மறுபடியும் பஹிஷ்காரக் கூச்சல்
சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பதாக மறுபடியும் கூச்சல் போட கிளம்பிவிட்டார்கள். இக்கூச்சலின் உள்கருத்து அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழிதேடவேயாகும். இதற்காகவே இச்சூழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதற்காகவே பார்ப்பனர் அல்லாதாரிலும் சில தேசீய வயிற்றுப் பிழைப்பு ஆசாமிகளையும் கஞ்சிக்கு வேறுவழியில் பிழைக்க வகையில்லாத ஆசாமி களையும் பிடித்து கூலி கொடுத்து சைமன் பகிஷ்காரம் என்னும் பேரால் பார்ப்பனக்கக்ஷி ஆதிக்கப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதார் கக்ஷிகளை வைது அதன் முற்போக்குக்கு இடையூறான பிரசாரமும் நடத்த பார்ப்பனர் கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கும் ஒரு வகுப்பாரின் சுயநலம் என்பதற்கும் பல ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி வந்தோம். அவைகளில் ஒன்றுக்காவது எந்த ‘தேசீயவாதி’யாவது ‘தேசீய பத்திரிகையையாவது அல்லது பார்ப்பனர்களின் தேசீயவாதியாவது, தேசீய பத்திரிகையாவது இதுவரை பதிலுரைத்தவர்கள் அல்ல. நமது கேள்விகளை மூடி வைத்துக் கொண்டு பாமர மக்களின் மூடத்தனத்தை...