Author: admin

ராஜதுரோக  குற்றம்:  பெரியாரின்  ஸ்டேட்மெண்ட்

ராஜதுரோக  குற்றம்:  பெரியாரின்  ஸ்டேட்மெண்ட்

  1934  ஆம்  ஆண்டு  ஜனவரியிலிருந்து  ஜூன்  வரையிலான  முதல்  தொகுதி  இதுவாகும்.  அடக்கு  முறைக்கு  உள்ளான  “குடி அரசு’  1933  ஆம்  ஆண்டு  நவம்பர்  மாதத்திலேயே  தற்காலிகமாக  நிறுத்தப்பட்டு  விட்டதால்,  இத்  தொகுப்பில்  இடம்  பெற்றுள்ள  தலையங்கங்கள்  பெரியாரின்  உரைகள்  அனைத்தும்  “புரட்சி’  வார  இதழில்  இடம்  பெற்றவையாகும்.  1933  டிசம்பர்  30  இல்  “இராஜ  துரோக’  குற்றத்தில்  பெரியார்  கைது  செய்யப்பட்டு,  சிறையிலிருந்த  காலகட்டமும்  இதுதான். சென்னை  மாகாணத்தில்  ஆட்சியிலிருந்த  நீதிக்கட்சி  ஆட்சியின்  பதவிக்  காலம்  இந்த  ஆண்டோடு  முடிவுக்கு  வர  இருந்தாலும்  அன்றைய  பல்வேறு  அரசியல்  நிகழ்வுகளினால்  அதன்  ஆயுட்காலம்  1937  வரை  நீடிக்கப்பட்டது.  அப்போது  பொப்பிலி  அரசர்  மாகாண  முதலமைச்சர். தன்  மீது  சுமத்தப்பட்ட  “இராஜ  துவேஷ’  வழக்கினையொட்டி,  கோவை  மாவட்ட  ஆட்சித்  தலைவர்  ஜி. டபிள்யூ  வெல்ஸ்,  அய்.சி.எஸ். முன்  பெரியார்  தாக்கல்  செய்த  “”ஸ்டேட்மென்ட்”  இந்தத்  தொகுதியில்தான்  இடம்  பெற்றுள்ளன.  ஒரு  கொள்கையைப் ...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

ஆக்கர் – திரிந்துகொண்டே துணி முதலிய விற்போன் காலகாஸ்பதம் – கலகத்துக்கான இடம் சதித்து – அழித்து, வஞ்சித்து சர்வ வியாபகம் – எங்கும் பரவி நிற்பது பக்ஷhதாபம் – இரக்கம் மடிசஞ்சி – புல் அல்லது கம்பளியாலான பை விருத்தாந்தம் – வரலாறு ஸ்மரணை – ஞாபகம்

வேலைத் திட்டக் கூட்டம்

வேலைத் திட்டக் கூட்டம்

  இந்த மாதம் 28, 29 தேதி புதன், வியாழக் கிழமைகளில், ஈரோட்டில், சுயமரியாதை இயக்கத்தின் 1933 வருஷத்திய வேலைத் திட்டத்தைப் பற்றி யோசிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக  சுய மரியாதை இயக்கத்து பிரமுகர்களும், தீவிர பிரசாரர்களும் அபிமானிகளும் ஆதரவளிப்பவர்களுமான தோழர் பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக் கிறது. சில முக்கிய பிரபலஸ்தர்களுக்கு அழைப்பு வந்து சேராமலோ, அல்லது அனுப்பத் தவறிப்போயோ இருந்தாலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம் லட்சியம் செய்யாமல் இயக்க அபிமானிகள் உள்பட யாவரும் விஜயம் செய்து ஒரு வேலைத் திட்டம் நிர்ணயிக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவரை சுயமரியாதை  இயக்கம் பெரிதும் பிரசார நிலை யிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும் அது தோன்றியது முதல் நாளுக்கு நாள் முற்போக்கான, கொள்கைகளையே படிப்படியாய் கைக் கொண்டு பிரசாரம் செய்து வந்திருப்பதின் மூலம் பெரிதும் தமிழ் நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சி உணர்ச்சியை உண்டாக்கி...

இங்கிலாந்தில் ஈ.வே.ராமசாமி பிரசங்கம்                தொழில் கட்சியின் போலித் தன்மை

இங்கிலாந்தில் ஈ.வே.ராமசாமி பிரசங்கம்                தொழில் கட்சியின் போலித் தன்மை

  தோழர்களே! இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டீஷ்  தொழில்க் கஷியை மிக மிகப் பரிக சிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். ஏனெனில் தொழில் கஷித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (ழுhயசறயவா) சேனைகள் நிராயுதபாணிகளான மக்களைச் சுடுவதற்கு மறுத்ததற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கக்ஷி கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15-வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகபடுத்துகிறேன். தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்ப தாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள். ஆனால் எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும், மற்ற தொழிலாளிகளும், சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித் ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல்...

புரட்சி என்றால் என்ன?  ஏன் பயப்பட வேண்டும்?

புரட்சி என்றால் என்ன?  ஏன் பயப்பட வேண்டும்?

  சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர்களே, இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப்பத்திரத்திற்கு நான் உண்மை யாகவே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்க ளுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன். தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பிலே புரட்சி வாழ்க! பொதுவுடமை ஓங்குக! என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன்னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதும் அவ்வார்த்தையில் அடங்கி யிருப்பதாய் நான் கருதவில்லை. ஆனால், அவ்வார்த்தையானது பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப் பட்டு விட்டது. எது போலென்றால் “பூச்சாண்டி” என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத் திருப்பதுப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால்...

தேசியத்தின் விளைவு

தேசியத்தின் விளைவு

  – தேசீயத்துரோகி 1914ம் வருஷம் முதல் 1918ம் வருஷம் வரை நடந்த உலக மகா யுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசீயம் – தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தில் சம்மந்தப்படும்படி செய்து. இந்த உலக மகாயுத்தத்தின்  பயனாய் கொல்லப் பட்டவர்கள் 9743914 கிட்டத் தட்ட ஒரு கோடிபேர் காயம் பட்டவர்கள் 2,09,27,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போனவர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான துகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இது நிற்க இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர் பார்த்து “தேசாபி மானத்தின் காரணமாக” என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங் கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து...

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

  முதலாளிகளுக்கு தங்களது வாழ்நாளைப் பற்றிய கவலை என்பதே கிடையாது. மற்றபடி அவர்களது கவலை எல்லாம் தங்களுக்கு வேண்டியது போக மீதி இருப்பதை எப்படி பத்திரப் படுத்துவது, எப்படி பெருக்குவது, எப்படி சுகபோகங்களைப் பெருக்கி அனுபவிப்பது என்பவை போன்றவை களைப் பொருத்ததேயாகும்.   இவர்கள் வேலை செய்து அன்றாடம் கூலி  பெற்று ஜீவிக்கும் ஜனங்களைப்போல் நாளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, வீட்டு வாட கைக்கு என்ன செய்வது, துணிக்கு என்ன செய்வது, குழந்தை பிறந்து விட்டதே அதற்கு வகை என்ன? அதற்கு பால் எங்கே? படிப்புக்குப் பணம் எங்கே? அதை எப்படி வளர்ப்பது? வியாதி வந்து விட்டதே! எப்படி தப்புவது? வைத்தியனுக்கு பணம் எங்கே? என்பது  போன்ற கவலைகளை அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். இந்த கவலைகள்  எல்லாம் தொழிலில் ஜீவிப்ப வர்களைத்தான் பற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருதேசம் என்பது இருப்பதற்கே காரணமும் ஆதாரமும் தொழில் செய்யும் மக்களால் தானே தவிர வேறில்லை....

ஈ.வெ.ராமசாமிக்கு முனிசிபல் உபசாரம்

ஈ.வெ.ராமசாமிக்கு முனிசிபல் உபசாரம்

  ஈரோடு முசினிபல் சேர்மென் அவர்களே, ஸ்கூல் போர்ட் காரியதரிசி அவர்களே!! மஹா  ஜன ஸ்கூல் ஹெட்மாஸ்டர்  அவர்களே, தாங்கள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்திற்காக நான் பெருமை கொள்ள வேண்டியவனும் நன்றி செலுத்தவேண்டியவனு மாவேன். ஆனால் இவைகளை எனக்கு நானே செய்து கொண்டது போல் கருதினேயானால் இதனால் ஒரு மகிழ்ச்சியும் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் எப்படி ஏற்படும். ஏனெனில் இந்த ஊரிலுள்ள மிகப் பழமையான ஸ்தாபனங்களான இம்மூன்றும் அவைவேறு நான்வேறு என்று பிரிப்பதற்கு முடியாத மாதிரியில் ஒன்றிலிருந்து  வருகின்ற ஸ்தாபனங்களல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள். அவற்றின் நிர்வாகிகளாகிய தாங்களும், மற்றும் தங்கள் சகாக் களும் சகோதரர்கள் போன்ற நெருங்கிய அன்பர்களாய் இருக்கிறவர்கள் அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் அளிக்கப்படும் மரியாதைகளை நான் எப்படி போற்றக் கூடும்? எப்படி அரியதென்று எண்ணக் கூடும்? என்றாலும் தாங்கள் எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தவும் என்னிடம் வேலை வாங்கவும் உங்களுக்கு...

ஏன் பயப்பட வேண்டும்?

ஏன் பயப்பட வேண்டும்?

  இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசா ரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரிய வருகின்றது. இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக் காரணமாய் இருந்து சோம்பேரிகளுக்கும், பேராசைக்காரர்களுக்கும், மறடர் களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆஸ்திகமே யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திகம் என்பதாக ஒன்று இல்லா திருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? குருமார்கள், முல்லாக்கள், பாதிரிமார்கள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், பண்டார சன்னதி கள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர்களுக்கு இடமேது? பிரபுக்கள், முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது? அன்றியும் இந்த ஆஸ்திகம் என்பது...

ஆதிதிராவிட வாலிபர்கள் வரவேற்பு

ஆதிதிராவிட வாலிபர்கள் வரவேற்பு

  தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும் சுமார் 10 வருஷத்திற்கு முந்திய வரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு நெருங்கிய சம்மந்தம் இருந்து வந்திருக்கிறது. ஆதலால் உள்ளுர்க்காரர்கள் நெருங்கிய சம்மந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது என்பது பரிகசிக்கத்தக்கது என்றே கருதுகிறேன். உங்கள் பத்திரத் தில் உள்ளுரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்ய வில்லை என்று சொல்லுகிறீர்கள். இவைகள் வாஸ்தவமாயிருக்கலாம். ஏனெ னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர்மனாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு விற்கு என்று அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டி ருக்கும் காரியத்தில்...

அய்ய நாடார் மறைந்தார்

அய்ய நாடார் மறைந்தார்

  தோழர் ஊ. பு. அ. சௌந்திர பாண்டியன் எம். எல். சி. அவர்களது அருமைத் தந்தையார் பட்டிவீரன்பட்டி, பழமையான பிரபல குடும்பஸ்தரும் பெரும் புகழ் பெற்றவரும் சமூகத்திற்கே நாயகமாய் இருந்து சமூக சமதர்மத் துக்கு வெகுகாலமாகவே போராடிக் கொண்டிருந்த வருமான தோழர் ஊ. பு. அய்ய நாடார் அவர்கள் காயலாவாய் இருந்து 18  தேதி இரவு 10 மணிக்கு காலம் சென்றார் என்ற சேதியைக் கேட்டு வருந்துகின்றோம். தோழர் அய்ய நாடார் அவர்கள் தென்னாட்டில் சமூக சீர்திருத்த முயற்சிகள் ஏற்படுவதற்கு முன்பும் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கும் முன்பு இருந்தே சகல சமூகமும் ஒன்றுபட வேண்டும் என்றும், உயர்வு தாழ்வு கூடாதென்றும் போராடி வந்ததுடன் மூடப் பழக்கவழக்கங்களையும், திதி திவசம் போன்ற பார்ப்பன சூழ்ச்சிகளையும் அறவே வெறுத்து பிரசாரம் செய்து வந்தவர் களுமாவர். அது மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கத்திற்கும் அது தோன்றிய காலமுதல் குடும்பத்துடன் சுற்றத்தாருடன் ஒத்துழைத்து அதற்கு அளவு கடந்த...

தோழர் எஸ். ராமநாதன்

தோழர் எஸ். ராமநாதன்

  தோழர் ராமநாதன் அவர்கள் ஐரோப்பாவிலேயே தங்கிக் கொண்ட விஷயத்தைப் பற்றி பல பத்திரிகைகள் பல விதமாக எழுதி பொது ஜனங் களுக்குள் ஒரு வித தப்பு அபிப்பிராயத்தை உண்டு பண்ண முயற்சிப்பதாய் தெரிய வருகின்றது. அது என்னவெனில் தோழர் ராமநாதன் கையில் ஒரு காசு கூட கொடுக்காமல் அவரை காயலாவுடன் பிரான்ஸ் ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு ஓடி வந்து விட்டதாக ஒரு கூற்று. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் நடுத் தெருவில் கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் விட்டு விட்டு வந்ததாக மற்றொரு கூற்று. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் தெருக்களில் ஒரு காசு கூட நான் கொடுக்காமல் விட்டு விட்டு வந்து விட்டதாகவும், ஆனால் தன்கையில் தன் தங்கை எவ்வளவோ கஷ்டப்பட்டு சேர்த்து வைத் திருந்ததை அனுப்பி இருப்பதாகவும், அது சிறு தொகை – செலவுக்கு போராதது போலவும், குறிப்பிட்டு இங்கு ஒரு கனவானை தனக்கு கடனாக 300...

ஹரிஜனங்கள்

ஹரிஜனங்கள்

  இந்திய தேசீயம் என்னும் சுயராஜ்ய முயற்சி தோல்வியடைந்தவுடன் இந்து மதப்பிரசாரம் தொடங்கப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருவது யாரும் அறியாததல்ல. உண்மையைச் சொல்லுமிடத்து இந்திய தேசீயமென்பதே இந்து மத ஆதிக்கமே தவிர வேறல்ல. இக்கருத்தை இதற்கு முன் பல தடவைகளில் விளக்கியிருக்கின்றோம். இந்திய தேசீயம் இந்து மத ஆதிக்கத்திற்கு  பாடுபடுகின்றது என்று நன்றாய் விளங்கியதால் தான் இந்து மதத்தின் காரணமாய் உயர் நிலையில் இருப்பவர்களான 100க்கு 90 வீதமுள்ள  பார்ப்பனர்கள் காப்பிக் கடை, வக்கீல், குமாஸ்தா உள்பட யாவரும் தேசீயப் பிரசாரத்தை நடத்துகிறார்கள். அதோடு மாத்திரமல்லாமல் மத உணர்ச்சியால் தான், மதத்தின் கற்பனையின் பயனாகத் தான் தாங்கள் செல்வவான்களாக இருக்க முடிகின்றது என்று கருதிய செல்வவான்கள்  எல்லோரும் இந்த தேசீய முயற்சிக்கு கோடிக் கணக்கான ரூபாய்களை உதவி வருகின்றார்கள். அதற்கு பிரதி உபகாரமாகவே தான் இந்திய தேசீயத்தில் முக்கிய கொள்கையாக, “மதத்தையும், மத ஆதாரங்களையும் காப்பாற்றப்படும்” என்றும், எல்லா மதங்களினுடைய ...

கோயில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும்

கோயில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும்

  இன்று “இந்திய தேசீய துறையில் கோயில் நுழைவு பிரசாரத்திற்கும் ஒற்றுமை பிரசாரத்திற்கும்” தான் அதிக விளம்பரங்கள் காணப்படுகின்றன ஏனெனில் தோழர் ராம்சே மாக்டானால்டு அவர்களின் வகுப்புப் பிரச்சினை தீர்ப்புக்காக வென்று தோழர் காந்தியவர்களால் செய்யப்பட்ட பட்டினியின் பிரசாரம் பொது ஜனங்களின் மனதை கவரும் படி செய்து விட்டது. மற்றொரு புறம் வைசிராய் அவர்களின் அடக்குமுறை பெருவாரியான தேசபக்தர்கள் என்பவர்களுக்கு தேசீய வேலை செய்ய இடமில்லாமல் செய்து விட்டதால் எப்படியாவது ஒரு புதியத் துறையைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆகவே இவ்விரண்டின் பயன்களால் கோவில் நுழைவும் ஒற்றுமை மகநாடும் உச்சஸ்தானம் பெற்று விட்டன. இக்காரியங்கள் இரண்டும் இன்று தேசீயத்திற்காகவே செய்யப் படுவதாய் கூறப்பட்டும், அந்தப்படி மக்களை நம்பும் படியும் செய்திருந்தா லும் நாம் அதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் தேசீயம் என்பதின் தத்துவம் எப்படி இருந்த போதிலும் இன்றையதினம் தேசீயத்திற்காக வென்று இவ்வளவு பாடுபடுகின்றவர்கள் தோழர்...

வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை

வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை

  – தேசியத் துரோகி வைதீகப் பார்ப்பனர்: என்ன சாஸ்திரிகளே! நீங்கள் கூட பறைப் பசங்களை கோயிலுக்குள் விடுவது சரியென்று சொல்லுகிறீரே! நீரே இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் பிறகு நம்ம சாஸ்திரங்கள் என்ன ஆவது? கோயில் பிரேவேச பார்ப்பனர்: ஆமாம்! என்ன பண்றது! இனி சாஸ்திரத்தையும் மதத்தையும் சொல்லி அந்தப் பசங்களின் சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. அந்தப் பசங்களும் நம்ம சாஸ்திரத்தில் என்ன சொல் லுகிறது என்று தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏதாவது கேட்கும் போது நாம் சாஸ்திரமென்றோ மதமென்றோ சொன்னால், உடனே அவர்கள் நீங்கள் அவைகளின் படி நடக்கிறீர்களா? என்று கேட்டு விடுகிறார்கள்? அதற்கு நம் மால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆகையால் அவாள் சொல்றதை ஆமோதித்தால் தான் நம்மையும் நாலு மனுஷாள் நல்லவன் என்று  சொல்லுவான்கள் போலிருக்கிறது? வை – பா: இதற்காகவா நாம் பயந்து விடுகிறது? பிறகு நம்ம ஜாதிக்கே ஆபத்து வந்து விடுமே. சாஸ்திரம்,...

இலங்கை உபன்யாசம்

இலங்கை உபன்யாசம்

  அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி றேன். அதோடு கூடவே இதன்மூலம் நீங்கள் எனது கொள்கைகளையும், தொண்டையும் ஆதரிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து  மகிழ்ச்சியடைகிறேன். மனித சமூகம் தோழர்களே! எனது அபிப்பிராயத்திற்கும், முயற்சிக்கும், குறிப்பிடத் தகுந்த அளவு எதிர்ப்பு இருக்கின்றது என்பதை நான் அறியாமலோ, அல்லது அறிந்தும் அவைகளை மறைக்க முயலவோ இல்லை. யார் எவ்வளவு எதிர்த்த போதிலும், யார் எவ்வளவுக்கு தூஷித்து விஷமப் பிரசாரம் செய்த போதிலும், யார் எவ்வளவு எனது அபிப்பிராயம் வெளியில் பரவாமல் இருக்கும் படியும் சூழ்ச்சிகள் செய்து மக்களின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிய போதிலும், உலகத்தில் எல்லா பக்கத்திலும் வேத புராண...

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

  தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டு மென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங் களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் – உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யா மல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வ வான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து  போராடி விடுதலை அடையத் தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார். (கடைசியாக ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால்...

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு

  இந்த சினிமாக் காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும்  ரம்மியமாயும் காணப்பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூட நம்பிக்கையும், அடிமைத் தன்மையையும் சோம்பேரிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை  வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ, படக் காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்ற தென்றும் சொன்னார். குறிப்பு : 21-10-1932 மாலை கொழும்பு கெயிட்டி திரையரங்கில் சில சிங்கள வாலிபர் களால் நடத்தப்பட்ட திரைப்படக் காட்சியைப் பார்த்தும் வரவேற்புப் பத்திரத்திற்கு பதில் அளித்தும் பேசியது. குடி அரசு – சொற்பொழிவு – 13.11.1932

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்

  கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசப்பக்திக் கிளர்ச்சிக்கும் ஜாதியக் கிளர்ச்சிக்கும் அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறு பட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங் களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர் களாலும், பேராசைக் காரர்களாலும் நடத்தப்படும் போட்டி “வியாபாரங்களே” இன்று தேசீயமாயும், ஜாதீயமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப் பிடித்து வெடிக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டு மென்றும், இப்போதையப் பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்ப தற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார். குறிப்பு :...

ஈ.வெ.ரா.  குறிப்பு

ஈ.வெ.ரா.  குறிப்பு

  தோழர்களே, எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11-11-32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப் புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண்டி ருக்கிறேன். என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார் செயில்ஸில் இந்தியாவுக்கு கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்கு சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2  அல்லது 3  மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார். அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரை கூட்டிக் கலந்து பேசி ஒரு வேலைத் திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித் திருக்கிறேன். சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங்களையும், காட்சிகளையும், அதனால் நான் கொண்ட கருத்துக்களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்....

மற்றொரு பட்டினி விரதம்

மற்றொரு பட்டினி விரதம்

தோழர் காந்தியவர்கள் 8-ந் தேதி சோமவாரம் முதல் 21-நாள் பட்டினி விரத மிருக்கப்போவதாக ஒருவிளம்பரம் வெளியிட்டிருக்கிறார்.  இது பத்திரிகைகளுக்கு ஒரு பெரிய விருந்தாகும்.  காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு பெரிய திருவிழாவாகும். தோழர் காந்திக்கு இந்தப்பட்டினி விரதம் புதியதல்ல.  அவருக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் அதிகமான கவலை இருக்கிறது என்பதை உலகத் திற்கு அறிவிக்க இந்த பட்டினி விரதம் என்பதைத்தான் தக்க ஆயுதமாகக் கொண்டிருக்கிறார். தோழர் காந்தி அவர்கள் ஒத்துழையாமை கிளர்ச்சி நடத்தியகாலத்தில் சுயராஜ்ஜியம் பெற இந்து முஸ்லீம் ஒற்றுமையை மிகவும் முக்கியமானது என்று தான் கருதி இருப்பதாக தெரிவிக்கவேண்டிய சந்தர்ப் பம் வந்த காலத்தில் இந்தமாதிரியாக ஒரு 21 நாள் பட்டினி விரதத்தை வெளிப் படுத்தினார்.  கடைசியாக அது என்ன பயன் விளைவித்தது என்பதும்.  இந்து–முஸ்லிம்கள் அந்தப் பட்டினியை எவ்வளவு தூரம் லட்சியம் செய்தார்கள் என்பதும் யாவருக்கும் வெட்ட வெளிபோல் தெரிந்த காரிய மேயாகும். பிறகு ஒரு தடவை தனது ஆஸ்ரமத்தில் ஏதோ...

ஆதி திராவிட அபிவிர்த்தி சங்கத்தார் வரவேற்பு

ஆதி திராவிட அபிவிர்த்தி சங்கத்தார் வரவேற்பு

  அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!! அக்கிராசனரவர்கள் எம்மைப்பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு அருகதையுடையவனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது ஒன்றே எமக்கு திருப்திகரமாகவிருக்கிறது. “தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி” என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்பவைகளின் உட்கருத்தை ஊன்றிக் கவனித்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேரும் வழி தானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவுள்ளவர்கள் இவைகளை ஊன்றிக் கவனித்து – அலசிப்பார்த்து – உரைகல்லில் வைத்து  உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும். மக்களது முன்னேற்றத்திற்கு...

கத்தோலிக்கப் பெரியார்கள்

கத்தோலிக்கப் பெரியார்கள்

  சுயமரியாதை இயக்கமும், குடி அரசும், “கடவுள்” என்று சொல்லப் படும் ஒன்றை ஒழிப்பதற்கு என்றோ, அல்லது அது இல்லை யென்று நிலை நாட்டுவதற்கென்றோ அல்லது அது உண்டு யென்று நிலை நாட்டுவதற் கென்றோ தோன்றியவைகள் அல்ல; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தின் மீதும் துவேஷம் கொண்டு அதை ஒழிப்பதற்குப் புறப்பட்டவையுமல்ல. ஆனால், ஜாதியின் பேராலோ, அல்லது மதத்தின் பேராலோ அல்லது சாஸ்திரங்களின் பேராலோ மற்ற எதன் பேராலோ ஜன சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் எவ்வித மான உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தை உண்டாக் கவே இவ்வியக்கம் ஏற்பட்டதாகும். மனிதர்களை மனிதர்கள் பலவகையான அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிப் பரம்பரையாகக் கொடுமைப் படுத்தி வரும் அக்கிரமத்தை – அது எந்த வகையான பரிசுத்தமான பெயரால் நடை பெற்று வந்தாலும் அதை ஒழிக்கவே இவ்வியக்கம் தோன்றியதாகும். இவ் வியக்கத்தின் உண்மைக் கருத்தை உணர்வோர் இதை ஒரு “ஜீவரக்ஷக அறிவியக்கம்” என்று ஒப்புக் கொள்ளாமல் போகமாட்டார்கள்....

ஈரோடு சுதேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா

ஈரோடு சுதேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இந்த ஆண்டு விழாவில் நானும் ஏதோ சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பதாக தலைவர் அழைக்கிறார். நேரம் அதிகமாய்விட்டது நானும் பேசவேண்டியிருக்குமென்று கருதவே இல்லை. அதோடு என்ன பேசுவது என்பதும் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனபோதிலும் ஒரு 10 நிமிஷம் “சுதேசி வர்த்தகம்” என்கின்ற தலைப்பைப் பற்றிப் பேசு கிறேன். ஏனெனில் இந்த ஆண்டுவிழா சுதேச வர்த்தக சங்க ஆண்டுவிழா வாதலால் அதையே தலைமையாய் வைத்து பேசுகிறேன். தோழர்களே சுதேசி வர்த்தகம் என்பதில் இரண்டு வார்த்தை இருக் கிறது. அதாவது ஒன்று சுதேசி, மற்றொன்று வர்த்தகம். சுதேசியம் இதில் முதலில் சுதேசியம் என்பதைப் பற்றி பேசுகிறேன். சுதேசியம் என்பது ஒரு அருத்தமற்றதும், சுயநலம் நிரப்பிய சூட்சியால் கற்பிக்கப்பட்டது மான வார்த்தை என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் தேசீயம் என்ப தையே புரட்டு என்று வெகு நாளாக நான் சொல்லி வந்திருப்பது உங்களுக்குத் தெரியும். தேசீயம் தேசாபிமானம் என்பவைகளைப் பற்றி பல...

லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு

லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்துசேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மகா நாட்டில் பலர் ஆவேசமாய் பேசிவிடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப் பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான்...

கடவுளைப் பற்றி நினைக்க முடியா

கடவுளைப் பற்றி நினைக்க முடியா

  தொழில் முயற்சி மேல் நாட்டினர் முற்போக்கு “நான் ஓர் நாஸ்திகனல்ல, தாராள எண்ண முடையோன். நான் ஒரு தேசீயவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரக்ஷh எண்ண முடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப் படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெரு வில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு, ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.” “காலமெல்லாம் பண்டய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப் படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடந்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும்? ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா?” வேலையில்லாத்...

 பரோடாவில் ஆலயப் பிரவேசம்

 பரோடாவில் ஆலயப் பிரவேசம்

  சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மை யாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றே யென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆnக்ஷபனையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங் கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்;. பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள்; தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக் கிரையாக்கினர்;   அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்bண்ணெயை ஊற்றிக் குடி தண்ணீ ருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்குச் சகிக்க முடியாத கொடுமைகளைச்...

கொழும்பில் ஈ. வெ. இராமசாமி

கொழும்பில் ஈ. வெ. இராமசாமி

  “நான் சாதாரண மனிதனில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும் என் அபிப்பிராயப்படி நடக்க வேண்டுமென்று திரு. சாரநாதன் கூறினார். அது என் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு நீங்களே சிந்தித்து நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி செய்யக்கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்கவேண்டும். விஷயங்களை நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும்.    100-க்கு 99பேர் ஒப்புக் கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்த்தே அறிய வேண்டும். உலகத் திலுள்ள சகல தேசங்களிலும் தலைவர்களின் கட்டளைப்படி நடந்தவர்கள் கஷ்டத் திலாழ்ந்து வருகிறார்கள். நடுநிலைமையிலிருந்து விஷயங்களை கிரகிக்க வேண்டும். என்னில் கடவுளிருக்கிறாரென்று நான் கூறவில்லை. நான் கூறும் விஷயங்களை ஆலோசித்துப் பாருங்கள். சகாயத்தைப் பெறுவதற்காகவோ, வேறு சுயநலம் காரணமாகவோ நான் இங்கு வந்திருக்கவில்லை. நாட்டிலே மக்களிடை பல நிலைமைகளைக் காண்கிறோம். ஒரு கூட்டத்தார் கஷ்டப்படுகிறார்கள், ஒரு கூட்டத்தார் இன்புற்று சுக போகங் களை அனுபவித்து வருகிறார்கள். உலகப் பரப்பில் இந்த வித்தியாச...

கொழும்பில் ஈ.வெ. இராமசாமி

கொழும்பில் ஈ.வெ. இராமசாமி

  தமிழ் நாட்டில் நான் செய்துள்ள சிறிய தொண்டை முன்னிட்டும் எமது மேல் நாட்டு பிராயணத்தை முன்னிட்டும் எம்மை உபசரிக்கும் நோக்கமாகச் செய்த வந்தனோபசாரங்களுக்கு நான் எனது உண்மையான நன்றியறிதலை செலுத்துகிறேன். நீங்கள் என்னை அதிகம் புகழ்ந்து விட்டீர்கள். இருந்தும் எனது கொள்கையை நீங்கள் பூரணமாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள் என்று இதனால் எனக்குத் தோன்றுகிறது. இன்று உலகத்தில் விடுதலையின் பேரால், சுதந்திரத்தின்பேரால் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. மதாபிமானம், தேசாபிமானம், கடவுளபிமானம் என்ற பேரால் எத்தனை பேர் வயிறு பிழைக்கின்றனர். லக்ஷக் கணக்கான நமது சகோதரர், உடன் பிறந்தார், ஊணுடையின்றிக் கஷ்டப்பட்டுச் சாகின்ற இந்நாட்களில் அவர்களுடைய இன்னல்களை நீக்க வழி தேடுவதை விட்டுக் கடவுளைப் பற்றி பேசி என்ன பயன்? நாம் ஆலோசனைக்காரார். அதுவே நமது கொள்கை; அதுவே சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை. நமக்குத் தோன்றுகிற எண்ணங்களை ஆலோசித்து அலசிப் பார்க்க வேண்டும். அதற்குப் பயப்படக் கூடாது. எனக்குக் கடவுளைப் பற்றியே...

கோயில் பிரவேச மசோதா

கோயில் பிரவேச மசோதா

  அடுத்து வரப்போகும் சென்னைச் சட்ட சபைக் கூட்டத்தில், மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆலயப் பிரவேச மசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம். டாக்டர் சுப்பராயன் அவர்கள், சமூக சீர்திருத்த விஷயத்தில் உண்மையான பற்றும் ஆர்வமும், செய்கையளவில் நடத்திக் காட்டும் குணமும் உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இப்பொழுது அவர் கொண்டு வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டு, அவர் வெறும் புகழுக்காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச் செய்ய முன் வந்திருக் கிறார் என்று யாரும் கூற முடியாது. அவர் எல்லாச் சமூகத்தின்பாலும் கொண்டிருக்கும், உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோயில்களில் சமவுரிமை வழங்க வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத்துடனேயே இம்மசோதாவைக் கொண்டு வரப்போகிறார் என்று ஐயமறக் கூறுவோம். ஆனால் இம்மசோதா சென்னைச் சட்டசபையில் சட்டமாக நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைப் பற்றி இப்பொழுது நாம் ஒன்றும் துணிந்து கூறுவதற்கில்லை. ஆனால் அரசாங்கத்தார்,...

தீபாவளிக் கொள்ளை நோய்

தீபாவளிக் கொள்ளை நோய்

  ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய  உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயினால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத்தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும் கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக் கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகை யேயாகும். ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே  நாம் அக்கொள்ளை நோயின் கொடுமைகளை எடுத்துக் காட்ட முன்வந்தோம். இந்தியர்கள் அவர்களுக்குள்ளும், இந்துக்கள் என்பவர்கள் மற்ற சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத்திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம், இந்து மதமும்,  அதன் மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகைகளுமே என்பதை நமது இயக்கம் நன்றாய் விளக்கிக் காட்டியிருக்கின்றது. இந்து மதமும்...

ஜஸ்டிஸ் கட்சி கொலை செய்யப்படுமா?

ஜஸ்டிஸ் கட்சி கொலை செய்யப்படுமா?

  சென்ற வாரத்தில் தஞ்சையில் கூடிய பன்னிரண்டாவது பார்ப்பன ரல்லாதார் மகாநாட்டில் நடந்த மானக்கேடானக் காரியங்களைக் கேட்ட எந்த பார்ப்பனரல்லாதாரும், பார்த்த எந்தப் பார்ப்பனரல்லாதாரும்,  வெட்கமடைந்து தலையைத் தொங்க விட்டுக் கொள்ளாமலிருக்க முடியாது. தேசத்தின் நன்மைக்காக உழைக்கின்றோம் என்றும், சமூகத்தின் நன்மைக்காக உழைக் கின்றோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும், பணக்காரக் கூட்டத்தாரும் ஆகிய பார்ப்பனரல்லாதார்களே சாதாரண முறட்டு, அறிவற்ற காலிகளைப்போல் ஒருவரோடு ஒருவர் மோசமாக நடந்து கொண்ட நடத்தையை நினைக்கும் போது உண்மை பார்ப்பனரல்லாதார் இரத்தம் கொதிக்காமலிராது. பார்ப்பனரல்லாதார் கட்சியை எப்படியேனும் குழி தோண்டி புதைத்துவிட வேண்டுமென்று வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த  பார்ப்பனர்களும், பார்ப்பனக்  கூலிகளும் சந்தோசப் பட்டுத் தலைகால் தெரியாமல் கூத்தாடவும், பார்ப்பனரல்லாதாரின் சமூக நலத்தைப் போதிய அளவு கவனிக்கா விட்டாலும் ஏதோ பார்ப்பனரல்லா தாரின் நன்மைக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டாவது ஒரு கட்சி இருக்கிறதே என்று  நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களின் நெஞ்சந் துடிக்கவும் ஆன காரியங்கள்...

மண்ணுருண்டை மாளவியாக்கள்

மண்ணுருண்டை மாளவியாக்கள்

  திரு. காந்தியார் அவர்கள் தீண்டாதார்க்கு ஏற்பட்டிருந்த தனித் தொகுதியை ஒழிக்கும் பொருட்டுச் சில தினங்களுக்கு முன் உண்ணா விரதமிருக்கத் தொடங்கியதும், அதன் பின் தலைவர்கள் என்பவர்கள் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டியதும், அதில் தீண்டாதாரின் தனித் தொகுதி முறை பலிகொடுக்கப்பட்டதும் பழய சங்கதிகளாகி விட்டனவென்று கூற முடியாது. இவ்வாறு தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டி ஒரு சமரச முடிவை யுண்டாக்கப் பாடுபட்டவர்களில் திரு. பண்டித மாளவியாவே முதன்மை யானவர் என்று எங்கும் புகழப்பட்டு வருகிறது. தனித்தொகுதியை ஒழிக்க விரதமிருந்த திரு. காந்தியாரோ தனித் தொகுதியை ஒழிப்பது மட்டும் போதாது, தாழ்த்தப் பட்டார்க்கு “ஜாதி இந்துக்களுக்கு இருந்து வரும் சகல உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும்” என்று கூறினார். ஆகையால் தீண்டாதார் தலைவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்துப் பொதுத் தொகுதித் தேர்தல் முறையை ஒப்புக் கொள்ளும்படி செய்வதற்காக நாடெங்கு முள்ள காங்கிரஸ் வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் தீண்டாமையை விலக்கு வதற்கு முயற்சி செய்வதாகப் பாவனைகள் செய்தனர்....

ஒன்பதாவதாண்டு

ஒன்பதாவதாண்டு

நமது “குடி அரசு”க்கு எட்டாண்டு நிறைந்து ஒன்பதாமாண்டு துவக்கமாகின்றது என்னும் விஷயத்தை அறியும் வாசகர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க மாட்டார்கள்.                         குடி அரசு தோன்றும் போது இன்னாட்டில் எல்லாத் துறையிலும் செல்வாக்குப் பெற்று, சகல விதத்தும் ஆதிக்கம் அடைந்து, மக்களை வஞ்சித்து அழுத்தி வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு விரோதமாகவே காணப்பட்டது. அதன் பயனாய் குடி அரசு எங்கு பார்த்தாலும் “பார்ப்பனத் துவேஷமயமாக”வே விளங்கி வகுப்புத் துவேஷியாயிற்று.  இதன் பயனாய் சர்வ வல்லமையுடைய பார்ப்பன சமூகத்தினுடையவும், பார்ப்பன பத்திரிகை களினுடையவும், பார்ப்பன அதிகாரிகளினுடையவும் சர்வ சக்தி கொண்ட எதிர்ப்புகளை சமாளித்து முதல் ஆண்டைக்கழித்து இரண்டாம் ஆண்டில் பிரவேசித்தது. இரண்டாமாண்டில் அப்பார்ப்பனர்களின் “வஜ்ஜிராயுத” மாய் இருந்த “காங்கிரசிற்கு விரோதமாய்” த் தோன்றி அதனோடு வாதாட வேண்டியதாகி குடி அரசு தேசத்துரோகியாக விளங்கி தேசிய வாதிகளின் எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் ஈடு கொடுத்து வந்தது. இந்த சமயத்தில் குடி அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வேலை...

உண்ணாவிரதப் பலன்

உண்ணாவிரதப் பலன்

  திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததன் பலனாகத் தாழ்த்தப் பட்டோர்க்கு ஏற்பட்டிருந்த தனித்தொகுதித் தேர்தல் முறை ரத்து செய்யப் பட்டுவிட்டது. புனாவில் இந்துத் தலைவர்கள் என்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் என்பவர்களும் கூடிச் செய்து கொண்ட சமரச முடிவை பிரிட்டிஷ் பிரதம மந்திரியவர்கள் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொண்டு விட்டார். திரு. காந்தியும் தனது உண்ணா விரதத்தை முடித்து விட்டார். திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததனாலும், தலைவர்கள் என்பவர்கள் சமரச மகாநாடு கூடி ஒப்பந்தஞ் செய்து கொண்டதனாலும், அவ் வொப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரித்துக் கொண்டு, தாழ்த்தப் பட்டவர்களின் தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்ததனாலும் உண்டான பலன் என்ன என்பதை மாத்திரம் பார்ப்போம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர்க்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகாணச் சட்டசபை களுக்கும் ஏற்பட்டிருந்த மொத்த ஸ்தானங்கள் எழுபத்தொன்று. இந்த எழுபத் தொன்று ஸ்தானங்களுக்கும் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அனை வரும், அந்த வகுப்பினரின் ஓட்டுக்களாலேயே தெரிந்தெடுக்கப்...

தீண்டாதார்க்கு விமோசனம் உண்டா?

தீண்டாதார்க்கு விமோசனம் உண்டா?

    திரு. காந்தியவர்கள் தற்பொழுது உண்ணாவிரதம் ஆரம்பித் திருப் பதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. நமது நாட்டு அரசியல்வாதி களும், சீர்திருத்த வாதிகளும், வருணாச்சிரம தரும வாதிகளும் கூட திரு. காந்தியவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பத்திரிகைகளிலும் அறிக்கைகள் வெளியிடுகின்றனர். பொதுக் கூட்டங் களிலும் பேசி வருகின்றனர். நாமும் அவருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டுமென்பதை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால், திரு. காந்தியவர்கள் எதற்காக உண்ணா விரதமிருக்கிறார்? அவர் உண்ணா விரதமிருப்பதன் மூலம், அவர் கருதுகின்ற காரியமோ, அல்லது ஏழை மக்களுக்கு விடுதலையோ பூரணமாக ஏற்பட்டுவிடுமா? என்பதைப் பற்றி நம்மைப் பொறுத்தவரை ஒன்றும் ஏற்பட முடியாது என்றுதான் கூறுவோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தார்க்குத் தேர்தலில் தனித் தொகுதி அளித்திருப்பதால், இந்து மதம் பிளவுபட்டு விட்டதென்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் இந்து மதத்திலிருந்து பிரிந்து விட நேர்ந்து விடுமென்றும், ஆகையால், இந்து மதம் காப்பாற்றப்படவும், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமூகத்திலிருந்து...

ரஷ்ய நீதி

ரஷ்ய நீதி

ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களா லும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல். ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது. ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம் பெற்று...

காந்தியின் வைதீக வெறி

காந்தியின் வைதீக வெறி

  இந்துக்கள் என்பவர்களும், திரு. காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்க்கு அரசியல் தனித் தொகுதியை ஏற்படுத்துவதை ஆதி முதல் மறுத்து வருவ தற்குக் கார™ம், அவர்களை இதுவரையிலும் இருந்தது போலவே எப் பொழுதும் இந்துக்களுக்கு அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்னும்  எண்ணமேயாகும் என்று நாம் கூறி வருகிறோம். இவ்வாறு நாம் சொல்லி வந்ததின் உண்மை, இப்பொழுது திரு. காந்திக்கும், இந்தியா மந்திரிக்கும், முதல் மந்திரிக்கும் நடந்த கடிதப் போக்கு வரத்துகளின் மூலம் நன்றாக விளங்கிவிட்டது. தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்துவிட்டால் அவர்களுக் காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், வேறு எந்த உயர்ந்த வகுப்பி னருடைய தயவையும் எதிர்பாராமல் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப் படலாம். சட்டசபையிலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, உண்மையாகவும் தைரியமாகவும் போராடலாம். அன்றியும், இந்துக்களினின்றும் தீண்டாதாரைத் தனியாகப் பிரிப்பதனால், அவர்களுக்கு மற்றொரு பெருஞ் சாதகமும் உண்டு. அதாவது, தற்போது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்திருக்கும் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி பார்த்தால், ஒவ்வொரு சட்டசபைகளிலும் உள்ள,...

“தொழிலாளர் நிலைமை”

“தொழிலாளர் நிலைமை”

நமது கவனத்தை அரசாங்கத்தாரும் வேறு ஏதாவது ஒரு வழியைக் காட்டித் திருப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும், அன்புக்கும் விரோதமில்லாமலே தான் அரசாங்கத்தார் நடந்து கொள்ளுவார்கள். அப்படிக்கில்லா விட்டால் அரசனுக்கும், அவனு டைய சிப்பந்திகளுக்கும் உலை வைக்க உடனே முதலாளி வர்க்கம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் தொழிலாளிகளுக்கு தீங்கு இழைத்துக் கொண்டிருப்பது முதலாளி வர்க்கம் தான் என்பதை மக்கள் அறியமுடியாமல் பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு நம்மை சர்க்கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள கஷ்டத்திற்கு காரணம் சர்க்கார் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்களே தவிர முதலாளிகள் என்று நீங்கள் கருதுவதில்லை. சர்க்காரால் தொழிலாளிக்கு அதிக நஷ்டமில்லை. இத்தேசத்திற்கு வெளிநாட்டு சர்க்கார் வருமுன் தொழிலாளிகள் எல்லாரும் எந்தவிதமான தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களது சோற்றுக்கு மட்டும் கணக்குப் பார்த்து கூலி கொடுக்கப்பட்டு வந்தது. மாதம் மாதம் சாப்பாடு மட்டும்தான் போட்டு தினம்...

அரசியல்வாதிகளுக்குப் புத்தி வருமா?

அரசியல்வாதிகளுக்குப் புத்தி வருமா?

  சென்ற 5-9-32 ந்தேதி இந்தியா சட்டசபையில் மேன்மைதங்கிய வைசிராய் அவர்கள் செய்த பிரசங்கம் தற்கால நிலைமையில் மிகவும் கவனிக் கத் தக்க தொன்றாகும். ‘காங்கிரசானது பயமுறுத்தலினால் சுயராஜ்யம் வாங்கி விடலாம் என்னும் நோக்கத்துடன் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் செய்யும் போராட்டமானது பலாத்காரமில்லாதது, சாத்வீகமானது என்ற பெயருள்ளதாயிருப்பினும், உண்மையில் தேசத்தில், கலகத்தையும், அமைதியின்மையையும், பலாத்கார உணர்ச்சியையும் உண்டாக்குவதற்கு காங்கிரசின் கிளர்ச்சியே காரணமாக இருக்கின்றது. ஆகையால், எந்த வகை யிலும், காங்கிரசின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வேண்டிய முயற்சியை அரசாங்கம் செய்யாமலிருக்க முடியாது’ என்னும் அபிப்பிராயம் வைசி ராயின் பிரசங்கத்தில் காணக்கிடக்கின்றது. இந்த அபிப்பிராயம் தவறான தென்று நடுநிலையும், உண்மையும், பகுத்தறிவும் உள்ள எவரும் கூறமுடியாது என்றே நாம் கூறுவோம். இதற்கு உதாரணமாகச் சென்ற பம்பாய் கலகத் தையும், வங்காளத்தில் நடைபெற்று வரும் புரட்சி இயக்கத்தையும் கூறலாம்.  இதையும் வைசிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். பொதுவாகவே, காங்கிரசின்...

போலீஸ் யோக்கியதை

போலீஸ் யோக்கியதை

உப்பு சத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரமமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்துகொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேழ்ப்பாடும் கிடையாது என்பதாகும். போலீசு இலாக் காத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக்கும் சட்டசபை அங்கத்தினர்கள் கேட்ட கேள்விகளாலும், தேசிய பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றி “சாபம்” கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணையமும், யோக்கியப் பொருப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய்விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது. இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாக்காவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரியவருகின்றது. இது அந்த இலாக்காவுக்கு ஒரு கௌரவம்தான் என்றாலும் நம்மைப் பொருத்தவரை இனி நம்மால் போலீசு இலாக்காவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாக்காவினால் நாமாவது திருத்துப்பாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில்...

கார்ப்பொரேஷனும் பிராமணீய பக்தியும்

கார்ப்பொரேஷனும் பிராமணீய பக்தியும்

  சென்னைக் கார்ப்பொரேஷனில் சென்ற 7-9-32 தேதியில் நடந்த கூட்டத்தில் சென்னைக்கு விஜயஞ் செய்யும் கும்பகோணம் சங்கராச்சாரி யாருக்கு ஒரு உபசாரப் பத்திரம் வாசித்தளிப்பதாகத் தீர்மானித்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். கார்ப்பொரேஷன் சபையானது நகரத்தின் சுகாதார நிலையைக் காப்பாற்றுவதற்கும், நகர ஜனங்களின் nக்ஷமத்தைக் கவனிப்பதற்கும் ஏற்பட்டதென்பதை எவரும் அறிவார்கள். இவைகளின் பொருட்டு நகர மக்களிடம் வரி வசூலித்து அப்பணத்தை நகர மக்களின் nக்ஷமத்திற்காகச் செலவு செய்து வருகிறது. ஒரு நகரத்திற்கு, தேச நன்மைக்காக அதாவது அரசியல் அபிவிருத்திக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபடக் கூடிய தலைவர்கள் விஜயஞ் செய்வார்களாயின், அவர்களுக்கு அந்த நகர சபை உபசாரஞ் செய்வது எங்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிச் செய்வது அந்தத் தலைவர்களை ஊக்கப் படுத்துவதற்கும் அவர்களுடைய உழைப்பைப் பாராட்டுவதற்கும் அறிகுறியாகும். ஜனங்களின் நன்மைக்காக உழைக்கும் உண்மையான அரசியல் வாதிகளுக்கும் சமுதாய சீர்திருத்த வாதிகளுக்கும் நகர மக்கள் சிறிது உபசாரத்திற்காகச் செலவு செய்வது எந்த வகையிலும் தவறாகாது. ஆனால்,...

“மதத்திற்கு வக்காலத்து”

“மதத்திற்கு வக்காலத்து”

  நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட்டத்தார் அனைவரும் நமது இயக்கத்தை மறைமுக மாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத் தின் ஒரு உரோமங்கூட அசைக்கப் படவில்லை என்பதை நாம் பல தடவை களில் எடுத்துக்காட்டியிருக்கின்றோம்.  இதற்கு மாறாக இவ்வியக்கம் ஒவ் வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிற தென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும். மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன...

தஞ்சை ஜில்லா மகாநாடு

தஞ்சை ஜில்லா மகாநாடு

இம்மாதம் 8, 9 தேதிகளில் தஞ்சை ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு நாகபட்டணத்தில் சிறப்பாக நடைபெற்ற விபரம் மற்றொரு பக்கம் காணலாம். அதை ஊன்றிப் பார்ப்பவர்களுக்கும், நேரில் மகாநாட்டு நடவடிக் கைகளைக் கவனித்தவர்களுக்கும், தமிழ் நாட்டில் எந்த இயக்கத்தை எப்படிப் பட்ட கொள்கையை மக்கள் ஆண், பெண், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முதலியவர்கள் விரும்புகின்றார்கள்? எதில் ஊக்கமாய் இருக்கின்றார்கள்? என்பது விளங்கும். மகாநாடு நாகையில் நடைபெற வொட்டாமல் செய்ய வெளியிலிருந்து செய்யப்பட்ட சில சூட்சிகள் மகாநாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மேல் கூட்டம் சேர்த்துக் கொடுத்து அதி விமரிசையாய் அதாவது ஒரு மாகாண மகாநாடு போல் நடத்திக் கொடுத்து விட்டது. ஆகையால் அத்திருக் கூட்டத் தாருக்கு மகாநாடு நடத்தியவர்களின் நன்றியறிதல் உரியதாக வேண்டும் என்பதில் குற்றம் இல்லை. மகாநாடு நடக்க 2, 3 நாட்கள் இருக்கும்போது சுமார் 150 கையெழுத்துக் கொண்ட விண்ணப்பம் ஒன்று அவ்வூர் கலெக்டருக்குச் சமர்ப்பித்து மகாநாட்டை...

குற்றஞ்சொல்ல வாய் உண்டா?

குற்றஞ்சொல்ல வாய் உண்டா?

  (வகுப்புப் பிரச்சினை முடிவு) இனிவரப்போகும் மாகாணசுயாட்சி அமைப்பில், ஒவ்வொரு மாகாண சட்டசபைகளிலும், ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனியே எத்தனை ஸ்தானங்கள் இருக்கவேண்டும் என்னும் வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான முடிவு சென்ற 16-8-32ல் அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்டு விட்டது. இந்த வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக பல சமூகங்களும் ஒப்புக் கொள்ளும் படியான ஒரு முடிவு காண திரு. காந்தியுள்பட வட்டமேஜை மாநாட்டுப் பிரதிநிதிகள் இந்தியாவிலும் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில் கப்பலிலும் இங்கிலாந்திலும் எவ்வளவோ முயன்றும் முடியாமற்போய் விட்டது. இவர் களால் முடியாமல் போன காரணத்தாலேயே இப்பொழுது பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் தீர்மானிக்கப்பட்ட முடிவை இந்திய அரசாங்கத்தார் வெளியிட் டிருக்கின்றார்கள். இப்பொழுது அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஜரோப்பியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலியவர்களுக்குத் தனித் தொகுதி கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையளிக்கப் பட்டிருக்கிறது. மற்றும் பெண்கள், தொழிலாளர்கள், நிலச்சுவான்தாரர்கள், வியாபாரிகள், சர்வ கலாசாலைகள் முதலிய பலருக்கும் ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன....

ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா ?

ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா ?

வைத்திய உதவி இன்றைய நிலையில் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள்பட்ட ஜனங்க ளுக்கு பொது வைத்திய உதவி பொருப்புள்ளதாகவும், போதுமானதாகவும் இல்லை என்பதைக் குறிக்க வருந்தவேண்டியிருக்கின்றது. ஈரோட்டிலிருந்த முனிசிபல் ஆஸ்பத்திரியானது சுமார் 12-வருஷங்களுக்கு முன் சர்க்கார் ஆஸ்பத்திரியாக மாறின போது முனிசிபல் நிர்வாகத்தைவிட சர்க்கார் நிர்வாகம் சற்று மேலாகவே இருக்குமென்று ஜனங்கள் கருதினார்கள். அந்தப் படியே சில காலம் நடந்தும் வந்தது. ஆனால் நாளாக நாளாக அந்த ஆஸ்பத்திரிக்கு பொது ஜனங் களுடைய தயவைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கின்ற மாதிரி யிலேயே அதன் மேலதிகாரிகளால் நடைபெற்று வருவதாய் காணப் படுகிறது. இதற்கு முக்கியகாரணம் சர்க்கார் நிர்வாகமேயாகும். ஈரோடு ஆஸ்பத் திரி டவுன் ஜனங்கள் 35000 பேருக்கும், சமீப சுற்றுப் பக்கத்து ஜனங் கள் சுமார் 20000 பேருக்குமாக 50000 பேருக்கு மேல் பயன்பட வேண்டிய தாய் இருந்து இவர்களில் பெரிதும் ஏழைமக்களுக்கு ஆகவே இந்த ஆஸ்பித் திரி இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில்...

நம்பிக்கையில்லைத் தீர்மானம்

நம்பிக்கையில்லைத் தீர்மானம்

  செல்வாக்கோ, வன்மையோ பெற்ற எந்த கட்சியே யாயினும் எந்த இயக்கமே யாயினும் அதிலுள்ள அங்கத்தினருள் அபிப்பிராய பேதங்கள் எழுவதும், இருப்பதும் சர்வ சாதாரணம். உண்மையுணர்ந்து அத்தகைய அபிப்பிராய பேதங்கள் பரிகரிக்கப்பட்டால் பின்னர் ஆக்க வேலைகள் தீவிரமாய் நடைபெறுவதும் சரித்திர சம்மதமான யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும். உலகெங்கும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை கேட்டும், கண்டும் வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் கட்சியின் முன்னேற்றத்தையும் பலத்தையும் குறிக்கிறதேயன்றி வேறில்லை. பார்ப்பன ரல்லாதார் கட்சி ஆதிக்கத்திலிருப்பதும் பார்ப்பனரல்லாத மந்திரிசபை அதிகாரத்திலிருப்பதும் இக்கட்சியை ஒழிக்க அதிகாரத்தைக் குலைக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சி களும் விஷமங்களும் எண்ணிறந்தன. இதன் உண்மையறியாது நம் மக்கள் இன்னும் ஏமாந்தே வருகின்றனர். சில தினங்களுக்குமன் சென்னை அரசாங்க மந்திரி கனம் முனுசாமி நாயுடு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த விஷயமே தக்க சான்றாகும். அதற் காகக் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க நிர்வாகக் கமிட்டியின் கூட்ட நடவடிக்கைகளை...

இதற்கு என்ன சொல்லுகிறார்கள்?

இதற்கு என்ன சொல்லுகிறார்கள்?

மக்களுக்குள் எந்த வகையினாலும் வித்தியாசங்கள் என்பன சிறிதும் இல்லை. ஆனால் தற்போது காணப்படும் வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒரு கூட்டத்தாரை உயர்வாகவும், மற்றொருக் கூட்டத்தாரைத் தாழ்வாகவும், மற்றுஞ்சில கூட்டத்தாரை நடுத்தரமானவர்களாகவும், மற்றும் பலரைத் தாழ்த்தப்பட்டவர்களாகவும், மற்றும் பலரைத் தீண்டாதார்களாகவும் பிரித்து பிரித்து வேறு வேறாக வைத்திருப்பது சுயநலங் கொண்ட மக்களால் செய்யப்பட்ட ஏமாற்றேயன்றி வேறல்ல. உண்மையில் நோக்கும் போது எல்லா மனிதர்களும் சமமான நிலையையும், இன்பத்தையும், வாழ்வையும் பெறுவதற்குத் தகுதியுடையவர்களே யாவார்கள். ஆகையால் மக்களுக்குள் உள்ள உயர்வு தாழ்வு வேற்றுமைகளை ஒழித்த எல்லோரையும் ஒன்று படுத்திச் சுதந்திரமும், சுகமும் உடையவர்களாய் வாழச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தற்கால அறிஞர்கள் மனத்தில் தோன்றி அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்றன. மக்களுக்குள் அளவிலடங்காத வேற்றுமைகளும் இவ்வேற்றுமை காரணமாக ஒருவர் மேல் ஒருவர் வீண் வெறுப்புக் கொள்ளுதலும், இவ் வெறுப்புக் காரணமாக கொடுமைகளைச் செய்வதுமாகிய காரியங்கள் மற்றய நாடுகளைக் காட்டிலும், நமது நாட்டில் நமது...

சம்பளக்கொள்ளை

சம்பளக்கொள்ளை

இந்தியாவுக்கு இன்று உள்ள முதல் கொடுமையும், கடைசிக் கொடு மையும், சம்பளக்கொள்ளை கொடுமையே யாகும். இந்தியாவைப் போல் உள்ள ஏழை நாடு உலகில் எங்குமே இல்லை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் இந்தியாவைப் போல சம்பளக் கொள்ளை உள்ள நாடு உலகில் எங்குமே இல்லை. இதைப் பல தடவைகளில் நாம் எடுத்துக்காட்டி இருக்கிறோம். இந்திய அரசியல் கிளர்ச்சியிலும் இதைப் பற்றி அடிக்கடி பேசப்படுகின்றது. என்றாலும் இதற்கு அஸ்திவாரமான குற்றத்தை அரசாங்கத்தின் மீது திருப்பப்பட்டு விடுகின்றபடியால் பாமர ஜனங்கள் உண்மையை உணர்ந்து திருத்துப்பாடு செய்வதற்கு மார்க்கமில் லாமல் போய்விடுகின்றது. சம்பளக் கொள்ளை என்றால் ஒரு சாதாரணக் கொள்ளை என்று யாரும் கருதிவிடக்கூடாது. அது சம்மந்தமாக ஒரு சிறு புள்ளி விபரத்தை கீழே குறிப்பிடுகின்றோம். அது பழைய குறிப்புகளேயானாலும் இது சமயம் இன்றைய இந்தியாவின் நிலைக்கும் அரசியல் நிலைக்கும் சற்று கவனித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். என்னவெனில் பிரிட்டிஷின் முழு ஆட்சிக்கும் பொறுப்பேற்று தலைமை...

“தொழிலாளர் நிலைமை”

“தொழிலாளர் நிலைமை”

இவைகளை ஒழிப்பதற்கு இம்மாதிரி கண்டிப்பாக பேசுவதன் மூலம் நாம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டியது தான். தோழர் பொன்னம் பலனார் கூறுவது நடு நிலைமையிலிருந்து யோசிக்கும் எவருக்கும் அக்கிரமம் என்றோ பொய் என்றோ  ஏற்படாது. சாமியைப் பற்றிக் குறை கூறுவதும் அக்கிரமமல்ல. கடவுள்களின் பேரால் இந்நாட்டில் சகிக்க முடியாத கொடுமைகள் நடப்பது எவ்வளவோ சொல்லிப் பார்த்தாகி விட்டது. எத்தனையோ கோடி ரூபாய்கள் வீணாக்கப் படுவதை தடுக்க எங்கள் இயக்கம் எவ்வளவோ சொல்லியும் வந்தது. இனி என்ன செய்வது இனியும் பச்சை பச்சையாகவே பேசினாலும் மக்கள் மனதில் பட்டு அவர்கள் திருந்த வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு யாரிடத்திலும் துவேஷமோ சண்டையோ எங்களுக்கு கிடையாது.  அவ்வித நோக்கத்துடனும் இது பேசப்படவே இல்லை. கடவுளின் பேரால் மதத்தின் பேரால் மத ஆச்சாரிகள் புரோகிதர்கள் குருக்கள் பாதிரிகள் சங்கராச்சாரிகள் செய்யும் அநீதியும் அக்ரமமும் எவ்வளவு? சுயமரியாதைக்காரன் அவர்களின் குறைகளை கூறுவதிலுள்ள அக்கிரமம் எவ்வளவு...