Author: admin

தொழிலாளர் வேலை நிறுத்தம் 0

தொழிலாளர் வேலை நிறுத்தம்

தென் இந்திய ரயில்வெ தொழிலாளர் வேலை நிறுத்தமானது தொழிலாளர்களுக்கு பலன் கொடுக்காமல் போனதாக சிலர் சொல்வதானாலும் அந்த வேலை நிறுத்தம் பல “தலைவர்”களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் கொழுத்த பலனைக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றே சொல்லுகின்றோம். என்னவென்றால் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல நாளாகவே எச்சரிக்கை செய்தும் ரயில்வே அதிகாரி கள் இணங்காமல் பிடிவாதமாயிருப்பதற்கும், வேலைநிறுத்தம் ஏற்பட்ட பிறகும் வேலைநிறுத்தத்திற்கு கேடு நேரிடுவதற்கும் உண்மையற்ற சமாசாரங் களை வெளிப்படுத்தியும், தொழிலாளர்கள் மீது பழிசுமத்தியும் எழுதிவந்த தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நல்ல ஆதாயம் ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டும். ரயில்வே அதிகாரிகளும் தங்கள் அனுதாபிகளுடனும் சில பத்திரிகைக்காரர்களுடனும், சில தலைவர்களுடனும் இது விஷயமாய் தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டுதான் வேலை நிறுத்தத்தைச் செய்து தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டார்களே ஒழிய வேறில்லை. இந்த உண்மையானது ஏஜண்டின் முரட்டுத்தனத்தாலேயே ஒருவாறு ருஜுவாகாமல் போகாது. அதாவது திருவாளர் கோவை சி.எஸ். ரத்தின சபாபதி...

மாளவியாவின் பித்தலாட்டம் 0

மாளவியாவின் பித்தலாட்டம்

திரு.பண்டிதர் மதன்மோகன மாளவியா சென்னை மாகாணத்திற்குள் கால் வைத்தது முதல் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி ஜனங்களை ஏமாற்றி வந்ததும் அந்த புரட்டுகளை பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களும் வெளிப்படுத்தியதும் “மித்திரனிலும்” “திராவிடனிலும்” பார்த்திருக்கலாம். அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்கிறவர்கள் போவதற்கு இந்து சாஸ்திரங்கள் இடங்கொடுக்கிறதென்று சொல்லிக் கொண்டே வந்துவிட்டு தாம் அதிக சாஸ்திரம் பார்த்திருப்பதாயும் சொல்லிவிட்டு கடைசியாக சென்னையில் 22 தேதி கூடிய சாஸ்திரிகள் கூட்டமொன்றில் சிக்கி தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கு சாஸ்திரத்தில் இடமில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாராம். எனவே திரு.மாளவியாவின் பித்தலாட்டம் பார்ப்பனர்களின் அசல் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணமாகும். குடி அரசு – கட்டுரை – 26.05.1929

பூரண சுயேச்சை இயக்கமும்  திரு. சீனிவாசையங்காரும் 0

பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும்

திரு.எஸ். சீனிவாசையங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும்விட தீவிரமாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத் தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப் படுத்திக் கொண்டார். கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபாஷ் சந்திரபோசும் சமீபத்தில் ருஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவாரிலால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள். ஆனால் திரு.சீனிவாசையங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்குமுறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை...

மதரா° கவர்ன்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும் 0

மதரா° கவர்ன்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும்

1921´ ஆக°ட் மாதம் 5 ² சென்னை சட்டசபையில் கனம் திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் கொண்டு வந்து பா° செய்த தீர்மானங் களுள் முக்கியமானது சென்னை கோட்டைக்குள் கொரடுபோட்டுக் கொண்டிருக்கிற பிராமணர்களுடைய கோட்டையை தகர்த்து, ³ கோட்டை யாகிய கவர்மெண்டு ஆபீசாகிய கோட்டைக்குள் பிராமணரல்லாதாரும் சூப்பிரண்டுகளாகவும் உயர்தர கிளார்க்குகளாகவும் செய்விக்க வேண்டு மென்பதும், அதுவும் மூன்று வருஷ காலத்திற்குள் நூற்றுக்கு ஐம்பதுக்கு குறையாமல் பிராமணரல்லாதாரை ³ வேலைகளில் நியமிக்க வேண்டு மென்பதும், அந்த கவர்ன்மெண்டு ஆபீசில் இருக்கும் பிராமணருக்குப் பிரண்டுகள், கிளர்க்குகள் வெளிப்படுத்தப்படவேண்டு மென்பதுமான இந்த தீர்மானத்துக்கு என்ன மதிப்பு தந்தனர் கவர்ன்மெண்டார்? இந்த நிலைக்கு யார் உத்தரவாதம்? பிராமண உத்தம சீலர்களும். தீர்மானத்தை நிறைவேற்றக் கூடிய மனத்திடமில்லாத மினி°டர்களும் அல்லவா? இதில் அதிக அக்கிரம முடையது. சர்.சி.பி. ராமசாமி அய்யருடைய லா டிபார்ட்டுமெண்டு ஒரு பிராமண சூப்பிரண்டு கூட கவர்மெண்டு ஆபீசை விட்டு வெளிப்படுத்தவே இல்லை. பிராமணர்களுக்கே...

தேர்தல் கவலை  மூர்த்திக்கும் – வாசருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன் 0

தேர்தல் கவலை மூர்த்திக்கும் – வாசருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

வாசர் : என்ன மூர்த்தி, இந்த தடவை தேர்தலில் நமது ஜபம் செல்லாது போல் இருக்கின்றதே. மூர்த்தி : எதனால் இவ்வளவு சந்தேகப்படுகின்றீர்கள். வாசர் : எதனால் என்று கேட்கின்றாயே, ஒவ்வொன்றும் நீ நேரில் பார்க்கவில்லையா? நாம் போகின்ற இடங்களில் எல்லாம் மீட்டிங்கு போடக் கூட முடியாதபடி கலவரங்கள் நடக்கின்றதே; எவ்வளவோ கஷ்டப்பட்டு மிதவாதிகளிடம் இருந்த மேடைகளை நமது சுவாதீனம் செய்தோம். பிறகு அதை ஒத்துழையாமைக்காரர்கள் வந்து பிடுங்கிக் கொண்டார்கள். அதற்கும் எவ்வளவோ பாடுபட்டு அவர்களையும் விரட்டி அடித்து அவர்களிடமிருந்து சுவாதீனம் செய்து கொண்டோம். கடைசியாக அது ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் சுயமரியாதைக்காரரிடமல்லவா போய்விட்டது. மூர்த்தி: அதென்ன ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் என்று அவர்களுக்காக வருத்தப்படுகின்றவர் போல் பேசுகின்றீர்களே. வாசர் : ஜஸ்டிஸ்காரரிடம் போகாததால் எனக்கு வருத்தமில்லை. ஜஸ்டிஸ்காரரிடம் இருந்தால் நாம் அவர்களை சுலபத்தில் விரட்டியடித்து பிடுங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்களும் நம்மைப் போலவே ஓட்டர்களிடம் போய் பொய்யும் புளுகும் அடித்து...

திரு. கண்ணப்பர் 0

திரு. கண்ணப்பர்

“திராவிடன்” பத்திராதிபர் திரு. கண்ணப்பர் அவர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டியது பற்றி கைது செய்யப்பட்ட விபரம் முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம். திரு. கண்ணப்பர், பார்ப்பனரல்லாதார் மக்களின் நலத்திற்கு என்று இத்தமிழ்நாட்டில் திருவாளர் நாயர் பெருமானும், தியாகராய வள்ளலும் தோற்றுவித்த “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்” என்னும் பார்ப்பனரல்லாதார் சங்கம் துவக்கப்பட்டது முதல் சுயநலம் கருதாது தொண்டாற்றி வருபவர். அச்சங்கத்தில் உழைத்து வந்த மக்களில் திரு. கண்ணப்பர் போன்று தன்னலம் கருதாமலும் உழைத்ததற்காக கூலி கேட்காமலும் உழைத்தவர்களைக் காண்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். திரு. கண்ணப்பர் வெலம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராயினும் அவருக்கு ஜாதிமத பேதமோ மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சியோ ஒரு சிறிதுமில்லாத சமரசவாதியாவார். அவருக்கு இன்றைய வயது முப்பத்துஒன்றேயாகும். உறுதியும் தைரியமும் பெற்ற வீரர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சியுள்ளவர். அவரது 22, 23 வது வயதிலே பிரசாரத்தில் புகுந்தவர்....

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால்  “ஆண்மை” அழிய வேண்டும் 0

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் “ஆண்மை” அழிய வேண்டும்

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில், அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள் ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும் சமூகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர் திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக...

பார்ப்பனீயம் 0

பார்ப்பனீயம்

பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் தங்கள் ஆதிக்கத்திற்கு ஊனம் வராமல் காப்பதில் கவலை எடுத்துக் கொண்டு அதற்காக எந்ததெந்த வகையில் மக்களை ஏமாற்றலாமோ அந்தந்த வகை யில் எல்லாம் இன்னும் துணிவுடன் வேலை செய்து கொண்டேதான் இருக்கி றார்கள். ஆதலால் இனி அதைப் பற்றியும் சற்று கவனம் செலுத்துவோம். என்னவெனில், உதாரணமாக, சென்றவாரத்தில் சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள உத்திராதி மடம் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன மடத்தில் வைத்துப் “பிராமணர்கள் கூட்டம்” என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஐகோர்ட் மாஜி ஜட்ஜியும் இப்போது வக்கீலுமான திரு. வி.வி. சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் மற்றொரு ஐக்கோர்ட்டு வக்கீல் என். சீனிவாசாச்சாரியார் என்பவரால் “பிராமணர்களின் தற்கால நிலைமை” என்பது பற்றி ஒரு உபன்யாசம் செய்யப்பட்டிருக்கின்றது. அது வைதீகப் பார்ப்பனக் கூட்டம் என்றாலும் எல்லா வகையான பார்ப்பனர்க ளுமே அக் கூட்டத்தில் கூடி இருந்திருக்கின்றார்கள். அந்தச் சமயத்தில் அக்கிராசனரும் உபன்யாசகரும் ஆகிய இருவர்களும்...

உங்களுக்கு  எது வேண்டும் வகுப்பு வாதமா? சமூக வாதமா? 0

உங்களுக்கு எது வேண்டும் வகுப்பு வாதமா? சமூக வாதமா?

வகுப்பு வாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும் சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. காங்கிரசென்றும் தேசீயமென்றும் சுயராஜ்ஜியமென்றும் நமது பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும், கூலிகளும் போடும் கூச்சல் கள் எல்லாம் பார்ப்பன சமூக ஆதிக்கத்திற்கெனச் செய்யப்படும் சூழ்ச்சி என்றும், அவர்கள் உட்கருத்துக்கள் எல்லாம் எப்படியாவது பார்ப்பன ரல்லாதாரை வகுப்புவாதிகள் என்று சொல்லி அவர்களுடைய நிலைமை யைத் தாழ்த்தி அவர்கள் தலையெடுக்க ஒட்டாமல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அல்லவென்றும் பார்ப்பனரல்லாதார்களில் வேறுவழியில் அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிதேடிக் கொள்வதற்கு முடியாதவர்களும் பார்ப்பனர்களுக்கு கூலிகளாயிருந்தும் அடிமைகளா யிருந்தும் சமூகத் துரோகம் செய்தாலொழிய பிழைக்கவும் பெருமை பெறவும் முடியாதவர்களுமே பெரிதும் அவர்கள்கூட இருக்கின்றார்களே ஒழிய மற்றபடி யோக்கியமும் பொறுப்பும் சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ளவர்களில் எவரும் பார்ப்பனர்கள்கூட இல்லை என்றும் நாம் பலதடவை களில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம்....

கேரளத்தில் சுயமரியாதைப் பிரசாரம் 0

கேரளத்தில் சுயமரியாதைப் பிரசாரம்

சகோதரர்களே! இங்கு கூடியிருக்கும் உங்களில் பெரும்பாலோர் எனக்குப் பழைய நண்பர்களாகவே காணப்படுகின்றீர்கள். வியாபார முறையில் இந்த ஊர் சுமார் 30 வருஷத்திய பழக்கமும் அதிகமான பரஸ்பர விஸ்வாசமும் உள்ள ஊராகும். நான் வியாபாரம் நிறுத்திய இந்த 10 வருஷ காலத்திற்குள்ளும் இந்த ஊருக்கு பல தடவை வந்து பல விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கின்றேன். ஒத்துழையாமை பற்றியும் தீண்டாமை விலக்கு விஷயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை தெருவில் நடக்க விட வேண்டும் என்பது பற்றியும் இதே இடத்தில் பலதடவை பேசியிருப்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். சுமார் இரண்டு வருஷத்திற்குள்ளாக இந்த ஊரில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல்பாத்தியில் பார்ப்பனர்கள் குடி இருக்கும் வீதிகளில் ஈழவர்கள் தீயர்கள் என்று சொல்லப்பட்ட சகோதரர்கள் நடக்க பாத்தியம் ஏற்பட்டிருப்பதும் கடைவீதியில் செரமாக்கள் என்னும் மக்கள் நடக்கவிடப்பட்டிருப்பதும் ஒரு பெரிய மாறுதல் என்று சொல்லக் கூடுமானாலும் இன்னமும் அநேகக் காரியங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. சில இடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று...

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!!! 0

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!!!

முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நாம் எதிர்பார்த்தது போலவே தமது ஆதிக்கத்தில் உள்ள இலாக்காக்கள் மூலம் நமது பெண்மணிகளுக்கு மூன்றாவது பாரம் வரையில் இலவசமாய்க் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைந்து போற்றுவதுடன் மனமார வாழ்த்துகின்றோம். மற்றும் தீண்டாதவர்கள் என்பவர்களுக்கும் விதவைகள் என்பவர்களுக்கும் கல்வி விஷயத்தில் ஏதாவது உதவி செய்வதுடன் பெண்கள் உபாத்தியாயர் களாவதற்குத் தகுந்தபடி ஏராளமான போதனாமுறைப் பாடசாலைகளையும் ஏற்பாடு செய்யவேண்டுமாய் விழைகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 12.05.1929

மலையாளமும் மாளவியாவும் 0

மலையாளமும் மாளவியாவும்

தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசியலிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரசாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாக தனித்து வெளியில் புறப்பட்டு பிரசாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடை மேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமா யிருந்த காலம் வரையில்தான் செல்லாய்க் கொண்டு வந்தது. இப்போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செலாவணி ஆவதற்கில்லாமல் செல்லுமிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து “என்...

திருவாங்கூரில் ளு.சூ.னு.ஞ யோகம் சுயமரியாதை மகாநாடு  ஆலயப்பிரவேச மகாநாடு                 சுயமரியாதை கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன 0

திருவாங்கூரில் ளு.சூ.னு.ஞ யோகம் சுயமரியாதை மகாநாடு ஆலயப்பிரவேச மகாநாடு சுயமரியாதை கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன

இப்போது உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை என்பது ஆகாயத்திலிருந்தோ மக்கள் பிறக்கும்பொழுது தாய் வயிற்றிலிருந்தோ உண்டாய்விடவில்லை. மதத்தினாலும், கடவுளினாலும், கோவிலினாலும் வேத புராணங்களினாலுமே உண்டாயிற்று. தீண்டாமை ஒழிய வேண்டு மானால் அதை வலியுறுத்தும் மதங்களும் கடவுள்களும், கோவில்களும் அவற்றிற்கு ஆதாரமான வேத சாஸ்திர புராணங்களும் அடியோடு ஒழிந்தாக வேண்டும். இவைகளில் ஒரு சிறிது மீதி இருந்தாலும் மறுபடியும் அது வளர்ந்துவிடும். இதுவரையில் தீண்டாமையை ஒழிக்கப் பிரயத்தனப் பட்டவர்கள் யாரும் தீண்டாமைக்கு அஸ்திவாரமான காரியத்தை அறியாம லும், சிலர் அதைப் பற்றி அறிந்தும் கவலை கொள்ளாமலும், சிலர் வேண்டு மென்றே தெரிந்து மறைத்துவைத்தும் மக்களையும் ஏமாறச் செய்துவிட்டுப் போய் விட்டார்கள், இப்பொழுதும் சில போலித் தீண்டாமை விலக்கு பிரசாரக்காரர்கள் அதை வலியுறுத்தும் மதத்தையும் கோவிலையும் சாமி களையும் அது சம்பந்தமான ஆதார புராணங்களையும் வைத்துக் கொண்டே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உங்களை ஏமாற்றுகின்றார்கள். உதாரணமாக பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன்...

மூன்றாவது                                                  நாடார் வாலிபர் மகாநாடு 0

மூன்றாவது நாடார் வாலிபர் மகாநாடு

சகோதரர்களே! நமது நாட்டினுடைய முன்னேற்றத்தைக் கருதிய விஷயங்களிலே வாலிப மகாநாடுகளைப் பற்றி ஒருவிதமான அபிப்பிராய பேதமும் கிடையாது. ஏனென்றால் உலக முன்னேற்றத்திற்கே காரணம் வாலிபர்கள் தான். அதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவர். ஒவ்வொரு நாட்டிலும் பல வகையிலும் அடிக்கடி கஷ்டம் நிகழ்ந்திருக்கின்றது. அவை விடுதலைப் பெற சுயமரியாதை அல்லது விடுதலை உணர்ச்சி வாலிபர்களுக்கு ஏற்பட்டதின் மூலம் உலகத்தின் பெரும்பான்மையான நாடுகள் விடுதலை யடைந் திருக்கின்றன. இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளும் முன்னேறி வருகின்றன. ஏன் நமது நாடுமட்டும் தூங்குகிறது? வாலிபர்கள் கவலை எடுக்காததினால்தான். நாம் இதுகாறும் பாடுபட்டும் பிரயோஜனமில்லாமல் முன்னிருந்த நிலையில்தான் இருக்கின்றோம். எப்படி மற்ற நாட்டு வாலிபர்கள் தத்தம் நாடு முன்னேற உயிர்விட்டுக்கூட உழைத்தார்களோ அதுபோல் நமது வாலிபர்களும் உழைக்க முன் வரவேண்டும். சுயமரியாதை உணர்ச்சியை வாயளவில் மறுக்கின்றார்களேதவிர சுய மரியாதைக் கொள்கைகளையும் திட்டத்தையும் எல்லோரும் ஒப்புக் கொள் கின்றார்கள். சுயமரியாதை உணர்ச்சி தப்பிதமானது என்று சொல்லுகின்ற வர்கள் எவரும்...

நமது பத்திரிகை   ஐந்தாவதாண்டு 0

நமது பத்திரிகை ஐந்தாவதாண்டு

“குடி அரசு” அபிமானிகளே! நமது “குடி அரசு” தோன்றி நான்காவதாண்டு கடந்து, ஐந்தாவதாண் டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இற்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத் திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்டாற்றி வந்திருக்கும் விஷயம் நாம் எடுத்துக் காட்டாமலே அன்பர்கள் உணர்ந்திருக்கலாம். இதன் ஆசிரியராகிய யாம் சுமார் 30 ஆண்டு உலக வாழ்க்கை அனுபவம், அதாவது வியாபாரம், விவசாயம் அனுபவமும் சுமார் இருப தாண்டு பொது நலவுழைப்பு என்பதின் பேரால் அதாவது உள் ஊர் அக்கப்போர்கள், ஜில்லா பொதுநல சர்க்கார் சம்பந்தமில்லாத ஸ்தாபனங்கள், சர்க்கார் சம்பந்தமுள்ள ஸ்தல ஸ்தாபனம் முதலியவைகளில் நிர்வாக விஷய அனுபவமும் அரசர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் கூட்டுறவு அனுபவ மும், ஜமீன்தார்கள், பிரபுக்கள், ஏழைகள், காலிகள் ஆகியவர்களின் நெருங் கிய நேச அனுபவமும், இவைகளெல்லாம் அல்லாமல் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு துறவறம் கொள்ள எண்ணம்...

13-வது நாடார் மகாநாடு கொடியேற்றுவிழாச் சொற்பொழிவு 0

13-வது நாடார் மகாநாடு கொடியேற்றுவிழாச் சொற்பொழிவு

“இந்தக் கொடியில் குறிக்கப்பட்டிருக்கும் பெரியோர்களினாலேதான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்கள். மகாநாட்டில் சுயமரியாதை அடையக் கூடிய பல தீர்மானங்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். நாடார் சமூகத் திற்குத் தனி மகாநாடு எதற்கு என்ற சந்தேகம் கிளம்பலாம், இருந்தாலும் நாம் இதற்குப் பயப்படாமல் நமது மகாநாடுகளை நடத்த வேண்டும். இம் மாதிரி மகாநாடுகளில் நாமும் கலந்து கொண்டு அவர்களுக்குள் உள்ள கெடுதிகளை களைந்தெறிந்து சுத்தப்படுத்தி தேசத்தாருடன் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் கொள்கை. மகாநாடு வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்று நம்பி இக்கொடியினை உயர்த்துகின்றேன்.” குறிப்பு: 29.04.1929 ஆம் நாள் பிறையாற்றில் நடைபெற்ற 13-ஆவது நாடார் மாநாட்டில் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சொற்பொழிவு. குடி அரசு – சொற்பொழிவு – 05.05.1929

இந்திய சட்டசபை வர்த்தகத்                தொகுதிக்குத் தேர்தல் 0

இந்திய சட்டசபை வர்த்தகத் தொகுதிக்குத் தேர்தல்

இந்தியா சட்டசபைக்கு சென்னை வர்த்தகத் தொகுதிக்காக ஒதுக்கப் பட்ட ஸ்தானத்திற்கு கோவை வருணாச்சிரம ஐயங்கார் பார்ப்பனராகிய திரு. சி.வி. வெங்கிட்டரமண ஐயங்கார் அவர்களும் சென்னை பிரபல வியாபாரி யாகிய ஜனாப் ஜமால் மகமதுசாயபு அவர்களும் போட்டி போடுகின்றார்கள். திரு. அய்யங்காருக்கு அதிகமான பின்பலமும் ஆதரவும் ராஜா சர். அண்ணா மலைச் செட்டியார் அவர்களால் இருப்பதாகத் தெரியவருகின்றனது. இத் தொகுதியில் சுமார் 500 பேர் வரை நாட்டுக்கோட்டை நகரத்தார் கனவான்கள் ஓட்டர்களாயிருப்பதும் ராஜா சர். அவர்கள் வர்த்தக உலகத்தில் தக்க செல்வாக்குடையவராக இருப்பதுமே திரு.அய்யங்கார் அவரைப் போய் பிடித்ததற்கு முக்கிய காரணமாகும். திரு.ராஜா சர். அவர்களின் செல்வப் பெருக்கும் செல்வாக்கு வன்மையும் உலகத்தில் யாராலும் மறுக்கக்கூடிய தல்ல என்பதை நாம் வலியுறுத்திக் கூறுவோம். ஆனால் அதை மக்களுக்குப் பயன்படும் முறையில் உபயோகப்படுத்தாமல் எதேச்சாதிகார வழியில் உபயோகிக்கத் துணிந்து கொண்டே போனால் யாரால் தான் சங்கடப்படாமல் இருக்க முடியும்? அவர்களது சிதம்பரம் காலேஜ் பார்ப்பன...

ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை 0

ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் குடியானவன் : என்ன சார், தங்களிடம் தனித்து சற்று நேரம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால் நாம் இருவரும் வெகு நாளைய சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு. ஆபீசர் : ஆ! ஆ!! பேஷா பேசலாம். இப்பொழுதே வாருங்கள். என்ன விசேஷம்! குடியானவன் : விசேஷம் ஒன்றும் இல்லை; தாங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. சிநேகித விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை. ஆதலால் தங்களிடம் சொல்லித் தீர வேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன். ஆபீசர் : என்ன இவ்வளவு யோசிக்கின்றீர்கள். கோபம் என்ன வந்தது? தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம். குடியானவன் : கொஞ்சகாலமாகத் தங்களுடைய சம்சாரத்தின் நடத்தை சரியாய் இல்லை. என்னேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு அடுத்த வீட்டுத் தையல்காரனிடமே சாகவாசம் வைத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. சில சமயங்களில் அந்த தையல்காரன் அந்த அம்மாளை அடிக்கின்றதாகவும் தெரிய வருகின்றது....

பாராட்டுதல் 0

பாராட்டுதல்

திருவாளர் சென்னை பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் அவர்களை சென்னை கார்ப்பரேஷன் அங்கத்தினராக நியமித்த அரசாங்க ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களை நாம் மனமார பாராட்டுவதுடன் நமது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு நமது நன்றியறிதலையும் செலுத்துகின்றோம். வெகு காலத்திற்கு முன்னமேயே இந்நியமனம் பெற்றி ருக்க வேண்டிய பண்டிதர் ஆனந்தம் இப்பொழுதாவது நியமனம் பெற்றி ருப்பதற்கு மகிழ்ச்சி அடைவதுடன் மேலுக்கு மேலும் உயர்பதவி நியமனம் பெற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைக்க வேண்டுமாய் ஆசைப்படு கின்றோம். குடி அரசு – குறிப்புரை – 28.04.1929

கடவுளும் மதமும்                        “காப்பாற்றப்பட்டால்”                           சுயராஜ்யம் வந்துவிடுமா? 0

கடவுளும் மதமும் “காப்பாற்றப்பட்டால்” சுயராஜ்யம் வந்துவிடுமா?

சென்னை சட்டசபை இவ்வருஷக் கோடியில் அனேகமாய் கலைக்கப் பட்டுவிடும் என்கின்ற விஷயம் வெளியானதும் பார்ப்பனர்கள் வழக்கம்போல் இப்போதிருந்தே தேர்தல் நாடகம் நடிக்கத் தீர்மானித்து, திருவாளர்கள் எஸ். சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தி முதலிய அவரு டைய சிஷ்யர்களும் ஒருபுறமும் ஜனாப்கள் பஷீர் அகமது, அமீத்கான், ஷாபிமகமது ஆகியவர்கள் ஒருபுறமும் திருவாளர்கள் குழந்தை, ஜயவேலு, அண்ணாமலை, பாவலர், கல்யாணசுந்தரமுதலியார் ஆகியவர்கள் ஒரு புறமும் கிளம்பி இப்பொழுதிருந்தே ஊர் ஊராய்ச் சுற்றி தெருக்கூத்தாடிகள் போல தேர்தல் நாடகம் ஆடத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தார் சென்ற தேர்தல்கள் வரையில் பாமர மக்களிடம் தாங்கள் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதாயும், பார்ப்பனரல்லாதார் கட்சியாய ஜஸ்டிஸ்கட்சியார் சுயராஜ்ஜியத்துக்கு விரோதமா யிருப்பதாகவும், ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக்கொடுக்காமல் காங்கிரஸ்காரர்களாகிய தங்களுக்கே ஓட்டுக் கொடுத்து தங்களையே சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சொல்லிவந்தார்கள். ஆனால் சுயராஜ்ஜிய புரட்டுகள் முழுவதும் இப்போது பொதுஜனங்களுக்கு வெட்ட வெளிச்சம்போல் வெளிப்பட்டுப் போனவுடன் இப்போது பரராஜ்ஜியம் அதாவது மோக்ஷ ராஜ்ஜியம் வாங்கிக்...

மகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி 0

மகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி

வங்காள மாணவர்கள் தங்கள் சமூகத்திலும் புரோகிதக்கொடுமை இருப்பதையும், அதனால் தங்கள் சமூக முன்னேற்றமும் சுயமரியாதையும் உணர்ச்சியும் தடைபட்டுவருவதையும் உணர்ந்து முல்லா வர்க்கத்தையே அதாவது இப்பொழுது உள்ள புரோகித வர்க்கத்தையே அடியோடு ஒழிக்க வேண்டுமென்கின்ற எண்ணத்துடன் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமான சட்டங்களியற்றுவதற்கு எதிரிடையாயிருக்கும் எல்லா முல்லா வர்க்கத்தையும் ஒழிப்பதற்கு என்று புரோகித விலக்கு சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சென்ற வருஷத்திலும் வங்காளம், பம்பாய், மத்திய மாகாணம் முதலிய இடங்களில் உள்ள வாலிபர்கள் இம்மாதிரியாக ஒரு கிளர்ச்சி செய்தது ஞாபகமிருக்கலாம். எனவே எந்த முற்போக்குக் கிளர்ச்சி களும் அவசியம் என்பது முதலில் வாலிபருக்குத்தான் படும் என்பதும், அவர்கள் தான் இம்மாதிரி சமூகத்திற்குள் நுழைந்து அழுகி நாறிப்போன பழைய பழக்க வழக்கங்களை தக்க தியாகத்தை கைம்மாறாகக் கொடுத்து ஒழிக்க சக்தியுடையவர்களாயிருப்பார்கள் என்பதும் நமது அபிப்பிராய மாகும். ஆதலால் நமது நாட்டு வாலிபர்களும் உலகமெல்லாம் கண் விழித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தை கைவிட்டுவிடாமல் முனைந்து...

ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள் 0

ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள்

ஈரோட்டில் ரயில்வே ஷ்டேஷனுக்கு அருகாமையில் திரு. வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அக்கிராசனத்தின் கீழ் ஜூலை 21-ல் ஒரு தொழிலாளர்கள் வேலை நிறுத்த மீட்டிங்கு கூடியது. மீட்டிங்குக்கு ஏராளமான ஜனங்களும் தொழிலாளர்களும் கூடியிருந் தார்கள். திருவாளர்கள் தேவ அன்பும், முத்துகிருஷ்ணன், அரூர் வேடி செட்டியார், மண்டி சி. குமாரசாமி கவுண்டர் முதலியோர்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டி பேசினார்கள். மறுநாள் கோணைவாய்க்கால் டேராகாட்டில் திரு. நாயக்கர் அக்கிராச னத்தில் ஒரு மீட்டிங்கு கூடியது. அதற்கும் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள். அங்கு இரண்டு மூன்று நாளாக லைன்களில் நடந்த விஷயங்களை எடுத்துச்சொல்லி சத்தியாக் கிரக விஷயமாய் பேசப்பட்டது. மறுபடியும் 25-தேதி புதன்கிழமை கடைவீதி அலிசவுக்கில் ‘தாஜுல் இஸ்லாம்’ பத்திராதிபர் ஜனாப் நைனாமுகம்மது சாயபு அவர்கள் தலைமை யில் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது. தொழிலாளர்களும் திருவாளர் ஆ.ஹ.ஈஸ்வரரும் மற்றும் சில நண்பர் களும் பேசி சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 27-7-28 ந்...

கண்ணில்லையா?                                        இந்திய சட்டசபைக்கு இன்னும் எத்தனை ஐயங்கார்கள்? 0

கண்ணில்லையா? இந்திய சட்டசபைக்கு இன்னும் எத்தனை ஐயங்கார்கள்?

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும், சுயமரியாதை இயக்கம் என்னும் சமரசமும் சன்மார்க்கமுங் கொண்ட இயக்கமும் தமிழ்நாட்டில் எவ்வளவோ பெரிய கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியும் உண்டாக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை முக்கியமாய்ச் செய்ய வேண்டிய காரியங்களில் முக்கியமானதான துறை களில் இன்னமும் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. மேற்கண்ட இரண்டு இயக்கங்களும் வெற்றிபெற வேண்டுமானால், அவற்றின் கொள்கைகளில் பெரும்பான்மையானவைகள் அரசாங்க சட்டத்தின் மூலமும், அரசாங்க நடுநிலைமை மூலமும், சில அரசாங்க உதவியின் மூலமுமே வெற்றிபெற வேண்டியிருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததாகும். அரசாங்க சட்டங்களில் முக்கியமானவைகள் பல இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதும் இந்திய அரசாங்க நிர்வாக சபையின் ஆதரவு பெற வேண்டியிருப்பதும் யாரும் அறியாததல்ல. அப்படியிருக்க தென் இந்தியாவில் சிறப்பாக தமிழ்நாட்டின் சார்பாக இந்தியா சட்டசபைக்குள்ள பிரதிநிதிகள் 7 பேர்களில் 6 பேர்கள் நமது சமுதாயத்திற்கும், சமரசத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் பரம்பரை விரோதி களான பார்ப்பனர்களே – சிறப்பாக ஐயங்கார் பார்ப்பனர்களே, நமது...

பல்லாவரத்துப் பண்டிதர் 0

பல்லாவரத்துப் பண்டிதர்

திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் “ சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா” என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் “தமிழ்நாடு” “திராவிடன்” பத்திரிகைகளில் காணப் படுகின்றது. அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தை திருவாளர்கள் தண்டபாணி பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்ட தாகவும் பதில் சொல்ல இயலாமல் திக்கு முக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது. அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத் தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்து கொண்டு போனதாகவும் அதைக் அக்கூட்டத்திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்ததாகவும் “திராவிடனி”ல் காணப்படுகின்றது. அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை “குடி...

எலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி  வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை  – சித்திரபுத்திரன் 0

எலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

வாசர்:- என்ன மூர்த்தி! இந்தத் தடவை சட்டசபை எலக்ஷன் நிரம்பவும் மோசமாய் முடியும் போலிருக்கின்றதே என்ன செய்வது? மூர்த்தி :- ஏன் இந்த மாதிரி நினைக்கின்றீர்கள்? நமக்கென்ன குறைவு? காங்கிரசு இருக்கின்றது. காந்தி இருக்கின்றார். தவிர எல்லோரையும் விட வெகு தீவிரக்காரர்களாக வேஷம் போட்டுக் கொண்டு பூரண சுயேச்சை கேட்கின்றோம். இவைகள் தவிர சைமன் பகிஷ்காரத்தின் மூலம் நாம் பெரிய அமிதவாதிகளாகி இருக்கின்றோம். இவ்வளவு சங்கதிகள் நமக்கு அனுகூல மாயிருக்கும்போது நாம் ஏன் எலக்ஷன் விஷயத்தில் பயப்பட வேண்டும்? வாசர்:– இதெல்லாம் இனி நடவாது. காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சுது. இனி யாரும் காங்கிரஸின் பேரால் ஏமாறுவார்கள் என்று எதிர்பார்ப் பது முதுகில் ஒரு கை முளைக்க வைத்தியம் செய்து கொள்ளுவது போல் தான் முடியும். உதாரணம் வேணுமானால் ஒரு இரகசியம் சொல்லுகின்றேன் கேள்! நமது மிஸ்டர் சி.வி. வெங்கட்டரமணய்யங்கார் அசம்பளிக்கி நிற்கிறார். அவர் காங்கிரஸ் பேரால் நிற்கமுடியாது என்று சொல்லிவிட்டு...

சுயமரியாதைப் பிரசாரங்கள் 0

சுயமரியாதைப் பிரசாரங்கள்

சுயமரியாதைப் பிரசாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவ தாகவும் அதைக் கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளு வதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது. அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக் கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் “சுயமரியாதைப் பிரச்சார போதனைக் கூடம்” என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற் படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, ‘குடி அரசில்’ கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். காலாவதி யொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும். அவர்களில் சௌகர்யமில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ள வர்கள் தெரிவித்துக்கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும்...

வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக்கொண்டது 0

வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக்கொண்டது

திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அருப்புக்கோட்டை வாலிபர்கள் மகாநாட்டில் வாலிபர்களுக்கு புராணப் பிரசங்கம் செய்கையில், முன் திரு. நாயக்கருடன் “போர்” நடத்துகையில் முருகனைப்பற்றியும் புராணங் களைப் பற்றியும் என்ன எழுதினாரோ அவற்றிற்கு நேர் விரோதமாய் புராணங்களை ஆதரித்து பிரசங்கம் செய்திருக்கின்றார். மற்றும் பெரிய புராணத்தைப் பற்றி அவர் எழுதிய காலத்தில் “கவியழகுக்கும் இயற்கை வருணனைக்கும் கூடவா புராணங்களைப் படிக்கக்கூடாது” என்றும் “பெரிய புராணத்தின் உள்ளுறையை இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள், அகச்சான்றுகள், நமது நாட்டைப்பற்றி இங்கு வந்துள்ளவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், சில புறச்சான்றுகள், சரித்திரப்பொருள்கள் காலநிலை முதலியவற்றிற்கு அரண் செய்யும் அளவுக்குக் கொள்ளலாம்” என்றும் எழுதியிருந்தார். இப்படி எழுதினவர் அடுத்த வாரத்திலேயே புராணப் பிரசாரத்திற்காக ஆரம்பித்து மறுபடியும் பழைய உணர்வு கொண்டு அதே புராணத்தை மூட நம்பிக்கைக்காக மக்களிடை பிரசாரம் செய்யத் திருநெல் வேலியைக் கண்டுபிடித்து அங்குள்ள மக்களிடம் தமது பழைய மூட்டையை அவிழ்க்க ஆரம்பித்துவிட்டார். அக் கூட்டத்தில் பேசும்போது அதே...

தென்னிந்திய ரயில்வே  தொழிலாளரின் வேலை நிறுத்தம் 0

தென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்

நீண்ட நாளாக ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளைப்பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் கொஞ்சமும் இணங்காமலிருந்ததினாலும் பதினாயிரக்கணக்கான பேர்கள் திடீரென்று வேலையை விட்டுப் போக வேண்டியிருந்ததினாலும் வேறு கதியில்லாமல் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகமும் வேலை நிறுத்தமும் செய்தே தீர வேண்டியதாய் விட்டது. வேலை நிறுத்த விஷயத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவியும் இல்லாமல், அதாவது தொழிலாளர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும், தேசீயத்தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும், தேசீயப்பத்திரிகைகள் என்பவைகளும் பல ரயில்வேக் கம்பெனிக்காரர் களிடமிருந்து தங்கள் சுற்றத்தார்களுக்கு உத்தியோகங்கள் பெற்றிருக்கும் முறையிலும், பெற எதிர்பார்த்திருக்கும் முறையிலும், மற்றும் தங்கள் பத்திரிக் கைகளுக்கு விளம்பரங்கள் பெற்றிருக்கும் முறையிலும் ரயில்வேக் காரர்களுக்கு அடிமைகளாகி வேலை நிறுத்தத்தை தக்கபடி ஆதரிக்காமல் வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும், வேலை நிறுத்தம் அனாவசியம் என்றும், ஏஜண்டு கூடியவரை நெருங்கி வந்திருக்கிறார் என்றும், இன்னும் மற்ற பொது ஜனங்களுக்கும் தொழிலாளருக்கும் அதிகாரி களின் கொடுமையையும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தையும் சரியானபடி...

நாடார் மகாநாடு 0

நாடார் மகாநாடு

அருப்புக்கோட்டையில் நாடார் சமூக மகாநாடு சென்ற வாரம் 4,5,6 தேதிகளில் மிகவும் விமரிசையாக நடந்தேறிய விவரங்களை மற்ற பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து அறியலாம். சமூக மகாநாட்டை திறந்து வைத்த டாக்டர். சுப்பராயன் அவர்கள் வகுப்பு மகாநாடுகளின் அவசியம் என்றது பற்றியும் ஒவ்வொரு வகுப்பும் முன்னேறினால்தான் நாடு விடுதலை அடையமுடியும் என்றது பற்றியும் இந்த விஷயங்களை வெற்றி பெற தன்னால் கூடியதை செய்யக் காத்திருப் பதாக வாக்களித்ததைப் பற்றியும் நாம் மிகுதியும் பாராட்டுகின்றோம். மகாநாட்டு அக்கிராசனர் திரு. கனகசபை நாடார் அவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் குறித்துள்ள பல விஷயங்கள் பொன்னே போல் போற்றத் தக்கன. “நாம் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றிருந்தும், நமது யோக்கி யதைக்கு தகுந்த கவுரவம் நமக்கு அளிக்கவில்லை; பகிரங்கமாய் அவர்கள் (பிற வகுப்பார்கள்) கூறிவரும் கொள்கைகள் யாவையாயிருப்பினும் சரி, பொதுக்கூட்டங்கள் மூலமாயும் பத்திரிகை மூலமாகவும் அவர்கள் கூறும் செய்திகள் எவையாயிருப்பினும் சரி, காரியத்தில் மாத்திரம் ஒவ்வொரு வகுப்பினரும்...

ஈரோட்டில்                                     ஆலயப்பிரவேசமும் அதிகாரிகள்பிரவேசமும் 0

ஈரோட்டில் ஆலயப்பிரவேசமும் அதிகாரிகள்பிரவேசமும்

ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும் ஆசாரமாகவும் ஆலயத்திற்குட் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டி விட்டுப் போய்விட்டதும், பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவி லுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும் பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 297, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப்...

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கின்றது? 0

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கின்றது?

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில், குறிப்பாக எல்லா சமூகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆக்ஷி செய்யும் நாடுகளும் கூட அரசுரி மையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில் இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. நிற்க, பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதர பாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது – இருப்பது – மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களுமாகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமூகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்மந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது எனலாம்....

இன்னும் ஒரு லோககுரு அவதாரம் 0

இன்னும் ஒரு லோககுரு அவதாரம்

நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்காக அவதரித்த லோக குருக்கள் அநேகர் என்பது யாவரும் அறிந்த விஷயம். அவர்களால் ஏற்பட்டி ருக்கும் தொல்லைகளும் நமது சுயமரியாதைக்கு இடையூறுகளும் நமது சீர்திருத்தத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகளும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. இவ்வளவும் போதாமல் திருமதி பெசண்டம்மையார் அவர்களால் சுமார் 20, 30 வருஷங்களாக “லோககுரு வருகிறார்! லோக மாதா வருகின்றார்!” என்பதாக கூப்பாடு போடப்பட்டு வந்து, அநேக டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பி.எ., எம்.ஏ., பட்டம் பெற் றவர்கள் முதல் நம்பச்செய்து இரவும் பகலும் எதிர்பார்த்து திடீரென்று சீமை யில் திரு. கிருஷ்ணமுர்த்தி என்ற வாலிபர் லோககுருவாகவும் திருமதி அருண்டேல் ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு அம்மையார் லோக மாதா வாகவும் அவதாரம் செய்து உலகோர்கள் ஒப்புக்கொண்டதாகவும் ஏற்பாடு செய்யப் பட்டு ஒரு பக்கத்தில் ‘ உலகாக்ஷிப்பு’ நடந்து வருகின்றது. இவ்வளவும் போதாமல் நமது திரு.திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தமது தவத்தால் இன்னும்...

வருணாசிரம மகாநாடு 0

வருணாசிரம மகாநாடு

சென்ற வாரம் ‘இரண்டு மகாநாடுகள்’ என்னும் தலைப்பின் கீழ் நமது முன்னேற்றத்திற்கு விரோதமான கிளர்ச்சிகளைப் பற்றி எழுதி முதலாவதாக சைவப் பெரியார் மகாநாட்டைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு இந்த வாரம் வருணாசிரம மகாநாடு, பார்ப்பனர்கள் மகாநாடு ஆகியவைகளைப்பற்றி எழுதுவதாகக் குறிக்கப்பட்டிருந்தோம். அதோடு இந்த வாரம் சென்னையில் திரு.எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கக்ஷியைச் சேர்ந்த முக்கியத் தலைவரான திரு.சாமி வெங்கடாசலம் செட்டியார் சீர்திருத்த சம்மந்தமாகவும் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் சம்மந்தமாகவும் தமது அப்பிப்பிராயத்தை ஒரு உபன்யாசம் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். அதுவும் ஏறக்குறைய பார்ப்பனர்கள் மகாநாடு, வருணாசிரம மகாநாடு, சைவப் பெரியார் மகாநாடுகள் போன்றவைகளின் அபிப்பிராயத் தையே வர்த்தக யுத்தி முறையில் பேசியிருக்கின்றார். அதன் சாரமும் அதற்கு திரு. எ.ராமசாமி முதலியார் அவர்களின் விளக்கமான சமாதானமும் வேறு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம். திரு.சாமி வெங்கிடாசலமவர்கள் வவ்வாலைப்போல் பார்ப்பனர் களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும் என்னும் முறையில் எவ்வளவோ சாமர்த்தியமாகப் பேசியிருந்தாலும்...

இரண்டு வகை மகாநாடுகள் 0

இரண்டு வகை மகாநாடுகள்

சுயமரியாதை இயக்கம் தோன்றியபிறகு நமது நாட்டில் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாயிருப்பதோடு அவ்வியக்கத்திற்கு சில எதிர்ப்புகள் தோன்றியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. இவ்வெதிர்ப்புகளில் காங்கிரசின் பேரால் வயிறு வளர்க்கும் சில கூலிகளுடையவும், வயிற்றுப் பிழைப்புக் காலிகளுடையவும், சமய புராண வியாபாரிகள், வயிற்றுப் பிழைப்புப் பிரசங்கிகள், பண்டிதர்கள் ஆகியவர் களுடையவும், எதிர்ப்புக் கூச்சல்களை லட்சியம் செய்து எவரும் பதில் சொல்ல வேண்டியதில்லையானாலும், வருணாசிரமத்தின் பேரால் பார்ப் பனர்களும், சைவசமயத்தின் பேரால் சில சைவர்கள் என்பவர்களும் வருணாசிரம மகாநாடுகளும், சைவ சமயக் கூட்டங்களும் கூட்டி அதில் செய்யப்பட்டிருக்கும் தீர்மானங்களைப் பற்றிக் கவனித்துத் தீர வேண்டிய வர்களாக இருக்கின்றோம். ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவற்றை விலக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு கூட்டி, தீண்டாமை இருக்க வேண்டும்; அது கடவுளால் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டுதான் வந்திருக்கின்றார்கள். அதுபோலவே, பால்ய விவாக விலக்குக்கும்,...

மதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு 0

மதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு

சட்டசபைத் தேர்தல் சமீபிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் பேய்க்கு திரு.ராஜகோபாலாச்சாரியாரால், திரு.காந்தியின் மூலம் உச்சாடனம் செய்யப் பட்டு, அது கண் கொண்டபடி நமது நாட்டில் தலைவிரித்து ஆடுவது வழக்கம். இதை நாம் கொஞ்சகாலம் கூடவே இருந்து பார்த்தவர்களில் ஒருவராதலால் இந்தப் பேயாட்ட உபத்திரவத்தை எப்படி ஒழிப்பது என்பது நமக்கு அதிக கஷ்டமான வேலையல்ல. இந்தப் பேய் உச்சாடனத்திற்காக 27-3-29 தேதியில் டில்லியில் காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது கூடி சில தீர்மானங்கள் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் தெரிய வருகிறது. அதாவது, மறுபடியும் முன்போல் (ஒத்துழையாமைக் காலம்) போல கள்ளுக்கடை மறியலும் மரத்தின் பாளைகளை வெட்டுதல் போன்ற காலித்தனத்திற்கு மக்களைத் தூண்டும் படியான தன்மையுடையதான தென்னை மரத்துக்காரர்களை மரம் கள்ளுக்கு விடாமல் செய்யும் பிரசாரமும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் உண்டாக்கும்படியானதாகிய குத்தகைக் காரர்களை ஏலத்தில் கோராமல் இருக்கும்படி செய்யும் பிரசாரமும் செய்வ தற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை நடத்துவதற்கும் திரு.ராஜ கோபாலாச்சாரியார் தம்மையே நியமித்து கொண்டும், அதற்காகச்...

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி 0

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி

நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது. அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்ட தால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத் திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும்...

சென்னையில் சுயமரியாதைத் திருமணம் 0

சென்னையில் சுயமரியாதைத் திருமணம்

நான் மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பு கின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும் வழக்கம் என்ன என்பதைப் பற்றி யோசித் ததில் இப்பொழுது வழக்கத்தில் ஆசீர்வாதம் செய்கின்ற மாதிரியானது, சிறிதும் பொருளற்றது என்பதோடு, நம்மிடம் பிச்சை வாங்கி உண்பவர்கள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காகச் செய்யும் காரியமாக இருக்கிறபடியால், இம்முறையில் ஆசீர்வாதம் செய்வது என்பது எனக்கு இஷ்டமில்லாத காரியமாகும். ஏனெனில் ஆசீர்வாதம் செய்யும்படி விரும்புகின்றவர்களும் எதிர்பார்க்கின்றவர்களும் இவ்வாசீர்வாதத்தால் உண்மையான பலனை எதிர்பார்க் கின்றார்கள். ஆனால் ஆசீர்வாதம் செய்கின்றவர் ஆசீர்வாதம் செய்யப் படுகின்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமில்லாமல் ஆசீர்வாதம் செய்வது என்பதை ஒரு பெருமையாக நினைத்து, தமக்கும் மற்றவர் களுக்கும் பொருள் விளங்காத ஏதோ ஒன்றின் மீது பழியைப் போட்டு அது உன்னைக் காப்பாற்றட்டும் இது உங்களைக் காப்பாற்றட்டும் என்று கை காட்டிவிட்டுப் போவதில் யாதொரு பலனும் இல்லை. அதுவும் இதுவும் மணமக்களை காப்பாற்ற ஆசீர்வாதம் செய்பவருடைய தயவு வேண்டிய தில்லை. அப்படிக் காப்பாற்றும் ஒரு வஸ்துவோ,...

பரோடா சமஸ்தானத்தில்  கல்யாண ரத்து மசோதா 0

பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா

செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய்விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும் பொது ஜனங்கள் கவனித்திருக்கலாம். அத் தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரிய மில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும் பலர் அறிந்திருக்கலாம். ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவர பரோடா அரசாங்கத்தார் முந்திவிட்டார்கள் என்பதாக 29-3-29 -ந் தேதி ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ ‘சுயராஜ்யா’ ‘ஜஸ்டிஸ்’ முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த- இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்ட போது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதை கொண்டுவந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு...

இனியாவது புத்திவருமா? இந்திய சட்டசபையில்  பார்பனர்களின் விஷமம் 0

இனியாவது புத்திவருமா? இந்திய சட்டசபையில் பார்பனர்களின் விஷமம்

‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ பத்திரிகைகளின் பத்திராதிபரும், தஞ்சாவூர் திருச்சினாப்பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தவரும் இந்தியாவின் 33 கோடி பொது மக்களுக்கு சுயராஜியம் வாங்கிக் கொடுக்க “உயிர் விட்டுக் கொண்டு” பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ. ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம். அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்பு வாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்ட விரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்திரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம், இதற்கு பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பன ரல்லாத ஒரே ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. ஷண்முகம்) தவிர...

நமது மந்திரிகள் 0

நமது மந்திரிகள்

சென்னை அரசாங்க மந்திரிகளின் பெருமைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் சுருக்கமாக ஒரு வார்த்தையில் விளங்கவைத்துவிடலாம். அதென்னவென்றால், மந்திரிகள் மூவரும் பொதுஜன நன்மைக்கு விரோதிகளான பார்ப்பனர்களால் வெறுக்கப்பட்டவர்கள். எனவே இவர்கள் பார்ப்பனரல்லார்களுக்கு எப்படிபட்டவர் களாய் இருக்கின்றார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஏனெனில், பொது ஜனங்களின் நன்மைக்கு நடுநிலையில் இருந்து பாடுபடுபவர்களோ வேலை செய்கின்றவர்களோ அவர்களுக்கு உதவி செய் கின்றவர்களோ ஆகிய எவரும் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் இருக்க முடியவே முடியாது. அதுபோலவே பார்ப்பனர்களால் மதிக்கப்பட்ட- புகழப்பட்ட- எவரும் பொது மக்களுக்கு ‘துரோகம்’ செய்யாதவர்களாக இருக்க முடியவே முடியாது. இது இன்றைய அனுபவமாக மாத்திரம் இல்லாமல் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கண்ட முடிவும் இதுவாகவேதான் விளங்குகின்றது. இன்றைய தினம் யார் யார் பார்ப்பனர்களால் வையவும் தூற்றவும் படுகின்றார்களோ அவர்களில் அநேகமாய் எல்லோருமே பொதுஜனங்களின் நன்றியறிதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்களாக இருப்பதை அனுபவத்தில் காண்கின்றோம். அதிகாரிகளில் கூட ஏறக்குறைய யோக்கியப் பொறுப்பும் நாணயப் பொறுப்பும் ஒழுக்கப் பொறுப்பும் இல்லாத...

தொழிலாளர் 0

தொழிலாளர்

தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லவும், அதை நிவர்த்திக்கத் தாங்கள் கொண்டுள்ள முறைகளுக்கு ஆதரவு தேடவும், ஊர் ஊராய் பிரசாரம் செய்து வருகின்ற விஷயம் யாவரும் அறிந்ததே. இம்முயற்சிக்கு ஆங்காங்குள்ள பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறோம். தாடியில் நெருப்பு பற்றி எரிகின்றபோது ஒருவன் அதில் சுருட்டைப் பற்றவைக்க கொஞ்சம் நெருப்புக் கேட்டதுபோல், நாட்டின் ஜீவனாடியாகிய தொழிலாள மக்கள் இம்மாதிரி வேதனைப்பட்டு அலையும்போது சைமன் கமிஷன் பிரசாரமும் பர்டோலி சத்தியாக்கிரகத்திற்குப் பணம் தண்டலும் வெகு மும்முரமாய் நடந்து வருவதிலிருந்து நாட்டின் ஏழை மக்களிடத்தில் “தேசீய” இயக்கங்களுக்கோ “தேசீய தலைவர்கள்” என்போர்களுக்கோ எவ்வளவு கவலை இருக்கின்றது என்பதும் அவைகளால் நாட்டிற்கு எவ்வளவு பலன் ஏற்படும் என்பதும் தானாகவே விளங்குகின்றது. இனியாவது பொது மக்கள் இம்மாதிரி போலியும் அவசியமில்லாததுமான காரியங்களில் போலித்தலைவர்களை நம்பி மோசம் போகாமல் முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டுமாய் வேண்டுகிறோம். குடி அரசு – துணைத்...

வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா? 0

வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா?

வடஆற்காடு ஜில்லா போர்டின் 27-3-29 ஆம் தேதி மீட்டிங்கில் ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100-க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண் டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது. அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத்தக்கதாகும். வடஆற்காடு ஜில்லாபோர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப் பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர் களுக்கு வேண்டியவராயிருந்ததின் உண்மையை வெளிப்படுத்திவிட்டார் போலும், இதிலிருந்து திரு. நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். நிற்க, வட ஆற்காடு ஜில்லா போர்டை மற்ற ஜில்லா போர்டு பின் பற்றுமா என்று அறிய...

‘மித்திரன்’ புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம் 0

‘மித்திரன்’ புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்

தஞ்சைக்கு அடுத்த திருவையாற்றில் 28-2-29 தேதியில் நடந்த பனகால் வாசகசாலைத் திறப்பு விழாவின்போது தஞ்சை உயர்திருவாளர். டி.வி. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திய காலை யில் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேசியதாகவும் ‘குடி அரசையும்’ ‘திராவிடனை’யும் படித்துப் பிள்ளைகள் கெட்டுபோகக் கூடாது என்று சொன்னதாகவும் இந்த ஊருக்குச் சுயமரியாதை இயக்கத்தார் வந்தால் அவர் களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொன்னதாகவும், மற்றும் பல விபரீதமான விஷயங்கள் பேசியதாக சுதேசமித்திரன் ‘நிருபர்’ பெயரால் 4-3-29 தேதி ‘மித்திரனில்’ வெளியாயிருந்ததற்கு திரு.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் மறுத்து தான் பேசாத விஷயங்களையும் நினைக்காத விஷயங்களையும் ‘மித்திரனில்’ எழுதி இருப்பதாகக் குறித்து ‘மித்திரன்’ யோக்கியதையை வெளியிட்டிருப்பதுடன் அன்று தான் பேசிய விஷயம் இன்னது என்பதையும் சென்ற மலரில் வெளியிட்டிருக்கின்றோம். எனவே சுயமரியாதை இயக்க விஷயத்தில் பார்ப்பனப் பத்திரிகை களும் அதன் நிருபர்களும் அவர்களை நத்தித் திரியும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நிருபர்களும் எவ்வளவு இழிவாய் நடந்து கொள்ளு கிறார்கள்...

எதிர்ப்பிரசாரங்கள் 0

எதிர்ப்பிரசாரங்கள்

தமிழ்நாட்டில் பார்ப்பனர்களில் திரு.சத்தியமூர்த்தியும் பார்ப்பனரல்லா தார்களில் திரு.வரதராஜுலுவும் இரண்டிற்கும் நடுவில் அதாவது பண்டிதக் கூட்டத்தில் திரு.கலியாணசுந்தர முதலியாரும் ஆக மூவர்கள் எப்படியாவது ஒரு வழியில் தினம் தங்களை விளம்பரம் செய்து கொண்டும் எப்படியாவது ஒரு வழியில் நாடோறும் சூரிய உதயமும் அஸ்தமனமுமாகி இன்றைய நாள் கழிந்ததா என்கின்றதுமான கவலையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே யல்லாமல் மற்றபடி ‘நேற்று என்ன சொன்னோம், என்ன எழுதினோம், எப்படி நடந்தோம், இன்று என்ன சொல்லுகின்றோம், எப்படி நடக்கப் போகின்றோம், நாளை நமது கதி என்ன’ என்கின்ற கவலையே அணுவளவும் இல்லாதவர் களாய் அவ்வளவு பெரிய ‘துறவிகள்’ முற்றும் துறந்த ‘ஞானிகள்’ என்று சொல்லத்தக்கவண்ணம் நடந்து வருகின்றார்கள். இம் மூவருக்கும் கொஞ்ச காலமாய் தமிழ்நாட்டில் ஒன்று போலவே நாணயம் குறைந்து வெளியில் தலைநீட்ட யோக்கியதை இல்லாத அளவு செல்வாக்கு ஏறிவிட்டது. இவர் களில் திரு.சத்தியமூர்த்தியோ வெளிப்படையாய் காலித்தனத்தில் இறங்கி விட்டார். இவர் கொஞ்சநாளைக்கு முன் சென்னை கார்ப்பரேஷன் பிரசி...

சீர்காழியில்  சுயமரியாதை முழக்கம் 0

சீர்காழியில் சுயமரியாதை முழக்கம்

சகோதரர்களே! பெரியோர்களே! சில வருஷங்களுக்கு முன் ஒத்துழையாமைக் காங்கிரஸ் பிரசாரத்தின் போது இவ்வூருக்கு வந்திருக்கிறேன். ஆனால், இன்றோ சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துக்கூற வந்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் எதிரிகளும் அவர்களது ஆள்களும், தப்பும் தவறுமாகத் திரித்துக் கூறி வருகின்றார்கள். உங்கள் ஊரிலும் அதே காரியம் சற்று அளவுக்கு மீறிச் செய்து விட்டதால் வெகுபேர் ஆச்சரியப்பட்டு பார்க்கலாம் என்றே நான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இங்கு கூடியிருக் கின்றீர்கள். இது நமது இயக்க எதிரிகள் தங்களுக்குத் தெரியாமலே நமக்குச் செய்த உதவியாகும். மற்றும் என்றுமே இப்படிப்பட்ட பொதுக் கூட்டங் களுக்கு வராத அரும்பெரும் கனவான்களும் விஜயம் செய்திருப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. என்னை அன்னிய மதப் பிரசாரகன் என்றும், சர்க்கார் பிரசாரகன் என்றும் எழுதப் பட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நான் இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்தைத் துவேஷம் செய்து, அன்னிய மதங்கள் என்று அழைக்கப்படும் மதங்களை...

காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும் 0

காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும்

நமது இலாக்கா மந்திரி கனம் முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய சிறிது பணம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் உபதலைவரும் கோவை ஜில்லா பிரதிநிதியும் கள்ளு உற்பத்தி செய்யக் கூடிய சுமார் ஆயிரம் தென்னை மரங்களை உடையவரும் வருஷம் கள்ளில் 5000, 10000 சம்பாதிப்பவரும் அய்யங்கார் பார்ப்பனருமான திரு.சி.வி.வெங்கட்டரமண அய்யங்கார் அவர்கள் எழுந்து சர்க்கார் மது விலக்குப் பிரசாரம் செய்யக் கூடாது என்றும், மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் குடிக்காத மனிதனுக்குக் கூட இவர்கள் ஏன் குடிக்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள் என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக குடித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாக்கிவிடும் என்றும் சொல்லி அதை ஆட்சேபித்தார். (இவர்தான் சென்ற தேர்தலில் திரு.ஊ. ராஜகோபாலாச்சாரியாரால் மதுவிலக்குப் பிரசாரத் தின் பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்கப்பட்டு சட்டசபை மெம்பர் ஆவார்.) உடனே கோவை திரு.சி.எஸ்.இரத்தினசபாபதியார் எழுந்து திரு. அய்யங்கார் அவர்கள் சொல்லுகின்ற கொள்கைப்படி...

“ஆஸ்திக சங்கம்” சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம் 0

“ஆஸ்திக சங்கம்” சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம்

சமீப காலத்தில் சென்னையில் ஆஸ்திக சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதன் தத்துவம் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்வது என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இச்சங்கத் தலைவர்களும் சூத்திரதாரர்களும் யார் என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு உபயோகப் படுத்தப்பட்டு வரும் காங்கிரசின் பேரால் வயறு வளர்த்து வந்த நபர்களே யாவார்கள். எனவே பிழைப்புக்கு ஆபத்து வந்த ஒரு கூட்டம் தானாகவே ஒன்று சேர நேர்ந்தது ஒரு அதிசயமல்ல, ஆனாலும் அப்படிச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அனுகூலமாக புத்திசாலித்தனமாய் ஒருவழி கண்டுபிடிக்காமல் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போல சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்ய ஒரு சங்கம் ஏற்படுத்து வதாகவும் அதற்கு ‘ஆஸ்திக சங்கம்’ என்று பெயர் வைத்துக் கொண் டதாகவும் வெளிப்படுத்திக் கொண்டது ஒன்றே போதுமானது இவர்களது முட்டாள்தனத்தை விளக்குவதற்கு. சுயமரியாதை சங்கத்தில் எந்த பாகத்தை அல்லது எந்த கொள்கையை இவர்கள் எதிர்க்கப் போகின்றார்கள் என்று...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் 0

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரிசிடெண்ட் திருவாளர் ராவ்பகதூர் சீதாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர். ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதைப் பிரசாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவைப் பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கியும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்கு கூட வொட்டாமல் செய்தவர். முயற்சி செய்தவர்களையும், பொறுப்பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்க கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலக் கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப்...

மதுவிலக்கு பிரசாரத்திற்கு   400000 ரூ. 0

மதுவிலக்கு பிரசாரத்திற்கு 400000 ரூ.

நமது மாகாணத்தில் உள்ள சுமார் 4 கோடி பார்ப்பனரல்லாத மக்களும் ஏறக்குறைய ஏகமனதாய் இருந்து பல நாட்களாகக் கிளர்ச்சி செய்து வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை சென்னை அரசாங்க உத்தியோகத்தில் ஒருவாறு அமுலுக்கு கொண்டுவர முயற்சித்து தைரியமாய் வாதாடி வெற்றி பெற்ற நமது சுகாதார மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுபானத்தில் பெரிதும் கஷ்டமும் நஷ்டமும் அடையும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் நன்மையை உத்தேசித்து மது விலக்கு பிரசாரம் செய்வதற்கு என்று இவ்வருஷத்திய வரவு செலவு திட்டத்தில் நான்கு லட்சம் (4,00,000) ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதைக்கண்ட நமது எதிரிகளான கன்மனப் பார்ப்பனர்கள் மதுபானம் நின்றுவிட்டால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமே எனக் கருதி சட்டசபையில் அத்தீர்மானம் நிறைவேறாமல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களான கனவான்கள் இப்பார்ப்பனர் களின் சூட்சிக்கும் விஷமத்திற்கும் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாய் உறத்து நின்று பிரசாரத் துகையை அனுமதித்து நிறைவேற்றி...

தேர்தல் தந்திரம்  அன்னிய ஆடை பகிஷ்காரப் புரட்டு 0

தேர்தல் தந்திரம் அன்னிய ஆடை பகிஷ்காரப் புரட்டு

சூக்ஷிகளிலும் வஞ்சகத்திலும் சிறந்த ஒரு கூட்டத்தார் சமுதாய வாழ்க்கையில் தங்களது சுயநலத்திற்கென்று எப்படி மதம், சமயம், வேதம், சாஸ்திரம், கோவில், பல சாமிகள், அவைகளுக்குப் புராணங்கள், குளங்கள், தீர்த்தங்கள், சடங்குகள், பூசைகள், உற்சவங்கள், பிராயச்சித்தங்கள், மோக்ஷம் நரகம், மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலியவைகளைக் கற்பித்து, தங்களையும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்டு இவைகளுக்கு சமயத்திற்குத் தகுந்தபடி வியாக்கியானம் (அர்த்தம்) சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்களைப் படிக்கவிடாமலும் செய்ததோடு, மற்றவர்கள் உழைப்பில் தாங்கள் நோகாமல் பிழைக்கவும் வழி செய்து கொண்டது போலவே நமது நாட்டில் படித்தவர்கள் என்கின்ற ஒரு கூட்டத்தார் சிறிது காலமாய் அதாவது 40,50 வருஷ காலமாய் தங்கள் சுயநலத்திற்கென்று அரசியலிலும் தேசியக் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசீயம் என்பதாகப் பல பெயர்களை உற்பத்தி செய்து அதன் மூலமாகவும் அரசாங்கத்தில் உத்தியோகங்களும் அதிகாரங்களும் பெற எண்ணம் கொண்டு பாமர மக்களைக் கூட்டி, ஏமாற்றி, பல தீர்மானங்கள் செய்து, ஒன்றுக்கு...