Author: admin

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை 0

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென் னவென்றால், “நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கிறேனே யொழிய ராஜியைக் காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை” என்று பேசியிருக் கிறார். ஆகவே, சமாதானப்பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனே யானால் ராஜியைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத்திற்காக எந்த முறையையும் அனுசரிக்க வேண்டிவரும்” என்று சூசனை காட்டி இருக் கிறார். அதோடு ராஜி விஷயத்தைப்பற்றியும் பேசும்போது காங்கிரசுக் காரர்கள் “ராஜியை ஒரு சமாதான அறிகுறியென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்கு தயார் ஆவதற்கு ஏற்படுத்திக்கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி – இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள்” என்றும், “இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் – இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய்ச் சொல்லுகிறேன்”...

காந்தியின் விளக்கம் 0

காந்தியின் விளக்கம்

பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார் உயர்திரு. காந்தியவர்கள் சென்றமாதம் 12-ந்தேதி பரோடா சமஸ் தானம் மரோலி என்ற கிராமத்தில் மதுபானத்தைப் பற்றிப் பேசிய விபரங் களைப் பற்றிச் சென்ற வாரத்திற்கு முந்திய  ‘குடி அரசு’ பத்திரிகையில் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்னும் தலைப்பில் திரு. காந்தி சொன்ன வார்த்தைகளை அப்படியே எடுத்து எழுதி அதின்மீது நமது அபிப்பிரா யத்தையும் எழுதியிருந்தோம். இதைப் பார்த்த சில பார்ப்பனர்கள் அதாவது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உடனே திரு. காந்திக்குத் தந்தி கொடுத்தார்கள். எப்படி என்றால், ‘தாங்கள் மதுபானத்தைப் பற்றி இம்மாதம் 12ந் தேதி மரோலியில் பேசிய பேச்சானது இங்கு சிலருக்கு பலவித அருத்தம் கொள்ளுவதற்கு இடமளிப்பதாய் இருப்பதால் அதை சரியானபடி விளக்க வேண்டும்’  என்பதாகக் கேட்டார்களாம். மற்றும் பலர் திரு. காந்தியைப் பாராட்டி அதாவது இப்போதாவது மதுபானத்தின் தத்துவத்தை அறிந்து அது விஷயமான கொள்கையை மாற்றிக்கொண்டதற்காக அவரைப் பாராட்டியும் எழுதினார்களாம். ஆகவே இவற்றிற்கெல்லாம் பதில்...

பொருளாதாரம் 0

பொருளாதாரம்

சகோதரர்களே! பொருளாதார மென்னும் விஷயத்தைப்பற்றி என்னைப் பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், வரும்படி அடைவ திலும் நம்நாட்டு மக்கள் எந்தநிலைமையிலிருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த வருவாயென்ன பலனளிக்கின்றது? அவர்களுக்கதிக வருவாய் கிட்டவுமது தக்க பயனளிக்கவும் வழியென்ன? என்பவைகள் போன்றது தான் பொருளாதாரமென்பது பற்றி நான் பேசப்போகும் விஷயத்தில் முக்கிய கவனிப்பாகும். ஆகவே இவ்விஷயங்களில் நமது நாட்டிற்கும் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்குமுள்ள வித்தியாசங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் மேல் நாட்டார் சராசரியாக ஒவ்வொரு நபரும் தினம் 2 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். நம் நாட்டார்களோ சராசரியாக ஒவ்வொரு வரும் தினம் 2 அணா வீதமே சம்பாதிக்கின்றார்களென்பது யாவருமறிந்த விஷயம். அன்றியும் இதுவே நம் நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய பல்லவியுமாகும். இது உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் மேல் நாட்டில் பல லக்ஷ ரூபாய் சம்பாதிப்பவனிலிருந்து தினம் கால் அணா சம்பாதிப்பவன் வரையில் சகலரையும் ஒட்டு மொத்தம் கணக்கு சேர்த்துப் பிரித்து வகுத்துப்பார்த்தால் ஆளொன்றுக்கு...

சென்னிமலை யுவர் சங்க ஆண்டு விழா  “வாலிபர்களே ஜாக்கிரதை!”  “எழுச்சியினால் கண்மூடித்தனமாய் குழியில் விழுந்து விடாதீர்கள்” 0

சென்னிமலை யுவர் சங்க ஆண்டு விழா “வாலிபர்களே ஜாக்கிரதை!” “எழுச்சியினால் கண்மூடித்தனமாய் குழியில் விழுந்து விடாதீர்கள்”

  சகோதரர்களே! உங்கள் சங்க வருஷக் கொண்டாட்டத்தை முன் னிட்டு எனக்கு ஆடம்பரமான வரவேற்பளித்ததற்கும், என்னைத் தலைமை வகிக்கச் சொன்னதற்கும், எனக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்த தற்கும் நான் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டவனாவேன். எனது கொள்கைகளுக்கு ஆதரவு காட்டும்முறையில் அப்பத்திரமிருப்பது பற்றியும், அக்கொள்கையிலுங்களுக்குள்ள பற்றுதல் காரணமாய் எனக்குப் புகழ்ச்சியுரைகள் கூறுகிறீர்களென்று நான் கருதுவது பற்றியும் அப் பத்திரத்தை நான் பெற்றுக் கொள்ளுகிறேன். விழாவின் வரவேற்புக் கமிட்டித் தலைவர் நண்பர் பழனியப்பன் வாசித்த வரவேற்புப் பத்திரத் திலும், பின்பு சங்க அறிக்கைப் பத்திரம் வாசித்துக் கொடுத்த நண்பர் என்.வி. பழனியப்பன் உரையிலும் நமது கொள்கை மிகவும் மலிந்து கிடக்கின்றது. நமதியக்கத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நன்குணர்ந்து அதைச் செயலிலும் செய்து வருகிறீர்களென்பதற் கவைகளே தக்க சாட்சிகளாயிருக்கின்றது. வரவேற்புத் தலைவர் உபன்யாசத்திலுள்ள பெரும் பகுதி விஷயங்கள் யாவும் எனது இன்றைய கொள்கைகளின் தத்துவங்களேயாகும். அதை விட நான் ஒன்றும் புதிதாகச்...

பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம் 0

பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்

சகோதரிகளே!சகோதரர்களே!!இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டதென்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறி விடமுடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரமளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள் தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலிகட்டப் படவேண்டும். புரோகிதமில்லாவிட்டாலும், புகைச்சலில்லா விட்டாலும் கூட, இந்த விவாகத் தில் “புரோகிதச்” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுவதற்கில்லை. சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக்கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். “என்ன செய்வது! விவாகம் திடீரென கூடிவிட்டது! அந்தநேரம் ( தாலிகழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்னசெய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத்தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

ஆஸ்பதமான   –               இடமான,  பற்றுக்கோடான ஆனந்த பாஷ்யம்            –               ஆனந்தக் கண்ணீர் தாரதம்மியம்    –               ஏற்றத் தாழ்வு மூர்த்தண்ணியமாக       –               ஊக்க மிகுதி யாதாஸ்து         –               அறிக்கை, குறிப்பு யாதாஸ்து         –               அறிக்கை, குறிப்பு விருத்தாப்பியம்              –               முதுமைக்காலம் வேறது                 –               வாய்ப்பு பர்த்தி   –               இணை, ஒப்பு, நிரப்பல் பிரக்யாதி            –               நன்கு அறியப்படுதல், கீர்த்தி, தாத்பர்யம்          –               பொருள், விளக்கம் உபதானம்          –               அரிசிபிச்சை தற்பித்து             –               பயிற்சி சரீரப் பிரயாசை               –               உடலுழைப்பு முகாலோபம்    –               முகம் காட்டல், முகம் பார்த்தல் கிரீடை                –               விளையாட்டு பத்ததி –               ஒழுங்கு, வழக்கம்

சித்தயங்கோட்டை “மக்கள் விடுதலை சேவை சங்கம்” திறப்பு விழா  0

சித்தயங்கோட்டை “மக்கள் விடுதலை சேவை சங்கம்” திறப்பு விழா 

  ஆர்வமுள்ள அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே!!  சகோதரர்களே!!! இந்த ஊரில் மக்கள் விடுதலைசேவை சங்கம் என்பதாக  ஓர் சங்கம் புதிதாக ஏற்படுத்த யுத்தேசித்து, அதை திறந்து வைக்க வேண்டுமென என்னை அழைத்ததற்காக நான் நன்றி செலுத்துகின்றேன்.  இவ்வூர் பிரமுகர் கள் அளித்த வரவேற்புக்கும், வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரப் புகழ் மொழிக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.  அவை எனது தகுதிக்கும்,  அளவுக்கும் மீறிய வகையில் செய்யப் பட்டிருப்பதால், அவை களை நான் ஏற்றுக்கொண்டேனென சொல்லுவதற்கு முடியாத நிலைமை யிலிருக்கிறேன். இயக்கத்தினிடம் உங்களுக்கிருக்கும் ஆசையால் மெய் மறந்து, அன்பினால் மரியாதை செய்திருக்கிறீர்கள். ஏனெனில், எனக்குப் பொருந்தாததும், மேம்பட்டதுமான வாசகங்கள் வரவேற்புப் பத்திரத்தில் மிகுதியும் காணப்பட்டிருக்கிறது.  நமது அக்கிராசனர் உரைத்தது போல் மரியாதை செய்யும் முறையில் அதிகமாகச் செய்யப் பட்டிருக்கிற தென்ப தாகவே கருதினாலும் அவ்வார்த்தைகள் எனது கொள்கைகளுக்காதார மாயிருக்குமென நினைத்து அதன்மூலம் நீங்கள் ஆதரவளிப்பதாய்க் கருதி உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். சகோதரர்களே! இன்று,...

கவியும் பண்டிதரும் 0

கவியும் பண்டிதரும்

காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தின் பேரில், காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கும் காலத்திலேயே பூரியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டையும் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அரசங்கத்தார் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் மகாநாடு கூடினால் சட்ட மறுப்பு இயக்கத்தை இன்னும் பலப்படுத்துவதற்குக் காரணமாகும் என்று கூறி பூரி காங்கிரசைத் தடுத்து விட்டார்கள். இதன்பின் காங்கிரஸ் கமிட்டியினர் மகாநாடு கூட்டும் விஷயத்தில் கவலை கொள்ளுவதை விட்டுச் சட்டமறுப்பு இயக்கத்தையே நடத்தினர். இதன் பலனாகக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர் பெரும்பாலும் சிறை சென்றுவிட்டனர். இப்பொழுது வெளியிலிருப்பவர்கள் இரண்டொரு வரே யாவார்கள். இந்த நிலையில் இப்பொழுது காங்கிரசின் ஆக்டிங் தலைவராக இருக்கும் திருமதி சரோஜினிதேவியார் காங்கிரசின் 47வது மகாநாட்டை டில்லியில் கூட்டத் தீர்மானித்து, அதற்குத் திரு. மாளவியா பண்டிதரைத் தலைமை வகிக்கும்படி கேட்டு, அவரும் ஒப்புக் கொண்டு, மற்றும் மகாநாட்டு உத்தியோகஸ்தர்களும் நியமிக்கப்பட்டுப் பத்திரிகைகளிலும்...

இத்தகைய கோயில்கள் ஏன்? 0

இத்தகைய கோயில்கள் ஏன்?

தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோயிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தெரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ரல்லாதார்களுக்கும் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும், ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்த போது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர். ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல்லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்;  ஜஸ்டிஸ் வாலர் பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்;  ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலஸ் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார். இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பன ரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில் களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோத ரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு...

இந்து முஸ்லீம் 0

இந்து முஸ்லீம்

இந்த நாட்டில், இந்துக்கள், முஸ்லீம்கள் என்கின்ற இரண்டு சமூகங் களும் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையுடைய சமூகங்களாகும்.  ஆனால் அவை இரண்டும் தங்கள் தங்களது நடை உடை ஆச்சாரம் அனுஷ் டானம் ஆகியவைகளில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான சமூகங்கள் என்பதோடு உண்மையைப் பேச வேண்டுமானால் இவ்விரு சமூகங்களும் அரசியலிலும் மத விஷயத்திலும் ஒவ்வொருவருடைய இலக்ஷியங்க ளிலுங்கூட வேறுபட்ட தென்று சொல்லும்படியான சமூகங்களாகும். உதாரணமாக நடை உடை ஆசார அனுஷ்டானங்களிலுள்ள மாறு பாட்டைப் பற்றி நாம் யாருக்கும் எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை என்று கருதினாலும், அரசியல் மத இயல் இலட்சியங்களில் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதில் சிலருக்காவது விவரம் தெரிய வேண்டியிருக் கலாம். ஆதலால் அதைப் பற்றிக் கவனிப்போம். இந்தியாவிலிருக்கும் இந்துக்களில் 1000க்கு 998 பெயர்கள் மத உணர்ச்சியின் பயனாகவே மகமதியர்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்லுவதிலும் அதுபோலவே இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள மகமதியர்களில் 1000க்கு 999 பெயர்கள் இந்துக்கள் என்பவர்களை வெறுக்...

ஊ.ஐ.னு.திரு.காந்தியின் தீண்டாமையின் திருகணி வியாக்கியானம் 0

ஊ.ஐ.னு.திரு.காந்தியின் தீண்டாமையின் திருகணி வியாக்கியானம்

உயர் திரு காந்தியவர்களை ஒரு தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவர் தீண்டாமையைப் பற்றி சந்தேகம் தெரிவிக்குமாறு ஒரு கடிதம் எழுதி இருந் தார். அதற்கு பதிலாக திரு. காந்தி எழுதி இருப்பதில் காணும் குறிப்பாவது, தீண்டாமை விஷயமான காங்கிரஸ் தீர்மானங்கள் இன்னும் அரசியல் திட்டத்தில் ஒன்றாக நிருவப்படவில்லை. அதாவது நான் சொல்லுவதுதானே ஒழிய இன்னமும், அரசியல் கொள்கையாக ஒப்புக்கொள்ளவில்லை. ப-ர்) அப்படி நிறுவப்பட்டாலும் நீதிஸ்தலங்கள் (அதாவது கோர்ட்டுகள்) இவற்றை கவனித்துக்கொள்ளும். வேதங்களினுடையவும் சாஸ்திரங்களினுடையவும் கட்டளைகளை புறக்கணிக்கப்படமாட்டாது. (அதாவது அவைகளுக்கு விறோதமாக ஒன்றும் செய்யப்படமாட்டாது. ப-ர்) காங்கிரஸ் அமைப்பு போது மான அளவு விரிவுள்ளதாகவே இருக்கின்றது. (அதாவது எப்படி வேண்டு மானாலும் வியாக்கியானம் செய்து கொள்ள தகுதியாகவே இருக்கின்றது.              ப-ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 21.06.1931

சட்டசபைநாடகம் 0

சட்டசபைநாடகம்

  ஏழை மக்களுடன் பழகி, ஏழை மக்களாகவே வாழ்கின்ற ஏழை மக்கள் தான் அவர்களுடைய துன்பங்களை நீக்க உண்மையாகப் பாடுபட முடியுமே யொழிய ஏழைமக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவி வகித்து வருகிற வேறு எந்தப் பணக்கார முதலாளிகளும் அவர்களின் துன்பத் தைப் போக்கப் பாடுபடமுடியாது என்று நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம். இதற்கு உதாரணம் வேண்டுமானால் நமது இந்தியா சட்டசபையின் நிகழ்ச்சிகளையும் மாகாண சட்டசபைகளின் நிகழ்ச்சிகளையும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். இச்சமயத்தில் சென்ற 4-4-32 ² இந்திய சட்டசபையில் இந்திய ராணுவ சம்பந்தமான முக்கிய விஷயம் பற்றி விவாதம் நடக்கும்போது சபையில் பல உறுப்பினர்களின் ஸ்தானங்கள் காலியாக இருந்தனவாம். இதை திரு. எஸ். சி. மித்திரா அவர்களும், சட்டசபைத் தலைவரும் எடுத்துக்காட்டி கண்டித்தனர். அப்போது தலைவர் கண்டித்துக்  கூறியதாவது:- “சட்டசபைக் கூட்டத்திற்கு பலர் வரவில்லை என்றும், சிலர் வந்து விட்டுத் திரும்பி விட்டார்கள் என்றும், சபையில் அதிக...

யோகப்புரட்டு 0

யோகப்புரட்டு

மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது. இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள்...

துருக்கியில் பெண்கள் முன்னேற்றம் 0

துருக்கியில் பெண்கள் முன்னேற்றம்

திறைமறைவில் உரை போட்டுக் கொண்டு இருக்க வேண்டிய பெண்கள் இன்று துருக்கியில் பிறந்ததின் பயனாய் திறையை அவிழ்த்துத் தள்ளி உரையைக் கழட்டி எறிந்து விட்டதோடல்லாமல் “எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம். கல்யாணம் செய்து கொள்ளுவதன் மூலம் புருஷர்களுக்கு அடிமையாய் இருக்க இனி நாங்கள் சம்மதிக்கமாட்டோம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதோடு நிற்காமல் ‘ எங்களுக்கு உத்தியோகம் வேண்டும்’ என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். புர்தாவை-கோஷாவை-படுதாவை “மதக்கட்டளை” என்று சொல்லப்பட்ட மார்க்கத்தில் பிறந்தும்-இஸ்லாம் மார்க்கத்தின் பிரமுகரான கலீபா இருந்த பிரதான நகரமாகிய துருக்கியில் பிறந்தும் துருக்கியானது கமால்பாஷா என்கின்ற ஒப்பற்ற ஒரு வீரரின் ஆக்ஷியில் இருக்க நேர்ந்ததின் பயனாய் இன்று அப்பெண்மணிகள் “எங்களுக்கு கல்யாணம் வேண்டாம், உத்தியோகம் வேண்டும்” என்று சொல்லக்கூடிய யோக்கியதை அடைந்து விட்டார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பாங்கி முதலிய வியாபார ஸ்தலங்களிலும் அதாவது சதா பல புருஷர்கள் நடமாடும் இடங்களிலும் தங்கள் தலையைக் கத்தரித்துக் கொண்ட அழகான முஸ்லீம் பெண்கள்...

ஹிந்திக் கொள்ளை 0

ஹிந்திக் கொள்ளை

ஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழி யின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொது ஜனங்களின் மனத்தில் தேசாபி மான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது.  இது போலவேதான் சுதந்தரப்போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறி கின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது. சுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை. ஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் ஹிந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது  நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர்.   தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் “காந்திக்கு ஜே”...

சுதேசிப் பிரசாரம் 0

சுதேசிப் பிரசாரம்

நமது நாட்டின் பொருளாதாரத் துறையை விருத்திச் செய்ய வேண்டு மென்பதிலும் இதற்கு ஆதாரமானத் தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதிலும் நாம் யாருக்கும் பின்வாங்கியவர் அல்லோம் என்பதை நமது மகாநாடுகளில் அவ்வப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானங் களைக் கொண்டு அறியலாம். பொருளாதாரத் துறையிலும், தொழில் அபிவிருத்தியிலும் நாம் முன்னேற்றமடைய வேண்டுமானால் கூட்டுறவுத் தொழில் முறையில் இயந்திரங்களை விருத்தி செய்தால் ஒழிய நாம் வியாபாரத்தில் அன்னிய தேசங்களுடன் போட்டி போட ஒரு நாளும் முடியாது என்பதே நமது கொள் கையாக இருந்து வருகின்றது. இந்தத் தத்துவத்தைக் கொண்டுதான் நாம், ராஜீயச் சின்னமாக உபயோகப்பட்டு வருகின்ற கதர்த் திட்டத்தைப் பலமாக எதிர்த்து வருகின்றோம். அன்றியும் இப்பொழுது காந்தீயத்தினால் ஏற்பட்ட ‘சுதேசீயம்’ என்னும் பிரசாரம் மக்களை மீண்டும் பழய மிருகப் பிராயத்திற்கு இழுத்துச் செல்லும் தத்துவத்தை யுடையதென்று கூறி அதை அடியோடு கண்டிக் கின்றோம். ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய பொருள்களைப் பிறரு டைய கூட்டுறவை விரும்பாமல்...

தீண்டாமையே இந்துமதம் 0

தீண்டாமையே இந்துமதம்

அகில இந்திய தீண்டாமை விலக்குச் சங்கத்தின் சென்னைக் கிளை யின் ஆதரவில் சென்ற 17 – 3 – 32 வியாழனன்று, காலஞ் சென்ற சுவாமி  சிரத்தானந்தர் அவர்களின் உருவப் படத்தை வைக்கும் பொருட்டு, சர். ஏ. பி. பாத்ரோ அவர்கள் தலைமையில் சென்னைக் கோகலே மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் கூடிற்று. கூட்ட ஆரம்பத்தில், திரு. பாத்ரோ அவர்கள், “தீண்டாதாருக்கு இந்து சமூகம் செய்துள்ள தீமைகள் கொஞ்சம் அல்ல. அதை அகற்றுவதற்குப் பல சீர்திருத்தக்காரர்கள் பாடுபட்டு வந்திருந் தும், இன்று வரையிலும் இக்கொடுமை அழியாமல் இந்தியாவில் நிலைத்து வருவது வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்தாரைத் தொடவும் கூடாதென மிருகங்களைக் காட்டிலும் இழிவாக நடத்துவதை விடக் கொடுமையான விஷயம் வேறொன்றுமில்லை. புத்தர் போன்ற பெரியார்களின் உபதேசங்கள் இந்நாட்டில் தோன்றியிருந்தும், இன்னும் இத்தீண்டாமைக் கொடுமை ஒழியா மலிருப்பதற்குக் காரணம் இந்து சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யாகும்” என்று...

பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை 0

பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை

தேசீயத் துரோகி அடுத்த வருஷத்தில் மாசி மாதத்தில் வரப்போகும் மகத்திற்கு மகா மகம் என்று பெயர். இது பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை கும்பகோணத்திற்கு வரும் ஒரு கொள்ளை நோயாகும். இந்தக் கொள்ளை நோய் கும்பகோணத்தை மட்டிலும் விட்டுவிடுவதில்லை. சென்னை மாகா ணத்தையே பிடித்து ஒரு ஆட்டம் ஆட்டிவிடும். சென்னை மாகாணத்தைத் தவிர வெளிமாகாணத்தில் உள்ளவர்கள் சிலரையும் கூட பிடிக்காமல் விடுவதில்லை. கும்பகோணத்தில் அழுக்கும் பாசியும் நாற்றமும் பிடித்த குளம் ஒன்று இருக்கிறது; அதன் பக்கத்தில் சென்றாலே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். அந்தக்குளத்தில் தான் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சல் இலைகள் ஒதுங்கிக் கிடக்கும். குழந்தைகள் ஆபாசம் பண்ணிய துணி களையும், பாய்களையும் அதில்தான் கழுவுவார்கள். தீட்டுக்காரப் பார்ப்பன பெண்களும், மற்றவர்களும் அதில்தான் சாதாரண நாளில் முழுகுவார்கள். விபசாரம் பண்ணிப் பிள்ளை பெறும் முக்காடு போட்ட அம்மாமார்களும் அந்தக் குளத்தில்தான் குழந்தைகளை அமிழ்த்தி மோட்சத்திற்கு அனுப்பு வார்கள். எல்லாப் பாவங்களையும்...

சுயமரியாதை உதயம்                                  பெண்கள் சுதந்திரம் 0

சுயமரியாதை உதயம்                                  பெண்கள் சுதந்திரம்

  சொத்துரிமை மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்கு சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும் சொத்துக்களை வைத்து சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து, செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது. அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7-வருஷகாலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்டமில்லா விட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3-வருஷ­ காலம், ஒற்றுமையின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களா யிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ளவர்களாக இருந்தாலோ, ஆகிய காரணங்களால் துன்பப்படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங் களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம். மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம் ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய...

வாக்குரிமை 0

வாக்குரிமை

சுதந்தரம் பெற்ற ஒரு தேசத்தின் அரசாங்கம் நன்றாய் நடைபெறுவ தற்கு முதன்மையான காரணமாயிருப்பவர்கள் வாக்காளர்களே யாவார்கள். உள்நாட்டுக் கலகங்கள் ஒன்றும் இல்லாமலும், வெளி நாடுகளுடன் சண்டைச் சச்சரவுகளில்லாமலும் நடைபெறுவதாக மாத்திரம் இருக்கின்ற அரசியலை நல்ல அரசியல் என்று கூறிவிட முடியாது. நியாயமாக ஆளுகின்ற அரசாங் கத்தாலும் அமைதியோடு ஆட்சி புரிய முடியும். கொடுங்கோல் ஆட்சி புரிகின்ற அரசாங்கத்தாலும் அமைதியோடு ஆளமுடியும். கொடுங்கோல் அரசாங்கம் பணக்காரர்களையாதரித்து அவர்களுக்குப் பட்டம் பதவிகளை யளித்து ஏழை மக்களையடக்கி யாண்டால் நாட்டில் எந்தக் கலகமும் உண்டா காமல் தடுக்க முடியும், ஆதலால் நல்ல அரசாங்கமென்பது ஏழை பணக்காரர் என்ற வேறு பாடில்லாமல் எல்லா மக்களும் சம சுதந்தரமுடையவர்களாக வாழும் படியும், தேசத்தில் உள்ள வறுமை, பிணி முதலியவைகளைப் போக்கியும் நன்மை செய்கின்ற அரசாங்கமேயாகும். இம்மாதிரியான நல்ல அரசாங்கம் என்பது ஒன்று நடைபெற வேண்டு மானால், அதன் நிர்வாகிகள் சமதர்ம நோக்கமுடையவர்களாகவும், காலதேச வர்த்தமானங்களையறிந்து ஆட்சி புரியக் கூடியவர்களாகவும்,...

கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா? 0

கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?

காங்கிரஸ்காரர்கள், தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகி விட்டதை அறிந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இன்று திரு. காந்தியவர்கள் தமது “ராமராஜ்ய”ப் பேச்சையும், “பகவத்கீதை”ப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால் அவருக்கும் பொது ஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை. பொது ஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை காரணமாக “ராமராஜ்யம்” “பகவத் கீதை” முதலிய வார்த்தை களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் ஐயமில்லை. சென்ற 14 – 3 – 32ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி சுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஐவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார். இரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு ‘பகவத்கீதை’ பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீஸார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின....

திரு. காந்தியின் உண்மைத் தோற்றம் 0

திரு. காந்தியின் உண்மைத் தோற்றம்

தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை உயர்திரு. காந்தியவர்கள் மக்கள் கள்ளு, சாராயம் குடிக்கப்பட வேண்டியதின் உண்மையான அவசியத்தைப் பற்றியும், அதை எப்படி, எப்போது நிறுத்த முடியுமென்பதைப் பற்றியும், மற்றும் தான் கேட்கும் சுயராஜியத்தின் தத்துவத்தைப் பற்றியும் தமது அபிப்பிராயத்தை விளக்க மாக வெளியிட்டிருக்கிறார். இந்த அபிப்பிராயங்களை அவர் பரோடா சமஸ்தானத்திற்கு இம் மாதம் 12 – ந் தேதி திருவாளர்கள் வல்லபாய் பட்டேல், அப்துல் கபூர்கான் ஆகியவர்களுடன் சென்ற பொழுது அங்குள்ள மக்கள் அளித்த வரவேற்புக் குப் பதில் சொன்ன முறையில் வெளியிடப்பட்டதாகும்.  அதாவது, “கதரில்லாமல் வெறும் மது விலக்கு ஒரு நாளும் வெற்றி பெறாது. கள்ளு,சாராயக்கடைகளை மூடிவிடுவது நம்முடைய வேலை யல்ல. குடிகாரர்கள் தாங்கள் குடிக்கும் பழக்கத்தை அவர்களாகவே விட்டுவிட்டாலொழிய, திருட்டுத்தனமாய் கள், சாராயம் உற்பத்தி செய்து, எப்படியாவது குடித்துத்தான் தீருவார்கள். கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், இப்பொழு திருப்பது போலவே திருட்டுத்தனமாய் கள்ளு, சாராயம் விற்பனை யாகிக் கொண்டு தானிருக்கும். குடி...

ஏ. பி. சி. வைதீகம் 0

ஏ. பி. சி. வைதீகம்

– தேசீயத்துரோகி நாம் சொல்லுவதைத் தயவு செய்து கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள். பிறகு அதைப் பற்றிக் கொஞ்சம் ஆலோசனையும் செய்து பாருங்கள். அதன் பின் வேண்டுமானால் நம்மைத் தூற்றுங்கள். தாராளமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம். கூடுமானால் நாம் பதில் சொல்லுகிறோம். “காங் கிரஸ் இயக்கம் முதலாளிகள் இயக்கம் அதில் உள்ளவர்கள் அனைவருமே முதலாளிகளின் ஆதிக்கத்தை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள்” என்று எந்தக் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டும் சொல்லத்தயார். இதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்! இப்பொழுது சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போயிருக் கின்றவர்களைப் பாருங்கள். அவர்கள் ஜெயிலுக்குப் போன விதத்தையும் ஆலோசனை பண்ணுங்கள். ஜெயிலில் போய் அடையும் கஷ்ட நஷ்டங் களையும் கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள். நாம் கூறுவதன் உண்மை காந்த விளக்கைப் போலத் தெரியும். முதலில் தொண்டர் கூட்டத்தைப் பாருங்கள். இவர்களெல்லாம் மறியல் செய்து போலீஸ்காரரிடம் தடியடியும், பிறம்படியும் பட்டு ஜெயிலுக்குப் போகின்றார்கள். தொண்டர்களில்...

கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம் 0

கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது.  இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக்கொள்ளமுடியாது.  பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன்.  ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன்.  பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கூட ஆன தில்லை போல் காணப்படுகின்றது.  சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும்.  கல்யாணம் என்பதே வேண்டிய தில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கை யில் ஒரு காலத்தில் வரக்கூடும்.  எந்தப்பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண் ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும்.  இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண் கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு...

முஸ்லீம் மகாநாடு 0

முஸ்லீம் மகாநாடு

தலைவரவர்களே! கனவான்களே!! இந்தப் பெரிய மகாநாட்டில் என்னை சில வார்த்தைகள் பேசும்படி அழைத்ததற்கு நன்றி செலுத்துகிறேன்.  இந்தச் சமயமானது அரசியல் சம்மந்தமான ஒரு நெருக்கடியான சமயம் என்பதை முஸ்லீம் சமூகமானது உணர்ந்து ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் அபிப்பிராயங் களை தெரிவித்துக்கொண்டு வருகின்றன.  அபிப்பிராயங்களில் சற்று ஒருவருக்கொருவர் – மாறுபட்டவர்களாயிருக்கலாம்.  ஆனாலும், விஷயத் தின் நெருக்கடியை உணராதவர்கள் இல்லை.  இந்தச் சமயத்தில் எல்லா முஸ்லீம் மகாநாட்டிலும், சமீபத்தில் வருவதாயிருக்கும் அரசியல் சீர்திருத்த த்தில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பதே முக்கிய பிரச்சினையாய் இருக் கின்றது.  அதிலும் முக்கியமாய் இருப்பது அச்சீர்திருத்தங்களுக்கு முஸ்லீம் பிரதிநிதிகளாய் தேர்தலில் பிரதிநிதித்துவம் பெறுவதா? அல்லது இந்துக் களின் பிரதிநிதியாய் பிரதிநிதித்துவம் பெறுவதா? என்பதே முக்கிய பிரச்சினையாய் இருந்து வருகின்றது.  உண்மையை யோக்கியமாய்ப் பேச வேண்டுமானால் முஸ்லீம்கள் முஸ்லீம் பிரதிநிதிகளாய் முஸ்லீம்களின் ஓட்டைக் கொண்டே பிரதிநிதிகளாக அங்கம் பெறவேண்டும் என்பதாகவே இந்தியாவின் பெரும்பான்மையாகிய முஸ்லீம்கள் விரும்புகின்றார்கள் என்பதை...

சர். ரெட்டி நாயுடு அவர்கள்

சர். ரெட்டி நாயுடு அவர்கள்

இந்திய சர்க்காரின் ஏஜண்டாகத் தென்னாப்பிரிக்காவில் உத்தியோகம் வகித்திருந்த சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்கள் தமது உத்தியோகத்தினின் றும் நீங்கி இந்தியாவுக்கு வந்து விட்டார். சர். ரெட்டி நாயுடு அவர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியாவின் நன்மைக்காக உண்மையாகவும், அஞ்சாமலும் உழைத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சர். ரெட்டி நாயுடு அவர்கள் சமுதாய ஊழியத்தில் அளவு கடந்த பற்றும், உண்மையாகத் தனது கொள்கைகளைக் கைப்பற்றி நடக்கும் தன்மையும் உள்ளவர் என்பதை அவரை நேரில் அறிந்த நமது மாகாண வாசிகள் அனைவரும் அறிவர். இவருக்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஏஜண்டாயிருந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரிகளைக் காட்டிலும் ஊக்கமாகவும், உண்மையாகவும் இந்தியர்களுக் காக உழைத்தவராவார். ஆனால் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் தென்னாப் பிரிக்காவிலிருந்த காலத்தில், அவர் எங்கேயாவது மூச்சு விட்டாலும், தும்மி னாலும், இருமினாலும் அவற்றையெல்லாம் நமது நாட்டுப் பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட்டு விளம்பரம் பண்ணி வந்தன. அதற்குக் காரணம் அவர் பார்ப்பனராயிருந்ததும், நமது...

“ஆனாலும் ஒருசமயம்” 0

“ஆனாலும் ஒருசமயம்”

“மகாத்மா” காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்கு போகமாட்டார். ஒரு சமயம் போனாலும் போகக் கூடும். ஆனாலும் அது சந்தேகந்தான். அப்படி சந்தேகமில்லாமல் போவது ஒரு சமயம் உறுதியானாலும் அவர்தான் போவாரேயொழிய மற்றவர்கள் போகமாட்டார்கள். ஒரு சமயம் மற்றவர்கள் போனாலும் மகாத்மாதான் காங்கிரஸ் பிரதிநிதியாய் இருப்பார். “மகாத்மா” காங்கிரஸ் பிரதிநிதியாய் போனாலும் வட்ட மேஜை மகாநாட்டில் மாத்திரம் கலந்துகொள்ளமாட்டார். வட்ட மேஜை மகாநாட்டில் ஒரு சமயம் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் கக்ஷியை மாத்திரம் எடுத்துச்சொல்லிவிட்டு விவகா ரத்தில் கலந்துகொள்ளமாட்டார். விவகாரத்தில் ஒரு சமயம் கலந்து கொண் டாலும், பாதுகாப்பு விஷயத்தில் மாத்திரம் சிறிதும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒரு சமயம் பாதுகாப்பில் விட்டுக்கொடுத்தாலும் இந்திய நன்மைக்கென்று தான் எதையும் விட்டுக்கொடுப்பாரேயொழிய பிரிட்டிஷ் நன்மைக்காக வென்று சிறிதும் விட்டுக்கொடுக்க மாட்டார். பிரிட்டிஷ் நன்மைக்காகவென்று ஒரு சமயம் எதாவது விட்டுக்கொடுத்தாலும் ‘ ஐயோ பாவம் ! அவர்களும் (பிரிட்டிஷார்களும்) நம்மைப்போல் மனிதர்கள் தானே ! பிழைத்துப் போகட் டும்’...

சுதேசி 0

சுதேசி

தலைவர் அவர்களே! சகோதரர்களே!! நான் எதிர்பாராமல் திடீரென்று கூப்பிடப்பட்டுவிட்டேன். இங்குபேச வேண்டிய அவசியமிருக்குமென நான் கருதவேயில்லை.  தங்கள் அழைப்பிற்கிணங்கியும் எனது நண்பரும் சகோதரவாஞ்சையும் உள்ள திரு. நடேச முதலியார் அவர்கள் தலைமை வகித்து நடத்தும் விழாவுக்கு நான் அவசியம் வரவேண்டுமென்றும் ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் திடுக்கிடும்படியாக அழைக்கப்பட்டு விட்டேன்.  மற்ற இடங்களில் பேசுவதற்கு எனக்கு எவ்வளவு உற்சாகமும் ஆசையும் இருக்குமோ அவ்வளவு உற்சாகமும் ஆசையும் இங்கே பேச எனக்கு உண்டாகவில்லை. மற்றும் என் மனதிற்கு வருத்தமாகவே இருக்கின்றது. ஏனெனில் இந்த சங்கமானது எந்தத் திட்டத்தில் நடைபெற இருக் கின்றதோ அத்திட்டங்களுக்கு நேர்மாறான அபிப்பிராய முடையவனாகிய நான் இன்று இந்த கொண்டாட்டமான தினத்தில் அதற்கு நேர் விரோதமாக பேசுவ தென்றால் அது யாருக்கும் கஷ்டமாகவே இருக்குமல்லவா? ஆனாலும் தலைவர் அவர்கள் இவ்விஷயத்தில், எனது அபிப்பிராயத்தையும் யோசனையையும் சொல்ல வேண்டுமெனக் கேட்டதாலும் என்னைக் கேட் காமலே, பேசவேண்டுமாய் கூப்பிட்டு விட்டதாலும் நான் இவ்விஷயத்தில் எனது...

திரு. மாளவியாவின் புரோகிதம் 0

திரு. மாளவியாவின் புரோகிதம்

பிரபல வருணாச்சிரம தருமவாதியாகிய பண்டித மதன் மோகன மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண் ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதீகர் என்பது தெரியும். ‘சூத்திரன்’ என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் “அவன் இருபத்தோரு ஜென்மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிராமணனாகப்பிறந்து தான் மோட்சம் பெற வேண்டும்” என்ற பிராமணீய மதக்கொள்கையில் உறுதியான நம்பிக்கை யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதீகர் என்பது அவருடைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். இத்தகைய வைதீக மாளவியா அவர்கள் அரசியல் சீர்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த “தசாஸ்வமேதக் கூட்டத் தில்” இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி “மந்திரதீiக்ஷ” கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500...

தேசீயப் பைத்தியம் 0

தேசீயப் பைத்தியம்

தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். பாமர மக்களைப் பலவகையிலும் ஏமாற்றி அவர்களைத் தன்னைப் பின்பற்று மாறு செய்துகொள்ள முடியாத எவனும் தேசீயத்தலைவனாக இருக்க முடியாது. பாமர மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும் செய்தாக வேண்டுமோ அவ்வளவும் செய்துதான் ஆகவேண்டும். அன்றியும் ஒரு நிலையான கொள்கையும், நேர்மையான நடத்தையும் இல்லாதவனே தேசீயவாதியாக இருக்க முடியும். அல்லாமலும் பாமர மக்கள் எவ்வளவு பிற்போக்கான கொள்கையும், பழக்க வழக்கமும் உடையவர்களா யிருக்கிறார்களோ அவ்வளவு பிற்போக்கான கொள்கையை யும் பழக்க வழக்கங்களையும் பாராட்டுகின்றவனே தேசீயத்தலைவனாகப் புகழ்பெற்று விளங்க முடியும். காலத்திற்குத் தகுந்த மாதிரியில் நாட்டிற்கு நன்மை தரும்...

மதிப்புரைகள் 0

மதிப்புரைகள்

“பகுத்தறிவே விடுதலை – அல்லது ஜீவாத்மா இல்லை” என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப்பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த் தோம். இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில் பகுத்தறிவையே பிரதானமாய் வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமை யான கருத்துக்களடங்கிய புஸ்தகமாகும் என்பது நமது அபிப்பிராயம்.  இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப்படும் படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும்படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே மக்களுடைய மூட நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம், முன்பின் ஜன்மம் ஆகியவைகளைப் பற்றியும் மற்றும் கடவுள் வணக்கம்,  விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானதுமான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப் பட்டிருக்கின்றது.  மேலும் இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம், வருணாசிரமதர்மம் முதலிய...

பாராட்டுகிறோம் 0

பாராட்டுகிறோம்

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறவும், தங்கள் உரிமையையும், சமத்துவத்தையும் பெற அவர்கள் போதிய கல்வியறிவு பெற்று உலக ஞான மறிந்து தங்கள் இழிவான நிலையைத் தாங்களே உணரவேண்டுமென்பதை நாம் பன்முறையும் கூறிவருகிறோம். அத்தகைய அவர்களது நிலையை அறிய அவர்கள் எல்லோரும் ஏனையோரைப் போலவே கல்வி கற்று அறிவு வளர்ச்சிபெற வேண்டுவது மிகமிக இன்றியமையாதாகும். அவ்விதமே அவர்கள் கல்வி கற்க முற்படினும் அவர்களுக்கு அதனால் ஏற்படும் கஷ்டங்களும், இன்னல்களும், எதிர்ப்புகளும் எண்ணிறந்தன. அத்தகைய பல இடையூறுகளில் பொருளின்மை தலைசிறந்ததெனலாம். தங்கள் பிள்ளை களைப் படிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா பல பெற்றோர்க்கு இருந்த போதிலும் போதிய பணமின்மையால் அவர்களது புஸ்தக வகைக்கோ, அல்லது துணிமணிகளுக்கோ வேண்டியன கொடுத்துதவ முடியாமையால் பிள்ளைகளின் படிப்பில் கவலை செலுத்தாத பெற்றோர்கள் அனேகர் உண்டென்பதும் நமக்குத் தெரியும். அத்தகைய அவர்களது குறை நீக்கப்பட்ட திற்கொப்ப திருச்சி ஜில்லா லால்குடியில் உள்ள போர்டு ஸ்கூல் ஆதிதிராவிட மாணவர்களின் உபயோகத்திற்காக ரூபாய் 10,000...

தமிழ் மாகாண மகாநாடென்பது மறுபடியும் பார்ப்பன பிரசாரமேயாகும் 0

தமிழ் மாகாண மகாநாடென்பது மறுபடியும் பார்ப்பன பிரசாரமேயாகும்

சென்ற ஒரு வருஷ­காலமாய் இந்திய நாட்டில் நடைபெற்ற ஒருவித “அரசியல் கிளர்ச்சி” நாடகத்தின் பயனாய் தமிழ்நாட்டில் பழையபடி பார்ப்பன பிரசாரம் தைரியமாயும் வெளிப்படையாயும் துவக்கப்பட்டு விட்டது.  இதை நன்றாய் உணரவேண்டும் என்பவர்கள் இம்மாதம் 6, 7 தேதிகளில் மதுரையில் தமிழ் நாட்டு மக்கள் பேரால் நடைபெற்ற “ஏமாற்றுந் திருவிழா”(தமிழ் மாகாண மகாநாட்டு) நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் உணரக்கூடும். முதலாவது இந்த ஏமாற்றுத் திருவிழாவானது தமிழ்நாட்டு 13 ஜில்லாக்களின் சுமார் 2 1/2 கோடி ஜனங்களின் பிரதிநிதித்துவமாக நடத்தப் படுவதாக எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் அதற்குத் தெரிந்தெடுக்கப் பட்டு கிடைத்தத் தலைவர் யார் என்பது ஒரு முக்கிய விஷயமாகும். திரு. ளு. சத்தியமூர்த்தி அய்யர் தமிழ் நாட்டு 21/2 கோடி மக்களின் முன்னேற்றத்திற்கு தலைவரென்ற காரணத்தாலேயே அந்தத் திருவிழாவுக்கு ஆள்பட்ட பார்ப்பனரல்லாதாரின் பரிதாப நிலைமைக்கு வேறு அத்தாக்ஷி வேண்டியதில்லை.  அவரைத் தவிர வேறுயாரும் தெரிந்தெடுக்க கிடைக்க வுமில்லை, முடியவுமில்லை.  எனவே இந்த ஸ்தானம் தமிழ்நாட்டு...

நன்நிலம் மகாநாடு  ஹிந்தி கண்டனம் 0

நன்நிலம் மகாநாடு ஹிந்தி கண்டனம்

  தஞ்சை ஜில்லா நன்நிலத்தில் இம்மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா மகாநாட்டில் ஹிந்தி பாஷையைக் கண்டனம் செய்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது.  அத்தீர்மானமாவது:- “பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத்தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானமாகும்.  இதைபற்றி நாம் 1926 ம் வருஷத்திலேயே “குடி அரசு” பத்திரிகையில் “தமிழுக்குத் துரோக மும், ஹிந்தியின் இரகசியமும்” என்பதாக ஒரு வியாசம் எழுதி இருக்கின்...

திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம் 0

திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

தலைவரவர்களே! சகோதரிகளே!!  சகோதரர்களே!!! இன்று நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயமான “கராச்சிக் காங்கிரசும், சுயமரியாதையும்” என்பது நோட்டீசில் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.  இதைப்பற்றி பல இடங்களில் பேசியும், எழுதியு மிருக்கின்றேனே யென்று சொல்லியும் கூட யாரோ சிலரால் “கராச்சிக் காங்கிரசுக்கும், காங்கிரஸ் தீர்மானங்களுக்கும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கும் வித்தியாச மில்லையாதலால் சுயமரியாதை இயக்கம் வேண்டியதில்லை” யென்று சொல்லப்படுவதாகவும், அதை நம்பி சில வாலிபர்கள் காங்கிரசில் கலந்து கொள்ளஆசைப்படுவதாகவும் தெரியவருவதால், இரண்டுக்குமுள்ள சம்பந்தத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல வேண்டுமென்றே, இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டுமென்று குறிப்பிட்டதாகச் சொன்னார்கள்.  ஆகவே, இப்பொழுது நான் இதைப்பற்றி பேசுவேனென்பதாகக்கருதி, அதிலும் இது சம்பந்தமான எனதபிப் பிராயத்தை உள்ளபடி சிறிதும் ஒளிக்காமல் எனக்குப் பட்டதை சொல்லுவேனென்று யெண்ணி, நீங்களித்தனை பெயர்கள் இன்று இங்கு கூடியிருக்கிறீர்கள். ஆகவே நான் இந்தச் சமயத்தில் யாருக்காவது பயந்து கொண்டோ, யார் தாட்சன்னியத்திற்காவது மயங்கிக்கொண்டோ எனதபிப்பிராயத்தை உள்ளபடி வெளியிடாமல் மறைத்துப் பேசுவேனே...

இந்துமதம் 0

இந்துமதம்

இந்துமதம், இஸ்லாமானவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கொள்கை யில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை இந்துமதம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு  காரியத்தில் விளைவிக்கின்றது.  அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது.  இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று கூடச் சொல்லலாம்.   இஸ்லாமியரையும் கிறிஸ்த வரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள்.  தங்கள் சமூகத்திற்கு எதிறாய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை.  பிரிட்டீஷ் அரசாங் கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமான நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள்.  ஆனால் இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் “தீண்டாதாரும்” இழிவாய் நடத்தப்படுவது டன் சுயமரியாதை இல்லாத முறையிலும் சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும் இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.  இந்துமதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மற்றொருவிதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட...

ஜவஹர்லால் 0

ஜவஹர்லால்

உயர்திரு. ஜவஹர்லால் நேரு உடல் சுகத்திற்கென்று தென்னிந்தி யாவிற்கு வந்து ஒரு சரியான நாடகமாடி விட்டு ஊருக்குத் திரும்பினார்.  எப்படித் திரும்பினார்? சமதர்மக் கொள்கைகளையும் பொதுவுடைமைக் கொள்கைகளையும் பல்லவியாக வைத்துக் கொண்டார். “யோக்கியர்களுக்கு அரசியல் உலகம் வெறுப்பைக்கொடுக்கின்றது.  சீக்கிரம் அதை விட்டு விலகிக்கொள்ளுவேன்” என்றார்.  ஆனால் தான் கடைசிவரை அரசியல் பிரசாரமே அதுவும் அரசியல்காரர்கள் முறையைப் பின்பற்றியே செய்தார்.  சமூக இயல் விஷயத்தில் தீண்டாமையைப்பற்றி உண்மையைத் தைரியமாய் பேசுவதற்கு ஒவ்வொரு நிமிஷமும் நடுங்கினார்.  ஏதாவது ஒரு சமயத்தில் தீண்டாமை யொழியவேண்டுமென்று பேச நேர்ந் தாலும் உடனே அதற்கு பந்தோபஸ்தாக எந்த ஜாதியாரின் உரிமை களையும் பாதிக்க விடமாட்டேன் என்றும் ஒருகரணம் அடித்துக் கொண்டே பார்ப்பனர் களின் கோபத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டார். காங்கிரசிலும் தீண்டாமையைப்பற்றி ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.  ஆனால் இப்போது செய்ய வேண்டிய வேலை அதுவல்ல.  கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் தான் என்று ஒரு பல்டி அடித்துத் தப்பித்துக் கொண்டார். ஆகவே அவர்...

மதுவிலக்கு நாடகம் 0

மதுவிலக்கு நாடகம்

தேசியத்தின் பேரால் ஏதாவது ஒரு நாடகம் நாட்டில் நடந்து கொண்டி ருக்கா விட்டால் மக்கள் காங்கிரசையும், காந்தியையும் அடியோடு மறந்து விடுகின்றார்கள். ஆதலால் தேசீய தொழில்காரர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நடத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது.  அதற்கு ஏற்றாப்போல் காங்கிரஸ் பக்தர்களுக்கும் பொதுஜனங்களின் காணிக்கைப் பணம் தாராளமாய் இருக்கின்றது.  அதற்கேற்றாப்போல் வேலையில்லாத் தொந்திரவால் கஷ்டப்படும் வாலிபர்களும் நாட்டில் ஏராளமாய் இருக்கின் றார்கள்.  ஆகவே இவ்விரண்டும் சேர்ந்தால் பெட்றோல் எண்ணைக்கும், நெருப்புக்கும் உள்ள சம்மந்தம் போல் ஒன்றுக்கொன்று வெகு சுலபமான சம்மந்தம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகையால் இவை இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்யலாம் என்று பார்த்தால் பொது ஜனங்கள் சீக்கிரம் ஏமாறுவதற்கு அனுகூலமாக கள்ளுக்கடை மறியல்கள் தான் தென்படுகின்றது.  ஆகவே இதன் மீது தலைவர்கள் என்பவர்கள் வாலிபர்களை ஏவி விடுவதால் ஏதாவது ஒரு கலகம் ஏற்படுகின்றது. அக்கலகத்தை பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்வதே பெரிய தேசீயப் பிரசாரமாகக் கருதப்பட்டு விடுகின்றது.  இந்த முறையிலேயே மதுவிலக்கு...

மத உரிமையின் ஆபத்து 0

மத உரிமையின் ஆபத்து

இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின் றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படை யான உரிமைகளைப்பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். அவர்கள் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கும் உரிமைகளாலும், அத்தகைய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சீர்திருத்தத்தாலும் நமது நாட்டின் ஏழைமக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகமான நன்மையுண்டாகப் போவதில்லையென்றுதான் நாம் துணிந்து கூறுகிறோம். இவ்வாறு நாம் கூறுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம். “எந்த சமஸ்தானமாயினும், மாகாண ஆட்சிக்கு உட்பட்டதானாலும், ஐக்கிய ஆட்சிக்குள் அடங்கியதானாலும், அவ்விடங்களில் சர்க்கார் மத மென்பது ஒன்று இல்லை என்று அறிக்கையிட வேண்டும்” என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.  அடுத்தபடியாக “மத சுதந்தரம், பொது ஜனங் களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதம் அளிக்கிறது” என்பதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விரு...

தினசரி                                             சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ்  பத்திரிக்கை 0

தினசரி                                             சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ்  பத்திரிக்கை

லாலுகுடி தாலூகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப்பற்றி நெடுநேரம் பேசினார்கள். திரு.ஈ.வெ. இராமசாமி, தினசரி அவசியமில்லை என்றும் தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப் பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆகவேண்டுமென்றும் நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதை தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப்பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின் பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆnக்ஷபணையில்லை யென்றும் சொன்னார்.  அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது.  பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.  மற்றும் இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதர வளிக்க முன் வந்தார்கள்.  சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற...

தனித் தொகுதியா? பொதுத் தொகுதியா? 0

தனித் தொகுதியா? பொதுத் தொகுதியா?

ஒரு நாட்டில் வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்கும் வரையிலும், ஒவ்வொரு வகுப்பினரும் தாம் தாம் தனித் தனி வகுப்பினரென்றும், தாம் மற்ற வகுப்பினருடன் உடனிருந்து உண்பதும், கலப்பதும், உறவாடுவதும், தமது மதத்திற்கும், கடவுளுக்கும், வேதத்திற்கும், புராதன நாகரீகத்திற்கும் விரோத மான செய்கையாகுமென்றும் நினைத்துக் கொண்டும் உண்மையாகவே நம்பிக் கொண்டும் இந்த நம்பிக்கையின் படி நடந்து கொண்டும் வருகின்ற வரையிலும் ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினருடைய நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அந்தரங்க  சுத்தியுடன் உழைப்பார்கள் என்று நினைப்பது தவறான எண்ணமேயாகும். இவ் விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கு நாம் வேதங்களையோ, சாஸ்திரங்களையோ, சிலாசாசனங் களையோ கஷ்டப்பட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. தற்காலத்தில் நம் கண் முன் நடைபெறும் காட்சிகளைக் கொண்டே யாவரும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக இன்று அரசியலிலோ, அல்லது உத்தியோகத் துறையிலோ, அல்லது வியாபாரத் துறையிலோ, மற்றும் எந்தத் துறையிலாகட்டும் உயர்ந்த பதவியும், ஆதிக்கமும், செல்வாக்கும் அடைந்திருக்கின்ற அய்யர், அய்யங்கார், முதலியார், பிள்ளை,...

தீண்டாதார் துன்பம் 0

தீண்டாதார் துன்பம்

வெள்ளைக் காரர்களைப் பார்த்து “நீங்கள் எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள்! ஆகையால் உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்க வில்லை; ராஜ்யத்தை எங்களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்ளுவோம்” என்று சுயராஜ்ய வாதிகள் கூச்சலிடுகின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்கின்றனர்; இன்னும் சத்தியாக் கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால் வடநாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை. இது ஒரு புறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக்களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதீக இந்துக்கள் எதிர்த்துத் துன்பப்படுத்துதலும் ஒரு புறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும்,...

சுயமரியாதை இயக்கமும் காங்கிரசும் 0

சுயமரியாதை இயக்கமும் காங்கிரசும்

சுயமரியாதை இயக்கமானது இப்போது நடைமுறையில் இருக்கும் காங்கிரசுக் கொள்கைகளைக் கொண்ட தேசீயத்திற்கும் திரு. காந்தியவர் களின் தத்துவமாகிய காந்தீயத்திற்கும் நேர்மாற்றமானது என்பதை நாம் மறைக்க முயலவில்லை. எப்படியெனில் இன்றைய காங்கிரசு திட்டங்கள் காகிதத்தில் என்ன இருந்தபோதிலும் தேசீயத்தின் பேரால் நடைமுறை திட்டங்கள் என்பவை களாக, கதர் ஹிந்தி கள்ளுக்கடை ஜவுளிக்கடை மறியல் என்பவைகளேயாகும். மேற்கண்ட இந்த மூன்று திட்டங்களிலும் சுயமரியாதை இயக்கம் மாறுபட்டேயிருக்கின்றது என்கின்ற விபரம் ஏற்கனவே குடி அரசு வாசகர் கள் உணர்ந்ததுவேயாகும். கதர் விஷயத்தில் 1928ம் வருஷத்திற்கு முன்னிருந்தே அதாவது திரு. காந்தியவர்கள் தென்னாட்டிற்கு கதர் பண்டு வசூலுக்கு வந்த காலத்திலேயே கதரின் தத்துவத்தைக் கண்டித்து வந்திருக்கின்றோம்.  அதையே குடி அரசிலும் திராவிடனிலும் பல தடவை எழுதி வந்திருப்பதோடு அனேக மேடைகளிலும் கதர் கொள்கையைக் கண்டித்துப்பேசியும் வந்திருக் கிறோம். ஆதலால் கதரைப்பற்றிய நமது அபிப்பிராயம் என்பது இப்போது புதிதாக ஒன்றும் ஏற்பட்டதல்ல.  இதை அனுசரித்தேதான் இவ்வாரம் லால்குடியில் நடந்த...

சட்டசபையில் வைதீகர் 0

சட்டசபையில் வைதீகர்

மதம், கடவுள், வேதம், சாஸ்திரம் முதலிய கற்பனைகளில் குருட்டு நம்பிக்கையுடைய பகுத்தறிவற்ற வைதீகர்களைக் காட்டிலும், தாம் பார்க்காத வைகளையும், அறியாதவைகளையும், நம்பாத பகுத்தறிவுடைய நாஸ்திகர் களே உலகத்தில் நன்மையை, மக்களுடைய நலத்தைக் கவனிப்பவர்கள் என்பது ஒரு உண்மையான அபிப்பிராயமாகும் என்று நாம் தீர்மானமாக நினைக்கிறோம். வைதீகர்கள் எவ்வளவு தான் யோக்கிய பொறுப்புடைய வர்களாயிருந்தாலும், இரக்கமன முடையவர்களாய் இருந்தாலும் கால நிலையையும் மக்களுடைய மனோபாவத்தையும், பிறர் நலத்தையும் அறிந்து அதற்குத் தகுந்த வகையில் நடந்து கொள்ளுவதற்குரிய அறிவு, அவர்களிடம் உண்டாவதில்லை. ஏனெனில், கொடுமைப்படுகிற மக்கள் கொஞ்சம் சுக மடையக்கூடிய சீர்திருத்த சம் மந்தமான விஷயங்கள் வருகிற பொழு தெல்லாம் அவர்கள் வேதங்களில் என்ன சொல்லப்படுகின்றது. புராணம் ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களில் என்ன சொல்லப்படுகின்றது என்று பார்த்து அதன்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களே ஒழிய தமது சொந்த புத்தியினால் ஆலோசித்துப் பார்க்க முன்வருவதே யில்லை. அவர்கள் சொந்த அறிவும் உபயோகப்படுவதேயில்லை. ஆனால்...

பிரசார போதனாமுறை பள்ளிக்கூடம் 0

பிரசார போதனாமுறை பள்ளிக்கூடம்

சுயமரியாதை இயக்கத் தத்துவங்களை பிரசாரம் செய்ய ஈரோட்டில் போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்கு பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம்.  அந்தப்படி அவ்வப்போது தனித்தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்று போனார்கள் என்றாலும் ஒரு முறையாக வைத்து அப்போதனாமுறை பயிற்சி செய்யப் படவில்லை. ஆனால் இப்போது இந்த ஜூன் µ 15 தேதியில் இருந்து முறை யாகவே பள்ளிக்கூடப்பயிற்சி முறையில் ஒரு பயிற்சி சாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20,  25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக் கூடும்.  ஆதலால் வர இஷ்டமுள்ளவர்கள் தயவு செய்து 8 ² க் குள் இவ் விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப் படுகிறார்கள். விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவிலுள்ள சுய மரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும்....

இரண்டு மசோதாக்களின் கதி 0

இரண்டு மசோதாக்களின் கதி

  இந்திய சட்ட சபையில் இம்மாதம் 4-ந்தேதி நடந்த நிகழ்ச்சிகள் நமது நாட்டுச் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் கவனிக்கக் கூடிய தொன்றாகும். அன்று நமது நாட்டுப் பெண்மக்களுக்கு விடுதலையளிக்கக் கூடிய இரண்டு மசோதாக்கள் விவாதத்திற்கு வந்தன.  அவைகளில் “விதவைகளுக்கு சொத்துரிமை” அளிக்கும் மசோதா ஒன்று.  இம்மசோதா விவாதத்திற்கு வந்த காலத்தில், வைதீகர்கள் இதைப் பற்றி கூறிய அபிப்பிராயத்தையும் சென்றவாரம் எடுத்துக் காட்டி கண்டித்திருந்தோம். கடைசியாக இம்மசோதா தனிக் கமிட்டிக்கு அனுப்பப்படாமல் தோற்றது. இரண்டாவது “விவாக விடுதலை மசோதா” ஒன்று விவாதத்திற்கு வந்தது. கடைசியில் இம் மசோ தாவைப் பற்றிய விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவும் “விதவை களுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் போலவே தோற்றுப் போகும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு இந்தியப் பெண்மணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் மசோதாக்கள் தோற்றுப் போவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். முதற்காரணம் வைதீகர்கள்;  இரண்டாவது காரணம் அரசாங்கத்தார்கள். இவர்களில் வைதீகர்களைப் பற்றி நாம் குறை கூறுவதில் ஒன்றும் பயன் உண்டாகப்...

தரங்கம்பாடி சமுத்திரக்கரையில் கூட்டம் 0

தரங்கம்பாடி சமுத்திரக்கரையில் கூட்டம்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த 5, 6 வருஷ­ காலத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கிற உணர்ச்சிகள் என்ன என்பதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட காரியங்கள் என்ன என்பதைப்பற்றியும், சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சொல்லப்பட்ட அபிப்பிராயங்களெல்லாம் முதலில் கேட்பவர்க ளுக்கு அதிசயமாகவும், தலைகீழ் புரட்சியாகவும் காணப்பட்ட போதிலும் சாதாரணமாக ஒவ்வொரு அபிப்பிராயங்களும் ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷங்களுக்குள்ளாகவே செல்வாக்குப்பெற்று எல்லா ஜனங்களா லும் சகித்துக்கொண்டு வரப்படுகின்றதென்றும், பார்ப்பனர்களுடைய ஆதீக் கத்திலும், பார்ப்பனீய பிரசாரகரின் ஏக நாயகத் தன்மை யிலும் இருந்துவந்த காங்கிரசு முதலிய அரசியல் ஸ்தாபனங்களும் பல மத ஸ்தாபனங்களும் பல சமுதாய வகுப்பு ஸ்தாபனங்களும் இப்பொழுது இந்த அபிப்பிராயங்களையே சொல்லத்துடங்கிவிட்டதென்றும், இவைகளுக் கெல்லாம் காரணம் நாம் ஆரம்பித்த எடுப்பிலிருந்து ஒரு சிறிதும் எந்தக் கொள்கையிலும் பின் போகா மல் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டு வந்ததோடு, யாருடைய பழிப்புக் கும், பகைமைக்கும் தாட்சன்னியத்திற்கும் பயப்படாமல்  உறுதியுடனிருந்த தோடு, யாரானாலும், எப்படிப்பட்டவர் களானாலும், நமது...

மலேயா தமிழர்கள் 0

மலேயா தமிழர்கள்

  மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17-1-32 ல் அகில மலேயாத் தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடை பெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றி வரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். ஐயாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமான பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள். அந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன. அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங் களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் “அகில மலேயா தமிழர் மகாநாடு” என்பதை “அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு” என்று மாற்ற வேண்டும் என்ப தும் முக்கியமான தீர்மானங்களாகும்....

உணர்ச்சி வீண் போகாது 0

உணர்ச்சி வீண் போகாது

எல்லா மக்களும் தாங்கள் இருக்கும் நிலையை விட்டு இன்னும் உயர்ந்த நிலையை அடைவதற்கே ஆசைப்படுவார்கள். கீழான நிலையை அடைவதற்கு விரும்புகின்ற மனிதர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கீழான நிலைக்குச் செல்லவேண்டுமென்னும் கருத்துடையவர்கள் யாராவது இருந்தாலும், அவர்கள் கருத்தும், அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையைக் கொண்டதாகத் தான் இருக்கக் கூடும். இது மனித சமூகத்தின் இயற்கையாகும். இத்தகைய ஆவலும் முற்போக்குணர்ச்சியும் இருந்த காரணத்தால்தான் மனித சமூகமானது பண்டை காலத்திலிருந்த மிருகப் பிராயத்திலிருந்து முற்றும் மாறுதலடைந்து தற்கால முள்ள நாகரீகமான நிலைக்கு வந்திருக்கின்றது. “மனிதன் அறிவுடையவனாகவே படைக்கப்பட்டான்” என்னும் மத வாதிகளின் கட்டுக் கதையைத் தள்ளிவிட்டுச் சரித்திர மூலமாகப் பண்டைக் காலத்தில் மக்கள் எந்த நிலையிலிருந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். மக்கள் உண்டான காலத்தில் அவர்கள் குரங்கு களைப் போலவே மரங்களிலும், மலைகளிலும் வாழ்ந்து பிறகு தழை, மரப் பட்டைகளை எடுத்து, மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள்...

வருந்துகிறோம் 0

வருந்துகிறோம்

பச்சையப்பன் கலாசாலை தமிழ் புலவரும் “திராவிடன்” பத்திராதி பருமான உயர்திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் திடீரென முடிவெய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்.  இவர் ஓர் தமிழ் பண்டிதராய் விளங்கியதுடன், சமூதாயச் சீர்திருத்தத்தில் ஆர்வங் கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக பல உபன்யாசத் தொண்டுகளும் புரிந் திருக்கிறார்.  பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பாடுபட்டவர்களில் ஒருவரா வார்.  பொதுவாக தமிழுலகமும், சிறப்பாக பிராமணரல்லாத உலக மும் ஓர் நண்பரை இழந்து விட்டார்களெனக்கூறுவது மிகையாகாது .  ஆகவே அவரது பிரிவுக்கு வருந்துவதோடு, நமது வருத்தத்தை அவருடைய குடும்பத் தாருக்கும் முக்கியமாக அவரது உடற்பிறந்த  பின்னோர் திருவாளர் மணி கோடீஸ்வர முதலியார் க்ஷ.ஹ.டு.கூ., அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 31.05.1931