“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?
விபசாரத் தடுப்பு மசோதா சென்னையிலும், மதுரையிலும், சீரங்கத் திலும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாய்விட்டது. மற்றும் பல ஊர்களிலும் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாய் தெரிய வருகிறது. விபசாரத் தடுப்பு மசோதா அமுலுக்கு கொண்டுவர அவசியமாகின்ற பட்டணங்கள் எது எது என்று ஒருவர் அறிய விரும்பினால் அதற்காக கஷ்டப்பட்டு தகவல் தேடவேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு சுருக்கமான வழியில் கண்டுபிடித்து விடலாம். எப்படி யென்றால் “இந்துமத” ஐதீகப்படி புராண சாஸ்த்திர நிச்சயப்படி, எந்த எந்த ஸ்தலங்கள் புண்ணிய nக்ஷத்திரங்களோ, அதாவது கண்ணால் பார்க்க முக்தி, காதால் கேட்க்க முக்தி, காலால் மிதிக்க முக்தி, நெஞ்சால் நினைக்க முக்தி, அதுமாத்திரமல்லாமல் எந்த எந்த nக்ஷத்திரங்களை கண்டவரைக் கண்டால் முக்தி, கேட்டவரைக் கேட்டால் முக்தி, நினைத்த வரை நினைத்தால் முக்தி, மிதித்த வரை மிதித்தால் முக்தி என்று இருக்கின்றனவோ அந்தந்த nக்ஷத்திரங்களையெல்லாம் குறித்து பட்டியல் போட்டோமேயானால் உடனே விபசாரத்தடுப்பு சட்டம் அமுலுக்கு வர வேண்டிய ஊர்கள் இவ்வளவுதான்...