தொழிலாளர் வேலை நிறுத்தம்
தென் இந்திய ரயில்வெ தொழிலாளர் வேலை நிறுத்தமானது தொழிலாளர்களுக்கு பலன் கொடுக்காமல் போனதாக சிலர் சொல்வதானாலும் அந்த வேலை நிறுத்தம் பல “தலைவர்”களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் கொழுத்த பலனைக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றே சொல்லுகின்றோம். என்னவென்றால் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல நாளாகவே எச்சரிக்கை செய்தும் ரயில்வே அதிகாரி கள் இணங்காமல் பிடிவாதமாயிருப்பதற்கும், வேலைநிறுத்தம் ஏற்பட்ட பிறகும் வேலைநிறுத்தத்திற்கு கேடு நேரிடுவதற்கும் உண்மையற்ற சமாசாரங் களை வெளிப்படுத்தியும், தொழிலாளர்கள் மீது பழிசுமத்தியும் எழுதிவந்த தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நல்ல ஆதாயம் ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டும். ரயில்வே அதிகாரிகளும் தங்கள் அனுதாபிகளுடனும் சில பத்திரிகைக்காரர்களுடனும், சில தலைவர்களுடனும் இது விஷயமாய் தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டுதான் வேலை நிறுத்தத்தைச் செய்து தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டார்களே ஒழிய வேறில்லை. இந்த உண்மையானது ஏஜண்டின் முரட்டுத்தனத்தாலேயே ஒருவாறு ருஜுவாகாமல் போகாது. அதாவது திருவாளர் கோவை சி.எஸ். ரத்தின சபாபதி...