Author: admin

சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் 0

சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

நமது நாட்டில் தற்சமயம் உண்மையானதும் சுயநலமற்றதுமான பொது நல சேவை செய்கின்றவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியது நமது நாட்டு மக்களுக்குள் கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பு-உயர்வு-தாழ்வை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை சுயமரியாதையுடன் வாழச்செய்ய வேண்டியதேயாகும். இதை நாம் பலதடவைகளில் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். எனினும் மக்களுக்குள் சமத்துவமும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட்டுவிட்டால் வாழமுடியாத நிலையில் நமது நாட்டில் சில சமூகமும் சில தனிப்பட்ட மக்களும் இருப்பதால், அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையை இவ்வித்தியாசத்தின் மீதே நிலைநிறுத்திக் கொண்டதால், அவர்கள் மற்ற வர்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமாக இருந்தே தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டியதான நிலைமை அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை நாம் மறைத்துப் பேசுவதில் பயனில்லை. எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் இப்படிப்பட்டஒரு கூட்டம் இருந்தே வந்து தங்கள் சுயநலத்தின் பொருட்டு மக்களின் நலத்தை பாழ்படுத்தி வந்திருப்பது சரித்திர வாயிலான உண்மையேயாகும். எனினும் சமத்துவமும் சுயமரியாதையும் பெற்று முன்னேற்ற மடைந்து வரும் நாடுகளின் சரித்திரங்களைப்...

“இராமாயணத்தின் ஆபாசம்” 0

“இராமாயணத்தின் ஆபாசம்”

உலகத்தில், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் ஆழ்த்தி வைப்பதற்குரிய சான்றுகள் ஆழ்த்தும் சமூகத்திற்றான் காணப்படுவது வழக்கம். ஆனால் தமிழ் மக்களை மிருகங்கள், குரங்குகள், பேய்கள், இராக்கதர்கள், கொடியவர்கள், குடிகாரர்கள், சோரம் புரிபவர்கள், கொலை நிகழ்த்துபவர்கள், அநாகரிகர்கள், வரன்முறையற்றவர்கள், தாசி மக்கள், அடிமைகள், குரூபிகள் என்ற வகையில் திரித்துக் கூற ஆரியர்கள் இராமாயணம் என்னும் ஒரு கட்டுக் கதையை வரைந்து, அது ஒரு மதியின்மிக்க ஆரிய முனிவனால் எழுதப்பட்டது என்று அதனைப் போற்றி, அண்டமுகடு முட்டும் வரையிற் புகழ்ந்து, அதற்கோர் மொழி பெயர்ப்பு போன்ற கம்பராமாயணத்தையும் வரைந்து இத் தென்னிந்தி யாவில் புதுக்கியதும், இத்தென்னிந்திய மக்கள் தம் இழிவையே அடிப்படை யாகக் கொண்டு வரையப் பெற்ற இராமாயணத்தை ஒரு இதிகாசம் என ஏற்று அதனை மெய் என்று நம்பி அவ்விதிகாச கதாநாயக, நாயகிகளை தெய்வங்களாக ஏற்றதும் வருந்தத்தக்கதோர் உண்மையாகும். அறிவுடைய திராவிட மக்கள் சூழ்ச்சியில் மிகுந்த ஆரியக் கதையாம் இராமாயணத்தை நம்பி பார்ப்பனர்...

சென்னை  தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு 0

சென்னை தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு

சகோதரர்களே! சகோதரிகளே! நமது மகாநாட்டின் நடவடிக்கைகள் எல்லாம் அநேகமாய் முடிவு பெற்றுவிட்டன. மகாநாடுகளின் வழக்கப்படி பார்த்தால் மகாநாட்டுத் தலைவர் என்கின்ற முறையில் எனது முடிவுரை என்பதாக சில வார்த்தை களையாவது நான் சொல்லியாக வேண்டும். நீங்களும் அதை குறிப்பாய் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை உணருகிறேன். மகாநாட்டு நடவடிக்கைகளில் ஆதி முதல் இதுவரை ஊக்கத்தோடும் உணர்ச்சியோடும் இடையறாக் கவனத்தோடும் கலந்திருந்த உங்களுக்கு இனி நான் அதிகமாய் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லையென்றே நினைக்கின்றேன். ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே சீர்திருத்தம் என்பதைப் பற்றி பேசப்பட்டு வருகிறதாய் அறியக் கிடக்கின்றது. எவ்வித சீர்திருத்தத்தைப் பற்றி பேசப்பட்டு வந்ததோ அது ஒரு சிறிதும் காரியத்தில் வெற்றிபெறவில்லை. சீர்திருத்தக்காரர்களும் தங்கள் சீர்திருத்தங்களைப் பற்றி வாயளவில் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்களே யொழிய காரியத்தில் கொண்டு வருவதில் வெற்றியடையவே இல்லை. ஆனாலும் இப்போதும் அம்மாதிரி யாகவேதான் வாய்ப்பேச்சிலும் வெறும் தீர்மானத்திலும் நடைபெறுகின்றதே யொழிய காரியத்தில் நடைபெறச் செய்யும் மார்க்கத்திற்கு கொண்டுபோய் விடும்படியான சீர்திருத்தம் செய்வதற்கு ஆட்களைக்...

சுயமரியாதை இயக்கத்தின் பலன் 0

சுயமரியாதை இயக்கத்தின் பலன்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும் புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரசாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களை யும் பற்றி, இரண்டொரு நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றோம். பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்பதென்பதோ, அவர்கள் கலந்துள்ள கூட்டங்களில் சேர்வதென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்கள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றது. கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல் ஆகிய காரியங்களில் அலக்ஷியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்தவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. பண்டிகைகள், விரதங்கள், சடங்குகள் முதலியவைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலக்ஷியமாக ஏதோ நிர்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன. விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவை விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து...

தம்பட்டம்  மேயோக்கள் 0

தம்பட்டம் மேயோக்கள்

– சித்திரபுத்திரன் ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர்களுக்கும், பண்டிதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி. இந்த நாட்டில் பார்ப்பனீயம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும், இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும் வரையும், விஷ்ணு புராணமும் சிவமகாபுராணமும் சிவ பராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும் பாராசர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும், சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களை கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர் களையும் திருட்டுத்தனமாக விபசாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ளவரையும், 2 பெண் ஜாதி 3 பெண் ஜாதி 100...

மதப்பித்து 0

மதப்பித்து

நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படி பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும் பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ, அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்கும் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு, அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக்கொண்டு வருகின்றான். ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படுகின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவ தால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களை சொல்லிக் கொள்ள இடமுண்டு. ஆனால் மதமானது பிறவியின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும் அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை. மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள்கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும் உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன்,...

பிரம்மஞான சங்கமும்  பார்ப்பனரல்லாதாரும் 0

பிரம்மஞான சங்கமும் பார்ப்பனரல்லாதாரும்

உலகத்திலுள்ள மக்கள் மனித சக்தியை உணராததற்கும், அறிவின் அற்புதத்தின் கரைகாணாததற்கும் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து ஒற்று மையை கெடுத்திருப்பதற்கும், சுயநலம் பிற நல அலக்ஷியம், துவேஷம் முதலியவைகள் ஏற்பட்டு பரோபகாரம், இரக்கம், அன்பு முதலியவைகள் அருகிப் போனதற்கும், இயற்கை இன்பங்களும் சுதந்திர உரிமைகளும் மாறி துக்கத்தையும், நிபந்தனை அற்ற அடிமைத் தனத்தையும் இன்பமாகவும், சுதந்திரமாகவும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியதற்கும் முக்கிய காரணம் மதங்கள் என்பதே எமது அபிப்பிராயம். இந்த மதங்களேதான் மக்களுக்கு கொடுங்கோன்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்ததென்றுகூட சொல்ல வேண்டியிருக் கின்றது. உலகத்தில் பல காரணங்களால் ஏற்படும் பூகம்பம், எரிமலைக் குழம்பு, பூமிப்பிளவு, மண்மாரி, மழை, வெள்ளம், புயல்காற்று, இடி, மின்னல் ஆகியவைகள் போலவும், காலரா, பிளேக்கு முதலிய ரோகங்கள் போலவும் மனித சமூக வீழ்ச்சிக்கு அடிக்கடி வேறு வேறு வேஷத்தின் பேரால் மதங்கள் என்பவைகளும் தோன்றிக் கொண்டே வருவதுமுண்டு. இம்மதக்கேடுகளை...

தென் இந்திய  சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு 0

தென் இந்திய சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே! இந்த பெரியதும் முக்கியமானதுமான மகாநாட்டிற்கு என்னை தலைவ னாக தெரிந்தெடுத்ததன் மூலம் தாங்கள் எனக்களித்த கௌரவத்திற்காக எனது மனமார்ந்த நன்றி அறிதலை தங்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன். இம்மகாநாடு சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு என்று சொல்லப்படுகிறது. எனவே, இத்தகைய ஒரு மகாநாட்டுக்கு சீர்திருத்தத்தில் மிகுதியும் நம்பிக்கையுள்ள ஒருவரைத் தலைவராக தெரிந்தெடுத்திருப்பீர்களானால் அது மிகவும் பொருத்தமுடையதாக இருந்திருக்கும் என்று நான் சொல் வதற்காக என்னை மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏனெனில் வரவர எனக்கு சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை மறைந்து கொண்டே போகின்றது. அன்றியும் நமது நாட்டை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பவர்களுக்கும், நமது நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர்களுக்கும், எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலை அல்ல என்பதே எனது அபிப்பிராயம். மற்றென்னை யெனில் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறின பொறுமை கொண்ட யோசனையின்...

இந்தியாவில் மிஷனெரி உலகம் 0

இந்தியாவில் மிஷனெரி உலகம்

திருவாளர் ஏ.ஜே.அன்பையன் அவர்களால் வெளியிடப்பெற்ற இந்தியாவில் ‘மிஷனெரி உலகம்’ என்னும் பெயரிய நூலொன்று எம் மதிப்புரைக்கு அனுப்பப் பெற்றோம். மிகப்பரந்த நோக்கத்துடன் வரையப் பெற்ற இந்நூலின் கண், இந்தியா விலுள்ள மேனாட்டுக் கிறிஸ்துவப் பிரசாரகர்களின் நிலைமையைப் பற்றித் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் செந்நெறியில் செல்லாது, தீநெறியாம் சூழ்ச்சியிலும், சுயநலத்திலும், பிரித்தாளும் வழியிலு மேயே செல்லுகின்றனர் என்று, இம்மேனாட்டு மதப் பிரசாரகர்களின் புரட்டை திரு. அன்பையன் பிறர் மனதில் எளிதிற் பதியுமாறு கூறியிருக்கின்றார். ஆங்காங்கே எல்லா மனிதர்களும் வேறுபாடின்றி பாராட்டற்குரிய அரிய உண்மைகள் மிளிர்கின்றன. ஒரு உண்மையை ஒரு மதம் என்று பெயரிட்டு வரையறுக்கும் போதே, அம்மதம் பொது மதமாய் இருப்பதற்குரிய இலக்கணத்தை இழந்து விடுதலால், எம்மதத்திற்கும் புரோகிதப்புரட்டு வேண்டுவது அவசியமாயிருக்கின்றது. இதுபோலவே வரையறுக்கப்பட்ட இக்கிறிஸ்துவ மதத்திலும் இப்புரோகிதர்கள் செய்யும் புரட்டை திரு. அன்பையன் வெளிப்படுத்துவதனால், மிஷெனரி களைத் தெய்வங்கள் என்று கருதி ஏமாற்றமடையும் அநேகர் நல்வழிப்படுதல் கூடும் என்று...

விதவா விவாகம் 0

விதவா விவாகம்

சகோதரிகளே! சகோதரர்களே!! உலகமானது இப்போது எம்மாதிரியான முன்னேற்றத்தில் போய்க் கொண்டிருக்கின்றதென்பதை நாம் பார்த்து வருகின்றோம். மனிதனது புத்திக்குப்படாத அற்புத சக்திகளெல்லாம் மனிதனிடமிருந்து வெளியாகிக் கொண்டு வருகின்றது. சையன்ஸ் அதாவது வஸ்து தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியின் பயனாக மகா அதிசயங்களை யெல்லாம் மனிதன் செய்கின்றான். சமீப முயற்சி என்னவென்றால், சந்திர மண்டலத்திற்குப் போக முயற்சிக்கத் தொடங்கி செவ்வாய் மண்டலத்திலிருந்து சமாச்சாரப் போக்குவரத்துகள் நடத்தப்பட்டு விட்டன. மற்றும் அடுத்த 500 வருடத்தில் மனிதன் அடையக்கூடிய முற்போக்கை இப்போதே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, நம்மைச் சுற்றியுள்ள உலகம் இந்நிலையிலிருக்க நாமோ நமது ஆராய்ச்சிக்காரர்களால் 3000 வருஷத்திற்கு முன்னால் நாம் இருந்த நிலையை அடைய வேண்டுமென்று தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்பட்டு பெருமைப் படுகின்றோம். அப்படிப்பட்ட தொல்காப்பியம் 2000 வருஷத்திற்கு முந்தியதா 3000 வருஷத்திற்கு முந்தியதா என்கின்ற ஆராய்ச்சி இன்னமும் நமக்குள் முடியவில்லை. ஆராய்ச்சிக்காரர்கள் யோக்கியதை இப்படி என்றால், நமது பண்டிதர்களுடைய யோக்கியதையோ சமணர்கள் கழுவேறப்பட்டார்களா அல்லது தானாக கழுவேறினார்களா...

இராஜகோபாலாச்சாரியின் தேசீயம் 0

இராஜகோபாலாச்சாரியின் தேசீயம்

சென்ற வாரம் பார்ப்பனர்களின் தேசியம் என்று தலையங்கமிட்டு திரு.சத்தியமூர்த்தி அய்யர் முதலிய பூரண சுயேச்சைவாதிகளுடையவும், காங்கிரஸ் வாதிகளுடையவும் தேசியத்தின் யோக்கியதையைப் பற்றி எழுதி இருந்தோம். இந்த வாரம் திரு.சி.இராஜகோபாலாச்சாரி போன்ற “ஒத்துழையா தியாகிகளின்” தேசியத்தைப் பற்றி எழுத வேண்டி நேரிட்டுவிட்டது. அதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூக்கா காங்கிரஸ் மகாநாட்டிற்கு அக்கிராசனம் வகித்த திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் தமது தலைமை உபன்யாசத்தில் வழக்கம் போல் தேசியப் புரட்டு பரிபாஷையாகிய தீண்டாமை, கதர், மதுவிலக்கு ஆகிய மூன்று வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, பார்ப்பன தேசிய சூழ்ச்சி பரிபாஷை யாகிய சாதித் துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என்னும் வார்த்தையைச் சொல்லிவிட்டு சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாகச் சொல்லி பாமர மக்களை கிளப்பிவிடப் பார்த்து இருக்கின்றார். சமீபத்தில் இவரால் வடநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட திரு.பட்டேல் அவர்களுக்கு இவர் எதைச் சொல்லிக் கொடுத்து நம்மையும் சுயமரியாதை இயக்கத்தையும் வையச் சொன்னாரோ அதே வார்த்தைகளை அப்படியே, சற்று மெருகு கொடுத்து...

பூனாவில் ஆலயப்பிரவேசம் தமிழ்நாட்டிலும் சத்தியாக்கிரகம் துவக்க யோசனை 0

பூனாவில் ஆலயப்பிரவேசம் தமிழ்நாட்டிலும் சத்தியாக்கிரகம் துவக்க யோசனை

சகோதரர்களே! நமது தமிழ் நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8, 9 மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3, 4 மாதமே ஆயின. ஆனால் பம்பாய்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கிவிட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வடநாட்டில் இல்லாமலும் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன. நாமோ மற்றொருவர் செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். நிற்க, சிலர் நம்மை “உங்களுக்குத் தான் இந்தமாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும்” என்று கேட்கின்றார் கள். ஆனால் சகோதரர்களே! நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப்போலவேதான். அதாவது, கோயில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய அவை கடவுள்கள் அல்லவென்பதை தாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் கடவுளை மனிதன் நினைக்க ஞாபகம் வருவதற்காகவே கோயிலும்...

சென்னை சட்டசபை 0

சென்னை சட்டசபை

இந்த வாரம் சென்னையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் மந்திரி கனம் முத்தய்யா முதலியார் அவர்கள் தமது இலாக்காவில் உள்ள உத்தியோகங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தியது பற்றி அவரைக் கண்டிப்பதற்காக சட்டசபையை ஒத்தி வைக்கவேண்டும் என்று ஒரு அவசரப் பிரேரேபனை பார்ப்பனர்களால் திரு. சாமி வெங்கிடா சலத்தைப் பிடித்து சுயராஜ்யக் கட்சி தலைவர் என்கிற முறையில் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கக்ஷி என்றும், சுயராஜ்யக் கக்ஷி என்றும், தேசீயக் கக்ஷி என்றும், அவைகளுக்கு சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதும், முட்டுக்கட்டை போடுவதுதான் கொள்கைகள் என்றும் சொல்லி பார்ப்பன ரல்லாதாரிலேயே சில கூலிகளை விட்டு பிரசாரம் செய்யச் செய்து பாமர மக்களை ஏமாற்றி சட்டசபைக்குப்போய் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பன ரல்லாதார் சமூகத்திற்கே விரோதமாய் பல கெடுதிகள் செய்து வந்திருப் பதுடன் இப்போது தைரியமாய் வெளியில் வந்து உத்தியோகப் பிச்சை கேட்கவும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு அளிக்கப்படும் சம சந்தர்ப் பத்தை ஒழித்து தங்கள் ஆதிக்கத்தையே எப்போதும் நிலை...

தீபாவளி பண்டிகை பார்ப்பன சூக்ஷி 0

தீபாவளி பண்டிகை பார்ப்பன சூக்ஷி

தீபாவளிப் பண்டிகை என்பது அர்த்தமற்றதென்றும், அதற்கு ஆதாரமான கதைகள் பொய்யும் புளுகும் ஆபாசமுமானதென்றும், அதற்காக பண்டிகை கொண்டாடுவது பார்ப்பனனுக்கு நம்மை அடிமை ஆக்கவும் பார்ப்பனனின் ஆதிக்கத்தை பலப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதென்று சொல்லி வந்திருக்கின் றோம். அன்றியும் புராணங்களை பொய்யென்றும் ஆபாசமென்றும், பார்ப்பன சூக்ஷி என்றும் தீர்மானித்துவிட்ட மக்கள் மறுபடியும் அதே புராணக் கதையாகிய தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதென்பதும், பட்டாசு வாங்கி சுடுவதென் பதும், அறியாமையும் மூட நம்பிக்கையும், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு விரோதமுமாகும். உஷார்! உஷார்!! உஷார்!!! குடி அரசு – அறிவிப்பு – 20.10.1929

சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு 0

சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு

தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு சென்னை விக்டோரியா மண்டபத்தில் திருவாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்தேறிய விபரமும் தலைவர் உபன்யாசமும் மற்றும் பல விபரங்களும் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களும் இத்துடன் வரும் அநுபந்தத்தில் காணலாம். அக்கிராசன உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில் சீர்திருத்தக்காரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களும், சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய விஷயங்களும், செய்யவேண்டிய முறைகளும், தெளிவாய் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, அக்கிராசனர் தாம் சீர்திருத்தத்தில் நம்பிக்கையுடைய வரல்ல வென்றும் அழிவு வேலையிலேயே நம்பிக்கையுடையவ ரென்றும், அதாவது ஒன்றை மாற்றியோ அல்லது யெடுத்துவிட்டோ அந்த ஸ்தானத்தில் மற்றொன்றை வைக்க வேண்டுமென்கிற விஷயத்தில் கவலை யில்லாதவரென்றும், அவசியமில்லாததும் கொடுமை விளைவிப்பதுமான விஷயங்களை அழித்து விட வேண்டியது என்கின்ற கருத்தின் பேரில் கவலை கொண்டிருக்கும் அழிவு வேலைக்காரரென்றும் சொல்லியிருக் கிறார். அதற்கேற்ப இப்போது சமுதாய முற்போக்குக்கும் சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் புதிதாக நாம் கைக்கொள்ளவேண்டியது என்னவென்றால், அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாய் இருப்பவைகளை அழித்து விட வேண்டுமென்பதேயாகும். இவ்விதம் அழிவு...

கார்ப்பொரேஷன் தேர்தல் 0

கார்ப்பொரேஷன் தேர்தல்

ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று 16.10..29 தேதி இரவு 8 மணிக்கு தியாகராய மெமோரியல் கட்டிட மேல் மாடியில் கூடிற்று. 19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயண சாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொருவரும் வரவில்லை, என்பதாகத் தெரிகின்றது. கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராம சாமி முதலியாருக்கு 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலை போட்டிபோடப் போவ தாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஏறக்குறைய இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது. சுயராஜ்ஜியக் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரிதான் பிரியும் போல்...

திரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து   என்றும் கண்டிராத காக்ஷி 0

திரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து என்றும் கண்டிராத காக்ஷி

கனவான்களே, சில உபசாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி அவருக்குக் கிடைத்ததற்கு திரு. ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு டையவன் என்றால் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டுகளையும் கெடுத்துவிடும் எனக்கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன். அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும்...

சம்மத வயது விசாரணையின் அதிசயம் 0

சம்மத வயது விசாரணையின் அதிசயம்

ஆண் பெண் மக்களின் கல்யாண வயதைப் பற்றியும், கலவி வயதைப் பற்றியும் சட்டத்தின் மூலம் ஒரு நிபந்தனை ஏற்படுத்த வேண்டி பொது மக்களின் கருத்தை அறிவதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அது பல மாகாணங்களில் விசாரணை செய்து விட்டு இப்போது நமது மாகாணத்தில் விசாரணை நடைபெறுகின்றது. இவ்விசாரணையின் மூலம் முடிவில் ஏற்படப் போகும் நன்மையை விட விசாரணை நடுவில் வெளிப்படும் பல அதிசயங்கள் மக்களின் பொது அறிவிற்கு மிகவும் பயன்படுமென்று கருதுகின்றோம். விசாரணை துவக்கத்திலிருந்து நாம் மேல் வாரியாகத்தான் கவனிக்க முடிந்தது. அநேக சாக்ஷிகள் வாக்குமூலத்தை நாம் படிக்கவே இல்லை. என்றாலும் சில விஷயங்கள் வெளியானது நமது தகவலுக்கு வந்தது. அவைகளில் மிகவும் கவனிக்கத்தக்கவை என்னவெனில், பெண்கள் பக்குவமடைந்த பிறகு வீட்டில் வைத்திருந்தால் அவர்களது கற்புக்கு இடையூறு ஏற்படும் என்றும் பூப்பு அடைந்தவுடன் பெண்களுக்கு கலவி இச்சை ஏற்பட்டு விடுகின்றது என்றும், அதற்கு உடனே பரிகாரம் செய்யாவிட்டால் மோசம் வந்துவிடும் என்றும்...

லாலா லஜபதி 0

லாலா லஜபதி

திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று “தியாக பூமி”யில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால் பட்டா பிராமய்யர் அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரிக்க அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக் கின்றார். எனவே வாசகர்கள் தயவு செய்து பொறுமையுடன் ³ விஷயம் முழுதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 18.11.1928

கார்பொரேஷன் தலைவர் 0

கார்பொரேஷன் தலைவர்

சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சி யடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும். மேலும் இந்த முடிவானது, சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாகவோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசீய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்தவரையில் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத்தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் வருந்தத்தக்கதேயாகும் என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர்களை தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பொ ரேஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. சென்னை கார்ப்பொ ரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும்...

பார்ப்பனரின் தேசீயம் 0

பார்ப்பனரின் தேசீயம்

குழந்தை விவாகத்தை தடைப்படுத்தும் சாரதா மசோதா இந்திய சட்டசபைக்கு வந்தது முதல் அது நிறைவேறும் வரை நமது பார்ப்பனர்கள் செய்த தடைகளும் சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது யாவரும் அறிந்ததாகும். இவ்வளவு தடைகளையும் சமாளித்து சர்க்கார் தயவினாலேயே அது நிறைவேற்றப்பட்டு ராஜப் பிரதிநிதி அனுமதியும் பெற்று சட்டமான பிறகு மறுபடியும் நமது பார்ப்பனர்கள் ஊர் ஊராய் கூட்டங் கூடி அச்சட்டத்தைக் கண்டித்து கூட்டம் போட்டு பேசி வருகின்றார்கள். நூற்றுக்கு தொண்ணூறு பார்ப்பனர்களுக்கு இனிமேல் தாங்கள் இவ்விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும் கூட அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் ஒன்று சேர்வதற்கும் தேர்தல் கிளர்ச்சிக்கு ஒரு வழிகண்டுபிடிப்பதற்கும் இதை உபயோகித்துக் கொள்ளலாமா என்கின்ற சூழ்ச்சியின் பேரிலேயே இந்த சாரதா மசோதா கண்டனம் என்னும் செத்த பாம்பை ஆட்டி வருகின்றார்கள். தங்க ளுக்கு உதவியாக மகமதியர்களையும் கிளப்பிவிட்டு அடுத்த தேர்தலுக்கு அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாமா என்றும் சூழ்ச்சி செய்கின் றார்கள். இதுகடைசியாக...

மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா? 0

மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா?

மேல்நாட்டில் கூட சிலர் சுவாமி என்றும் மோக்ஷம் என்றும் நரகம் என்றும் சூக்ஷ&ம சரீரம் என்றும் சொல்லுகின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு ‘சூக்ஷ&ம சரீரக் காரர்’ தனது பத்திரிகையில் எழுதுகிறார். நாம் அதற்கு ஒரு பதில் தான் சொல்லக்கூடும். அது, முட்டாள்களுக்கும் அயோக்கியர்களுக்கும் இந்தியாவும் சிறப்பாக தமிழ் நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான். குடி அரசு – சிறு குறிப்பு – 18.11.1928

கோவையில் சர்வகக்ஷி மகாநாடு 0

கோவையில் சர்வகக்ஷி மகாநாடு

கோயமுத்தூரில் இம்மாதம் 23-ஆம் தேதி அகில இந்திய சர்வகக்ஷி மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வகக்ஷி மகாநாடு கூடப் போகின்றது. அதற்கு காரியதரிசி திரு. சு.மு. ஷண்முகம் செட்டியார் ஆ.டு.ஹ. அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியாரவர்கள் ஆ.டு.ஊ. ஆவார்கள். மகாநாட்டு தலைவர் சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆ.டு.ஊ. ஆவார்கள். எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்பனரல்லாதார் என்பதில் நாம் எவ்வித ஆnக்ஷபனையும் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய் தங்கள் சமூகத்திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகத்திற்கும் உண்மையான யோக்கியமான பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமை களை தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்து வார்களா? என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறைகளுக்குப் பின் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று கனவான்களையாவது...

இதற்கு என்ன வால் என்று பெயர் 0

இதற்கு என்ன வால் என்று பெயர்

திரு. நேரு, திரு சீனிவாசய்யங்கார் ஆகிய இருவரையும் ஆதரிப் பவர்களுக்கு வெளவால் என்கின்ற பெயரானால், திரு. நேருவும், திரு சீனிவாசய்யங்காரும், திரு. பெசண்டம்மையும் ஆகிய மூவரை திருட்டுத் தனமாக ஆதரிப்பதற்கு என்ன வால் என்று சொல்லுவது? குடி அரசு – சிறு குறிப்பு – 18.11.1928

“ரிவோல்ட்” ஆரம்ப விழா 0

“ரிவோல்ட்” ஆரம்ப விழா

ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும் சகோதரர்களே! நம் பிராமணரல்லாதார் கக்ஷி எவ்வளவோ முக்கிய அடிப்படையான நோக்கங்களைப் பற்றி ஆரம்பிக்கப்பட்டிருப்பது நம் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்ததே. ஆனால் வடநாட்டில் உள்ளவர்களுக்கு இந்த இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய ஏது இல்லாததும் வட நாட்டினர் இவ்வியக்கத்தைப் பற்றிச் சிறப்பாக அறிந்து கொள்ளாமலிருப்பதும் அவ்வளவு ஆச்சரியமல்ல. சிறிது நாட்களுக்குமுன் இப்பக்கங்களுக்கு வந்திருந்த வடநாட்டுத் தலைவரில் ஒருவராகிய திருவாளர் கோஸ்வாமி அவர்கள் சில நண்பர்களுடன் பேசிகொண்டிருக்கும் பொழுது திரு. கோஸ்வாமி கேட்டதாவது:- “என்ன, இம் மாகாணத்தில் முக்கியமாக 2,3 பேர்கள் சேர்ந்துகொண்டு, பிராமணரல்லாதார் கக்ஷி என்று வைத்துக் கொண்டு இருக்கிறார்களாமே? அதன் அர்த்தமென்ன? அது வேண்டியது அவசியம் தானா” என்று கேட்டார். ஏனென்றால் அவருக்கு தென்னாட்டின் சமாச்சாரமே தெரியாது. உடனே நான் (ஈ.வெ.ரா) திரு. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ. அவர்களைக் காட்டி “இவர்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஆகா! நன்றாகத்...

தஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம் 0

தஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்

தஞ்சை ஜில்லா போர்டுக்கு சம்மந்தப்பட்ட ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாக இவ்வளவு காலம் பொறுத்தாவது ஒரு தீர்மானம் செய்ய முன் வந்ததைப்பற்றி அதன் தைரியத்தை நாம் பாராட்டுகின்றோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்த விஷயம் தஞ்சை ஜில்லா போர்டின் யோசனைக்கு வந்ததில் ஜில்லா போர்டார் ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள். அது சமயம் அவர்கள் அப்படிச் செய்தது தப்பு என்ற சொன்னதுடன் ஜில்லா போர்டு தலைவரையும் சில அங்கத்தினர்களையும் நேரிலும் கண்டு பேசினோம். அப்படிப் பேசியதிலிருந்து லைனை ரயில்வே போர்டாருக்கு ஒப்புக் கொடுக்க மறுத்ததின் காரணம் எல்லாம் அப்போர்டிலுள்ள பார்ப்பன விஷமத்திற்கு பயந்தும் கட்சிப் பிரதிகட்சி ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதைக் கருதியுமே அப்படிச் செய்ய வேண்டியதாக ஏற்பட்டது என்பதை அறிய நேர்ந்தது. முதலாவதாக இதுவரை எந்த ஸ்தாபனமாவது சர்க்காரார் நடத்தி வந்ததை விட யோக்கியமாகவோ திறமையாகவோ பொது ஜனங்களின் பிரதிநிதித்துவ சங்கத்தால்...

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம்                மதம் மாறுதல்  சரஸ்வதி பூஜை 0

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல் சரஸ்வதி பூஜை

தலைவரவர்களே! சகோதரர்களே! இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக்கின்றேன். ஒன்று சீலையம் பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது, இரண்டு சரஸ்வதி பூஜை, மூன்று நெல்லூர் மகாநாடு. முதலாவது விஷயமாகிய ஆதிதிராவிடர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷயத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன். முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த மதமானாலும் அதன் கொள்கைகள் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராய முடையவையானாலும் அம் மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளுடையவைகள் என்றால் அதைப்பற்றி யோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கின்றேன். அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கைகளும் “மேல் லோகத்திலோ” அல்லது “கீழ் லோகத்திலோ” அல்லது செத்த பிறகு “சூட்சும” சரீரத்துடனேயோ அனுபவிக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்றால், அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதானாலும் அதனால் என்ன விளைவதானாலும் நான் அதைக் கடின நேரம்...

தென்னிந்திய சீர்திருத்தகாரர்  மகாநாடு 0

தென்னிந்திய சீர்திருத்தகாரர் மகாநாடு

தென்னிந்திய சமூகச் சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம் 26,27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னையில் கூடப்போகிறது. இம் மகாநாடானது தென்னிந்திய சமூகத் தொண்டர் சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமூக ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட வேண்டும் என்றும், சுயநலப்பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால் போதும் என்ற கொள்கைக்கு அடிமையாகாத மனிதர்களும் கடுகளவு உண்மையான ஜீவகாருண்யமுடையவர்களும் தங்கள் வாழ்நாட்களை இதற்காகவே செலவிட வேண்டியது மனிதத் தன்மையில் முக்கியமான கடனென்றும் சொல்லுவோம். நிற்க, சீர்திருத்த மகாநாடென்று, ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம் முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள் செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ்செய்து தங்களை அன்னியர் பெரிய தேசாபிமானியென்றும் சமூக சீர்திருத்தக்காரன் என்று சொல்ல பெயர் பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் மதத்தின் பேராலும் வருணாசிரமத்தின்...

அரசியலும் சத்தியமும் 0

அரசியலும் சத்தியமும்

திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜபதிராய் அவர்கள் “பூரண சுயேச்சையே வேண்டுமென்று கேட்பவர்களான தாங்கள் ராஜபக்திப் பிரமாணம் செய்யலாமா” என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் “நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை” என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் “பொய்ச்சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையாக சத்தியம் செய்யவில்லை” என்று சொன்னாராம். உடனே திரு. லாலாஜி “அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசியதாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன” வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம். நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர்களானவரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு விதம். அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தியாசங்கள் இருந்தால் இனி சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல்...

பாஞ்சால சிங்கம் 0

பாஞ்சால சிங்கம்

நமது பத்திரிகை முடிந்து கடைசித்தாள் அச்சுக்குப் போகுந் தருவாயில் பாஞ்சாலசிங்கம் முடிசூடா மன்னர் உண்மைத் தலைவர் லாலா லஜபதிராய் அவர்கள் திடீரென்று மாரடைப்பு வியாதியால் மரணமடைந்தா ரென்று தந்தி கிடைத்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில், இருந்த – இருக்கிற – தலைவர் களில், லஜபதியவர்கள் சொல்லும் வார்த்தைக்குத் தப்பு எண்ணம் அவரது எதிரியாலும் கற்பிக்க முடியாத உத்தம வீரர் இவர் ஒருவர்தான் என்றே சொல்லவேண்டும். இவரது மரணத்தால், தனது மனத்திற்குப்பட்டதை தைரியமாயும் ஒளிக்காமலும் வெளியிடக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் இந்தியாவில் இல்லை என்றும் சொல்லும்படியான நிலைமை உண்டாகி விட்டது. சுயராஜ்யக் கக்ஷியாரைப்பார்த்து, “பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எல்லா தொகுதிகளில் வேண்டுமானாலும் நான் ஒருவனே தேர்தலுக்கு நிற்கின்றேன். யாராவது வந்து என்னுடன் போட்டி போடுவதாயிருந்தால் வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்” என்று சொன்ன தீரர், திரு. மோதிலால் நேருவின் வாடையே பஞ்சாப் நாட்டிற்குள் அடிக்கவிடாமல் செய்த தனி...

“ ரிவோல்ட் ” 0

“ ரிவோல்ட் ”

ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7ஆம் தேதி புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும். “ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும். நமது நிலைமை சென்னை மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்? உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, “சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப் படவில்லை” என்று சொன்னபோது “திரு....

எனது தோல்வி 0

எனது தோல்வி

நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டசபைக்கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்கின்ற தீர்மானம் தென் இந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக்கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்துவிட்டது. ஒரு ஓட்டில் தோல்வியடைந்தாலும் அது சரியான தோல்வியே என்பதில் யாதொரு ஆட்சேபனையுமில்லை. ஓட்டு சேகரித்த முறை எவ்வளவு ஒழுங்கற்றதென்று சொல்லுவதானாலும் முடிவை மாற்றிக் கொள்வதற்கு அந்த சமாதானம் சிறிதும் பயன்படாதாகையால் அது உபயோகமற்ற சமாதானமாகும். அன்றியும், ஒரு கட்சியார் மாத்திரம் தான் ஓட்டு சேகரிக்கும் முறையில் சரியாக நடக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. தீர்மானம் ஒரு சமயம் வெற்றி பெற்றிருந்தாலும் தோல்வியுற்றவர்களும் இதே சமாதானத்தைத்தான் சொல்லக்கூடும்; ஆதலால் தோல்விக்கு சரியான சமாதானம் சொல்ல வேண்டியது எமது கடமையாகும். முதலாவது இந்தத் தீர்மானமானது அவசியமில்லாததும் அர்த்த மற்றதுமான தீர்மானமாகும். எப்படியெனில் இத்தீர்மானம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் தீர்மானத்தின் உண்மையான தத்துவம் அமுலில் தானாகவே நடந்துதான் தீரும். அதாவது, இது நிறைவேறினால்தான் பார்ப்பனர்...

திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை 0

திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி நாம் பத்திரிகைகளுக்கு அனுப்பிய சேதிக்கும் சென்றவாரக் ‘குடி அரசு’ ‘திராவிடன்’ கட்டுரை களுக்கும் திரு.எ. இராமசாமி முதலியாரவர்கள் பதில் அளித்திருப்பதாவது. “நான் தனித்தொகுதி சம்மந்தமாக வெளியிட்ட அறிக்கையைப்பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பரும் தலைவருமான திரு. ராமசாமி நாயக்கரின் அபிப்பிராயத்தை நான் படித்துப் பார்த்தேன். நான் வெளிப்படுத்திய அபிப்பிராயம் என் சொந்த அபிப்பிராயம் என்று நான் அசோசியேட் பிர° நிரூபரிடம் சொல்லியிருந்தும் அதை அது வெளிப்படுத்தாததற்கு காரணம் இன்னது என்பது எனக்கு தெரிய வில்லை. தற்கால நிலைமையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரண்டு சமூகங்களுக்கும் உள்ள பலமான மனக்கசப்பானது தனித்தொகுதி ஏற்படுத்து வதன் பயனாய் ஒரு அளவுக்கு பாதுகாப்பளிக்கக்கூடியதாகவும் சமநிலைமை உண்டாக்கத்தக்கதாகவும் இருக்குமென்று சொல்லியிருந்தேன். ஆனாலும் இந்தசமயத்தில் அதை வற்புறுத்துவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமானதல்ல என்று நம்புகின்றேன். ஏனெனில் மேல் கண்ட தனித்தொகுதித் தேர்தல் முறை ஏற்பட்டால் இனி ஏற்படப்போகும் பார்ப்பனர்கள் எவ்வளவு அடையக்கூடுமோ அதை விடவும் அவர்கள் எத்தனை...

நெல்லூர் மகாநாடு 0

நெல்லூர் மகாநாடு

இம்மாதம் 5, 6-ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லூரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்னும் தென் இந்திய நல உரிமைச்சங்க இயக்கத்தின் 11-வது மாகாண மகாநாடு, கூடிக்கலைந்து விட்டது. இந்த மகாநாடானது 1927வது வருடம் ஜனவரியில் மதுரையில் கூடிய 10-வது மகாநாட்டுக்குப் பிறகும், அதையடுத்து கோயமுத்தூரில் கூடிய மாகாண விசேஷ மகாநாட்டிற்கு பிறகும், இரண்டு வருஷ காலம் பொறுத்து நெல்லூரில் கூட்டப்பட்டதாகும் என்றாலும் இந்த இரண்டு வருஷம் பொறுத்தாவது இம்மகாநாடு இப்போது கூட்ட வேண்டிய அவசிய மேற்பட்டதின் காரணம் முக்கியமாக இரண்டு விஷயத்தைப் பொறுத்ததாகும். அதாவது ஒன்று; பார்ப்பனரல்லாதார்களுக்குள் பிரிந்து நிற்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துக் கொண்டு மந்திரி கட்சியாராகிய இன்டிபெண்டெண்டு என்னும் சுயேச்சைக் கட்சியையும், கான்ஸ்டிடியூஷனிலிஸ்ட் என்னும் டாக்டர் நடேசன் கட்சியாரையும் ஒன்று சேர்க்கவும்; இரண்டாவதாக:- கட்சிக்குத் தலைவராய் இருந்த பனகால் அரசர் இறந்து போய்விட்டதால் அவருக்கு பதிலாக ஒரு தகுதியான...

நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம் 0

நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்

திராவிடன்” பத்திரிக்கை 26.10.28ல் தலையங்கத்தில் எழுதுவதாவது:- “நம் மாகாணத்தில் பார்ப்பன ஆசிரியர்களின் கொடுமையால் பார்ப்பனரல்லாத மாணவர்கள் படுந்துயரை என்னவென்று எடுத்து ரைப்பது?பார்ப்பன ஆசிரியர்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களை வகுப்புகளில் சரியாய் நடத்துவது கிடையாது; பாடம் செவ்வனே சொல்லிக் கொடுப்பதும் கிடையாது. ஒரு மாணவன் “குடி அரசு” படிக்கின்றவனாகவோ அன்றி “திராவிடன்” படிக்கின்றவனாகவோ அல்லது “ஜ°டி°” படிக்கின்றவனாகவோ இருந்து விட்டால் அவன் பாடும் திண்டாட்டந்தான். அதுவும் இராமசாமி நாயக்கர் பிரசங்கத்திற் குப் போய்விட்டால் இன்னும் திண்டாட்டம். அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக விருந்தபோதிலும் அவனை பரீiக்ஷயில் மொட்டையடித்து விடுவார்கள். இத்தகைய கொடும் நிகழ்ச்சிகள் இம்மாகாணத்தில் பல இடங்க ளில் நேர்ந்துள்ளனவென்பதை நாம் அறிவோம். இன்று லால்குடி போர்டு ஹை°கூலில் அப்பள்ளிக் கூடத்துப் பார்ப்பன ஆசிரியர்களால் பார்ப்பன ரல்லாத மாணவர்கள் எவ்வளவு கொடுமையாக நடத்தப்படுகின்றார்கள் என் பதை ஒரு கமிட்டியார் விசாரணை செய்வார்களாயின் திரு. நாவேல் அவர் கள் சைமன் கமிஷன் முன்பு கூறியது உண்மையென்பது புலனாகிவிடும்.”...

மந்திரி ளு.முத்தையா முதலியார் 0

மந்திரி ளு.முத்தையா முதலியார்

வாழ்க! வாழ்க! வாழ்க! உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நமது மந்திரி திரு. ளு. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத் தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபு வாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வரவேண்டியதான சட்டமாக்கி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால் அவைகளில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து      5 பார்ப்பனர்களிலிருந்து      2 மகம்மதியர்களிலிருந்து      2 ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள் அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து      2 தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து      1 ஆக      12 நபர்களை வகுப்புவாரி முறையில் தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார். எனவே மேல்படி இலாக்காவுக்கு எவ்வளவு பேர் தேவை இருந்தாலும்...

காந்தி ஜயந்தி புரட்டு 0

காந்தி ஜயந்தி புரட்டு

இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம்...

கதர் புரட்டு 0

கதர் புரட்டு

கதர் துணியின் விலை விஷயமாகவும், கதர் போர்டார் அதிக விலை வைத்துக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதின் மூலமாகவும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் ஒரு கதர் தொண்டருக்கும், திரு.ஸி.ராஜகோபாலாச்சாரிக்கும் வாதம் நடந்து வருவதை, ஒரு நண்பர் நமக்கு அனுப்பி நமது அபிப்பிராயத்தை கேட்டிருக்கின்றார். நமக்குத் தெரிந்த வரையில் மேற்படி இரு கனவான்கள் கணக்கிலும் பிசகு இருக்கின்றதென்பதே நமது அபிப்பிராயம். அதாவது இரண்டு பேர்களுக்கும் உண்மையான அசலுக்கு மேல் அதிகப்படுத்தி கணக்கு போடப்பட்டிருக்கின்றது. அதாவது பஞ்சு நூல் நூற்பதற்கு ராத்தல் ஒன்றுக்கு 5 அணா தான் கூலி கொடுக்கப்பட்டு வருகின்றது. சில இடங்களில் 4 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. நெய்வதற்கும் 54 இஞ்சுக்கு கெஜம் ஒன்றுக்கு 2 3/4 முதல் 3 அணாவே கொடுக்கப்பட்டு வருகின்றது. கெஜத்திற்கு 21/2 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. 21/2 அணா அல்லது 2 3/4 அணா வீதம் கொடுப்பதாயிருந்தால் இப்பொழுது ஈரோட்டைச் சுற்றிலும் கோபியைச் சுற்றிலும் சுமார் 1000, 2000...

சுயமரியாதை 0

சுயமரியாதை

ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார் கள். சில மாதங்களுக்கு முன்பு திரு. சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள். அவ் வுபசாரப் பத்திரங்களுக்கு திரு.சௌந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில்...

பிரசாரப் பள்ளிக்கூடம் 0

பிரசாரப் பள்ளிக்கூடம்

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரசார பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31-தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித்திருந்ததில், அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக் கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சௌகரியப்படவில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதன் பேரில் தள்ளிவைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டியதாயிற்று. திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்பவிழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப் பட்டு முன் தெரிவித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாரா யிருக்க வேண்டும் என்பதை...

நமது மாபெருந்தலைவர்களின்                உருவப்படத் திறப்பு விழா                         தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் பெருங்கூட்டம் 0

நமது மாபெருந்தலைவர்களின் உருவப்படத் திறப்பு விழா தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் பெருங்கூட்டம்

தலைவரவர்களே! சகோதரர்களே! பெரியோர்களின் கட்டளையை ஏற்று கௌரவமடைய மனம் ஆசைப்படுகிறது. சர். தியாகராயருடன் நான் நட்பு பாராட்டியிருக்கவில்லை. ஆயினும் அவரையே தக்க பெரியார் எனக் கொண்டு அவர்பால் பக்தி கொண்டுள்ளேன். அவரை உண்மைத் தியாகி, வீரர் என்றே கூறுதல் பொருந்தும். உண்மையான தலைவர் என்று ஒருவரை குறிக்கவேண்டுமானால் அது செட்டியாரையே குறிக்கும் என்று நான் சொல்லுவேன். உண்மைத் தியாகி, தேசத் தொண்டர், தலைவர் என்று கூறுவதற்கு என்ன அடையாளம் என்றால், சாபங்களையும், வைதல்களையும், இழிவுரைகளையும் பார்த்து பயப்படாமலும் தங்கள் கொள்கைகளை வாபஸ் வாங்காமலும் தைரியத்துடன் தங்கள் காரியங்களை நடத்துபவர்களே உண்மைத் தலைவர்கள். சர். தியாகராயரை இங்கு தமிழ்நாட்டு ‘டயர்’ என்று கூட எதிரிகளால் கூறப்பட்டது. அவரை தேசத்துரோகி என்றெல்லாம் கூறினர். அவரின் வீடு புகுந்தும் அடிக்கத் தலைப்பட்டனர். இவ்வளவு கஷ்டங்களை யும் அவர் நேரில் அனுபவித்தனர். தேசத்துரோகி, டயர் என்ற இழிவுரை கட்கும், அடித்தல் போன்றவைகட்கும் சர். தியாகராயர் பயப்படாமல், பின்...

எ.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் 0

எ.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

திருவாளர் எ. இராமசாமி முதலியார் அவர்கள் வகுப்புவாரித் தொகுதியைப் பற்றி தமது அபிப்பிராயத்தை பத்திரிக்கைகளில் ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டிருக்கிறார். அவ்வறிக்கை வருமாறு:- “நான், சைமன் கமிஷன் முன்பாக பார்ப்பனரல்லாதார் கொடுத்த சாட்சியங்களை கவனத்துடன் கவனித்து வந்தேன். பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாதாரின் குறைகளைப் பற்றி நான் முடிவாக ஒன்றும் கூற முடியாத நிலைமையில் இருக்கிறேன். தனித் தொகுதிகள் பார்ப்பன ரல்லாதார் அடைவதற்கு 1919ல் பாராளுமன்றக் கமிட்டியினர் அனுகூலமாக இருக்கவில்லை. என்றாலும் அதைப் பார்ப்பனரல்லாதார் சமாதானத்துடன் சகித்து வந்தனர் என்று எனக்கு நினைவிருக்கிறது. சென்ற பத்து வருடங்களின் நடவடிக்கைகளை ஆய்ந்து பார்க்கையில் முன் செய்த தீர்மானம் இப்போது சைமன் கமிஷனால் மாற்றமடைதல் வேண்டு மென்பதற்கு முதிர்ந்த காரணங்களைக் காட்டியதாக எனக்குத் தென்பட வில்லை. எங்களுடைய கட்சியாவது, நானாவது எவ்வகுப்பேனும் வகுப்பு வாரித் தேர்தலடையும் நோக்கத்திற்கு மாறுபட்டிருக்கவில்லை. வகுப்புவாரித் தொகுதித் தேர்தல்களால், பல கெடுதிகள் விளையுமென்ற கூற்றினை நான் நம்பவில்லை. ஐக்கியத்தேர்தலாலும் பிரத்தியேக ஸ்தானங்கள்...

சர்க்காருக்கு ஜே! சீர்திருத்தம் வாழ்க! பார்ப்பனீயம் வீழ்க! 0

சர்க்காருக்கு ஜே! சீர்திருத்தம் வாழ்க! பார்ப்பனீயம் வீழ்க!

இந்திய நாட்டில் சற்றேறக் குறைய ஐம்பது வருட காலமாக சீர்திருத்தக் காரர்கள் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்ததும் அந்நிய நாட்டு மக்களால் இந்திய சமூகத்தையே ஏளனம் செய்துகொண்டிருக்க இடம் தந்து கொண்டிருந்ததுமான “குழந்தை மணம்” என்னும் நகரும் பொம்மைக் கலியாணக் கொடுமையானது கடைசியாக இந்தியாவை “ஏக போகமாய் ஆட்சி புரியும் அந்நிய அரசாங்கமாகிய” பிரிட்டிஷ் அரசாங்க உதவியாலேயே அதுவும் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு விட்டதற்கு பிரிட்டிஷ் சர்க்காருக்கு சந்தோஷத்தோடு மனப்பூர்வமாய் ஜே! சொல்லித் தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். எனவே இந்திய சர்க்கார் நீடூழி வாழ விரும்புகின்றோம். சர்க்காரின் ஒத்துழைப்பும் அவர்களது மனப்பூர்வமான ஆதரவும் உதவியும் இல்லாதிருக்குமானால் சாரதா மசோதாவானது கண்டிப்பாய் நிறைவேறி இருக்காது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சிலர் தேசியம் சுயராச்சியம் என்பவைகளின் பேரால் சர்க்காருடன் ஒத்துழைக்கக்கூடாது என்றும்; சர்க்கார் தயவை எதிர்பார்க்கக் கூடாது என்றும்; சீர்த்திருத்தங்களுக்கு சட்டம் செய்யக் கூடாது என்றும்; வெகுசுலபமாய் பேசி மக்களை ஏமாற்றி வீரர்கள்...

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் நியமனம் 0

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் நியமனம்

ராமனாதபுரம் ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு. ராமநாதபுரம் ராஜா பா°கர சேதுபதியவர்கள் காலமான பிறகு அந்த °தானத்திற்கு அந்த ஜில்லாவில் கொடுமைப்படுத்தப்பட்டவரும் சமூகப்பிரமுகர்களில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென்று நியமன அதிகாரங்களை சர்க்கார் தங்களுக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பதே அதற்காகத் தான் என்பதையும் சர்க்காருக்கு கொஞ்சநாளைக்கு முன்பாக பல பத்திரிகைகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அன்றியும் அச்சில்லாவில் செல்வாக்கும் நாகரீகமும் செல்வமும் அறிவு வளர்ச்சியும் பெற்ற சமூகங்களில் ஒன்றாகிய நாடார் சமூகப் பிரதிநிதி களான பல கனவான்கள் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவையும் °தல ஸதாபன இலாக்கா மந்திரியையும் தூது சென்று கண்டு தங்கள் குறைகளை தெரிவித்ததும் அதற்கு அவர்கள் நம்பிக்கையான பதில் அளித்ததும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். எனவே சர்க்கார் இது விஷயத்தில் பிரதிநிதித்துவப் பத்திரிகை களினுடைய யோசனைகளை ஏற்றும் பிரதிநிதித் தூதுக் கூட்டத்தாரினுடைய ஆசையை மதித்தும் அந்த °தானத்திற்கு தென்னிந்திய நாடார் சமூகத்தில் ஒரு பிரமுகரான திருவாளர் று.ஞ.ஹ.சௌந்திரபாண்டிய...

காந்தியும் கடவுளும் 0

காந்தியும் கடவுளும்

திரு. காந்தியவர்கள் சென்ற வாரத்திய தமது ‘யங் இந்தியா’ வில் தம்மை ஒரு நண்பர் கடவுளைப்பற்றிக் கேட்ட சில கேள்விகளை பிரசுரித்து அவைகளுக்கு தமது அபிப்பிராயத்தையும் எழுதியிருக்கின்றார். கேள்விகளின் சுருக்கம் யாதெனில்:- “கடவுளைத் தவிர மற்றதெல்லாம் நிச்சயமற்ற தென்றும், சத்தியம் தான் கடவுள் என்றும், துன்பத்தை சகித்துக் கொண்டு பொறுமையாயிருப்பதே கடவுள் என்றும், அயோக்கியர்களை எச்சரிக்கை செய்து அவர்கள் தமக்குத்தாமே கேடு விளைவித்துக்கொள்ளும்படி செய்து விடுகிறார் என்றும், “யங் இந்தியா”வில் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கடவுள் இருக்கின்றார் என்கின்ற உறுதி எனக்கு இல்லை. ஏனெனில் அப்படி கடவுள் என்பதாக ஒன்று இருக்கும் பக்ஷத்தில் உலகத்தில் சத்தியத்தை நிலை நிறுத்துவதே அவரது லக்ஷியமாகவல்லவா இருக்கவேண்டும். ஆனால், உலகம் எங்கு பார்த்தாலும் பலவிதமான அயோக்கியர்களாலும் கொடுமைக்காரர்களாலும் நிரப்பப்பட்டிருப்பதுடன் ஒழுக்க நடவ டிக்கைகளைப் பற்றி சிறிதும் கவலையே எடுத்துக் கொள்ளாத அயோக்கியர் களான அவர்கள் சௌகரியமாகவும் nக்ஷமமாகவும் வாழ்கின்றார்கள். அயோக்கியத்தனம் என்பது ஒருவித தொத்துவியாதி போல்...

மீண்டும் படேல் 0

மீண்டும் படேல்

திரு.படேல் அவர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து செய்துவந்த பார்ப்பனப் பிரசாரத்தைப் பற்றி ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ ‘குமரன்’ ‘தமிழ்நாடு’ ‘தமிழன்’ ‘சென்னை வர்த்தமானி’ ‘நாடார் குலமித்திரன்’ முதலிய பல பத்திரிகைகள் கண்டித்தெழுதி இருந்தது வாசகர்களுக்குத் தெரிந்த விஷய மாகும். ஏறக்குறைய இவைகளெல்லாம் நமது பார்ப்பனர்கள் திரு.படேல் தகவலுக்குக் கொண்டு போகப்படாமல் சூழ்ச்சிகள் செய்திருந்தாலும் ஆங்காங்கு சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளாலும் ஆங்காங்கு இவருக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளாலும் ஒருவாறு அறிந்துதான் இருக்க முடியுமென்று சொல்லுவோம். எப்படியெனில் திரு.படேல் மேற்கண்ட பத்திரிகைகள் மீது பாய்ந்து தனது முழு விஷத்தையும் கக்கி அவைகளை யாரும் படிக்கக் கூடாதென்று சொல்லி வருவதால் அவற்றிலுள் ளது இன்னது என்பதை உணராமல் இப்படிச் சொல்லியிருப்பாரென்று நினைப்பதற்கில்லை. தவிரவும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு தனது வருத் தத்தை தெரியப்படுத்தியிருப்பதாலும் ஒருவாறு விஷயங்கள் தெரிந்திருக்கலாம். தவிரவும் மதுரையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பல நண்பர்களைக்...

நெல்லூர் மகாநாடு 0

நெல்லூர் மகாநாடு

தென் இந்திய நல உரிமைச் சங்க, அதாவது ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அக்டோபர் மாதம் 5,6 தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில்) நெல்லூரில் நடத்தப்படப்போகின்றது. இம்மகா நாடானது 1927-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் மதுரையில் கூட்டப்பட்ட பிறகும், அதே வருஷம் மத்தியில் கோயமுத்தூரில் விசேஷ மகாநாடாகக் கூட்டப்பட்ட பிறகும், சுமார் இரண்டு வருஷம் கழித்து இப்போது கூட்டப்படுகின்ற தென்றாலும், இவ்வியக்கத்தலைவர் திரு.பனகல் அரசர் காலமாகி சுமார் 9 மாதத்திற்குப் பிறகு தலைவர் தேர்தலையே முக்கியக் காரியமாய்க் கொண்டு கூட்டப்படுகின்றதாகும். தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கமானது ஆதியில் மக்களின் எல்லா சமூக சமத்துவத்தையும், சம உரிமையையும் சம சந்தர்ப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். எனினும் இவ்வியக்கம் வெற்றி பெற்றால் இந்தியாவில் சமூகத்துறையிலும், அரசியல் துறையிலும் உயர்வு பெற்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு...

ஐய வினாவுக்கு விடை மோட்சம், நரகம் என்பன யாவை? 0

ஐய வினாவுக்கு விடை மோட்சம், நரகம் என்பன யாவை?

ஸ்ரீரெங்கநாதபுரம் அ.வெ.சுப்பையா அவர்கள் மோட்சம் நரகங்களைப் பற்றிக் கூறுவதின் உண்மையை அறிய விரும்புகின்றார். மோட்சம் என்பது இன்ப வீடும், நரகம் என்பது துன்ப வீடுமாம். இவைகளை இவ்வுலகத்தில் இவ்வாழ்க்கையில் நாம் என்றும் அநுபவிக்கின்றோம். இதற்கு மாறுபாடாக எங்காயினும் மோட்சம் நரகம் உளவோயின், அவைகளை அநுபவிக்க விரும்புபவர்கட்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நாளை கிரகம் என்று ஒன்றுள்ளது என்று ஒரு நூலில் நாம் காண்போமாயின், அது எங்குள்ளது என்று தேடப் புறப்படுவது, கிரகம் என்ற ஒன்றை புகுத்திய அறிவிலாச் செயலிலும் தேடப்புறப்படுவோர் செயல்மிக்க அறிவிலாததாகும். ( ப-ர்.) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 15.09.1929

அந்தோ! பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார் 0

அந்தோ! பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார்

சிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10 ம் நாள் புதன் கிழமையன்று, அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்- சுவாமிகள் தென்மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம் மடாதிபதியானதும் கால நிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன் பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார். கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு முதலியவைகளை பல இன்னல்களுக் கிடையிலும் உபதேசித்து வந்தவர். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும் படிகட்டியும் சிதம்பரவாசிகளுக்கு உதவினவர். சிதம்பரம் நகர பரிபாலன சபையில் ஓர் ஆதிதிராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும் நம் சுவாமிகளே. ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளு கிறோம். குடி அரசு – இரங்கல்செய்தி –...

யாகத்தின் ரகசியம் 0

யாகத்தின் ரகசியம்

ஓர் சம்பாஷணை சங்கரன் : ஏது நண்பனே, இன்று அவசரமாய்ச் செல்கின்றாய். வயிறு பசித்துவிட்டதோ? கிருஷ்ணன் : அப்படியில்லை. நாளையத்தினம் எங்கள் கிராமத் தில் ஓர் யாகம் நடக்கப் போகிறது; இன்று மாலையிலேயே ஆரம்பம், அதற்காகப் போகிறேன். சங்கரன் : யாகம் என்றால் எனக்குப் புரியவில்லை. அதை எப்படிச் செய்வார்கள்? கிருஷ்ணன் : அதை எல்லாம் உனக்குச் சொல்வது கூடாது, அந்தரங் கமானது; அது எங்கள் பரம்பரை பரம்பரை வழக்கமாயுள்ளது; யாகம் செய்தால் ஊர் செழிக்கும். பிராமணர்களுக்குச் செல்வம் வளரும். சங்கரன் : நண்ப, எவ்வளவு அந்தரங்கமானாலும் பலர் சேர்ந்து செய்தால் எப்படியும் வெளிவந்துதானே தீரும். அன்றியும் நீ சொல்வதைப் பார்த்தால் நல்ல காரியமாகத்தானே தெரிகிறது. அதை நான் தெரியும்படி சொல்லவேண்டுகிறேன். கிருஷ்ணன் : ஏது என்னைச் சீக்கிரம் போக விடமாட்டாய் போலிருக் கிறது. எனக்கு முக்கிய நண்பனாதலால் சுருக்கமாகக் கூறுகிறேன். மற்றவர்க ளிடம் சொல்லாதே. சங்கரன் : அப்படியே கிருஷ்ணன்...