Author: admin

ஜஸ்டிஸ் கக்ஷியும் ஸ்ரீவரதராஜுலுவும் 0

ஜஸ்டிஸ் கக்ஷியும் ஸ்ரீவரதராஜுலுவும்

ஸ்ரீ வரதராஜுலு ஏப்ரல் 27 தேதி ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :- “ஜஸ்டிஸ் கக்ஷியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்”……. ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீய நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங்களாக பாடுபட்டு வருகிறார்.” ‘நாயக்கர் பிரசாரம் இப்போது போலவே நடைபெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.’ ‘தேசீய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கக்ஷி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது……’ ‘கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?’ ‘பிராமணர்களை தேசீயக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது…’ என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார். இவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்பது ஸ்ரீ வரதராஜுவுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்பனர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்து விட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும்...

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம் 0

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்

ஸ்ரீமான் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஓ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகரசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மாஜிஸ்திரேட்டாக இருந்ததால் சட்டப்படி அபேக்ஷக ராயிருக்க அருகரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர்தல் நடத்த உத்திரவிட்டார். இதன் மேல் அத் தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை ஸ்மால் காஸ் கோர்ட்டில் ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிடமே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக் கோர்ட்டில் பார்ப்பன ரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த மூன்று ஜட்ஜிகளால் உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோதமாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப் பனர் அத்தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள்....

கூடா ஒழுக்கம் 0

கூடா ஒழுக்கம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி சென்ற இடங்களிலெல்லாம் கலவரம் ஏற்பட்டதாகவும் சில விடங்களில் கூட்டத்தில் செருப்புகள் வந்து விழுந்த தாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. மந்திரிகளின் விஜயத்திலும் பார்ப்பனர்களின் கூலிகள் சிலருக்கு அடி விழுந்ததாகவும் காணப்படு கின்றன. இம்மாதிரியான காரியங்கள் மிகுதியும் வெறுக்கத்தக்க தென்றும் நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். இதற்கு முன்னும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் முதலியோருடைய படங்களை கிழித்து மிதித்து எறிந்ததற்கும் சில கூட்டங்களில் செருப்புகள் பறந்ததற்கும் நாம் மிகுதியும் வருத்தப்பட்டு கண்டித்து எழுதியிருந்தோம். மறுபடியும் அம்மாதிரியான காரியங்கள் நடைபெற்றதாக தெரிவதற்கு நாம் மிகுதியும் வருத்தமடைகின்றோம். “தமிழ்நாடு” பத்திரிகையில் இச்சம்பவங்கள் சுயமரியாதை சங்கத்தைச் சேர்ந்ததாக பிறர் நினைக்கும்படி காணப்படுகின்றதானாலும் நாம் அதை சிறிதும் நம்புவதில்லை. ஏனெனில் அது காட்டிக் கொடுத்து கூலி பெறுவதிலோ அபாண்டத்தை சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதிலோ பார்ப்பனர்களை விட ஒருபடி முன்னிற்பது. ஆதலால் அதை நாம் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு சமயம் அப்படி ஏதாவது...

“காங்கிரஸ் விளம்பர சபை” 0

“காங்கிரஸ் விளம்பர சபை”

நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் ‘காங்கிரஸ் விளம்பர சபை’ என்பதாக ஒரு யோக்கியப் பொறுப்பற்றதும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரிலும் அவர்கள் இயக்கத்தின் பேரிலும் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுதி வருகிறார். இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இதுகள் ஒவ்வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற்கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ‘ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம். அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத் தில் மூடு வண்டியில் அகப்பட்டு திக்கு முக்காடி இறந்து போன சம்பவத்தைக் குறித்து 22.9.26 ² சுதேசமித்திரனில் பார்ப்பனரல்லா தார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கக்ஷியார் இதைப்பற்றி ஒன்றும்...

பனகால் ராஜாவின் உளறலா?  பார்ப்பனர்களின் போக்கிரித்தனமா? ( மித்திரனின் விஷமம் ) 0

பனகால் ராஜாவின் உளறலா? பார்ப்பனர்களின் போக்கிரித்தனமா? ( மித்திரனின் விஷமம் )

தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த தூதர்களுக்கு சென்னை மந்திரிகள் ஒரு விருந்து நடத்தியிருக்கிறார்கள் . அவ்விருந்தில் அத்தூதர் களை பனகால் ராஜா பாராட்டிப் பேசுகையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட பல நன்மைகளைப் பற்றியும், தென்னாப்பிரிகா போன்ற பல குடியேற்ற நாட்டின் சம்பந்தத்தைப் பற்றியும் சில வார்த்தைகளும் சொல்லி விட்டு இந்தியாவிலிருக்கும் சில பண்டைக்கால நாகரீகத்தின் வேறுபாடு களுக்காக எங்களைத் தாழ்வாய் கருதக்கூடாது, தற்கால சமூக சம்பிரதாயங் களுக்கு அதுகள் பிடிக்காமல் இருப்பது வாஸ்தவம்தான் ஆனால் அவை துரிதமாக மறைந்து வருகிறது என்று சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன் என்று பேசியிருக்கிறார். (இது சுதேசமித்திரனிலேயே இருக்கிறது) இந்த வார்த்தைகளுக்காக மித்திரன் ‘பனகால் ராஜாவின் உளறல்’ என்று போக்கிரித் தனமான தலையங்கமிட்டு இதைக் குறிப்பிட்டிருப்பதுடன் ‘தேசாபிமானமற்ற மந்திரி’ என்கிற தலையங்கங் கொண்ட வியாசமும் எழுதியிருக்கிறான். அதோடு தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்கள் கோவில்களில் ‘நாய்களும், கருப்பு மனிதர்களும் உள்ளே வரக்கூடாது’ என்று விளம்பரம் எழுதி ஒட்டியிருப்பதற்காக மிகவும் வருந்துவதாக...

அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரின் வரவேற்பு 0

அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரின் வரவேற்பு

சமய நெறி உணர்த்துவது சன்மார்க்கமா? துன்மார்க்கமா? அக்கிராசனாதிபதியே! சமரச சன்மார்க்க சங்கத்தினர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் அன்பர்களே! இன்று சமரச சன்மார்க்க சங்க சார்பாக வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் கண்ட புகழுரைகளுக்கு நான் உண்மையிலேயே ஒரு சிறிதும் பொருத்தமில்லாதவனாயிருந்த போதிலும் அதன் போக்கானது எனது தொண்டின் தாத்பர்யத்தையும் போக்கையும் தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக்கொண்டு என்னை புகழ்வதாயிருப்பதால் மிக்க நன்றியறிதலோடும் மகிழ்ச்சியோடும் இவ்வுபசாரப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளுகின்றேன். எனது தொண்டைப் பற்றி பலர் ஆதரவளித்தாலும் ஒரு சிலர் அபிப்பிராய பேதப்படுவதையும் ஏதோ முழுகிப் போனது போல் கவலைப்படுவதையும் பார்க்கும் போது எனக்கே சிற்சில சமயங்களில் நாம் ஏதாவது தப்பான வழியில் போகின்றோமோ என்று தோன்றி கலக்கமுறுவதுமுண்டு. இந்த நிலையில் தங்கள் உபசாரப் பத்திரமானது “இனி உனக்கு அப்பேர்ப் பட்ட கலக்கங்கள் கண்டிப்பாய் வேண்டியதில்லை. உனது கருத்துப்படியே உனது தொண்டை தீவிரமாக செய்து கொண்டுபோ நாங்கள் உனக்கு பின் உதவியாய் இருக்கின்றோம்” என்று எனக்கு...

சென்னை வாசிகளே                                       என்ன செய்யப் போகிறீர்கள் ?  -சித்திரபுத்திரன் 0

சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள் ? -சித்திரபுத்திரன்

ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்திர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார் , தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படி துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய் விட்டதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் போய்விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்ப வரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்தவருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ.,பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போதுமுதலே தேசத்திற்காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லா தாருக்கு ஓட்டுச் செய்கிறீர்களா? தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன...

இந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்                                                                         பனகால் ராஜாவுக்கே ஜே! 0

இந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் பனகால் ராஜாவுக்கே ஜே!

தென்னாட்டுப் பார்ப்பனர்களின் எவ்வளவோ சூழ்ச்சிக்கும் தப்பி இந்துமத பரிபாலன மசோதா என்று சொல்லப்படும் தேவஸ்தான மசோதா சட்டசபையில் சட்டமாக நிறைவேறி விட்டது. தேவஸ்தான சட்டம் சட்ட சபைக்கு வந்தவுடன் பலர் அதை முட்டித் தள்ளிவிட என்ன என்னமோ சூழ்ச்சிகள் செய்து பார்த்தும் சுமார் 500 திருத்தப் பிரேரேபணைகளைக் கொண்டு வந்து தங்களால் ஆனவரையில் அதை ஒழிக்கப் பார்த்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் அதிகப் படியான பிரதிநிதிகளும் சர்க்காரும் இவைகளுக்குக் கொஞ்சமும் மனந் தளராமல் ஒரே உறுதியாய் இருந்து சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். திருத்தப் பிரேரேபணைகளின் யோக்கியதைகளைச் சரியாய் கவனித்து வந்தவர்களுக்கும் சட்ட சம்மந்த மாய் கிளப்பப் பட்ட ஆnக்ஷபணைகளை சரியாய் கவனித்து வந்தவர்களுக் கும், இச்சட்டத்தை ஆnக்ஷபித்தவர்கள் கருத்து என்ன என்பது விளங்கா மல் போகாது. இதில் பொதுமக்கள் கவனத்தைக் கவரத்தக்க ஒரு திருத்தப் பிரேரே பணையைப் பற்றி இதில் பிரஸ்தாபிப்போம். அதாவது எல்லா கோவில்களிலும் பஞ்சமர்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும்...

தமிழ்நாட்டுத் தலைவர்கள் 0

தமிழ்நாட்டுத் தலைவர்கள்

காஞ்சீபுரம் மஹாநாட்டில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளையாவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்று சொல்லப்படும் ஸ்ரீமான்கள் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களும் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள் என்று நாம் அப்போது எழுதியிருந்தோம். பிறகு எப்படியோ நாட்டின் நல்ல காலத்தின் பலனாய் இவ்விருவர்களும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை பிரிந்த தல்லாமல், அவர் தலைமை வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும் தாங்கள் இருப்பது சரியல்ல என்று கருதி ஏதோ சாக்கைச் சொல்லிக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். இவ்விரு கனவான்களும் தைரியமாய் வெளி வந்த காரணம் மறுபடியும் தங்களில் யாரும் ஸ்ரீமான் அய்யங்காருடன் போய் சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க நினைக்க மாட்டார்கள் என்கிற பரஸ்பர நம்பிக்கைதான் அய்யங்காரின் “பூளவாக் கையும்”, “அரசியல் யோக்கியதையும்” தைரியமாய் வெளியிட இடம் கொடுத்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதற்கு உதாரணம், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தனது பத்திரிகையில் “உரிமையில்லா...

கோயமுத்தூர் ஜில்லா                              சட்டசபைத் தேர்தல் நிலைமை 0

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை

கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைத் தேர்தலுக்கு ஏற்பட்ட 3 ஸ்தா னங்களுக்கு இதுவரை ஐந்து கனவான்கள் நிற்கிறார்கள். அவர்கள்:- ஸ்ரீமான் சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், டி.எ. ராமலிங்கம் செட்டியார், சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார், பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் ஆகிய ஐந்து கனவான்கள். இவர்களுள் ஸ்ரீமான்கள் வெங்கிட்டரமணய்யங்கார், ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகிய மூவரும் இதற்கு முன் இரண்டு தடவை 6 வருஷம் சட்டசபையிலிருந்து அப்பதவியையும் பெருமையையும் அனு பவித்து வந்தவர்கள். இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஏனெனில் சட்டசபையில் அரசியல் சம்பந்தமாய் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது நமது தாழ்மையான தும் உறுதியானதுமான அபிப்பிராயம். ஆனால் அதன் மூலம் தங்கள் தங்கள் சமூகத்தின் சுயமரியாதைக்கு ஏதாவது உழைக்க அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்பதோடு அப்பதவி ஒரு கௌரவமும் அந்தஸ்து முள்ள ஸ்தானம் என்றே தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில்...

தற்கால நிலைமையும் நமது கடமையும் 0

தற்கால நிலைமையும் நமது கடமையும்

சகோதரி சகோதரர்களே! நான் இந்த ஊரில் தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு நடந்த பிறகு இன்று தான் முதல் தடவையாக வந்திருக்கிறேன். இந்தக் காஞ்சீபுரம் நமது சரித்திர புராணக் காலங்களில் எப்படி முக்கியமானதோ அது போலவே தற்கால அரசியல் சமூகவியல் முதலிய இயக்கங்களின் சரித்திரத்திற்கும் முக்கிய மானதாக இருந்து வருகிறது. ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாக ஏற்படுவதற்கும், பெசண்டம்மை யாரின் அரசியல் வாழ்வில் மாற்றம் ஏற்படவும், இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமதி சரோஜினியம்மாள் அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய சென்னை மாகாண கான் பரன்சில்தான் அஸ்திவாரம் போடப்பட்டது. அது போலவே காங்கிரஸ் இயக் கம் தேசத்தில் செல்லுபடியற்றதாகவும், சுயராஜ்யக் கட்சிக்கு உளைமாந்தை வரவும், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வெளியாகவும் இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு மகாநாட்டில் தான் அஸ்திவாரம் போடப்பட்டது. காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அப்புறம் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா தேசத்தி லேயே அரசியலிலும் சமூகயியல்களிலும் பெரிய...

ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் 0

ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்

ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 16-ல் கோவையிலிருந்து கொழும்பு மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குப் பிரயாண மாகிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலுள்ள பார்லிமெண்ட் பிரதிநிதிகள் எல்லோரையும் ஆஸ்ற்றிய அரசாங்கத்தார் தருவித்து ஒவ்வொரு பார்லி மெண்டின் நடவடிக்கைகளையும் போக்கையும் பற்றி எடுத்துப் பேசி ஒருவ ருக்கொருவர் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்வதற் கும் நன்மையான முறைகளை ஒவ்வொருவரும் ஒருங்கே கையாளவும், தீமையின் முறைகளைக் கைவிடவும் ஒரு பயிற்சி ஏற்படுவதற்காக கூடப் படும் ஏகாதிபத்தியம் மந்திராலோசனை சபைகளின் பிரதிநிதிகள் கூட்ட மொன்று ஆஸ்த்திரேலியா அரசாங்கத்தாரால் கூட்டப்படுகிறது. இக்கூட்டத் திற்குப் பிரிட்டிஷாருக்குள்ள “குடியேற்ற நாடுகளின் பார்லிமெண்ட்” என்று சொல்லப்படும், மந்திராலோசனை சபையார்கள் எல்லாம் தங்கள் தங்கள் சபைச்சார்பாக பல பிரதிநிதிகளை தெரிந்தெடுத்தனுப்புகிறார்கள். அது போலவே நமது இந்தியாவுக்கும் ³ மகாநாட்டுக்கு இந்திய பிரதிநிதி யாக இந்தியா சட்டசபையாரும் நமது ராஜாங்க சபையாரும் நமது ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரையும் மற்றொரு ஐரோப்பியரையும் தெரிந் தெடுத்திருக்கிறார்கள். ³...

“ரிவோல்ட்” 0

“ரிவோல்ட்”

‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையின் பதிப்பாளராகவும் வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்துகொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.4.28 இல் மறுபடியும் கோர்ட்டுக்கு போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார். பிறகு போலீசார் ‘ரிவோல்ட்’ என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவதாகத் தெரிகிறது. ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. “ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:- இப்பவும் ³ பிரசில் ‘ரிவோல்ட்’ என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் ‘குடி அரசு’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே...

சுயமரியாதைச்  சங்கங்களுக்கு ஆதரவு 0

சுயமரியாதைச் சங்கங்களுக்கு ஆதரவு

தமிழ் நாட்டில் புதிதாய் தோன்றி இருக்கும் சுயமரியாதைச் சங்கங் களுக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கங்களுக்கும் ஏறக்குறைய நாடு முழுதுமே ஆதரவு கிடைத்துவரும் விஷயம் யாவரும் அறிந்திருக்கலாம். காங்கிரசின் போது வங்காளத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருந்த திரு வாளர் கோஸ்வாமி முதலியோர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப்பற்றி பார்ப்பனரல்லாத தலைவர்களிடம் பேசும்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தைப் பற்றியும் சுயமரியாதைச் சங்கத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசி விட்டுப் போய் இந்திய சட்டசபையிலும் பிரஸ் தாபித்தது நேயர்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது சென்னை மாகாண மந்திரிகளும் முக்கியமாய் முதல்மந்திரியும் தஞ்சையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது இது சமயம் “நாட்டில் சுயமரியாதைச்சங்கங்களை ஸ்ரீ மான் ராம சாமி நாயக்கர் போன்றார்கள் ஸ்தாபித்து வருவது கேட்டு தாம் மிகவும் சந்தோஷப்படுவதாகவும் அவைகள்தாம் இப்போது வேண்டப்படுகின்றன வென்றும் சிறிதும் பயமில்லாமல் பார்ப்பனரல்லாதார் இக்காரியத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு போனால் சீக்கிரத்தில் நன்மை பிறக்குமென்றும் இவ்வேலைகள் தான் சுயராஜ்யமடையச் செய்யுமென்றும் பேசி பார்ப்பன ரல்லாத...

பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன? கும்பகோணத்து “பிராமணனின்” லஜ்ஜையும் சீற்றமும் 0

பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன? கும்பகோணத்து “பிராமணனின்” லஜ்ஜையும் சீற்றமும்

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான் களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப் பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும் , சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரி கைகளும், “பிராமணன்” என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகை யும் கூச்சல் போடுகின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்ப னன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளை யும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்த வன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மை யாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல. உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் ‘சுவாமி’ என்று கூப்பிட வேண்டும்?...

இந்து மதமும் யாகங்களும் 0

இந்து மதமும் யாகங்களும்

மதத்தின் பெயரால் “கடவுள் வழிபாடு” என்று கருதப்படும் அக்கிரமச்செயல்கள் பலவற்றுள் ‘யாகம்’ செய்வதும் ஒன்று. இது ஒரு கொடிய பாதகச் செயலாகும். ஏனெனில், யாகத்தில் பிராணிகளை இம்சிக்கின் றார்கள். இது பார்ப்பனர்களால் கடவுள் வழிபாடாக நடந்து வருகிறது. அஸ்வமேதம், அஜமேதம், கோமேதம் முதலான யாகங்களில் ஒன்றும் அறியாத அபல பிராணிகளான, குதிரை, ஆடு, மாடு முதலான ஜீவன்களைக் கொலை செய்கின்றார்கள். உலகில் கொலை செய்வதைவிட கடினகர்மம் வேறு ஒன்றுமில்லை யென்பது மகான்களின் அபிப்பிராயம். பூர்வத்தில் மனிதனையும் பலியிடும் வழக்கம் இருந்ததாக சரித்திரங்கள் மூலம் அறிகின் றோம். ஆரியர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் நம் தேசம் அறிவிலும் ஒழுக்கத்திலும் சமத்வ சகோதரத் தன்மையிலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கியிருந்த தென்பதை தொல்காப்பியம் முதலான பழம் தமிழ் நூல்களால் அறியக்கூடும். ஆரியர்களின் வருகைக்கு பின்னர் அவர்களின் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் புகுந்து விட்டதால் கடவுளின் பெயரால் பலியிடும் வழக்கத்தை நம்மவர்களும் பழகி விட்டார்கள்....

பார்ப்பனர் தேர்தல் முழக்கம் 0

பார்ப்பனர் தேர்தல் முழக்கம்

சென்னையில் தேர்தல் முழக்கம் தெருத்தெருவாய் முழங்குகிறது. பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஸ்ரீமான்கள் எஸ்.சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகள், எ.ரெங்கசாமி அய்யங்கார் எம்.கே. ஆச்சாரியார் முதலியவர்கள் மடாதிபதிகள் பணத்தாலும் மகந்துகள் பணத்தாலும் தெருத் தெருவாய், ஜில்லா ஜில்லாவாய்ப் பார்ப்பனரல்லாத சில கயவர்களையும் சேர்த்துக் கொண்டு தேர்தல் முழக்கம் செய்கிறார்கள். அம்முழக்கத்தில் உபயோகிக்கும் தந்திரங்கள் என்னவென்று பார்ப்போமானால், பார்ப்பன ரல்லாதார் முற்போக்குக்காக ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் இயக்கங் கள் மீது, பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி தூஷணை செய்வதும், தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் உழைத்து வரும் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும், பொல்லாப்பு களையும் பழிகளையும் சொல்லி அவர்களிடம் பொது ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகும்படி செய்வதுமாகவே இருக்கின்றன. இதன் பயனாய்ப் பார்ப்பனரல்லாத பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் ஓட்டு பெற்று சென்னை சட்டசபை, இந்தியா சட்ட சபை முதலிய ஸ்தானங்கள் பெற்று அவற்றின் மூலம் ஏற்பட்ட உத்தியோகங்கள் அதிகாரங்கள் முழுவதையும் தங்கள் இனத்தவர்களாகிய...

சேவையும் பாராட்டுதலும் 0

சேவையும் பாராட்டுதலும்

கனவான்களே! நான் உங்கள் அழைப்பிற்கு வந்தேனேயொழிய பிரசங்கம் செய்ய வரவில்லை. முதலியாரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி அக்கி ராசனர் கட்டளையிட்டார். நான் அவரை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளு கிறேன். ஸ்ரீமான் முதலியார் எனது நண்பர்; அவரைப் பற்றி நான் புகழ் பேசுவது எனக்கும் ஒழுங்கல்ல; ஸ்ரீமான் முதலியார் அவர்களும் இதைப் பொறுக்கமாட்டார். அல்லாமலும் இது சமயம் அவர் தேர்தல் வேலையில் இருக்கிறார். நான் ஏதாவது இப்பொழுது அவரைப் பற்றி பேசுவதாயிருந் தாலும் அதை பொது ஜனங்களோ அல்லது அவர் போன்ற அபேக்ஷகர்களோ முதலியாருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நான் அவரைப் புகழ்வதாய் நினைக்கக் கூடும். தவிரவும் ஸ்ரீமான் முதலியார் அவர்களும் இம்மாதிரி ஆடம்பரத்தையும் வரவேற்பையும் விரும்பும் சுபாவமுடையவரல்லர் என்பது என்னுடைய அனுபவம். ஆனால் என்ன செய்வார் பாவம். இந்தக் காலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்பவர்களுக்கு இந்த மாதிரி ஆடம் பரமும் வரவேற்பும் விளம்பரங்களுமே பிரதான யோக்கியதாம்சமாய்ப் போய்விட்டதால், இவரும் சட்டசபைத்...

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின்                   சமத்துவ ஞானம் 0

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் சமத்துவ ஞானம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனது வெற்றிக் கொண்டாட்டத்தில் பேசும் போது சமத்துவத்தைப் பற்றிச் சொன் னதில் “ஜாதி வித்தியாசத்தை சமூக விஷயங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் விஷயத்தில் அது வேண்டாம்” என்று சொன்னதாக 6 -ந் தேதி ‘மித்திரனில்’ காணப்படுகிறது. இதன் தத்துவம் என்ன என்பதை அவர் பின்னால் திரியும் கோடாரிக் காம்புகள் யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம். சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் என்றால் என்ன? அவர்கள் பிராமணர்கள் நாம் சூத்திரர்கள் என்பதை வைத்துக் கொள்ள வேண்டியதும் பிறவியிலேயே அவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிறதும் தானா அல்லவா? அல்லாமல் எல்லோரும் சமம் என்கிற கருத்தாயிருந்தால் சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் எதற்காக இருக்க வேண்டும் என்கிறார். தவிர அரசியலில் ஜாதி வித்தியாசம் வேண்டாம் என்றால் அதனின் தத்துவம் என்ன? அரசியலில் உள்ள எல்லா சுதந்திரங்களையும் பதவி களையும் உத்தியோகங்களையும் ஜாதி வித்தியாசமில்லாமல் ‘‘படித்த வர்களும் கெட்டிக்காரர்களும்...

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை 0

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை

நமது ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியாரும் காங்கிரஸ் பிரசாரம் என்கிற பெயரை வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாத சமூகத்தை அடியோடு அழிப்பதற்காக ஆங்காங்கு செய்து வரும் பிரசாரத் தைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வருகிறோம். அதன் மூலம் அவர்கள் கோருவது என்ன என்பதையும் அவர்களின் ஆசை என்ன என்பதையும் பொதுமக்கள் ஒருவாறு அறிந்திருக்கலாம். ஆனால் சமீபகாலமாய் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பல பதவிகள் அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், தமிழ்நாடு சுயராஜ்ய கக்ஷித் தலைவர், எல்லா இந்திய சுயராஜ்ய கட்சித் தலைவர், எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகள் அடையக் கோரி செய்து வந்த பிரயத்தனங்கள் பலித்து விட்டதின் பலனாய்த் தலை கிறுகிறுத்துப்போய் குடிகாரன் வெறிகாரன் பேசுவது போல் பேசத் தொடங்கி விட்டார். இதன் பலனாய் அவரது உள்ளக் கிடக்கை அப்படியே வெளியாய் விட்டது. அதென்னவெனில் இம்மாதம் 10 ² ‘தமிழ்’ சுயராஜ்யாவில் 6-ம் பக்கத்தில் அரசாங்கத்தார் என்ன செய்கிறார்கள் என்கிற...

வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள் 0

வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள்

பார்ப்பனர் ஆயுதமாகிய காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக வடஆற்காடு ஜில்லாவுக்கு மைலாப்பூர் அய்யங்கார் ‘சுவாமி’களால் சட்ட சபைக்கு நிறுத்தின பான்மையும், நிறுத்தப்பட்ட மூன்று கனவான்களின் யோக்கியதையைப் பற்றியும், ஆரணி, ஆற்காடு ஜில்லா காங்கிரஸ்வாதி ஒருவர் எழுதிய கடிதத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதை ஊன்றிப் படிப்பவர்களுக்கு அய்யங்கார் சூழ்ச்சிகளின் தத்துவம் விளங்கா மல் போகாது. அதிற்கண்ட ஸ்ரீமான் செட்டியார் பார்ப்பனரல்லாதாரிடம் வரும் போது நானும் பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்தவன். எப்படி யாவது நமது நாட்டுப் பார்ப்பனீயத்தை ஒழித்தால்தான் சுயராஜ்யம் வரும் என்று சொல்லு வார். பார்ப்பனர் இடம் செல்லும் போது “ஏமி சுவாமிலூ மனக்கெப்புடு அமாவாச சூத்திரவாள்ளரு எப்புடு அமாவாச” என்று கேட்பார். அதாவது “என்ன சுவாமிகளே நமக்கு என்றைக்கு அமாவாசை, சூத்திரன்களுக்கு என்றைக்கு அமாவாசை” என்று கேட்டல். அல்லாமலும் காங்கிரஸ் வாதி எழுதியிருப்பது போல் தனக்கு லாபம் இல்லாமல் அவரிடம் ஒரு காரியமும் இருக்காது. நமது மந்திரிகளைக் காணும்போது நான்...

சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம் 0

சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்

எனதருமை வாலிப சகோதரர்களே! இச்சங்கத்திற்குப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் எனப் பெயரிட் டிருப்பதே பார்ப்பனரல்லாதாராகிய நமது பிற்கால nக்ஷமத்தில் மிகுதியும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இன்றைய தினம் வாலிபர்களாயிருக்கிற உங்க ளில் இருந்துதான் புத்த பகவானும், மகாத்மா காந்தியும், நாயர் பெருமானும், தியாகராயரும் போன்றோர் தோன்ற வேண்டும். இவர்கள் எல்லாம் உங்க ளைப் போல் வாலிபர்களாயிருந்தவர்கள்தான். எந்தத் தேசமும் எந்தச் சமூக மும் பெரும்பாலும் அவ்வத் தேசத்திய வாலிபர்களைக் கொண்டுதான் முன் வந்திருக்கிறதே அல்லாமல் பெரியோர்களையும் முதியோர்களையும் கொண் டல்ல. உலக வாழ்க்கையில் ஈடுபட்ட பெரியோர்களிடம் பொது நலமும் தியாக புத்தியும் காண்பது மிகவும் அரிது. சுயநலந்தான் வளர்த்து கொண்டு போகும். அவர்கள் பொதுநலத்திற்கு உழைப்பதாய்க் காணப்படுவது அவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்துத்தான் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். மகாத்மா வைப் போலவும் நாயர் பெருமான் போலவும் தியாகராயர் போலவும் சிலரே உண்மையான பெரியோர்களாய் இருக்கக்கூடும். உதாரணமாக, நாயர் பெரு மானுக்கும் தியாகராயருக்கும் பதிலாக வந்த...

ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தனும் 0

ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தனும்

சென்ற ஜுலை µ 25, 26 நாட்களில் இக்கொழும்பில் நடந்தேறிய இந்திய வாலிபர் சங்க ஆண்டுவிழாவிற்கு தலைமை வகிக்க திருவுளங் கொண்டு இனனாடடைந்து அறிய உயறிய சொற்பொழிவுகள் சில நிகழ்த்தி தாய்நாடு போந்த உண்மை தேசபக்தரும் நம் தமிழணங்கின் திருக்குமாரருமாகிய உயர்திரு. கலியாணசுந்தர முதலியாரவர்கள் இவ்வூ ரையடைந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தி பிரவூர் சென்றதைப்பற்றி இக்கொழும்பு மாநகரில் கௌரவ நடேசையரவர்களால் பிராமண ரல்லாதாரின் உதவியாலும் முயர்ச்சியாலும் நடத்தப்படுகிற தேசபக்த னென்னும் தமிழ்ப்பத்திரிகையை தற்பொழுது பி.பி. அய்யங்கார் என்பவ ரால் நடத்தப்படுகிறதாம். இப் பக்தனுக்கும் முதலியாருக்கும் என்ன வருத்தம்? இப்பத்திரிகைக்கு எவ்விதத்திலாவது ஏதாவது உதவியோ சந்தா அல்லது விளம்பரம் சேர்த்துக்கொடுத்தோர்களும், காங்கிரஸ் காரர்களும் போலி தேசாபிமானிகளும் பொதுக்காரியங்களுக்கென்று பணம் திரட்ட வருவோரும், பணக்காரர், செட்டிகள், பிராமணர்கள் முதலிய வர்களில் எவராவது இந்நாட்டிற்கு வருவதாகயிருந்தால் உடனே போற்றிப் புகழ்ந்து “நல்வரவாகுக” என்றும் தாய்நாடு செல்வதாகயிருந்தால் சென்று வருகவென்றும் பத்தி பத்தியாக அவர்களை சிறப்பித்து எழுதுகிற இப்பக்தனுக்கு...

தலைவர் பதவி பெறும்                                  வழி 0

தலைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல், பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகிறது என்பதை சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் பிரசி டெண்ட் என்கிற ஸ்தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப் பட்ட மக்களின் சுதந்தி ரத்திற்கு விடப்பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டு பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த ஸ்தானத்தை அடைந்த தில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டுப் போய்விட்டது. ஏனெனில் மற்ற தேர்தல்களையும் பட்டங்களையும் உத்தியோகங்க ளையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கியதையைக் கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள். ஸ்ரீமான்...

வைப்பாட்டிக் கதை 0

வைப்பாட்டிக் கதை

சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யம் வந்துவிட்டால் பார்ப்பனரல்லாத ஸ்ரீகளை பார்ப்பனர் தங்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதாகவும், அது பார்ப்பனரல் லாதார் சமூகத்திற்கே அவமானமாய் விட்டதாகவும் ஸ்ரீமான் சீனிவாசய் யங்கார் ஒரு கூட்டத்தில் நீலிக் கண்ணீர் விட்டார். இதைப் பார்த்து அவரது இரண்டொரு பார்ப்பனரல்லாத சிஷ்யர்களும் பின்பாட்டுப் பாடி தங்கள் சமூகத்திற்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூலி மாரடித்துக் கொண்டார் கள். இவர்கள் உண்மையிலேயே நாயக்கர் சொன்னதற்காக மாரடித்துக் கொண்டார்களா? அல்லது அய்யங்காரின் உப்புக்காக மாரடித்துக் கொண் டார்களா? என்பதைக் கவனிப்போம். பார்ப்பனரல்லாதார் ஸ்ரீகளைப் பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக இருக்க சட்டம் செய்து விடுவார்கள் என்று சொன்னதில் என்ன தப்பு. இதற்கு முன்னமே அந்த சட்டம் அமுலில் இருக்கிறதை இவர்கள் அறிந்தும் இன்றுதான் இதை நாயக்கர் சொல்லக் கேட்டவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள். இந்து உலகத்தில் பார்ப்பனர்...

தேர்தல் படிப்பினை 0

தேர்தல் படிப்பினை

இவ்வாரம் சென்னையில் நடந்த முனிசிபல் தேர்தல்களில் பார்ப்பனர் கட்சிக்கு இரண்டு ஸ்தானங்களும், பார்ப்பனரல்லாத கக்ஷிக்கு ஒரு ஸ்தான மும், இரண்டு கட்சிக்கும் பொதுவான கக்ஷி என்கிற சுயேச்சைக் கட்சி என்பா ருக்கு ஒரு ஸ்தானமும் கிடைத்திருக்கிறது. பொதுப்படக் கூறும்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு சென்ற மாத தேர்தலில் ஜயம் கிடைத்தது போல் பூரண ஜயம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இப் பூரண ஜயம் பெறாததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியாரின் அளவுக்கு மீறின நம்பிக்கையே அல்லாமல் பார்ப்பனக் கட்சியின் சாமர்த்தியமும் செல்வாக்கும் அல்லவே அல்ல. அம்மன் கோவில் வார்டில் ஜயம் பெற்ற சுயேச்சைக் கட்சி என்று சொல்லிக் கொண்டவராகிய டாக்டர் ஆசீர்வாத நாடார், தான் பார்ப்பனரல் லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்றும் பார்ப்பனக் கட்சி யாகிய சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல வென்றும் தன்னையே ஜஸ்டிஸ் கட்சி அபேக்ஷகராய் நிறுத்தும்படியும் எவ்வளவோ தூரம் கேட்டுக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியார் கவனியாமல்...

அரசியல் புரட்டுக்குச் சாவுமணி 0

அரசியல் புரட்டுக்குச் சாவுமணி

அரசியலில் பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு இடையூறாய் செய்துவரும் சூழ்ச்சிகளையும் பிரசாரங்களையும்பற்றி சென்ற வாரம் பார்ப்பனீய போக்கிரித்தனம் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்ததோடு சென்னை மந்திரிகள் நடுநிலைமை வகிப்பதன்மூலம் பார்ப்பனரல்லாதாரின் நலத்திலும் சற்று கவலை ஏற்படுவதால் அவர்களைப்பற்றி இப்பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் எவ்வளவு தூரம் விஷமமும் பொய்யும் கலந்த சூழ்ச்சிப் பிரசாரம் செய்கின் றார்கள் என்றும் எடுத்துக் காட்டி அது சரியா தப்பா என்பதற்கும் பல உண்மைகளை வெளியிட்டிருந்தோம். அன்றியும் கடைசியாக எது வரையில் தற்கால மந்திரிகளை இப்பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் வைகின் றார்களோ அது வரையில் அம் மந்திரிகளை அவர்களிடமிருந்து பார்ப்பன ரல்லாதார் நன்மைக்கு ஆன காரியங்களை பெற ஆதரிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் கடமை என்றும் எழுதியிருந்தோம். அது போலவே இவ்வாரம் மந்திரிகளின் தஞ்சை, திருச்சி, கடலூர் ஜில்லா சுற்றுப் பிரயாணங்களில் மந்திரிகளுக்கு பொது ஜனங்கள் நடத்திய வரவேற்புகளும் நமக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. எது காரணம் பற்றியென்றால்,...

இந்துமத பிரசாரம் 0

இந்துமத பிரசாரம்

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைகளையும் கற்பனை செய்து அவற்றை பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர் கள் உடைய பல கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும் துதிபாடுவதுமே சைவ வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில்...

பார்ப்பனீய போக்கிரித்தனம் 0

பார்ப்பனீய போக்கிரித்தனம்

சென்ற ஒரு மாத காலமாக பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் வாலைப் பிடித்து வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும் ஒரே அடியாய் சற்றும் அறிவு, மானம், வெட்கம் இன்றி பார்ப்பன ரல்லாதார் கக்ஷியையும் மந்திரிகளையும் வசைபாடும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல் வெளியிடங்களில் உள்ள பார்ப்பனர்களும் அவர்களிடம் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் பார்ப் பனரல்லாத வயிற்றுப் பிழைப்பு தேச பக்தர்களும் இதையே பின்பற்றிக் கொண்டு ஆங்காங்கு கூட்டம் போட்டது போலவும், மந்திரிகளையும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியையும் கண்டித்து தீர்மானங்கள் செய்தது போலவும், மந்திரிகளை ராஜீனாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போலவும் பலவித பித்தலாட்டத் தீர்மானங்களைச் செய்ததாக பத்திரிகைகளில் எழுதி விடுகின்றார்கள். “மந்திரிகளின் துரோகம்” என்றும் “தேசத்துரோகம்” என்றும் மற்ற பல இழிவான வார்த்தைகளை போக்கிரித்தனமாக எழுதி பாமர மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள். எனவே இவர்கள் வையும் இந்த மந்திரிகள் யார் என்றும், எங்கிருந்து வந்தவர்கள் என்றும், எந்த கக்ஷியைச் சேர்ந்தவர்கள்...

தென் இந்திய பௌத்தர் மூன்றாவது மகாநாடு 0

தென் இந்திய பௌத்தர் மூன்றாவது மகாநாடு

தலைவரே! தாய்மார்களே! அன்பர்களே! இன்று என்னை மதம் என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அக்கட்டளையை சிரமேற்கொண்டு என் அறிவிற்கெட்டிய சில முக்கிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் அப்படியே நம்பி ஒப்புக்கொள்ள வேண்டு மென்றோ நான் ஓர் பெரிய அறிவாளி, ஆராய்ச்சிக்காரன் என்றோ சொல்ல வரவில்லை. நான் சொல்வதை நன்காராய்ந்து உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதை எடுத்துக்கொண்டு சரியல்ல வெனத் தோன்றுவதை ஒதுக்கி விடும்படிதான் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் பெரிய சீர்திருத் தக்காரனும் உபதேசக்காரனுமல்ல. ஆனால் என் அறிவுக்கெட்டிய வரை தீயவைகளாகத் தோன்றுவதைக் கண்டித்து நல்லவைகளை எடுத்துக் காட்டி பொது ஜன உபயோகமான துறையில் செலவிட வேண்டுமென்பது தான் என் முக்கிய நோக்கமும் விருப்பமுமாகும். என்னுடைய அறிவுக்கு எது தீய தென்றும், எது ஒழிந்துபட்டு மறைந்தொழிய வேண்டுமென்றும் பட்டிருக் கின்றதோ அதனைப் பல தலைப்புகளின் கீழ் பல விடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகின்றேனேயன்றி வேறல்ல....

அலசந்தாபுரத்தில் சொற்பொழிவு 0

அலசந்தாபுரத்தில் சொற்பொழிவு

சகோதரர்களே! நான் இன்றைய தினம் போல் என்றைக்கும் சந்தோஷமாயிருந்ததில்லை. இன்றைய தினம் தான் என் வாழ்நாளில் ஓர் சுபதினமாகும். நான் உழைத்த உழைப்பின் பலனாக இன்று நடந்த இந்த ஒரு காரியமே என்னைச்சந்தோஷத்தில் அமிழ்த்திவிட்டது. இந்த மாதிரி ஒருவராவது நான் சொல்வது சரியென்று பட்டு தமது வாழ்க்கையை சுயமரியாதையில் திருப்பி அந்திய காலத்திலாவது பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்து நல்ல விஷயத்தைச் செய்ததை நோக்க நான் செய்து வரும் எல்லா ஊழியத்திற்கும் இந்த ஒரே கைமாறு போதுமென நினைக்கிறேன். இந்த மாதிரி அனுபவத்தில் காட்டக்கூடிய உணர்ச்சி அன்பர்கள் அவரவர்கட்கே உண்டாகி விட்டால் என் போன்றோர் உழைப்பில்லாமலேயே நம் மக்கள் சுயமரியாதையைப் பெற்றுவிடுவார்கள். எனக்குப் பல வேலைகளும் உடல் நலிவும் இருந்தபோதிலும் உங்கள் அழைப்பிற்கு நான் மிகவும் சந்தோஷத்தோடு இங்கு வந்திருக்கிறேன். இவ்வளவு பெரிய விசேஷக் கூட்டங்களுடனும் உணர்ச்சியுடனும் இக் காரியம் நடைபெறுமென்று நான் நினைக்கவேயில்லை. நான் 50 கிராமங்க ளுக்குச் சென்று செய்ய...

பள்ளிக் கூடத்தில் புராண பாடம் 0

பள்ளிக் கூடத்தில் புராண பாடம்

– சித்திரபுத்திரன் உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன் : எனக்கு தெரியவில்லையே சார். உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. “பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான்” என்கின்ற பழமொழி கூட நீ கேட்டதில்லையா மடையா? பையன் : நான் கேட்டதில்லை சார். ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணு வின் படுக்கையென்றும் அந்த விஷ்ணு ராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேஷன் லக்ஷ்மணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது. உபாத்தியாயர் : ஆமாம் அந்த ஆதிசேஷன் தான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா? பையன் : இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்………….. உபாத்தியாயர் : என்ன சந்தேகம் சீக்கிரம் சொல்....

துருக்கியில் மாறுதல் 0

துருக்கியில் மாறுதல்

துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமாற வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற்காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலா பத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க – மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து – அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 08.04.1928

தர்மத்தின் நிலை 0

தர்மத்தின் நிலை

நாட்டுக் கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக்கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப்படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பன ரல்லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர்களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள்தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தபட நியாயமிருப்பதாகவும் தெரியவில்லை....

ஏற்றுக்கொண்டோம் 0

ஏற்றுக்கொண்டோம்

திராவிடன்’ பத்திரிகையின் நிர்வாகத்தை நாம் ஏற்றுக் கொள்ளுவதா என்கின்ற விஷயத்தைப் பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தை கேட்டிருந்தது வாசகர்களுக்குத் தெரியும். அதற்கு பதிலாக சுமார் 500 கனவான்களுக்கு மேலாகவே ‘திராவிடனை’ ஒப்புக் கொள்ளும் படிக்கு எழுதினதுடன் தங்கள் தங்களால் கூடுமான உதவியைச் செய்ய முன்வருவதாக வாக்குத்தத்தமும் செய்தார்கள். அதை அனுசரித்து சென்ற ஆவணி -µ 26-தேதி ‘குடி அரசில்’ ‘சென்னைக்குச் செல்கின்றோம்’ என்பதாக ஒரு தலையங்கம் எழுதி அதன் கீழ் ‘திராவிடனை’ நடத்துவதில் நமது கொள்கை இன்னது என்பதையும் விளக்கியிருக்கின்றோம். அதாவது, ‘திராவிடன்’ கொள்கைகள் ‘குடி அரசு’ கொள்கைப்படியேதான் இருக்கும். “குடி அரசின்” கொள்கைகள் யாவரும் அறிந்திருப்பார்க ளென்றே நினைக்கிறோம். அதாவது:- பார்ப்பனரல்லாதாரை அழுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில் ஆயுதங்களாக இருக்கும் அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் அடியோடு அழிப்பதுடன் பார்ப்பனீயத்தையும் ஒழித்து மக்களுக்கு சுயமரியாதை உண்டாகும்படி செய்வது என்பதுதான். இதற்கு ‘திராவிடன்’ சொந்தக்காரர்கள் சம்மதிக்காதபோது...

உத்தியோகம் பெறுவது தேசத்துரோகமல்ல அதுவே சுயராஜ்யம் 0

உத்தியோகம் பெறுவது தேசத்துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்

தலைவர் அவர்களே! சகோதரர்களே!! நான் நேற்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டு மதுரைக்குப் புறப்பட்டு செல்லும்பொழுது ஸ்ரீ திருமலைசாமி செட்டியார் ஸ்டேஷனில் வற்புறுத்தலுக்கிணங்கி இங்கு பேசுவதாக ஒப்புக்கொண்டேன். நான் இன்று பேசுவதாகக் குறிப்பிட்டுள்ள விஷயம் ‘சட்ட அங்கத்தினரும் மந்திரிகளும்’ என்பதாகும். நான் இப்பொழுது மந்திரிகளைப் பற்றி பேசுகிறேன். பின்னர் முன்னைய பொருளை விளக்குவேன். சென்ற தேர்தலில் அதிக அங்கத்தினரைக் கொண்டதாக வெற்றி பெற்றது சுயராஜ் யக் கட்சி. அவர்கள் பொது மக்களிடத்திலே ஓட்டு பெற்ற காலத்தில் என்ன வாக்குறுதி செய்தார்கள்? நாங்கள் அதிகார வர்க்கத்தை ஒரேயடியாய் எதிர்ப் போம். மந்திரிசபையை எந்த காரணத்தை முன்னிட்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம், இரட்டையாட்சியைக் கலைப்போம், சுயராஜ்யத்தை விரைவில் வாங்கித் தருவோம் என்று ‘கர்ச்சித்து’ உட்புகுந்தார்கள். எனவே, இவர்கட்கு மந்திரிசபையில் வேலையில்லாது போய்விட்டது. இரண்டாவதாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சியார் முழு ஓட் பலமின்மையால் ஒப்புகொள்ள மறுத்து விட்டனர். இவர்கள் எங்களுக்கு ஓட் வழங்கி பெரும்பான்மையாய் அனுப் பினால் மந்திரி சபையை...

பாலிய விவாகம் 0

பாலிய விவாகம்

குழந்தை : என்னடி அம்மா நேற்று அவன் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்? தாயார் : அடி பாவி அது நகையல்ல ; தாலி அதை ராத்திரி அறுத் தாய்விட்டது. குழந்தை : எனக்குத் தெரியவில்லையே. தாயார்: ராத்திரி 11 -மணி இருக்கும் நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய். ஆதலால் உனக்குத் தெரியவில்லை. குழந்தை : அதை ஏன் அறுத்தார்கள் தாயார்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்துபோய் விட்டா னல்லவா. அதனால் அறுத்துவிட்டார்கள். குழந்தை : அவன் போனால் போகட்டுமே. வேறு யாரையாவது கட்டச் சொல்வதுதானே, அதையேன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய், அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன். ஊ! .ஊ!! .ஊ!!! குடி அரசு – உரையாடல் – 01.04.1928

“தமிழ்நாடு” பத்திரிகையின் புரட்டு 0

“தமிழ்நாடு” பத்திரிகையின் புரட்டு

‘தமிழ்நாடு’ பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதர வாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியிருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘தமிழ்நாடு’ தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப் பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல்லுவதும் இல்லை. ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டுவிட்டதால் சர்க்கார் 23.3.28ல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை இந்த இரண்டு வருஷ மாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத் திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கை களைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள். இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலுவின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின் கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங்...

சர். பாத்ரோ ஆச்சாரியார் 0

சர். பாத்ரோ ஆச்சாரியார்

சென்னை சட்டசபையில், பாலிய விவாகத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில் சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லுவோம். மனிதர்கள் அரசியலில் கரணம் போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்பவைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல்கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான்மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு. ஆனால் சமூக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம். சர்.பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர். உண்மையிலேயே அவருக்கு...

“ஆனால் இந்து மதத்தை ஒழித்துவிடுவதே மேல்” 0

“ஆனால் இந்து மதத்தை ஒழித்துவிடுவதே மேல்”

சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம் இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் “சென்னை பிரதிநிதிகளான” அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும் சட்டசபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்துகிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும் போது இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதன தர்மிகளின் பிரதிநிதியாகவே தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக்கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக்கூடாதென்றும் அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசினபோது அதற்கு பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரண் சரமுன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம் மசோதாவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம் மசோதாவை ஆதரிக்கிறார் கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோதாவை எதிர்ப்பதன் இரகசியம் தனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந் திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீ ஆச்சாரியார்...

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் ‘ஞானோதயம்’ 0

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் ‘ஞானோதயம்’

ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும் அவர்களது வால்களினுடையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத்தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார். முதலாவதாக மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ‘ஜஸ்டிஸ்’ கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜீனாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலை வைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போபவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப்பாளையம் ஜமீன்தாரிடம் 10000 ரூ. பொறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே...

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதைமனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்கீல் 0

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதைமனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்கீல்

தமிழ்நாட்டில் தற்காலம் தோன்றியிருக்கும் சுயமரியாதைக் கிளர்ச்சியின் பலனாக இந்துமத மென்பதைப் பற்றியும், அதற்காதாரமாயுள்ள வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் என்பனவற்றைப் பற்றியும், வருணம், தர்மம் என்பனவற்றைப் பற்றியும் மக்களுக்குள் பரபரப்புண்டாகி அவற்றைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தலும், அவற்றின் புரட்டுகளை வெளியாக்கி தைரியமாய் கண்டித்தலும், அவற்றால் ஏற்பட்ட கொடுமைகளை ஒழிக்க ஆங்காங்கு தீவிரப் பிரசாரம் செய்தலும், கொடுமைக்கு ஆதரவளிக்கும் ஆதாரங்களைத் தீயிட்டுக் கொளுத்துதலுமான பிரசாரங்கள் மும்முரமாய் நடப்பதைக் கண்டு பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வுக்கே ஆபத்து வந்தெனக் கருதி இவைகளுக்கு விரோதமாக எதிர் பிரசாரம் செய்வதும், பார்ப்பன ரல்லாதாரிலேயே சிலரை ஏவிவிட்டு இடையூறு செய்விப்பதும், வேறு மார்க்கத்தில் வாழ முடியாதவர்கள் இவ்வெதிர்ப் பிரசாரத்திற்கு ஆதரவ ளித்து வாழ்வதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்த விஷயமேயாகும். சிறிதுகாலமாய் ‘சுதேசமித்திரனும்’ ‘தமிழ்நாடும்’ ‘சுயராஜ்யா’வும் ‘ஹிந்து’வும் மற்றும் சில பார்ப்பன கூலிப் பத்திரிகைகளும் இவ்வேலையில் ஈடுபட்டுத் தீவிரமாய் எதிர்ப் பிரசாரம் செய்து வருவதும் யாவரும் அறிந்த...

இன்னுமா சந்தேகம்?  இரகசியம் வெளியாய் விட்டது 0

இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது

பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசீயத்தின் பேராலும் ஸ்ரீ வரத ராஜுலு போன்ற ஆசாமிகளை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பன ரல்லாதாருக்கு கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் ‘காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும்’ விரோதமாய் பொய்க்கால் மந்திரிகளை சிருஷ்டித்ததும் அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருஜூ கொடுக்க சமீபத் தில் சென்னை சட்ட சபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்க நாத முதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம். அவர் சொன்னதாவது “1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் கமிட்டிகளுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்”, இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23-3-1928 ²...

பெரிய அக்கிரமம் 0

பெரிய அக்கிரமம்

பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்கு பூணூல் போட்டு உபநய னம் செய்யப்பட்டதாம். இதற்காக பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம். ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயத்தினாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின் றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்த பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி...

பார்ப்பனரல்லாத பிரமுகர்களின்                 சுற்றுப் பிரயாணம் 0

பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் சுற்றுப் பிரயாணம்

இவ்வருட இறுதியில் நடைபெறப்போகும் இந்தியா சட்டசபை, சென்னை சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு கூடுமானவரை நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை அழுத்தி, பார்ப்பன ஆட்சியை நிலைநாட்ட பல வழிகளிலும் செய்து வரும் சூழ்ச்சிகள் நமது நாட்டில் அறியாதார் இருப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. ஆனாலும் பார்ப்பனரல்லாதாரில் சில சுயநலக்காரர்களையும் வயிறு வளர்க்க வேறு வகையில்லாதவர்களையும் ஆயுதமாகக் கொண்டு பாமர மக்களை ஏமாற்ற நமது பார்ப்பனர் செய்து வரும் தந்திரங்களைக் கண்டு நாம் பயப்படாம லிருக்கவும் முடியவில்லை. உதாரணமாக, தமிழ் நாட்டில் இந்தியா சட்டசபை தேர்தலுக்கும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் காங்கிரசின் பேரைச் சொல்லிக்கொண்டும் சுயராஜ்யம் பெறுவதற் கென்றும் நிறுத்தப் பட்டிருக்கும் ஆசாமிகளை கவனிக்கும் போது பாமர ஜனங்கள் இதை நம்பி இந்த ஆசாமிகளுக்கு ஓட்டுக் கொடுத்து சட்டசபைகளுக்கு அனுப்பி விட்டால் கண்டிப்பாய் பார்ப்பன ஆட்சிக்கு வழி ஏற்பட்டுவிடுமென்பதில் சந்தேக மில்லை. எப்படியெனில் சென்னை முதல் திருநெல்வேலி வரை யிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்கள் சற்றேறக்குறைய எல்லோருமே...

யார் வார்த்தைகள் கடினம்? 0

யார் வார்த்தைகள் கடினம்?

பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளை கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம் மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் “மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலை களை சம்பாதிப்பார்கள்” என்று சொன்னாராம். இது யோக்கியமான வார்த் தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர் களாவது கண்டித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர்களுடைய இம் மாதிரி வார்த்தை களை கண்டித்தாரா என்று கேட்கின்றோம். ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளை கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீ வரத ராஜுலுவுக்கும் “தமிழ்நாடு”க்கும் “பெண் ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள்” என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்கவில்லையா? சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜிகளில் யாருக்காவது மேக வியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசீயவாதிகள் உபயமேயாகும்....

உஷார்!  உஷார்! மண்டையிலடியுங்கள்! 0

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்!

சென்னையில் பார்ப்பனீயத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதுதான் “கிராமப் புனருத்தாரண வேலை ஸ்தாபனம்.” நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து ‘இந்திய ஐக்கிய ஒற்றுமை சங்கம்’ என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது. அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம ஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியே யாகும். தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு கொடிய...

ஓர் வேண்டுகோள் 0

ஓர் வேண்டுகோள்

பார்ப்பனரல்லாதாருக்கு ஒர் வேண்டுகோள் என்னும் தலைப்பின் கீழ் 25.7.26 ² ‘குடி அரசு’ தலையங்கம் எழுதி பார்ப்பனரல்லாதாரின் சுயமரியா தையைக் காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவப்படுத்தவும், பொது அரசியல் உரிமையை எல்லாச் சமூகமும் சமமாய் அடைய இந்திய மக்க ளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறவும், ‘குடி அரசி’ன் தத்துவங் களை வைத்து சில திட்டங்களை வகுக்கவும், அவற்றை தமிழ் மக்கள் சேர்ந்து கட்டுப்பாடாய் நிறைவேற்றவும், ஒரு அறிக்கை வெளியிடவும், அவ்வறிக் கையில் பல கனவான்களின் கையொப்பங்களையும் சேர்த்து வெளியிட வேண்டுமென்ற விருப்பங் கொண்டு யார், யார் இத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறார்களோ, அக்கனவான்கள் பெயரை அவ்வறிக்கையில் வெளியிட வேண்டும். ஆகையால் தங்கள் தங்கள் பெயரையும் முழு விலாசத் தையும் சம்மதத்தையும் எழுதியனுப்புமாறு வேண்டிக் கொண்ட தில் இதுவரை சுமார் ஆயிரம் பெயர்களுடைய கையெழுத்தும் சம்மதமும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இன்னும் இத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளும் கனவான்கள் தயவு செய்து சீக்கிரத்தில்...

மலையாளக் குடிவார மசோதா 0

மலையாளக் குடிவார மசோதா

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக் கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலையாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதையும் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளு கிறோம். குடி அரசு – சிறு குறிப்பு – 05.09.1926

“R E V O L T”    ‘ரிவோல்ட்’ 0

“R E V O L T” ‘ரிவோல்ட்’

ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியும் கே. நடராஜன் போன்றவர்களும் மற்றுஞ் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரசாரத்திற்கு விரோத மாக ஆங்கிலத்தில் பத்திரிகைகள் மூலியமாயும், வியாசங்கள் மூலியமாயும் பிரசாரம் செய்கிறபடியாலும், நமது பிரசாரமும் பத்திரிகையும் தமிழிலேயே இருப்பதாலும் அது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போக மார்க்க மில்லாமலிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு வாரப் பத்திரிகை ‘குடி அரசு’ கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதாக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிகைக்கு ‘ரிவோல்ட்’ (சுநஎடிடவ) என பேர் கொடுப்பதென்றும் தீர்மானித்திருக்கிறோம். அப்பத்திரிகைக்கு கௌரவ ஆசிரியர்களாக இருக்க சில ஆங்கிலங் கற்ற நண்பர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பல அறிஞர்கள் அரிய விஷயதானம் செய்யவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்பத்திரிகையை தற்கால ‘குடி அரசு’ அளவில் 8 பக்கம் கொண்டதாகவும் வருஷ சந்தா ரூபாய் 3 ஆகவும் வைத்து வெளிப் படுத்தத் தீர்மானித்துள்ளோம். சமீபத்தில் வெளியிட முயற்சித்துக் கொண்டி ருக்கிறோமாதலால் அன்பர்கள் சந்தாதாரர்களாய்ச் சேரவும் மற்றும் கூடிய உதவிகள் செய்யவும் முன்வர...