லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை
லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென் னவென்றால், “நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கிறேனே யொழிய ராஜியைக் காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை” என்று பேசியிருக் கிறார். ஆகவே, சமாதானப்பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனே யானால் ராஜியைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத்திற்காக எந்த முறையையும் அனுசரிக்க வேண்டிவரும்” என்று சூசனை காட்டி இருக் கிறார். அதோடு ராஜி விஷயத்தைப்பற்றியும் பேசும்போது காங்கிரசுக் காரர்கள் “ராஜியை ஒரு சமாதான அறிகுறியென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்கு தயார் ஆவதற்கு ஏற்படுத்திக்கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி – இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள்” என்றும், “இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் – இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய்ச் சொல்லுகிறேன்”...