Author: admin

சைவ வைணவ போட்டி                                   ஒன்றுக்கொன்று பொருத்தம்                                -சித்திரபுத்திரன் 0

சைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம் -சித்திரபுத்திரன்

இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்று போலவே கற்பிக்கப் பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமி பாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொண்டார்கள். சுப்ர மணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணி யன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன் றான் சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தி யாய்க் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாய்க் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக் கொண்டே இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக் கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்டக் கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரியபுராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரி பக்தர்கள்...

திரு. காந்தியார் 0

திரு. காந்தியார்

திரு. காந்தி அவர்கள் சர்க்காரால் பந்தோபஸ்த்தில் வைக்கப்பட்டு விட்டார்கள். இதனால் திரு. காந்தி ஏமாற்றமடைந்தாரே தவிர எவ்விதத்திலும் திருப்தி அடைந்தார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் தான் உப்பு சட்டம் மீறுவது என்று கிளம்பியவுடன் தன்னை சர்க்கார் கைது செய்து விடுவார்கள் என்றும் இதனால் சர்க்காருக்கு ஏதோ பிரமாதமான கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்றும் கருதி வெளிக் கிளம்பினார். ஆனால் சர்க்காருக்கு இந்த விஷயம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டபடியால் அந்தப்படி செய்து விடாமல் திரு. காந்தியாரை அவரது இஷ்டப்படி செய்ய விட்டு, அவரது கொள்கைகளாலும் செய்கைகளாலும் ஏற்படும் பலன்களை உலகம் அறியும்படி செய்து தாங்கள் செய்யப்போகும் காரியத்திற்கு நியாயமும் தேடிக் கொண்டு பிறகு வெகு சாதாரணமாய் பிடித்து பந்தோபஸ்த்தில் வைத்து விட்டார்கள். “காந்தியைப் பிடிப்பார்கள்” “காந்தியைப் பிடிப்பார்கள்” என்று பொது ஜனங்கள் பிரமாதமாய்க் கருதி எதிர் பார்த்துக் கொண்டிருந்த காலத்தி லெல்லாம் பேசாமல் அசரப் போட்டு விட்டு பொசுக்கென்று பிடித்ததாலும், அவரைப்...

சிவகாமி – சிதம்பரனார் 0

சிவகாமி – சிதம்பரனார்

திருமண அழைப்பு திருவாளர் தமிழ்ப்பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்ப கோணம் திரு. குப்புசாமிபிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர்கட்கும் 5-5-30 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திரு. ஈ. வெ. ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுயமரியாதை மகா நாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும். திருமதி ஈ. வெ. ரா. நாகம்மாளவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். – ஈ.வெ.ராமசாமி குடி அரசு – அழைப்பிதழ் – 04.05.1930

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. பரம், ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல் – என்று சொல்லப் படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள். ராஜ வாழ்த்தும் கடவுள் வாழ்த்தும் மனிதனின் அடிமைத்தனத்திற்கு அஸ்திவாரக் கல் நடுவதாகும். 2. திரு. காந்தியவர்கள் தனது சத்தியாக்கிரகம் தோல்வியுற்றால் “இந் தியா விடுதலை பெற கடவுளுக்கு விருப்பமில்லை போல் இருக்கின் றது” என்று ஒரு வார்த்தையில் ஜனங்களுக்கு சமாதானம் சொல்லி விடுவார். அல் லது உண்மையில் அப்படியே அவர் நினைத்தாலும் நினைப்பார். 3. தொட்டதெற்கெல்லாம் கடவுள் செயல் கடவுள் செயல் என்று சமா தானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணரா தவர்கள் அல்லது தங்கள் தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள். 4. எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப் பட்டாய் விட்டது. அவைகள் ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாய்...

கராச்சிக்குப் போகின்றவர்களே இந்தியாவுக்கு எது வேண்டும்? 0

கராச்சிக்குப் போகின்றவர்களே இந்தியாவுக்கு எது வேண்டும்?

இந்த வாரத்தில் இந்தியாவின் விடுதலையை முற்போக்கை முன்னிட்டு என்று தேசபக்தர்கள், தேசீய வாதிகள் என்பவர்கள் இந்தியாவுக்கு இனிச்செய்ய வேண்டிய வேலை என்ன? என்று நிர்ணயிப்பதற்காக கராச்சிக்குப் போகின்றார்கள். அங்கு இந்த மாதம் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காங்கிரஸ் நடைபெறப்போகின்றது. அங்கு சென்று இனிமேல் என்ன செய்ய வேண்டியது என்று தீர்மானிப்பதற்கு முன்பதாக இந்தியாவுக்கு வேண்டியது எது என்று தீர்மானிக்க வேண்டியது முக்கியமானதும், அறிவுடைமையானதுமான காரியமாகும். பொதுவாக இன்று உலக மக்களில் பெரும்பான்மையோருக்கும் சிறப்பாக இந்தியாவுக்கும் முக்கியமாய் வேண்டியதான காரியங்கள் என்பவை ஆட்சியில் மாறுதலல்லவென்பதையும், இந்திய மக்களின் மன உணர்ச்சியில் மாறுதல் வேண்டியது என்பதையும் நன்றாய் உணர வேண்டும். அவற்றுள், 1. மக்களுக்குள் பிறவியில் உயர்வு, தாழ்வு உணர்ச்சி மறைதல். 2. ஆண், பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல். 3. ஏழை பணக்காரன் என்ற தன்மை உணர்ச்சி அழித்தல். ஆகிய இவை மூன்றுமே முக்கியமாகும். தேசபக்தர்களே! தேசீய வாதிகளே!...

சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம் 0

சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்

“சீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலையப் போகின்றது” என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ் நாடு பத்திரிகையில் 10-ந் தேதி உபத்தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது, “இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக் கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப்போகின்றது” என்று ஸ்டேட்ஸ் மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிரூபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1-2-31- ² குடி அரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம். அப்போது சிலருக்கு அது ஆச்சரியமாகவும், உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம். எப்படி யிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரசுக்காரர்களுக்கு சமீபத்தில் நடந்த காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வ தானால், சட்ட சபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில் நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஆதலால், இந்த ஒப்பந்தமோ...

புதிய கொள்கை ஏன்? 0

புதிய கொள்கை ஏன்?

சகோதரர்களே! புதிய கொள்கைகள் ஏன் என்கின்ற விஷயத்தைப் பேசுவேன் என்பதாகத் தலைவரவர்கள் குறிப்பிட்டார்கள். புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியேயாகும். அதற்குப் பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்குப் பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு, பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம். நம்மைப் போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதிய கொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கடைந்து வருகின்றன. புதிய கொள்கைகளின் பயனாக மக்கள் எவ்வளவோ முற்போக்கடைந்து வருகின்றார்கள். நம்மிடம் வேறு எந்தவிதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும், பழைய கொள்கைகளைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும், புதிய கொள்கைகளிடம் துவேஷமும், வெறுப்பும் காட்டுவதிலும் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குபவர்களாய் இருக் கின்றோம். ஒரு காலத்தில் காட்டிமிராண்டிகளாய் இருந்ததாகச் சொல்லப்படும் ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் இன்று உலக சமூகத்தில் தலைசிறந்து விளங்கி வருவதற்குக் காரணம் புதுக்கொள்கைகளை ஏற்கத் தாராளமாய் முன்வந்து பழையக் கொள்கைகளைக் கைவிடுவதில் சிறிதும் தயக்கங் காட்டாததேயாகும். எவ்வளவு கீழான...

இனி என்ன? சட்டமறுப்பு இயக்கம் 0

இனி என்ன? சட்டமறுப்பு இயக்கம்

சட்ட மறுப்பு இயக்கம் சர்க்காருடன் ராஜிசெய்து கொண்டபடிக்குக் காங்கிரஸ் தனது நிபந்தனைகளை நாணையமாய் நிறைவேற்றக் கருத்துக் கொண்டு காரியக்கமிட்டி அறிக்கையின் மூலம் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டது. அது போலவே சர்க்காராரும் தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றும் விஷயத்தில் தங்கள் கடமையைச் செய்ய மாகாணக் கவர்ன் மெண்டுகளுக்கு அறிக்கை அனுப்பி சட்ட மறுப்பு இயக்கத்திற்காக சிறைப் படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்யும்படி செய்து இருக்கிறார்கள். ஆனாலும், இந்த ராஜியானது சட்ட மறுப்பு இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று பொதுமக்களால் கருதும்படியானதாக ஆகிவிட்டதே என்று பயப்பட்ட சிலர் தாங்கள் தோல்வியடையவில்லை என்பதைக் காட்டுவதற் காக அங்குமிங்கும் மறுபடியும் மறியல் செய்வதாகக் காட்டிக்கொள்ள அவசிய முடையவர்களாக ஆகி விட்டார்கள். அதுபோலவே சர்க்கார் தரப்பிலும், சர்க்காரார் சட்ட மறுப்பு இயக் கத்தைக் கண்டு பயந்து விட்டார்களென்று பாமரமக்கள் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்கின்ற சந்தேகத்தின் மீதும் போலீசாரைப் பற்றி ஏதாவது கேவலமாய் ஜனங்கள் மதித்துவிட்டால், என்ன செய்வது...

நிர்பந்தக் கல்யாணம் 0

நிர்பந்தக் கல்யாணம்

இவ்வாரம் வேறொரு பக்கத்தில் “எனது காதல்” என்பதாக சிவ கங்கை திருமதி. ஏ.எஸ். மணிபாய் என்னும் கன்னிகையின் கடிதம் ஒன்று பிரசுரித் திருக்கின்றோம். இதைப் பற்றி சென்ற வாரமும் பிரசுரித்து மிருந்தோம். இப்போது அந்தப்பெண்மணியின் கைப்படவே கடிதம் வந்ததால் பிரசுரித் திருக்கின்றோம். இது சம்மந்தமாக மற்றும் பல சொந்தக் கடிதங்களும் நமக்கு வந்திருக்கின்றன. அப்பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண் விரும்பும் நாயகனுக்கு மணம் செய்விக்காமல் வேறு யாரோ ஒருவருக்கு அதாவது அப் பெண்ணுக்குத் தெரியாத ஒருவருக்கு பெண்ணு டைய சம்மதமில்லாமலேயே விவாகம் செய்து கொடுக்கப் போவதாய் பெண்ணின் தாயாரும், சகோதரரும் ஒப்புக்கொண்டதாகவும், பெண் தான் அந்தக் கணவனை மணந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லியும் கேட்காமல் கல்யாணப் பேச்சுக் கள் நடப்பதாகவும் தெரிய வருகின்றது. இம்மாதிரியாக நிர்பந்தக் கலியாணம் செய்வது என்பது மிகவும் அனாகரீகமான செய்கை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றதற்கு வருந்து கின்றோம். ஆகையால், இவ்விஷயங்கள் உண்மையாக இருக்குமானால் பெற்றோர்கள் தயவு...

புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு 0

புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு

அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப்பத்திரங்கள் வாசித்துக் கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும், எங்கள் வரவைப் பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்ப தாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம் மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரிகின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க்கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும். உதாரணமாக, இவ்வளவு கிளர்ச்சியாவது இங்கு நடந்திருக்கா விட் டால் அதிசயமாகத்தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள். அநேகமாக நாங்கள் போகின்ற ஊர் களில் எல்லாம் எதிர்க்கிளர்ச்சியே எங்கள் பிரசாரத்திற்கு மெத்த அனுகூல மளித்து வருகின்றது. நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக் காகச் செய்யப்படும் மரியாதைகளில் முதலாவது அங்குள்ள கோவில்களை அடைத்துப் போலீஸ் காவல் போடுவதும், “நாஸ்திகர்கள் வருகிறார்கள்” என்று...

காரைக்குடியில் பார்ப்பனீயத் தாண்டவம் 144 0

காரைக்குடியில் பார்ப்பனீயத் தாண்டவம் 144

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு எப்படியாவது இடை யூறு செய்யவேண்டுமென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதீகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்துகொண்டுவரும் விஷயமாய் கொஞ்சநாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது. “தோலைக் கடித்து, துருத்தியைக்கடித்து கடைசியாக வேட்டைக் குத் தயாராகிவிட்டது” என்ற பழமொழிபோல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன் படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச்சாக்கை வைத்து உயர் திருவாளர்கள் சொ. முருகப்பா, அ. பொன்னம்பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ, பிரசங் கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்திரவு போட்டுத் தடுக்கப் பட்டி ருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அரிகுறியென்றே கருதவேண்டியிருக்கின்றது. காரைக்குடியானது உண்மை யிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதீக ஆதிக்கமும் கொண்டது என்ப தற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்காவது, குறைந்த...

சுங்கக்கேட்டுகளின் தொல்லை ஒழிந்தது 0

சுங்கக்கேட்டுகளின் தொல்லை ஒழிந்தது

சுமார் இரண்டுவருஷ காலமாக பிரஸ்தாபத்திலிருந்து வந்த சுங்கக் கேட்டுகளின் மூலம் சுங்கவரி வசூல் செய்யும் தொல்லைகள் ஒழிந்தது. அதாவது இவ்வாரம் சென்னை சட்டசபையில் சுங்கக் கேட்டுகள் மூலம் சுங்கம் வசூலிக்காமல் இருக்க ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. இதனால் ஜனங்கள் செலுத்தி வந்த வரி எந்த அளவிலும் குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. கவனித்துப் பார்ப்போமானால் முன்னிலும் அதிகமான வரியை கொடுக்கக்கூடியதாக வந்து சேரும். அன்றியும் இத னால் இவ்வரி வசூலினால் பிழைத்து வந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஜீவனத்திற்கு வழி இல்லாமல் போகும். ஜனங்களுக்கு இப்போது இருந்து வரும் மோட்டார் போக்குவரத்து பிரயாணக்காரருக்கு சற்று வாடகைத் தொல்லை அதிகமாகும். இன்னும்பல அசௌகரியங்களும் உண்டாகக் கூடும். என்றாலும் ஒரு முக்கியமான அனுகூலம் உண்டு என்பதை நாம் எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். அதாவது சுங்கக்கேட்டுக்குப் பக்கத்தில் வண்டிகளை நிறுத்திக்கொண்டு சுங்கக்காரர்களுடன் தொல்லை கொடுக்கும் காரியம் ஒழிந்தது மிகவும் மகிழ்ச்சியடையத்தக்கதாகும். சுங்கக் குத்தகைதாரர்களில் 100க்கு 50...

ராஜி – ஓ – ஓ – ஓ ராஜி !                                    உப்பு சத்தியாக்கிரக ராஜி!! 0

ராஜி – ஓ – ஓ – ஓ ராஜி ! உப்பு சத்தியாக்கிரக ராஜி!!

இந்தியாவின் அரசியல் சரித்திரத்திலேயே இதுவரையும் யாரும் கேட்டிராத அளவுக்கு ராஜி மலிந்து போய் ராஜி – ஓ – ஓ – ஓ ராஜி! ராஜி-ஓ – ஓ – ஓ ராஜி!! என்று வெகு கவலையுடன் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு விதத்தில் உடும்பு கையைவிட்டால் போதுமென்ற காரியத்தில் வெற்றி பெற்றதைக் குறித்து தேசியவாதிகள் பாராட்டத்தக்கவர்களே யாவார்கள். பொதுவாகவே ராஜியின் தத்துவமானது இதுவரை வெளியாயிருக் கும் விஷயங்களைக்கொண்டு பார்த்ததில் எது போல இருக்கின்றது என்றால் தற்காலம் இந்திய ஜனங்கள் ஒரு விவகாரத்திற்கு செல்லும்போது அவர்க ளுடைய விவகாரத்திற்குக் காரணமான காரியங்களும் எண்ணங்களும் வேறு ஒன்றாக இருந்தாலும் வேறு பல அசௌகரியங்களும் பாத்தியங்களும் லட்சியமாகக் கருதப்பட்டிருந்தாலும் வியாஜ்யம் தொடர்ந்து விவகாரத்தை மும்மரமாய் நடத்தினபிறகு அது முடிவு பெறுவதற்குள் ஏற்பட்ட களைப்பும், சலிப்பும், கஷ்டமும், நஷ்டமும் மேலும் மேலும் தொடர்ந்து நடத்தப்போதிய சாதனங்களற்ற தன்மையும் ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடைசியில் எப்படியாவது...

கர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம் 0

கர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்

ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும், பலமும், வீரமும், சுயமரியாதையும், அறிவுமுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்கள் குழந்தைப் பருவம் முதற்கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும்வளர்க்கப்படவேண்டும். அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் சக்திக் கும் தகுதிக்கும் போதுமான அளவே குழந்தைகளைப் பெறுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்படியில்லாமல், சக்திக்கும், அளவுக்கும் மீறி பெற்றோர்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத் திற்குள்ளாவதுடன், குழந்தைகளும் பலவீனர்களாகவும், சௌகரிய மற்றவர்களுமாகி, அவர்களைக் கொண்டதேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள். உதாரணமாக. நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால், நாளுக்கு நாள் ஜனங்களின் எண்ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ்வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டு, அவைகளை காப்பாற்றவும், படிப்பிக் கவும் சத்தியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப் பதும் நாம் அனுபவித்தும், பார்த்தும் வருவதுமான சம்பவங்களாகும். சில குழந்தைகளைக்...

சென்னையில் நிரபராதிகள் கொல்லப்பட்டனர் 0

சென்னையில் நிரபராதிகள் கொல்லப்பட்டனர்

திரு.காந்தியின் உப்பு சத்தியாக்கிரக குழப்பத்தின் பயனால் பல நிரபராதிகள் போலீசாரால் அடிபட்டும், சுடப்பட்டும் கஷ்டப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் நாம்மிக்க துக்கத்துடன் அநுதாபப்படுகின்றோம். இம்மாதிரியான சம்பவங்களில் சர்க்கார் தங்களுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்துத் தக்க பொருப்பு எடுத்து நிரபராதிகளுக்குத் துன்பம் நேராமல் படிக்கு இயக்கத்தைச் சமாளிக்காமல் வெரும் துப்பாக்கி பலத்தையும், தடிப்பலத்தையும் கொண்டே அடக்க நினைத்ததானது கவலையற்ற தன்மை என்பதும், கடமையைச் சரியாய் உணராத தன்மை யென்பதும் நமது அபிப்பிராயம். இச்சம்பவத்திற்கு தேசீயவாதிகள் சர்க்காரை கண்டபடி வைது விடுவதினாலேயே பரிகாரம் தேடிவிட்டவர்களாகி பெரிய பெரிய தேசீய வாதிகளாகி விடலாம். சர்க்காராரும் சட்டத்தையும் அமைதியையும் காப் பாற்றுவதற்கு இதைவிட வேறு மார்க்கங்கள் பயன்படாமல் போய்விட்டது என்று சொல்வதினாலேயே “சர்வ வல்லமையுள்ள” அரசாங்கத்தாராகி விடலாம். இந்த இரண்டினாலும் கஷ்டப்பட்ட- மாண்ட- பரிகொடுத்த நிரபராதி களான மக்களுக்கு என்ன சமாதானம் ஏற்படும் என்று கேட்கின்றோம்? அரசியல் சாமார்த்தியம் இல்லாமல் இம்மாதிரியாக நிரபராதிகள் கஷ்டப்படும்படி தடியையும். துப்பாக்கியையும் உபயோகிப்பதின் மூலமே சட்டத்தையும்...

திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரின் சாமர்த்தியம் 0

திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரின் சாமர்த்தியம்

திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் சட்டத்தை மீறினாரென்று அரஸ்ட் செய்யப்பட்டு 6-மாத வெருங்காவல் தண்டனையும் 200 ரூ. அபராதமும் அடைந்தார். சிறைக்குப் போகும் போது தமது தலைமைஸ்த்தானத்தை வெகு ஜாக்கிரதையாக திரு.சந்தானஅய்யங்காரிடமே ஒப்புவித்து விட்டுப் போயி ருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் “திரு ஆச்சாரியர் சிறைசெல்லநேர்ந்தால் தான் அந்த ஸ்தானத்தை ஏற்று நடத்துகிறேன்” என்று ஒப்புக்கொண்டிருந்தும் கூட அவரிடம் தலைமை ஸ்த்தானத்தை ஒப்புவிக்காமல் ஒரு அய்யங்காரி டமே ஒப்புவித்து விட்டுப் போனது மிகவும் சாமர்த்தியமேயாகும். ஒத்துழையாமை காலத்திலும் கூட திரு. ஆச்சாரியார் தனது தலைமை ஸ்த்தானம் காலி செய்ய நேர்ந்தபோதெல்லாம் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரி டமோ திரு. ராஜனிடமோ தான் ஒப்புவிப்பதில் கவலையாகவே இருந்தவர். ஆதலால் இப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தது பாராட்டத் தக்கதே, குடி அரசு – செய்தி விளக்கம் – 04.05.1930

கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள் 0

கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள்

இந்திய நாட்டில் இது சமயம் தேச விடுதலையின் பேரால் ஒரு குழப்பம் ஏற்பட்டு, அதனால் எங்கு பார்த்தாலும் கலவரமும் அடிதடியும் சிறைவாசமும் உயிர்ச்சேதமும் நடந்து வருவதாகத் தெரிகின்றது. பொது மக்களுக்குள்ளாகவும் பலருக்கு ஒரு வித உணர்ச்சி தோன்றி இக்குழப்பத்தில் கலந்து கொள்ள வேண்டியது பெரிய தேசாபிமானம் என்றும், இதனால் தங்களுக்கு பிற்காலத்தில் ஏதோ ஒரு பெரிய லாபமும், கீர்த்தியும் ஏற்படும் என்றும் கருதப்பட்டு வருகின்றது. இந்த நிலைக்கு பொதுவாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் சென்ற வருஷம் செங்கல்பட்டு முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் சொன்னது போல், அதாவது “மக்கள் மத விஷயத் தில் பெரிதும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தப் பட்டிருப்பதால் அது போலவே அரசியலிலும் ஆராய்ச்சியில்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் கண்மூடித் தனமாய் நடந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்” என்று சொன்னதும், மற்றும் சமீபத்தில் ஸ்ரீமதி பெசண்டம்மையும் “இந்தியர் களுக்குள் இருந்து வரும் மூட நம்பிக்கையின் பலனே இக்குழப்பத்திற்கு காரணமாயிருக்கின்றது” என்று சொன்னதும் மிகவும்...

துணுக்குகள் 0

துணுக்குகள்

“நாம் அதிகம் துன்பமடைவதற்கு, நமது அறியாமையே முக்கிய காரணமாகும். ஏனெனில், நாம் எக்காரியத்தையும் கொஞ்சமேனும் முதலில் ஆலோசியாமல் செய்வதுமன்றி, நமது அறிவையும் உபயோகிப்பதில்லை” யென ஓர் பெரியார் உரைத்திருக்கின்றார். ஆனால், நமது மதமோ, நம்மு டைய அறிவை உபயோகித்து, ஆலோசனை புரிய இடங்கொடுக்க மறுக் கின்றதுடனல்லாமல் புரோகிதர்களும், மடாதிபதிகளும், குருக்களும் கூறு பவைகளை அப்படியே கண்மூடித்தனமாகவும், சுலபமாகவும் நம்பிக் கொள்ளும்படி நம்மை வற்புறுத்தியும், அப்படி நம்பினவர்களுக்குத் தான் மோட்சலோகம் சித்திக்குமெனவும் கட்டளையிடுகின்றது. இதனால், அறிவை உபயோகித்து ஆலோசிக்கின்றவர்களுக்கும், அவர்கள் உரைக்கும் மோட்ச லோகத்திற்கும் அதிக தூரம் ஏற்பட்டுவிடுகின்றது. இக்காரணத்தா லேயே மடாதிபதிகளும், குருக்களும், புரோகித கூட்டங்களும் அறிவுள்ள மானிடர் களை அபாயக்காரர்களென நினைத்து, எப்பொழுதும் அத்தகை யோரை கருவருக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டே வந்திருக் கின்றார்கள். அறிவில்லாதவர்களையும், யோசியாமல் கண்மூடித்தனமாக உரைப்பனவெல் லாம் உண்மையேயென நம்பிக்கொள்ளுகின்றவர்களையும், சுலபமாகவே அடக்கி, ஆண்டு வரமுடியுமென அம்மடாதிபதி முதலியவர்கள் நாளா வட்டத்தில் அறிந்துகொண்டுமிருக்கின்றார்கள். ஏனெனில், அம்மடாதிபதி...

ஆறாவது ஆண்டு 0

ஆறாவது ஆண்டு

நமது “ குடி அரசு” ஐந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது. “குடி அரசு” தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கையில் இருந்து சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு, வெருப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால் கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும் குடி அரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது. இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில் அது இனிச் செய்யக் கருதி இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக்குள்ள செல்வாக்கையும் பணக்காரர்கள் பண்டிதர்கள் பெரிய அதிகாரிகள் பதவியா ளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடு வதுடன் “குடி அரசை” இது வரை ஆதரித்து வந்தவர்களாக காணப்பட்ட வர்களின் எதிர்ப்பையும்...

தைப்பிங் கடிதம் 0

தைப்பிங் கடிதம்

லேவாதேவி கடையில் அடுத்தாள் என்ற முறையில், பெட்டியடியில் வேலைபார்க்கும் கணக்கப்பிள்ளைகளும், செட்டிப்பிள்ளைகளும் காலை 7மணி முதல் இரவு10மணி வரை சதா கடைவேலைகளிலேயே ஈடுபட்டு சற்றேனும் ஆருதலில்லாமலும் உலக நடவடிக்கை மற்ற இதர காரியங்களை கலந்து பேசவோ, கொஞ்சமும் நேரமில்லாமலிருப்பதை முன்னிட்டு நாளது வருஷம் கார்த்திகை மாதம் 15 தேதி இரவு தைப்பிங் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் சுவாமி புறப்பாடன்று மேல்கண்ட எல்லோரும் ஒன்று கூடி இது விஷயமாகத் தினசரி காலை 6-30 முதல் 7-30 வரையிலாவது அல்லது மாலை 4 மணி முதல் 5.30 வரையிலாவது ஓய்வு வேண்டுமென்பதைப்பற்றி ஆலோ சித்து தீர்மானப்படுத்திக்கொண்டு கோவில் திண்ணையில் கூடி உட்கார்ந்தி ருந்த அவர்களின் மேலாள் என்று சொல்லும் பெரிய செட்டியார்களிடத்தில் இவர்களுடைய அனுதாபத்தைத் தெரியப்படுத்தினார்கள். என்ன சொல்வது கடைசியில், “ உடும்பு வேண்டாம் கைய விடுங்க” ளென்று சொன்ன முறையில் வந்து விட்டது. என்ன பரிதாபம்! மேலாள்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொண்டு “...

புதியமுறை விவாகம் 0

புதியமுறை விவாகம்

உலகத்தில் விவாகம் செய்து கொள்ளுவதில் ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமான முறைகள் பார்த்து விவாகம் செய்து கொள்ளுவது வழக்கமாய் இருந்து வருகின்றதே ஒழிய எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் ஒரே விதமான சொந்தங்களை கையாளுவதில்லை என்பது யாவரும் அறிந்த தாகும். உதாரணமாக மகமதியர்களுக்குள்ளும் ஐரோப்பிய கிரிஸ்தவர் களுக்குள்ளும் தங்கள் தகப்பனுடன் பிறந்த சகோதரர்களான சிறிய தகப் பனார் பெரிய தகப்பனார் பெண்களை விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. இந்துக்கள் என்பவர்களில் தகப்பனுடன் பிறந்த சகோதரி களான அத்தை பெண்களையும், தனது சகோதரி பெண்களையும், தனது தாயுடன் பிறந்த மாமன் சிறிய தாயார் பெரிய தாயார் பெண்களையும் விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. சையாம் தேசத்தில் தன்னுடன் கூடப் பிறந்த சொந்த தங்கையை விவாகம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு. அந்த தேசத்தில் வேறு யார் செய்து கொண்டலும் செய்து கொள்ளா விட்டாலும் அந்த நாட்டு அரசன் கண்டிப்பாய் தனது...

சங்கீத மகாநாடு 0

சங்கீத மகாநாடு

ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும் இரண்டா வது சுயமரியாதை மகாநாட்டின் ஆதரவில் வேறு பல மகாநாடுகளும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்ததாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும். சங்கீத மகாநாடு கூட்டும் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்துக்கு அது மிக்க இன்றியமையாத தென்றோ கருதியல்ல. உலகத்தில் மக்களுக்குள்ள அனேகவிதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்பிராயம். உதாரணமாக சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தபடியும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொறுத்த மானதென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாயி ருப்பது மற்றொரு நாட்டு வித்வானுக்கு புரியாததாகவே இருக்கும். மேல் நாட்டு...

தேசீய வியாபாரம் 0

தேசீய வியாபாரம்

உலகத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கைக்கு விதாயங்கள் ஏற்படுத்திக்கொள்ளுவதில், பலர் பொது நல சேவை என்பதையும் ஒரு மார்க்கமாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பது யாவரு மறிந்த விஷயமாகும். அந்த முறையிலேதான், இன்று எல்லா விதமான பொது நல சேவைகள் என்பவைகளும், ஒரு தனித்தனி மனிதனின் சுய நல வாழ்க்கையை முக்கிய நோக்கமாகவும், அடிப்படையாகவும் கொண்ட தாகவே இருந்து வருகின்றன. இந்த நிலைமையானது, இந்நாட்டின் மக்களின் உண்மையான பொது நலம் என்பதை அடியோடு கெடுத்து விட்டதுமல்லாமல், இம்மாதிரி தன்மை களால் பொது நல வாழ்வானது உண்மை, ஒழுக்கம், நாணயம் என்பவைகள் சிறிதும் இல்லாத புரட்டுக்கும், பொய்யுக்கும், வஞ்சகத்திற்கும், நிலையா யுள்ள ஒரு வியாபார சாலை போல் ஏற்பட்டு விட்டது. இதன் பயனாகவே மக்கள் மிகவும் ஏமாற்றப்பட்டு, கஷ்டத்திற்கும், கொடுமைக்கும் ஆளாகி முற்போக்கடைய சிறிதும் இடமில்லாமல் போய் விடுகின்றார்கள். இந்த மாதிரியான காரியங்கள், சமீப காலம் வரை மதம், கடவுள், மோக்ஷம்,...

இந்தியாவில் அறிவு இயக்கம் 0

இந்தியாவில் அறிவு இயக்கம்

மேல்நாடுகளில் இது சமயம் வெகு தீவிரமாய் நடைபெற்று வரும் அறிவு இயக்கப்பிரசுரங்கள் பல என்பதும் அதுவே இந்தக்காலத்திய முக்கியமான காரியமாய் எங்கும் கருதப்படுகின்றது என்பதும் யாவரு மறிந்த விஷயங்களாகும். அவற்றுள் ருஷியாவிலும், சைனாவிலும், ஜெர்ம னியிலும், துருக்கியிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடப்ப வைகள் மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும் நடைபெறுபவைகளாகும். நிற்க, இவ்வியக்கங்கள் முழுவதும் மிகுதியும் மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியிலும் சமரசத்திலுமே கவலை வைத்து நடத்தப்பட்டு வருகின்றவைகளாகும் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபனை இல்லை. இதில் கலந்து முக்கிய பங்கெடுத்து வேலை செய்து வருபவர்களும் பெரிதும் உலகினோரால் வீரர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் உண்மையாளர்கள் என்றும், மதிக்கப்படக் கூடியவர்களாகவே இருந்து வருவதும் யாவரும் அறிந்த விஷயமாகும். ஆகவே இவ்வறிஞர்களான பெரியோர்கள் மக்களுக்கு அறிவையும், சமத்துவ உணர்ச்சியையும் ஊட்டுவதற்காக முயற்சி செய்து வரப்படும் பிரசாரங்கள் பெரிதும் மனித சமூகத்தின் எல்லாவித கெட்ட காரியங்களுக் கும் ஆதாரமாய் முதலில் மதமும் மதத்தலைவர்கள் உபதேசமும் பிறகு கடவுளும்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது. 2. சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான். 3. சுயராஜ்யம் கேட்பதற்குமுன் அது ஏன் நமக்கு இல்லாமல் போய் விட்டது என்பதை அறிந்தாயா? என்றைக்காவது இந்து அல்லது இந்தியன் என்கின்ற முறையில் நீ சுயராஜியத்துடன் வாழ்ந்திருக்கின்றாயா? 4. ராமராஜ்யமென்றால் அது இந்துக்கள் ராஜ்யமல்ல. கடவுள் ராஜ்யம் என்று திரு. காந்தி இப்போது புரட்டிக் கொண்டார். ஆனாலும் பரவாயில்லை. அது எந்தக் கடவுள்? அந்தக் கடவுளின் ராஜ்ஜிய தர்மம் எது? அன்றியும் அவர் “என்னுடைய ராமன் வேறு ராமாயண ராமன் வேறு” என்கின்றார். சரி யென்றே வைத்துக் கொள்ளுவோம், ஆனால் அந்த இராமனை அவர் எங்கிருந்து கண்டு பிடித்தார். ராமாயணத்திலா அல்லது வருணாச்சிரமத்திலா? 5. “தீண்டாமை விலகினால் ஒழிய இந்தியா சுயராஜ்யம் பெற முடியாது....

“கடைசிப் போரின்”முதல் பலன் 0

“கடைசிப் போரின்”முதல் பலன்

திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் “கடைசிப் போரினால்” இந்தியா வுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ரூஜுவு ஏற்பட்டு விட்டது. அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்திப் போரில் மிக்க அக்கரை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும். உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின் வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரால் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல. உப்பு சத்தியாக் கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதீகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது...

தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சுதல் சத்தியாக்கிரகம் 0

தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சுதல் சத்தியாக்கிரகம்

திரு. காந்தி “கடைசிப்போர்” துவக்கப்பட்டாய் விட்டது. மும்முரமாக ஆங்காங்கு வேலைகள் நடைபெறுவதாக பத்திரிகைகளில் காணப்படு கின்றன. தொண்டர்களும் வந்து குவிவதாக பத்திரிகைப் பிரசாரங்கள் பக்கம் பக்கமாய் பறக்கின்றன. பத்திரிகைப் பிரசாரங்களை பார்க்கும் வாலிபர்க ளுக்கு ரத்தம் துடிக்கின்றது. அவர்களுக்கு தாமும் போய்ச் சேர்ந்து கொள்ள லாமா என்கின்ற பதட்டம் நாக்கில் தண்ணீர் ஊறுகின்றது, “இந்த போர் சீக்கிரம் அடங்கிப் போகும்” “தோல்வி ஏற்பட்டு விடும்” என்று கருதி இதிலிருந்து விலகியவர்களும் பரிகாசம் செய்தவர்களும் இந்த பத்திரிகை ஆர்ப் பாட்டங்களைப் பார்த்து “ஜெயித்து விடும் போல் இருக்கின்றதே. நமக்கு நோகாமல் கிடைக்கக்கூடிய தேசபக்தன் பட்டமும் தேசீய வீரன் பட்டமும் வீணாய்ப் போய் விடும் போல் இருக்கின்றதே இனி எப்படியாவது உள்ளே புகுந்து கொள்ளலாமா” என்று பலர் மன விசாரத்துடன் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில், நமக்கும் பல மிரட்டுதல் மொட்டைக் கடிதங்களும் யோசனை கூறும் நண்பர்கள் கடிதங்களும் வந்த வண்ணமாய் இருக்கின்றன. இந்த இயக்கத்தில்...

விரதப் புரட்டு 0

விரதப் புரட்டு

உமாமகேஸ்வர பூஜை விரதம் “நைமிசாரண்ய வாசிகளைக்கு சூத புராணிகர் சொன்னது” – சித்திரபுத்திரன் ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப் பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து தனக்கு அந்த பெண்ணை இரண்டாவது பெண்ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்த கிழப் பார்ப்பான் மணக் கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்த பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொருத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை “நீ புருடனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளை பெறக் கடவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை “பூர்வ ஜன்ம கருமத்தின் பல னாய் நான் விதவையாகி விட்டதால், தங்களின் ஆசீர்வாதம் பலியாமல்...

பூரண வெற்றி 0

பூரண வெற்றி

சாரதா சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. சாரதா சட்டம் என்பது: 14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்களுக்கும் 18 வயதுக்கு கீழ்பட்ட ஆண்களுக்கும் விவாகம் செய்யக் கூடாது. செய்தால் தண்டனை என்ற நிபந்தனையைக் கொண்டது. மற்றபடி இதைத் தவிர இந்த சட்டத்தில் வேறு எவ்வித ஆபத்தும் கிடையாது என்பது யாவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்தசட்டத்திற்கு இருந்துவரும் எதிர்ப்பு பெரிதாயிருந்தாலும், சிறிதாயிருந் தாலும் மதம் என்னும் பேரால் அல்லது வேறு எதையும் இது வரை யாரும் சொன்னதில்லை. மதத்தின் பேராலும் கூட ஆnக்ஷபணை சொல்லுகின்ற வர்களும் இருமதங்களின் பேராலேயே சொல்ல முன் வந்திருக்கிறார்கள். ஒன்று மகமதிய மதம். மற்றொன்று இந்து மதம், மகமதிய மதத்தின் பேரால் ஆnக்ஷபம் சொல்லுகின்றவர்கள் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை கலியாணம் செய்வது கூடாது என்றோ அல்லது அது மத விரோதம் என்றோ சொல்வதில்லை. அன்றியும் 14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற மத...

இரட்டை வெற்றி 0

இரட்டை வெற்றி

பன்னீர்செல்வம் உயர் திருவாளர் றாவ் பகதூர் ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் முன்னமேயே வாசகர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்மந்தமான ஆட்சேபனைகளைக் கிளப்பி எதிர் அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாத காலம் அந்த தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார்கள். ஆனா லும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்லவென்று எதிர் அபேக்ஷகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின்றார்கள். அதன்...

கர்ப்பத்தடை 0

கர்ப்பத்தடை

கர்ப்பத்தடை என்பது பற்றி சுமார் 2 வருஷங்களுக்கு முன் நாம் எழுதியது அநேகருக்கு திடுக்கிடும் படியான சேதியாயிருந்தது. ஆனால் இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும், ஒரு சாதாரண சேதியாய் விட்டது. வர வர அது செல்வாக்குப் பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர். பி. சிவசாமி அய்யரும் பெரிய உத்தியோகத்தில் இப்போதும் இருக்கும் ஜஸ்டிஸ் ராமேசம் அவர்களும் மற்றும் பலரும் இது விஷயமாய் அடிக்கடி பேசி வருகின்றதையும் எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்தும் வருகின்றோம். சமீபத்தில் சென்னை சட்டசபை யிலும் கர்ப்பத் தடை விஷயமாய் பிரசாரம் செய்ய வேண்டுமென்று பிரஸ்தா பிக்கப் பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம். ஆனால் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்ற வர்கள் பெண்கள் உடல் நலத்தை...

“எனது காதல்” 0

“எனது காதல்”

மேற்கண்ட தலைப்பின்படி ‘எனது காதல்’ என்பதாக தலைப் பெயரிட்டு கலப்பு மணம் செய்து கொள்ள முடிவுசெய்திருப்பதாகக்கண்டு ஒரு கடிதம் ராமநாதபுரம் ஜில்லாவில் இருந்து ஒரு பெண்மணி எழுதியதாக எழுதப்பட்டு பிரசுரிப்பதற்காக நமக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. அதில் கையெழுத்தில்லாததாலும், எழுத்துக்கள் பெண் எழுத்துத் தானா என்று சந்தேகிக்கப்படக்கூடியதாகவும் இருப்பதால் அதை பிரசுரிக் கக்கூடவில்லை. ஆனால் அக்கடிதக் கொள்கைக்கு நாம் சார்பளிக்க வேண்டி யது அவசியமாயிருப்பதால் அதை பிரசுரிக்க வேண்டியது அவசியமெனவும் தோன்றுகின்றது. ஆகவே கையெழுத்துடனும், அது எழுதப்பட்ட பெண்ணின் படம் அல்லது கைரேகையுடனும் நமக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பப்பட்டால் பிரசுரிக்கத் தயாராயிருக்கிறோம். அதில் கண்டகாரியம் நடைபெறவும் நம் மால் ஆன அனுகூலம் செய்யத்தயாராயிருக்கின்றோம். (ப-ர்.) குடி அரசு – பத்திராபர் குறிப்பு – 15.02.1931

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம் 0

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம்

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மசோதா டாக்டர். முத்து லட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரி சிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது 1. ஹிந்துப் பெண்களை ஹிந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டு வதினால் அவர்கள் வியபிசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள். 2. பண ஆசையினால் தேவதாசிகள் வியபிசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த வியபிசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கிய மானதாகும். 3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் வியபிசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் வியபிசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். வியபிசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடைய வில்லை. வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்...

5 ரூபாய் இனாம் 0

5 ரூபாய் இனாம்

– சித்திரபுத்திரன் திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாக்கிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுவதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன? திரு. காந்தி இந்த சத்தியாக்கிரகப் போருக்கு பணமே வேண்டிய தில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோபாலாச்சாரியார் பணம் வேண்டுமென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூட்சி யென்ன? இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார்களையே ஏற்படுத்தி பிரசாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்க காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையனுப்பியவர்களுக்கு குடி அரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனாமாகவும் அளிக்கப்படும். குறிப்பு : – முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான...

ஈரோட்டில் மகாநாடுகள் 0

ஈரோட்டில் மகாநாடுகள்

இரண்டாவது சுயமரியாதை மகாநாடு ஈரோட்டில் மே மாத முதல் வாரத்தில் கூட்டப்படுவதற்கு வேண்டிய முயர்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயத்தில் மற்றும் பல மகாநாடுகள்அதாவது பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு முதலிய மகாநாடுகளும், விவசாயம் கைத்தொழில் முதலிய பொருள் காட்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டிருப்பதற்கு இணங்க அவைகளையும் நடத்த வேண்டும் என்னும் உத்தேசத்துடன் வேலைகள் நடந்து வருகின்றன. மகாநாட்டிற்கு இதுவரை சுமார் 5000 ஐயாயிரம் ரூபாய்களே வாக்களிக் கப்பட்டிருக்கின்றது என்றாலும் ஒட்டு மொத்தம் சுமார் 10000 ரூ பதினாயிரம் ரூபா வரையில் வசூலில் எதிர்பார்க்கலாம் என்றே கருதி இருக்கின்றோம். மகாநாடுகள் அதிகமாய் இருப்பதாலும் குறைந்தது 4, 5 நாள்களுக்காவது நடத்த வேண்டுமென்று கருதியிருப்பதாலும் மேல்கண்ட பதினாயிரம் ரூ.போருமென்று சொல்வதற்கு இடமில்லை. ஆகவே வரவேற்பு கமிட்டி போஷகர்களுக்கு 25ரூ. என்றும் வரவேற்பு கமிட்டி அங்கத்தினர் களுக்கு 5ரூ. என்றும் பிரதிநிதிகளுக்கும் மூன்று ரூபா என்றும்...

ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ் 0

ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்

இவ்வார சென்னை சட்டசபை வரவு செலவு திட்டத்தில் திரு. வி.ஐ. முனுசாமி பிள்ளை அவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு அவர்கள் எண்ணிக் கைக்கு தகுந்தபடி உத்தியோகமளிப்பதில்லை என்று குறை கூறியதற்கு பதிலாக அரசாங்கத்தார் சார்பாக சீப் சிக்கர்ட்டரி அவர்கள் அந்தப்படி உத்தி யோகங்கள் கொடுக்கும் விஷயமாக அரசாங்கத்தாரால் யோசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் உத்தியோகங்களைப் பெற்றுக்கொள்ள ஆதி திராவிடர்கள் முன் வரவேண்டுமென்றும் பதில் கூறினார்கள். இது மனப் பூர்வமாய் சொல்லப்பட்ட பதிலானால் இதிலிருந்து இப்போது எல்லா விதத் திலும் தகுதியுடன் இருந்து முன் வந்திருக்கும் திரு. ராவ் பகதூர் யம். சி. ராஜா அவர்களுக்கு சமீபத்தில் காலியாகும் நிர்வாகசபை மெம்பர் பதவி கிடைக் கக்கூடும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகாது என்று நினைக்கின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.03.1930

சாரதா சட்டம் 0

சாரதா சட்டம்

சாரதா சட்டம் இந்தியசட்டசபையில் திருத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் அமுலுக்கு வருவது ஒத்திவைக்கப்படும் என்றும் ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னை சர்க்கார் அச்சட்டத்தின் பிரதிகளை பொது ஜனங்களுக்கு வினியோகித்திருப்பதுடன் பத்திரிகைகளிலும் வெளியிட்டி ருக்கிறார்கள். எனினும் எப்படி நடக்கும் என்று சொல்வது முடியாத காரியமா யிருந்தாலும் இவ்விஷயத்தில் சர்க்கார் ஏதாவது பின் வாங்கினார்களே யானால் அதன் பலனை கண்டிப்பாய் அடைவார்கள் என்பதை மாத்திரம் நாம் உறுதியாய் நம்பி இருக்கிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 23.03.1930

ஜஸ்டிஸ் கக்ஷி 0

ஜஸ்டிஸ் கக்ஷி

ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கின்ற தீர்மானம் ஒன்றை நிர்வாகக்கமிட்டி தலை வருக்கு திருவாளர்கள் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் எம்.தாமோதர நாயுடு அவர்களும் அனுப்பியிருக்கின்றார்கள். அதாவது “தற்கால நிலைமை மாறுதல்களை உத்தேசித்து பார்ப்பனர்களை தென்இந்திய நலவுரிமைச்சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஒரு விசேஷ மகாநாடு (ஸ்பெஷல் கான்பரன்ஸ்) கூட்டவேண்டுமென்றும் இக்கமிட்டி தீர்மானிக்கின்றது” என்பதாகும். இப்பொழுது மேல்கண்ட இந்த தீர்மானத்தை அனுப்பியிருக்கும் கனவான்களே நெல்லூரில் பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கை கட்சி யில் சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்கின்ற தீர்மானத்தை எதிர்த்தவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இப்போது பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியிலேயே சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்திருப்பதற்குக் காரணம் “தற்கால நிலைமையை உத்தேசித்து” என்று தான் சொல்லுகின்றார்கள். பார்ப்பனர்களைச் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்கின்ற அளவுக்கு தற்கால நிலைமை எப்படி மாறுதல் அடைந் திருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. சென்ற சட்டசபை தேர்தலில் ஜஸ்டிஸ்...

சுயமரியாதை மகாநாடு –               முன்னேற்பாடு கூட்டம் 0

சுயமரியாதை மகாநாடு – முன்னேற்பாடு கூட்டம்

வரவேற்புத் தலைவர்களே, நண்பர்களே இன்று இங்கு கூடியிருப்பது 3-வது சுயமரியாதை மகாநாட்டை விருதுநகரில் நடத்தும் விஷய மாய் யோசிப்பதற்காகவேயாகும். மகாநாட்டை ராமனாதபுரம் ஜில்லாவில் நடத்துவதென்பது சென்ற வருஷம் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மகா நாட்டின் போதே இச்சில்லாவாசிகள் அழைக்கப்பட்டு தீர்மானித்த விசய மாகும். இராமநாதபுரம் ஜில்லாவில் எங்கு நடத்துவது என்பது சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிர்வாக சபை கூட்டத்தில் விருதுநகர் பிரமுகர்களில் சிலர் முன்னிலையில் அவர்களது சம்மதத்தின் மீது முடிவு செய்ததாகும். ஆகவே இங்கு நடைபெறும் விஷயத்தில் எல்லாவற்றையும் விட இவ்வூர் பிரமுகர்களுடையவும், வாலிபர்களுடையவும் ஒத்துழைப்பும் ஊக்கமுமே அதிகமாக வேண்டியதாகும். நமது இயக்கத்தின் முக்கியத்தைப் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பிரசாரமும் இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிரிகளின் தன்மையும் கவனித்தாலே விளங்கிவிடும். எப்படி எப்படியோ மூன்று நான்கு வருஷங்களை இயக்கப் பிரசாரம் நடைபெற்றதுடன் இரண்டு பெரிய மகாநாடுகள் நடந்து மூன்றாவது மகாநாடு நடக்கப்...

ஓர் மறுப்பு 0

ஓர் மறுப்பு

சுயமரியாதை இயக்கத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட மறுப்பை பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பியிருக்கிறார். அதாவது :- இருபதாந்தேதி வெளிவந்த சென்னை தினசரிப் பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான சுயமரியாதைச் சங்க அங்கத்தினர்கள் உப்பு வரியை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக ஒரு செய்தி வெளி வந்திருப் பதைப் பார்த்தேன். யாராவது தன் சொந்த ஹோதாவிலோ அல்லது வேறு ஹோதாவிலோ உப்புச் சட்டத்தை மீறுவதைப் பற்றி எனக்கு ஆட்சேப மில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பெயரால் யாராவது உப்புச் சட்டத்தை மறுப்பு செய்யத் தொடங்கினால் அம்முயற்சி சுயமரியாதை இயக்கத்தாரால் ஆதரிக்கப்பட்டதாகாது. அவ்வியக்கத்தின் முக்கிய அங்கத்தி னர்களில் ஒருவர் என்கின்ற முறையில் எனக்காவது சுயமரியாதை சங்கத் தலைவருக்காவது அதில் சம்பந்தமே கிடையாது. உப்புச் சட்டத்தை மீறுவ தென்பதை இது சமயம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உப்புச் சட்டத்தை மீறுவதனால் சுயமரியாதை இயக்கத்துக்கு எத்தகைய நன்மையும் உண்டாகாது. குடி அரசு – அறிக்கை –...

முஸ்லீம் வாலிபர்களுக்கு 0

முஸ்லீம் வாலிபர்களுக்கு

சமீப காலமாக, அதாவது சுமார் ஒரு வருஷகாலமாக அநேக இஸ்லாம் வாலிபர்களுடனும், பல மௌல்விகளுடனும், இரண்டொரு மௌலானாக்களுடனும் நெருங்கிக் கலந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. அதிலிருந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் பலர் முழுவதையும், சிலர் ஒன்றிரண்டு தவிர மற்றதையும் ஒப்புக்கொள்ளு பவர்களாகவே அறியமுடிந்தது. ஆனால் கடவுள் என்பதைப்பற்றி மாத்திரம் அவர்களில் அநேகர் தங்கள் அபிப்பிராயத்தை வெளியில் எடுத்துச் சொல்லவே பயப்படு வதையும் சிலர் அப்புறம்இப்புறம் திரும்பிப்பார்த்துப் பேசுவதையும், பார்க்கும்போது நமக்கு மிக்க பரிதாபமாகவே இருந்தது. அதில் ஒருவர் நம்மிடம் பேசுகையில் “நீங்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசும், எழுதும் எழுத்துக்கள் எல்லாம் இந்துமதக் கடவுள்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றீர்களா? அல்லது மற்ற மதக்கடவுள்களையும் பற்றி பேசுகின்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு நாம் விடையளிக்கையில் “நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும்...

தேவதாசி ஒழிப்புச் சட்டம் 0

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

கோயில்களில் பெண்களை பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தை சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள். இதற்காக சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களையே பொது மகளீர்களாக்கி நாட்டில் விவசாரித்தனத்திற்கு செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றி யும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையு டன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக் கம் கடவுள் பேராலும் மதத்தின்...

காந்திப் போர் 0

காந்திப் போர்

இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கும் படியானதும் ஏதோ ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணப் போகின்றது என்று பாமர மக்களுக்குள் பிரமாதமாகப் பிரசாரம் செய்யப் படுவதற்கு உபயோகித்துக் கொண்டிருப்பதும், திரு. “காந்தியின் கடைசிப் போர்” என்று சொல்லப்படும் சத்தியாக்கிரக சட்ட மறுப்பு கிளர்ச்சியேயாகும். இந்த சத்தியாக்கிரக சட்ட மறுப்பு என்பதை உப்புக் காய்ச்சுவதன் மூலமும் உப்பளத் தில் இருந்து உப்பை அள்ளிக் கொண்டு போவதன் மூலமும் செய்து பார்ப் பதாக சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இம்மாதிரி திரு. காந்தியவர்கள் செய்வது இந்தியாவில் இது இரண்டாவது தடவையாகும். அதாவது, இதுபோலவே 1920, 21 – ம் வருஷத் தில் ஒரு தடவை பஞ்சாப் அநீதியைச் சொல்லிக் கொண்டு மது பானத்தின் பேரால் ஒரு கோடி ரூபாய் கை முதலாக வைத்து கள்ளுக்கடை மறியல் மூலமாய் ஒரு சட்ட மருப்பும் சத்தியாக்கிரகமும் தொடங்கப்பட்டு சுமார் நாலு மாத காலம் வெகு மும்முரமாய்...

பண்டித மோதிலால் முடிவெய்தினார் 0

பண்டித மோதிலால் முடிவெய்தினார்

பண்டித மோதிலால் நேரு அவர்கள் இந்தியாவில் கீர்த்திபெற்ற மனிதருள் ஒருவராவர். அதோடு பெருந்தியாகிகளுள் ஒருவராவர். அவர் ஐக்கிய மாகாணத்தில் ஒரு பேர் பெற்ற வக்கீலாயிருந்தவர். கல்கத்தாவுக்கு திரு. தாஸ் போலவும், பம்பாயிக்கு திரு. ஜெயக்கர் போலவும், மத்திய மாகாணத்திற்கு திரு.சாப்ரு போலவும், சென்னை மாகாணத்திற்கு திரு. சீனி வாச ஐயங்கார் போலவும், பெரும் பெரும் வரும்படியுள்ள வக்கீலாகவும் வக்கீல் தொழிலில் கெட்டிக்காரர் என்று பிரமாதிக்கும்படியாகவும் வாழ்க்கை யில் எல்லோரைப் பார்க்கிலும் பெருமையாகவும் வாழ்ந்து வந்தவர். அவரது வீடும் வாழ்க்கைத் திட்டமும் அரண்மனைபோலவே இருக்கும். இந்திய பொதுவாழ்க்கையை என்றைய தினம் படித்தவர்கள் மூலமும் படித்தவர்களுக்குள்ளாகவுமே ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதலே வக்கீல்களே பொது வாழ்வில் இறங்கி வேலை செய்யும் கீர்த்தி பெறவும் முடிந்து வந்தது. அந்த முறையில்தான் திரு. திலகர் முதல் திரு. சத்தியமூர்த்தி ஈராக அநேகர் அநேகமாக பொது வாழ்க்கையில் பிரசித்தி பெற்றவர்களாக நேர்ந்தது. திரு. காந்தியவர்களும் இந்த முறையிலேயே பொதுவாழ்வுக்கு வரவேண்டியவரானாலும்...

பல்லாவரப் பொது நிலைக்கழகக் கூட்டம் 0

பல்லாவரப் பொது நிலைக்கழகக் கூட்டம்

சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத்திருக் கின்றன. அவை ஒரு அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக் கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக்கூடியதாக வுமிருப்பதால் அதைப்பற்றி சில குறிப்பிடுகின்றோம். இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக் கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம்கொடுக்கின்றன. பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை திருவாடுதுரை திருபனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைக ளுக்கும் வாக்குறுதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் தீர்மானங் களும், தமிழுக்கும், சைவத்திற்கும், மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டு மென்னும் வேண்டுகோள் தீர்மானமும், மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்மந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும். அவை யாவன:- கோவிலுக்குள் யெல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்கவேண்டும், ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும், கோவில்களில் தேவதாசி முறை கூடாது, அனாவசியமானதும் அதிக செலவானதும்...

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை 0

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை

– சித்திரபுத்திரன் மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடீ என் அறுமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும் மேல் உலகத்திலும் உள்ளவர்களுக் கெல்லாம் ஐசுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா? லட்சுமியான ஸ்ரீரங்க நாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தைரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கை வைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது? விஷ்ணு:- ஐய்யய்யோ அதனாலா இப்படி  செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாக்ஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந்...

பட்ஜட் என்னும் வரவு செலவு திட்டம் 0

பட்ஜட் என்னும் வரவு செலவு திட்டம்

சமீபத்தில் சென்னை சட்ட சபையில் நிகழப்போகும் பட்ஜட் வரவு செலவு திட்ட நடவடிக்கையில் மூன்று காரியம் செய்ய பணம் ஒதுக்கி வைக்கவேண்டும் என்னும் விஷயத்தில் கவலை எடுத்து அனுகூலப் படுத்திக் கொடுக்க வேண்டுமாய் சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். அதாவது, 1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புஸ்தகம் துணி சாப்பாடு ஆகியவைகள் சாக்கார் பணத்திலிருந்து செலவு செய்து கல்வி கற்றுக் கொடுப்பது. 2. மாகாணத்தில் சென்னையை விட்டு வெளியில் தமிழ்நாட்டில் ஒன்றும் ஆந்திர நாட்டில் ஒன்றுமாக விதவைகள் ஆச்சிரமம் வைத்து அவர்களுக்கு சௌகரியப்பட்ட பெற்றார் உற்றார்கள் இடமிருந்து செலவுக்கு துகை பெற்றும் முடியாதவர்களானால் சர்க்காரிலிருந்தே செலவு செய்தும் சாப்பாடு துணி கொடுத்துக் கல்வியோ தொழிலோ கற்றுக் கொடுத்து ஜீவனத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பது. 3. இப்போது மது விலக்குப் பிரசாரம் செய்வதுபோலவே சர்க்கார் செலவில் மாகாணமெங்கும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வது. இம் மூன்று காரியங்களுக்கும் பணம் ஒதுக்கிவைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஆகவே...

காங்கிரஸ் 0

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின் போது வரவேற்புத் தலைவராய்  இருந்தவரும் பார்ப் பனர்களின் தாசானுதாசராய் இருந்தவருமான திரு. முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் ஐயங்காரும் மற்றும் நிர்வாக அங்கத்தினர்களான திருவாளர்கள்  எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி ஆர்.சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் நிர்வாக சபையில் ராஜீனாமா செய்து விட்டார்கள். காங்கிரஸின்  நிலைமை  எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில் கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆள்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய ஸ்தானங்களுக்கு அபேட்சை உள்ளவர்கள்  மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது. இப்போது அதற்கு இடமில்லாமல்  ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும் படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப் பட்ட ஆள்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலேயே காங்கிரசை பார்ப்பனர் கள்...

ஜனநாயகம் 0

ஜனநாயகம்

சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜன நாயகம் என்பது அதாவது அந்த ஜனங்களாலேயே அந்த சமூகத்தை ஆட்சி செய்து, முற்போக்கடையச் செய்வது என்பது முடியவே முடியாது. இன்னும் விளக்கமாய்ச் சொல்வதானால், அதாவது, பல மதமாய், பல ஜாதி யாய், பல வகுப்பாய், பல லக்ஷியமாய் பிரிந்து சராசரி 100க்கு 10 பேருக்கு கூட கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்பதேயாகும். இந்த அபிப்பிராயம், நாம் மாத்திரம் சொல்வதாக மக்கள் கருதினாலும் நமக்கு ஆnக்ஷபணையில்லை. ஆனாலும் அறிஞர்களும், அனுபவ சாலிகளுமான அநேகர் இதே அபிப்பிராயம் கொண்டிருப்பதை நாம் கேட்டு மிருக்கின்றோம். அன்றியும் இந்த நமது மேல் கண்ட அபிப்பிராயத்தை நிரூபிக்க இதற்கு முன் பல ஆதாரங்களை நாம் எடுத்து காட்டியும் இருக்கின்றோம். ஆனாலும், இப்போது கிடைத்த இரண்டொன்றையும் எடுத்துக்காட்டு வோம். அதாவது:- இந்திய நாட்டிலுள்ள...

சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி 0

சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி

உள் நாட்டு மெம்பர் பதவி சென்னை அரசாங்க நிர்வாக சபையில் இம்மாதக் கடசியில் ஒரு மெம்பர் ஸ்தானம் அதாவது கடந்த 5 – வருஷ காலமாக டாக்டர் கனம் சர் மகமது உஸ்மான் அவர்கள் வகித்து வந்த உள்நாட்டு மெம்பர் ஸ்தானம் 5 வருஷ காலாவதியின் காரணமாக காலி ஆகக் கூடுமென்பதாய் தெரிய வருகின்றது. அதை உத்தேசித்து அநேக கனவான்கள் அதை அடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்தாரும் அந்தப் பதவியை யாருக்குக் கொடுக்கலாம் என்பதாக யோசனை செய்து கொண் டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தாருக்கு இது விஷயமாக நாம் நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட வேண்டியது நமது கடமை என்று நினைக் கின்றோம். ஆதியில் அதாவது சுமார் 20 வருஷத்திற்குமுன் மேன்மை தங்கிய கவர்னரவர்களின் நிர்வாக சபையில் இரண்டு அங்கத்தினர்கள் இருந்ததை மூன்றாக மாற்றியதின் முக்கிய காரணமே இந்தியர்களுக்கும் அதில் இட மிருக்க வேண்டும் என்கின்ற...