Author: admin

திருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம் 0

திருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்

திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராமராஜ்யத் தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசை யிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்யமாக் கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு போய்க் குடியிருந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமத்தானம் ராம ராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே சாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் “சாட்சாத் மகாவிஷ்ணு”வினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படியென்றால், திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும் ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ “மகா விஷ்ணு”வாகும். எனவே “மகாவிஷ்ணு”வின் அவதாரமாகிய ராம ராஜ் யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு...

திரு. ஆர்.எ°. நாயுடுவின் பெருந்தன்மை. 0

திரு. ஆர்.எ°. நாயுடுவின் பெருந்தன்மை.

மதுரை முனிசிபல் சேர்மென் திரு.ஆர்.எ°. நாயுடு அவர்களைத் தமிழ்நாட்டவர்கள் நன்கு அறிவார்கள். அவர் பழம் பெரும் கீர்த்தி வாய்ந்த நாயுடு குடும்பத்தில் தோன்றி மேல் நாட்டுக்குச் சென்று படித்து பாரி°டர் பரீட்சையில் தேறி மதுரை ஜில்லாவில் ஒரு பிரபல வக்கீலாக இருந்தவர். அவருடைய நாணயத்தையும் பெருந்தன்மையையும் சாமார்த்தியத்தையும், அறிந்த மதுரைவாசிகள் அவரை மதுரை நகர முனிசிபல் கவுன்சிலுக்குச் சம்பளம் பெறும் சேர்மெனாகத் தெரிந்தெடுத்து அவரிடம் முனிசிபல் ஆட்சியைப் ஒப்புவித்தார்கள். அவர் சற்று பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியு டையவராதலால் மதுரைப் பார்ப்பனர்கள் அவருக்கு பலவிதத்திலும் தொல்லை விளைவித்து வந்தும் அதாவது சென்னை கார்ப்பரேஷனில் திரு.ஜெ. வெங்கிட்ட நாராயண நாயுடு அவர்களைச் சுயராஜ்ஜியக் கட்சியின் பெயரால் சென்னை பார்ப்பனர்கள் நசுங்குச் சேட்டைகள் செய்து வந்தது போல் செய்து வந்தார்கள். திரு.ஆர்.எ°. நாயுடு அவர்கள் அவ்வளவையும் சமாளித்து தைரியமாய் நின்று மேற்படி பார்ப்பனர்களுடைய சூழ்ச்சி களுக்கும் விஷமங்களுக்கும் சற்றும் சளைக்காமல் ஒரே முகமாய் நின்று அம்முனிசிபாலிட்டியை முன்...

வரதராஜுலுக்கும் ஒரு கட்சி 0

வரதராஜுலுக்கும் ஒரு கட்சி

திரு.பி.வரதராஜுலுக்கு தனக்கு ஒரு கட்சி இருக்கவேண்டுமென்று அவர் பொது வாழ்வில் இறங்கினது முதல் வெகுகாலமாய் பிரயத்தனப் பட்டுக் கொண்டுவரும் விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். இதற்கு ஏற்ப அவரால் அது முதல் இதுவரை பெற்றெடுக்கப்பட்டு சாகக் கொடுத்த கட்சிகள் இவ்வளவென்று அவருக்கே ஞாபகமில்லாமல் இருக்கலாம். திருப்பூரிலும், சேலத்திலும், சென்னையிலும் மற்றும் வெளியிடங்களிலும் எத்தனையோ கட்சிகள் அவரால் உற்பத்தி செய்யப்பட்டு அழுவாரற்று அழிந்துபோனது கணக்கு வழக்கிலடங்கக் கூடியதல்ல. கட்சி ஏற்படுத்துவதற்காக திரு.வரத ராஜுலுவால் கூட்டப்படும் கூட்டங்களுக்கே ஜில்லாவுக்கு இத்தனை பேர்தான் வரவேண்டும் என்று பொதுவாக பத்திரிகையில் விளம்பரப் படுத்துவதும், ‘தமிழ் நாடு’ ஆபீசில், ஆபீஸ் சிப்பந்திகளையும், சில பிரசாரக் காரரையும் வைத்து கூட்டம் நடத்தினதாக ஏற்பாடு செய்து தான் தலைவ ராகவும், மற்றும் சிலர் தனது சகா நிர்வாகக் கூட்டத்தார்களாகவும் பத்திரிகை களுக்குச் செய்தி அனுப்பி பிரசுரிக்கச் செய்வதும் தவிர, இதுவரை ஒரு கட்சியாவது ஏற்பட்டதற்கு மறுநாள் உயிருடனிருந்து எந்த வேலை யாவது செய்ததாக...

தமிழர் சங்கம் 0

தமிழர் சங்கம்

சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமூக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்கு தற்கால தேவைக் கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மது பானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது,...

நாம் செய்த “துரோகம்” 0

நாம் செய்த “துரோகம்”

சுயமரியாதை இயக்கத்தின் பலனாய், அரசியலின் பேரால் வாழ்ந்து வந்தவர்களுக்கெல்லாம் இந்தச் சமயம் நமது நாட்டில் சகல கவுரவங்களும் செல்வாக்குகளும் அடியோடு போய்விட்டதுடன், இது சமயம் அரசியல் என்பதில் சம்மந்தப்பட்டிருக்கின்றவர்கள் என்பவர்களெல்லோரும் சுயநலக்காரரும் வயிற்றுப் பிழைப்புக்காரரும் சிறிதும் நாணயமும் யோக்கியதையும் அற்றவர்கள் என்ற சங்கதியும் பாமரமக்கள் யாவருக்கும் தெரிந்துவிடவே அரசியல் பிழைப்புக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்ச நாளாகவே நமது நாட்டில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்விட்டது என்பது யாவரும் அறிந்ததேயாகும். உதாரணமாக இது சமயம் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யார் என்பதையும் அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதையும் அவர்களுக்கு நாட்டில் உள்ள யோக்கியதை என்ன என்பதையும் கவனித்தால் இவ்விஷயம் யாருக்கும் சுலபத்தில் விளங்காமல் போகாது. தவிர, இப்பொழுது எங்கு அரசியல் மீட்டிங்கு போட்டாலும் எங்கு அரசியல் மகாநாடு கூட்டினாலும் அங்கு தலைவர்களும் பேசுபவர்களும் அபிப்பிராயம் கொடுப்பவர்களும் யார் என்று பார்ப்போமேயானால் திருவாளர்கள் குழந்தை, அமீத்கான், பஷீர் அஹம்மது, குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை முதலியோர்கள்...

திரு. சொ.முருகப்பர் 0

திரு. சொ.முருகப்பர்

உயர்திரு. சொ.முருகப்பர் அவர்களுக்கும் திரு.மரகதவல்லிக்கும் மணம் நடந்த செய்தி மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. திரு.முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையை பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம். நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலா னதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக் கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல. அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்த தியாக புத்தியும் வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக்...

அனுதாபம் 0

அனுதாபம்

நாடார் மகாஜன சங்கத்து மாஜி தலைவரும், பிரபல செல்வந்தரும் பழம் பெருங்கீர்த்தி வாய்ந்தவரும் தற்போது நாடார் சங்கத்துத் தலைவர் திரு.கனகசபை நாடார் அவர்களின் சகோதரருமான, பொறையார் பாலகுரு சாமி நாடார் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு தனது 32-ம் வயதில் காலஞ்சென்ற விவரம் அறிந்து துக்கமடைவதுடன் அவரது குடும்பத்தாருக் கும் சகோதரருக்கும் நமது அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ( ப.ர். ) குடி அரசு – இரங்கல் செய்தி – 07.07.1929

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின்	கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும் 0

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்

எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமை யானது சகிக்க முடியாத அளவில் பெருகிக்கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்பனரல்லாதாராயிருந்தும் ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங்களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பன ரல்லாதாரராகவே இருந்தும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தி யாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளால் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் அவர்களது சலுகைக்குப் பாத்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாயமாகவும் பேசுவோமேயானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்....

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்! 0

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்!

நாமக்கல் மாவட்டத்தை கடந்த சில மாதங்களாகவே ஜாதிவெறி சக்திகள் தங்களின் மேலாதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இப்போது ஒரு காவல்துறை பெண் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை வரை சென்றிருக்கிறது. தலித் சமூகத்திலிருந்து அதுவும் ஒரு பெண் டி.எஸ்.பி தேர்வு பெற்று காவல்துறையில் பணியாற்ற வருகிறார் என்றால், அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அவர்,எத்தனையோ தடைகளை தனது கடும் முயற்சியாலும் திறமையாலும் வென்று, கடந்து வந்திருப்பார் என்பதில் இருவித கருத்துக்கு இடமிருக்க முடியாது. கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியும், உள்ளூர் ஆதிக்க ஜாதியைச் சார்ந்த பெண்ணும் சந்தித்தார்கள் என்ற ‘குற்ற’த்துக்காக ஜாதி வெறி கும்பல் ஒன்று கோகுல் ராஜ் தலையை துண்டித்து, தண்டவாளத்தில் வீசியது. இதில் தேடப்படும் முதன்மை குற்றவாளியான கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த யுவராஜ் என்ற நபர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நபர் தலைமறைவாக இருந்து கொண்டு ‘வாட்ஸ்அப்’ வழியாக காவல்துறைக்கு சவால்விட்டு ஜாதி வெறியைத் தூண்டி,...

மரகதவல்லி மணம் மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம் 0

மரகதவல்லி மணம் மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம்

அருமை மணமக்களே! இங்கு கூடியுள்ள சகோதரிகளே! சகோதரர் களே! இங்கு நடைபெற்ற மணத்தைப் பார்த்த பின்பு சீர்திருத்த மணமென்பது எத்தகையது என்பது இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். பண்டைக் காலத்திலும் நம் நாட்டில் இம்முறையில்தான் மணங்கள் நடை பெற்று வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இடையில் இம்முறை எப்படி மாறிற்று என்பதுதான் அதிசயமாய் இருக்கின்றது. இப்போது நம் நாட்டில் நடைபெற்றுவரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாக கொண்டதுமாய் நடைபெறுகின்றன. மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காப்பாற்று தற்குப் பலர் முன் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மண முறை யானது தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங் களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டுவிட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சி யாலும் ஏற்படவேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய்விட்டது. அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அப்யசிக்கின்றவர்கள் – பயிலுகின்றவர்கள் அம்மன்காசு – ரூபாயில் 320 இல் ஒரு பங்கு மதிப்புள்ள காசு ( 1 ரூபாய் = 16 அணா ; 1 அணா = 20 அம்மன் காசு ) அந்நியோன்யம் – ஒற்றுமை, ஒன்றிப்பு அனாதரக்ஷகன் – ஆதரவற்றோரைப் பாதுகாப்பவன் ஆபத்பாந்தவன் – இடரில் உதவுவோன் ஆப்த – நம்பகமான ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு இகத்தை ( இகம் ) – இவ்வுலகம் ( பரம் – மறு உலகம் ) இரசவாதம் – இரும்பு போன்றவற்றை தங்கமாக மாற்றுதல் உபதானம் – அரிசி பிச்சை உபத்ரவித்தல் – தொல்லை படுத்தல் உயிர்பித்துக்கொண்டு – உயர்த்திக்கொண்டு கடாக்ஷித்து – அருள் பாலித்து கண்டனை – கண்டித்தல், எச்சரித்தல் கனதனவான்கள் – செல்வந்தர்கள் கன்மனம் – கல் மனம் சிலாக்கியம் – மெச்சத் தகுந்தது சுதாவாய் – தானாக, தன்விருப்பமாக சுவதந்திரியம் – சுதந்திரம்...

நல்ல வர்க்கம் – சித்திரபுத்திரன் 0

நல்ல வர்க்கம் – சித்திரபுத்திரன்

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்ல வர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்மந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப் படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாக வுமே முடிந்து விடுகின்றது. அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசி களிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும், தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக்...

கடவுள் திருவிளையாடல்                                  ஒரு கொலைக்கு ஒன்பது கொலை 0

கடவுள் திருவிளையாடல் ஒரு கொலைக்கு ஒன்பது கொலை

மத்திய ஆசியாவில் உள்ள ஆஸ்பெக் என்னும் ஊரில் ஒரு புஸ்தக ஆசிரியர் நாஸ்திக பிரசாரம் செய்ததற்காக அவரைச் சில மதக் குருக்கள்கள் கொன்று விட்டதற்காக நியாயஸ்தலத்தில் ஒன்பது குருக்களுக்கு தூக்கு தண்ட னையும், ஏழு பேர்களுக்குக் காவல் தண்டனையும், 19 பேர்களுக்குத் தேசப் பிரஷ்டத் தண்டனையும், கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே கடவுள் இல்லையென்று சொன்னவனைக் கொன்று கடவுளைக் காப்பாற்றி புண்ணிய கைங்கரியத்திற்காக 9 பேர் கொல்லப்படுவதென்றால் கடவுளுக்கு ஏதாவது நன்றி விசுவாசம் இருக்கின்றதா? மேலும் கடவுள் கட்டளை இல்லாமலும், கடவுள் சம்மதமில்லாமலும் அந்தப் பாதிரிகள் நாஸ்திகனான கடவுள் விரோதி யைக் கொன்றிருக்க முடியுமா? அதுபோலவே அவ்வரசாங்கத்தாரும் நீதிபதி யும் கடவுள் சித்தமில்லாமல் கடவுள் பக்தர்களைக் கொலை செய்ய தீர்ப்புக் கூறி இருக்க முடியுமா? கடவுள் இல்லை என்பதற்காக ஒருவன் சாவதும், உண்டு என்பதற்காக ஒன்பது பேர் தூக்கிலிடப்படுவதும் என்றால் கடவுள் திருவிளையாடலின் பெருமைதான் என்னே? என்னே.? குடி அரசு – செய்தி விமர்சனம்...

எது வேண்டும்? 0

எது வேண்டும்?

இந்திய நாடு பார்ப்பனர் என்னும் ஆரியர்களால் சமூகத்துறையில் அடிமைப்படுத்தப்பட்ட காலம் முதல் இன்றைய வரை அரசியலிலும் சமூகத்துறையிலும் நாம் அடிமைப்பட்டிருக்கும் அளவுக்கு அடிமைப்பட்டி ருக்காவிட்டாலும் அதனால் செல்வத்துறையில் மிகுதியும் அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை எவரும் ஒப்புக் கொண்டுதானாகவேண்டும். இதற்குக் காரணம் என்னவென்றால் சமூகத் துறையில் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் அவ்வடிமைத் தன்மையை என்றென் றைக்கும் தங்களுக்கு அனுகூலமாய் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இந்திய உள்நாட்டு மக்கள் ஆட்சி செய்வதை அழியச் செய்து அவைகளுக்கு பதிலாக வெளிநாடுகளிலிருந்தே ஆட்சிகளைக் கொண்டுவந்து அவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்ட முறையில் நாட்டைப் பழாக்கி வந்திருக்கின்றார்கள். உதாரணமாக இன்றைக்கு ஆயிர வருஷகாலமாக இந்தியாவை ஏகபோகமாய் அரசாட்சி புரிந்த அரசர்கள் வருணாச்சிரமத் திலும் சாதி வித்தியாசத்திலும் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர்களாயிருந்தும், தங்கள் தங்கள் நாட்டில் உள்ளதையும் ஒழித்து வந்தும் கூட தாங்கள் இந் நாட்டிலிருந்து...

புரசைவாக்கம் அருணகிரி சபை                தர்மத்தின் உண்மை விளக்கம்         நாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள் 0

புரசைவாக்கம் அருணகிரி சபை தர்மத்தின் உண்மை விளக்கம் நாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்

நான் பேசுவதற்கு முன்னே அக்கிராசனர் என்னைக் குறித்து வெகு வாகப் புகழ்ந்து கூறிவிட்டார்கள்; அதனால் பேச வேண்டியதையும் மறந்துவிட்டேன். அவர் என்னைக் குறித்து அவ்வளவு பெருமையாக எடுத்து சொன்னதை நான் ஒப்புக்கொள்ள முடியாதாயினும், அக்கிராசன ருக்கு என்னிடத்திலுள்ள அதிக அன்பினால் பலவாறு புகழ்ந்து பேசியிருக் கின்றார். நான் இன்று பேசக்கூடியது உங்கள் மனதுக்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடுமெனக்கருதித்தான் அக்கிராசனர் முன் எச்சரிக்கையாகச் சிலவார்த்தைகள் கூறினார். நான் யாருக்காகப் பேச வந்தேனோ அவர்களை வருத்தமுறச் செய்வதில் என்ன பயன்? முரட்டுத் தனமாகப் பிறர் உணர்ச்சி யைப் புண்படுத்தக் கூடியவாறு பேசுவதில் யாதொரு பயனும் இல்லை என்பதை அறிவேன். ஆயினும் எனக்குச் சரி எனத் தோன்றுவதை நான் வெளியிட்டுப் பேசுவதில் பின்வாங்குவதில்லை யாதலால்தான் அக்கிராசனர் அதை யாரும் குற்றமாகக் கொள்ளக்கூடாதெனக் குறிப்பிட்டுப் பேசினார். எனக்கு முன் பேசிய நண்பர் குருசாமி தர்மத்தைக் குறித்தும் அருணகிரி நாதரைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னார். அவர் வாலிபராதலால்...

இந்து கடவுள்கள் 0

இந்து கடவுள்கள்

-சித்திரபுத்திரன் 2.சுப்பிரமணியனது பிறப்பு விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:- 1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, “இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்” என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து...

ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி? – சித்திரபுத்திரன் 0

ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி? – சித்திரபுத்திரன்

இந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் கொடுமை! கொடுமை!! கொடுமை!!! மயமாகவே செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோவில் எரிமலை வெடித்துத் தீப்பொறிகளும், தீக்குழம்புகளும், புகைகளும் கிளம்பி அநேக கிராமங்களை சாம்பலாக்கி விட்டதென்றும், அதனால் அநேக பொருள்களுக்கும் உயிர்களுக்கும் நஷ்டமேற்பட்டுவிட்டதென்றும் நியூசிலாண்டிலும் ஆஸ்டீரியாவிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு அநேக கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் அநேக உயிர்கள் மடிந்தும் பலத்த சேத மேற்பட்டு வருகின்றதென்றும், இங்கிலாந் திலும் லண்டனிலும் புயல் காற்றும் மழையும் வெள்ளமும் அடித்து அநேக பட்டிணங்களும் உயிர்களும் சாமான்களும் தொழிற்சாலைகளும் அழிந்து சேதமும் நஷ்டமுமுண்டாய்விட்டதென்றும், வங்காளம், அஸ்ஸாம், சைல்சாட் பிரதேசங்களில் ஐந்நூறு சதுர மைல்கள் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு அநேக கிராமங்களையும் அநேக மனித உயிர்களையும், ஏராள மான கால் நடை ஜீவன்களையும் அடித்துக் கொண்டு போய்விட்டதென்றும், திருவாங் கூரிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதென்றும் பம்பாய், சைனா முதலிய இடங்களில் நெருப்பு பிடித்து அநேகக் கட்டிடங்களும் பொருள்...

மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார் 0

மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார்

திரு.ராஜகோபாலாச்சாரியார் தேர்தலுக்காக கள்ளின் பேரால் வழக்கம்போல் அவருடைய சூழ்ச்சி விஷமப் பிரசாரத்தைத் துவக்கி விட்டார். சேலம், வடஆற்காடு ஜில்லாக்களில் இப்போது செய்து கொண்டும் வருகின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பன ஆதிக் கத்தை நிலை நிறுத்த அவர் எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலா மென்கின்ற முடிவு கொண்டவர். அவருடைய மனச்சாட்சி என்பது கொலை, கொள்ளை, புரட்டு, நம்பிக்கை துரோகம், சித்திரவதை முதலிய எவ்வளவு கடினமான காரியத்திற்கும், சற்றும் அசையாது; எந்த வேடம் போடுவதற்கும் சற்றும் பின்வாங்கார். இப்பேர்ப்பட்ட ஒரு மகா புருடருக்கு, மகாத்மா என்னும் உலகப் பிரசித்தியும், மதிப்பும், மரியாதையும் பெற்ற திரு.காந்தி தமது சிஷ்யக் கோடிகளுடன் கையாளாகவும் கிடைத்திருக்கின்றார். இவ்வளவும் போதாமல் மேற்கண்ட பெருமையுடைய திரு.காந்தியார் இந்திய மக்களிடமிருந்து கொள்ளை போல் வசூலிக்கப்பட்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட பொக்கிஷமும் அவர் வசமிருக்கின்றது. இவ்வளவும் போதாமல் ஈவு இரக்கமற்றதும் சூழ்ச்சியும், தந்திரமும், விஷமமும் பொருந்தியதுமான மனோ சக்தியும் ஏற்பட்டிருக்கின்றது. தம்...

பிரம்மஞான சங்கம் 0

பிரம்மஞான சங்கம்

தியசாபிகல் சொசைட்டி என்பதாகவும் பிரம்மஞான சங்கம் என்பதாக ஒரு சங்கம் நமது நாட்டில் பார்ப்பனீய மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு 30 – 40 வருஷ காலமாக இந்தியாவில் செல்வாக்குப் பெற்றுவரும் விஷயம் யாவருக்கும் தெரிந்ததாகும். பார்ப்பன மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு வேறு எவ்விதக் கொள்கையுடன் ஏற்படுத்தும் சங்கமோ, இயக்கமோ ஆனாலும் பார்ப்பனர்கள் அதை எவ்விதத்திலும் ஆதரித்தே தீருவார்கள். ஏனெனில் பார்ப்பன மதத்திற்கு மற்றொரு ஆதரவும் உபகரணமும் கிடைத்தது என்கின்ற எண்ணத்தோடு அதை வரவேற்பார்கள். அவர்கள் மதத்திற்கும் ஆதாரத்திற்கும் ஆட்சேபணையோ மறுப்போ கொண்டதான ஏதாவதொன் றைச் சொல்லி விட்டோமேயானால், அது எவ்வளவு நன்மையும் உயர்ந்த தத்துவத்தையும் கொண்டதானாலும் அவற்றை எப்பாடுபட்டாவது ஒழித்துவிட முயற்சி செய்ய வேண்டியது பார்ப்பனர்கள் கடமையும் வழிவழிச் செய்கையுமாகும். உதாரணமாக, புத்தமதம், சமணமதம் போன்ற ஒழுக்கமும் ஜீவ காருண்யமும் முதன்மையாகக் கொண்ட பிரத்தியட்ச அறிவு மதங்கள் எல்லாம் நமது நாட்டில் இருக்கின்ற இடம் தெரியாமல் போனதும், கொலையும்,...

“நாஸ்திக”த்தின் சக்தி 0

“நாஸ்திக”த்தின் சக்தி

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டி வரு கின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கின்றது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும். “நாஸ்திக”த்தின் சக்தியே சக்தி! குடி அரசு – செய்தி விளக்கம்...

“விஸ்வநேசன்” 0

“விஸ்வநேசன்”

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந. நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து ‘விஸ்வநேசன்’ என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது. அது சீக்கிரத்தில் வெளியாகலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகை கள் போலவும் ‘அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது’ என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர்களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல், சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டியதான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம். அன்றியும் அதன் பத்திராதிபராக இருக்கப்போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியாரவர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை...

மிஸ். மேயோ 0

மிஸ். மேயோ

மிஸ். மேயோ என்னும் ஓர் அமெரிக்க மாதால் இந்தியாவிலுள்ள சமூக மத ஆபாசங்களைப் பற்றி எழுதப்பட்ட “இந்திய தாய்” என்னும் புத்தகத் தில் உள்ள விஷயங்களை அநேகமாகப் பத்திரிகை உலகத்தில் கலந்திருக்கும் மக்கள் எல்லோரும் அறிந்திருக்கக் கூடும். அதோடு சீர்திருத்த உலகத்திலும் வைதீக உலகத்திலும் நடந்துள்ள சாதக பாதகமான அபிப்பிராயமுடைய வர்கள் எல்லோரும் அநேகமாக அறிந்திருக்கலாம். ஆனால் அப் புத்தகங்களிலுள்ள விஷயங்களை நம் நாட்டிள்ள எல்லா பத்திரிகைக்காரர் களும், அரசியல்காரர்களும், எல்லாச் சீர்த்திருத்தக்காரர்களும், எல்லா வைதீகர்களும், எல்லா மேடைப் பிரசங்கிகளும் வெளியிட்டு மிஸ். மேயோ அம்மையை கைவலிக்க வாய்வலிக்க இழி மொழிகளால் வைதார்களே ஒழிய இன்றையவரையில் இனிமேலாவது இதைப்போல் இனியுமொரு புத்தகம் ஒருவரும் எழுதாமலிருப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்தார்கள் இல்லை. அன்றியும் அவ்வம்மை எழுதிய விஷயங்களை தைரியமாய் மறுத்துக் கூறி வாதுக்கழைத்தார்களும் இல்லை. ஆனால் அப்புத்தகத்திற்கு ‘பதில்’ என்பதாக ஏதேதோ பொருத்தமற்ற குப்பைக் கூளங்களையும் பழி வாங்கும் நோக்கம் கொண்ட இழிவான...

பஹிஷ்காரப் புரட்டும் சர்வகக்ஷி மகாநாட்டுப் புரட்டும் 0

பஹிஷ்காரப் புரட்டும் சர்வகக்ஷி மகாநாட்டுப் புரட்டும்

சர்வகக்ஷியாரும் சேர்ந்து ஒரு சுயராஜ்யதிட்டம் போட்டுவிட்டதாகவும் அதை எல்லோரும் சேர்ந்து ஒப்புக் கொண்டதாகவும் இனி பொது ஜனங்களும் சர்க்காரும் அதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி யென்றும் அரசியல் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைகள் ஊளையிடுகின்றன. இது ஒரு அன்னக் காவடி, “இராஜா மகளுக்கும் எனக்கும் கல்யாணம் தீர்மானம் ஆகிவிட்டது. ஆனால் ராஜாவும் அவனது மகளும் சம்மதம் கொடுக்க வேண்டியது மாத்திரம்தான் பாக்கியாய் இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டது போலிருக்கிறது. சர்வ கக்ஷி மகாநாடு என்பது என்ன? அதில் யார் யார் இருந்து “திட்டம்” செய்தார்கள்? அவர்களுக்கும் நாட்டின் ஏழை மக்களுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? இந்தியாவில் உள்ள எந்த ஜாதியாருக்கு அல்லது எந்த மதக்காரருக்கு அல்லது எந்த தொழில் காரர்களுக்கு இவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடும்? மகமதிய சபையார்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவ சபையார்கள் ஒப்புக் கொள்கின்றார்களா? இந்து சபையார் ஒப்புக் கொள் கிறார்களா? பார்ப்பன சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? பார்ப்பன ரல்லாதார்...

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை  – சித்திரபுத்திரன் 0

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை – சித்திரபுத்திரன்

சைவன் :– ஓய்! என்னாங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர். பார்ப்பனன் :– வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ ஹிம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்கு சாகின்றோமோ, நாளைக்கு சாகின்றோமோ; இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன். சைவன் :- என்னங்காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன, போக்கிரித்தனமா அல்லவா? பார்ப்பனன்:- கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமேயொழிய விஷயம் புலப்படுவதுதான் கஷ்டம். சைவன்:- என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது. பார்ப்பனன் :– இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார...

வடநாட்டுக் கடவுள்கள் 0

வடநாட்டுக் கடவுள்கள்

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய nக்ஷத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு பூசை செய்யவும், கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமைபெற்ற சாமிகளாகவே இருக்கின்றன. ஆனால் தென்னாட்டிலோ அதே சாமிகளைத் தொடாத போதிலும் கிட்டப் போய் கும்பிட்டாலும் அல்லது சிலர் கோயிலுக்குள்ளே புகுந்துவிட்டாலும் உடனே அச்சாமிகள் செத்துப்போய்விடுகின்றன. ஆனால் பார்ப்பானுக்குப் பணமும் சோறும் கொடுத்தால் மறுபடியும் அவைகள் உயிர்பெற்று விடுகின்றன. எனவே நமது தென்னாட்டுச் சாமிகளின் சக்திகள் கூட நமது பார்ப்பனர்களிடம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இப்போது மத்திய மாகாணத்தில் வார்தாவென்னுமிடத்தில் உள்ள சாமிகள் காசி முதலியவைகளிலுள்ள சாமிகளைப் போலவே தங்கள் சக்தி யை பிராமணனிடமிருந்து விடுதலை செய்து கொண்டதாகத் தெரியவரு கின்றது. அதாவது,...

* ருஷியாவிலும் “கடவுளுக்கு ஆபத்து” மாஸ்கோவில் கடவுள் மறுப்பு மகாநாடு 0

* ருஷியாவிலும் “கடவுளுக்கு ஆபத்து” மாஸ்கோவில் கடவுள் மறுப்பு மகாநாடு

10-6-29 ² யில் மாஸ்கோ நகரத்தில் கடவுள் மறுப்பு மகாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு சோவியத் ராஜ்யம் முழுவதிலுமிருந்து 700 பிரதிநிதிகளும், ஜர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் முதலிய ஐரோப்பிய நாடு முழுவதிலுமிருந்து பல பிரதிநிதிகளும் அன்பர்களும் விஜயம் செய்தி ருந்தார்கள். இம்மகாநாட்டின் சார்பாக கடவுள் மறுப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடவுள் மறுப்புக் கொண்டாட்டங்களும் நடை பெற்றன. * * சுயமரியாதை மாகாணச் சங்கம் காரியதரிசி, சுயமரியாதை மாகாணச் சங்கம், “ திராவிடன்” பதிப்பகம், 14, மவுண்ட் ரோடு, சென்னை. ஐயா, என்னைத் தங்கள் சங்கத்தின் அங்கத்தினராய்ச் சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளுகின்றேன். இத்துடன் ஓர் ஆண்டுக் கட்டணம் 0-2-0 அனுப்பி யிருக்கின்றேன். பெயர் …………………………………………………………………………………………………….. விலாசம் ………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………….. (இதில் கையொப்பமிட்டு வெட்டி அனுப்பவும்)

திரு. வேதாசலம் அவர்களின் கடிதம் 0

திரு. வேதாசலம் அவர்களின் கடிதம்

பல்லாவரம் திரு. வேதாசலம் அவர்கள் திரு.ஈ.வெ. இராமசாமி நாயக்கருக்கு திரு. விஸ்வநாதம் பிள்ளை அவர்கள் மூலம் எழுதிய கடிதம்:- அன்புள்ள ஐயா, நலம், தங்கள் நலத்தைத் தெரிவித்தல் வேண்டும். என்னைப் பற்றிய ஒரு குறிப்பு ‘குடி அரசு’ பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக திருச்சி திரு. விஸ்வநாத பிள்ளை வாயிலாக இன்று அறிந்தேன். சென்னை குகானந்த நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி முறையைப்பற்றித் ‘திராவிடன்’ ‘தமிழ் நாடு’ பத்திரிகைகளிற் போந்துள்ள சிலவுரைகளை நம்பி, அக்குறிப்புத் தங்களால் வரையப்பட்டதென அறிகின்றேன். தங்களுக்காவது, தங்கள் இயக் கத்தைச் சார்ந்த அன்பர்கட்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதுமில்லை, யாண்டும் சொல்லி யதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண் டாம். என்றாலும், கடவுளைப்பற்றியும் அடியார்களைப் பற்றியும் தாங்கள் கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடை யேன்னல்லேன். பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள் வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்பு...

திரு. வேதாசலம் 0

திரு. வேதாசலம்

திரு. வேதாசலம் அவர்கள் சென்னை பாலசுப்பரமணிய பக்த சபை ஆண்டு விழாவில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றியும் திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கரைப் பற்றியும் வசை மொழிகளும் கடுமொழிகளும் மொழிந்ததாகவும் அதுபற்றி அதுசமயம் அங்கு வரநேர்ந்த திருவாளர்கள் கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ராமநாதன் ஆகியோர் களுக்கும் திரு. வேதாசலம் அவர்களுக்கும் வாக்குவாதப் போர் நடந்ததாகவும் “திராவிடன்” முதலிய பத்திரிகைகளில் காணப்பட்டதோடு பல நிரூபர்களும் நமக்கு எழுதி வந்தார்கள். ஆகிலும் திரு. வேதாசலம் அவர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால் பத்திரிகைகளிலும் நிரூபங்களிலும் கண்டவற்றிற்கு சமாதானம் எழுதுவது என்பது நமக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. ஏனெனில், முதலாவது, இவ்வளவு மோசமாக அவர் பேசியிருப்பாரா என்பது. இரண்டாவது, அப்படியே பேசி இருக்கலாமென்றாலும் அது அவர் மனதாரப் பேசியதாக இருக்காது என்பதும், மற்றபடி ஏதோ சமய சந்தர்ப்பங்கள் இம்மாதிரி பேச...

இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா? 0

இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா?

தென்நாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக்கையும் உபயோகப்படுத்திக்கொண்டும், அவர்களுடைய பெயர் களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல் களிலும் ஜில்லா, தாலூக்கா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத் திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள். இதற்கு சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்து கொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள். அந்த சமயத்தில் “குடி அரசு” ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்க லாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால்...

பார்ப்பனீயம் 0

பார்ப்பனீயம்

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான “குடி அரசு” அதாவது 5.8.28 ² மலரில் பார்ப்பனீயம் என்பது பற்றி எழுதிய தலையங்கத்தில், சென்னை திருவல்லிக்கேணி உத்திராதி மடத்தில் நடந்த வைதீக பார்ப்பனர் கூட்டத்தில் தலைமை வகித்த திருவாளர் வி.வி. சீனிவாசய்யங்கார் அவர்களின் அக்கிராசன உபன்யாசத்தைப் பற்றி விரித்து விட்டு உபன்யாசகரான திரு. என். சீனிவாசாச்சாரியாரின் உபன்யாசத்தைப் பற்றி பின்னர் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படி இவ்வாரம் அதைப்பற்றி எழுதுகின்றோம். திரு. சீனிவாசாச்சாரியார் அவர்கள் தமது சொற்பொழிவில் சொல்லியிருக்கும் விஷயங்களைச் சுருக்கி ³ முதல் வியாசத்திலேயே வெளியிட்டி ருக்கின்றோம். அதில் திரு. ஆச்சாரியார் “பிராமண சங்கம் பல வருஷங்களாக இந்த நாட்டில் வேலை செய்து வருகின்றது” என்றும், “எவன் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டு யோக்கியனாக இருக்கின்றானோ அவனே பிராமணன்” என்றும் சொல்லியிருக்கின்றார். அப்படியானால் இப்போது பிராமணர் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் எல்லாம் தம் மனதை அடக்கி ஆண்டு கொண்டு...

நமதியக்க ஸ்தாபனம் 0

நமதியக்க ஸ்தாபனம்

சுயமரியாதை இயக்க ஸ்தாபனமானது சென்னையில் பொது ஸ்தாபன பதிவுச் சட்டபடி சென்னையில் பதிவு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரப்படுகின்றன. அது முடிந்தவுடன் ‘குடி அரசு’ ‘ரிவோல்ட்’ ஆகிய வாரப் பத்திரிகைகளும் ‘பகுத்தறிவு’ என்னும் மாதப் பத்திரிகையும் சுயமரியாதை சங்கச் சார்பாகவே பிரசுரிக்கப்படும். ‘திராவிடன்’ தினசரிப் பத்திரிகையும் அதன் நிர்வாகப் பொறுப்பும் நம்மிடம் இருக்கும்வரை இச்சங்கச் சார்பாகவே பதிப்பித்து வரப்படும். சுமார் இரண்டு வருஷ காலமாகவே பத்திரிகைகள் நடத்தும் பொறுப்பை யார் வசமாவது ஒப்புவித்து விடுவதற்கு நாம் மிகுதியும் முயற்சி செய்து வந்தது நாம் பல நண்பர்களிடம் நேரில் தெரிவித்து கொண்டதாலும் பத்திரிகையின் ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்தில் எழுதிவரும் தலையங்கத்தாலும் நன்றாய்த் தெரிந்திருக்கலாம். பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டம், அதுவும், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தின் பிரசாரத்திற்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு இருக்கும் கஷ்டம் அதை அனுபவித் தவர்களுக்குத்தான் தெரியவரும். உதாரணமாக “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் தென்னிந்திய நலஉரிமை சங்கச் சார்பாக சுமார் 12...

தென்னாற்காடு ஜில்லா  ஆதிதிராவிடர் மகாநாடு  கள்ளக்குறிச்சி தாலூகா ஆ:தி: மகாநாடு 0

தென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு கள்ளக்குறிச்சி தாலூகா ஆ:தி: மகாநாடு

சகோதர சகோதரிகளே! இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன். தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு – அதாவது கடவுள்...

தொழிலாளர் தூது 0

தொழிலாளர் தூது

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ் பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும் தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற்கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள். தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக் காரர்கள் கொடுமைப்படுத்திய விஷயங்களையும், சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்குச் செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றை யும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகின்றது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபிகள் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கினதைப் பற்றியும்...

வட இந்தியாவிலும்  “நாஸ்திகம்” 0

வட இந்தியாவிலும் “நாஸ்திகம்”

இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் “போல்ஷ்விக்காரர்கள் (எதிரிகள்) கடவுள் நம்பிக்கையை ஒழிப்பவர்கள். இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள், பௌத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்து மதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துபட வேண்டும். இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரசாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்……… இக் கொள்கைக் காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அநுசரித்து அதற்கேற்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும், லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர்”...

காங்கிரசு கட்டுப்பாடு 0

காங்கிரசு கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டு விட்டதி னால் காங்கிரசுக்காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூடப்படப் போகும் சட்டசபை மீட்டிங்குகளுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசு கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைபடி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்வு செய்தாய் விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால், சென்னை மாகாண தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் சட்டசபைக்கு போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்ட ளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம். குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 16.06.1929

இந்து கடவுள்கள் 0

இந்து கடவுள்கள்

– சித்திரபுத்திரன் 1. பிள்ளையார் இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை “எண்ணித் தொலையாது. ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான நேரங் களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாய்க்கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக்கூடிய காரியமல்ல. இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல் வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்பவர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகர் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு. நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய்...

திருக்கோவிலூரில் சுயமரியாதைப் பிரசாரம்  நமது முன்னேற்றம் 0

திருக்கோவிலூரில் சுயமரியாதைப் பிரசாரம் நமது முன்னேற்றம்

சகோதரர்களே! நான் உங்கள் ஊருக்கு இதற்கு முன் இரண்டொரு தடவைகள் வந்திருக்கின்றேன். ஒரு தடவை ஒத்துழையாமையின்போது உங்கள் ஜில்லாவாகிய தென் ஆற்காடு ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்த காலத்தில், இந்த மண்டபத்துக்கெதிரில் பேசியிருப்பதாக எனக்கு ஞாபகமிருக்கின்றது. இன்னொரு தடவை காலஞ்சென்ற நமது நண்பர் திரு.ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் இருக்கின்ற போழ்து திரு.பிள்ளை யவர்களால் அழைக்கப்பட்டு உங்களூர்வாசிகளாகிய திரு.லட்சுமணசாமி முதலியார், திரு.கிருஷ்ணசாமி பிள்ளை முதலியவர்களாலும் கடைவீதிக் காரர்களாலும் பெரிய ஆடம்பரத்துடன் வரவேற்கப்பட்டு, இவ்வூருக்கு வந்து இதே இடத்தில் பேசியிருக்கிறேன். நான் இங்கு காலஞ்சென்ற எனது நண்பர் குமாரசாமியாரவர்களின் குடும்பத்தாரைக் கண்டு எனது அனுதாபத்தைத் தெரிவித்து விட்டுப் போகலாமென வந்த இடத்தில் ஞானியார் ஆசிரமக் காரியஸ்தர் திரு.வடிவேலு செட்டியாரும் அவரது நண்பர்களும் இன்று இங்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் நானும் சம்மதித்து ஏதோ சில வார்த்தைகள் இன்று இங்கு பேச வந்திருக்கின்றேன். நான் எடுத்துக் கொண்ட விஷயம் பேசத் தொடங்கு முன்...

இப்பொழுது மதம் எங்கே? 0

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாடசாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று ‘மகந்து’வும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல்லாதார்களை விலக்கிவிட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாசமும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லா பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே இப்போது அந்த மதம் இருக்கிறதா போய்விட்டதா? என்று கேட்கின்றோம். பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் “பேய்” இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப் போகும் என் பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது. குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 16.06.1929

காங்கிரசின் யோக்கியதை 0

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசைப்பற்றி நாம் அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்ல வென்றும் இவர்களுக்கு, கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 ´ காலமாக விடாமல் சொல்லி வருகின்றோம். இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரசாரமும் செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில், “காங்கிரசு பணக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது. உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப் பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகிவிட்டார்கள். காங்கிரசுக்கு எதிரி களாய்விட்டார்கள். முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள்” என்று எழுதி இருக்கின்றது. இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம். குடி அரசு – செய்தி...

சுயமரியாதைத் தொண்டர்கள்                 மகாநாடு 0

சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர் களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப் பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரnவுற்புக் கமிட்டியார் தெரிந் தெடுத்ததற்கு நாம் அவர் களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர் களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சௌந்திர பாண்டியனார், சொ. முரு கப்பர், எஸ். குருசாமி ஆகிய முக்கியமானவர்களில் ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே, செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக்கொள்கையையே பின்பற்றுகிற வருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்”க்கு பெயரளவில் நான் பத்திராதிபனே ஒழிய காரியத்தில் அவரேதான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும், கருத்துக் களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளிமாகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே...

“குடி அரசு” வாசகர்களுக்கு  ஓர் வேண்டுகோள் 0

“குடி அரசு” வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இந்த இரண்டு மூன்று வாரமாய் தெரிவித்து வந்தபடி நமது பத்திரிகாலயத்தை சென்னையில் நிறுவவேண்டிய ஏற்பாடு செய்து வருகின்றோம். இதனால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் நமது பத்திரிகை தடைப்படலாம். பிறகு சென்னையிலிருந்து மேல்காகிதத்துடனும் 20 பக்கங்களு டனும் வெளிவரும். குறிப்பு :- “குடி அரசு” ஆரம்பித்த இந்த ஐந்து வருஷகாலத்தில், இரண்டாவது வருஷ முதலில் ஒரு தடவை ஒரே வாரமும், இப்போது ஒரு தடவையும் தான் அதுவும் அபி விர்த்தி காரணமாகவேதான் தவக்கப்பட்டிருப்பதால், வாசகர் கள் அவசியம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின் றோம். ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 02.06.1929

சைவப் பெரியார்  மகாநாடு 0

சைவப் பெரியார் மகாநாடு

திருநெல்வேலியிலும், திருப்பாப்புலியூரிலும் சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர்கள் அண்ணாமலை பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிருஷ்ண சாமி பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும் மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர் செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவ சமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரசாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும் அதைப்பற்றி நாம் முன் எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாக பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன் மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 02.06.1929

ஒத்திபோடுதல் 0

ஒத்திபோடுதல்

இந்திய சட்டசபை மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்தி போட்டு விட்டார்கள். அதுபோலவே, திரு. கல்யாண சுந்தர முதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும், சைவப் பெரியார்கள் மகா நாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டுவிடும். திரு.வரதராஜுலுவின் உத்தியோகமேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்திபோடப்பட்டாய்விட்டது. இதுமாத்திரமல்லாமல் திரு.சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்கு பிரசாரமும், திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரசாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத் துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்படலாம். அன்றியும் “தேசமே பிரதான” மென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமானப் பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்பட்டுவிடும். இவற்றையெல்லாம் விட, 1929-ம் வருஷம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு 12 மணி 5 நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால்...

திரு. வேதாசலம் 0

திரு. வேதாசலம்

திரு. வேதாசலம் அவர்களின் சென்னை ராயபேட்டை குகாநந்த நிலைய ஆண்டு விழா வைபவத்தின் அக்கிராசனப் பிரசங்கத்திலும் திருவாளர் தண்டபாணிபிள்ளை, கண்ணப்பர், ராமனாதன் ஆகியோர்களின் வாதங்களின் போதும் பேசிய விஷயங்களைப்பற்றி வெளியான “தமிழ்நாடு” “திராவிடன்” பத்திரிகையில் கண்ட விஷயங்களுக்கு திரு வேதாசலம் அவர்களின் சமாதானமோ மறுப்போ ஒரு வாரத்தில் வராத பக்ஷத்தில் நாம் அதன் ஆராய்ச்சியை தெரிவிப்பதாக எழுதியிருந்தோம், அந்தப்படி இதுவரை அவரால் யாதொரு மறுப்போ சமாதானமோ இதுவரை வராததால் திரு. வேதாசலம் என்னும் தலைப்பில் அவற்றை ஆராய்ந்து எழுதி வருவோம் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்த நிலையில் மற்றவர்கள் எழுதும் வியாசங்களுக்கு போதிய இடமளிக்க முடியாமைக்கும் வருந்துகின்றோம். குடி அரசு – அறிவிப்பு – 19.08.1928

வரதராஜுலுவின் விஷமப் பிரசாரம் 0

வரதராஜுலுவின் விஷமப் பிரசாரம்

“தமிழ்நாடு” பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சில் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டுவிட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத் தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார். திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும் முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும் நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். எனவே இதனால் ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரி யையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம்...

சுயமரியாதை போதனாமுறைப் பாடசாலை 0

சுயமரியாதை போதனாமுறைப் பாடசாலை

ஈரோட்டில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு போதனாமுறைப் பாட சாலை ஏற்படுத்துவதாய் ‘குடி அரசி’லும் ‘திராவிடனி’லும் வெளியிட்டிருந்த படி நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பவைகளில் சுமார் 20 பேர்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் கண்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் தயவு செய்து உடனே அதில் கண்ட விபரங்களுக்கு பதில் எழுதிவிட்டு இவிடமிருந்து வரும் படி கடிதம் வந்தால் ஆவணி மாதம் 15 ம் தேதி வாக்கில் இவிடம் இருக்கத் தயாராயிருக்க வேண்டும். படுக்கை, புராணம், சாஸ்திரம் என்பதான புஸ்த கங்கள் முதலிய அவரவர்களுக்கு வேண்டிய சவுகரியமான சாமான்களுடன் வரவேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குடி அரசு – அறிவிப்பு – 19.08.1928

இனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும்  திருத்தப் போகின்றார்களாம் 0

இனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம்

நல்லதனமாகவும், நயமாகவும், கெஞ்சியும் கேட்பவர்களைப் பற்றி சாதாரண மனிதர்கள் சற்றும் லக்ஷியம் செய்வதில்லை. எவ்வளவுக் கெவ் வளவு நயமும் கெஞ்சுதலும் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு ஆணவமும் பிடிவாதமும் மிரட்டுதலும் ஏற்படுவது நடுத்தர மனிதர்களிடம் காணும் சுபாவம். சாதாரண நடுத்தர மக்களின் குணமே இப்படி இருக்கு மானால் மற்றபடி கீழ்த்தர மக்கள் அதாவது சமய சமூக வித்தியாச சேற்றில் உழன்று கொண்டு அதன் மூலம் ஆதிக்கமும் வயிற்றுப் பிழைப்பும், ஏற் படுத்திக் கொண்ட இழி மக்களிடம் கெஞ்சுதலுக்கும் நல்லதனத்திற்கும் செவிசாய்ப்புக்கும் எதிர்பார்ப்பது எங்ஙனம் கூடும்? உதாரணமாக, சமயக்கட்டுப்பாட்டுக் கொடுமைகளும், சமூகக் கட்டுப் பாட்டுக் கொடுமைகளும், நமது நாட்டைப் பாழாக்கி அன்னியர் வசம் ஒப்புவித்து மானமிழந்து நிற்கச் செய்கின்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்ட பிறகும், நாடு மானத்துடன் அவைகளை ஒழித்தாலல்லது வாழ முடியாது என்பதை அறிந்தும் அவைகளை ஒழித்து, விடுதலையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதுடன் மக்களின் வறுமையையும் எளிமை யையும் ஒழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு...

“கோவில் பிரவேசம்” 0

“கோவில் பிரவேசம்”

தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும், உள்ளே போய் சுவாமி தெரிசனம் செய்வதாலோ தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.அக் கோயில்களின் நிபந்தனைகள் மக்கள் சுயமரியாதைக்கு இடை யூறாகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் இவை களுக்கு ஆதாரமான சகலத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே கருதி இதை செய்யத் தூண்டுகின்றோமேயல்லாது சாமி என்று ஒன்று இருந்தால் அங்கு தான் இருக்கக்கூடுமென்றோ, அந்தக் கல்லுச்சாமிக்கு பக்கத்தில் போவதால் அதிக லாபம் கிடைக்குமென்றோ நினைத்திருக்கும் படியான அவ்வளவு முட்டாள்தனத்துடன் நாம் கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை கேட்கவில்லை. குடி அரசு – செய்தி விளக்கம் – 19.08.1928

உத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும் 0

உத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும்

திரு வரதராஜுலுக்கு கொஞ்சகாலமாய் உத்தியோகப் பைத்தியம் தலைக்கேறி விட்டது. தேசீயமெல்லாம் இப்போது உத்தியோகத்திற் குள்ளாகவே ஐக்கியமாய் விட்டது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கூட சேருவதற்கு சுயேச்சையுள்ள பார்ப்பனரல்லாதார் ஒருவருமில்லாமல் போனதையும் தமது கக்ஷிக்கு எந்த விதத்திலும் கூலிகளையும் காலிகளையும் விட வேறு யாருடைய அனுதாபமும் இல்லாமல் போவதையும் பார்த்து நாங்கள் உத்தியோகங்கள் ஏற்றுக் கொள்ள சம்மதித்து உத்தியோகங்கள் சம்பாதிக்கப் போகின்றோம், யாராவது வருகின்றீர்களா? என்று கேட்டவுடன் திரு. வரதராஜுலுவைப் போன்ற ஆள்கள் கூட அப்படியானால் தமக்கும் ஏதாவது கிடைக்காதா என்ற எண்ணத்தின் மீது இப்போது அய்யங்காருடன் சேர்ந்து கொண்டு உத்தியோகம் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசிய மென்றும் “நான் வெகு காலமாக இதைச் சொல்லிவந்திருக்கிறேன்” என்றும் சொல்லிக் கொண்டு அய்யங்கார் பின்னால் கடற்கரைக்குச் சென்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார். ஆனால் திரு. வரதராஜுலு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் ஒப்புக் கொள்ளுவதற்கும் சொல்லும் காரணம் தான் நம்மை இந்த வியாசம் எழுதச் செய்கின்றது. அதாவது :-...

இந்துமத தத்துவம் 0

இந்துமத தத்துவம்

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரண வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதைப்பற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம். மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர்களே காரணம் என்று தமது “இந்தியத் தாய்” என்ற புத்தகத்தில் எழுதியதற்கு “தேசீயத் தலைவர்களான” திரு. சத்தியமூர்த்தி பனக்கால் ராஜாவை சமூகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி என்ற பொருள்படக் கூறினார். மற்றொரு “தேசீயத் தலைவர்” மிஸ். மேயோவை “குப்பைக்காரி” என்று கூறினார். இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம். சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை, அறிவு பாஷை என்று சொல்லி அதற்கு பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ...