Author: admin

இந்துமத பரிபாலன மசோதா 0

இந்துமத பரிபாலன மசோதா

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர்களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக்கிடையில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறைவேற்றப்பட்டு மலையாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்புகிறோம். குடி அரசு – சிறு குறிப்பு – 05.09.1926

ஒரு சம்பாஷணை 0

ஒரு சம்பாஷணை

கருப்பண்ணன் :- என்ன சுப்பண்ணா! இந்த பார்ப்பனர் மாத்திரம் சின்ன பையன்களுக்கெல்லாம் கலியாணம் செய்து விடுகிறார்களே. அதென்ன சங்கதி? சுப்பண்ணன் :- ஓ! இது உனக்குத் தெரியாதா? இவர்களுக்கு பிச்சை வாங்கி பிழைப்பதுதானே வேலை. ஆதலால் நம்முடைய பெரிய வர்கள் கலியாண மானவனுக்கு ஒரு அணா, கலியாணமாகாதவனுக்கு காலணா கொடுக்கிற வழக்கம். ஆதலால் சின்னப் பையனுக்கும் சின்னப் பெண்ணுக்கும் ஒரு அணா கிடைக்கட்டுமென்று கலியாணம் செய்து விடுகிறார்கள். கருப்பண்ணன் :- அப்படியா! இதற்காகத்தானா இவ்வளவு பெரிய அனியாயம். பிச்சை கொடுப்பவர்களுக்கு எப்படி கலியாணம் ஆனதும் ஆகாததும் தெரியும். சுப்பண்ணன் :- கலியாணமான சின்னப் பையன்கள் வடக் கயிறு போல பூணூலை மொத்தமாகப் போட்டிருப்பார்கள். கோவணம் வைத்து வேஷ்டி கட்டிக் கொள்ளுவார்கள். அந்தச் சிறு பெண்களும் கோவணம் போட்டு சீலை கட்டிக் கொள்ளுவார்கள். தாலியை நன்றாய் வெளியில் காட்டிக் கொள்ளுவார்கள். கருப்பண்ணன் :- சரி,சரி. இப்பொழுது எனக்கு நன்றாய் விளங்கிற்று. இந்த பிச்சைக்...

பூனா பார்ப்பனரின் கர்மபலன்                           கண்டனக் கூட்டம் 0

பூனா பார்ப்பனரின் கர்மபலன் கண்டனக் கூட்டம்

பூனா பிராமணர்கள் பெரும்பாலும் லோகமானிய திலகர் என்றழைக் கப்படும் கடும் வர்ணாசிரமியான ஸ்ரீமான் திலகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காங்கிரசுக்கு முந்திய காங்கிரசுகள் இப்போதைய காங்கிரசைப் போலவே பார்ப்பனக் காங்கிரசாயிருந்ததாலும் இப்போதைய ‘தலைவர்கள்’ ஸ்ரீமான்கள் பண்டித நேரு, பண்டித சரோஜினி, எஸ்.சீனிவாசய்யங்கார், எ. ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் இந்திய தேசத் தலைவர்களாயிருப்பது போலவே அப்போதும் ஸ்ரீமான்கள் திலகர், மாளவியா முதலிய பார்ப்பனர்களே தலைவர் களாயிருந் தார்கள். இப்போது இவர்கள் பார்ப்பனப் பத்திரிகைகளாலும் பிரசாரத்தாலும் படம் வைத்து கும்பிடத் தகுந்தவர்களாயிருந்த போதிலும், சமுதாய விஷயத் திலும் சமத்துவ விஷயத்திலும் ஸ்ரீமான் திலகர் நமது ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு ஒரு படி முன்னால் இருப்பவர். அப்பேர் பட்டவர் பத்திரிகை உலகத்திலும், பிரசார உலகத்திலும், அரசியல் உலகத்தி லும் சிரேஷ்ட்டமாய் விளங்கி செல்வாக்கோடு வாழ்ந்த ஊராகிய பூனா நகரத்தில் பார்ப்பனா திக்கம் எவ்வளவு வளர்ந்திருக்கும், எவ்வளவு குடி கொண்டிருக்கும் என்பது...

தீண்டாமையும் பார்ப்பனரும்  முனிசிபல் சட்டத்தில்                                         ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா 0

தீண்டாமையும் பார்ப்பனரும் முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா

இவ்வாரம் நடைபெற்ற சென்னை சட்டசபைக்கு ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் முனிசிபல் சட்டத்திற்கு ஒரு திருத்த மசோதா அனுப்பியிருந்தார். அதாவது “பொதுத் தெருவை எவரேனும் உபயோகிக்க முடியாமல் தடுப் பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கலாம்” என்று ஒரு பிரிவை அதில் சேர்க்க வேண்டும் என்று அனுப்பியிருந்தார். அது பிரேரே பணைக்கு வரும்போது சில பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் புத்தியின்படி அதைக் கொல்ல சட்ட சம்பந்தமான ஆnக்ஷபணைகளை எழுப்பி விட்டார் கள். தாங்கள் பார்ப்பனர் சந்ததியார்கள் என்று சொல்லிக் கொள்வதால் பெருமைப் படும் சில பார்ப்பனரல்லாதாரும் ரகசிய வருணாசிரம தர்மிகளும் அதற்கு உடந்தையாயிருந்து இந்த சபையில் அதை நிறைவேறாமல் செய்துவிட்டார்கள். பொதுத் தெருவை பொதுமக்கள் உபயோகப்படுத்திக் கொள்வதைத் தடுத்தவர்களுக்கு அபராதம் போடலாம் என்றால் அதை ஆnக்ஷபிப்பதற்கு நமது நாட்டில் ஜனங்கள் இருக்கும் போதும், அப் பேர்ப்பட்டவர்களை சட்டசபைக் குத் தெரிந்தெடுக்கக்கூடிய பைத்தியக்கார ஓட்டர்கள் நமது நாட்டில் மலிந்தி ருக்கும் போதும், வெள்ளைக்காரரைப்...

தலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார் 0

தலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்

தமிழ்நாட்டுத் தலைவரும் தமிழர்களின் நண்பருமான உத்தம பாளையம் முதலியார் என்கின்ற மதுரை ஸ்ரீமான் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் வியாழக் கிழமை இரவு காலஞ்சென்றார் என நண்பர் திரு. பி.டி. ராஜன் அவர்களின் தந்தியால் தெரிந்து திடுக்கிட்டுப் போனோம். தலைவர் முதலியார் அவர்களுக்கு ஏற்பட்ட நீரழிவு வியாதியானது எவ்வளவு சிகிச்சை செய்தும் குணப்படாமல் அவரது உயிருக்கு “கூற்றுவ”னாகவே முடிந்துவிட்டது. திருவாளர் முதலியார் அவர்கள் தமிழ் நாட்டின் பழங்குடி மக்களுள் முதன்மையானவர். தென்னாட்டில் நாயக்கர் அரசாங்கம் ஏற்பட்டிருந்த காலத்தில் அவருக்கு பிரதம மந்திரிகளில் ஒருவராகிய திரு. அரியநாயக முதலியாரின் சந்ததியில் வந்தவர். மதுரை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களில் முக்கியமானவர். பாரம்பரிய மாகவே செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தவர். அரசாங்கத் தாராலும் சுதேச மன்னர்களாலும் புராதன ஜமீன்களாலும் மிகுதியும் போற்றப்பட்டவர். நமது மன்னராகிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியவர் களின் முடிசூட்டு வைபவத்திற்கு அழைக்கப்பட்டு இங்கிலாந்து சென்றவர். இவையாவும் அவரது மேன்மையையும் அந்தஸ்தையும் காட்டக்கூடிய தானாலும்...

பார்ப்பன தேசீயம் 0

பார்ப்பன தேசீயம்

சென்னை அரசாங்கத்திற்கு விலக்கப்பட்ட மந்திரிகளுக்கு பதிலாக ஸ்ரீமான்கள் முத்தையா முதலியாரும் சேதுரத்தினமய்யரும் நியமனம் பெற்றுவிட்டார்கள். இவர்களால் நமக்கு ஏற்படப்போகும் நன்மை தீமைகளை பற்றி இப்போது ஒன்றும் எழுதாமல் விட்டுவிடுகிறோம். மந்திரிகளிடமிருந்தோ, சர்க்காரிடமிருந்தோ அல்லது எந்த விதமான அரசியல் கட்சியார் என்பவர்களிடமிருந்தோ நாம் எவ்வித அரசியல் விஷ யத்தையும் நாம் இப்போது எதிர்பார்ப்பதில்லை. அதற்கு காலம் வரும்போது அதைப் பற்றி பேசிக்கொள்ளலாம். இப்போது நாம் மந்திரிகளிடமும், அரசாங்கத்தினிடமும் எதிர்பார்ப்பதெல்லாம் நம் மக்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சமத்துவமும் சமசுதந்திரமும், சுயமரியாதையும் ஏற்படு வதற்கு ஆதரவுதான். இந்தக் காரியத்திற்கு எவ்வளவு தூரம் இந்த மந்திரிகள் ஆதரவளிப்பார்கள் என்பதைப்பற்றி இப்போது “ஜோசியம்” கூறும் நிலை மையில் நாம் இல்லை. ஏனெனில் ஒரு மந்திரி பார்ப்பனர்; அதிலும் வைதீக வேஷம் கொண்ட பார்ப்பனர். வைதீக வேஷமில்லாத பார்ப்பனராகிய சர். சி. பி. அய்யரால் நமது சமூகத்திற்கு நேர்ந்த கொடுமைகளை பார்க்கும்போது வைதீக வேஷக்காரப் பார்ப்பனரால் என்ன விளையக்கூடும் என்பதைப் பற்றி...

வேடிக்கை சம்பாஷணை 0

வேடிக்கை சம்பாஷணை

– சித்திர புத்திரன் ஒரு குடித்தனக்காரன்: ஐயா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கு புண்ணியமாகும். சித்ரபுத்ரன் : ஐயய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது? குடி : ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா? சித்தி : அப்படியானால் உங்கள் வீதியில் ‘பிராமணாள்’ இருக்கின்றார்களா ? குடி : ஆம் 4, 5 வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள். சித்தி : அவர்கள் ஏதாவது உங்கள் வீதி பக்கம் வந்தார்களா? குடி : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்குபோய் குளித்துவிட்டு மொண மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார். சித்தி : சரி சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக்காரணம் தெரிந்துபோயிற்று. குடி : என்ன அய்யா எனக்கு தெரியவில்லையே! சித்தி : இது தெரியாதா...

முளையிலேயே வெருப்பு 0

முளையிலேயே வெருப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளை சிறு பிராயம் முதற் கொண்டே நம்மை தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை “அடீ!அடீ!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடீ; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களை தொட்டூட்டு வந்துட்டையே! போ! போ! போயி குளிச்சூட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போன வுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அதுகளுக்கு ஒரு இழிவை சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கு போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய் என்று கேட்டால், “என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டுவிட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா?” என்கிறார்கள். இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமண ரல்லாதாரிடம்...

லாலாஜியும் சுயராஜ்யக்  கட்சியும் 0

லாலாஜியும் சுயராஜ்யக் கட்சியும்

ஒத்துழையாமையையும், மகாத்மா காந்தியையும் ஒழிப்பதற்கென் றும் நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்தும் பயன் படாமல் போனது கண்டு, கடைசியாக வங்கத்து வீரரும் ஸ்தோத்திரப் பிரியருமான ஸ்ரீமான் தாஸ் அவர்களைப் பிடித்து அவருக்குப் பட்டா பிஷேகம் செய்வதாய் ஏமாற்றி அவரை விபூஷணராக்கி அவரைக் கொண்டு தங்கள் எண்ணிய எண்ணத்தை முடித்துக் கொண்டார்கள். அது சமயம் தங்களுக்கென்று ஒரு கக்ஷியிருப்பதாயும் அதற்கு பொது ஜனங்கள் ஏமாறத்தக்க வண்ணம் பஞ்சாப், கிலாபத் சுயராஜ்யக் கக்ஷி என்று பெயரு மிட்டு ஒரு பொய் மாயமானை சிருட்டித்தார்கள். பெயர் நீளமாயிருப்பதாக பலர் பரிகாசம் செய்யவே அதை சுயராஜ்யக் கக்ஷி என்று சுருக்கிக் கொண்டார்கள். இக்கட்சியின் உற்பத்தியையும், வளர்ச்சியையும் மனப்பூர்வ மாய் அறிந்தும் தன் காலிலேயே நிற்கக் கூடிய சக்தி இல்லாத சில தலைவர் கள் என்போர்களும் தேசீயப் பத்திரிகை என்பதுகளும், அப்பொய்மானை எதிர்க்க சக்தியில்லாதவர்களாகி, சமயம் வரும்போது நாமும் ஒரு கல்லைத் தூக்கிப் போடலாம் என்கிற...

“சர்க்கார் சாதித்ததென்ன” 0

“சர்க்கார் சாதித்ததென்ன”

தீண்டாதார்களுக்கும் தீண்டாமையைப் பற்றியும் “சர்க்கார் சாதித்த தென்ன, சர்க்கார் சாதித்ததென்ன” என்று தலைவர்கள் என்போர்கள் முதல் வாலர்கள் என்போர்கள் வரை கத்துகின்றார்கள். ‘சர்க்கார் அயோக்கிய ஆட்சிமுறை கொண்டது, கொள்ளை அடிக்க வந்தது’ என்று நாம் தீர்மானம் செய்தாகிவிட்டது. ‘உலகத்தை ரக்ஷிக்க வந்த பிராமணர்களும் மதமும் தேசிய வீரர்களும்’ என்ன செய்தார்கள், செய்கிறார் கள், செய்யப்போகிறார்கள் என்று தான் கேட்கின்றோம். அதற்கு பதில் சொல் லாமல் சற்றும் வெட்கமின்றி சர்க்கார் சாதித்ததென்ன என்று கேட்பது அயோக்கியத்தனமா அல்லவா என்று கேட்கின்றோம். அதோடு இன்றையத்தினம் ஸ்ரீ. ஆ.ஊ. ராஜாவும் சிவராஜவும் சாமி சகஜானந்தாவும் சட்டசபைக்குப் போனதும். தங்கள் குறைகளை அங்கெடுத் துப் பேசுவதும் சர்க்கார் சாதித்ததா அல்லது ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலுவும், குப்புசாமியும், அண்ணாமலையும் சாதித்ததா என்று கேட்கிறோம். அவர்கள் பிள்ளைகள் இன்று ஆயிரக்கணக்காக பள்ளியில் அரிச் சுவடி படிப்பது சர்க்கார் சாதித்ததா அல்லது வேதமும் சங்கராச்சாரியும் இந்து மதமும் சாதித்ததா என்று கேட்கின்றோம்....

பார்ப்பன அயோக்கியத்தனம் 0

பார்ப்பன அயோக்கியத்தனம்

நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் பார்ப்பனர்களே ஜன்ம விரோதிகள் என்றும், அவர்களாலேயே நமது நாடு அடிக்கடி அன்னிய ஆதிக்கத்திற்கும் கொடுங்கோல் அரசு முறைக்கும் ஆளாகி வந்துக் கொண்டிருக்கின்றது என்றும், பார்ப்பன அயோக்கியத்தனம் வீழ்ந்த அன்றே வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சிமுறை பட்டு மாய்ந்து விடும் என்றும் நாம் விபரம் தெரிந்த காலம் முதல் தொண்டை கிழியக் கத்தியும் வருகின்றோம், கை நோக எழுதியும் வருகின்றோம். ஆனாலும், வேறு வழியில் வயிறு வளர்க்க முடியாத இழிமக்கள் தங்கள் வாழ்வுக்காக பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி சிலர் கடவுளுக்கு வக்காலத்து பேசுவது போல் இவர்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து பேசி நமது முயற்சியைக் கெடுக்க வந்து விடுகின்றார்கள். பொதுஜனங்களும் முக்கியமாய் பாமர மக்களும் இவ்விஷயத்தில் கவலை இல்லாமலும் தங்கள் பகுத்தறிவை சரியாய் உபயோகிக்காமலும் கவலை அற்ற முறையில் “பார்ப்பானைக் குற்றம் சொல்லாத முறையில் நமது வேலை நடக்கக் கூடாதா” என்போர் களும் “பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்கள் தானே, அவர்கள்...

நமது துணை ஆசிரியர் விலகுகிறார் 0

நமது துணை ஆசிரியர் விலகுகிறார்

“குடி அரசு”க்குத் துணை ஆசிரியராயிருந்து வரும் திருவாளர் மணவை ரெ. திருமலைசாமி செப்டெம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நமது ஆசிரியர் குழாத்திலிருந்து விலகுகிறார். இனி அவர் ஐப்பசி மாதம் முதல் திருசிரபுரத்திலிருந்து அரசியல், இலக்கியம், சமத்துவம் ஆகிய துறைகளில் நின்று “சிவாஜி” என்ற பெயரை மருவி ஏழை மக்களின் தோழனாய் வெளி வரப் போகும் வாரப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை ஏற்றுக் கொள்ளுவார். இற்றைவரை “குடி அரசு” காரியாலயமிட்டு அவருக்குக் கடிதம் முதலியன எழுதி வந்த அன்பர்கள் இனி திரு. மணவை. ரெ. திருமலைசாமி, காஜாப்பேட்டை, திருச்சிராப்பள்ளி என்ற விலாசத்திற்கு எழுதுமாறு தெரி வித்துக் கொள்ளுகிறோம். ( ப.ர் ) குடி அரசு – செய்திக் குறிப்பு – 29.08.1926

ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம் 0

ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியா ரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்டு கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்கக்கூடாது? பட்டத்தையும் விட்ட “பரிசுத்தமான ஒத்து ழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி” இப்போது ஸ்ரீமான் அய்யங்கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக் கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார். சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்பனரல்லாத சமூகத்தில் செட்டியாருக்கு இதுசமயம் செல்வாக்கும் குறைந்துபோயிருக்கிறது. இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதினாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர்...

யாரை யார் மோசஞ் செய்தார்கள்? 0

யாரை யார் மோசஞ் செய்தார்கள்?

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது “பார்ப்பனராகிய நான் யாரையும் ஏமாற்றவில்லை, பார்ப்பனரல்லா தாராகிய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னை ஏமாற்றி விட்டார்” என்று சொன்னாராம். நாயக்கர் எந்த விதத்தில் ஸ்ரீமான் அய்யங்காரை ஏமாற் றினார் என்பதையும் கூடவே சொல்லியிருந்தால் கண்ணியமாயிருந்திருக் கும். அப்படிக்கில்லாமல் பொதுப்படையாய்ச் சொல்லுவது விஷமத்திற் காக என்றே தான் சொல்ல வேண்டும். ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் திருச்சியில் கூட்டிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுகாரவர்கள் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஒரு தீர்மானம் கொண்டுவந்த சமயத்தில் நாயுடு காரைப் பார்த்து “எப்படியாவது இந்த தீர்மானத்தை இதுசமயம் வாபீசு வாங்கிக் கொள்ளுங்கள்; மூன்று மாதம் பொறுத்தவுடன் இதற்கு நான் வகை செய்கிறேன்” என்று சொல்லி நாயக்கரையும் ஸ்ரீமான் நாயுடுகாரையும் கெஞ்சி நம்பச் செய்து அதைப் பின்வாங்கிக் கொள்ளும்படி செய்தார். காஞ்சீபுரம் மகாநாட்டில் நாயக்கரும், ஸ்ரீமான் இராமநாதனும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்த சமயத்திலும்...

அதிசய விருந்து 0

அதிசய விருந்து

ஈரோட்டிற்கு சென்ற வாரம் முதல் மந்திரி வந்திருந்த சமயம் ஒரு விசேஷம் நடந்தது. அதாவது கோவை ஜில்லாவில் உள்ள கொங்கு வேளாள கனவான்களுக்குள்ளாகவே சிலர், அதாவது பட்டக்காரர்கள் என்கின்ற கனவான்கள் அந்தச் சமூகத்தார் பந்தியில்கூட உட்கார்ந்து உணவருந்தும் வழக்கம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் முதல் மந்திரிக்கு அளித்த விருந்தின்போது பட்டக்காரர்களில் மிக செல்வாக்குப் பெற்றவரும் ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டுமான பழய கோட்டை பட்டக்காரர் ஸ்ரீராய் பஹதூர் நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் தாராளமாக இந்து முஸ்லீம் கிருஸ்தவர்கள் ஆகிய கனவான்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து சமமாய் இருந்து விருந்துண்டார்கள். இது மிகவும் முற்போக்கான காரியமாகும். இதைப் பின்பற்றியாவது அச்சமூகத்தில் மற்ற சாதாரண கனவான்கள் நடந்து கொள்ளக் கூடாதா? என்று ஆசைப்படுவதுடன் ஸ்ரீ பட்டக்காரர் அவர்களையும் அவர்களது தாராள நோக்கத்தை பாராட்டி மனதார வாழ்த்துகின்றோம். குடிஅரசு – செய்தி விளக்கம் – 04.03.1928

சைமனுக்காக சட்டசபை பகிஷ்காரம் 0

சைமனுக்காக சட்டசபை பகிஷ்காரம்

சைமன் சென்னையில் இருக்கும் தினத்தன்றே நமது தேசீய வீரப்புலிகள் சட்டசபைக்குப்போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்துவிட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் கக்ஷிக்காரர்களின் சட்டசபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதைவேண்டும். இவர்களை நம்பி எத்தனையோ சோணகிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுயராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரியவில்லை. குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.03.1928

சைமனுக்கு பார்ப்பனர்களின் விருந்து 0

சைமனுக்கு பார்ப்பனர்களின் விருந்து

ஸ்ரீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லா பார்ப்பனர்களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு அவரிடம் பார்ப்பனப் பிரசாரமும் செய்யப்பட்டு விட்டது. இதைப்பற்றி பேசுவோர் யாருமில்லை. தேசீய வீரர்களும் தேசீயப் பத்திரிகைகளும் தங்களை மறைத்துக் கொண்டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவாவிட்டால் அல்லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கியதையை வெளியாக்கினால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார் தாசர்களாம். என்னே அரசியல் அயோக்கியத்தனம்! குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.03.1928

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து 0

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து

சென்னை சட்டசபைக்கு ஜமீன்தாரர்களின் நன்மையை உத்தேசித்து சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஸ்தானங்களுக்கு இதுவரையில் அது எந்த உத்தேசத்தைக் கொண்டு ஒதுக்கி வைக்கப்பட்டனவோ அது போலவே நபர்களும் தெரிந் தெடுக்கப்பட்டு வந்தனர். ஏறக்குறைய  ஜமீன்தார்கள் என்கிற பாகுபாடு பெரும்பாலும் பழைய காலத்தில் அரசர்களாகவோ சிற்றரசர்களாகவோ பெரிய பாளையப் பட்டுகளா கவோ அரசாங்கப் பொறுப்பை வகித்தவர்களாகவோ மிக்க பெருமையோடு வாழ்ந்த குடும்பங்கள் என்பதாகவோ இருந்த சமூகத்தை ஆங்கில அரசாக்ஷி ஏற்பட்ட பிறகும் அவர்களை அந் நிலைமையிலேயோ அல்லது அந்த சமூகத்தின் ஞாபகக் குறிப்பாவது இருக்கும்படியாகவோ கருதி நமது அரசாங் கத்தார் அவர்களை கௌரவிக்கும் முகத்தான் அவர்களுக்கென்று பல சட்ட திட்டங்களும் சலுகைகளும் கொடுத்து கூடியவரை அவைகள் மறைந்து போவதற்கில்லாமலும் அந்தந்த குடும்பங்களுக்கு ஒரு தனி கௌரவம் இருக்கும்படியாகவும் செய்து வருகிறார்கள். இதன் பலனாகவே நமது சென்னை சட்டசபைக்கும் இந்த ஜமீன் தாரர்களின் நன்மையையும் அவர்களது கௌரவத்தையும் தனியே உத்தே சித்து அவர்களுக்கென்று...

இன்னும் அடி 0

இன்னும் அடி

சைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று தெரிகிறது. அதாவது சென்ற வாரத்தில் ஒரு உத்தியோகப் பார்ப்பனரை யாரோ சில காலிகள் வழிமறித்து நன்றாய் புடைத்தார்களாம்! ரிக்ஷா வண்டிக்காரன் பயந்து ஓடினதற்கு ஓடாதே! ஓடாதே! உன்னை நாங்கள் அடிக்க வரவில்லை, இந்தப் பார்ப்பனனைத் தான் அடிக்க வந்தோம் என்று காலிகள் சொன்னார்களாம்! ஆனால் சிலர் அந்தப் பார்ப்பனரை அடிப்பதற்கு காரணம் வேறு விதமாக வும் சொல்லிக் கொள்ளுகிறார்களாம்! அதாவது ஆபீசில் உத்தியோக தோரணையில் அவர் செய்யும் கொடுமையால் இம்மாதிரி ஏற்பட்டதென்கிறார்களாம். எப்படி இருந்தாலும் இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது. எனவே இதை அடக்காமல் இருப்பது யோக்கியமல்ல. குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.03.1928

பொய்ப் பெருமை 0

பொய்ப் பெருமை

சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடைய பிரயத்தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லாதவர்கள் தங்களது பொய்ப் பிரசாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம்பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமையதினம் பெரும்பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது தெருப்பொருக்கிக்குக் கூட தெரிந்த விஷயம். அத்தோடு போலீசையும் தடபுடலை யும் சென்ற மாதம் 3- தேதி காங்கிரஸ் காலித்தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும் கூடும். உதாரணமாக அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர் களும்கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26 தேதி தங்கள் பெண்டு பிள்ளை களை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் ‘தேசீய வீரர்’களின்...

தேவஸ்தான நிர்வாகத்திலும் பார்ப்பனீயம் 0

தேவஸ்தான நிர்வாகத்திலும் பார்ப்பனீயம்

தஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார்களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம்! இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி எந்த தேசீய பத்திரிகையும் எழுதாமல்: “சைமனே திரும்பிப்போ, எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம்” என்கின்றன. சைமனை திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை. ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்று பிழைப்புக்கும் கூலிக்கும் சைமனை பஹிஷ்கரித்தால் மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பஹிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கிவிடுகின்றார்கள். ஐயோ பாவம்! குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.03.1928

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும் 0

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்

டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத் திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட் டுத்தனத்திற்கும், அயோக்கியத் தனத்திற்கும் உறைவிடமாய் விட்டதாக கருதவேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை. இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3, 4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய்விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதி யும் சட்டசபைகளில் நடக்கின்றதேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனு கூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை. இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23 பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும்,  ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே ³  மூன்று கக்ஷிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் 6 பேர்கள்...

பார்ப்பன அகராதி – சித்திரபுத்திரன் 0

பார்ப்பன அகராதி – சித்திரபுத்திரன்

காங்கிரஸ் என்றால் என்ன? வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒடுக்கி பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்துவது. வெளியேற்றம் என்றால் என்ன பார்ப்பனரல்லாதார் சமூகத்தையும், அவர்கள் சுயமரியாதையையும் ஒழிக்க மறுபடியும் சில குல துரோகிகளை கூட்டிக்கொண்டு வாக்குத் தத்தத் தை மீறி மனச்சாக்ஷியின் பேரால் கட்டுப்பாடாய் சட்டசபைக்குப் போ வதுதான். தொழிலாளிகள் நன்மை என்றால் என்ன? தொழிலாளிகளை ஏமாற்றி அவர்களுக்குத் தலைவர்களாகி அவர்கள் ஓட்டுப்பெற்று சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெற்று, தொழி லாளர்களையே விட்டு பார்ப்பனரல்லாதாரையும், தலைவர்களையும் ஈனத் தனமாகவும் இழித் தன்மையாயும் திட்டும் படியும் அடிக்கும்படியும் கலகம் செய்யும்படியும் தூண்டி விடுவது. இந்துமத பரிபாலன சட்டத்தால் இந்துமதம் போய்விடுமே என்று பயப்படுகிறார்கள் என்றால் என்ன? பார்ப்பனருக்கு வரும்படி போய்விடுமே என்று பயப்படுவது. மத விஷயத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்களே என்றால் என்ன? பார்ப்பனரல்லாதார் பிரவேசிக்கிறார்களே என்பது. சட்டசபை கலையும்போது மத பரிபாலன சட்டத்தை நிறை வேற்றுகிறார்களே என்றால் என்ன? பார்ப்பனரல்லாதார் எல்லாம் இம்மசோதாவை ஆட்சேபிப்பவர்க ளுக்கு...

சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம் 0

சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம்

எனக்கு முன் பேசிய மூன்று கனவான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல ஒரு தொண்டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக்கின்றது என்று சொன்னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணாசிரம தர்மமும் ஒழிந்தாலல்லது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காக தனியாய் பிரசாரம் செய்கின்றேன். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின் றார். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரிடம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணாசிரமத்திற்கு வியாக்கியானம்...

பார்ப்பனரின் வெடிகுண்டு 0

பார்ப்பனரின் வெடிகுண்டு

ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் கும்பகோணத்தில் பேசிய பேச்சைப் பற்றி 18.8.26- ² ‘சுதேசமித்திரன்’ தனது உப தலையங்கத்தில் ‘அபத்தப் பஞ்சாங்கம்’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் எழுத்தும் பிரசங்கங்களும் வரவர விபரீதமாயிருக்கிறது என்றும், நாயக் கருக்கு சீக்கிரத்தில் கவர்ன்மெண்டு அடிமை முத்திரை போடப்பட்டுவிடும் என்றும், நாயக்கர் பேசுகையில் எவ்வித காரணமில்லாமல் சிறை சென்றதற்கு விசனப்படுகிறேன் என்றும், பிராமண சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்றும் சொன்னதாக எழுதி, இதன் மூலம் நாயக்கருக்கு அசட்டுப் பட்டம் ஏற்பட்டு விட்டதாகவும் நாயக்கரை ஒரு பிராமணனும் ஏமாற்றி சிறைக்கனுப்ப வில்லை என்றும் காங்கிரசினால்தான் பனகால் ராஜா வுக்கு மந்திரியானதென்றும் நாயக்கருக்கு ராஜீய உலகில் ஒரு முக்கிய ஸ்தானம் கிடைத்ததென்றும் அப்படி இருக்க, காங்கிரசை இகழ்வது மாதுரு துரோகமென்றும் எழுதுகிறான். இவற்றை நன்றாய் ஆராய்ந்து நாயக்கர் மாதுரு துரோகியா அல்லது ‘மித்திரன்’ கூட்டத்தார் மாதுரு காமியா என்பதை கவனிப்போம். இப்பார்ப்பன ‘மித்திரன்’ யோக்கியனாயும்...

இந்திய சட்டசபை முடிவு 0

இந்திய சட்டசபை முடிவு

இந்திய மக்களுக்கு காங்கிரசு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதைப் பற்றியும், சட்டசபைகள் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதை பற்றியும், இவைகளில் உள்ள தலைவர்கள் என்போர்களும் அங்கத்தவர்கள் என்போர்களும் எவ்வளவு தூரம் பிரதி நிதித்துவம் உடையவர்கள் என்பதைப் பற்றியும் நாம் பொது மக்களுக்கு அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக காங்கிரசு என்பது பார்ப்பனர்களுடையவும் படித்த சிலருடையவும் நன்மைக்காக, அதாவது, உத்தியோகமும், பிழைப்பும் பெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கம் என்பதாக நாம் பல நாளாக சொல்லிக் கொண்டே வந்திருக்கிறோம். அதுபோலவே சட்டசபை முதலியவைகளில் அங்கம் பெறவும் அது சம்மந்தமான தேர்தல்களில் ஏழைகளை, பாமர மக்களை நாணயக் குறைவான காரியங்களால் ஏமாற்றி சுயநலத்திற்காக ஸ்தானம் பெறவும் ஆன ஸ்தாபனங்கள் என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். இவற்றை இதுவரையில் எவரும் மறுத்ததில்லை. ஸ்ரீமான் காந்தியும் இவைகளை ஒப்புக் கொண்டு பாமர மக்களுக்கு அறிவுவரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்பட்டு வரக்கூடும் என்று சொன்னாரேயல்லாமல் பாமர மக்களுக்கு அறிவு...

நம் நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா? 0

நம் நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா?

இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி யதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது. 10 வருஷங்களுக்கு ஒரு முறையோ 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான் ஏற்படுகின்றது. அதை தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பன ரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும் கோடாரிக் காம்புகளும் முடத் தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும் பாழாகும் வண்ணமும் சமூகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோ கச்செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித்திருக்க வேண்டியதாய் இருக்கின்றது. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதை...

“விதவா விவாக விளக்கம்” 0

“விதவா விவாக விளக்கம்”

பழுத்த ஞானமும் நீடிய அனுபவமும் கொண்ட அறிஞர் திருசிரபுரம் திருவாளர் சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய விதவா விவாக விளக்கம் என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப் பிராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார். விதவா விவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய அமயமும் அவகாசமும் வாய்த்திலாமையான் அஃதினை ஊன்றிப்படித்து விரைவில் எனது கருத்தினை வெளியிடவியலாது போயிற்று. பிறகு அப் புத்தகம் முடிவு பெற்று புத்தக ரூபமாய்க் கிடைக்கப் பெற்றேன். அஃதினை அமைதியுடன் படித்து எமக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன். இந்திய நாட்டின் ஆளுகை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள் ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும் ஜாதி வேற்றுமையும் தொலைய வேண்டுமென்பதாக சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி பெண் மக்களுள் ஒரு பகுதியார் அழிந்து வருவதை பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர். (இயற்கை தேவியார்) சிருஷ்டிக் கர்த்தா, மக்கட் படைப்பில டங்கிய ஆண்...

இரங்கூன் தனவணிக வாலிபர்  இரண்டாவது மகாநாடு 0

இரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு

இம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் இராமன் செட்டி யார் அவர்களின் வரவேற்புப் பிரசங்கமும் தலைவர் திருவாளர் அ. வெ. தியாகராஜா அவர்கள் தலைமை முகவுரையும் வரப்பெற்றோம். அவைகளில் தனவணிகர்களுக்கான பல அரிய வுரைகள் மலிந்து கிடக்கின்றன. அவை களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். “………………………………. இளம் கைம்பெண்களின் நிலை அந்தோ! அவர் களை மணப்பதற்கு முற்படுபவர்கள் நமது குலத்து வீரராவார்கள். இப் பாழும் குலத்தில் ஏன் பிறந்தோம் என்று நினைந்து நினைந்து அவர்கள் உள்ளங் குழையாமற் செய்வது உங்கள் கடன்”. “………மற்றொரு பெரும் பிரச்சினை மனைவியை வெளிநாட்டிற்கு உடனழைத்துச் செல்லல். மனைவியுடன் கூட வாழல் வேண்டுமென வாலிபர்களாகிய நீங்கள் கொண்டுள்ள பேரவா பளிங்குக்கற் போலத் தெளி வாய் விளங்குகிறது. அவ்வுணர்ச்சி இயற்கை உணர்ச்சி; தெய்வீக உணர்ச்சி; அதைக் குலைப்பது கொடுமை கொடுமை…………” “………….கேவலம் பொருளே நமது குறிக்கோளன்று. பொருள் பெருக் குவது மனைவி, மக்கள், சுற்றத்தார் நாட்டார் இன்புறுவதற்குத் தானே....

இஸ்லாமிய ஊழியன் 0

இஸ்லாமிய ஊழியன்

ஒத்துழையாமைக் காலத்தில் இருமுறை சிறைசென்று பலவருஷம் சிறைவாசம் செய்த தேசபக்தர் திண்டுக்கல் ஜனாப் வி.கே. தங்கமீரான் சாயபு அவர்கள் “இஸ்லாமிய ஊழியன்” என்ற தமிழ் வாரப் பத்திரிகை யொன்று ஆரம்பிக்கப் போவதாய் நாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடியால் ³ பத்திரி கையை நாம் ஆவலோடு எதிர்பார்ப்பதுடன் பொதுஜனங்கள் ஆதரவளிப் பார்கள் என்றும் நம்புகிறேன். குடி அரசு – செய்திக் குறிப்பு – 19.02.1928

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை 0

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளை வித்து வருவதாக தெரிகின்றது. 7, 8 பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டதாகவும் அரஸ்ட் செய்து ஜெயி லில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதுவும் திருவண்ணாமலைக் கேசு போலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும் போல் தெரிகின்றது. அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்பனரல்லாத வக்கீல் போக வேண்டியிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த கேசின் செலவுக் காக திருவண்ணாமலை கேசு செலவுக்கு பொதுஜனங்கள் உதவியது போலவே உதவ வேண்டும் என்று அப்பீல் செய்துக் கொள்ளுகிறோம் குடி அரசு – வேண்டுகோள் – 19.02.1928

சூழ்ச்சியும் ஏமாற்றமும் 0

சூழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீ முதலியாருக்கு பல வரவேற்பு களும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீ முதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என் கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்யவேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் றேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கிவிட்டார்கள். நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும் கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் கிரமப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக்...

சங்கீதமும் பார்ப்பனீயமும் 0

சங்கீதமும் பார்ப்பனீயமும்

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சீபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறைவாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்யமுடையவர்களாயிருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள். நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும் பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லக்ஷியம் செய்யாமல் சுவாமிகளே ! என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும் அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை...

தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா 0

தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா

தமிழ்நாடும் தமிழ் மக்களும் மனிதத் தன்மையாகிய “சுயமரியாதையை இழந்து மிருகங்களிலும், பூச்சி புழுக்களிலும் கேவலமாய் வாழும் நிலைமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் பார்ப்பன மதமாகிய இந்து மதமும் அம்மத ஆதாரங்களாகிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் முதலிய ஆபாச புரட்டுகளே முக்கிய காரணம்” என்று வெகுநாளாகச் சொல்லி வருகிறோம். அநேக விதங்களில் அறிவைக் கொண்டும் அனுபவங் களைக் கொண்டும் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி விவரமாய் எழுதியும் வந்திருக்கின்றோம். இவற்றை மறுத்து இதுவரை யாரும் எவ்வித சமாதானமும் சொல்லாமல் “மதம் போச்சு” “நாஸ்திகமாச்சு” “தெய்வம் போச்சு” என்று பொய் அழுகை அழுகிறார்களேயல்லாமல் சற்றாவது கவனித்துப் பார்த்து இதற்கு என்ன செய்ய வேண்டும் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஒருசிறிதாவது கவலை கொள்ளாமல் இருப்பதுடன் செய்ய முயற்சிப்பவர்களையும் காலை வாரி விட சூழ்ச்சிகள் நடந்த வண்ணமாகவும், எதிர் பிரசாரங்கள் நடந்த வண்ணமாகவும் இருந்து வருகிறது. அன்றியும் முன்னையை விட பார்ப்பனப் பிரசாரமும்...

திரு. சீனிவாசய்யங்காரின் தைரியம் 0

திரு. சீனிவாசய்யங்காரின் தைரியம்

திருவாளர் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தேவஸ்தான சட்டத் தைப் பற்றி எழுதும்போது ‘பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள் தேவஸ்தான சட்டத்தை ஆதரிப்பதாக’ மனப்பூர்த்தியாய் வேண்டுமென்றே இல்லாத காரியத்தைச் சொல்லுகிறார். திரு.சீனிவாசய்யங்காருக்கு பொய் சொல்லு வதிலும் மறுபடியும் அதை மறுத்து இல்லை என்று சொல்லுவதிலும் அனுப வம் அதிகமாகி அதன் பலனாய் எவ்வளவு திருப்பாட்டு கிடைத்தபோதிலும் அதை ஏற்று ஏற்று அவர் மானம் நன்றாய் மரத்துப் போய்விட்டது. திருவாளர் கள் மாளவியா, bஐயக்கர், கெல்கர், நரசிம்மராஜு, இராமலிங்க செட்டியார், ஆந்திர தேசத்து தேசீயப் பத்திரிகைகள் முதலிய பிரபல கனவான்கள் எல்லோரிடமும் திரு.சீனிவாசய்யங்கார் சொல்லியவற்றையெல்லாம் வெகு தைரியமாய் இல்லையென்று ஒரே அடியாய் சொல்லிவிட்டார். பத்திரிக் கைகள் பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கம் உடையவைகளாகவே இருந்து விட்டதால் அவைகள் இவற்றைப்பற்றி ஒன்றும் எழுதாமல் திரு. அய்யங்கார் புளுகுக்கு ஆதரவளித்து வருகின்றன. சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நெஞ்சில் உரம் இல்லாததால் இவற்றைப் பற்றி ஒன்றும் எழுதாமல் தந்திரமாய் இருந்து விட்டன. இதன்...

மந்திரிகளின் நிலை 0

மந்திரிகளின் நிலை

சென்னை அரசாங்க மந்திரிகளின் நிலை ஆட்டம் கொடுத்திருக்கும் விஷயம் யாவரும் அறிந்ததே. மந்திரிகளின் நியமனத்தின் போது காங்கிரஸ் பார்ப்பனர்களும் ஒத்துழையா பார்ப்பனர்களும் ஐகோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் களும் நிர்வாகசபைப் பார்ப்பனர்களும் உள் உளவாய் இருந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒப்பந்தம் பேசிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரிலேயே மூவரைப் பிடித்து சுயேச்சைக் கக்ஷி மந்திரிகள் என்று பெயர் தந்து மந்திரி சபையை சிருஷ்டித்தார்கள். உதாரணமாக இம்மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் ஒத்துழையாமைக்கார ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ஸி. விஜயராகவாச்சாரியார் முதலியோரும், காங்கிரஸ் முட்டுக்கட்டைகளாகிய ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்கார் முதலியோரும் சட்ட மெம்பர் ஐகோர்ட் ஜட்ஜுகள் முதலியோரும் வெளிப்படையாகவே எடுத்துக் கொண்ட முயற்சி யாவருக்கும் தெரிந்ததே. இவர்கள் தயவால் ஸ்தானம் பெற்ற மந்திரிகளும் மேற்கண்ட பார்ப்பனர்கள் சொன்னபடியெல்லாம் ஆடினதும் பார்ப்பனரல்லாதார் கட்டைக் குலைத்து அவர்களது இயக்கத் தையே பாழாக்க எவ்வளவு தூரம் கொடுமைகள் செய்யலாமோ அவ்வளவு தூரம் செய்ததும் மறக்கக் கூடியதல்ல. கடைசியாக பார்ப்பனரல்லாதார் கோவையில் மகாநாடு கூடி இம்...

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம் 0

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோதமென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச்சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினி யோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையை கமீஷனுக்கு தெரிவிக்க வேண்டாமா? குடி அரசு – செய்திக் குறிப்பு – 12.02.1928

இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா? 0

இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா?

மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் ‘பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்படமாட்டாது பிராம்மண ஸ்திரீகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம். துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது. கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில் கூட ஆதிதிராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே பெண்ணே என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தை காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமிஷனுக்கு தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 12.02.1928

க ற் பு 0

க ற் பு

– சித்திரபுத்திரன் ஸ்ரீமான் ஞ.சு. பரமசிவ முதலியார் எழுதியதற்கு பதில் இந்த வியாசத்தின் காரணமான ஆதி வியாசம் 8-1-28 தேதி ‘குடி அரசில்’ வரையப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்ரீ பரமசிவ முதலியாரின் மறுப்பு 22-1-28 ² ‘குடி அரசில்’ பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்கள் மேல்கண்ட இரண்டு வியாசங்களையும் வைத்துக் கொண்டு வாசிப்பது நலமென தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நாம் “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால் இக்கருத்துக்களை கூறியிருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டிருந்ததற்கு ஸ்ரீ முதலியார் அதை ஒருவாறு ஒப்புக் கொண்டு “தன்னலங்கொண்ட ஒரு கூட்டத்தார் ஏற்றுக் கொள்ளவில்லையானால் நீதியானது அநீதியாகி விடுமோ” என்று பதிலிருத்தியிருக்கிறார். இங்கு ஸ்ரீ முதலியார் பெண்களை தந்நலங்கொண்ட கூட்டத்தார் என்று குறிப்பிட்டது பெண்களுக்கு நீதி வழங்கியதாகுமா? என்பதை யோசிப்பதோடு பெண்கள் தர்மம் எழுதுவதில் ஆண்கள் இம்முறை கொண்டு பிரவேசிப்பது தன்னலங்கொண்டதாகாதா? என்பதையும் சிந்திக்க வேண்டுகின்றோம். (இந்த இடத்தில் ‘கருத்து’ இன்னது என்பதை முடிவு கட்டாவிட்டாலும்)...

கமிஷன் பகிஷ்காரம் 0

கமிஷன் பகிஷ்காரம்

இதுவரை நடந்த சம்பவங்களால் கமிஷன் பகிஷ்காரமென்பது அர்த்தமற்றதாய் விளங்குகின்றது என்பதும், சென்னை பம்பாய் முதலிய மாகாண பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் முழுதும் கமிஷனிடம் ஒத்துழைக்க தயாராயிருக்கின்றன என்பதும் விளங்கிவிட்டது. அதாவது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கிருஷ்ணநாயர் அவர்கள் ஸ்டேட்மெண்டும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் தீர்மானமும் பார்த்தவர்களுக்கு இனிது விளங்கும். மற்றபடி மகமதியத் தலைவர்களின் பெரும்பான்மை அபிப்பி ராயமும் பத்திரிகைகளின் அபிப்பிராயமும் முழு ஒத்துழைப்பில் இருக் கின்றது. ஆதி இந்துக்களின் அபிப்பிராயமும் அதைவிட மீறி நிற்கின்றது. மற்றபடி பார்ப்பனர்களின் இயக்கம் என்று கருதப்பட்ட காங்கிரசின் பேரால் மாத்திரம் சிலர் பகிஷ்காரப் பேச்சு பேசினாலும் காரியத்தில் கமிஷனுக்கு அனுகூலமாய் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தவிர, பார்ப்பனர்களின் முக்கியமான பகிஷ்கார எண்ணமெல்லாம் இந்தியாவிலிருக்கும் ஜாதித் திமிரும் பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளைக்காரருக்குத் தெரியக் கூடாது என்பது ஒன்று மாத்திரமேயல்லாமல் வேறு கவலை ஒன்றும் பார்ப்பனர்க ளுக்கு இல்லை என்பது உறுதியாய் விட்டது. இனி யாரும் அதைக் கேட்ப தில்லை...

அரசியல் நாணயம் 0

அரசியல் நாணயம்

சைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப்பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப்பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன. பொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரி கைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது. ஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவை களிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘சுதேசமித்திரனின்’ 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “…………..இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில் தான் துர் அதிர்ஷ்டவசத்தினால்...

வரப்போகும் தேர்தல்                         தமிழர்களுக்கு ஓர் தனிப்பெரும் விண்ணப்பம் 0

வரப்போகும் தேர்தல் தமிழர்களுக்கு ஓர் தனிப்பெரும் விண்ணப்பம்

வரப்போகும் தேர்தல்கள் தென்னிந்திய தமிழ் மக்களுக்கு ஏற்பட்டி ருக்கும் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப் பட்டாலும், சுயராஜ்யம் என்பது சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன்படுமே அல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்ய மென்பதும் பரராஜ்யமென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும்பாலும் சுயமரியாதையற்று, சுயேச்சையற்று மலந் தின்னும் பன்றிகளுக்கும் கழுதைகளுக்கும் புழுக்களுக்குமுள்ள சுதந்திரமும் சுயாதீனமுமின்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் பொருட்டும், தேச முழுவதிலுள்ள இவர் போன்றோர் பொருட்டும் விடுதலையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஆறு வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கமானது பல்வேறு காரணங்களால் வேருடன் களையப்பட்டு விட்டது. இதன் பலனாய் ஏற் பட்ட நிலைமையானது சுயேச்சையும், சுயமரியாதையும், சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு, அதிலும் முக்கியமாய் தென்னாட்டுத் தமிழ்மக்களுக்கு முன்னிலும் அதிக கேவலமான நிலையில் கொண்டு வந்து விட்டுவிட்டது. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் நாட்டு ஜனங்களென்று...

தேவஸ்தானச் சட்டம் 0

தேவஸ்தானச் சட்டம்

பார்ப்பனக் கட்சியின் சூழ்ச்சி பொடி பொடியாய் தகர்க்கப்படுகிறது. பிரபல தேசபக்தர்களின் கருத்து சட்டப்பேரவையில் வரப்போகும் திருத்தத்தை சுயராஜ்யக் கட்சியார் எதிர்ப்பது “ தீண்டாமைக்குத் துணைபோவதாகும்,” கூடாவொழுக்கமாகும்,” “புரட்டான போலிச் செயலாகும்.” “ காங்கிரசுக்கு அழிவுதேடுவதாகும்.” திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தந்திமூலம் பத்திரிகைகளுக்கு அறிவித்ததாவது:- “தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும். மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படையாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப் பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக் கிறேன்.” ( ப.ர் ) குடி அரசு – அறிவிப்பு – 22.08.1926

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம் 0

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்

“சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிரதானம்’’ “மகாத்மா காந்திக்கு மண்டையில் மூளையில்லை’’ என்று சொன்ன மகான் ( ! ) இப்பொழுது காங்கிரஸ் தலைவராய் விளங்குகிறார் திரு.இராஜகோபாலாச்சாரியாரின் இரகசியம் “சென்னையிலும் வங்காளத்தைப் போல் கலவரம் மூட்ட பார்ப்பனர்கள் முயலுகிறார்களா?’’ பலனடைந்தவர் பார்ப்பனரே காங்கிரசின் ஆரம்பமே பார்ப்பனர்கள் எப்படி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டதே யல்லாமல் வேறல்ல. அது போலவே காங்கிரஸ் ஏற்பட்டதற்குப் பிறகுதான் உத்தியோகங்களெல்லாம் பார்ப்பன மயமாவதற்கு அநுகூலமேற்பட்டது. மகாத்மா காந்தி காங்கிரசை தலைமை வகித்து நடத்திய காலத்தில் பார்ப்பனர் களுக்கு ஆதிக்கமும் செல்வாக்கும் உத்தியோகமும் குறையத் தலைப்பட் டது. அதனால்தான் இந்தப் பார்ப்பனர்கள் மகாத்மாவை காங்கிரசை விட்டு ஓடும்படி செய்துவிட்டார்கள். அதனாலேயேதான் தமிழ்நாட்டில் மகாத்மா காங்கிரசுக்காக உழைத்து வந்த பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் காங்கிரசை விட்டு ஓடும் படி செய்து விட்டார்கள். காங்கிரஸ் ஏற்பட்டதின் பலனாய் பார்ப்பனர்கள் லாபமடைந்தார்களே ஒழிய ஏழைகளுக்கும் தொழி லாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் அதிக கஷ்டம் தான் ஏற்பட்டது....

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது 0

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ் காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப் புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டன வென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பன ரல்லாதார்களை கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங்கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம் காங்கிரசுகாரர்கள் தாங்கள்தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித் தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை. பஹிஷ்கார இயக்கப் பிரசாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ...