பூனா பிராமணர்கள் பெரும்பாலும் லோகமானிய திலகர் என்றழைக் கப்படும் கடும் வர்ணாசிரமியான ஸ்ரீமான் திலகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காங்கிரசுக்கு முந்திய காங்கிரசுகள் இப்போதைய காங்கிரசைப் போலவே பார்ப்பனக் காங்கிரசாயிருந்ததாலும் இப்போதைய ‘தலைவர்கள்’ ஸ்ரீமான்கள் பண்டித நேரு, பண்டித சரோஜினி, எஸ்.சீனிவாசய்யங்கார், எ. ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் இந்திய தேசத் தலைவர்களாயிருப்பது போலவே அப்போதும் ஸ்ரீமான்கள் திலகர், மாளவியா முதலிய பார்ப்பனர்களே தலைவர் களாயிருந் தார்கள். இப்போது இவர்கள் பார்ப்பனப் பத்திரிகைகளாலும் பிரசாரத்தாலும் படம் வைத்து கும்பிடத் தகுந்தவர்களாயிருந்த போதிலும், சமுதாய விஷயத் திலும் சமத்துவ விஷயத்திலும் ஸ்ரீமான் திலகர் நமது ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு ஒரு படி முன்னால் இருப்பவர். அப்பேர் பட்டவர் பத்திரிகை உலகத்திலும், பிரசார உலகத்திலும், அரசியல் உலகத்தி லும் சிரேஷ்ட்டமாய் விளங்கி செல்வாக்கோடு வாழ்ந்த ஊராகிய பூனா நகரத்தில் பார்ப்பனா திக்கம் எவ்வளவு வளர்ந்திருக்கும், எவ்வளவு குடி கொண்டிருக்கும் என்பது...