சைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம் -சித்திரபுத்திரன்
இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்று போலவே கற்பிக்கப் பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமி பாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொண்டார்கள். சுப்ர மணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணி யன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன் றான் சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தி யாய்க் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாய்க் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக் கொண்டே இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக் கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்டக் கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரியபுராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரி பக்தர்கள்...