் – 25.12.1927

மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை 0

மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை

“தமிழ்நாடு” பத்திரிகையானது 16-12-27 தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல் வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழிகுணம் படைத்தவராக இருக்க வேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டுமென்றும் எழுதியிருக் கிறது. மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழி குணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப் பற்றி கவலையில்லை. ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத் தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டமும் அதில் நடந்த விஷயங் களும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் பார்த்தால் விளங்கும். எவ்வளவு தந்திரமாகவும், ஒழுங்கீனமாகவும் தேர்தல்களை நடத்தி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைவர் என்பவ ரான ஸ்ரீ சீனிவாசய்யங்காரின் யோக்கியதையைவிட அதில் கலந்து கொண்டவர்களின் யோக்கியதையே பெரிதும் கவனிக்கத்தக்கது. கோவையில் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் காங்கிரசில் சேரப் பிரியமுள்ளவர்கள் காங்கிரசில் சேரலாம் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியவுடன் பார்ப்பனர்கள் தங்களது அடிமைகளல்லாத வேறு யாரும் காங்கிரசிற்குள் நுழைந்துவிடாதபடி எவ்வளவு நிர்பந்தங்கள் ஏற்படுத்தினார் கள் என்பதை பொது வாழ்வில் கலந்துள்ள யாரும் அறியாமல் இருக்க முடியாது. காங்கிரசில் சேர்க்கும் இரசீதுகளை தாங்களே தங்களுக்கு வேண்டிய வர்களுக்கே வினியோகித்து தங்கள் சொற்படி கேட்பவனை மாத்திரம் சேர்க்கும்படி கட்டளையிட்டதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி யிருந்தும் தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எந்த நிர்வாக கமிட்டி யிலாவது சேர்ந்துவிட்டால் அவர்களை ஒழிக்க வேறு கமிட்டிகளை ஏற்படுத்தச் செய்து ஏற்கனவே ஏற்பட்ட...

சென்னையில் ஏமாற்றுந் திருவிழா 0

சென்னையில் ஏமாற்றுந் திருவிழா

இவ்வாரத்தில் சென்னையில் மக்களை ஏமாற்றுந் திருவிழாக்கள் பல நடக்கப் போவதாக விளம்பரங்கள் எங்கு பார்த்தாலும் பறக்கின்றன. இதைக் கண்டு அநேக ஆயிரமக்கள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு போகவும் கூடும். சர்க்கார் காரியாலயங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை நாளானதாலும் வக்கீல்களுக்கும் உபாத்தியாயர்களுக்கும் ஓய்வு காலமான தாலும் விவசாயக்காரருக்கும் வேலை ஒழிந்த காலமானதாலும் வியாபாரி களுக்கும் வேலையில்லாத காலமானதாலும் ரயில் சத்தமும் இதை உத்தே சித்து குறைக்கப்பட்டிருக்கிறதாலும் இம்மக்களை அவ்விளம்பரங்கள் சுலபமாக கவர்ந்து விடுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. இம்மக்களல்லாத பிரபுகளுக்கும் சுகவாசிகளுக்கும் இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதே அரிதானதால் அவர்களும் இதில் கலந்து இக்கூட்டத்தில் காணப்படுவதில் ஆச்சரியமுமில்லை. ஆனால் இவ்வேமாற்றுந்திருவிழாக்களில் நிர்வாகிகள் யார்? கொள்கைகள் என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன? என்பவைகள் தான் இங்கு கவனிக்கத்தக்கது. இத்திருவிழாவின் விளம்பரத்திற்கு பங்கு எடுத்துக்கொள்ளாத பத்திரிகைகளே நமது நாட்டில் மிக மிக சொற்பம். ஏனெனில் மனிதன் இது சமயம் நம்நாட்டில் வாழவும் பத்திரிகைகள் நடைபெறவும் இத்திருவிழாக் களின்...

தூத்துக்குடி திரு. சோமசுந்தரம் பிள்ளை                     “நவசக்தி” யில் எழுதிய                                   “இந்து மதமும் வைக்கம் வீரரும்”                    என்ற கட்டுரைக்குச் சமாதானம் 0

தூத்துக்குடி திரு. சோமசுந்தரம் பிள்ளை “நவசக்தி” யில் எழுதிய “இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்

ஸ்ரீமான் தூத்துக்குடி கா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ‘இந்து மதமும் வைக்கம் வீரரும்’ என்பதாக ஒரு வியாசம் 7-12-27 தேதி ‘நவசக்தி’யில் எழுதி இருக்கிறார். அதற்கு சமாதானமாக பல கனவான்கள் ஆராய்ச்சி மூலமாகவும் மற்றும் பொதுவாகவும் வியாசங்கள் எழுதி பிரசுரிக்க நமக்கு அனுப்பி இருக்கின்றார்கள். நாம் அவற்றை அவ்வியாசம் தோன்றிய பத்திரிகைகளுக்கு அனுப்பும்படி எழுதி விட்டோம். நம்மையும் பிரசுரிக்கும் படி வற்புறுத்தினால் ஒருக்கால் பிரசுரிக்கலாம். ஆனாலும் அவைகள் பிரசுரமாகும் முன்பு நமது சமாதானத்தை தெரிவிக்க விரும்புகிறோம். அவ்வியாசத்தின் சாராம்சத்தை முதலில் சுருக்கமாக குறிப்பிடுவோம். 1. “நாயக்கர் பேச்சிலும் எழுத்திலும் இந்து மதத்தை மனம் போனவாறு இழிந்து கண்டித்து வருகிறார்….. 2. பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று கூறும் முறையில் அவரது கூற்றால் அச்சமூகத்தாருக்கு எவ்வித மதஉணர்ச்சியும் அற்றுப்போகும்…… 3. மதவுணர்ச்சியற்று நாஸ்திகம் பரவும்படி செய்வதே இவரது தொண்டாயிருக்கின்றது………… 4. இத்தொண்டின் பயனாய் தேசாபிமானிகள், மதாபிமானிகள் ஆகியவர்கள் மனம் புண்படுகின்றது…………….. 5. ய இவர்...

பைத்தியக்காரனுக்கும் உஷார்காரனுக்கும் 0

பைத்தியக்காரனுக்கும் உஷார்காரனுக்கும்

சம்பாஷணை – சித்திரபுத்திரன் பைத்தியக்காரன் : ஸ்ரீமான்கள் பிரகாசமும், சாம்பமூர்த்தியும் இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் சத்தியமூர்த்தி முதலியவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பார்ப்பனக் குட்டுகளை வெளியாக்கி வருகிறார்களே, இந்த சமயத்தில் நாம் காங்கிரசைப் பிடித்துக் கொள்ளலாமே? உஷார்காரன் : அட போடா! பைத்தியக்காரப் பயலே. பார்ப்பனர்கள் சங்கதி உனக்குத் தெரியாதா? சுயராஜ்யப் பத்திரிகைக்கு ஏதாவது கொஞ்சம் பணம் வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் ஆந்திர தேசத்தில் சுயராஜ்யக் கட்சியையும் சீனிவாசய்யங்கார் கோஷ்டியையும் திட்டினால்தான் மதிப்புக் கிடைக்கிறதாகவிருக்கும். அதற்காக ஸ்ரீமான்கள் பிரகாசமும் சாம்பமூர்த்தி யும் போட்ட புது வேஷமேயல்லாமல் இதில் நமக்கொன்றும் லாபமில்லை. மேற்படி இரண்டு யோக்கியர்களும் சட்டசபைத் தேர்தலின் போது செய்த உபத்திரவம் உனக்குத் தெரியாதா? இவர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியை வைதது உனக்குத் தெரியாதா? இதே ஸ்ரீமான் சாம்பமூர்த்தி முழங்காலுக்கு மேல் வேட்டியைக் கட்டிக்கொண்டு காந்தியைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு பார்ப்பனரல்லாதாரை திட்டவில்லையா? பார்ப்பனரல்லாதார் என்கிற சண்டை வரும் போது திடீரென்று எல்லாப்...

முடியுமா? 0

முடியுமா?

இவ்வருஷம் நடைபெறப்போகும் காங்கிரஸ் மகாநாட்டில் காங்கிரஸ் கொள்கையில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்பதாக சேலம் மகா நாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நேயர்களுக்கு நினைவிருக் கலாம். அதன் கருத்தாவது:- “இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெருதற்கும் ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்கள் விரோதமாயிருப்பதால் அவற்றையும் ஒழிப்பது காங்கிரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். இது அடுத்த காங்கிரசில் திருத்தப்படவேண்டும்” என்பதே. ஆகையால் இத்தீர்மானங்களை பிரேரேபிக்கவேண்டும் என்பதாக ஸ்ரீ ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்களை பலர் கேட்டுக் கொண்டுமிருக் கிறார்கள். அவரும் ஆகட்டும் என்று வாக்களித்திருக்கின்றார். ஆனால் அவர் இவ்வருஷம் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தெரிந்தெடுக் கப்பட்டால் தான் இதை பிரேரேபிக்க முடியும். இந்த உளவு தெரிந்த பார்ப்ப னர்கள் கண்டிப்பாய் இவ்விஷயத்தில் சூழ்ச்சி செய்வதாயிருந்தாலும் பார்ப் பனரல்லாத மாகாணக் கமிட்டி மெம்பர்களாவது அவரை தெரிந்தெடுத்து இந்த விஷயத்தைப் பற்றி பேசவாவது சந்தர்ப்பம் அளிப்பார்களா என்பது உறுதி...

எதிர்பார்த்த எதிர்ப்புகள்      I 0

எதிர்பார்த்த எதிர்ப்புகள் I

நாம் சில காலமாக எதிர்பார்த்திருந்தபடியே நமது தொண்டிற்கு ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், கல்யாணசுந்தர முதலியாரும் வெளிப்படை யாய் வந்து எதிர்க்க நின்று விட்டார்கள். இனி இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இவர்களை மூடி மூடி வைத்து எவ்வளவு தூரம் சரிப்படுத்த பார்க்கலாம் என்று நினைத்தோமோ அவ்வளவுக்கவ்வளவு அஸ்திவாரத்துடன் எதிர்க்க சவுகரியம் செய்து கொண்டு ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ வரதராஜுலு வழக்கம்போல் ஒரு கொள்கையும் இல்லாமல் வாயில் வந்த வார்த்தைகளை உளறிக் கொண்டு தேசீயம் என்கின்ற ஆயுதத்தின் மூலமாய் மறுபடியும் வெளியாய்விட்டார். ஸ்ரீ முதலியார், அவருக்கு அண்ணனாய் சமயம் சீர்திருத்தம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு வெளியாய்விட்டார். எனவே இவைகளுக்கு பதில் சொல்லித் தீரவேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. இருவரும் தாங்கள் ஆத்திரப்படும் விஷயம் இன்னது என்பதைக் குறிப்பிடாமலும் நமது பெயரையும் நமது பத்திரிகையின் பெயரையும் நாம் என்ன சொல்கின்றோம் என்பதையும் குறிப்பிடாமலும் நமக்கும் நாம் எழுதினவைகளுக்கும் தாங்கள் என்ன சமாதானம் சொல்லுகிறார்கள் என்பதைக் குறிப்பிடாமலும் ஜாடை...

பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு 0

பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு

நானும் எனது சகாக்களும் எதைச் சரி என்று உணர்ந்தோமோ, அதையே எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டுமென்ற கருத்துடனேயே இயன்ற தொண்டு செய்து வருகிறோம். எங்களுக்கு இத்தொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டதல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து வீரத்துடனும் கீர்த்தியுடனும் வாழ்ந்து வந்து இன்று அன்னியர்கள் ஏமாற்றத்தில் அகப்பட்டு சுயமரியாதை அற்று மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்டே அதை நிவர்த்திக்க உழைத்து வருகின்றோம். ஏனெனில் நமது மக்களில் 100-க்கு 90 பேர் இப்போது கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகின்றனர். உலகத்தின் இதர தேசங்களையும் அத்தேசத்தாரின் நிலைமையையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் மற்ற காரியங்களையும் நம்மில் அநேகர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இது விஷயங்களையறிந்து நமது நிலைமையையும் கவனித்து எங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதைச் சொல்லவே முன் வந்திருக்கின்றோம். அதை நீங்கள் செம்மையாய் கவனித்து யோசனை செய்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டால் அதைச் செய்ய வேண்டுமென்றே உங்களை...

ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும் 0

ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும்

ராயல் கமிஷனில் மகமதிய சமூகம் அதாவது எந்த எந்த மாகாணத்தில் அச்சமூகம் அதிகமாய் இருக்கின்றதோ அங்கெல்லாம் அதாவது பஞ்சாப், அலஹாபாத், கல்கத்தா முதலிய இடங்களிலுள்ள பிரபலஸ்தர்களும் மகமதிய பிரதிநிதிகளும் பஹிஷ்காரக் கூட்டத்தில் மகமதியர் சேரக் கூடாது என்று தீர்மானித்துவிட்டதையறிந்த ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அம்மகமதியர்களை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். அதாவது பஹிஷ்கார இயக்கத்தில் மகமதி யர்கள் சேராவிட்டால் சர்க்காருடன் தாங்கள் சேர்ந்து கொண்டு மகமதியர் களை துன்புறுத்த நேரிடும் என்று சொல்லுகின்றார். இது ஸ்ரீசீனிவாசய்யங்கார் சொல்லுவதல்ல. அந்த ஜாதி சொல்வதென்றுதான் சொல்லவேண்டும். அக்கூட்டம் இதுவரை அப்படியேதான் செய்து வந்திருக்கின்றது. இந்து அரசாங்கத்தை ஒழித்து மகமதிய அரசாங்கத்தை கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். மகமதிய அரசாங்கத்தை ஒழித்து வெள்ளைக்கார அரசாங் கத்தைக் கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். இப்போது அந்த வெள்ளைக்கார அரசாங்கத்தை மிரட்டி தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டுவருவதும் இந்தகொள்கைதான். ஆகவே சுயமரியாதை உள்ள மகமதியர்கள் இதற்குச் சரியான பதில் கடாவுவார்களே அல்லாமல் பயந்துகொண்டு...

பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை 0

பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை

புதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்ட சபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்ன வென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாம லிருக்க முடியாது. புது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பன ரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாலூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப் பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள். அடுத்தபடியாக ‘ஜஸ்டிஸ்’ மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டி ருந்த சர்வகலாசாலை – யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பன மயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது. மூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகு...

பார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால்  அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம் 0

பார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்

சென்னைக் கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக் கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிக்கைகள் விஷமப் பிரசாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள்காட்சி என்ற பெயர் வைத்துக்கொண்டு காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களை காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு பணம் கொடுக்கா விட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம். பட்டாஸ் வெடி விற்றுத் தருவதாகவும் கல்பூரம் விற்றுத் தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக் கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால் பட்டாசு வாங்காதீர்கள் கல்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள் என்று நாம் சொன்னால் அது மத துவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி மிரட்டி கை கண்டு விட்டாலும் நம்மில் சில கேனங்களும்...

பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும் 0

பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும்

பஹிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சியாரும் சேர்ந்து கொண்டால் தேவலாம் போல அக் கட்சி பிரமுகர்களுக்கு தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத்தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படி நினைத்திருப் பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம். பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண்விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற்று ஏதாவது நன்மை செய்ய வேண்டுமானால் பாமர மக்கள் மனம் மகிழும்படியான மாதிரி யிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒருபலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைபிடிக்கும்படி செய்ய வேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய் விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலையான கொள்கைகளுடனும் வேலை செய்ய வேண்டியதுதான்...

ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தின் யோக்கியதை 0

ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தின் யோக்கியதை

ராயல் கமிஷன் பஹிஷ்காரத்திற்கு இந்தியா முழுவதற்கும் இப்போது இரண்டு தலைவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களில் காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒருவர். மற்றப்படி சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்ட கக்ஷிக் காரர்கள் தலைவர் என்று ஸ்ரீமதி பெசண்டம்மையார் இரண்டாமவர் ஆவார். மற்றவர்கள் எல்லோரும் இவர்கள் இருவர்களில் கட்டுப்பட்டவர்கள். எனவே, இந்த இருவருக்குள்ளாகவும் பலமான அபிப்பிராய பேதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் புரட்டுக்கார பத்திரிகைகள் இதை ஜனங்கள் அறியாதபடி சந்திலும் பொந்திலும் போட்டு மறைத்து வைத்து வருகின்றன. ஆனாலும் சமீபத்தில் வெளியாகித்தான் தீரும். என்னவெனில் பஹிஷ்காரப் பேச்சு பேசும் தலைவர்கள் அநேகமாய் புரட்டர்கள் என்றும் தங்களுக்கு மானம் போய் விட்டதாக வேஷம் போடு கிறார்கள் என்றும் உண்மையிலேயே பார்லிமெண்டார் இந்தியரை கமிஷ னில் நியமிக்காததானது இவர்களது சுயமரியாதைக்கு பங்கமாயிருப்பதாக கருதுவார்களானால் அதே பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்ட மற்ற பதவி களில் இருக்கலாமா என்றும் அதாவது சட்டசபை, ராஜாங்க சபை மற்றும் அது சம்மந்தமான பதவி...

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன் 0

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன்

நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்று வேன். அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிற போது முழுதும் உண்மையா யிருக் காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியா தென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டு பிடித்த முடிவை சொல்லுகிறேன். “ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமா யிருந்தாலே போதுமென்று...

எஸ்.சி. போசின் விடுதலை 0

எஸ்.சி. போசின் விடுதலை

நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு சுயசாதி போஸ் (சுபாச் சந்திர போஸ்) விடுதலையானது பற்றி ஏறக் குறைய எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதிலிருந்து இந்திய மக்களின் சுரணை (மானம்) கெட்டதன்மை நன்றாய் வெளியாகிறது. சுபாச் சந்திரபோஸ் சர்க்காரால் காரணம் சொல்லாமல் விசாரணை செய்யாமல் சுமார் 2 1/2 வருஷ காலம் ஜெயிலில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். மகாத்மா காந்தியும் இந்த அக்கிரமத்தை அறிந்து ஸ்ரீமான் தாசும் அடைபட்டு விடுவாரோ என பயந்து ஒத்துழையாமையையும் அதனால் மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பலிகொடுத்து ஸ்ரீ தாசுக்கு ஏதோ பெரிய ராஜி செய்து கொண்டதாய் பாவனை காட்டி சர்க்கார் ஸ்ரீமான் தாசைப் பிடித்தடைக்காமல் செய்தார். இதன் பலனாக தேசம் குட்டிச்சுவர் ஆகி அயோக்கியர்கள் முன்னுக்கு வந்தார்கள். பதவிக்குப் போட்டி போட்டார்கள். பதவி பெற்றார்கள். அதிலேயே மகிழ்ந்திருந்தார்கள். தங்களுக்குப் பதவி வேண்டிய போதெல்லாம் பதவி வேட்டைக்கு சுபாச் சந்திரபோஸ் பெயரை சொல்லிக் கொண்டார்கள். இவ்வளவுதானே அல்லாமல் அவரை...

ஒரு சமாதானம் 0

ஒரு சமாதானம்

சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் “நாயக்கரின் நயவஞ்சகம்” என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக “ஸ்ரீவரதராஜுலுவின் வண்டவாளம்” என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப் பட்டிருந்தக் கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்குக் கொஞ்ச காலத்திற்கு முன் எழுதியதாகக் காட்டப்பட்டிருந்த கடிதத்திற்கும் சமாதானமாகவும், அடுத்த வாரம் எழுதுவதாகப் பதில் எழுதியிருந்தோம். அதை உத்தேசித்து அநேகக் கனவான்கள் நமக்குப் பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது நாம் எழுதப் போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங் களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் தங்கள் இஷ்டப்படிக் கண்டித்து நாயுடுவுக்குப் பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்; இவ்விதம் இருவர் சண்டைபோட்டுக் கொள்வது ஒழுங்கல்ல வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும்; இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப்...

காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும் 0

காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்

கோயமுத்தூரில் நடக்கப் போகும் கோயமுத்தூர் ஜில்லா பார்ப்பன ரல்லாதார் மகாநாட்டை தென் இந்திய பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்த வேண்டும் என்பதாக சில ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் விரும்பியதால் கோய முத்தூர் ஜில்லா மகாநாட்டு வரவேற்பு சபையினரும் அதற்கு இசைந்து 25 தேதி ஒரு மீட்டிங்கு கூட்டித் தென் இந்திய பார்ப்பனரல்லாதார் சங்க நிர்வாக சபை அம்மாதிரியே தீர்மானித்து வேண்டிக் கொண்டால் அந்தப் படிக்கே தங்களது மகாநாட்டை மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்துவதாகத் தீர்மானமும் செய்தாய் விட்டது. இதன் பலனாக ஜுன் 11, 12 தேதிகளில் கூட்டுவதாயிருந்த மகாநாடு மறுபடியும் தேதி மாறினாலும் மாறலாம். ஜில்லா மகாநாட்டை மாகாண மகாநாடாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி நண்பர்கள் ஐயுறலாம். அதற்கு நாம் ஒரே பதில் அளிக்கிறோம். காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையுமே தான் காரணம். அதாவது, ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த சில கனவான்களுக்கு காங்கிரஸினி டத்தில் பைத்தியம் ஏற்பட்டிருப்பதும் காங்கிரசிலுள்ள...

ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார் 0

ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார்

ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மறுபடியும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் உபநயனம் என்னும் பூணூல் கல்யாணம் செய்து தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆதலால் அவரை இனி வரதராஜலு அய்யங்கார் என்றுதான் அழைக்க வேண்டும். இந்த கோஷ்டியார் சுவீகரிக்கத்தக்க ஒரு சந்தர்ப்பம் வருவதற்கு ஸ்ரீமான் வரதராஜலு பட்ட பாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. முன்பு ஸ்ரீ காந்தியையும், ஒத்துழையாமையையும்கூடத் தாக்கி, சுயராஜ்ஜியக் கக்ஷியுடன் கூடிக் குலாவி எவ்வளவோ கூத்தாடியும், அதைப்பற்றி தனது பத்திரிகையில் எவ்வளவோ பிரசாரம் செய்து பார்த்தும் அதற்கு செல்வாக்கு இருக்கின்றவரை கூடவே இருந்தும் பார்ப்பனர்களின் புகழ் விளம்பர சாகரத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு அக்கக்ஷிக்கு சாவு மணியடிக்கப் போகின்றதென்று தெரிந்தவுடன் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி அதைவிட்டு ஒரே தாவாகத் தாவி வெளியில் வந்து விட்டதும், பிறகு அது அடியோடு செத்து குழியில் போட்டு புதைக்கப்படும்போது தானும் ஒருகை மண்ணை அள்ளிப் போட்டு விட்டு நல்ல பிள்ளை போல்...

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம் ஊர்வலமும் கூட்டத்தில் குதூகலமும் 0

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம் ஊர்வலமும் கூட்டத்தில் குதூகலமும்

இவ்வாண்டுவிழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவெண்டுமென்று எண்ணினேனோ அதை மறக்கச் செய்தது. அவர்களுக்கு என்னிடமும் எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன்மையும், அளவுக்கு மீறி என்னை புகழச் செய்தது. அப் புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல. ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும். இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன். இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இடமில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்துவருவதை கண்டு மிக தைரியங்கொண்டு அந்த ஆசையின் மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டிருக்கிறேன். ‘குடி அரசை’ப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத்...

“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” 0

“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்”

“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்பதாக ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ராஜாவைப் பார்க்க எல்லோரும் எலுமிச்சம் பழம் கொண்டுபோனார்களாம். திருவாழ்தான் என்பவன் ஒரு புளியம்பழம் கொண்டுபோய் கொடுத்துப் பார்த்தானாம். ராஜா திருவாழ்தானைப் பார்த்து இது என்ன என்று கேட்டாராம். அதற்குத் திருவாழ்தான் “உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்றானாம். என்னவெனில் எலுமிச்சம்பழம் உருண்டை, புளியம்பழம் நீளம். புளிப்பு விஷயத்தில் இது அதைவிட அதிகமான புளிப்பு என்று சொன்னானாம். அதைப் போலவே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி காலம் மிகக் கொடுமை யாகவும், தேசத் துரோகமாகவும் இருந்ததாகப் பார்ப்பனர்களால் கூறப்பட்டு வந்தது. நமது நற்காலமாகவே ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியும் மறைந்தது. இரட்டை ஆட்சியை வெட்டிப் புதைப்போம், மந்திரிகளை எதிர்த்தே தீருவோம் என்ற நமது அய்யங்கார்கள் சுப்பராய மந்திரிக்கட்சியை அமைத் தார்கள். இது உருண்டைக்கு நீளமாகவும் புளிப்புக்கு அதனப்பனாகவும் ஏற்பட்டு விட்டது. நாம் இந்த ரகசியத்தை முன்னமேயே வெளியிட்ட பொழுது நேற்று வரை...

இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள் 0

இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்

இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையை உத்தே சித்து சட்ட சம்மந்தமாக பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக இந்து லாவில் பிராமணன் சூத்திரன் என்கிற பாகுபாடு களும் அதற்கு தக்கபடி பிராமணன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சூத்திரன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவை களை சட்டத்தில் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று கேட்கின்றோம். ஒரு பார்ப்பன இந்திய சட்டசபை மெம்பர்கூட இம்மாதிரி பிராமணன் சூத்திரன் என்கின்ற வித்தியாசம் சட்டத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி ஒப்புக்கொண்டாலும் கூட பார்ப்பனரல்லாத மெம்பருக்கு உணர்ச்சி வரவேண் டாமா என்று கேட்கின்றோம். ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு உபயோக மற்றதும் வேஷமானதுமான ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தில் இருக்கும் சுறுசுறுப்பில் ஏதாவது ஒரு பகுதியாவது இந்த சூத்திர பட்டமும் பாரபக்ஷமும் ஒழிவதில் கவலை இருக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். இனி உள்ள நாள்களையும் இது போல் வீணே கழிக்காமல் காரிய வழியில் கழிக்கும்படியாய் மிகவும் வணக்கமாய்...

கும்பாபிஷேகத்தின் ரகசியம் 0

கும்பாபிஷேகத்தின் ரகசியம்

குருக்கள் பார்ப்பனர்கள் சம்பாஷணை – சித்திரபுத்திரன் நடேச குருக்கள் : ஏண்டா சுப்பா! இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயி லுக்கு அபிஷேகம் வற்றதில்லே பிரார்த்தனை வற்றதில்லை முன்னைப் போல் அதிக சனங்கள் அர்ச்சனை செய்ய வற்றதில்லையே என்ன சங்கதி? சுப்புக் குருக்கள் : சங்கதியா! சங்கதி. ஈரோட்டில் ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல. அவன் “குடி அரசு” என்னும் ஒரு பேப்பர் போட்றான். அதில் சும்மா இதையே எழுதுறான். பார்ப்பானுக்குப் பணம் கொடுக்காதே, பார்ப்பான் காலில் விழாதே, பார்ப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே, கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துவிடு, பார்ப்பானைத் தேங்காய் பழம் ஒடைக்கச் சொல்லாதே, அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே, அவன் கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படி யெல்லாம் எழுதியும் போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வற்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள்...

மானமற்ற ஜாதி 0

மானமற்ற ஜாதி

மதுரையில் 29-11-27 -ல் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்த பிரசங்கத்தில் யாரோ ஒரு காங்கிரஸ் தொண்டர் ஸ்ரீ நாயக்கரை பல கேள்விகள் கேட்டதாகவும் அதனால் குழப்பமுண்டானதாகவும் குறிப்பிட்டி ருக்கிறார். இது உண்மையல்ல. நாயக்கரை யாரும் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. ஒருவர் பண்டிதர், பண்டிதர் என்று சத்தம் போட்டார். அதற்கு அங்கு இருந்தவர் அவரை கலகம் செய்ய வந்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு கண்டித்து மேடையில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். கூட்டம் கலையும் வரை பேசாமல் உட்கார்ந்திருந்துவிட்டு போய்விட்டார். அதுசமயம் நாயக்கரும் சத்தம் போட்டவரையும், அவரைக் கண்டித்த வர்களையும், அவரை கூட்டி வந்து உட்கார வைத்தவர்களையும் தக்கபடி கண்டித்துவிட்டு இம்மாதிரி சிறு விஷயங்களை நாளையதினம் சில அயோக்கிய பத்திரிகைகளும் அயோக்கிய நிருபர்களும் கூட்டத்தில் குழப்பம் என்றும் கேள்விகளென்றும் எழுதி இக்கூட்டத்தின் பெருமையைக் கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள் என்றும் சொன்னார். பார்ப்பனப் பத்திரிகை களும் பத்திரிகை நிருபர்களும் பெரும்பாலும் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர்...

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் 0

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார்

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் பெங்களூரில் காலமானதாகக் கேட்டு வருத்தமடைகிறோம். அவர் வித்தியாசம் பாராட்டாதவர். மூடக் கொள்கைகளில் நம்பிக்கை யில்லாதவர். உத்தியோகத்திலும் கூடுமானவரை யோக்கியமாய் நடந்து கொண்டவர். பார்ப்பனரல்லாதார் அநேகரின் அன்புக்கும் விஸ்வாசத்திற்கும் பாத்திரமாயிருந்தவர். உத்தியோக முறையில் பார்ப்பனரல்லாதாருக்கு சிறிதா வது நன்மை செய்த பார்ப்பனர் இருப்பாரானால் அதில் ஸ்ரீமான் சர். பி. ராஜ கோபாலாச்சாரியாரே முதன்மையானவர். அவரது குடும்பத்திற்கு நமது அனு தாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குடி அரசு – இரங்கலுரை – 04.12.1927

மனுதர்ம சாஸ்திரம் 0

மனுதர்ம சாஸ்திரம்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும் ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வடஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதை கண்டித்திருப்பதுடன் அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ்தி ரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன. அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகி றார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக் குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணாசிரமத்தை அழித்து சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவி லேற்றி இருக்கும் என்றும் கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமமும் ஜீவகாருண்யமும் அறிவும் அற்றத் தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும்...

ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் – I 0

ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் – I

மாயவரம் மகாநாட்டைப் பற்றி ஸ்ரீ வரதராஜுலு நாயுடு செய்த சூழ்ச்சி களைப் பற்றியும், அதுகள் பலிக்காமல் மகாநாடு செவ்வனே நடந்தேறிய பிறகும் அம்மகாநாட்டைப் பற்றியும், அதில் நிறைவேறிய தீர்மானங்களைப் பற்றியும் பொறாமை கொண்டு குரோத புத்தியோடு கண்டித்து எழுதிய பான் மையைப் பற்றியும் சென்ற வாரம் விபரமாக ஒவ்வொரு விஷயமாய் பிரித்து பிரித்து எடுத்துக் காட்டி பொது மக்களுக்கு விளங்கும்படி தக்க சமாதானமும் எழுதியிருந்தோம். அதற்கு பதில் என்கிற முறையில் “தமிழ்நாடு” பத்திரி கையில் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு நாம் எழுதியதில் ஒரு வரியாவது எடுத்துப் போட்டு அதற்கு சரியான சமாதானமாக ஒரு வரியாவது எழுதுவதற்கு யோக்கியதை இல்லாமல் போனதோடு பயங்கொள்ளித்தனமாய், “நய வஞ்சகம்,” “கடைசி வார்த்தை” என்ற தலைப்புகளின் கீழ் “பழைய விரோதம்,” “வெகுநாளைய கெட்ட எண்ணம்” என்கிற வார்த்தைகளைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொண்டு, அதுகளை சரணாகதி அடைந்து தப்பிக்கப் பார்க்கிறார். “நாயக்கரின் நயவஞ்சகம்,” “பழைய விரோதம்,” “வெகு...

ராயல் கமிஷன்                                    பஹிஷ்காரப் புரட்டு 0

ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு

ராயல் கமிஷனை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்கின்ற கூச்சல் பத்திரிகைகளில் வரவர பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகின்றதே தவிர காரியத்தில் குறைந்துகொண்டே போகின்றது. பொதுவாக கூறுமிடத்து மகமதிய பொது ஜனங்கள் சற்றேறக்குறைய யாவரும் பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே இருக்கின்றார்கள். உத்தியோகப் பேய் பிடித்தவர்களும் அரசியல் வாழ்வுக்காரர்களு மான ஒரு கை விரலுக்குள் அடங்கின சில பேர்கள் மாத்திரம் தான் பகிஷ் காரப் புரட்டில் சேர்ந்திருக்கிறார்கள். மற்ற மகமதிய தலைவர்கள் எல்லோரும் பகிஷ்காரத்தை வெறுக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் மேல் கண்ட கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பு தவிர வேறு பெயர்கள் பகிஷ்கரிக்க காணப்படுவதாய் சொல்வதற்கில்லை. இவ்விரு சமூக பொதுக் கூட்டங்களும் எல்லா பத்திரிகைகளும் பகிஷ்காரத்தை பலமாய் கண்டிக்கின்றன. இது தவிர இந்தியா முழுவதிலு முள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பார்களாகிய ஆதிதிராவிடர்கள் ஆதி இந்துக்கள் முதலிய சமூகம் அடியோடு பகிஷ்காரத்தை வெறுக்கின்றது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பார்த்தாலும் எத்தனை பேர்கள் பகிஷ்காரத்தை ஆதரிக்கிறார்கள் என்பதும் எத்தனைபேர் அதில் சேர...

ஒரு சந்தேகம் ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? 0

ஒரு சந்தேகம் ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதி யருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போக லாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டா தார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள்...

சுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி 0

சுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப் படுத்தப் பட்டிருந்ததான பாலக்காடு கல்பாத்தி பொது ரோடுகளில், மலையாளத்து ஈழவ சகோதரர்களும் தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் ஐகோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும் சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இது போல மலையாளத்திலும் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 27.11.1927

சேலம் தென்ஆற்காடு ஜில்லாக்கள் 0

சேலம் தென்ஆற்காடு ஜில்லாக்கள்

சேலம் ஜில்லாவிலும் தென்னாற்காடு ஜில்லாவிலும் மகாநாடு விஷயமாக எவ்வித பிரஸ்தாபமும் காணப்படுவதில்லை. பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுப் பேச்சை ஆரம்பித்தால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் பதவி போய்விடுமோ என்னமோ என்று பயப்படுவதாகக் காணப்படுகின்றது. தமிழ்நாடுகளில் இப்படி பயந்து கொண்டு மதில் மேல் பூனையாய் இருந்த காரணத்திற்காகவே பல பிரமுகர்களுக்கு இருந்த பதவி கூட போய்விட்டதாக நாம் அனுபவத்தில் அறிந்து வருகின்றோம். ஆதலால் பதவியை சதா சர்வகாலம் கட்டிக்கொண்டு அழாமல் தாங்கள் எந்த முத்தி ரையில் இந்த பதவிகளுக்கு வந்தோம் என்பதைக் கவனித்து சற்று கண் விழித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 27.11.1927

மாஜி ஜட்ஜி சர்.டி. சதாசிவய்யர் 0

மாஜி ஜட்ஜி சர்.டி. சதாசிவய்யர்

சர். டி. சதாசிவய்யர் இறந்ததைக் கேட்டு மனவருத்தம் அடை கின்றோம். மனிதனுடைய சராசரி யோக்கியதைக்கும் நாணயத்திற்கும் மேற்பட்ட அந்தஸ்தும் ஒழுக்கமும் உள்ளவர். தென்னாட்டுப் பார்ப்பனர் களுக்குள் எந்த ஒரு பெரிய அதிகாரியாவது கூடிய வரையிலும் கண்ணிய மாயும், நாணயமாயும் தனது அதிகாரத்தை செலுத்தியவர் உண்டா என்கின்ற ஒரு கேள்வி பிறக்குமானால் அதற்கு சர். சதாசிவம் என்றே சொல்லுவோம். ஜன சமூக சமத்துவத்திற்கு, எந்த ஒரு பார்ப்பனராவது கூடிய வரையில் சம்மதித்தவர் உண்டா? என்கின்ற கேள்வி பிறக்குமானால் அதற்கு சர். சதாசிவம்தான் என்கின்ற விடையே பகர்வோம். எனவே, இப்பேர்ப்பட்ட ஒரு பெரியார் இம்மண்ணுலகில் மறைந்தது பற்றி யாரும் துயருறாமல் இருக்க முடியாது என்பதோடு சர். சதா சிவத்தினிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மிகுதியும் அன்பும் மரியாதை யும் விசுவாசமும் கொண்டுள்ள ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் நமது ஆறுதலை சமர்ப்பிக்கின்றோம். குடி அரசு – இரங்கலுரை – 27.11.1927

காங்கிரசின் பேரால் பார்ப்பனர்களின் தேசத்துரோகமும் சுயநலமும் 0

காங்கிரசின் பேரால் பார்ப்பனர்களின் தேசத்துரோகமும் சுயநலமும்

பம்பாயில் இம் மாதம் 15, 16, 17, 18 தேதிகளில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நாடகம் கவனித்தவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றாமல் இருக்காது. ஒரு ஸ்ரீயின் விபசாரத் தனத்திற்காக அவளது நடத்தையை கண்டிக்கக்கூடிய கூட்டத்தில் அந்த ஸ்ரீயின் விபசாரத்தனத்தினால் அனேகம் மக்கள் திருப்தி அடைகிறார்கள். ஆதலால் அந்த ஸ்ரீயின் பரோபகாரத்தைப் பாராட்டுகிறோம் என்று ஒரு தீர்மானம் செய்யப்பட்டது போல், அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் சென்னை சுயராஜ்யக்கட்சியார் காங்கிரஸ் தீர்மானத்துக்குத் துரோகம் செய்த விஷயம் முடிவு பெற்றுவிட்டது. ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் ஒரு மாத காலமாக வடநாடு சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த கருத்தே இதுதான். அனேகமாக காங்கிரஸ் கமிட்டியில் மாகாண சுதந்திரம் பெற்று இம்மந்திரிகளை தோற்கடித்து தாங்களே மந்திரியாக வேண்டிய பிரயத்தனம் செய்தார். ஆனால் மற்ற மாகாணங்களில் உள்ள “காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி தேசபக்தர்களுக்கு” இம்மாதிரி வேட்டை கிடைக்க மார்க்கமில்லாததால் அவர்களின் யோக்கியதை அந்தந்த மாகாணங்களில் கெட்டுப்போய்விடும் என்கிற பயத்தின்...

ஸ்ரீ காந்தியின் தந்திரம் 0

ஸ்ரீ காந்தியின் தந்திரம்

ராயல் கமிஷனைப் பற்றி ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயம் சொல்லியி ருப்பது மிகவும் தந்திரமானதாய் இருக்கின்றதே தவிர நேர்மையானதாக காணவில்லை. அதாவது அசோசியேட் பிரசுக்கு சொன்னதாக காணப்படுவது என்ன வென்றால். தனது மனச்சாக்ஷி காங்கிரஸ் தலைவரிடத்தும் காங்கிரசிடமும் இருப்பதாகவும் சொல்லியிருப்பதோடு பஹிஷ்காரத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என்று சொல்லாமல் தந்திரமாய் பேசியிருக்கிறார். அதாவது காங்கிரஸ்காரர் சொல்லுவதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்று சொல்லி விட்டார். காங்கிரஸ் காரர்களின் தீர்மானத்தையாவது ஒப்புக்கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு அதை ஒப்புக் கொள்ளமுடியாது ஆயினும் எதிர்க்கமாட்டேன் என்று சொல்லி யிருக்கிறார். எனவே இவ்வார்த்தைகள் ஒரு பெரிய மகாத்மா என்றோ தலைவர் என்றோ பெரியவர் என்றோ சொல்லப்படுபவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளா அல்லது ஒரு தந்திரக்காரர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகளா என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டு கிறோம். எப்படி அவர் பேசியிருப்பதை பார்ப்பனப் பத்திரிகைகள் மகாத்மா காந்தியும் ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கிறார்...

பச்சையப்பன் கலாசாலையும் பார்ப்பனர்களும் 0

பச்சையப்பன் கலாசாலையும் பார்ப்பனர்களும்

பச்சையப்பன் கலாசாலையில் ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப் படுபவர்கள் இந்துக்கள்தான் என்று ஐகோர்ட்டார் தீர்ப்பு சொன்னதின் பலனாக சேர்த்துக் கொள்ள அப்பள்ளி தர்மகர்த்தாக்களில் பெரும்பாலோர் ஒப்புக் கொண்டார்களாம். இந்துக்கள் என்பவர்களுக்கும் இந்து மதம் என்ப தற்கும் இதைப்போல் முட்டாள்தனமானதும் அவமானமானதுமான சம்பவம் என்பதாக மற்றொன்றை குறிப்பிட முடியவேமுடியாது. ஒரு மனிதன் இந்துவா அல்லவா என்பதற்கு கூட வெள்ளைக்காரர்கள் ஏற்படுத்திய சட்ட மும் கோர்ட்டுகளும் தான் தீர்மானிக்க யோக்கியதை யுடையவைகளாக இருக்கின்றதேயொழிய தர்மகர்த்தாக்களுக்கோ இந்து மதம் ஆதாரம் என்பவைகளுக்கோ இந்துமத தலைவர்கள் என்பவர்களுக்கோ கொஞ்சமும் யோக்கியதை இல்லை என்றும் வெள்ளைக்கார கோர்ட்டார் சொன்னால் தான் தர்மகர்த்தாக்கள் ஒப்புக் கொள்ளக்கூடியவர்களே ஒழிய தங்களுக்கு என்ப தாக ஒரு சுயபுத்தியும் சுயமரியாதையும் இல்லையென்பதும் இதனால் நன் றாய் விளங்கிவிட்டது. தவிர தர்மகர்த்தாக்கள் சிலரின் யோக்கியதையை பார்க்கின்றபொழுது இந்த விஷயத்தில் அபிப்பிராயம் சொல்ல நேர்ந்த ஐகோர்ட் ஜட்ஜு நல்ல வேளையாக ஒரு வெள்ளைக்காரராய் இருந்ததினாலேயே ஆதிதிராவிடர் களும் இந்துக்கள்தான்...

சுயமரியாதைப் பிரசாரத்தின் வெற்றிக்குறி 0

சுயமரியாதைப் பிரசாரத்தின் வெற்றிக்குறி

பார்ப்பனரல்லாதாராகிய தமிழ் மக்கள் தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்ததும், அதற்கு நாட்டில் சிறிது செல்வாக்கு ஆரம்பித்தாலும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனப் பிரசாரம் மிகுதியும் பலமாய் செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் எங்காவது மடாதிபதிகளும், லோக குருக்களும், சங்கராச்சாரிகளும், பண்டிதர் களும், சாஸ்திரிகளும், பாகவதர்களும், சஞ்சாரம் என்கின்ற பெயராலும் காலnக்ஷபமென்கின்ற பெயராலும் இந்துமதம் என்கின்ற பெயராலும் வருணாசிரமம் என்கின்ற பெயராலும், ஆரிய தர்மம் என்கின்ற பெயராலும் இந்து தர்மம் என்கின்ற பெயராலும், புராணப் பிரசங்கம் என்கின்ற பெயராலும், வேதம், ஸ்மிருதி ஆகமம் என்கின்ற பெயராலும், ரிஷிகள் பெயராலும், மகாத்மாக்கள் பெயராலும் பலவிதசூழ்ச்சி பிரசாரமும் மற்றும் பல பேர்வழிகளின் பெயரால் பார்ப்பனப் பத்திரிகைகளிலும் அவர்கள் தயவால் வாழும் பத்திரிகைகளிலும் அவர்களது கூலிப்பத்திரிகைகளிலும் பிரசுரிப்ப தின் மூலமாகவும் பிரசாரம் செய்து வந்தார்கள். சுயமரியாதைப் பிரசாரத்தின் பலமானது இவைகளையெல்லாம் தாண்டிச்செல்லும்படியான நிலைமைக்கு வந்து பாமர மக்களையும் பகுத்தறிவில்லாத மூடநம்பிக்கைக்காரரையும் தட்டி எழுப்பத்தக்க...

ராயல் கமிஷன் 0

ராயல் கமிஷன்

ராயல் கமிஷன் பகிஷ்காரக் கூச்சல் சுயநல அரசியல்வாதிகளிடை எவ்வளவுக் கெவ்வளவு பலமாகக் கிளம்புகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு நாட்டிலுள்ள மக்களிடை அதன் புரட்டுகளும் வெட்ட வெளிச்சமாய்க் கொண்டு வருகின்றது. தவிர, பகிஷ்காரத்திற்கு எதிர் பிரசாரமும் பலமாய் ஏற்பட்டு வரு கின்றது.பகிஷ்கார காரணங்களும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. எனவே கூடிய சீக்கிரத்தில் பகிஷ்கார கூச்சலுக்கு சாவுமணி அடித்துவிடும் என்பது திண்ணம். ராயல் கமிஷனில் இந்தியர்களை சேர்க்கவில்லை என்ற கருத்துடன் தான் ஆதியில் பகிஷ்காரம் ஆரம்பிக்கப்பட்டது. தேசத்திலிருக்கும் கட்சி பிளவுகளையும், ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைக்கும் சூழ்ச்சிகளையும் வெளியாக்கி, யாரை நியமிப்பது என்ற கேள்வி பிறந்தபின் அதற்கு பதில் சொல்ல முடியாமல், இப்போது கமிஷனை பகிஷ்கரிப்பதற்கு அது காரணம் அல்ல என்று சொல்ல முன்வந்து விட்டார்கள். ‘காங்கிரஸ்’ சுயராஜ்யக் கட்சி முதலியவற்றிற்கு தலைவரான பண்டித மோதிலால் நேரு அவர்கள் கமிஷனில் இந்தியரை சேர்க்காதது மிகவும் நல்லதென்றே சொல்லிவிட்டார். ஆகவே, பகிஷ்காரத்தின் வேருக்கு சாவுமணி அடித்தாய் விட்டது. இனி...

ராயல் கமிஷனும் சுயமரியாதையும் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் செய்தி 0

ராயல் கமிஷனும் சுயமரியாதையும் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் செய்தி

“ஜஸ்டிஸ்” கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய தன்மையைப் பற்றி ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், தனது அபிப்பிராயமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் செய்தியாவது:- பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக் கொண்டு இருக்கின்ற வரையில் இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்கு பதவி அளிக்காதது நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாய் இருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஒரு அம்சமாகவே இந்த கமிஷன் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதி போன்ற காரியங்களில், ஒன்று சேர்ந்து பரிகாரம் தேட சம்மதிக்காத ஒரு கூட்டத்தார் இப்போது பகிஷ்காரத்தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக்கிடமானதென்றே சொல்ல வேண்டும். உண்மையில் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதென்பது எந்த அரசாங் கத்தாரால் இந்த ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டதோ அதே அரசாங்கத்தின் அம்சங்களான சட்டசபைகளையும், மந்திரி முதலிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பகிஷ்கரிக்கத்தக்க கொள்கையுடையதாயிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு விதமான...

கும்பகோணம் தாலூகா                  பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கும்பகோணம் தாலூகா பார்ப்பனரல்லாதார் மகாநாடு

இவ்வுலகத்தில் வேறு எந்த மதத்திடத்திலும் மனிதர்கள் பிறவியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வழக்கம் கிடையாது. ஆனால் நம்முடைய தேசத்திலோ ஒருவன் எவ்வளவு கேவலமான நடத்தை யுடையவனாயினும் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டால் அவன் உயர்ந்த ஜாதியென்றும் எவ்வளவு நல்ல நடத்தை யுடையவனாயிருந்தாலும் அவன் ‘தாழ்ந்த ஜாதி’ யில் பிறந்து விட்டானானால் அவன் கேவலமாகவும் கருதப்பட்டு வருகிறான். இதற்கு காரணம் மதந்தான். இம்மாதிரி ஒரு மதத்தை அனுஷ்டித்து வரும் வரையில், நாம் அவற்றை யெல்லாம் கண்டிக்காமல் மௌனமாய் யிருக்கும் வரையில் நாம் நூற்றுக்கணக்கான மக்களை நமது சமூகத்திலிருந்து பிற மதங்களுக்கு பலி கொடுத்துக்கொண்டு தான் வரவேண்டும். இந்துமத பரிபாலன போர்டு தலைவர் ஸ்ரீ சதாசிவய்யர், இந்துக்கள் என்பதற்கு வேதத் தை எவன் நம்புகிறானோ அவன் தான் இந்து என்று கூறியிருக்கிறார். அப்படி யானால் ஆதி திராவிடர்கள் பஞ்சமர்கள் இவர்களெல்லாம் இந்துக்கள், இந்தியா ஒரு காலத்தில் உன்னத நாகரீகம் படைத்திருந்த காலத்தில் மற்ற மேல்...