ஜஸ்டிஸ் கக்ஷியும் ஸ்ரீவரதராஜுலுவும்
ஸ்ரீ வரதராஜுலு ஏப்ரல் 27 தேதி ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :- “ஜஸ்டிஸ் கக்ஷியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்”……. ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீய நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங்களாக பாடுபட்டு வருகிறார்.” ‘நாயக்கர் பிரசாரம் இப்போது போலவே நடைபெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.’ ‘தேசீய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கக்ஷி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது……’ ‘கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?’ ‘பிராமணர்களை தேசீயக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது…’ என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார். இவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்பது ஸ்ரீ வரதராஜுவுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்பனர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்து விட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும்...