ராஜதுரோக குற்றம்: பெரியாரின் ஸ்டேட்மெண்ட்
1934 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரையிலான முதல் தொகுதி இதுவாகும். அடக்கு முறைக்கு உள்ளான “குடி அரசு’ 1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டதால், இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள தலையங்கங்கள் பெரியாரின் உரைகள் அனைத்தும் “புரட்சி’ வார இதழில் இடம் பெற்றவையாகும். 1933 டிசம்பர் 30 இல் “இராஜ துரோக’ குற்றத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த காலகட்டமும் இதுதான். சென்னை மாகாணத்தில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி ஆட்சியின் பதவிக் காலம் இந்த ஆண்டோடு முடிவுக்கு வர இருந்தாலும் அன்றைய பல்வேறு அரசியல் நிகழ்வுகளினால் அதன் ஆயுட்காலம் 1937 வரை நீடிக்கப்பட்டது. அப்போது பொப்பிலி அரசர் மாகாண முதலமைச்சர். தன் மீது சுமத்தப்பட்ட “இராஜ துவேஷ’ வழக்கினையொட்டி, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. டபிள்யூ வெல்ஸ், அய்.சி.எஸ். முன் பெரியார் தாக்கல் செய்த “”ஸ்டேட்மென்ட்” இந்தத் தொகுதியில்தான் இடம் பெற்றுள்ளன. ஒரு கொள்கையைப் ...