Author: admin

வைதீக வெறி 0

வைதீக வெறி

இந்துப் பெண்மணிகள் பலவகையிலும் சுதந்திரம் இல்லாதவர்களாய் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு முதன்மையான காரணம், அவர்கள் ஆண் களின் தயவைக் கொண்டு ஜீவனம் பண்ணக் கூடிய நிர்ப்பந்தமான நிலை யிலிருப்பதேயாகும். இந்த வகையான நிர்ப்பந்த நிலைமை இருப்பதற்குக் காரணம் இந்தப் பாழும் இந்து மதமும், அதன் மூலம் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகையால் ஆண் மக்களுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளும் பெண் மக்களுக்கும் சட்ட மூலமாக ஏற்பட்டால் தான் அவர்கள் சீர்திருத்தமடைய முடியுமென்று நாம் கூறி வருகிறோம். ஈரோடு, விருதுநகர், சென்னை முதலிய இடங்களில் கூடிய நமது இயக்கப் பெண்கள் மகாநாடுகளிலும் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டிருக்கின்றன. ஆனால் எந்த விதமான மாறுதலையும் விரும்பாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே விரும்புகின்ற வைதீகர்கள், பெண் மக்கள் உரிமைகளுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்து கொண்டு வருகின்றனர். பெண் மக்கள் கேட்கும் சுதந்தரங்களையெல்லாம் மதத்திற்கு விரோதம், ‘கடவுள்’ கட்டளைக்கு விரோதம், சாஸ்திரங்களுக்கு...

நான்கையும் பாருங்கள் 0

நான்கையும் பாருங்கள்

– தேசீயத்துரோகி சீனாவைப் பாருங்கள் தற்காலத்தில் சீனதேசம் ஆபத்தான நிலைமையிலிருந்து கொண்டிருக் கிறது. ஜப்பான் அதை ஓட ஓட விரட்டுகிறது. ஜப்பானுடன் எதிர்த்து நின்று போர் செய்யும் வல்லமை சீனாவுக்கு இல்லை. ஆகையால் அது சர்வதேச சங்கத்தினிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச சங்கமும் இத் தனை நாட்களாக ஒரு முடிவுக்கும் வராமலிருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சர்வ தேசங்களுக்கும் சொந்தமாக இருக்கும் பிரதேசத்தில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதால் சீனா ஜப்பான் தகராறில் சர்வதேச சங்கமும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இது எப்படியாவது போகட்டும். சீனா இத்தகைய பலமற்ற நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை மாத்திரம் கொஞ்சம் கவனிப்போம். சீனாவில் சரியான சீர்திருத்தம் ஏற்பட வில்லை. சீனாவின் மக்கள் ஏறக் குறைய இந்தியா மக்களைப் போன்றவர்கள்.  பழய நாகரீகத்தை விடாப் பிடி யாக பிடித்திருப்பவர்கள். சீனாவில் சீர்திருத்த நோக்கமுடைய கூட்டத்தாரும் இருக்கின்றனர். அவர்கள் நம்மைப் போன்ற – அதாவது சுய மரியாதை இயக்கக்காரர்களைப்...

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு 0

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு ஜூன் முதல் வாரத்திலாவது இரண்டாவது வாரத்திலாவது நடத்துவதாக உறுதி செய்யப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததில் மகாநாட்டுத் தலைவர் திரு. சர் ஹரிசிங்கவர் அவர்கள் நீலகிரியில் இருந்து உடல் நலமில்லாமல் திரும்பிப்போய் விட்ட தாலும் வெய்யில் கடுமையை உத்தேசித்து வேறுதக்க தலைவர் சமீபத்தில் கிடைப்பதற்கில்லாமல் இருப்பதால் மகாநாட்டை ஆகஸ்டு வாக்கில் நடத்து வதாக தள்ளிப்போட்டு விட்டதாய் விருதுநகர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டி யார் தீர்மானம் செய்திருப்பதாக தெரிவித்துவிட்டார்கள்.  மகாநாட்டு விஷய மானது இந்தப்படி அடிக்கடி மக்கள் ஏமாற்றமடையும் படி நடந்து வருவது பலருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதா யிருந்தாலும் அதற்கு அனுகூலமாக சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் மறுப்பதற்கில்லை என்பதையும் ஒருவாறு தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.  இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு நமது இயக்க எதிரிகள் விசமப்பிரசாரம் செய்யக்கூடும். ஆனாலும் வரவேற்புக் கமிட்டியார்  இதை உணராதவர்கள் என்று சொல்லி விட முடியாது.  இதற்காக அவர்கள் மகா...

தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானங்கள் 0

தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானங்கள்

இம்மாதம் 24, 25ம் தேதிகளில் பிறையாற்றில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றுள் முக்கியமாகக் கருதப் படுவதும், பலருக்கு திடுக்கிடும்படியான அளவுக்கு பிரமாதமாய் காணப்படு வதுமான தீர்மானங்கள் மூன்று. அதாவது, “மக்களுக்குள் இருந்துவரும் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கு முட்டுக்கட்டையாக விருக்கும் ‘இந்து மதம்’ என்பது அழிக்கப்பட வேண்டியது மிக்க அவசிய மாகும்.” “மக்கள் உண்மையான சுதந்திரமும், சமதர்மமும், பொது வுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு இடை யூறாக விருக்கும் கடவுள் நம்பிக்கையும், எதற்கும் அதையே பொறுப் பாக்கும் உணர்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.” “பெண்கள் ஆண்களைப் போன்ற விடுதலையையும், சமதர்ம ஒழுக்கத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு தடையாயிருக்கும் பிள்ளைப்பேற்றை (கர்ப்பத்தை) அடக்கி ஆள வேண்டியது அவசியமாகும்” என்பவைகளாகும் ஆகவே இதன் கருத்து மத உணர்ச்சி, கடவுள் உணர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டு...

ஈ. வெ. இராமசாமியின் “கெய்ரோ” கடிதம் 0

ஈ. வெ. இராமசாமியின் “கெய்ரோ” கடிதம்

போர்ட் சைட்டிலிருந்து எழுதிய வியாசம் கிடைத்திருக்கலாம். அதில் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” என்கின்ற கப்பல் விஷயத்தைப்பற்றி மாத்திரம் எழுதமுடிந்தது. மற்றபடி கொழும்பிலிருந்து கப்பல் புறப்பட்ட தற்குப் பின் கண்ட விஷயங்களைப்பற்றி சுருக்கமாக எழுதுகிறேன். கொளும்பிலிருந்து டிசம்பர் 17 -ம் தேதி காலை புறப்பட்ட கப்பல் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ‘ஜிபுட்டி’ என்கின்ற பிரஞ்சு துறைமுகம் வந்து சேர்ந்தது. இது ஏடனுக்கு எதிர்பாகத்தில் இருப்பதும் பிரஞ்சுக்காரருடைய துறை முக முமாகும். நாங்கள் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணம் செய்ததால் பிரஞ்சு கப்பல் அங்கு செல்ல வேண்டியதாயிற்று. பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமான தீவாகிய மடகாஸ்கர் என்னும் தீவுக்கு அனுப்பப்படும் சாமான்களும் அத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாமான்களும் ஜிபுட்டி என்கின்ற துறைமுகத்தின் வழியாகத்தான் வரவேண்டும். இந்த துறைமுகத்தில் நாங்கள் இரங்கினதும் “கமாலியர்” என்கின்ற ஒரு ஜாதியார் நீக்கிறோவர்களைப் போல் அதிக கருப்பும் மிகவும் சுருண்ட தலைமயிரும் உடையவர்கள் தான் இந்தத் தேசத்தில் அதிகமாய் இருக்கிறவர்கள், இவர்கள் பாஷை...

புதிய முறை சீர்திருத்த மணம்  பொன்னம்பலனார் – சுலோசனா 0

புதிய முறை சீர்திருத்த மணம் பொன்னம்பலனார் – சுலோசனா

  திருவாளர் அ. பொன்னம்பலனார் அவர்களது திருமணமானது 24ந் தேதி மாலை 5 மணிக்கு பிறையார் நாடார் ஹைஸ்கூல் ஆலில் உயர்திரு.  புரபசர் லக்ஷிமி நரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  திருமண ஒப்பந்தம் நடைபெறுவதற்கு முன் திரு. ஈ. வெ. இராமசாமி எழுந்திருந்து சில வார்த்தைகள் சொன்னார். அதாவது சீர்திருத்த திருமணம் என்றும் சுயமரியாதைத் திருமணம் மென்றும் சொல்லப்படுபவைகளெல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்மந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமை இல்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத இயற்கை தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும்.  சுயமரியாதை இயக்கத் திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அனேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத – அர்த்தமற்ற, அவசிய மற்ற சடங்குகள் இல்லாத, புரோகிதமே இல்லாத ஓரேநாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண்செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும்,...

கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா? 0

கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா?

இந்து மதத்தில் தான், சாஸ்திர சம்மதமாகவும், தெய்வ சம்மதமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளி யேறினாலொழிய மனிதத் தன்மை பெறமுடியாதவர்களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதாக உலக முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக – சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்துவ மதத்தில் இத்தகைய சாதிக் கொடுமை இல்லை என்று பறை சாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி – அந்த மத கர்த்தாவான யேசு நாதரின் கொள்கைப் படி அந்த மதத்தில், சாதி வித்தியாசம் பாராட்டவோ, சாதி வித்தியாசம் காரண மாகத் தாழ்த்தப் பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தி வைத்திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம். இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியாசங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்று பார்த்தால், இந்து மதத்தின் அண்ணனாகவோ, அப்பனாகவோ பாட்ட...

வெண்ணெயை வைத்துக் கொண்டு? 0

வெண்ணெயை வைத்துக் கொண்டு?

  நமது நாடு விடுதலை பெற வேண்டும் என்று நமது நாட்டிலுள்ள எல்லாக் கட்சியின் தலைவர்களும் கூறிக் கொண்டு வருகின்றனர். அதற்காக ஏதோ சில காரியங்களையும் செய்து கொண்டும் வருகின்றனர். தற்பொழுது சுயராஜ்யத்தைப் பற்றியும், தேச விடுதலையைப் பற்றியும் பேசாத மனிதர்கள் ஒருவர்கூட இல்லை யென்றே சொல்லலாம். ஆனால் யாரும் நமது நாட்டு ஏழை ஜனங்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைச் சுகமாக வாழும்படி செய்வதற்குத் தகுந்த வழி என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது. சுயராஜ்யம் வந்து விட்டால் எல்லாம் சரிப்பட்டு விடும் என்று ஒரேயடியாகச் சொல்லி விடுகிறார்கள். இப்படிப் பேசுகின்ற கூட்டத்தார் இது வரையிலும் நமது நாட்டு மக்களின் கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்திருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி நினைத்ததுதான் உண்டா? என்றால் கொஞ்சங்கூட இல்லை என்று நாம் துணிந்து சொல்லுவோம். நமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எண்ணற்ற மக்கள், இன்று கட்டத் துணி இல்லாமலும், உண்ண உணவில்லாமலும், இருக்க...

பூனைக்கும்? பாலுக்கும்? 0

பூனைக்கும்? பாலுக்கும்?

இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 – 1 – 32 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் தற்கால சட்ட மறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமே யாகும். மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதியவர்கள் “சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின் வாங்கி நிற்கும்?” என்று கேட்கும் கேள்வியும், “சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமுலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா” என்று கூறிவிருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும். அதிலும் காங்கிரஸ்காரர்கள்பால் அநுதாபம் காட்டுவதன் மூலம் “தேசாபிமானிகள்” என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதின் மூலம் அரசாங்கத்தாருக் கும் “நல்லபிள்ளைகளாக” இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டி ருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம்...

பார்ப்பன வக்கீல்கள்,  மாணவர்கள் “காங்கிரஸ்” பிரசாரம் 0

பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் “காங்கிரஸ்” பிரசாரம்

  இப்போது கோர்ட்டும் பள்ளிக்கூடமும் மூடப்பட்டு லீவு நாளாய் இருப்பதால் அந்த நாளைக் காங்கிரஸ் பிரசாரம் மென்னும் பார்ப்பன பிரசாரத் திற்காக ஊர் ஊராய் சென்று வெகு கவலையாய்ப் பிரசாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும், மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள். இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர்களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது.  பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் பிரசாரம் செய்யும்படி நாம் விரும்பவிலை.  ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரசாரம் ஏன்  செய்யக்கூடாது என்றுதான் கேட்கின்றோம்.  பார்ப்பனரல் லாத சமூகம் ஒரு மனிதன் தன்னை தூக்கி ஏதோ  விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவுதான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவுக்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப் படுவதல்லாமல்  அந்த சமூக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்...

சி. இராஜகோபாலாச்சாரியாரின் வேலைத்திட்டம் 0

சி. இராஜகோபாலாச்சாரியாரின் வேலைத்திட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உயர்திரு. சி. இராஜ கோபா லாச்சாரியார்  அவர்கள் பணம் வசூலிப்பதற்காக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அந்தப் பணத்தின் மூலம் செய்யப்படும் வேலைத் திட்டங் களையும் குறிப்பிட்டிருக்கின்றார். அவைகளில் 5-வது திட்டமாக:- ஹிந்தி:- “ஜனங்களிடையே இருக்கும் குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் போக்கி பகுத்தறிவும் ஏற்படுவதற்குப் பாடு பட வேண்டும்” என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது தற்காலத்திற்கு ஏற்றதொரு வேஷமேயானாலும் இவர்களும் இவர்களது சிஷ்யகோடிகளும் செல்லு மிடங்களிலெல்லாம் பாரதக்கதையையும், ராமாணயக் கதையையும், நளன் கதையையும் மற்றும் விஷ்ணுவின் 10 அவதாரக் கதைகளையும் பிரசங்கம் செய்து, பிரசாரம் செய்து கொண்டே போவது குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் ஒழித்து பகுத்தறிவை உண்டாக்கும் பிரசார மாகுமா? என்று வணக்கத்துடன் கேட்கிறோம்: அன்றியும் அந்த ³ அறிக்கையில் உள்ள 8 திட்டங்களிலும் தீண்டாமை விலக்கு திட்டத்தை மாத்திரம் வெகு ஜாக்கிரதையாகவே நமது ஆச்சாரியாரவர்கள் அடியோடு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டிருக் கிறது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்....

ஈரோட்டில் போலீஸ் அக்கிரமம் 0

ஈரோட்டில் போலீஸ் அக்கிரமம்

சகோதரர்களே! போலீஸார் அத்துமீரி நடந்த காரியத்தை கண்டிப் பதற்கு நாம் இக்கூட்டம் கூடியதாக சொல்லப்பட்டது என்றாலும் “போலீசார் ஏன் அடித்தார்கள்” என்று விசாரணை செய்ய நாம் இங்கு கூடவில்லை.  ஆனால் ஒரு கண்ணியமுள்ள கனவானை கடைவீதியில் வைத்து அவ மானம் செய்ததான அக்கிரம காரியத்தை கண்டிக்கவே கூடியிருக்கின்றோம். ஒருவன் குற்றம் செய்தால் குற்றத்திற்கு உரிய எந்த நியாயமான தண்டனையையும் அடைவதில் நாம் சிபார்சுக்குப் போகப்போவதில்லை.  மேலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை தண்டிப்ப திலும் நாம் போலீசாருக்கு உதவிபுரிய வேண்டியது அவசியந்தான்.  குற்றவாளி களை பிடிப்பதில் நாம் உதவி செய்யாது, போலீசுக்கு  விரோதமாக நடந்தால் ஊரில் சமாதானம் என்பது ஏற்படாது என்பது நாம் உணர்ந்ததேயாகும்.  ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் போலீசார் நடந்து கொண்ட முறையானது அக்கிரமமானதாகும்.  ஏனெனில், போலீசார் ஒரு பெரிய மனிதரை அடித்து விட்டார்கள்.  இதைக் கண்டிக்காமல் .இருக்க முடியாது.  இல்லா விட்டால் நாளைக்கும் இப்படித்தான் செய்வார்கள்.  மேலும் அவர்களால் அடிக்கப்...

சமதர்மப் போர் 0

சமதர்மப் போர்

  – தேசீயத்துரோகி டில்லியில் உள்ள போலீஸ் சீனியர் சூப்பரின்டென்ட் அவர்கள் போலீஸ் இலாகாவில் பெண்களையும் சேர்க்க முயற்சி செய்கிறார். ‘போலீஸ் உத்தியோகத்திற்கு பெண்கள் தேவை’ என விளம்பரங்களும் வெளியிட்டி ருக்கிறார். இந்த நிகழ்ச்சியை நாம் பாராட்டுகிறோம். எதற்காகப்  பெண் போலீஸ்  தேவை என்று சொல்லுகிறார் என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் இது பெண்களின் சமத்துவத்திற்கு ஏற்ற செய்கையாகும் என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் சென்ற வருஷத்தில் கூடிய பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்கு போலீஸ் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக் கப்பட்டிருப்பதாக  நமது ஞாபகம். டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் கூட ஒரு சமயம் பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் வேண்டுமெனப் பேசியிருப்பதாக நினைக்கிறோம். பெண்மக்களும் ஆண்மக்களைப் போல் சமஉரிமை பெற வேண்டும் என்று சொல்லுகின்ற ஆண் பெண்கள் அனை வரும் டில்லி போலீஸ் சூப்பரின்டென்டின் யோசனையை வரவேற்பார்க ளென்று நம்புகின்றோம். சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண்களைப்...

ஈ. வெ. ராமசாமியின் ஈஜிப்ட் கடிதம் 0

ஈ. வெ. ராமசாமியின் ஈஜிப்ட் கடிதம்

  “நாங்கள் பார்த்த கப்பல்” சூயஸ் துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பலை 29 – 12 – 31 தேதியில் நாங்கள் பார்த்தோம். அதன் பெயர் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” (நுஅயீசநளள டிக க்ஷசவையin) நேற்றைக்கு முந்திய தினம் கனடியன் பசிபிக் ரெயில்வே கம்பெனி யாரால், அக்கப்பலின் மேல் தளத்தில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அது சமயம் மேன்மை தங்கிய பிரதம மந்திரி அவர்களும் மேன்மை தங்கிய ஹை கமிசனர் அவர்களும் பிரதம விருந்தினராயிருந்தனர். மேற்படி கப்பலைப் பற்றிய சில ருசிகரமான விவரங்கள் கீழ்வருமாறு. உலக அதிசயக் கப்பல் உலகத்திலே அதிசயமானாதும், பெரியதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே பெருமை தரக் கூடியதுமான, கனடியன் பசிபிக் போக்குவரவுக் கப்பலான  “எம்பரஸ் ஆப் பிரிட்டன்”என்ற இந்தக் கப்பலைத் தவிர வேறு ஒன்றையும் கூற முடியாது. பிரிட்டிஷார் கடல் வியாபாரத்தில் மிகவும் கியாதி வாய்ந்தவர் கள் என்ற பரம்பரை புகழை இந்த அதி உந்நத கப்பல் ...

பெண் போலீஸ் 0

பெண் போலீஸ்

இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரீக்ஷhர்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப்படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தியோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்க ளென்பதே. “போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்” என்று போலீஸ் தலைமை சூப்பரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-1-32 ² வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது. இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சி யையும், பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் உண்டாக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கிய வர்கள், அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள் என இதுவரை மதம், கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவை...

திரு. சத்தியமூர்த்தி 0

திரு. சத்தியமூர்த்தி

உயர்திரு. சத்தியமூர்த்தி அய்யர் தென் இந்தியாவிலுள்ள பார்ப்பன அரசியல்வாதிகளையெல்லாம் விட மிகவும்  நல்லவர் என்றே சொல்லு வோம் – அவருக்கு சூது வஞ்சகம் ஆகிய காரியங்கள் அவ்வளவு அதிக மாய் அதாவது  பிறத்தியார் கண்டுபிடிக்க முடியாதபடி செய்தவற்குத் தகுந்த  அளவு தெரியாது  என்றே  சொல்லுவோம். ஆதலால் இப்படிப்பட்ட வர்களால் பார்ப்பனரல்லாதாருக்கு அதிகமான கெடுதி ஒன்றும்  செய்துவிட முடியாது.  அந்த முறையிலேயேதான் அவரை நல்லவர் என்று சொல்லு கின்றோம்.  அவருடைய  பொதுநல சேவையின் ஆரம்பமானது மிகவும் பரிசுத்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது  என்பதே  நமது அபிப்ராயம்.  ஆனால் பிறகு அவரை அய்யங்கார் கூட்டப்பார்ப்பனர்கள் அய்யர்கூட்டப் பார்ப்பனர் களுக்கு விரோதமாய் உபயோகித்துக்கொள்ள நினைத்து  திரு.சத்திய மூர்த்தியை மிகவும் தூக்கிவைத்துக் கெடுத்து விட்டார்கள். அவரும் இந்த அய்யங்கார்  கூட்டத்தையும்  அவர்களது அரசியலையுமே நம்பி தன்னைப் பற்றி அதிகக்கவலை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டதினாலும்  தனக்கு என்று ஒரு கொள்கையை பிடித்து வைத்துக் கொள்ளாமல்  போனதினாலும் கிரமப்படி அவருக்கு இருந்திருக்க...

திரு. வல்லத்தரசு 0

திரு. வல்லத்தரசு

புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர் களிடம் ஏமாறாமலிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவ ராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ., பி. எல்., அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக்கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்ததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.  ஆனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளேயே வசிக்கக் கூடாதென, சமஸ்தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்துவிட்டு விட்டார்கள். நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மை யிலேயே அரசாங்கதின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன...

3 வது மாகாண சுயமரியாதை  மகாநாடு 0

3 வது மாகாண சுயமரியாதை  மகாநாடு

விருதுநகரில் நடக்கவிருக்கும் 3-வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜுன்-µ 6,7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்ட தென்று தெரிவிக்க  வேண்டியதாகிவிட்டது.  ஏனெனில் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே  இசைந்து  அதை  உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு  வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் சர். ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும் மேலும் அவருக்கு அந்த  வலி நிற்காமல் மிகவும் தொந்திரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர  முடியாமலும் அதுவரை இங்கு இருக்க முடியாமலும் திடீரென்று தமது  ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது.  ஆன போதிலும் மகாநாட்டை எந்த  விதத்திலும் ஒரு வாரம் முன்பின்னாகவாவது நடத்திவிடலாம் என்கிற தீர்மானத்தின்  மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்திரபாண்டியன் அவர்களும், மற்றும்  விருதுநகர் பிரமுகர்கள்  திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார நாடார் முதலியவர்களும் வெகு மும்மரமாகவே...

ஜாதி மகாநாடுகள் 0

ஜாதி மகாநாடுகள்

நமது நாட்டில் சிறிது அரசியல் உரிமை கிடைத்ததன் பலனாகவும், அரசியல் கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்பட்டதன் பலனாகவும், கல்வி, அரசாங்க உத்தியோகம், ஸ்தல ஸ்தாபன பதவிகள் முதலியவைகளில் முன்னேறாமல் இருந்த ஒவ்வொரு ஜாதியினரும் விழித்துக் கொண்டனர். கல்வி, பட்டம், பதவி முதலியவைகளில் முன்னேறி இருக்கும் வகுப்பாரைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுப்பு மகாநாடுகள் கூட்டவும் தங்களுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டு மென்று அரசாங்கத்தைக் கேட்கவும் ஆரம்பித்தனர். பல வகுப்புகள்- அதாவது பல ஜாதிகள் உள்ள ஒரு தேசத்தில் அதிகாரம், பட்டம், பதவி முதலியவைகளில் எல்லா வகுப்புகளுக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என்று கேட்பதும் அதற்காகப் போராடுவதும் நியாயமேயாகும். இந்தக் காரணங்களுக்காக நமது நாட்டில் வகுப்பு மகாநாடுகள் கூட ஆரம்பித்த காலத்தில், எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்து தேசத்தில் ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை எல்லாம் தாழ்ந்த வகுப்புகளாக வைத்து தமது வகுப்பை மாத்திரம் உயர்ந்த வகுப்பாக வைத்துக்...

சுயராஜ்யம்! சுயராஜ்யம்!! 0

சுயராஜ்யம்! சுயராஜ்யம்!!

இப்பொழுது நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வெள்ளைக் காரர்களைத் துரத்தி விட்டு இந்நாட்டின் அரசாட்சியை நாமே ஆள வேண்டும் என்று தேசீயவாதிகள் ஜனங்களிடம் கிளர்ச்சி செய்து அவர்களைத் தூண்டி வருகிறார்கள். இதற்காக சட்டமறுப்பு, வரிகொடாமை முதலிய இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களாகவும், தீண் டாத வகுப்பினர்களாகவும் உள்ள சுமார் 7 கோடி மக்கள் இந்துக்களின் ஆட்சியை விட வெள்ளைக்காரர்களின்  ஆட்சியையே – அதாவது அவர் களின் பாதுகாப்பையே விரும்புகின்றனர். இவ்வாறு இவர்கள் விரும்புவது நியாயமானதே என்பதும் இதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை என்பதுமே நமது அபிப்பிராயமாகும். நமது நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சி வருவதற்கு முன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களுடைய ராஜ்யபாரம்தான் இருந்து வந்தது. அக்காலத்தில் அதாவது அந்தப் பல ஆயிரம் ஆண்டுகளிலும் தீண்டத்தகாத வகுப்பினர்களெல்லாம், தீண்டத்தகா தவராகவும்! தெருவில் நடக்கத்தகாதவராகவும், கண்ணால் பார்க்கத்தகாத வராகவும், சண்டாளராகவும், அடிமைகளாகவும், சுகாதாரமற்ற சதுப்புநிலங் களில் வசிக்கின்றவர்களாகவும், உண்ண உணவில்லாதவராகவும் உடுக்க...

தீண்டாமை 0

தீண்டாமை

உலகத்திலுள்ள கொடுமைகள் எல்லாவற்றையும்  விட, இந்தியாவில் மக்களை  மக்கள் தீண்டாமை என்கின்ற இழிவு  சம்மந்தமாக செய்துவரும்  கொடுமையே மிகப் பெரிதாகிய கொடுமையென்றும், அதற்குச் சமானமாக வேறு  எந்தக் கொடுமையையும் கூற முடியாதென்றும், எல்லா மக்களாலும் அரசியல் சமூக இயல் வாதிகளாலும்  சொல்லப்பட்டு பொது மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமுமாகும். ஆனால், அது விஷயத்தில் மாத்திரம் பயன்படத்தக்க வழியில் ஏதாவதொரு முயற்சியை இதுவரையில் யாரும் எடுத்துக் கொள்ளாமலே வெறும் வாய்ப்பந்தல் போடுவதினாலேயே மக்களை  ஏமாற்றிக் கொண்டு காலங்கழித்து வருவதும்  பிரத்தியட்சத்தில் தெரிந்த காரியமாகும். சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்பு கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது, வனத்தில் பிரவேசிப்பது,  கள்ளுக்கடை  மறியல் செய்வது, ஜவுளிக்கடை மறியல் செய்வது, என்பவைகள்   போன்ற சில  சாதாரணமானதும், வெறும் விளம்பரத்திற்கே  ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம்பேர் வரையில் ஜெயிலுக்குப்  போயும் அடிப் பட்டும்  உதைபட்டும் கஷ்டமும்பட்டதாக  பெருமை பாராட்டிக் கொள்ளப் பட்டதே தவிர இந்த மிகக்...

சமஸ்கிருத சனியன் 0

சமஸ்கிருத சனியன்

– தேசீயத் துரோகி தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம். சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும். உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும்...

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா 0

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!! “சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன். சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன். பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது  என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள்.  ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை.  ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண...

பகிஷ்கார யோசனை 0

பகிஷ்கார யோசனை

  காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில், போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்தப் பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம். தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ் காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை. இந்த வியாக்கியானம் கூறவும் இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்ய வும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற் காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப்...

மீண்டும் தொல்லை 0

மீண்டும் தொல்லை

இது வரையிலும் தேசம் அடைந்து வந்த கஷ்டம் நீங்குவதற்கு ஒரு மார்க்கமும் ஏற்படாமல் இருந்துவரும் இச்சமயத்தில் மறுபடியும் தேசத் திற்குப் பலவகையிலும், கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்து விட்டது பற்றி நாம் மிகவும் வருத்தமடைகின்றோம். சென்ற வருஷத்தில் திரு. காந்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உப்புச் சத்தியாக் கிரகத்தினால் உண்டான துன்பம் இன்னும் நீங்கினபாடில்லை. இந்த நிலையில் மறுபடியும் காங்கிரஸ், பகிஷ்கார இயக்கத்தையும் வரிகொடாமை, வாரங் கொடாமை முதலியவைகளையும் ஆரம்பித்ததைக் கண்டு, அரசாங்கத்தாரும் அதிமும்முரமாக அடக்குமுறைகளை ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இம்மாதிரி காங்கிரஸ் போர் தொடுக்க ஆரம்பித்ததற்கும், அரசாங்கத்தார் அடக்குமுறையைக் கையாளவும், அவசரச் சட்டங்களை ஏற்படுத்துவதற்கு முன் வந்ததற்கும் இருவர் கூறும் காரணங்களையும் நாம் விட்டு விடுகின்றோம். உண்மையில், காங்கிரஸ் எதற்காக மீண்டும் இத்தகைய போராட்டம் தொடங்க வேண்டும், அப்படிப்பட்ட நெருக்கடி என்ன வந்து விட்டது? என்பதைப் பற்றி மாத்திரம் இப்பொழுது நாம் கவனிப்போம். சென்ற வருஷம் நடைபெற்ற உப்புப்...

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா 0

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!! “சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன். சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன். பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது  என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள்.  ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை.  ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண...

காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர் 0

காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரின்டென்டிங் இஞ்சினீயரும் சிவபுரி ஜமீன்தாரருமான திரு. பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ் சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார். இவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டாயிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெரும் நஷ்டமேயாகும். இவரை இழந்து வருத்தமடையும் அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.01.1932

தலைநகரும் பிடிபட்டது 0

தலைநகரும் பிடிபட்டது

ஒரு நாட்டு மக்களைச் சீர்திருத்த வேண்டுமானால் – அவர்களிட முள்ள மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க வேண்டுமானால் – அவர் களிடமுள்ள சாதிசமய பேதங்களை ஒழித்து சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழச் செய்ய வேண்டுமானால் தைரியமாக அவர்களிடம் குடி கொண்டி ருக்கும் குற்றங்களை எடுத்துக்காட்ட வேண்டும் – இவ்வாறு தேச மக்களிடம் படிந்து கிடக்கும் குற்றங்களை அவர்களுடைய எதிர்ப்பையும், வெறுப்பை யும் எதிர்பாராமல் எடுத்துக்காட்டுவதன் மூலந்தான் அவர்களைச் சீர்திருத்தஞ் செய்ய முடியும். தேசத்தின் நன்மைக்கு மக்களுடைய சீர்த்திருத்தத்திற்கு எந்தெந்தக் காரியங்களை ஒழிக்க வேண்டும், எந்தெந்தக் காரியங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் விஷயங்களைப் பகுத்தறிவுடன் ஆராய்ந்துத் தன் மனத்திற்கு பட்டதை தைரியமாக ஜன சமூகத்திற்கு எடுத்துக் கூறும் தலைவர்களால்தான் – இயக்கங்களால்தான் எந்த தேசமும் முன்னேற்ற மடைய முடியும். இவ்வாறில்லாமல், மக்களுடைய பழக்க வழக்கங்களுக்கு அவர் களுடைய பழய கொள்கைகளுக்கு விரோதமான அபிப்பிராயங்களை வெளி யிட்டால் பொதுஜனங்கள் நம்மை எதிர்ப்பார்கள்; அவர்களிடம் நாம் தலைவர்களாக விளங்கமுடியாது; பொதுஜனங்களால்...

காங்கிரஸ் கூட்டத்தில் சொற்பொழிவு 0

காங்கிரஸ் கூட்டத்தில் சொற்பொழிவு

சகோதரர்களே! நமது ஊருக்கு வந்த விருந்தாளியை வரவேற்கவும், அவருக்கு நமது மரியாதையைக் காட்டிக்கொள்ளவும் என்று நமது ஊர் மக்களின் பிரதிநிதி ஸ்தாபனமாகிய முனிசிபல் சபை திரு. சென்குப்தா அவர்களுக்கு ஒரு வரவேற்புப்  பத்திரமளிக்கத் தீர்மானித்து, அவ்வரவேற்பளிக்கும் கூட்டத் திற்கு என்னை தலைமை வகிக்க வேண்டுமென்று நமது முனிசிபல் சேர் மென் திரு. ஷேக் தாவுத் சாயபு அவர்கள் விரும்பியபடியும், உங்கள் எல்லோருடைய ஆமோதிப்புப் படியும் எனக்கு அளிக்கப்பட்ட இந்தப் பெருமைக்கு நன்றி செலுத்துகின்றேன். திரு. சென்குப்தா அவர்கள் முதலில் முனிசிபல்  நிர்வாகத்தைப்  பாராட்டிப் பேசியபின் இந்த முனிசிபாலிட்டிக்கு மின்சார சப்ளை பொ றுப்பை ஒருவெள்ளைக்காரக் கம்பெனிக்கு அரசாங்கத்தார் கொடுத்து விட்டதைக் கண்டித்துப்  பேசினார்.  அது மிகவும் சரியானதேயாகும். ஆனா லும்,  அக்குற்றம் முழுவதும் அரசாங்கத்தாருடையதல்ல.  அவர்களுக்கு நம்மிடம் இவ்வளவு அலட்சியம் ஏற்படுவதற்கு நமது கேவல நிலைமையே  காரணமாகும். நமக்கு உண்மையில் அரசாங்கத்தார் செய்தது தப்பு என்றும் அவர்கள் நம்மை அலட்சியம் செய்தது...

‘சுதந்திர வீரன்’ 0

‘சுதந்திர வீரன்’

சுதந்திர வீரன் என்னும் பத்திரிகையின் முதல் மலர், முதல் இதழ் வரப்பெற்றோம்.  அதன் தலையங்கத்தில் கடவுள், காந்தி, காங்கிரஸ், புராதான நாகரீகம், தேசீயம் ஆகியவைகளைப் புகழ்ந்தும், எழுதியிருக்கின் றதுடன் இதையே தமது கொள்கையாகவும் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடக் கின்றது.  ஆதலால் இதன் கொள்கை ‘காந்தீயம்’ என்பதாகவே தெரிய வரு கின்றது.  இப்பத்திரிகைக்கு உயர்திரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரால் அனுப்பப் பட்டிருப்பதாய்க் காணப்படும் ஒரு வாழ்த்துச் செய்தியில் “இந்தியா சுய ராஜியம் இழந்து அன்னியர் கையில் சிக்கிப் படும் கஷ்டத்தில் ஒரு பாகத்தை அனுபவிப்பதுடன் தமிழ் நாட்டார் தங்கள் சுயமரியாதையையும் இழந்து கஷ்டப்படுகின்றார்கள்.” “ஆகவே சுதந்திர வீரன் சுயராஜியத்திற்குப் போராடுவதுடன் தமிழ் நாட்டார் இழந்ததை (சுயமரியாதையை) அடைய உதவுமென்று நம்பு கின்றேன்”  என்பதாக எழுதி இருக்கின்றார்.  ஆகவே இதை லட்சியம் செய்து நடக்கும் முறையில் முயன்று நின்று வெற்றிபெற விரும்புகின்றோம். ஆசிரியர் திரு.ஜெ.பி.ராட்ரிக்ஸ் “சுதந்திர வீரன்” ஆபீஸ், பெரிரா வீதி, தூத்துக்குடி குடி...

இரட்டைவாக்குரிமையை உறுதியாக ஆதரித்த குடி அரசு 0

இரட்டைவாக்குரிமையை உறுதியாக ஆதரித்த குடி அரசு

உடல்நலமில்லாத பெரியார் நீண்ட ஓய்வு எடுக்கவேண்டுமென்று மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை புறக்கணித்து பெரியார் மேலைநாடு பயணத்தை மேற்கொண்டார். ஈஜிப்ட், க்ரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங் கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ப்ரான்ஸ், போர்ச்சுகல் நாடுகளில் சுமார் ஒரு வருடம் பெரியார் பயணம் செய்தார். பயணம் முடித்து கொழும்பு வழியாக தமிழகம் திரும்பிய காலகட்டம் இது. இலங்கையில் பல பகுதிகளுக்கும் சென்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பயணத்தில் நீண்ட காலத்தைச் செலவிட்ட சோவியத் நாட்டின் சோசலிசக் கொள்கைகள் பெரியாரை மிகவும் ஈர்த்திருந் ததை அவரது உரைகள் வெளிப்படுத்தின. நமது நாட்டில் மக்கள் ஓரணியில் திரளாமல் தடுப்பதற்கு கடவுள், மதம்,  சாதி, தலைவிதி, கர்மபலன் போன்ற நம்பிக்கைகளே காரணம் என்றார் பெரியார். இங்கிலாந்தில் மாபெரும் தொழிலாளர் பேரணியில் பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் லாம்ஸ் பெரி முன்னிலையில் பெரியார் ஆற்றிய உரை; பெயருக்கு முன்னால் தோழர் என்றே விளியுங்கள் என்று பெரியார்...

ஜனாப் அலாவுதீன் ராவுத்தர் 0

ஜனாப் அலாவுதீன் ராவுத்தர்

தென்னிந்திய நல உரிமைச் சங்க உதவித் தலைவரும், மதுரை முனிசிபல் கௌன்சிலரும், நமது நண்பருமான ஜனாப் கா.ம. அலாவுதீன் ராவுத்தரவர்கள் 5.5.31ந் தேதி காலை 7மணிக்கு தமது 55 வது வயதில் முடிவு எய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்.  ஜனாப் ராவுத் தரவர்கள் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்தில் அதிகக் கவலை பூண்டு, மிக்க அக்கரையுடன் தொண்டாற்றியவராவர்.  ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வி யடைந்த பிறகு மதுரையில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகா நாட்டின் போது மிக்க ஊக்கத்துடன் ஒத்துழைத்து மகாநாட்டை சிறப்புர நடத்திவைத்த பெரியார்களில் இவரும் ஒருவர் ஆவார்.  இவர் காலஞ்சென்றது எல்லா பிராமணரல்லாதார்களுக்கும், சிறப்பாக மதுரை பிராமணரல்லாதாருக்கும் ஓர் பெரிய நஷ்டத்தை விளைவித்ததுடன் அவர்களின் முன்னேற்றத்தில் மிக்க கவலையுடன் அரும்பாடுபட்டு வந்த ஒரு உற்ற நண்பரை இழந்து விட்டார் களெனக் கூறுவது மிகையாகாது.  நமது அனுதாபத்தை அன்னாரின் குடும்பத் தாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு – இரங்கல் செய்தி – ...

தலைவிரித்தாடிய சாதிவெறி

தலைவிரித்தாடிய சாதிவெறி

பெரியார் ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட இக்காலகட்டத்தில் அவர் இல்லாத நிலையிலும் குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் தளராமல் எழுச்சிநடை போட்டன. என்.சிவராஜ் சட்டமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருந்தும் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினராக மறுக்கப்பட்டார். குடி அரசு கண்டித்தது. பால்ய விவாகத்தைத் தடைசெய்யும் சாரதா தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபிறகும் கூட அந்த சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று தனது மகளான சிறுமிக்கு திருமணம் செய்கிறார் ஒரு தந்தை. மாவட்ட நீதிமன்றம் அவரைத் தண்டிக்கிறது. கல்கத்தா உயர்நீதிமன்றமோ அவரை விடுதலை செய்கிறது. இந்து, முகமதிய குடும்பங்களில் நடைபெறும் காரியங் களை இங்கிலாந்து சட்டங்களே தடுக்கமுடியாது என்று 1780, 1797 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி இயற்றிய சட்டத்தை உயர்நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று குடி அரசு குரல் கொடுத்தது. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிந்தால் அவர்கள் மார்புகள் அறுக்கப்படும். வெள்ளை வேட்டி...

“நான்” 0

“நான்”

சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் ஆத்மா என்னும்  விஷயத்தைப் பற்றி எழுதிய வியாசத்தின் இறுதியில்   அதன்  தொடர்ச்சி பின்னால் வரும் என்று  எழுதப்பட்டிருந்தது.  அதாவது ஆத்ம உணர்ச்சி என்று சொல்லப்படு வதான “நான்” (என், எனது, என்னுடைய) என்பதின் தன்மையைப் பற்றி எழுதுவதாக எழுதியிருந்தோம். ஆகவே இப்போது மனிதன் தன்னை உணர்த்தும் வகையில் நான் என்று சொல்லிக் கொள்வது எது என்பதே இப்போது இவ்வியாசத்தில் ஆராய்வதாகும்.  முன் வியாசத்தில் ஆத்மா என்பதைப் பற்றிச் சொன்னது போலவேதான் இப்போது  “நான்” என்பதைப்  பற்றியும் சொல்ல வேண்டி யிருக்கின்றது. மனிதன் தன்னை நான் என்று  சொல்லிக் கொள்வது எதனால்? அது எது? என்னும் ஆராய்ச்சியானது இந்து மதம் என்பதின் கடைசி அதாவது “வேதாந்த” தத்துவமாகப் பாவிக்கப்பட்டு  “அதைக் கண்டுபிடிப்பதே கடவுளைக் கண்டு பிடித்ததாகும்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. உதாரணமாக  “தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனா வான்” என்றும், “தன்னைத்தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டிய தில்லை” “தன்னை...

‘தேசீய’வாதிகளும்  ‘தேச’ பக்தர்களும் 0

‘தேசீய’வாதிகளும் ‘தேச’ பக்தர்களும்

  நமது நாட்டு அரசாங்கத்தாரை தனிப்பட்ட   முறையில் பார்த்தோ மேயானால் நமது நலத்தைப்பற்றிய பொறுப்பு ஒரு சிறிதும் அற்றவர்கள் என்பதையும் அவர்கள் தங்கள் ஜாதி, தங்கள் நாடு ஆகியவைகளின் நன்மையையே பெரிதும்  கவனித்து  அதற்காகவே இந்திய நாட்டின் ஆட்சி நடத்தும் உரிமையை  அடைந்து ஆட்சி புரிந்து வருகின்றார்கள் என்ப தையும் நாம் வெகு நாளாய் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம் என்பதோடு அந்த ஆட்சியானது அதாவது   பிரிட்டிஷ் ஆட்சியானது இந்தியாவில் அன்னிய  ஆட்சிக்கு முன் வெகு காலமாய்  இருந்து வந்ததாக  சரித்திரங் களில் காணப்படும் இந்திய மன்னர்களின் ஆட்சியைவிட – இந்திய “தெய்வ அவதார”  ஆட்சிகளைவிட எவ்வளவோ பங்கு மேலானதும் மனிதத் தன்மை பொருந்தியதாகுமென்பதையும் அவ்வப்போது எடுத்துக் காட்டி  ஆதாரங்களுடன் மெய்பித்து வந்திருக்கின்றோம். மேலும் இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் யோக்கியமான ஆட்சிமுறைகள் என்பவைகள் எல்லாம் இன்றையதினம் நம்மால் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று சொல்லப்படும் படியான மனுதர்ம ( பார்ப்பன ஆதிக்க ) ஆட்சிமுறையாகத்தானிருந்து வந்ததாகக்...

ஊத்துக்குளி ஜமீன்தாரர் மரணம் 0

ஊத்துக்குளி ஜமீன்தாரர் மரணம்

ஊத்துக்குளி ஜமீன்தாரர் (பாளையத்தார்) உயர்திரு. திவான்பகதூர் முத்துராமசாமி காளிங்கராயர் அவர்கள் 1-5-31 தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஊத்துக்குளியில் தமது அரண்மனையில் முடிவெய்தினார் எனக்கேட்டு மிகவும் வருந்துகின்றோம். ஜமீன்தாரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லாவில் புராதனமும், பிரபலமும், கீர்த்தி வாய்ந்ததுமான ஒரு பாளையத்தார் ஆவார்கள்.  இவர் 1864 ´ ஜனவரி µ 24-ந் தேதி பிறந்தார்.  இன்றைக்கு இவரது வயது 67 ஆகின்றது. 1881ல் பட்டத்திற்கு வந்தார்.  இவர் பட்டத்துக்கு வந்து இன்றைக்கும் 50 வருஷம் ஆகின்றது.  இந்த ஜமீன் பரம்பரைக்கிரமத்தில் இவர் ஒருவரே 50 வருஷம் பட்டம் ஆண்டார் என்பதோடு இவர் 33-வது பாளையதாரர் ஆவார். இவர்களது பாரம்பரியர்களால்தான் பவானியிலி ருந்து ஈரோடு வழியாக கொடுமுடி வரை வெட்டப்பட்டிருக்கும் காளிங்கராயன் வாய்க்கால் என்னும் 50 மைல் நீளமுள்ள வாய்க்கால் வெட்டப் பட்டதாகும்.  இந்த ஜமீன்தாரர் அவர்கள் பட்டம் ஏற்றுக்கொண்டது சிறு வயதாய் இருந்தாலும் ஒரு ஆங்கில உபாத்தியாயர் மூலமே கல்வி,...

ஹிந்து 0

ஹிந்து

இந்த வியாசமானது ஹிந்து மதம் என்பது என்ன? ஹிந்துக்கள் என்பவர் யார்?  ஹிந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா? என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும். இதற்குமுன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும்  அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அநுகூலமாக அதாவது நமது கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில  விஷயங்கள் இவ்வார “நவ சத்தி”யின் உப தலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக்காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள்,  இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமய சமூகம் என்பவைகளுக்கு பொருப்பற்ற  தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவும் இதை எழுதுகின்றோம். அதாவது “நவ சக்தி”யின் 6-5-1931¦²  உபதலையங்கம் இந்துக்கள் யார்?  என்னும் தலைப்பில் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள்  எழுதி இருப்பதின்  சுருக்கமாவது;- வடநாட்டில் சத்பந்திகள் என்று ஒரு சமூகத்தார் இருக்கின்றார்கள். அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம்...

கரூர்  முனிசிபல் நிர்வாகம்                   அரசாங்கத்தாரின்   பாராட்டுதல் 0

கரூர்  முனிசிபல் நிர்வாகம்                   அரசாங்கத்தாரின்   பாராட்டுதல்

“மிகவும் சாமார்த்தியகரமாகவும், விர்த்தியாகத் தக்க வழியிலும், ஸ்தல ஸ்தாபன ஆட்சியின் கருத்துக்கள் நிறைவேற்றும்படியான முறையில் வெற்றிகரமாகவும் கரூர் முனிசிபல் நிறுவாகம் நடத்திக் காண்பிக்கப்பட்டி ருக்கின்றது” என்று சென்னை அரசாங்கத்தார் இந்த மாகாண ஜில்லா முனிசிபாலிட்டிகள் சம்மந்தமாக எழுதி வெளியிட்ட 29-30 வருஷத்திய பொது  நிர்வாகக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த பாராட்டுதலைப் பார்த்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவ தோடு கரூர் முனிசிபல் அக்கிராசனரையும், அங்கத்தினர்களையும் மனமாரப் பாராட்டுவதோடு கரூர் முனிசிபாலிடிக்கு இந்த மாதிரியான ஒரு நன்மை யையும்,  கௌரவத்தையும், நற்சாட்சிப் பத்திரத்தையும்  சம்பாதித் துக் கொடுக் கத்தக்க  அங்கத்தினர்களையும், தலைவரையும் தெரிந்தெடுத்த கரூர் மகா ஜனங்களையும் பாராட்டி போற்றுகின்றோம். குடி அரசு – செய்திக்குறிப்பு –  10.05.1931      

கதரும் – ஹிந்தியும் 0

கதரும் – ஹிந்தியும்

இந்திய நாட்டின்  சுயராஜ்யத்திற்கு கதரும், ஹிந்தியுமே முக்கிய மான மந்திரங்களாகப் பிரசாரம் செய்யப்பட்டு  வருகின்றன.  சென்ற ஒத்துழை யாமையின் போது கதர்  கட்டாதவர்களுக்கு ஓட்டு இல்லாமல் இருந்தது.   இப்போது மில்  முதலாளிகளின்  தாக்ஷண்யத்திற்குக் கட்டுப்பட்டு அந் நிபந்தனை கைவிடப்பட்டு விட்டாலும்,  இப்போது வேறு  ஒன்று அதாவது ஹிந்தி படிக்காதவர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை என்கின்ற கட்டளை ஏற்பட்டு அதனால் தென்னாட்டாருக்குப் பிரதிநிதித்துவம் கூட  இல்லாமல்  செய்தாய் விட்டதாக சொல்லப்பட்டாய் விட்டது. கதரைப் போன்ற ஒரு மோசடியான வியாபாரம் வேறு எதுவுமே இல்லை என்றே சொல்லவேண்டும். சாதாரணமாக வியாபாரத்தில்  அதிக மோசடி செய்கின்றவர்கள் மருந்து வியாபாரிகளேயாவர்கள்.  கதரைப்பார்த்த பின்பு (பேடண்ட் மெடி ஷன் என்று) உரிமை செய்துகொண்ட மருந்து வியாபாரிகள் மோசடி எத்தனையோ பங்கு நல்லதென்பதோடு  அவைகளில் அநேகம் சில சமயங் களில் நல்ல பலனையும் கொடுத்து வருகின்றது. ஆனால் இந்தக் கதர் ஆரம்பம் முதல் அந்தம் வரை ஏமாற்ற மானதாகவே முடிவு பெறுகின்றது. ...

வங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு 0

வங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு

கல்கத்தா டவுன் ஹாலில் வங்காள ஸ்திரீகள் மகாநாடு ஸ்ரீமதி சாரளா தேவி சௌத்ராணி தலைமையில் நடைபெற்றது. ஸ்திரீகளின் உரிமைகள் வற்புறுத்தப்பட்டும் அதை எவரும் சட்டை செய்யவில்லை என்றும், சிறப்பாக பண்டிதர் ஜவர்லால் நேரு கூட அதை அசட்டை செய்தது ஆச்சர்யமான தென்றும் சென்குப்தாவை மாகாண இளைஞர் மகாநாட்டில் தலைமை வகிக்காது தடுத்தது ரொம்பவும் சரி என்று ஆதரித்ததும், பலர் பிரசங்கமாரி பொழிந்தார்கள். பிறகு அங்கு செய்யப்பட்ட தீர்மானங்களாவன:- சாரதா சட்டம் உடனே அமுலில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருக்க வேண்டுமென்றும், கலப்பு மணம், விதவை மணம், இவைகளை அனுஷ்டிக்க வேண்டுமென்றும், ஆண் களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுக்க முறை இருத்தல் வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறைபுகுந்த வங்க நாட்டு பெண்களை நமது நாட்டு வீரர்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், வீரமணிகளென்கிறார்கள், இவர்கள் வங்க நாட்டு வீரப் பெண்மணிகளின் அடிகளை பின்பற்ற வேண்டுமென்றே சுயமரியாதைக்காரர்கள் விரும்புகிறார்கள். கேரள நாட்டில் காந்தி...

கதர் போர்டு நினைத்தது முடிந்தது 0

கதர் போர்டு நினைத்தது முடிந்தது

உப்பு சத்தியாக்கிரகத்தின்போது வேதாரண்யத்திற்கு சென்று சிறை சென்ற திருப்பூர் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலிருந்த திரு. சிதம்பரய்யர் என்னும் பார்ப்பனர் இப்பொழுது திருப்பூர் அகில பாரத சர்க்கா சங்கத்தைச் சேர்ந்த காதி வஸ்திராலயத்தில் ரூபாய் 50 சம்பளத்தில் காஷியர் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ³யாரை வேதாரண்யத்திற்கு அனுப்பும்போது ³யாரை உபசரித்து அனுப்புவதற்காக கூடிய கூட்டத்தில் திரு. சூ.ளு.வரதாச்சாரியார், திரு.சிதம்பரய்யரைப் பற்றி வானமளாவப் புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும், “ திரு. சிதம்பரய்யர் அவர்கள் ரயில்வே உத்தியோகத்தில் இருந்த போதிலும் ஒழிந்த நேரங்களில் கதர் வாங்கிக் கொண்டு போவதும் கதர் விற்பனை செய்வதும் கதரின் மேல் அவருக்குள்ள பற்றுதலும் மிகவும் சிலாகிக்கத்தக்கது என்றும், இப்படிப்பட்டவர்கள் தேசத்துக்கு பாடுபட வந்திருப்பது நம் பாக்கியமே” என்றும், பலவாராக புகழ்ந்து பேசினார். அப்போதே கூட்டத்திலுள்ளவர்கள் உப்பு சத்தியாகிரகம் தீர்ந்து ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் திரு. சிதம்பரய்யருக்கும் சர்க்கா சங்கத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றும் பலபேர் நினைத்துக் கொண்டி ருந்தார்கள். அதுபோலவே...

உபாத்தியாயர்கள் 0

உபாத்தியாயர்கள்

நமது நாட்டில் உள்ள தொழில் வகுப்புத்தொகுதிகளில் உபாத்தியாயர் வகுப்புத்தொகுதி என்பதே மிகவும் மோசமானதும், முட்டாள் தனமானது மான தொகுதி என்று சொல்லுவோம். அக்கூட்டத்தாரில் பெரிதும் அநேகருக்குச் சிறிதும் பகுத்தரிவு என்பதும், உலக கல்வி என்பதும் கிடையாது என்பது நமது 40, 50 வருஷத்திய அனுபவமாகும்.  அதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களைப் போன்றதும் பண்டித  உபாத்தியாயர்களைப் போன்றதுமான முட்டாள் தனமும் அசந்தர்ப்ப குணமும் அதிகப்பிரசங்கித்தனமும் மற்ற உபாத்தியாயர்களிடம் சற்று குறைவாகவாக இருக்கலாம். பொதுவாகவே உபாத்தியாயர்கள் என்பவர்களுக்குப் பகுத்தறிவு உதயத்திற்கு வழியில்லாமலே போய் விடுகின்றதான தன்மையே அவர்களது மூடத்தனத்திற்குக் காரணமாகும். முதலாவது உபாத்தியாயர் தொழில் என்பது இப்போது நமது நாட்டில் கிராமபோன் யந்திர வேலையாகவேதான் இருக்கின்றது. என்னவெனில், ஏதோ ஒன்றைப் படிப்பது, அதை ஒப்புவிக்கும் முறையில் பரீட்சை கொடுப்பது, மறுபடியும் அதை பிள்ளைகளுக்கு கிராம் போன் மாதிரி போதிப்பது ஆகிய காரியங்களைத் தவிர வேறு பகுத்தறிவு பெற சிறிதும் நேரமும், அவசியமும், சௌகரியமும் இல்லாத வாழ்க்கை...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள் 0

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் “திராவிடன்” “இந்தியா” என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர்பெற்றுத் தோன்றியதாகும்.  பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும். எப்படி இருந்த போதிலும் இவைகள் இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு வக்காலத்து பேசும் வகையில் நமக்கு எச்சரிக்கை செய்து  கொண்டே புறப்பட்டிருக்கின்றபடியால்  நமது கொள்கைகளுக்கு இவை களால் ஆதரவு எதிர்பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டியிருக் கின்றது. ஏனெனில் நாமோ பல மதங்களையும் பல சமயப் பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண் டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், பல சமூகக் கொள்கைகளையும்  அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக்  கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை, உயர்வு, தாழ்வு வித்தியாசத்தையும், தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு துலைத்தாகவேண்டும் என்று முடிவு செய்து...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அப்பிராமணர்   –        பார்ப்பனர் அல்லாதார் அப்புக் கட்டல் –        சப்பைக்கட்டு பேச்சு கிருத்திரம்      –        வஞ்சனை, பொய் குச்சுக்காரிகள் –        விலை மகளிர் சர்வ தயாபரத்துவம்    –        மிக்க அருளுடைய சுவாதந்திரியம் –        சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை தாக சாந்தி     –        நீர் வேட்கையைப் போக்குதல் தாஷ்டீகம்      –        உடல் நலம், உடல் உறுதி துராசாரம்      –        அறநெறிக்கு எதிராக நிர்தாட்சண்யம்         –        இரக்கமின்மை பிதுராஜ்ஜித    –        தந்தை வழி சொத்து, முன்னோர் சொத்து போஷகர்       –        புரவலர், காப்பாளர் மூர்த்தண்ணியமாக     –        ஊக்க மிகுதி யாதாஸ்து      –        அறிக்கை, குறிப்பு விநயமாக      –        பணிவாக, அவையடக்கமாக விரோதபாவம்  –        எதிர்ப்பு மனப்பான்மை க்ஷணம்...

பார்ப்பனரல்லாதார் கட்சி 0

பார்ப்பனரல்லாதார் கட்சி

பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை மூன்று காரணங் களே சொல்லப்படுகின்றன. அவை ஒன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி ஒரு அரசியல் கட்சியாக இருக்க வேண்டுமானால் அது எந்த வகுப்பாரையும் தள்ளிவைத்த கட்சியா யிருக்கக் கூடாது என்பது. மற்றொன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கும் உத்தேசத்துடன் ஏற்படுத்திய கட்சியானதால் எல்லா வகுப்பாருக் கும் அதில் இடம் இருக்கவேண்டு மென்பது. வேறு ஒன்று பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளா விட்டால் அக் கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லாம் போய் விடுவார்கள். பிறகு கட்சிக்குத் தலைவர் களே இருக்கமாட்டார்கள்; இதனால் கட்சியே செத்துப் போய்விடும் என்பது. ஆகிய இம்மூன்று காரணங்களே இப்போது பார்ப்பனரல்லாதார் கட்சியின் முக்கிய தலைவர்களாய் பாவிக்கப்பட்டு வந்த கனவான்களால் சொல்லப்பட்ட சொல்லி வருகின்ற காரணங்களாகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய காரியம் என்னவென்றால் மேற்கண்ட மூன்று காரணங்களும் உண்மையானவைகளா? அல்லது சுயநலத்தை உத்தேசித்து பொதுமக்களை...

சைமன் ரிப்போர்ட்டு 0

சைமன் ரிப்போர்ட்டு

சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வெளியாகி விட்டது. இதன்பேரில் ஏதாவது ஒரு அபிப்பிராயம் தெரிவிக்காதவர்களை பொது ஜனங்கள் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ கருதுவதில்லை. அன்றியும் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ ஆக வேண்டும் என்கின்ற ஆசை இருப்பவர்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அபிப்பிராயங்கள் சொல்லுவதன் மூலமே தங்கள் ஆசை நிறைவேறும் என்று கருதுவதும் சகஜம். இவை ஒரு புறம் நிற்கப் பொது காரியங்களில் உழன்று கொண்டு இருப்பவர்கள் யாராவது இம்மாதிரி விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லாவிட்டால் அவர்களை பயங்காளி என்று சொல்லுவதும் வழக்கம். சுவற்று மேல் பூனை போலிருந்து வாழ வேண்டுமென்கின்றவர்களான, தங்களுக்கென்று யாதொரு கொள்கையுமில்லாத சிலர் சற்று சங்கடமான நிலைமையில் யாதொரு அபிப்பிராயமும் சொல்லாமல் நழுவவிடுவதும் சகஜம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை நாம் எந்த காரணத்தைக் கொண்டா வது  ஏதாவது சொல்லித்தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அந்தப்படி இப்போது ஏதாவது ஒரு அபிப்பிராயம் சொல்லுவதில் சைமன் கமிஷனை உபயோகமற்றது என்று ஒரே வார்த்தை...

அர்ச்சகர் – ஜோசியர் சம்பாஷணை  -சித்திரபுத்திரன் 0

அர்ச்சகர் – ஜோசியர் சம்பாஷணை -சித்திரபுத்திரன்

அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது. ஜோசியர்: – என்ன காரணம் ? அர்ச்சகர்;-  இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான். ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக் காரர்கள் சாமி இல்லை, பூதம் இல்லை என்றுசொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று  பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா? அர்ச்சகர் :- இல்லை – இல்லை  அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும், கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது. ஜோசியர்:- மற்றென்ன காரணம்  என்று சொல்லுகிறீர்கள்? அர்ச்சகர்;- கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி, அதை நிருத்திவிட்டார்களல்லவா?  அதனால்தான்? ஜோசியர்:- இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால்   எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா? அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன...

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா தெய்வம் 0

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா தெய்வம்

இனி அடுத்தாற்போல் திரு. கையாலக்கேல் அவர்கள் பேசிய கடவுள் என்னும் விஷயத்தைப் பற்றி இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் சில வார்த்தைகள் நான் சொல்ல வேண்டியது அவசியமாகும். திரு. கையாலக்கேல் அவர்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசியதில் இந்து மதக் கடவுள்களை எடுத்துக் கொண்டு அவைகளின் உருவங்களைப் பற்றியும், பெயர்களைப் பற்றியும், குணங்களைப் பற்றியும், குடும்பங்களைப் பற்றியும், ஒரு கடவுளுக்கும் மற்றொரு கடவுளுக்குமுள்ள சொந்தங்களைப் பற்றியும், அதன் பூசை உத்சவம் முதலியவைகளைப் பற்றியும், அதைச் செய்கிற தரகர்களின் யோக்கியதையைப் பற்றியும், செய்விக்கிற பக்தர்களின் மனோ பாவத்தைப் பற்றியும் வெகு விபரமாகவும், ஆரம்பமுதல் கடைசிவரை நீங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்கும் படியாக அவ்வளவு வேடிக்கையாகவும் பரிகாசமாகவும் பேசினார். அது அவ்வளவையும் விநய மாகவே எடுத்துக் கொண்டு பார்ப்போமானாலும், அவர் சொன்னவற்றுள் ஏதாவது ஒன்றை ஆட்சேபிக்கவோ மறுக்கவோ இடம் இருந்ததா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். திரு. கையாலக்கேல் அவர்கள்...

பிரிட்டிஷ் ஆக்ஷியின் இன்றைய தீமைகள்  ஐ நியாயம் வழங்கு முறை  சிவில் இலாகா 0

பிரிட்டிஷ் ஆக்ஷியின் இன்றைய தீமைகள் ஐ நியாயம் வழங்கு முறை சிவில் இலாகா

பிரிட்டிஷார் ஆக்ஷியின் பயனாய் இந்திய மக்களுக்குள்ள கஷ்டங் களில் முக்கியமான கஷ்டங்கள் இரண்டு.  அவை  வரிக்கஷ்டமும் அல்ல, வியாபாரக்கஷ்டமும் அல்ல. ஆனால் இந்திய அரசியல் பிழைப்புக்காரர்கள் பாமரமக்களை ஏமாற்றி தாங்கள் தான் இந்திய ஜனப்பிரதிநிதிகள் என்று காட்டிக்கொண்டு அரசாங்கத்தாரிடம் உத்தியோகம், பதவி, பட்டம், பெற வரியைப்பற்றியும், வெளிநாட்டு வியாபாரத்தைப்பற்றியும் கள்ளைப்பற்றியுமே எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். அறிவோடு கூடி நடுநிலைமையில்  இருந்து ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தானேயானால் இவைகள் யெல்லா வற்றையும்  விடமுக்கியமாய் இருக்கும் குறைகள் தானாகவே புலப்படும்.  அதாவது வக்கீல் தன்மைகளும் உத்தியோக தன்மைகளுமேயாகும்.  இவ் விரண்டும் இந்தநாட்டில் பிரபுத்தன்மையைக்  காப்பாற்ற இருக்கின்றதே ஒழிய நியாயத்தைச்செய்யவோ ஏழைகளைக் காப்பாற்றவோ  இல்லவே யில்லை.  அரசியல் துறையில் சம்மந்தப்பட்டதான வக்கீல்  முறையும்  உத்தி யோக முறையும் இந்தியாவில் இந்த மாதிரி இல்லாதிருந்திருக்கு மானால் இந்த நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும் நாணயக்குறைவும் தரித்திரமும் மக்களுக்கு கஷ்டமும் அலைச்சலும் இருக்க முடியவே முடியாது என்ப தோடு...

பஞ்சமா பாதகங்கள் 0

பஞ்சமா பாதகங்கள்

“பஞ்சமா  பாதகங்கள்” என்னும் ஒரு புத்தகம் தன் ஆசிரியரான திரு. அ. அய்யாமுத்து அவர்களால் நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதை பார்வையிட்டோம். அப்புத்தகத்தில் பஞ்சமா பாதகமெனப்படும் கொலை, களவு, பொய், கள், காமம் என்னும் ஐந்து விஷயங்களும்  உலகில் எந்த சந்தர்ப்பங்களில் உண்டாகின்றன? அவை ஏன்? யாரால் உண்டாக்கப்பட்டது?   அது உலக வழக்கில் எப்படி நடைபெறுகின்றன? இன்ன இன்ன விதத்தில் இன்ன இன்ன காரணங்களால் நடைபெரும்  பஞ்சமா பாதகங்கள் குற்றமுடையன வாகுமா? உண்மையில் நடைபெரும் பஞ்சமா பாதகங்கள்  குற்றமாய் கருதப் படுகின்றனவா?  என்பவைகளையும் இன்றைய நிலையில் அதாவது சமூக, மத,அரசியல் நிலையில் பஞ்சமா பாதகம் என்பது நிகழாமல் இருக்க முடியுமா  என்றும் அவை  உண்மையில் நடக்கப்படாமலும்   மற்றவருக்கு துன்பம் இழைக்காமலும் இருக்க வேண்டுமானால்  எப்படி உலக சமுதாயக்  கொள்கை இருக்க வேண்டும் என்பதையும்  விவரித்து விளக்கி எழுதப் பட்ட புஸ்தக மாகும். இப்புத்தகம் கிரௌன் 1-8 சைசில் 50 பக்கங்களுக்கு மேல் கொண்ட...