Author: admin

எதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது 0

எதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது

“காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள் என்கின்றவர்களின் சுயநலத்தையும் அயோக் கியத்தனங்களையும் பாமர மக்கள் அறிய நேர்ந்து விட்ட பிறகு வேறு வேஷத்தின் மூலம் வெளியாகலாம் என்று காத்திருந்த பல தலைவர்கள் சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற ஒரு புதிய வேஷம் போட்டுக் கொண்டு வெளியில் தலைநீட்ட முயற்சித்து வந்ததைப்பற்றி பலமுறை எழுதிவிட்டு, கடைசியாக கமிஷன் பகிஷ்காரம் காலித்தனத்தில் முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போலவே சென்னை மீட்டிங் குகளும் வேலை நிறுத்தங்களும் காலித்தனத்திலேயே முடிந்து விட்டது. நேற்று சென்னையில் நடந்த சம்பவங்களைப்பற்றி சென்னைப் பத்திரிகை யில் உள்ள விஷயங்களை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். அதைப் பார்த்தால் ஆரம்பமுதல் முடிவுவரை காலித்தனத்திலே முடிந்திருப்பது யாவருக்கும் நன்றாய் விளங்கும். சில்லரைக்கடை வியாபாரிகளை தடி கொண்டு விரட்டி அடித்து மூடச் செய்தும், கடை அடைக்க ஒப்பாதவர்களின் கடைக்குள் நுழைந்து சாமான்களுக்கு சேதம் விளைவித்தும், சாமான்களை கொள்ளை அடித்தும், தொந்திரை செய்தும், வண்டியில்...

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம் 0

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்

“சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிரதானம்” வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புகிறவர்கள் யார்? பார்ப்பனர்களே. நால்வகை வகுப்பு நாட்டில் உதித்த வகை பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். எப்படி? “மோக்ஷம்” “சுயராஜ்யம்” என்கிற வார்த்தைகளால். நாம் போராடுவது சுயமரியாதைக்காகவே நான் இன்று உங்கள் முன்னிலையில் பேசப்போகும் விஷயமானது கேவலம் தேர்தல்களைப் பற்றியோ, தேர்தல்களில் யாருக்கு ஒட்டுக்கொடுப் பது என்பதைப் பற்றியோ பேச வரவில்லை. இத் தேர்தல்களில் யார் ஜெயித் தாலும் யார் தோற்றாலும் நமக்குப் பெரிய லாபமும் நஷ்டமும் ஒன்றும் ஏற் பட்டு விடாது. ஆதலால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. எனக் குள்ள கவலை யெல்லாம், மக்களின் பெரும் பகுதியினராகவும் எல்லா வழி களிலும் இன்னாட்டிற்கு முக்கியமானவர்களாகவும் உள்ள நாம் தாழ்ந்தவர்க ளென்றும் அடிமைகளென்றும் கருதப்பட்டு சுயமரியாதையற்று கிடக்கி றோம். அன்னியர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறோம். ஆத லால் இவ்விதக் குறைகள் ஒழிய வழி தேட வேண்டியது இப்பொழுதுள்ள நமது முக்கியக் கடமை என்பதேயாகும். அவற்றிற்கு...

நெருக்கடியான சமயம் 0

நெருக்கடியான சமயம்

பார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமையிலும் சமூகயியல் நிலைமையிலும் தற்சமயத்தை பொறுப்புடன் நன்றாய் கவனித்து பார்ப்போமானால் இதை ஒரு நெருக்கடியான சமயம் என்றே சொல்ல வேண்டும். என்னவெனில் காந்தியடிகளின் தலைமையில் ஒத்துழையாமையின் போது பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செய்த தியாகத்தின் பலனாய் மாய்ந்து மறையக் கிடந்த பார்ப்பனீயமானது பல பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டதுடன் ஒத்துழையாமையும் ஒழிக்கப்பட்டு அதன் பலன் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததை அறிந்தே ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்களாக சில தொண்டர்கள் எவ்வித எதிர்ப்புக்கும் பழிப்புக்கும் அஞ்சாது முனைந்து நின்று பார்ப்பன சூழ்ச்சியையும் அவர்களைப் பற்றி பிழைப்புக்கும் சில பார்ப்பனரல்லாத புல்லுருவிகளின் சுயநல சூழ்ச்சியையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பாமர மக்களுக்கு விளக்கிக் காட்டியதின் பலனாய் பார்ப்பனரல்லாதார் சமூகம் அரசியல் தலைவர்கள் என்போர்களின் புரட்டையும் தேசாபிமானம் என்னும் வயிற்றுப் பிழைப்பு ஏமாற்றலின் தன்மையையும் ஒருவாறு அறிந்து கொள்ள இடமேற்பட்டதுடன் சமூக வாழ்விலும் தங்களது தாழ்ந்த...

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்களும் வேளாளர்களும் 0

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்களும் வேளாளர்களும்

கோயமுத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தேர்ந்தெடுத்தலின் முடிவையும் ³ ஸ்தானத்திற்கு அபேட்சகராக நின்று தோல்வி அடைந்தவரின் வகுப்பைச் சேர்ந்த மெம்பர்களின் ஏராளமான தொகைக ளையும் கவனித்தால் ஒரு விதமான ஆச்சரியமும் , வியப்புமுண்டாகும். ஆனால், இந்த ஜில்லாவிலுள்ள வேளாளர்களைப் பொருத்த மட்டும் இந்த தேர்ந்தெடுத்தலின் முடிவானது அநேக கிளர்ச்சியை உண்டு பண்ணக் கூடியதாய் இருக்கிறது. இந்த ஜில்லாவில் பெரும் பான்மையோர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனவந்தர்களாகவும் ஈகை முதலிய குணங்களில் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் மற்ற குலங்களெல்லாம் தத்தம் முன்னேற்றத்தைப் பற்றி வேண்டிய முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் மாத்திரம் கட்சிப் பிரதி கட்சிகளிலும், மௌடீகத் தன்மையிலும், கல்வியறிவின்மையிலும் மூழ்கி யிருப்பது மிகவும் வருத்தத்தையுண்டு பண்ணுகிறது. நாகரீகம் அதிகரித்து வரும் இக்காலங்களிலுங் கூட தங்களுடைய அற்ப பொறாமைகளையும், குறுகிய நோக்கங்களையும், வினோதங்களையும் போக்கி ஒத்துழைத்து தங்கள் ஜாதி அபிமானத்தையும் அபிவிருத்தியையும் சிறிதேனும் கவனியா மல் ஆனந்த மௌடீகத்தில் காலங்கழிப்பது...

பிராமணீயத்தை ஒழித்தவர்கள் 0

பிராமணீயத்தை ஒழித்தவர்கள்

பார்ப்பனரல்லாதார் வைதீகச் சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு திதி, திவசம் என்றோ, சிரார்த்தம் என்றோ, தங்கள் முன்னோர்களின் ஞாபகார்த்த மாகச் செய்யும் காரியத்தை, முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்பச் செய்யப்படும் கிரிகை என்ற மூட நம்பிக்கையால், அக் காரியத்திற்கு ‘பிராமணர்’களை அழைத்து அதை அவர்களைக் கொண்டே செய்ய வேண்டுமென, உடம்போடொட்டிய அழுக்குபோல் தங்கள் மனத்தில் படியப் பெற்று, ஒரு பார்ப்பனனைக் கூட்டி வந்து பலவகைத்தான சன்மா னங்களை அப்பார்ப்பனனுக்கு அளித்து, அவன் சொல்லும் பிரகாரமெல் லாம் சொல்லி, அவன் காலில் விழுந்து விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருவதும், அதேபோன்று கலியாணம் முதலிய சுப காரியங்க ளுக்கும் பார்ப்பனனை அழைத்து, மண மக்களுக்கு ஆயுள் விருத்தியை யும் புத்திர சம்பத்தையும் அப்பார்ப்பனன் இரக்ஷhபந்தனமளித்து வருவதாகப் பிரேமைக்குள்ளாகி பார்ப்பனனைக் கொண்டு செய்து வருவ தும் – வீண் அர்த்தமற்ற – பொருளற்ற – சுயமரியாதையை...

முளையிலேயே குறும்புத்தனம் 0

முளையிலேயே குறும்புத்தனம்

“சென்ற ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு சென்னை பார்ப்பன ரல்லாத மாணவர், தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு ராவ்பகதூர் வி. ரெங்க நாதன் செட்டியார் கட்டிய வெங்கடேஸ்வரர் ஹாஸ்டலில், சென்ற கார்ப்ப ரேஷன் தேர்தல்களில் வெற்றி பெற்ற நமது டாக்டர் சி.நடேச முதலியார்,திரு. பி.டி. குமாரசாமி செட்டியார், பி. ரெங்கநாதஞ் செட்டியார் முதலியவர் களுக்கும் பனகால் ராஜா, மதன கோபால் நாயுடு, ஆரியா முதலியவர்களுக் கும், சென்ற தேர்தல்களில் நமது ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றதற்காக சிற்றுண்டி வழங்கினர். 90 பேர் இருக்கும் ஹாஸ்டலில் 25 பேர்தான் நம்மவர். அந்தோ! பார்ப்பனரல்லாதாரின் தருமம் இப்படியும் வீணாக வேண்டுமா? அப்படியிருந்தும், அன்று பார்ப்பனப் பிள்ளைகள் நமது தலைவர்களை அவமானப்படுத்த எண்ணங்கொண்டு, வார்டனிடமும், செட்டியாரிடமும் சென்று இந்த கொண்டாட்டத்தை தடை செய்யச் சொன்னார்கள். அவர்கள் மறுத்து விடவே, ஹாஸ்டலை விட்டு எல்லாப் பார்ப்பன மாணவர்களும் தலைவர்கள் வரும் சமயத்தில் வெளியேறினர். ஆனால் மாலை...

தேவஸ்தானச் சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய் விட்டது.  அதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா? பார்ப்பனர்களா?  டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரும்                             தங்கள் வாக்கை நிறைவேற்றுவார்களா? 0

தேவஸ்தானச் சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய் விட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா? பார்ப்பனர்களா? டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரும் தங்கள் வாக்கை நிறைவேற்றுவார்களா?

சென்னை இந்து பரிபாலன மசோதாவானது தற்காலம் நமது நாட்டில் அரசியல் விஷயமாகவோ பொது நன்மை தீமை என்கிற விஷயமாகவோ கருதப்படாமல் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயமாய்க் கருதப் பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அல்லாமலும் அம் மசோதாவைப் பற்றிக் கண்டபடி தூற்றி வரும் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் நாளது வரையில் அதிலுள்ள ஒரு சிறு கெடுதியையாவது பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியவர்கள் அல்ல. சுயராஜ்யம் என்றும் சர்க்காருடன் போராடுவதென்றும் பொய்யும் புளுகும் சொல்லி கேப்பமாரித் தனம் செய்து அரசியல் விஷயத்தில் ஆதிக்கம் பெற்று எப்படி தங்களுக்கும் தங்கள் இனத்தாருக்கும் உத்தியோகமும் ஆதிக்கமும் சம்பாதித்துக் கொள்ளு கிறார்களோ அதுபோலவே இந்த மசோதா விஷயத்திலும் வேண்டு மென்றே மனப்பூர்த்தியாய் ‘மதம் போச்சு’, ‘தெய்வம் போச்சு’, ‘இந்து மதத்தில் அரசாங்கத்தார் புகுந்துவிட்டார்கள்’, ‘அநியாயமாய்ப் புது வரி போடப் போகிறார்கள்’, ‘நமது இந்துமத தர்ம சொத்துக்களை சர்க்காரார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்’ ‘மகமதியருக்கும் கிறிஸ்துவர்களுக்கும்...

உஷார் !உஷார்!! உஷார்!!!               பார்ப்பனர்களின் புதிய தந்திரம் 0

உஷார் !உஷார்!! உஷார்!!! பார்ப்பனர்களின் புதிய தந்திரம்

இந்தியாவின் நன்மையின் பொருட்டும் மக்களின் சம உரிமையின் பொருட்டும் மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் கொண்ட ஒத்துழையாமையை காங்கிரசின் மூலம் நடத்தப்பட்டு வந்த காலத்தில் நாட்டில் சுயநலம் படைத்த பார்ப்பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் தவிர மற்றவர்களுக்குள் ஒற்றுமையும் நம்பிக்கையும் கூடிய வரையில் கட்டுப்பாடும் இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதற்கு முன் இருந்து வந்த வகுப்பு உணர்ச்சி களுக்கும், வகுப்புத் தந்திரங்களுக்குங்கூட பலம் குறைந்திருந்தது என்பதை யும் யாரும் மறுக்க மாட்டார்கள். அவ்விதமிருந்த தேசத்தை, அது முன்னேறி நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் வெற்றி பெற்று மக்கள் சமத்துவமும் சுதந்திரமும் அடைந்து விட்டால் ‘வாழ முடியாத’ வகுப்பார்களாகிய வஞ்சகப் பார்ப் பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் இவற்றை எதிர்த்துப் பலவித சூழ்ச்சிகளால் கூடவே இருந்து குடியைக் கெடுத்து தேசத்தின் மக்களை பழய படி உயர்வு தாழ்வு வித்தியாசத்திலும் அடிமை வாழ்வில் பிழைக்க வேண் டிய...

ஆதிதிராவிட மகாநாடு 0

ஆதிதிராவிட மகாநாடு

சென்னையில் சமீபத்தில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டைப்பற்றி பார்ப்பன பத்திரிகைகளும் அவற்றைப் பின்பற்றி வாழும் பார்ப்பனரல்லாத சில பத்திரிகைகளும் அம்மகாநாட்டையும் மகாநாட்டு தீர்மானங் களையும் நசுக்க எண்ணங்கொண்டு அதைப் பற்றி வெகுகேவலமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இதைப்போன்ற ஒரு கொடுமையான காரியம் வேறு ஒன்று இருப்பதாகச் சொல்லமுடியாது. ஆதிதிராவிட சகோதரர்கள் இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று என்பதாக 6, 7 கோடி மக்கள் இருந்தாலும் அதைப்பற்றி ஒரு சிறிதும் லட்சியம் இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாகக் கூட வெளியார்கள் அறிவதற்கும் இல்லாமல் சூழ்ச்சி செய்து மறைத்து வைத்து விட்டு அவர்களது சுதந்திரத்திற்காக இப்பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளான பார்ப்பனரல்லாதாரும் அவர்களது பத்திரிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமலிருப்பதோடு ஆதிதிராவிடர்களாக ஏதாவது முயற்சித்தாலும் அதையும் கொலை செய்யப் பார்க்கின்றார்கள். என்ன கொடுமை! என்ன கொடுமை!! அதாவது சமீபத்தில் சென்னையில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பற்றி ஒரு சிறிதும்...

முறியடிக்கப்பட்டவர்களுக்கு ‘மித்திரனி’ன் நற்சாக்ஷிப் பத்திரம் 0

முறியடிக்கப்பட்டவர்களுக்கு ‘மித்திரனி’ன் நற்சாக்ஷிப் பத்திரம்

சென்னைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத கட்சியாருக்கு வெற்றி ஏற்பட்டதைப் பற்றி ‘மித்திரன்’ தன்னை திருப்தி செய்து கொள்ளுகையில் சென்னை வெற்றி பார்ப்பனரல்லாத கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி யல்லவென்றும், ஜஸ்டிஸ் அபேட்சகர்களான கனவான்கள் அந்தந்த பேட்டை ஓட்டர்களுக்குச் செய்த சேவையினாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்த தென்றும் சொல்லுகிறான். இதிலிருந்தே பார்ப்பனக் கட்சியான சுய ராஜ்யக் கட்சியாரின் சார்பாய் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களை ஓட்டர் கள் மதிக்க வில்லை என்றும் இவர்கள் நன்மை செய்வார்கள் என்று ஓட்டர்கள் நினைக்கவில்லை என்றும் ஏற்படுகிறது. இதைப் பார்க்கும் போது, ஐயோ பாவம்! நமது ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியாரை இப்பார்ப்பனர்கள் பழைய குரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு எந்தெந்த விதத்தில் கெடுத்து விட்டார்கள் – கெடுத்து வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது செட்டி யார் பேரில் அளவு கடந்த பரிதாபமேற்படுகிறது. ஸ்ரீமான் செட்டியாரின் மான நஷ்ட வழக்கில் செட்டியார் மானம் ஒத்தக்காசுதான் பெறும் என்று தீர்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஸ்ரீமான்...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை 0

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப்பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக் குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டு மென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப்பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்த நமது டாக்டர் வரத ராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார். அதாவது:- “இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்து மத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசி யல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டி யார் உள்பட காங்கிரஸ்காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்ட சபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில்...

கமீஷன் பகிஷ்கார நாடகம்  அகில இந்திய வேலை நிறுத்தம் 0

கமீஷன் பகிஷ்கார நாடகம் அகில இந்திய வேலை நிறுத்தம்

ராயல் கமிஷன் பஹிஷ்கார நாடகமானது இதுவரையில் தீர்மான ரூபங்களாகவும் தட்டிப்பேச ஆள் இல்லாத இடங்களில் மேடைப் பேச்சாகவும் இருந்து வந்ததானது இப்போது அதாவது பிப்பரவரி µ மூன்றாம் தேதியில் காரியத்தில் காட்டப்படப் போவதாக தெரிய வருகின்றது. அதாவது இம்மாதம் 15 தேதியில் காசியில் சர்வகக்ஷி பகிஷ்கார மகாநாடு என்பதாக ஒன்றுகூடி அகில இந்திய ஹர்ட்டால் (வேலை நிறுத்தம்) செய்வது என்பதாக தீர்மானங்கள் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. அதை அனுசரித்து நாடெங்கும் வேலைநிறுத்தங்கள் செய்வதற்கு வேண்டிய பிரசாரங்களும் ஆங்காங்கு நடத்த முயற்சிகளும் செய்யப்படுவதாய் காணப்படுகின்றது. பகிஷ்கார விஷயமாய் ஒவ்வொரு கக்ஷிக்காரர்களும் ஒவ்வொரு தலைவர்கள் என்பவர்களும் சொல்லிவந்த விஷயங்களை மறுத்து அதில் உள்ள புரட்டுகளை வெளியாக்கியும் எத்தனையோ கட்டுரைகள் எழுதியும் சொற்பெருக்குகள் பொழிந்தும் வந்திருந்தும் இதுவரை அவற்றில் ஒன்றுக்காவது சமாதானமோ பதிலோ இல்லாமல் தங்கள் வழக்கபடி புரட்டுகளையே பாமர மக்கள் ஏமாறும்படி எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்களே ஒழிய மக்கள் உண்மையை...

பிராமணீயக் கொடுமை 0

பிராமணீயக் கொடுமை

இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பது பிராமணீயம் ! இந்தியாவை வேற்றரசர் கையில் கொடுத்தது பிராமணீயம்! இந்து முஸ்லீம் கலகங்களை மூட்டுவது பிராமணீயம்! தமிழரை வறுமைக்குள்ளாக்கியது பிராமணீயம்! இந்தியா சுயராஜ்யம் அடைவதற்குத் தடைக் கல்லாயிருப்பது பிராமணீயம்! உடன்பிறந்த சகோதரர்களான தமிழர்கள் அடித்துக் கொள்ளவும் நீதிமன்ற மேறி வழக்காடவும் காரண பூதமாயிருப்பது பிராமணீயமே! தமிழர்களே! இந்தப் பாழான பிராமணீயத்தை நாட்டை விட்டு ஓட்டுக. குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926

பார்ப்பனரின் பிறப்புரிமை 0

பார்ப்பனரின் பிறப்புரிமை

வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக்கும் டாக்டர் மூஞ்சே அவர்க ளுக்கும் வங்காளத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை ³ இரு கனவான்களும் வீரர்களைப் போல மீறி நடந்தார்கள். அம்மீறுதலானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தேசித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம். அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக் கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி. ரங்காச்சாரியார் முதலிய பார்ப்ப னர்கள் அரசப் பிரதிநிதியிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வரு கிறது. ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்று வதற்கு மற்றொருபுறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்கு...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர் 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக “பிராமணர் – பிராமணரல்லாதாரின் நம்பிக்கைக் குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லாதாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகி றோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடி செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்தசாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் வேண்டாம் என்று சொல்லச் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட்கிறோம். குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926

நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும் 0

நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும்

நாகபட்டணம் தென் இந்தியா ரயில்வேயைச் சேர்ந்த தொழிலாளரும், ஸ்ரீமான் பாலையத் தேவர் குமாரருமான ஸ்ரீமான் பா. காளியப்பத் தேவர் அவர்களுக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படப்பக்காட்டிலிருக்கும் ஸ்ரீமான் இராசாமித் தேவரவர்கள் குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுக்கும் இவ்வாவணி- µ மூன்றாந்தேதி (19-8-26 ) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகை கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறும். அத்திருமணத்தில் மணமகனும் மணமகளும் கதரா டையே அணிவதுடன் பார்ப்பனர் சம்மந்தமே இல்லாமல் அத்திருமணச் சடங்கும் நடைபெறும். நம் தென்னாட்டில் இம்மாதிரி கதருடையுடன் இதுவரை பல திருமணங்கள் நிகழ்ந்திருந்தாலும் பார்ப்பனப் புரோகிதரில் லாமல் திருமணங்கள் நடப்பது அதிசயமாகக் கருதப்படுவதுடன் வெகுசில திருமணங்களே இதுவரை நடைபெற்றிருக்கின்றன.அவற்றுள் சென்ற மாதம் வட ஆற்காடு ஜில்லா ஆம்பூர் சாணாங் குப்பத்திலிருக்கும் திருவாளர்கள் வெங்கிடசாமி முதலியாரும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்த மூன்று திருமணங்களும் நாகையில் நடக்கப் போகும் இத் திருமண மும் முக்கியமானதென்றே சொல்லலாம். இனியும்...

தொழிலாளர் இயக்கம் வெற்றி பெறாத காரணம் என்ன? 0

தொழிலாளர் இயக்கம் வெற்றி பெறாத காரணம் என்ன?

சென்னையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொழிலாளர் இயக்கம் உருப்பெறாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் பார்ப்பனர்களும் அரசியல் பிழைப்புக்காரர்களும் அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்ளுகின்றார்கள். தொழிலாளர்கள் இயக்கம் சென்னை யில் தோன்றிய காலம் தொட்டே நாம் இந்த அபிப்பிராயம் சொல்லி வரு கின்றோம். ஸ்ரீமதி பெசண்டம்மைக்கும், ஸ்ரீ சீனிவாசய்யங்காருக்கும், சிவராவுக்கும், சத்தியமூர்த்திக்கும், வரதராஜுலுக்கும் மற்றும் இவர்கள் போன்றோருக்கும் தொழிலாளர் சம்மந்தமோ தலைமை ஸ்தானமோ இருக்க வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம் இவர்கள் தொழிலாளர் களா? அல்லது தொழில்திரம் அறிந்தவர்களா? அல்லது தொழிலாளி போன்ற ஏழ்மை வாழ்க்கை வாழ்கின்றவர்களா? தேச மக்களை ஏமாற்றி தங்கள் தங்கள் யோக்கியதைக்குமேல் சம்பாதித்துக் கொண்டும் தங்கள் தேவைக்கும் அனுபோகத்திற்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் பாமர மக்களை பலிகொடுத்து வாழும் இழிதுறையான அரசியல் வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படி ஏழைகளும் வாயில்லாப் பூச்சிகளுமான தொழிலாளர்களின் கஷ்டத்தை அறியக் கூடியவர்களாவார்கள்? எனவே இவர்களைத் தலைமையாகக் கொண்டு...

“தேசபக்தன்” 0

“தேசபக்தன்”

‘தேசபக்தன்’ பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு. கோ. நடேசய் யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளி வந்த ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகையும் திரு. நடேசய்யரையே தன் ஆசிரியராகக் கொண்டி ருந்தது. அக்காலை ‘வர்த்தகமித்திரனி’ல் ஒழுங்காகவும் தேசநலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளிவந்தன. ஆனால் இப்பொழுது அதே திரு. நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட ‘தேசபக்தன்’ தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்படையாகக் கூறப்புகின் ‘தேசபக்தனும்’ பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க, மலாய் நாட்டில் ‘தமிழ் நேசன்’ என்றும் இலங்கையில் ‘தேசபக்தன்’ என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ளதென்றே கூறவேண்டும். கறுப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது...

பிராமணீயத்தை ஒழித்தவர்கள் 0

பிராமணீயத்தை ஒழித்தவர்கள்

சென்னையில் கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியார், திரு.வி. கலியாண சுந்தர முதலியார், ந. தண்டபாணி பிள்ளை, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் முதலி யவர்கள் கூடிப் பேசியதாகவும் அதன் முடிவு என்ன என்பதைப் பற்றியும் முந்திய இதழில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது, அரசியல் விஷயத்தைப் பற்றி அவரவர்கள் அபிப்பிரா யப்படி நடந்து கொள்வதென்றும், சமூக சமத்துவ விஷயங்களில் எல்லோ ரும் ஒரே அபிப்பிராயமாயிருக்கிறோம் என்றும், அது விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது என்றும் எழுதியிருந்தோம். அதன் பலனாக அதே சமயத்தில் சமூக சமத்துவ விஷயமாய் எல்லோரும் ஒத்துப் பிரசாரம் ஆரம்பிக்கப்படும் முன்பு பார்ப்பனரல்லாதார் வைதீக சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யப்படும் சடங்குகளை நிறுத்துவதற்கு முதல் முதலாகப் பிரசாரம் செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்வதில் தங்கள் தங்கள் பெற்றோர்களையும் மற்றோர்களையும், மோக்ஷத்திற்கனுப்புவதற்கென்றும், அவர்கள் சுகமாய் இருப்பதற்கென்றும்...

சீர்திருத்தப் புரட்டு 0

சீர்திருத்தப் புரட்டு

நமது நாட்டுப் பார்ப்பனர்களின் பொதுநலச்சேவை, சீர்திருத்தம் என்ப வைகள் அதாவது காங்கிர° என்றும், சமூக சீர்திருத்தம் என்றும், ஆசாரச் சீர்திருத்தம் என்றும் இப்பார்ப்பனர்கள் பேசுவதெல்லாம் சுத்தப் புரட்டு என்றும் இவைகளை வேறொருவர் செய்வதற்கில்லாமல் ஏமாற்றி தாங்களே செய்பவர்கள் போல காட்டி மக்களை ஏமாற்றி வெறுந் தீர்மானங்களை ஏட்டில் எழுதிவிட்டு காரியத்தில் நடவடிக்கையில் வரும் போது குறுக்கே படுத்துக் கொண்டு விதண்டாவாதம் பேசுவதே வழக்கம் என்றும் எழுதி வந்திருக்கின்றோம். உதாரணமாக, ஆசார திருத்தத்தின் பேரால் பம்பாயில் போய் வயிறு பிழைக்கும் ஸ்ரீ மு. நடராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் இந்தியா முழுமைக் கும் தான் ஒரு ஆசாரத்திருத்தக்காரர் என்ற விளம்பரம் பெற்றவர்.. அவரது ஆசாரத் திருத்தமானது ஸ்ரீமான்கள் ஆ.மு.ஆச்சாரி. கூ.சு.ராமச்சந்திர ராவ்ளு.சத்தியமூர்த்தி முதலிய வருணாசிரம பிரசாரக்காரர்களைவிட மோச மான திருத்தம் என்றே சொல்லுவோம். உண்மையாய் பேசவேண்டுமானால் அவர் ஆசாரத்திருத்தம் என்கின்ற பெயரால் வருணாசிரமத்தை பரப்ப வந்த சூழ்ச்சிக்கார பார்ப்பனர் என்றே சொல்லவேண்டும். ஏனெனில்...

நீதி நிர்வாகத்தில் வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல் சேர்மென் தேர்தல் 0

நீதி நிர்வாகத்தில் வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல் சேர்மென் தேர்தல்

மதுரை முனிசிபாலிட்டிக்குச் சேர்மெனாகப் பொது ஜனங்களாலும் இயற்கை தேவியாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடுவை நமது பார்ப்பன தேவதைகள் ஐந்து, ஆறு மாத காலமாக அந்த ஸ்தானத்தில் உட்காருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள். அது என்னவென்றால் ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடுவும் மற்றொரு கனவானும் சேர்மென் பதவிக்குப் போட்டி யாக நின்றார்கள். ஸ்ரீமான் நாயுடு பார்ப்பனர்களின் எடுப்பார் கை குழந்தை யாயில்லாமல் சுயமரியாதை உள்ளவராயிருந்துவிட்டபடியினால் அங்குள்ள பார்ப்பனர்கள் நாயுடுவுக்கு விரோதமாக ஒருவரை நிறுத்தி சுயராஜ்யக் கட்சி யின் பெயராலும் காங்கிரஸ் பெயராலும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும் ஸ்ரீமான் நாயுடுவுக்கு சம ஓட்டு கிடைத்ததால் திருவுளச் சீட்டு போட வேண்டிய அவசியமேற்பட்டு, திருவுளச் சீட்டிலேயும் ஸ்ரீமான் நாயுடு வுக்கே ஆகிவிட்டது. இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரை நியாயாதிபதியாய் அடைந்திருக்கிறோமென்ற தைரியத்தின் பேரில் கோர்ட் டுக்குப் போய் அத் தேர்தலை ரத்துசெய்து, வேறு தேர்தல் செய்யும்படி தீர்ப்புப் பெற்று விட்டார்கள். நல்ல வேளையாய் பார்ப்பனரல்லாதார் அப்பீல்...

காங்கிர° தீர்மானங்களும் ஸ்ரீ காந்தியும் 0

காங்கிர° தீர்மானங்களும் ஸ்ரீ காந்தியும்

காங்கிரசின் யோக்கியதையைப் பற்றி ஸ்ரீ காந்தி அவர்கள் தமது அபிப்பிராயம் வெளியிட்ட பிறகுதான் தமிழ்நாட்டு மக்களில் பலருக்கு ‘குடி அரசு’ இதுவரையில் உண்மையைத் தான் சொல்லி வந்திருக்கின்றது என்று புலப்பட்டு இருக்கின்றது. உண்மையை ஒழிக்காமல் பேசவேண்டுமானால் நமது நாட்டில் காங்கிர° என்கின்ற ஒரு கொடிய யமன் போன்ற இந்த °தாபனம் இருக்கும் வரையில் ஏழை மக்கள் விடுதலை என்பதைக் கன விலும் நினைக்க வேண்டியதில்லை என்றே கல்லிலும் எழுதி விடுவோம். வெள்ளைக்காரனின் கொடுமையான ஆக்ஷிமுறை ஏதாவது ஒரு காலத்திலாவது நமது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமானால் முதலாவது காங்கிர° ஒழிந்து தீரவேண்டும். பிறகு தான் இந்து மதமும் பார்ப்பன ஆதிக்கமும் ஒழியவேண்டுமென்று சொல்லுவோம். ஏனெனில் இந்து மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் மாத்திரம்தான் மக்களை ஏமாற்றி பாழ்படுத்த முடியும் காங்கிரசோ அப்படியில்லை. காங்கிர சின் பேரால் எல்லா வகுப்பு அயோக்கியர்களும் அன்னக்காவடிகளும் அநாமதேயங்களும் காலிகளும் மக்களை ஏமாற்ற வசதியிருக்கின்றது. இந்து மதம் ஒரு...

இரு பார்ப்பன சீனிவாசர்களின் பொய்மான் அறிக்கை இதை மண்டையில் அடித்துப் புதைக்க வேண்டும். 0

இரு பார்ப்பன சீனிவாசர்களின் பொய்மான் அறிக்கை இதை மண்டையில் அடித்துப் புதைக்க வேண்டும்.

ஸ்ரீமான்கள் மகாகனம் சீனிவாச சாஸ்திரியும், எஸ்.சீனிவாசய் யங்காரும் சதியாலோசனை செய்து ஒரு பொய்மான் அறிக்கை வெளியிடச் செய்திருக்கிறார்கள். இப்பொய்மான் அறிக்கையைக் கண்டு பொதுஜனங்கள் ஏமாந்து போகக்கூடாது. அவ்வறிக்கையை ஒரே அடியாய் மண்டையில் அடித்துக் கொன்று குழியில் புதைக்க வேண்டும். அது எதுவென்றால் அதுதான் இந்திய தேசீய ஐக்கியச் சங்கம் என்பது. இதை உண்டாக்க நேரு-ஆசாத் அறிக்கை என்பதாக ஒன்றைக் கட்டி விட்டிருக்கிறார்கள். உஷார்! உஷார்!! உஷார்!!! குடி அரசு – கட்டுரை – 08.08.1926

பார்ப்பனர்களுக்கு சரியான இடி பார்ப்பன பார்ப்பனரல்லாதாரின்                             வகுப்பு வித்தியாசத்தைப் பற்றி                             ஸ்ரீமான் எஸ். ஆர். தாசின் அபிப்பிராயம் 0

பார்ப்பனர்களுக்கு சரியான இடி பார்ப்பன பார்ப்பனரல்லாதாரின் வகுப்பு வித்தியாசத்தைப் பற்றி ஸ்ரீமான் எஸ். ஆர். தாசின் அபிப்பிராயம்

“நான் இங்கு வந்ததின் முக்கிய நோக்கமெல்லாம் இங்குள்ள விஷயங்களை நேரில் அறிந்து அரசப் பிரதிநிதிக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற அபிப்பிராயத்தின் பேரிலேயேயாகும். இங்கு வந்து நேரில் விஷயங்களைக் கவனிக்கிறபோது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரு சமூகத்தாருக்குள்ளும் இருக்கும் வகுப்பு உணர்ச்சி எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான் எப்பொழுதும் இம் மாகாணத்திலுள்ள தாழ்ந்த நிலையிலி ருக்கும் வகுப்பாரிடமே அபிமானம் கொண்டிருப்பேன். ஏனென்றால் தாழ்ந்த சமூகத்தினர் முன்னுக்கு வரும்வரையில் தேசம் சுயராஜ்யம் பெறமுடியாது. தாழ்ந்த சமூகத்தினர் முன்னுக்கு வரவேண்டுமென்று சொல்வதையும், பிற்பட்ட வகுப்பினர் – தாழ்ந்த வகுப்பினர்களென்றும் பிறத்தியாரால் அழுத்தப்பட்டுக் கிடக்கிறவர்களென்றும் நினைத்துக் கொண் டிருக்கிற ஜனங்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக் கொண் டிருக்கும் எந்த இயக்கங்களையும் வகுப்பு இயக்கங்களென்று சொல்லவே கூடாது. அவற்றையெல்லாம் தேசீய இயக்க மென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட- பிற்பட்ட- அழுத்தப் பட்ட சமூகத்தார் முன்ன ணிக்கு வருகிறவரையில் தேசீய இயக்க மென்று சொல்லிக்கொண்டு வேலை செய்வது பிரயோஜனத்தைத்...

பண்டித மாளவியாவின் புது தைரியம் இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக் கருதியா?  வகுப்பைக் கருதியா? 0

பண்டித மாளவியாவின் புது தைரியம் இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக் கருதியா? வகுப்பைக் கருதியா?

ஒத்துழையாமையின்போது சர்க்காரால் போடப்பட்ட எத்துணையோ இலட்சக்கணக்கான அநாகரீகமானதும் அநியாயமானதுமான உத்திரவு களை இந்திய மக்களில் பதினாயிரக்கணக்கான பேர் மீறி ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் இவைகளில் ஒன்றாவது நமது பண்டித மாளவியாவுக்கு அநியாயமான உத்திரவென்றோ அநாகரீகமான உத்திர வென்றோ தோன்றாமல் போய்விட்டது ஏன்? அது தேச நன்மைக்கும், இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் பஞ்சாப்புக்கும் கிலாபத்துக்கும் ஏற்பட்ட அநீதிக்கும் பரிகாரம் தேட ஏற்பட்ட வழிகளைத் தடைப்படுத்த ஏற்பட்ட உத்திரவானதால் அதைப்பற்றி நமது பண்டிதருக்கு லட்சிய மில்லை. ஆனால் இப்பொழுது கல்கத்தா கலவர சம்பந்தமாய் உண்மையாய் கொலைகளும், கொள்ளைகளும், அடிதடி கலவரங்களும் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கிற காலத்தில் வங்காள அரசாங்கத்தார் போட்ட தடை உத்திரவை மீறுவதற்கு நமது பண்டிதருக்கு வெகு அவசரம் ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் இந்த உத்திரவானது வெறும் வகுப்பு சம்பந்தத்தையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான். ஆனதால் நமது பண்டிதர் வகுப்பு வாதியா, தேசீயவாதியா என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். பண்டிதர் பார்ப்பனராயிருப்பதால்...

பம்பாயில் பார்ப்பனர் கொடுமை 0

பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகைத்தே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிர ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின் வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும் சுபா சுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் செலுத்தி வந்தனர் – வருகின்றனர். இவர்களின் பஞ்சதந்திரக் கொடுந்தன்மை களை பார்ப்பனரல்லாதார் அறியவே சுபா சுப காரியங்களில் இவர்களை விலக்க வேண்டுமென்ற பரபரப்பும் துடிதுடிப்பும் அதிவேகமாக நாடெங்கும் பரவி வருகிறது. சென்னை மாகாணத்திலே பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய சின்னாளுள் இந்து சமூகத்தாருள் எவ்வளவோ பல சமூக சீர்திருத்தங்களும் மாறுதல்களும் நடந்து வருகின்றன. அவற்றுள் பார்ப்பனரல்லாதார்கள் சுபா சுப காரியங்களுக்கு...

தேவஸ்தான மசோதா பார்ப்பனரின் சூழ்ச்சி, ‘மித்திர’னின் அகம்பாவம் 0

தேவஸ்தான மசோதா பார்ப்பனரின் சூழ்ச்சி, ‘மித்திர’னின் அகம்பாவம்

சென்ற புதன் வியாழக் கிழமைகளில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பன மித்திரனாய ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ‘அக்கிரமத் திற்கும் அளவில்லையா?’ என்கிற தலைப்பின் கீழ் சில விஷமத்தனமான வார்த்தைகளை எழுதியிருக்கிறது. அது எதைப்பற்றி என்றால் வரப்போகிற சென்னை சட்டசபைக் கூட்டத்தில் தேவஸ்தான சட்டத்தில் உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத் திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால் கொண்டு வரப்படப் போகிறது. ஏனெனில் அச் சிறு சட்ட சம்பந்தமான தவறு தல்களை ஆதாரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச் சொல்லி நமது பார்ப்பனர்கள் மகந்துகளையும், மடாதிபதி களையும் ஏமாற்றி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பொருளைக் கவர்ந்து வியவகாரங்களை உண்டாக்கி நியாயஸ்தலங்களில் தற்காலத் தடை உத்திரவும் பெற்று இன்னும் பல மடாதிபதிகளை ஏமாற்றிப் பொருள் பறிக்கப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள். இப்பொழுது சர்க்காரால் கொண்டு வரப்படப் போகும் மசோதா நிறைவேறிவிடுமானால் இம்மாதிரி நமது பார்ப்பனர்கள் மடாதிபதிகளையும் மகந்துகளையும் ஏமாற்றிப் பொருள் பறிக்கவும் தற்காலத் தடை உத்திரவுகள்...

இதுவா ராஜிக்கு சமயம் 0

இதுவா ராஜிக்கு சமயம்

10-01-28 தேதி சென்னை கோகலே ஹாலில் ராயன் கமிஷன் பகிஷ்கார விஷயமாய் பெசண்டம்மை, ஸ்ரீமான்கள் பி.சிவராவ், எல்.கோவிந் தராகவய் யர், எம். ராமச்சந்திர ராவ். சி. விஜயராகவாச்சாரியார், கே.ஆர். வெங் கிடராமய்யர் ஆகிய பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கள் பணகால் ராஜா, சர் பாத்ரோ, கிருஷ்ண நாயர் ஆகியவர்களைக் கூப்பிட்டு ராஜி பேச ஏற்பாடு செய்ததாகத் தெரிகின்றது. இக்கூட்டத்தில் பெரிதும் அரசியல் திட்டத்தைக் குறித்தும், கமிஷன் பகிஷ்காரத்தைக் குறித்தும் பேசினார்களாம். நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும், இப்பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் வரை அவர்களுடன் கலந்து ராஜீயத்திட்டம் போடுவதோ அல்லது அவர் களுடன் கலந்து அரசியல் கிளர்ச்சி நடத்துவதோ பகிஷ்காரத்தில் இறங்கு வதோ போன்ற அறியாமை வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். சுயராஜ்யமும், அரசியல் கிளர்ச்சியும், பகிஷ்கார கூச்சலும் படித்த வர்கள் உத்தியோகம் பெறுவதற்காகவா? அல்லது ஏழைக் குடிகளைக் காப்பாற் றுவதற்காகவா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கட்டும். அவ்வுத்தியோகம்...

பார்ப்பனர் சூழ்ச்சிக்குத் தோல்விகள் 0

பார்ப்பனர் சூழ்ச்சிக்குத் தோல்விகள்

சென்னையிலும் மற்றும் பல வெளியிடங்களிலும் சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் என்கிற தேசீய வார்த்தைகளின் பெயரால் நமது பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சிகளுக்கு இவ்வாரத்தில் பெருந் தோல்வி யென்றே சொல்ல வேண்டும். சென்னையில் சென்ற 4-ம் தேதி நடந்த தேர்தல்களின் முடிவானது நமது பார்ப்பனர்களுக்கு முற்றும் விரோதமாகவே போனதோடு, அங்குள்ள பாமர ஜனங்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அறிந்து கொண் டோம், அறிந்து கொண்டோம் என்று ஆரவாரம் செய்து விட்டார்கள். சென்னைத் தேர்தல்களில் முக்கியமாய் டாக்டர் நடேச முதலியாரை ஒழிக்க வேண்டுமென்பதுதான் நமது பார்ப்பனர்களுக்குப் பெரிய ஆத்திரமாயி ருந்தது. அதற்காக வேண்டி ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியார் அவர்களைப் பிடித்து, அவருடைய ராவ்பகதூர் பட்டத்தையும் விடச் செய்து, டாக்டர் நடேச முதலியாருக்கு விரோதமாய் நிறுத்தி, எவ்வளவோ பொய்ப் பிரசாரங் களையும் இழிவுப் பிரசாரங்களையும் செய்து, ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யத் துணிந்தும் கடைசியாய் ஓட்டர்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. இதுபோலவே ஸ்ரீமான் குமாரசாமி செட்டியார்...

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்

இம்மாதம் 4-ம் தேதி கோயமுத்தூரில் நடந்த ஜில்லா போர்டு தலைவர் தேர்தலில் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் இளைய சகோதிரரான ஸ்ரீமான் பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களும் அபே க்ஷகர்களாக நின்றதில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட அங்கத்தினர் ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் கேட்க வாசகர்கள் மிகுதியும் சந்தோஷமடைவார்களென்றே எண்ணுகிறோம். ஸ்ரீமான் முதலியார் அவர்கள் கோயமுத்தூரில் பல தலைமுறையாய் இருந்துவரும் கௌரவமும் பிரபலமுமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்து லட்சம் இருபது லட்சம் முதல் வைத்து நடத்தும் பல கூட்டுறவு பாங்கிகளுக்கு பிரசிடெண்டாகவும் டைரக்டராகவும் இருந்து வருபவர். ஏறக்குறைய கோய முத்தூர் ஜில்லாவிலேயே 24-வயதிற்கு மேற்பட்டு 36-வயதிற்கு உட்பட்டி ருக்கிற ஒவ்வொரு வாலிபருக்கும் ஆப்த நண்பனாகவும் உற்ற மந்திரியாக வும் இருந்து வருபவர். அவர் பெரிதும் குடியானவர்களிடத்திலும் ஏழை மக்களி டத்திலும் அன்பு கொண்டவர். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கிற...

நீல்சிலையைப் பற்றி காங்கிர° வேடிக்கை பார்க்க வந்த இரு சகோதரர்களுக்குள் நடந்த சம்பாஷணை. 0

நீல்சிலையைப் பற்றி காங்கிர° வேடிக்கை பார்க்க வந்த இரு சகோதரர்களுக்குள் நடந்த சம்பாஷணை.

தம்பி : நீல் சத்தியாக்கிரகம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களே, அது என்ன ஆச்சுது? அண்ணன் : அது உனக்குத்தெரியாதா. “தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி ஏறினது” போல் நீல் சிலையை உடைக்கப் போய் கிருஷ்ணசாமி அய்யர் சிலையின் மூக்கு போய் விட்டது. தம்பி : அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லை, நடந்த சங்கதியைத் தெளிவாய்ச் சொல்லு, அண்ணன்: நீல் துரை சிலையை சத்தியாக்கிரகக்காரர்கள் சம்மட்டி யால் அடிக்கப் போனார்கள், அதைப் பலாத்காரம் என்று ‘குடி அரசு’ எழுதுச்சு. ஆனால் ஸ்ரீமான் காந்தி அதைப் பலாத்காரம் அல்ல சம்மட்டியால் உடைக்கலாம் என்று சொன்னார். அப்பவும் ‘குடி அரசு’ அது பலாத்காரம் தான் என்று சொல்லிற்று. அப்புறம் ஸ்ரீமான் காந்திக்கு புத்தி வந்து சம்மட்டி யால் அடிக்காதே களிமண் உருண்டையால் அடி என்று சொல்லிவிட்டு போய் விட்டார். இப்பொழுது சாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்வது போல் தொண்டர்கள் நீல் சிலையை களிமண்...

சென்னையில் திரு.எஸ்.ஆர். தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும் 0

சென்னையில் திரு.எஸ்.ஆர். தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ். ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி. ஆர். தாஸ் அவர்களின் தாயாதி சகோதிரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் ஐம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயிருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங்களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதியாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரியமடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலை மையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்தவரான ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸ் அவர்களை அனுப்பி யதாகத் தெரிந்தோம். ஸ்ரீமான் எஸ்.ஆர். தாஸ் அவர்கள் சென்னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப்பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர். சதாசிவய்யர்,...

காங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல். ஏன்? இப்பொழுதுள்ள காங்கிரஸ் பார்ப்பன காங்கிரசே 0

காங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல். ஏன்? இப்பொழுதுள்ள காங்கிரஸ் பார்ப்பன காங்கிரசே

அக்கிராசனாதிபதி அவர்களே! கனவான்களே! நான் எந்தக் கட்சியின் சார்பாகவும் பேச வரவில்லை. தற்காலம் இந்த தேர்தலில் பெருத்த கலவரமாயிருந்து வருகையில் ஓட்டர்களுடைய கடமை என்ன என்பதை எடுத்துக் கூறவே நான் வந்திருக்கிறேன். அக்கிராசனாதிபதி அவர்கள் என்னைப் பற்றியும் என்னுடைய வேலையைப் பற்றியும் கூறினார். எத்தனையோ தேசபக்தர்கள் நாட்டிற்காக தியாகம் செய்த காலையில் நான் அவர்களுக்குத் தொண்டு புரிந்து என்னால் கூடிய அளவு ஊழியம் செய்திருக்கிறேனே ஒழிய வேறில்லை. ஒத்துழையாமைக் காங்கிரசில் கலந்துள்ள நான் இக்கூட்டத்தில் பேசலாமாவென்ற சந்தேகம் சிலருக்கிருக் கலாம். காங்கிரஸ் எப்படியிருந்தது? இப்போது என்ன ஸ்திதிக்கு வந்தது? என்ற விஷயங்கள் தெரிந்து விட்டால் அந்தக் கவலை உங்களுக்கு இருக் காது. அந்த விஷயங்களை எடுத்துக் கூறவே நான் இங்கு வந்துள்ளேனே யொழிய, தனிப்பட்டவர்களைப் பற்றியாவது கட்சியைப் பற்றியாவது பேச நான் வரவில்லை. நாம் தனிப்பட்டவர்களைப் பற்றி பேசினால் கலகம்தான் நடக்கும். சென்ற வருடத்தில் நான் இங்கு வந்திருந்த போது திரு.வாசு...

புது வருஷத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை 0

புது வருஷத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை

சென்னையில் காங்கிர° கூட்டப்பட்டதின் பயனாக பார்ப்பனர்களின் யோக்கியதையும் அவர்களின் ஆயுதமாகிய தேசீயத்தின் யோக்கியதையும் யாவருக்கும் விளங்கியிருந்தாலும், பார்ப்பனர்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமல் தைரியமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனெனில் பல விதத்திலும் அவர்களுக்கு பார்ப்பனரல்லாதார் உதவி இருப்ப தாகத்தான் சொல்ல வேண்டும். உதாரணமாக இப்போது பார்ப்பனர்களுக்குத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க பிரசாரத்திற்கு முக்கிய உதவியாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், குழந்தை, அண்ணாமலை பிள்ளை, குப்புசாமி முதலியார், கோவிந்தராஜு முதலியார், ஐயவேலு ஆகி யோர்களே ஆவார்கள். மற்றபடி ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலம் செட்டி யார். சாமி நாயுடு, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முதலியோர்களிடத்தில் நம்பிக்கையில்லாத தன்மையைத் தெரிவித்து விட்டார்கள். ஸ்ரீமான் முத்துரங்க முதலியாரின் யோக்கியதையைப் பற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. பெரிய வருணாசிரம தர்மி. பார்ப்பனர்களைப் பூலோக தேவதைகளாகக் கொண்டவர். அவர் எழுதிக் கொடுத்ததைப் படிப்ப தும் சொல்லிக் கொடுத்ததைச்...

கோயில் 0

கோயில்

இந்து மதத்தினரெனக் கூறப்படும் மக்கள் பல பிரிவும் பல வகுப்பும் பல குலமுமாக எண்ணுதற்கரிய சாதி சாதியென்று பிளவுண்டு ஓர் வகுப்பின ருடன் மற்றோர் வகுப்பினர் சேராமலும் ஓர் குலத்தினரிடம் மற்றோர் குலத் தினர் உண்ணல் – தின்னல் கிடையாமலும் இருந்து வருகின்றனர். எவரிட்ட சாபமோ இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் ஒரே மதத்தினர் என்று கூறிக் கொண்டு இவ்வாறு பல பிரிவினராயிருந்து வருகின்றனர். இத்தகைய பிரிவிற் கெல்லாம் மூலகாரணம் “பனவராம் பெரும் படிறற் உஞயற்றிய கள்ளமாயை”. அதாவது சூழ்ச்சியிலேயே ஊறிப் பிறந்த வஞ்சகர்களான பார்ப்பனர்கள் என்னும் இரு பிறப்பாளர்கள் ஏற்படுத்திய திருட்டு வித்தியாசத் தத்துவமே யாகுமென்னும் பெரியார் வாக்கினின்று பார்ப்பனர்களே என்பதை அறிவாளர் எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டிலேயுள்ள கோயில்களெல்லாம் பண்டைத் தமிழ் வேந்தர் களால் சமரசம், ஒற்றுமை, நல்லொழுக்கம், பக்தி முதலிய தூய எண்ணம் துலங்க வேண்டுமெனக் கருதியே கோயில்கள் நிருமாணிக்கப் பெற்றதாகும். இதற்காக மானியங்களும் அவைகளைக் கட்டிய...

பதவிப் போட்டி  சுயமரியாதை அளிக்காது 0

பதவிப் போட்டி சுயமரியாதை அளிக்காது

சமீபத்தில் சட்ட மெம்பர் வேலை காலியாகப் போகின்றது. ஏனென்றால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களின் 5 வருஷ காலா வதி இனி 2 , 3 மாதத்தில் முடிவடையப் போகின்றபடியால் அந்த ஸ்தானம் காலியாக வேண்டியது கிரமமாகும். ஆனால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பர் வேலைபார்த்த காலத்தில் தனது உத்தியோகம் இனியும் கொஞ்சகாலம் நீடிக்க வேண்டும் என்கின்ற உத்தேசம் கொண்டே வெள்ளைக்காரருக்கு அனேக உதவி செய்திருக்கின்றார். கையினால் செய்வதானால் பதினாயிரக்கணக்கான மனிதர்க்குக் கூலி கொடுக்கதக்க வேலைகளை ஒரு சிறிது தயவு தாக்ஷண்ணியம் பாராமலும் இந்தியாவில் மாதம் 1-க்கு லக்ஷக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வேறு நாடுகளுக்குக் கூலிகளாகப் போகிறார்கள் என்பதைக் கருதாமலும் இந்திய நாட்டுப் பணம் இந்தியர்களால் வரியாகக் கொடுத்த பணம் ஒரு சிறிதும் இந்தியாவில் தங்காமல் வெளிநாட்டிற்குப் போகின்றதே என்கின்ற கவலையில்லாமலும் கையினால் செய்வதற்குப் பதிலாக பத்து லக்ஷம் இருபது லக்ஷம் என்பதாகப் பணம் கொடுத்து வெள்ளைக்காரர்கள் நாட்டுயந்திரங்களுக்காகப் பணம்...

விளங்கவில்லை 0

விளங்கவில்லை

ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயம் ஒருவாரு முடிவு பெறவேண்டும் என்று பார்ப்பனத் தலைவர்க ளுக்கு எழுதியிருக்கின்றார். இதற்கு பார்ப்பனர்கள் ஒரே பதில் சொல்லி விட்டார்கள். அதாவது “தேசம் பெரியதே ஒழிய பார்ப்பனர் பார்ப்பனரல்லா தார் என்கிற விஷயம் பெரிதல்ல, ஆதலால் இந்த சமயத்தில் இதை எல்லாம் பேசுவது தப்பு” என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீ ஜோசப் அவர்களுக்கு இதை எழுதுவதற்கு முன்பே பார்ப்பனர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந் திருந்தாலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் தனக்கும் அக்கரை இருப்பதாய் காட்டிக் கொள்ளலாம் என்றா என்பது நமக்கு விளங்கவில்லை. குடி அரசு – செய்திக் குறிப்பு – 08.01.1928

இனியும் சந்தேகமா? 0

இனியும் சந்தேகமா?

மனுதர்ம சா°திரத்தை கொளுத்துவதை பற்றி ஆசாரச்சீர்திருத்தப் போர்வையை போர்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமான் பம்பாய் கே.நடராஜர் என்கின்ற பார்ப்பனரே வெகுதூரம் துக்கப்பட்டார் என்றால் மற்ற பிராமணர் கள் வருணாசிரம மகாநாடு கூட்டுவதில் நாம் ஒன்றும் அதிசயப்படவில்லை. ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் வருணாசிரமப் பிரசாரமும் மகாநாடும் நடத்த தைரியமுடையவர்களாயிருக்கிறார்கள் என்பது தெரிந்த பின்னும், பார்ப்பனர்களும் நாமும் சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டா என்றுதான் கேட்கிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 08.01.1928

சென்னையில் கர்மபலன் 0

சென்னையில் கர்மபலன்

கர்மபலன் என்றால் மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் காரியங் களுக்கும் பேசும் விஷயங்களுக்கும் நினைக்கும் எண்ணங்களுக்கும் தக்க பலனை அவரவர் இறந்த பிறகு ‘மேல் லோகத்தில்’ கடவுள் முன்னிலையில் அனுபவிப்பதென்றும், அந்த அனுபவம் மோக்ஷம் நரகம் என்கிற இடங்களில் என்றும், சில சமயங்களில் அதற்கு மீறி அடுத்த ஜென்மம் எடுத்து அதில் அனுபவிக்க வேண்டும் என்றும், மனிதன் அதற்குத் தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுத்து அவர்கள் சொல்லுகிறபடி கேட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்றும், நமது பார்ப்ப னர்கள் அனேக ஆதாரங்கள் எழுதி வைத்துக்கொண்டு தங்கள் பிழைப்புக்கு அதையும் ஒரு வழியாக உபயோகித்து வருகிறார்கள். ஆனால், நாம் கர்மபலன் என்பதை அவ்விதத்தில் பொருள் கொள்வ தில்லை. கர்மபலன் என்றால் வேலையின் கூலியென்று தான் நினைக்கி றோம். கர்மம் என்றால் வேலை, பலன் என்றால் அதனால் நாமடையும் பிரதிப் பிரயோஜனம்; இதை நாம் கூலியென்று சொல்லுகிறோம். அந்தக் கூலியை மேல் லோகத்தில்...

முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம் – சித்திரபுத்திரன் 0

முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம் – சித்திரபுத்திரன்

கொஞ்ச நாளாக எங்கு பார்த்தாலும் முனிசிபல் சேர்மென்கள் வசூல் செய்யத் தவக்கப்பட்ட காரணத்தினால் முனிசிபாலிட்டிக்கு ஏற்பட்ட வரி நஷ் டத்தை அவ்வித சேர்மென்களிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டு மென்று கவர்ன்மெண்டார் உத்திரவு போட்டு வருகிறார்கள். ஆனால் சேர்மென்கள் திருடுகிற – திருடிக் கொண்ட பணத்தை வசூல் செய்யவும் அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தவும் அதிகாரிகளும் கவர்ன்மெண் டாரும் கவலைப் படுவதேயில்லை போலிருக்கிறது. அதிகாரிகளைக் கண்டு “சேர்மென்கள் இம் மாதிரி கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்களே இது சரியா?”என்று கேட்டால், நாங்கள் என்ன செய்வோம்; நீங்கள் தானே சுயராஜ்யம் கேட்டவர்கள்; நாங்கள் சுயராஜ்யம் கொடுத்து விட்டோம்; அந்த நிர்வாகம் உங்கள் மந்திரிகளிடம் இருக்கிறது; அவர்களைப் போய்க் கேளுங்கள். நீங்கள் கேட்ட சுயராஜ்யத்தை நீங்கள்தானே அநுபவிக்க வேண்டும்? எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்கிறார்களாம். கவர்ன்மெண்டார் என்கிற மந்திரிமார்களை இதைப் பற்றி கவனிக்கும்படி சொன்னால் “நீங்கள் தெரிந்தெடுத்த சேர்மென்தானே, அவரால் ஏற்படும் சுக துக்கத்தை...

காங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம் 0

காங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்

விளையாட்டுப் பிள்ளைகள் மண் கொழிக்கும் சங்கம் சென்ற காங்கிரசைப்பற்றி ஸ்ரீமான் காந்தி தமது ‘யங் இந்தியா’ பத்திரிகையில் ஜனவரி 5 தேதி எழுதியதாவது, “நான் விஷயாலோசனைக் கமிட்டியின் கூட்டங்களொன்றுக்கும் செல்ல முடியவில்லையெனினும், மிகவும் பொறுப்பற்ற வகையில் பேச்சும், வேலையும் நடந்தது என்றும் ஒழுங்கீனமாய் அங்கத்தினர்கள் நடந்து கொண்டார்களென்றும் தெரிந்து கொண்டேன். இன்னது விளையும் என்று சிந்திக்காமலே முன்பின் யோசனை இல்லாமல் மிகவும் உபயோகமற்ற தீர்மானங்களை திடீரென விஷயாலோசனைக் கமிட்டியில் பிரேரேபித்து அவைகளை அக்கமிட்டியாரும் யோசனையின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். சென்ற வருஷம் நிராகரிக்கப்பட்ட பூரண சுயேச்சைத் தீர்மானம் நிறைவேறிவிட்டது.அது யோசனையில்லாமலே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும் அதேமாதிரி சிறிதும் கவலையற்ற தன்மையில் நிறைவேற்றப்பட்டது. காரியத்தில் நடத்த முடியாது என்று அறிந்தும் இத்தகைய தீர்மானங்களை வருஷா வருஷம் காங்கிரஸ் நிறைவேற்றுவதால்தான் அது தன் கௌரவத்தை இழந்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட தீர்மானங்கள் செய்வதால் நமது பலஹீனத்தை வெளிப்படுத்துவதுடன் ஊராரெல்லாம்...

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி 0

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி

தமிழ் நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச் சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்ப னர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசியில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலாசாலை ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று. இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணி வேர் Žநுனி வரை Žநுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழியெனக்கொண்டு, தமி ழையே உயரினும் பெரிதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந் தொண் டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா. பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள பதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்...

புது வருஷ விண்ணப்பம் 0

புது வருஷ விண்ணப்பம்

புது வருஷ விஷயமாய் நாம் எழுதுவதில் அரசியல் விஷயத்திற்கு பிரதானம் கொடுத்து எழுத வரவில்லை; ஏனெனில் அரசியல் விஷயத்தை மிகுதியும் அலட்சியமாய்க் கருதுவதே ‘குடி அரசின்’ கொள்கை என்று பொதுஜனங்கள் எண்ணும்படி இருக்கவேண்டும் என்பதே நமது கவலை. ஆனாலும் அரசியலின் பேரால் மக்கள் ஏமாற்றப்படும் நிலைமை ஏற்படும்போது அலட்சியமாய் இருப்பதற்கில்லாமல் அதன் புரட்டுகளை வெளியாக்கவேண்டிய நிலையில் அரசியலைப் பற்றியும் எழுத நேரிடுகின்றது. மற்றப்படி தேசீயம் அரசியல் என்கின்றவைகள் எவ்வளவுக்கெவ்வளவு மக்களால் மறக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத் தில் விடுதலை உண்டு என்பது நமதபிப்பிராயம். நிற்க, இந்த தலையங்கத்தில் நாம் எழுத புகுந்ததெல்லாம் புது வருஷத்தின் நிலை நமது முயற்சிக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியதாயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளவேதான். எனவே நாம் யோசித்து பார்க்கும் அளவில் புது வருஷத் தில் நமக்கு பல இடையூறுகள் தோன்றலாம் என்பதாகவே அறிகின்றோம். அவ்விடையூறுகளை லட்சியம் செய்யாதவரை பலனுண்டாகும் என்றும் லட்சியம் செய்து அதற்காக ஏதாவது இணங்க...

நாயுடு, முதலியார், நாயக்கர். சென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ( தற்கால நிலைமை ) 0

நாயுடு, முதலியார், நாயக்கர். சென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ( தற்கால நிலைமை )

சென்னையில் இம்மாதம் 17-ந் தேதி திருவல்லிக்கேணி கடற்கரையில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் டாக்டர் நாயுடுகார் ஒரு நீண்ட பிரசங்கம் செய்தார். அவை பல பத்திரிகைகளில் பலவிதமாக வெளிப் பட்டிருந்தாலும் அவரது ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் சுருக்கமாக வெளி வந்திருக்கிறது. அவற்றில் சில உண்மைகள் விளங்குவதை மாத்திரம் நாம் இதனடியில் குறிப்பிடுகிறோம். அதாவது “பெரிய சந்தேகம்” என்ற தலைப்பின் கீழ் “இந்த சர்க்கா ரை இப்பொழுதே நாம் நிருத்திவிட முடியும். ஆனால் அதற்குப் பிறகு (நிருத்திய பிறகு) இத்தேசத்தை எப்படி நிர்வகிப்பதென்பதுதான் இப்பொ ழுது பெரிய சந்தேகம்” என்று பேசியிருக்கிறார். தற்கால நிலைமையில் யோக்கியமான ராஜீயவாதிகளின் கருத்து இதுவேதான். ஏனெனில், நமது தேசத்தில் ஒருவன் உயர்ந்தவன் என்றும் பிராமணன் என்றும், மற்றவன் தாழ்ந்தவன் என்றும், சண்டாளன், பார்க்கக் கூடாதவன், தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும், ஒரு மதம் உயர்ந்த மதம், மற்றொரு மதம் தாழ்ந்த மதம், ஒரு வகுப்பார் தான் மூளை...

காங்கிரசும் ராயல் கமிஷன்  பஹிஷ்காரப் புரட்டும் 0

காங்கிரசும் ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டும்

ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கும் விஷயமாய் அரசியல்வாதிகள் இடும் கூச்சல்கள் எல்லாம் புரட்டு என்றும் அது பெரிதும் வகுப்பு உரி மைக்கு விரோதமாய் போடும் கூச்சல்கள் என்றும் ஆதிமுதல் கொண்டே எழுதி வந்திருக்கின்றோம். உதாரணமாக, வகுப்பு உரிமை வேண்டுமென்று கேட்கப்படும் எந்தக் கூட்டத்தாராலாவது பஹிஷ்காரம் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்த்தால் தெரியவரும். அத்துடன் கமிஷனை பஹிஷ்கரிக்கும் ஒவ்வொரு கூட்டமும் வகுப்புரிமை கூடாதென்பதையும் வற்புறுத்திக் கொண்டே வருகின்றது. எனவே கமீஷனை அடியோடு பஹிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லும் தத்துவம் கமீஷனில் எல்லா வகுப்புகளுக்கும் சம உரிமை கிடைக்கும்படியான நிலைமை ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தாலேயே ஒழிய கமீஷனால் இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு ஏதாவது கெடுதி வந்து விடுமோ என்கின்ற காரணத்தாலல்லவென்றே சொல்லுவோம். மிதவாதிகள்கூட பஹிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம். மிதவாதிகள் பஹிஷ்கரிக்கும் காரணம் தியாக புத்தியுடனோ அல்லது அரசாங்கத்துடன் விரோதித்துக் கொள்ளத்தக்க வீரத்துடனோ அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம். முக்கியமாக மிதவாதிகள்...

நமது தனிப்பெரும் விண்ணப்பம் 0

நமது தனிப்பெரும் விண்ணப்பம்

சென்ற “ குடி அரசு” இதழில் திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கரவர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு விடுத்த வேண்டுகோளை அன்பர்கள் கண்ணுற் ருக்கலாம். தற்காலம் தமிழ்நாட்டு அரசியல் நிலைமையும் சமுக நிலைமை யும் பெரிதும் குழப்பத்தோடிருக்கிற தென்பதை தமிழ் நாட்டவர்களுக்கு நாம் எடுத்து கூற வேண்டியதவசியமில்லை. இத்தகைய குழப்பமான நிலை மையில் அரசியல் துறையையும் சமுக விஷயத்தையும் சத்தியமான, ஒழுங் கான, உண்மையான அமைப்போடும் திட்டத்தோடும் நிலையிறுத்திச் சீர்பெறச் செய்வான் பொருட்டே திரு. நாயக்கரவர்கள் அவ்வேண்டு கோளை விடுத்தார். திரு. நாயக்கரவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இற்றைவரை சுமார் 500 தமிழர்கள் “ குடி அரசி”ன் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும் திரு. நாயக்கருள்ளிட்ட பலர் வெளியிடப் போகும் அறிக்கையில் தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறும் தங்கள் கையொப்பம் அளித்துள் ளார்கள். இத்தகைய முறையில் அவ்வமைப்பு ஏற்படுத்தி இத்தகைய திட்டங் கோல வேண்டுமென்பதாகவும் ஒத்துழையாமை காங்கிரசில் முன்னின்று ழைத்த பல அறிஞர்கள் நீண்ட கடிதங்கள் எழுதி வருகிறார்கள். தேர்தல் காலம் மிகவிரைவாக...

ஏமாந்து விடாதீர்கள்!               ஏமாந்து விடாதீர்கள்!                                          சைவ சமயிகளுக்கு ஓர் எச்சரிக்கை 0

ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்! சைவ சமயிகளுக்கு ஓர் எச்சரிக்கை

சில தினங்களில் சுமார்த்த மத குருவாகிய சங்கராச்சாரியார் வரப் போகிறார். சைவ சமயிகள் அவர் அணிந்திருக்கிற விபூதி உருத்திராக்கத் தைப் பார்த்தும், சுமார்த்தப் பிராமணர்கள் சைவர்கள் பணத்தைத் தங்கள் வகையினர்க்குப் பயன்படுத்தும் பொருட்டு தங்கள் குருவை உலகத்தினர்க் கெல்லாம் குருவென்ற முறையில் “லோக குரு” வென்று கூறும் தந்திர வார்த்தையில் நம்மவர்கள் மயங்கி அவருக்கு வந்தன வழிபாடு, பாத காணிக்கை முதலியன செய்து பாவத்தை ஏற்றுப் பொருளிழந்து வறியவர்களா காமலிருப்பார்களாக. நம்மவர்களுக்கு உண்மை நெறியை உணர்த்த எல்லாம் வல்ல இறைவன் திருவருளை வழுத்துகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 01.08.1926

“சர்க்காருக்கு ஜேய்” சர்க்கார் கக்ஷிக்கு சென்னை சட்டசபையில்            இன்னும் 5 மெம்பர்கள் அதிகம் ( தொழிலாளர் நிலை) 0

“சர்க்காருக்கு ஜேய்” சர்க்கார் கக்ஷிக்கு சென்னை சட்டசபையில் இன்னும் 5 மெம்பர்கள் அதிகம் ( தொழிலாளர் நிலை)

தாழ்ந்த வகுப்பார்களுக்கென்றும் தொழிலாளர்களுக்கென்றும் சர்கார் தயவில் இந்தியா பூராவுக்கும் 12 ஸ்தானங்கள் அதிகப்படுத்தப் பட்டிருக் கிறது. ஆனால் இந்த 12 – ஸ்தானங்களும் அந்தந்த வகுப்பார்களால் தெரிந் தெடுக்கப்படாமல் சர்க்காரால் நியமிக்கப்படுவதாய்ப் போய்விட்டது. இதற் காக நாம் தற்கால நிலைமையில் தொழிலாளர்கள் பொருட்டும் தாழ்த்தப் பட்ட வகுப்பார்கள் பொருட்டும் விசனப்படாவிட்டாலும் ஓட்டர்கள் பொருட்டு நாம் மிகுதியும் விசனப்படுகிறோம். தொழிலாளிகளுக்கென்றோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கென்றோ தேர்தலுக்கு அந்தந்தப் பிரிவார் கொண்ட ஓட்டர் தொகுதியில்லாத வரையில் தற்காலத் தேர்தலைவிட நியமனம் அத் தனை மோசமானதல்ல வென்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் தற்கால நிலைமையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கென்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் போன்ற ஒரு வருணாச்சிரம தர்மி நிற்கக் கூடும். அதற்கு மற்றொரு வருணாச்சிரம தர்மியாகிய ஒரு மகந்து பணம் செலவு செய்யக் கூடும். ஆச்சாரியார் சட்ட சபையில் வந்து உட்கார்ந்து கொண்டு “ஒரு பார்ப்பனக் குழந்தை சாப்பிடு வதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால்...

பிராமணீயம்! 0

பிராமணீயம்!

இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை அதிகரித்தது எது? சுயநலம் கொண்ட பிராமணீயமே. இந்து முஸ்லீம் கலகங்களை விளைவிப்பதெது? சுயநலக் கூட்டத்தாரின் ஆதிக்கம் கொண்ட பிராமணீயமே. இக்காலத்தில் பார்ப்பன – பார்ப்பனரல்லாதார் கட்சி உண்டாகக் காரண பூதமாய் நிலவுவதெது? பாழான பிராமணீயமே. எனவே என் செய்தல் வேண்டும்? பிராமணீயத்தைச் சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும். தமிழர்களே!ஒன்று படுக! ஒருங்கு சேருக! பிராமணீயத்துடன் போர் தொடங்குக! வீரர்கள் நம்மவரே! ஆதலால் வெற்றியும் நம்முடையதே! காகம் உறவு கலந்துண்ணக் காண்கிறீர். ஆதலால் சேரவாரும் ஜெகத்தீரே! குடி அரசு – பெட்டிச் செய்தி – 25.07.1926

மூடநம்பிக்கை 0

மூடநம்பிக்கை

வெள்ளிக்கிழமை விளக்குவைத்த நேரம் – சித்திரபுத்திரன் நகை வியாபாரி:- அய்யா! தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை வாங்கி வந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக் கொண்டிருக்கிறார் அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்து விடுங்கள். வைதீகர்:- செட்டியாரே அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசுகள் இருந்தது. எட்டு எண்ணிக்கை கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி வருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை. நகை வியாபாரி:- அப்படியானால், தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக் கொண்டிருக்கின்றார். வைதீகர்:- ஆஹா,...