Author: admin

“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?

“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?

விபசாரத் தடுப்பு மசோதா சென்னையிலும், மதுரையிலும், சீரங்கத் திலும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாய்விட்டது. மற்றும் பல ஊர்களிலும் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாய் தெரிய வருகிறது. விபசாரத் தடுப்பு மசோதா அமுலுக்கு கொண்டுவர அவசியமாகின்ற பட்டணங்கள் எது எது என்று ஒருவர் அறிய விரும்பினால் அதற்காக கஷ்டப்பட்டு தகவல் தேடவேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு சுருக்கமான வழியில் கண்டுபிடித்து விடலாம். எப்படி யென்றால் “இந்துமத” ஐதீகப்படி புராண சாஸ்த்திர நிச்சயப்படி, எந்த எந்த ஸ்தலங்கள் புண்ணிய nக்ஷத்திரங்களோ, அதாவது கண்ணால் பார்க்க முக்தி, காதால் கேட்க்க முக்தி, காலால் மிதிக்க முக்தி, நெஞ்சால் நினைக்க முக்தி, அதுமாத்திரமல்லாமல் எந்த எந்த nக்ஷத்திரங்களை கண்டவரைக் கண்டால் முக்தி, கேட்டவரைக் கேட்டால் முக்தி, நினைத்த வரை நினைத்தால் முக்தி, மிதித்த வரை மிதித்தால் முக்தி என்று இருக்கின்றனவோ அந்தந்த nக்ஷத்திரங்களையெல்லாம் குறித்து பட்டியல் போட்டோமேயானால் உடனே விபசாரத்தடுப்பு சட்டம் அமுலுக்கு வர வேண்டிய ஊர்கள் இவ்வளவுதான்...

புதுமை! புதுமை!!                                        என்றும் கேட்டிராத புதுமை!!!  – சித்திரபுத்திரன்

புதுமை! புதுமை!!                                        என்றும் கேட்டிராத புதுமை!!! – சித்திரபுத்திரன்

  புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!! என்றால் என்ன? முதலாவது:- வெகுநாளாய் மறைந்திருந்த சித்திரபுத்திரன் திடீரென்று தோன்றியது ஒரு புதுமை. இரண்டாவது:- சித்திரபுத்திரன் வெளியிடப் போகும் சேதி ஒரு புதுமை. மூன்றாவது:- வேடிக்கை புதுமை என்ன வென்றால், தோழர்களே! கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மகாமக விசேஷத்தில் ஒரு புதுமையான வியாபாரம் நடைபெறப் போகின்றது. தேசத்தில் பஞ்சம்! பஞ்சம்!! பணப்பஞ்சம்!!! நில்லு நில்லு யாருக்கு பஞ்சம்? சோற்றுக்கு இருந்தால் மாத்திரம் போதாது. நாடகத்துக்கு பணம் வேண்டாமா? குடிக்கிறதுக்கு பணம் வேண்டாமா? கூத்தியாளுக்கு பணம் வேண்டாமா? மோட்டாருக்கு பணம் வேண்டாமா? இந்த இழவுகள் எல்லாம் எப்படியோ போகட்டும் என்றால் எலக்ஷனுக்காவது பணம் வேண்டாமா? நில்லு நில்லு ஒரு சங்கதி என்னவென்றால் எலக்ஷனுக்கு பணம் என்னத் துக்கு? செலவு செய்த பணம் மெம்பர்-பிரசிடெண்ட் உத்தியோகம் கிடைத்த வுடன் சம்பாதித்து ஆன செலவும் போக மீதியும் ஏற்படுமே அதை ஏன் இதில் சேர்க்கிறாய் என்று கேட்பீர்கள்.  அது...

வெற்றிக்குறி

வெற்றிக்குறி

  திருச்சியில் உயர்திருவாளர் எம். டி. சோமசுந்திரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நமதன்பர் சோமசுந்திரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே. அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியை யுண்டாக்கி விட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதீக மதாச்சார சடங்குகளையோ எக்காரணம் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள். அத்தகைய ஓர் “பெரிய” வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத்திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்கு...

உள்ள கோவில்கள் போறாதா ?

உள்ள கோவில்கள் போறாதா ?

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின் றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாக மாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக்கிறார்களாம். இதை தேசியப்பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதையோ சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். பழய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரியமா? அல்லவா? தீண்டப்படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேச மளித்துவிட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா என்று கேள்க்கின்றோம். தேசீயம் என்ற பித்தலாட்ட சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்றுவரை தேசீயத்தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும்...

“காந்தியின் மிரட்டல்”

“காந்தியின் மிரட்டல்”

காந்தியவர்கள் “உயிர் விடுகிறேன்! உயிர் விடுகிறேன்” என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப்பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம்.  ஆனால் பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது. ஏனென்றால் இந்த ‘மகாத்மா’ உயிர்விட்டால் அவருக்கு சமாதி கட்டி, குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்கு பிழைப்பு ஏற்படுத்திக் கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர்களால் முடியும்.  ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர்களிடம் மாத்திரம் செல்லாது. ஆகையால் காந்தி மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டு மானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு “மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன்” என்று உப்புக் காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும்படி செய்யும் வேலைக்கோ, ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப் படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லா விட்டால் எப்படியாவது ராஜி செய்து கொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்லதாகும். குடி அரசு – கட்டுரை – 05.02.1933

மாகாண சுயாட்சி தான் சட்டமறுப்பால் பயனில்லை நமது நாட்டில் உள்ள ஆவேசங் கொண்ட தேசாபிமானிகள் கூட்டத்தில் பல மாதங்களாய், பூரண சுயேச்சைப் பேச்சும், குடியேற்ற நாட்டு ஆட்சிப் பேச்சும், ஐக்கிய ஆட்சிப் பேச்சும் நடைபெற்று வந்தன. இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் வழங்கலாம் என்பதை விசாரித்து முடிவு செய்வதற்காக ஆங்கிலப் பாராளுமன்றத்தாரால் நியமிக்கப்பட்ட ‘சைமன் கமிஷ’னை காங்கிஸ்காரர்கள் பகிஷ்காரம் பண்ணினார்கள், “பூரண சுயேச்சையே இந்தியாவுக்கு வேண்டும்” என்று சொல்லி திரு. காந்தி அவர்களின் தலைமையில் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ ‘சட்ட மறுப்பு’ முதலிய வற்றை நடத்தி தேசத்தில் பெருங்குழப்பத்தையும், கிளர்ச்சியையும் உண்டாக் கினார்கள். இவ்வாறு சட்டமறுப்பு இயக்கம் பலமாக நடைபெற்ற காரணத்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், இந்தியர்களிடம் தாராள மனது காட்டுவது போல், வட்ட மேஜை மகாநாடு ஒன்றை ஏற்படுத்தி இந்தியப் பிரதிநிதிகளை இங்கிலாந்திற்கு வரவழைத்து அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக விவாதிக்கச் செய்தார்கள். முதலில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டிற்கு காங்கிரஸ் பிரதிநிதி கள்  செல்லவில்லை....

வருந்துகிறோம்

வருந்துகிறோம்

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு சதா உழைத்துவரும் மாயவரம் தோழர் சி. நடராஜன் அவர்களது அருமைத் தாயாரும் நாளது 1-2-33 தேதி காலை மரணமடைந்த சேதி கேட்டு வருந்துகிறோம். சென்ற 7, 8 மாதங்க ளுக்கு முன்புதான் தோழர் நடராஜனது தந்தையாரும், அவரது சகோதரியும் காலஞ்சென்றார்கள். அம்மையாரவர்கள் அன்று முதல் தனது கணவன் இறந்த துக்கத்தாலும், குமாரத்தி இறந்த துக்கத்தாலும் ஆழ்ந்தவராகி அதே கவலையாய் இருந்து இம்மாதம் முதல் தேதி காலமாகி விட்டார். இதெல்லாம் அதிசயமற்ற காரியமாயினும், இயற்கையேயாயினும் தந்தையையும், தாயை யும் 8 மாத காலத்தில் பரி கொடுக்க நேர்ந்த தோழர் நடராஜனவர்களைப் பற்றியும், அவரது இளைய சகோதரரான சப் ரிஜிஸ்டரார் தோழர். சி. சுப்பையா பி. ஏ. அவர்களைப் பற்றியும் அனுதாபப்படாமல் எவரும் இரா. அம்மை யாரவர்கள் கடைசிவரையிலும் மாயவரம் செல்லும் சுயமரியாதைத் தொண்டர் களுக்கும், அன்பர்களுக்கும் பொங்கிப் பொங்கிப் போடுவதில் சிறிதும் சலிப்பில்லாமல் சந்தோஷத்துடனேயே உபசரிப்பார்கள். பெரும்பான்மை யான...

தீண்டாமை விலக்கு இரகசியம்

தீண்டாமை விலக்கு இரகசியம்

இது சமயம் இந்தியாவில் நடைபெற்று வரும் “தீண்டாமை விலக்கு” வேலையானது தீண்டாதாரெனக் கருதப்படும் மக்களுக்கு சமூக வாழ்வி லுள்ள சகலவித கஷ்டத்தையும் ஒழிப்பதற்காக ஏற்பட்டதல்லவென்றும் அதுவெரும் இந்து மத பிரசாரத்திற்காகவே துவக்கப்பட்டு, அந்த முறை யிலேயே நடந்து வருகின்ற தென்றும் இதற்கு முன் பல தடவைகளில் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவ காருண்யத்தையும் எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதல்ல வென்பதே நமது துணிபு. அன்றியும் அது பெரிதும் பகுத்தறிவையும், சுகாதாரத்தையும், சமதிருஷ்டியையும் மாத்திரமே கொண்டு யோசிக்கப்பட வேண்டியதே தவிர, மற்றபடி வேறு எந்த விஷயத்தையும் பற்றி கவனிக்க அதில் சிறிதும் இட மில்லை என்பதும் நமது துணிபாகும். ஆனால், இன்று நடைபெறும் தீண்டாமை விலக்கு பிரசாரம் என்ன கருத்தின் மீது என்ன ஆதாரத்தின் மீது நடைபெறுகின்றது என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். முதலாவதாக, இந்தப்...

கோவை உபசாரப் பத்திரங்கள்

கோவை உபசாரப் பத்திரங்கள்

தலைவரவர்களே! கோவை சுயமரியாதை இயக்கத் தலைவரே!! வாலிபத் தோழர்களே!!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!!! உங்கள் பத்திரங்களின் மூலம் உங்களுக்குள்ள ஆவேசம் இன்ன தென்று நன்றாய் விளங்குகின்றது.  அவற்றையெல்லாம் என்னைப் புகழும் வழியில் காட்டி விட்டீர்கள். நான் அப்புகழ்ச்சிகளை ஒப்புக் கொள்ளக்கூடுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆனால் ஒன்றை மட்டும் ஒப்புக் கொள்ளு கிறேன். அதாவது என்னென்ன காரியம் நான் சாதித்து விட்டதாகக் குறிப் பிட்டிருக்கிறீர்களோ, அந்த காரியங்கள் எல்லாம் அவசியம் நடந்தாக வேண்டும் என்றும், அதற்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளுகிறேன். சீர்திருத்தம் தவிர அப்பத்திரங்களின் இரண்டொரு இடங்களில் நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமென்றும், பொது நல இயக்கமென்றும், குறிப்பிட்டிருக் கிறீர்கள், அவைகளை நான் ஒப்புக் கொள்வதில்லை.  நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமல்ல. ஆனால் அழிவு வேலை இயக்கம் என்றே சொல்லு வேன். சீர்திருத்தம் என்றால் எதை சீர்திருத்துவது? இன்றைய நிலைமையில் மனித வாழ்க்கைக்கு,...

இந்தியாவில் பெண்கள் நிலை

இந்தியாவில் பெண்கள் நிலை

தோழர்களே! இந்தியப் பெண்கள் நிலைமையைப் பற்றி பேசுவ தென்றால் அது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். அங்குள்ள ஆண், பெண், வித்தியாசமானது முதலாளி தொழிலாளிக்கு உள்ள வித்தியாசத் தைவிட மிகக் கடினமானது. ஒரு தொழிலாளியானவன் எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொண்டானேயானால் அவன் மெள்ள மெள்ள முதலாளி கூட்டத் தில் கலந்து கொள்ளக்கூடியவனாகி விடுவான். ஆனால் இந்தியப் பெண்களோ அப்படியில்லை. அவர்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொருளாகவும், ஆண் களையே தெய்வமாகக் கருதி பூஜித்து தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள். பெண் இழிவான பிறவி இந்தியாவில் இந்து பெண்கள் இந்துமத சம்பிரதாயப்படி பாப ஜன்மங் களாகக் கருதப்படும். அதாவது சென்ற ஜன்மத்தில் அவர்கள் செய்த பாப காரியங்களால் இந்த ஜன்மத்தில் பெண்களாய்ப் பிறக்கிறார்கள் என்பது ஒரு சாஸ்திர விதி. ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தை இருந்தாலும் அக்குடும்பத்திற்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் அதை பிள்ளையில்லாத குடும்பம் என்றே...

சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்

சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்

சென்றவாரம் வெளியான தினசரி பத்திரிகைகளில் தோழர் காந்திய வர்களால் கலப்புமணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த வாரம் வந்த தினசரிகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட ஆகாரத்தையும் சுயமரியாதையை லட்சியமாய் கொண்ட கலப்பு மணத்தையும் தான் ஆதரிப்பதாகச் சொன்ன தாய் காணப்படுகின்றது. இதைப் பார்க்கும்போது ஒரு கேள்வி புறப்படுகின்றது.  அதாவது சம ஜாதி மக்களால் சமைக்கப்பட்ட ஆகாரம் சம ஜாதி மக்களுடன் கூட இருந்து உண்ணும் ஆகாரம் ஆகியவைகள் சுகாதார முறைப்படி சமைக்கப் பட வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி பிறக்கின்றது.  ஒரு சமயம் இரண்டு வித மக்களுடனும் கலந்து உட்கார்ந்து உண்ணும் ஆகாரத்துக்கும் சுகாதாரமுறை பக்குவம் வேண்டுமானால் அதை இந்த சமயத்தில் தனியாய் குறிப்பிடக் காரணம் என்ன? என்கின்ற கேள்வி பிறக்கின்றது. அதுபோலவே சுயஜாதி மணம் செய்து கொள்வதானாலும் சுய மரியாதை இலட்சியம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் கலப்பு மணத்தைப் பற்றிச் சொல்லும் போது மாத்திரம்...

இந்தியப் பெண்களுக்கும் இடம்                 நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும்                        பிரசவ ஆஸ்பத்திரியுமா?

இந்தியப் பெண்களுக்கும் இடம்                 நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும்                        பிரசவ ஆஸ்பத்திரியுமா?

சென்னையில் கூடியபெண்கள் சங்கத்தில், பெண்கள் நலனுக்கென்று, சில பெண்கள் கூடி, சில தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள் என்பதாகத்தெரிய வருகிறது.  அவற்றின் ஒரு தீர்மானமானது இந்திய ஸ்திரீ ரத்தினங்கள் நளபாக அடுப்பும், சப்ர மஞ்சக்கட்டிலும், பிரசவ ஆஸ்பத்திரியும் தவிர வேறு இடத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்கின்ற மனப்பான்மையைக் காட்டுவதாய் இருக்கின்றது. அதாவது, “சிறுவர் பாடசாலைகளில் சிறுமிகளுக்கு அவசியமாக வேண்டப்படும் சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடித்தன சாஸ்திரம் இவை களைப்போதிக்க வேண்டியதிருப்பதால் சிறுவர் பாடசாலைகளையும், சிறுமி கள் பாடசாலைகளையும் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது” என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் தாம் ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிருகங்களை விட கேவலமான நிலையில் இருப்பதைப்பற்றி சிறிதாவது கவலையோ, வெட்கமோ அடைந்ததாகத் தெரியவில்லை. “கல்வியறிவுள்ள மேதாவிப்” பெண்களான ஸ்திரீ ரத்தினங்களைப் பற்றியே நாம் பேசுகின்றோம். இவர்கள் நிலையே இப்படியானால், பிள்ளை பெரும் யந்திரங்களான மற்ற ‘வநிதாரத்தனங்களை’ப் பற்றிப் பேசவும் வேண்டுமா? மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய யோக்கியதையை எடுத்துக்கொண்டால் அவர்கள் எந்நாட்டு...

ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த                          உபசாரப் பத்திரமும் பதிலும்

ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த                          உபசாரப் பத்திரமும் பதிலும்

அன்பு கொண்ட நகரசபை தலைவரவர்களே! அங்கத்தினர்களே!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!! கோவை நகரசபையின் சார்பாக எனக்கு வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் மிகுதியும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவனேயாவேன்.  ஆனால் அவ்வுபசாரப் பத்திரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று சொல்லுவேனேயானால் நான் உண்மையற்ற புகழை ஏற்றுக் கொண்டவன் என்னும் குற்றத்திற்காளானவனாவேன்.  ஏனெனில் தீண்டாமை விலக்கிலும், பொது நல சேவையிலும், அரசியலிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும் நான் ஏதோ பெரிய வேலைகள் செய்திருப்பதாக உங்கள்  உபசாரப் பத்திரத்தில் புகழ்ந்து இருக்கிறீர்கள். உண்மையில் பார்ப்போமானால் அத் துரையில் பொது மக்களுக்கு என்ன காரியம் செய்திருக்கிறேன் என்று இன்று உங்கள் முன்னிலையில் நான் சொல்லக் கூடும்? தோழர்களே! இந்தியாவில் பார்ப்பனர்களும் படித்த கூட்டத்தாரும் செல்வவான்களுமாகிய ஊரார் சரீர உழைப்பில் வாழ்வதற்கென்றே உயிர் வாழும் கூட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாதாருக்கு பாடு பட்டிருக்கின்றேன், ஏழைகளுக்கு பாடுபட்டிருக்கின்றேன், தொழிலாளிக்கு பாடுபட்டிருக்கின்றேன் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளுவதானால்...

விபசாரத் தடை

விபசாரத் தடை

மதுரையில் விபசாரத் தடை மசோதா அமுலுக்கு வந்திருப்பதாக தெரிய வருகின்றது. சென்னையிலும் அது முன்னமேயே அமுலுக்கு வந்துவிட்டது.  மற்ற ஜில்லாக்களுக்கும் அது உடனே அமுலுக்கு வரவேண்டி யதாகும். குறைந்த அளவு 30 ஆயிரம் ஜனங்கள் உள்ள ஈரோட்டில் 300 பேர்களுக்கு குறையாத விபசாரிகள் என்போர்கள் அதாவது ஒரு அணா இரண்டு அணா ரேட்டு முதல் விபசாரித்தனம் செய்து ஜீவிக்க வேண்டிய பெண்கள் இருந்து வருகின்றார்கள் என்றால் மற்ற பெரிய பட்டணங்களைப் பற்றி கேள்க்கவும் வேண்டுமா? விபசாரத்தடை மசோதா வருவது என்பது சற்று தாமதானாலும் ஆங்காங்குள்ள போலீஸ் அதிகாரிகளாவது இவ்விஷயங்களில் சற்று கவலை செலுத்தி அவர்கள் (விபசாரிகள்) தெருவில் நின்று மக்களை அழைப்ப தையும், தெருக்களில் சில்லரைக் கலகங்களை ஏற்படுவதையும், இவர்கள் பயனாய் ஆபாச பேச்சுவார்த்தைகள் நடப்பதையும் மற்றும் சில வாலிபர்கள் காலித்தனமாய் நடக்க ஏற்படுவதையும் ஒருவாறு தடுக்கலாம் என்றே கருதுகின்றோம். இப்படிப்பட்ட காரியங்களில் சின்ன சிப்பந்திகள் பிரவேசிக்க இடம் கொடுக்காமல் சற்று...

கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு

கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு

தோழர்களே! இன்றுதோழர் சேக்தாவுத் அவர்கட்கு கான்சாயபு பட்டம் கிடைத்ததைப் பாராட்டுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன். இம்மாதிரியான பட்டங்களை சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பு கருதியதைப் போல் இதுசமயம் மக்கள் அவ்வளவு மேன்மையாகக் கருதுவதில்லை. உதாரணமாக இரண்டொரு வருஷங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு கிடைத்த ஒரு பட்டத்திற்கு பெருத்த பாராட்டுதல்கள் நடக்கும்போது நான் அவரைப் பார்த்து “பட்ட சம்பந்தமான பாராட்டுவிழா தொந்திரவு உங்களுக்கு இனி கொஞ்சநாளைக்கு இருக்கும்.  உங்கள் மனமும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கும்” என்று சொன்னேன்.  “பட்டங்களால் பிரமாதமான பலன் இல்லாவிட்டாலும் இந்த சந்தோஷத்திற்காவது இடமிருக்கிறதே” என்று சொன்னேன்.  அதற்கு அவர் அப்படிக்கூட இதில் ஒன்றும் பெருமைப்பட இடமில்லை  என்றார்.  உடனே நான் ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இதோ இவ்வருஷம் பட்டம் வழங்கி இருக்கும் லிஸ்ட்டைப் பாருங்கள். எனக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது.  இன்னொரு வருக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது. ...

ஏன் வரி குறைக்க வேண்டும்?

ஏன் வரி குறைக்க வேண்டும்?

“விளை பொருள்களுக்கு விலை குறைந்து போனதால் வரிகளைக் குறைக்க வேண்டு” மென்று மிராசுதாரர்கள் கூக்குரல் இடுகின்றார்கள்.  விலை குறைந்த காரணத்தைக் கொண்டு வரியைக் குறைக்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டதா என்பதை வாசகர்கள் ஊன்றிக் கவனிக்க வேண் டும் என்று ஆசைப்படுகின்றோம்.  வரிவசூல் செய்வதானது விளை பொருள்களின் விலையை உத்தேசித்தா அல்லது “அரசாங்கம் நடைபெற வேண்டும்” என்கின்ற காரணத்துக்காகவா என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். அந்தப்படி யோசித்துப் பார்த்தால் அரசாங்கம் நடைபெறுவதற்காகத் தான் வரி வசூலிக்கப்படுகின்றது என்பது யாவருக்கும் விளங்கும்.  ஆகவே இது வரையில் பூமி மீதோ, வியாபாரத்தின் மீதோ மற்றும் பலவற்றின் மீதோ போடப்பட்ட வரி யெல்லாம் அரசாங்கம் நடைபெறுவதற்காகவே அரசாங்க செலவை உத்தேசித்து அதற்கு ஏற்றபடி வரி வசூல் செய்யப் பட்டு வருகின்றது. ஆதலால் இப்போது வரியைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கம் நடைபெறுவதற்கு என்று ஏற்பாடு செய்திருக்கும் செலவைக் குறைத்தால் ஒழிய வரியைக் குறைக்கமுடியாது.  அப்படி இருந்தும்...

வரவேற்கின்றோம்

வரவேற்கின்றோம்

45 மாத காலமாய் விசாரணை நடந்துவந்த “மீரத் சதிவழக்கு”  கேசு ஒரு வழியில் முடிவடைந்துவிட்டது,  அதாவது 27 எதிரிகளுக்கு, 3 வருஷ முதல் ஆயுள் பரியந்தம் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனையைப்பற்றி நாம் சிறிதும் கவலைப் படவில்லை. இந்த 27 பேர் மாத்திரம் அல்ல இன்னும் ஒரு 270 பேர்களும் சேர்த்து தூக்கில்போடப்பட்டி ருந்தாலும் சரி நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை.  ஏனென்றால் இந்தத் தோழர்கள் சிறையிலிருப்பதாலோ, தூக்கில் கொல்லப்படுவதாலோ அவர்களது கொள்கையாகிய பொதுவுடமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆதிக்க ஆட்சியை சிதைத்து, நசுக்கி சரீரத்தினால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டும் என்கின்ற கொள்கையோ, உணர்ச்சியோ, அருகிப் போய்விடும்  என்கின்ற பயம் நமக்கு இல்லை. அல்லது இன்று தண்டனை அடைந்த தோழர்கள் தான் இக்கொள்கைக்கு கர்த்தாக்கள் ஆவார் கள், கர்மவீரர்கள் ஆவார்கள்.  ஆதலால் இவர்கள் போய்விட்டால் இந்தக் கொள்கையைக் கொண்டு செலுத்த உலகில்வேறு...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அசூயை        –        பொறாமை அபேக்ஷித்தல் –        விரும்புதல் அமிதம்        –        அளவுக்கு அதிகமாக அத்தாக்ஷி      –        உறுதியான சான்று அபுரூமாக      –        அபூர்வமாக, அரிதாக அநித்தியம்     –        நிலையற்றது அவிழ்தம்      –        மருந்து, ஒளடதம் ஆகுர்தி         –        உருவம், உடல் ஆக்கினை      –        கட்டளை, ஆணை ஆவாகனம்     –        எழுந்தருளுமாறு மந்திரத்தால்                                  தெய்வத்தை வேண்டி அழைத்தல் ஆஸ்பதம்      –        இடம், பற்றுக்கோடு இத்தியாதி      –        இவை போன்ற கடாக்ஷம்       –        கடைக்கண் கிருத்துருவம்   –        வஞ்சனை சகோதரம்      –        குலம் சம்சயம்        –        அய்யம், சந்தேகம் சம்ரக்ஷணை   –        காப்பாற்றுகை சவதமாக...

சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை

சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை

  திருவாங்கூர் ராஜியத்தில் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் வரும் வழியில் சாஸ்த்தா கோவில் என்று ஒரு கோவில் இருக்கின்றது. அந்த சாமிக்கு அந்த பக்கத்திய ஜனங்கள் தாங்கள் உத்தேசித்த காரியம் நிறை வேறினால் வெங்காய வெடி வேட்டுகள் இத்தனை போடுகிறேன் என்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம். மோட்டார் பஸ்காரரும் அந்தப் பக்கம் பஸ் போகும் போதெல்லாம் வண்டியை நிருத்தி வெடி வேட்டுப் போட்டுச் செல் வது வழக்கம். இந்த வேண்டுதலையை நிறைவேற்றும் விதம் எப்படி என் றால் ரோட்டுக்கும் கோவிலுக்கும் சுமார் 100, 150 அடி இருக்கும். ரோட்டு கோவிலை விட கொஞ்சம் மேடானது. இந்தக் கோவில் பூசாரிகளில் இருவர் ரோட்டில் மோட்டார் பஸ் செல்லுகின்ற பக்கம் வந்து நின்று கொண்டு ஒவ் வொரூ பஸ் பிரயாணியையும் பார்த்து சாஸ்த்தா வெடி, சாஸ்த்தா வெடிகள் என்று கேழ்ப்பார். பிரயாணிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வேண்டு தலைக்கு தகுந்தபடி ஒன்று இரண்டு ஐந்து...

எது நல்ல ஜோடி ?

எது நல்ல ஜோடி ?

வருணாச்சிரம தரும தோழர் ராமச்சந்திரய்யர் “ஹரிஜனங்கள்” என்பவர்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொன்ன விஷயத்தைச் சுயமரியாதை இயக்கத்தோர் ராமசாமியும் ஆமோதித்து விட்டாராகையால் ராமச்சந்திர அய்யரும் ராமசாமியும் ‘நல்ல ஜோடி’ என்று சுதந்திரச் சங்கு என்னும் பத்திரிகை எழுதி இருக்கிறது. என்றாலும் அதே பத்திரிகையின் வேறொரு இடத்தில் அந்த ஜோடிக்கு உவமை சொன்னதில் உண்மையைச் சொல்லி விட்டது. எப்படி எனில் இரண்டும் சரியான ஜோடி அல்ல வென்றும் சிறிது கூட பொருந்தாத ஜோடி என்றும் மக்கள் நன்றாய் உணரும்படி தன் மனதிலுள்ள உண்மையை தன்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டது. அதாவது, “இருவரும் சேர்ந்த நல்ல ஜோடி என்பது காராம் பசுவும் காளை எருமையும் ஒரு வண்டியில் கட்டப்பட்டு ஓட்டப்படுவது போலிருக் கிறது” என்று உவமை காட்டி எழுதி இருக்கிறது. ஆகவே காராம் பசுவும் காளை எருமையும் சரியான ஜோடி என்று யாராவது ஒப்புக் கொள்ளுவார் களா? ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....

சுயமரியாதைத் தலைவர்

சுயமரியாதைத் தலைவர்

  சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர் திரு. று.ஞ.ஹ. சௌந்திர பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை க்ஷண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரண மாய் விளங்கிவிட்டார். திரு. பாண்டியன் அவர்கள் அந்த ஸ்தானத்தை ஒரு போதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத்தலுக் காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியாதை யுடனும் யாருடைய தயவு தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார். முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் அதிகாரத்தையும், சலுகையையும் பிரயோகித்து வந்தார். பணக்காரர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது ஜாதித்திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரியமாய்...

காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை வாலிபர்களுக்கு விருந்து

காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை வாலிபர்களுக்கு விருந்து

ருஷிய பொது உடமைக் கட்சிக்காரர் அன்னிய தேசப் பிரசாரத்திற் கென்று ஒரு இலாக்கா வைத்து தங்கள் கொள்கைகளை உலகமெல்லாம் பரப்ப உத்தேசித்து அந்தந்த நாட்டுக்குத் தகுந்தபடி திட்டங்கள் ஏற்படுத்தி, அதை அந்தந்த நாட்டில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றார்கள். அந்த முறையில் இந்தியாவிற்கு என்று அவர்கள் வகுக்கப்பட்ட திட்டங்கள், லண்டன் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்ததின் சுருக்கம் சென்னை “இந்து” பத்திரிகையில் லண்டன் நிருபரால் தந்தியடிக்கப்பட்டு அப் பத்திரிகையில் பிரசுரமானதின் கருத்தை மொழி பெயர்த்து மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அது வாலிபர்களுக்கு ஒரு விருந்தாகும், அதில் சில இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானதென்று காணப்படா விடினும் காங்கிரசையும் இன்றைய இயக்கத்தையும், அதன் இயக்கத் தலைவர்களையும் பற்றிக் கூறியிருக்கும் குறைகளில் பெரும்பான்மை நமது அபிப்பிராயமும் ஆகும் என்பதோடு அதையே நாமும் பல தடவை எழுதி வந்திருக்கின்றோம். திட்டத்திலும் பெரும்பான்மை நாம் எழுதி வந்தவை களாகும். பொது ஜனங்களின் உண்மையான சுதந்திர உணர்ச்சி களைக் கெடுத்து தொழிலாளர்களுக்கும்...

எலெக்ஷன் கூத்து  – சித்திரபுத்தன்

எலெக்ஷன் கூத்து – சித்திரபுத்தன்

  தமிழ் நாட்டில் ஸ்தல ஸ்தாபனங்களில் புதிய சீர்திருத்தத்தின்படி என்று நடைபெறும் எலக்ஷன்கள் (தேர்தல்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எல்லாம் ஏதாவது குழப்பமும், சண்டையும், கலகமும், அடிதடியும், கொலைகளுமான காரியங்கள் அவ்வளவுமோ அல்லது ஏதாவது ஒன்றோ நடந்த வண்ண மாகவே இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக் கைகளும் மிக மிக மோசமாகவே இருக்கின்றன. இனிமேல் தேர்தல்கள்-எலக்ஷன்கள் ஏற்பட்டவுடன் அதன் அபேக்ஷ கர்களை காவலில் வைத்து விட்டு எலக்ஷன்கள் நடத்தப்பட்டால் ஒழிய கலக மும், கொலையும் நடக்காமல் இருக்குமா என்கின்ற விஷயம் சந்தேகமாகவே இருந்து வருகின்றது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலையோ மிக மிக மோசமாயிருக்கின்றது. பெரிய பொறுப்புள்ள அதிகாரிகள் முதல் சாதாரண போலிங் ஆபீஸர்கள் என்பவர்கள் வரை மோசமாகவே நடந்துகொள்ளு கின்றார்கள். ஒரு சிறு கதை சொல்லுகின்றோம். ஒரே ஒரு ஊரில் ஒரு எலக்ஷன் நடந்தது அதற்கு நின்ற இரண்டு அபேட்சகர்களும் “எலக்ஷன் அதிகாரி யிடம் சென்று எலக்ஷன் எப்படி இருந்தாலும்...

மதிப்புரை

மதிப்புரை

“ இளைஞர் பாடல்கள்” என்ற தமிழ் நூலொன்று வரப்பெற்றோம். அஃது கோவைத் தமிழ்ச்சங்க அமைச்சரும், பொதுநல உழைப்பாளரும், தமிழ் மொழி வல்லுனருமான தோழர். ராவ்சாஹிப் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப் பெற்று கோவைத் தமிழ்ச் சங்கத் தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் எளிய நடையில் புதியமுறையில் இளைஞர்களுக்கு உணர்வு ஊட்டும் நோக்குடன் கடவுள், ஞாயிறு ஒழுக்கம், நிலா, மறை, யாறு, கல்விளையாட்டு, ஆகாயவிமானத்தில் முதல் அநுபவம், நாட்டுப்பற்று அல்லது தாய்நாடு முதலிய பல்வேறு பொருள்களைப் பற்றியும் மலையும் அணியும். ஹாதிம்தாய் என்னும் சிறுகதைகளை விளக்கியும் செய்யுள் ரூபமாக சாதாரண மக்களும் அறியும் வண்ணம், எழுதப்பட் டுள்ளது. கடவுளுணர்ச்சியையும், சோதிடப்பெருமையையும், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தேசீய உணர்ச்சியையும் கார்த்திகைத் திருநாள் முதலிய பல விழாக்களின் அருமையையும் பற்றிய நம்பிக்கை உடையோருக் கும் தமிழின் பெருமையையும் கவிச் சுவையை அறிய விரும்புபவர்களுக் கும் இந்நூல் மகிழ்ச்சியைத் தரத்தக்கதாகும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்...

நேற்றும், இன்றும்  – சுமைதாங்கி

நேற்றும், இன்றும் – சுமைதாங்கி

  ஓ தேசியவாதிகளே! தேசியப் பத்திராதிபர்களே!! சுயமரியாதைப் பிரசாரங்கள் நடக்கின்ற பக்கங்களில் கலகங்கள் நடப்பதாகவும், அடிதடிகள் நடப்பதாகவும் கற்பனைகள் செய்தும் இழிபிறப்பு ரிபோர்ட்டர்களின் நிரூபங்களை நம்பியும் நடவாத சங்கதிகளை பத்திரிகை களில் போட்டு “நேற்று” மகிழ்ந்தீர்கள். சுயமரியாதை இயக்கம் செத்தது என்று பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்தால் உலகத்தார் கண்களும் மூடப்பட்டிருக்கும் என்று கருதிய திருட்டுப் பூனைகள் போல் நடித்தீர்கள்.  முடிவில் என்ன நடந்தது? என்று பார்த்திருப்பீர்கள். அதாவது உங்கள் வயிர் வளர்ப்புக்கு ஆதாரமாயிருக்கும் காங்கிரசின் யோக்கியதை – ஹரிஜன சேவையின் யோக்கியதை “இன்று” எப்படி இருக் கின்றது? எத்தனை பக்கம் கலகம்? எத்தனை பக்கம் தடியடி? எத்தனை பக்கம் கல்லடி?  எத்தனை பக்கம் ரத்தக்காயம்? எத்தனை பக்கம் மண்டை உடை? எத்தனை பக்கம் விரட்டி அடித்தல்? எத்தனை பக்கம் காங்கிரஸ்காரரே கூட்டத்தை கலைத்துக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தல்? எத்தனை பக்கம் புரட்டு? இவைகள்...

வருந்துகிறோம்  ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் மரணம்

வருந்துகிறோம் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் மரணம்

  9-1-33 இரவு செங்கற்பட்டு பிரபல வியாபாரியும், ஜமீன்தாரும், நிலச்சுவான்தாருமான தோழர் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் அவர்கள் சென்னையில் உயிர் துரந்தார் என்ற சேதியைக் கேட்டு மிக வருந்துகிறோம். இவர் செங்கற்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாநாட்டிற்கு மூல புருஷராயிருந்து நடத்தினவர். சீர்திருத்தத் துறையில் வெகு தூரம் முற்போக்கு டையவர். ஏழைகளிடத்தில் மிகுதியும் அன்பும் இரக்கமும் உடையவர். இவர் இறந்தது அந்த ஜில்லாவாசிகளுக்கு ஒரு பெருங்குறைவேயாகும். குடி அரசு – இரங்கல் செய்தி – 15.01.1933    

ஸ்பெயினும் இந்தியாவும்

ஸ்பெயினும் இந்தியாவும்

ராஜவை விரட்டி அடித்த பிறகும் ஸ்பெயின் தேசத்தில் முதலாளி களுடைய ஆட்சியே ‘குடி அரசு’ ஆட்சி என்னும் போர்வையைப் போற்றிக் கொண்டு அதாவது இந்தியாவில் எப்படி சுயராஜியம்-தேசீயம் என்னும் போர் வையை போத்திக் கொண்டு முதலாளிகளுடைய ஆட்சிக்கு காங்கிரசின் மூலம் சிறிது காலமாய் அஸ்திவாரம் போடப்பட்டு வருகின்றதோ அதுபோல் நடந்து வந்தது. இன்றும் அப்படியே நடந்து வருகிறது என்றாலும் இப்போது அங்கு இந்த முதலாளிக் குடி அரசு ஆட்சியையும் அழிக்க ஒரு கூட்டம் துணிந்து வெளியில் கிளம்பி வந்து, தேசீயத்தையும் ஒழித்து, போலிக் குடி அரசையும் ஒழிக்கப் புரட்சி செய்து பொது உடமை ஆட்சி ஆக்க முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றதாக தெரியவருகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த கட்டலோனியா மாகாணத்தில் கிண்டிகலிஸ்ட் (அனார்க் கிஸ்ட்) அதாவது சர்க்கார் ஆட்சி என்பதே இல்லாமல் எல்லாம் தன்னரசு நாடாகவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு வித கொள்கை மீது ஒரு பெரிய இயக்கம்...

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்  தலைவிரி தாண்டவம்

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்  தலைவிரி தாண்டவம்

  மதுரை சேர்மென் திரு. ஆர். எஸ். நாயுடு அவர்கள் மதுரை முனிசிபல் கவுன்சிலில் ஏற்பட்ட கக்ஷி பிரதி கக்ஷியினால் தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அப்படியிருந்தும் அதை லக்ஷியம் செய்யாமல் எதிர்கக்ஷி கவுன்சிலர்கள் 19 பேர் கூடியிருந்து ஏகமனதாக அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். இவரின் கை மிகவும் சுத்தமானது என்றாலும் கக்ஷி பிரதிகக்ஷி அதை கவனிக்க முடி யாமல் செய்து விட்டது. இப்போது திரு. துளசிராம் பி.ஏ., பி.எல். அவர்கள் ஏக மனதாய் மதுரை முனிசிபல் சேர்மெனாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு  µ 900 ரூபா சம்பளமும் 100 ரூ. அல்லவன்சும் உண்டு. திண்டுக்கல் சேர்மென் திரு. சோலை நாடார் அவர்களும் கக்ஷி பிரதி கக்ஷி காரணமாக தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவரும் மிக்க பரிசுத்தமும் நாணயமும் உடையவர். நம்பிக்கையில்லாத தீர்மானச் சட்டம் ஏற்பட்டு கொஞ்ச காலமே ஆனதால் அது...

பெ. சி. சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர்

பெ. சி. சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர்

  றாமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டிக்குக் காலியான ஒரு ஸ்தானத் திற்கு நாடார் கனவான் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று பொது ஜனங்கள் விரும்பியதும், மேற்படி தேவஸ்தானக் கமிட்டி தலைவர் சுயமரியாதை வீரர் திரு. எஸ். ராமசந்திரன் அவர்கள் கண்டிப்பாய் ஒரு நாடார் கனவானையே நியமிக்க வேண்டுமென்று தேவஸ்தானப் போர்டை வற்புறுத்தி நாடார் குல  மித்திரன் பத்திராதிபர் திரு. சு. ஆ. முத்து நாடார் அவர்கள் பெயரை எடுத்துக் காட்டி இருந்ததும் நேயர்கள் அறிவார்கள். ஆனால் திரு. முத்து நாடார் அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் இல்லாததால் போர்ட் இலாக்கா மந்திரி அவர்கள் வேறு ஒரு நாடார் கனவான் பெயரை சிபார்சு செய்யும்படி கமிட்டித் தலைவர் திரு. ராமச்சந்திரன் அவர்களை கேட்டிருந்ததற்கு ஒப்ப அவர் விருதுநகர் பாத்திர வியாபாரம் திரு. பெ. சி. சிதம்பர நாடார் பெயரை தெரிவிக்கவே இலாக்கா மந்திரி அவர்கள் திரு. சிதம்பர நாடார் அவர்களை நியமித்திருப்பதாய் தெரிய நாம் மிகுதியும்...

“சுப்பராயன் மசோதா” வின் இரகசியம்

“சுப்பராயன் மசோதா” வின் இரகசியம்

டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோதாவானது தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் ஏதோ பிரமாதமான நன்மை செய்துவிடப்போவதாக ஜனங் களுக்குள் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைப்பற்றி முன் ஒரு குறிப்பு காட்டி இருந்தோம். அதன் இரகசியம் என்ன என்பதும், எதற்காக அந்தப்படி பிரசாரம் செய்யப்படுகின்றது என்பதும் அநேகர் அறிந்திருக்கவே மாட்டார்கள். இருந்தபோதிலும் அந்த மசோதாவின் யோக்கியதை என்ன என்பதும் அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதும் அடியில் குறிப்பிட்ட தோழர்         சி. ராஜகோபாலாச்சாரியாரின் இரண்டொரு வாக்கியத்தில் இருந்து ஒருவாறு உணரலாம். அதாவது, “டாக்டர் சுப்பராயனின் கோவில் பிரவேச மசோதாவை அவர்கள் (வைதீக ஜனங்கள்) எதிர்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ஹரிஜனங்களை கோவிலுக்குள்விட்டே தீரவேண்டுமென்றும், அம்மசோதா சொல்லவில்லை.   அம்மசோதா சட்டமானவுடன் ஹரி ஜனங்கள் கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள் என்று யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்” என்று 9-1-33-ந் தேதி சுதந்திரச்சங்கு என்னும் பேப் பரில் 5-வது பக்கம் இரண்டாவது கலத்தில் எழுதி இருக்கிறார். இதைப்பற்றி வியாக்கி யானம்...

காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு

காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை ஒழிப்பா? நிலைப்பா என்று சென்ற வாரம் நாம் தலையங் கம் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதற்கு பதில், அல்லது சமாதானம் என்று கருதும்படி தோழர் காந்தியவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், மோர்வி மாஜி திவானுக்கு அளித்த பதிலிலும் காணப்படும் அடியிற்கண்ட விஷயங்கள் நமது கருத்தை ஊர்ச்சிதப் படுத்துவதாக இருக்கின்றதா? இல்லையா என்பதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்படி வாசகர் களை வேண்டுகின்றோம். தோழர் காந்தியார் கூறுவதாவது:- “நான் கலப்பு மணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்ப தில்லை” (ஏன்?) “சுத்தமில்லாமல் இருப்பவர்களையும், மாட்டு மாமிசம் சாப்பிடுபவர் களையும் ஆலயத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்“ என்று கூறி இருக்கிறார். காந்தியார் அறிக்கை கூறுவதாவது:- எனது ராஜி பிரேரேபணையை யார் கண்டித்தாலும் நான் வாப்பீசு வாங்கிக் கொள்ளப் போவதில்லை. மத விஷயத்தில் நிர்ப்பந்தமென்பது இருக்கக் கூடாது. மத விஷயத்தில் பிறர் கொண்டுள்ள நம்பிக்கையை முக்கிய விஷயத் திற்கு இணங்கிய அளவுக்கு மதித்து நடக்க...

கல்யாண ரத்து தீர்மானம்

கல்யாண ரத்து தீர்மானம்

ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாகரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாக தெரிய வருகிறது. அன்றியும் 3 மணி நேரம் அத் தீர்மானத்தின் மீது பல பெண்கள் கூடி பலமான வாதப் பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும் கூட இந்த சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஏனெனில் கல்யாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளை காதினால் கேள்க்கவே நடுங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்களுக்கு அடங்கி  அடிமையாய் கிடந்து வந்து பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிரருக்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் “கடவுள்” போலவே பாவிக்க வேண்டு மென்றும், கணவன் குஷ்ட்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய்,...

கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்

கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்

நமது பகுத்தறிவு இயக்கத்தை தாக்கி எழுதும் முறையில் திருச்சி “கிங்ஸ் ரோலி” என்ற ஆங்கில மாதச் சஞ்சிகையையும், சர்வவியாபி என்ற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையும் நம்மை திட்டி எழுதியிருந்தவைகளை நமக்கோர் நற்சாட்சிப் பத்திரமாக எண்ணி நமது கொள்கைகளை ஆதரிக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள பகுத்தறிவு இயக்க ஸ்தாபனங்களுக்கு அதன் பிரதிகள் சிலவற்றை வாங்கி அனுப்பினோம். அவர்கள் நமது தொண்டைக் கண்டு மகிழ்ந்து அதற்கு வெகுமதியாக ஞசநைளவ வாந றுடிஅநn யனே வாந ஊடிகேநளளiடியேட ணுரநளவiடிn கடிச ஊயவாடிடiஉள சுடிஅயn ஊயவாடிடiஉளைஅ ஹயேடலணநன குகைவல லநயசள in வாந உhரசஉh டிக சுடிஅந ஊடிகேநளளiடிn டிக ய சூரn முதலிய புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள். அவைகளின் மொழி பெயர்ப்பு இனி குடி அரசில் வெளியாகிக் கொண்டு வரும். கத்தோலிக்கர் களுக்கும் மற்ற வைதீக கிறிஸ்துவர்களுக்கும் நாமாக ஏதாவது சொல்வதா யிருந்தால் தான் அவர்கள் கோபித்துக் கொள்ள இடமேற்படலாம். ஆத லாலேயே இனி கத்தோலிக்கு பாதிரிகளும்,...

“சுப்பராயன் மசோதா”                        விளம்பரம்

“சுப்பராயன் மசோதா”                        விளம்பரம்

கோவில் பிரவேச மசோதா என்னும், டாக்டர் சுப்பராயன் மசோதா வுக்கு சிறிது காலத்துக்கு முன் ஜிண்டான் மாத்திரைக்குச் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு மேலாகவே செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரம் தோழர் ராஜகோபாலாச்சாரி சிபார்சின் மீது தோழர் காந்தியாலும் செய்யப் பட்டு வருவதைக் கண்டு டாக்டர் சுப்பராயனைப் பாராட்டாதவர்கள் இல்லை. டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு இது ஒரு சகட யோகமேயாகும். ஆனால் மசோதாவின் யோக்கியதை என்ன என்பதையும், பயன் என்ன என்பதையும் இதன் கருத்து என்னவென்பதையும், எதை உத்தேசித்து இந்தப் பித்தலாட்ட பிரசாரம் மகாத்மாக்களாலும், தேசீய பத்திரிக்கைகளாலும் நடைபெருகின்றது என்பதை சீக்கிரத்தில் நாமே விவரமாக வெளிப்படுத்த இருக்கிறோம். சிறிது தாமதம் ஆவதால் ஒன்றும் முழுகிப்போகாது. ஆதலால் அது சம்மந்தமாக வந்திருக்கும் பல வியாசங்களை வெளியிடாததற்கு நிருபர்கள் பொருத்துக் கொள்வார்களாக. குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 08.01.1933

ஆஸ்திகர்களே எது நல்லது?

ஆஸ்திகர்களே எது நல்லது?

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா? அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா? குடி அரசு – கேள்விகள் – 21.12.1930  

நாடார் மகாஜன சங்கம்

நாடார் மகாஜன சங்கம்

சென்ற டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கூடிய நாடார் மகாநாடு, நாடார் வாலிபர் மகாநாடு, நாடார் கல்வி மகாநாடு ஆகியவைகளின் தலைவர் களின் சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் இன்று நமது பத்திரிகையின் வேறிடத்து பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் பல்வேறு தொல்லைகளுக்குட்பட்டு வரும் உலகிற்கும், சுயமரியாதை இழந்து பரிதவிக்கும் இந்திய மக்களுக்கும் நாடார் மகாநாட்டுத் தலைவர்களின் சொற்பெருக்குப் போதிய வழி காட்டியாயிருக்கு மென்பதில் கிஞ்சித்தும் ஐயமின்று. வாலிபர்கள் மகாநாட்டிற் றலைமை வகித்த தோழர் கூ. கா. ஆ. பெரியசாமி அவர்களின் தம் சொற்பொழிவு பல நுண்பொருளை அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் ஒரு சிறிதும் மிகையாகா. வருமைநோய், வேலையில்லாத் திண்டாட்டம்!  பொருளாதார நெருக்கடி!! பஞ்சம்!!! என்று துன்பவாழ்வைப் போக்க வழிதெரியாது பரிதவிக்கும் உலகிற்கு, “ருஷிய தேசத்தின் மாஸ்கோ என்ற நகரிலுள்ள 8 முதல் 13 வயதுவரையுள்ள பள்ளிச் சிறுமிகள் ஒரு சங்கமாகச் சேர்ந்து படிக்கும் நேரம் நீங்கலாக மற்ற நேரங்க ளில் படியாத தொழிலாளர்கள் வசிக்குமிடங்களுக்குச்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உர்ச்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார். இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின்றாறோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உர்ச்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக ஸ்ரீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப்பார்களோ தெரியவில்லை. குடி அரசு – செய்தி விளக்கம் – 21.12.1930

இந்தியாவின் ஜனத் தொகையும்                     கல்வி நிலையும்

இந்தியாவின் ஜனத் தொகையும்                     கல்வி நிலையும்

சென்ற பத்து வருஷத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஜன கணித கணக்குப் படி இந்திய ஜனத்தொகை சுமார் 32 கோடியாகும். இப்பொழுது அதாவது 1931ல் எடுத்த ஜனக்கணிதப்படி இந்திய ஜனத்தொகை சுமார் 351/4 கோடியாகும், இவர்களில் 100க்கு 11 பெயர்களே பட்டணங்களில் வசிக்கின்ற வர்கள். பாக்கி 89 பெயர்கள் கிராமவாசிகள். 100க்கு 67பேர்கள் விவசாய ஜீவிதக்காரர்கள். பாக்கி 100 க்கு 33 பேர்கள் கூலி தொழிலும் மற்றும் பல வகை உத்தியோகம் முதலிய ஜீவிதங்களிலும் வாழ்கின்றவர்கள். ஜன சங்கையும், அவர்களது வாழ்க்கையும், ஜீவனமும் இந்நிலையில் இருக்க இனி இவர்கள் கல்வி நிலையைப் பற்றி சற்று விசாரிப்போம். கல்வி விகிதம் மேல்கண்ட 1931ம் வருஷத்திய ஜன கணிதப்படி மொத்த ஜனத் தொகையில் பகுதி சமூகமாகிய ஆண் சமூகத்தில் 100க்கு 151/2 பேரும், மொத்த ஜனத்தொகையில் மற்றப்பகுதி பேர்களாகிய பெண் சமூகத்தில் 100க்கு 23/4 இரண்டே முக்கால் பேர்களுமே எழுதப் படிக்க கற்று இருக்கிறார்கள் என்று...

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் அர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப் படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத்தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே. இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம். கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு “நான்” பெண் வேஷம் எப்படிப் போடமுடியும். அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு. அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை...

மந்திரிகள் நிலை

மந்திரிகள் நிலை

– சித்திரபுத்திரன் இனி எந்த மந்திரியும் சுயமரியாதைக்காரர்கள் தயவால் தான் வாழ முடியும், ஏனெனில் அவர்களிடமிருந்த இரண்டு முக்கியமான அதிகாரங்கள் ஒழிந்து விட்டன. என்னவெனில், நாமினேஷன் அதிகாரம், 2. உத்தியோகம் கொடுக்கும் அதிகாரம் இந்த இரண்டு அதிகாரமும் சாதாரணமாக ஒரு………………. இருந்தால் கூட மக்களில் பணக்காரரும், பிரபுவும், ஜமீன்தாரர்களும், ராஜாக்களும், மிராஸ் தாரர்களும், வியாபாரிகளும், பண்ணைகளும், பிரசிடென்டுகளும், சேர்மென் களும், ஹ க்ஷ ஊ னு படித்த வாலிபர்களும், மந்திரிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு தாசானுதாசனாகக் கும்பிடு போட்டுக் கொண்டு அவர்களது மூக்கு சளியை யும், கண் பீழையையும் வர்ணித்து சித்திரக் கவி பாடி பஜனை செய்து கொண்டு வலம் வருவார்கள். ஆனால், இப்பொழுதோ மேற்கண்ட அதாவது நாமினேஷன் அதிகாரமும் உத்தியோகம் கொடுக்கும் அதிகாரமும் “ முண்டச்சிகள் கெர்ப்பம் கரைவது போல்” நாளுக்கு நாள் கரைந்து கொண்டே போய் கடைசி யாக உதிரக் கட்டியாக மாறி ஒன்றுமில்லாமல் போய் விட்டது. ஆதலால்...

காந்தியின் மற்றொரு ராஜி

காந்தியின் மற்றொரு ராஜி

தீண்டாமை ஒழிப்பா?  நிலைப்பா? அரசியலில் வேலையற்றதினால் பாமர மக்களுக்கு தம் மீது ஏற்பட்ட சலிப்பையும், வெறுப்பையும் தீர்த்துக் கொள்ளுவதற்காக சமூகத்துறையில் ஏதோ பெரியதொரு சீர்திருத்தம் செய்வதாக வெளிப்பட்டு, அவ்வெறுப்பை மாற்றிக் கொள்ளலாம் என்று கருதிய தோழர் காந்தியவர்கள் “பிள்ளையார் செய்யப் போய் குரங்காய் முடிந்தது” என்ற பழமொழிப்படி மக்களின் அதிகமான வெறுப்புக்கு ஆளாக நேரிட்டு, இப்போது அதிலிருந்தும் தப்பு வதற்கு ஒரு பெரிய குட்டிக் கரணம் போடவேண்டியதாய் ஏற்பட்டு விட்டது. அதென்னவெனில் தோழர் காந்தி, இர்வின் பிரபுவிடம் செய்து கொண்ட ராஜியின் பயனாய் இந்திய ஏழை மக்களின் மீது பணக்காரர்கள் ஆட்சியையும், முதலாளி ஆட்சியையும் இந்திய மகாராஜாக்கள் ஆட்சி யையும் எப்படி நிரந்தரமாய் இருக்கச் செய்து விட்டாரோ அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று கள்ளிக்கோட்டை சாமூதிரினிடமும், சாஸ்திரிகளிடமும் செய்து கொள்ளும் ராஜியானது தீண்டப்படாத மக்களுக்கு தீண்டாமை என்பது என்றும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடு செய்து தீர வேண்டிய நிலைமைக்கு வந்து...

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே சித்திரபுத்திரன்

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே சித்திரபுத்திரன்

இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது, எல்லா மதங்களும் செத்துப் போய் விட்டன. செத்தப் பிணங்களே சடங்கு ரூபமாகவும், வேஷ ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியை கொடுத்துக் கொண்டு வருகின்றன. உண்மையில் எந்த மதஸ்தனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை, நடந்து கொள்ள முடிவதுமில்லை. உதாரணமாக பௌத்தர்கள், கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமானவர்கள், இந்துக்கள் என்பவர்கள் சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனை காண முடிகின்றதா? முதலாவதாக வேஷத்திலும், சடங்கி லுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் 100க்கு ஒன்று வீதம் கூட நிர்ணயமாய் நடக்கவோ, ஆசைப் படவோ கூட முடிகின்றவர் காணப்படுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தன், தன் “மதத்தைக் காப்பாற்ற வேண்டும்” “ மதத்திற்கு ஆபத்து ”  என்று சொல்லிக் கொண்டு...

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

ஸ்தல ஸ்தாபனங்களில் நாமினேஷன் எடுபட்டதானது ஏழைகளுக்கு மிகவும் நன்மையானதாகும். கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாகி எலக்ஷன் காலாவதியும் குறைந்து அடிக்கடி எலக்ஷன் நடப்பதாயிருந்தால் இன்னமும் நல்லதென்றே ஏழைகள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் எலக்ஷன் வரும்போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற ஆசைதான். எலக்ஷனில் நிற்பவர்களும் ஓட்டுக் கேள்க்கும் போது ஓட்டர்களை கெஞ்சுவதும், பார்ப்பதும் தவிர மற்ற காலங்களில் ஓட்டர்களை கவனிப்ப தேயில்லை. நமது எலக்ஷன்களால் அனேக பெரிய குடும்பங்கள் கெட்டுப் போய் இன்சால்வெண்டு  கூட ஆகியிருக்கின்றன. அநேக குடும்பங்கள் கடனில் மூழ்கியிருக்கின்றன. எங்கள் ஜில்லாவில் ஒரு தாலூக்காவில் தாலூகா போர்ட் எலக்ஷனினாலேயே அத்தாலூக்கா பணக்காரர்களில் சுமார் 20, 30 குடும்பங்கள் வரையில் சுமார் 15 ஆயிரம் முதல் ஒண்ணரை லக்ஷ ரூபாய் வரையில் கடன்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். இந்தப் போட்டிக்காரர்களுக்குள்ளும் இந்த மாதிரி எலக்ஷனுக்கு செலவு செய்து பதவி பெற்றவர்களுக்குள்ளும் நூத்துக்கு 4, 5 பேர்களுக்குக் கூட ஸ்தல நிர்வாக விஷயம் சரியாய் தெரிந்து பொருப்புடன்...

சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை

சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை

திருத்தப்பட்டபடி நிறைவேறிய சுயமரியாதை இயக்க லக்ஷியம். 1.பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைகொண்ட ஆட்சி யிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய எல்லா கடன்களை ரத்து செய்வது. எல்லா தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கி களையும், கப்பல் படகு நீர் வழி போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களுக்கு உரிமையாக்குவது. எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது. குடியானவர்களும், தொழிலாளிகளும், லேவாதேவிக்காரர் களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் (கேன்சில்) செல்லுபடி யற்றதாக ஆக்கி விடுவது, அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை யெல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்கு கொண்டு வருவது. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த் தப்படுவது....

ஜாதி முறை

ஜாதி முறை

ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப் பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங்களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார்  இந்திய கவர்ன்மெண் டுக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்பதென்ன வென்றால், “ஜாதி வித்தியாசம் ஒழிபட வேண்டுமென்னும் விஷயத்தில் கவர்ன் மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை சென்சஸ் குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற்கில்லை. ஆன போதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள்கையை உண்மையாய் அடி...

மு. ஞ. மு. மேனனுக்கு ஜே!

மு. ஞ. மு. மேனனுக்கு ஜே!

பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம் உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத்  தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகியாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லாவற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு ஸ்தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர். அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுமுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத் தில் தமது சமுகமான நாயர் சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மா னித்து மற்றும் சில பாரிஸ்டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தி யாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால்  6 மாதம் காவலில்  வைக்கப்...

வேண்டுகோள்

வேண்டுகோள்

நமது மாகாணத்தில் ஆங்காங்குள்ள சுயமரியாதை சங்கத்தார்களும் மற்றும் அதன் லக்ஷியத்தையே லக்ஷியமாய்க் கொண்டு நடைபெற்று வரும் சங்கத்தார்களும் தங்கள் தங்கள் சங்கத்தின் ஊர் பேர், நிர்வாகஸ்தர்கள் பெயர், அங்கத்தினர் கள் எண்ணிக்கை முதலியவைகளைக் குறித்த விபரம் ஒன்று உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்.  ஏனெனில் துண்டு பிரசுரங்களையும், சிறு புத்தக வெளியீடுகளையும் அப்போதைக்கப்போது அனுப்பி வரவும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவும், சங்கங்களைக் குறித்து ஒரு சிறு புத்தகம் வெளியிடவும் வேண்டியிருப்பதால் அதன் விபரங்களை  உடனே அனுப்பக் கோருகின்றோம். உடனே சீக்கிரத்தில் புதியதாய் ஏற் படுத்தக் கூடியதையும் ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க விரும்புகின்றோம். குடி அரசு – வேண்டுகோள் – 01.01.1933

வேலைத்திட்டக் கூட்ட முடிவு

வேலைத்திட்டக் கூட்ட முடிவு

சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தபடி சுயமரியாதை இயக்க வேலைத்திட்டக் கூட்டம் ஈரோட்டில் தோழர் ஈ.வெ.ரா. வீட்டில் நடைபெற்ற விபரமும் அதன் முடிவும் சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. அக்கூட்டத்திற்கு எதிர்பார்த்ததற்கு மேலாகவே பல ஊர்களில் இருந்தும்  சுமார் இருனூறு  தோழர்கள் வரை விஜயம் செய்து இருந்தார்கள். பல தோழர்கள் தாங்கள் வர முடியாத அசௌகரியத்திற்கு வருந்தி தந்தியும் கடிதங்களும் எழுதி இருந்தார்கள். என்றாலும் கூட்டத்தின் முடிவை ஏற்று, தங்களால் கூடியவரை கலந்து உழைப்பதாகத் தெரிவித்துக் கொண்டார்கள். கூட்டமானது இரண்டு நாளில் நான்கு தடவை கூடி சுமார் 20 மணி நேரம் நடந்தது. பல விஷயங்களைப் பற்றியும் பலமான வாக்கு வாதங்களும் நடந்தது என்றாலும் முடிவில் ஏகமனதாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன, முதலாவது சுயமரியாதை இயக்கத்தின் லக்ஷியம் என்பது.  அதாவது சென்றவாரக் குடியரசில் “சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை” என்ற தலைப்பில் பிரசுரித்த விஷயமாகும். இது...

The Aims and ideals of the                 Self-Respect Party of South India.

The Aims and ideals of the                 Self-Respect Party of South India.

    The attainment of complete independence from the British and other forms of capitalist Governments. The cancellation of all national debts. Public ownership of Railways, Banks, Shipping and other transport services waters and lands etc., Public ownership without compensation of all agricultural lands, forests, and estates. Cancellation of all private debts and other obligations incurred by the workers and peasants. Changing of all Native States into one common Indian Federation under the rule of the workers and peasants of India. Improving the life of the workers and peasants of the land by securing for them, more than 7 hours...

யந்திரங்கள்

யந்திரங்கள்

“மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங்களை எல்லாம் “பிசாசு” என்று பிரசாரம்  செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க  வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்திரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும். ஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டு பிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையை குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச்சியும் இல்லாத இடங்களில் தான் யந்திரங்கள் அருமையாய் இருப்பதும் அலட்சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற...