Author: admin

மாளவியா

மாளவியா

  பழங் காங்கிரஸ்வாதி  என்று  சொல்லப்படும்  பண்டித  மாளவியா  அவர்கள்  காங்கிரசின்  ஜாதிமத  வகுப்பு  சம்மதமாய்,  சம  சந்தர்ப்பம்  வழங்கும்  கொள்கையில்  அதிருப்தி  கொண்டு  அதன்  நிறுவாகத்தில்  இருந்து  விலகி  தேர்தலில்  காங்கிரசுடன்  போட்டி  போடவும்,  ஒவ்வொரு  தொகுதியிலும்  காங்கிரஸ்  அபேக்ஷகருக்கு  எதிர்  ஆளை  நிறுத்தி  எதிர்ப்பிரசாரம்  செய்யவும்  தீர்மானித்து  எதிர்கக்ஷி  அமைத்துவிட்டார்.  இதற்கு  காங்கிரஸ்  சர்வாதிகாரியாய்  இருந்து  தோழர்  ஆனேயும்  சம்மதித்தப்  பண்டிதருடன்  சேர்ந்து  காங்கிரசை  எதிர்த்து  வருகிறார். இதைப்  பார்த்த  எந்த  பார்ப்பனரும்,  பார்ப்பனரல்லாத  கூலி  பக்தரும்,  மாளவியாவை  தேசத்  துரோகி  யென்றும்,  காங்கிரஸ்  துரோகி  என்று  கூறவும்  இல்லை.  இனியும்  தேசபக்தர்  என்றேதான்  அவர்கள்  அழைக்கப் படுகிறார்கள்.  ஆகவே  தேசபக்தர்  என்றால்  யார்  என்பதும்  தேசத்  துரோகி  என்றால்  யார்  என்பதும்  இதிலிருந்தே  தெரிந்து  கொள்ளலாம். பார்ப்பன  அடிமைகளுக்கும்,  பார்ப்பனரல்லாத  கூலி  பிரசாரகர்களுக்கும்,  பத்திராதிபர்களுக்கும்,  எலும்புத்துண்டு  போடுகின்றவர்களுக்குந்தான்  தேசபக்தர்கள்,  காங்கிரஸ்வாதிகள்,  தேசாபிமானிகள்  ஆகிவிடுவார்கள். மற்றவர்கள்  தேசத்  துரோகி, ...

இனியாவது  புத்தி  வருமா?

இனியாவது  புத்தி  வருமா?

  தீண்டப்படாத  மக்கள்  என்பவர்களுக்கு  ஆலயப்  பிரவேசம்,  என்னும்  பேரில்  காங்கிரஸ்  செய்து  வந்த  கிளர்ச்சியை  அப்போதே  நாம்  கண்டித்து  எழுதி  வந்ததுடன்,  உலகில்  கோவில்களே  இருக்கக்  கூடாதென்றும்,  அதற்கு  எவருரையும்  சொல்லிவிடக்கூடாதென்றும்,  சொல்லியும்  எழுதியும்  வந்தது  யாவரும்  அறிந்ததாகும். மற்றும்  கோவில்களை  கள்ளர்  குகையென்று  கிறிஸ்துவும், கோவில்கள்  இடித்து  நொறுக்கித்  தள்ளப்பட  வேண்டியது  என்று  முகம்மதுவும்,  கோவில்கள்  விபசாரிகள்  விடுதி என்று  காந்தியும்  சொல்லியிருப்பதும்  யாவரும்  அறிந்ததாகும். தோழர்  காந்தியார்  கோவில்களை  விபசார  விடுதி  என்று  ஒரு  சமயத்தில்  சொல்லியிருந்தாலும்,  இப்போது  இரண்டொரு  வருஷ  காலமாய்  அவ்விபசார  விடுதிக்கு  ஆள்  பிடித்து  விடும்  வேலையை  விவரமாய்  செய்து  வந்ததுடன்  அதற்காகப்  பத்து  லக்ஷக்கணக்கான  ரூபாய்களையும்  திரட்டி  வந்ததும்  யாவரும்  அறிந்ததாகும். தீண்டப்படாதாருக்கு  அரசாங்கத்தார்  அரசியலிலும்,  உத்தியோகத் திலும்  தனித்தொகுதி பிரதிநிதித்துவம்  கொடுத்த  பிறகு  அதை  ஒழிக்கக்  கருதிய  காந்தியார்,  தீண்டாதாருக்கு  நல்ல  பிள்ளையாகக்  கருதி  அவர்களுக்கு  கோவில்  பிரவேசம்  ஏற்பாடு ...

“குடி  அரசு’  வெளிவராத  ஆண்டு

“குடி  அரசு’  வெளிவராத  ஆண்டு

  “”இன்றைய  ஆட்சி  ஏன்  ஒழிய  வேண்டும்?”  என்ற  தலையங்கத்துக்காக  “அரசு  வெறுப்புக்  குற்றத்தின்  கீழ்  பெரியார்  கைது  செய்யப்பட்டதைத்  தொடர்ந்து,  1933  ஆம்  ஆண்டு  நவம்பர்  19  ஆம்  தேதியோடு  “குடி அரசு’  நிறுத்தப்படுகிறது.  1934  ஆம்  ஆண்டில்  ஆகஸ்டு  மாதம்  26  ஆம்  தேதியிலிருந்து  “பகுத்தறிவு’  வார  ஏடு  வெளி  வரத்  தொடங்குகிறது.  எனவே  இத்தொகுதியில்  பகுத்தறிவு  வார  ஏட்டில்  இடம் பெற்றிருந்த  கட்டுரைகளே தொகுக்கப்  பெற்றுள்ளதை வாசகர்களுக்கு  சுட்டிக்  காட்டுகிறோம்.  பகுத்தறிவின்  முதல்  தலையங்கமே “”முடிவாய்  கூறுமிடத்து,  பகுத்தறிவு  மனித  ஜீவாபிமானத்துக்கு  மக்களை  வழி  நடத்திச்  செல்லுமே  தவிர  எக்காரணம்  கொண்டும்  மக்கள்  பின்  நடந்து  செல்லும்படியான  அடிமை  வாழ்வில் உயிர்  வாழாது”  என்று  அறிவிக்கிறது. ஆகஸ்ட்  மாத  இறுதியிலிருந்து  டிசம்பர்  முடிய  “”பகுத்தறிவு”  தாங்கி  வந்த  ஆழமான  சிந்தனையைத்  தூண்டும்  கட்டுரைகள்  தலையங்கங்கள்  இத்தொகுப்பில்  இடம்  பெற்றுள்ளன.  தீண்டப்படாத  மக்களுக்கு  தனித்  தொகுதியை  எதிர்த்த  காந்தியார் ...

“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு”

  “”பகுத்தறிவு”  வாரப்  பத்திரிகையின்  முதல்  மாலை  முதல்  மலர்  26.8.34  ˆ ஞாயிறு  வெளியாகின்றது  என்றாலும்,  அதன்  கொள்கைகளைப்  பற்றி  “”குடி  அரசு”  “”ரிவோல்ட்”  “”புரட்சி”  “”பகுத்தறிவு”  (தினசரி)  ஆகிய  பத்திரிகைகளின்  அபிமானிகளுக்கும்  வாசகர்களுக்கும்  எடுத்துக்  கூற  வேண்டியதில்லை. சுருக்கமாக  ஒரு  வாக்கியத்தில்  சொல்லித்  தீர  வேண்டுமானால்  “”பகுத்தறிவு”  தோன்றலானது,  இன்றைய  உலக  வழக்கில்  இருந்து  வரும்  காரியங்களில்  பெரும்பான்மை  மக்களால்  முதன்மையானதாகவும்  இன்றியமையாதனவாகவும்  கருதப்படும். “”எங்கும்  நிறைந்த இறைவனை”  வழுத்தவோ, “”எல்லாம்  வல்ல  மன்னனை” வாழ்த்தவோ, “”யாதினும்  மேம்பட்ட  வேதியனை” வணங்கவோ, “”ஏதும்  செய்ய  வல்ல  செல்வவானை” வாழிய  செப்பவோ  கருதி  அல்ல  வென்பதே  யாகும். மேலும்  மனித  சமூகத்தில்  மௌட்டீயத்தால்  ஏற்பட்ட  துரபிமானங் களாகிய  கடவுள்,  ஜாதி,  மதம்,  தேசம்,  நான்,  எனது  என்பன  போன்ற  அபிமானங்களை  அறவே  ஒழித்து  மனித  சமூக  ஜீவாபிமானத்தையும்  ஒற்றுமை யையும்  பிரதானமாய்க்  கருதி  உழைத்து  வரும்  என்றும்  சொல்லுவோம். இத்தொண்டாற்றுவதில் ...

அருஞ்சொல்  பொருள்

அருஞ்சொல்  பொருள்

  அந்தர்முகம்                               உள்நோக்குகை அந்தரார்த்மா                             உள்மனம் அநீதம்                             நியாயமின்மை ஆகுதி                               தீ  வேள்வி ஆத்மார்த்தம்                            மிக்க  நட்பு இச்சித்து                         விரும்பி உத்தரிக்க                      மேற்பார்வையிட உத்தரித்தல்                               ஈடுசெய்தல், கடன்  செலுத்துதல்,  பொறுத்தல் உன்மத்தம்                  மயக்கம்,  வெறி,  பைத்தியம் எக்கியம்                         வேள்வி எத்தனம்                        முயற்சி,  ஆயத்தம் ஏஷ்யம்                           காரணம்,  கருதுகோள்,  சான்று கண்டசரம்                    கழுத்தணிவகை காற்க                                காக்க காஸ்டிங்  ஓட்டு                      ஒரு  கூட்ட  நடவடிக்கையில்  ஆதரவும்  எதிர்ப்பும்  சமமாக  இருக்கும்  பொழுது  தலைவரின்  தீர்மானமான  வாக்கு கிருஷிகள்                    விவசாயிகள் சக்கிமுக்கி  கற்கள்                               நெருப்புண்டாக்கப்  பயன்படும்  கற்கள் சந்தியா  வந்தனம்                 காலை,  மாலைகளில்  வேத  மந்திரங்களால்  செய்யும்  வழிபாடு சந்துஷ்டி                        மன  நிறைவு சம்ரட்சனை, சம்ரட்சணை                              காப்பாற்றுகை சன்னதம்                       ஆவேசம்,  கோபம்,  வீறாப்பு தத்தம்                              நீர்வார்த்துக்  கொடுக்கும்  கொடை தியங்கவிட்டு                           கலங்கவிட்டு,  மயங்கவிட்டு,  சோர்வெய்த  விட்டு துக்கித்தல்                   துயருறுதல் துவம்சம்                       அழிவு துராக்கிருத                  பலவந்தக்  கற்பழிப்பு தேவதா                           தெய்வம்,  பேய் தோதாக                         வசதியாக நரமேத  யாகம்                        ...

என்றால்  என்ன?

என்றால்  என்ன?

  தோழர்களே!  இன்று  இங்கு  நடைபெறப்  போகும்  திருமணம்  சுயமரியாதைத்  திருமணம்  என்று  சொல்லப்படுகின்றது.  மற்ற  திருமணங்களுக்கும்  சுயமரியாதைத்  திருமணங்களுக்கும்  அடிப்படையாக  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்று  பாருங்கள். அனாவசியமாக  சிலர்  “”சுயமரியாதைத்  திருமணமா?”  என்றாலே அதிசயப்படுவதும்,  ஏதோ  முழுகி  விட்டது  போல்  வெறுப்படைவதுமா யிருக்கின்றதே  தவிர,  வேறு  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்பது  எனக்கு  விளங்கவில்லை. விவாகம்  அல்லது  திருமணம்  என்று  சொல்லப்படுவதெல்லாம்  ஒரு  பெண்ணும்,  ஆணும்  சேர்ந்து  ஒருவருக்கொருவர்  கட்டுப்பட்டு  அவர்களது  வாழ்க்கையை  கூட்டுப்  பொருப்பில்  நடத்துவதற்குப்  பலர்  அறிய  செய்துகொள்ளும்  அல்லது  செய்யப்படும்  காரியமே  ஆகும்.  இதைச்  சிலர்  அதாவது  பழைய  முறைக்காரர்  சடங்கு  என்கிறார்கள்.  சிலர்  அதாவது  புதிய  முறைக்காரர்கள்  ஒப்பந்தம்  என்கிறார்கள்.  சடங்கு  என்று சொல்லுகின்றவர்கள்  உண்மையிலேயே  சடங்காகவே  கருதி  காரியங்களில்  லக்ஷியமில்லாமல்  நடத்துகிறார்கள்.  அதாவது  கல்யாணத்தில்  மாப்பிள்ளைக்கும்  பெண்ணுக்கும்  எவ்வித  உரிமையும்  இல்லை.  அதுபோலவே  சடங்கிலும்  கல்யாணக்காரருக்கும்  சடங்குக்கும்  யாதொரு  உரிமையுமில்லை.  எப்படியென்றால் ...

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு

தோழர்களே! மொத்த வி°தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்கு மேல் ஜமீன் முறை ஆக்ஷியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட தானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள்  கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங் களில் இம்மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்பார்க்கி றேன். உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளி கள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லா தார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும்...

சம்பளக்  கொள்ளைக்  கொடுமை

சம்பளக்  கொள்ளைக்  கொடுமை

  இந்தியாவுக்கு  பிரிட்டிஷ்  அரசியல்  முறை  ஏற்பட்ட  பின்  உண்டான  கொடுமைகளில்  எல்லாம்  தலை  சிறந்த  கொடுமை  சம்பளக்  கொள்ளைக்  கொடுமையேயாகும்.  இக்கொடுமைக்குப்  பொறுப்பாளிகள்  பிரிட்டிஷாரே  என்று  சொல்லிவிட  முடியாது.  இந்தியர்களும்  சிறப்பாக  இந்திய  அரசியல்  கிளர்ச்சிகளும்  மற்றும்  இந்திய  தேசியமுமேயாகும். பிரிட்டிஷார்  தாங்கள்  அன்னியர்  என்னும்  பிரிவிலிருந்து  தப்பித்துக்கொள்ளவும்,  தேசியக்  கிளர்ச்சியின்  உள்  தத்துவம்  இன்னதென்று  தெரிந்து  அதற்கு  இணங்கவும்  தேசீயவாதிகள்  என்பவர்களின்  அபிலாசைகளைப்  பூர்த்தி  செய்யவும்  முற்பட்டதே  பிரிட்டிஷ்  அரசியல்  தந்திரத்தால்  இந்தியாவுக்கு  ஏற்பட்ட  கெடுதிகளுக்கெல்லாம்  காரணம்  என்று  சொல்லலாம். இன்றையத்தினம்  உலகத்தில்  எந்த  தேசத்திலும்  எவ்வளவு  செல்வம்  பொருந்திய  தேசத்திலும்  உள்ள  அரசாங்க  உத்தியோகங்களில்  இந்தியாவில்  இருந்துவரும்  சம்பளக்கொள்ளைக்  கொடுமை  இல்லை  என்றே  சொல்லுவோம். இந்திய  மக்களில்  ஒரு  மனிதனுடைய  ஒரு  நாளைய  சராசரி  வரும்படி  016  பை.  என்று  பொருளாதார  நிபுணர்களால்  கணக்கிடப் பட்டிருக்கிறது.  இது  இந்தியப்  பொருளாதார  நிபுணர்களும்  இந்திய  தேசீயவாதிகளும்  அவர்களது  தலைவர்களும் ...

நாகர்கோவிலில் ஈ.வெ. இராமசாமி

நாகர்கோவிலில் ஈ.வெ. இராமசாமி

முகவுரை தோழர்களே! தோழர் பி. சிதம்பரம் அவர்கள் எம்.எல்.ஏ. °தானம் பெற்றதற்காக ஏற்பட்ட பாராட்டு விழவிற்குத் தலைமை வகிப்பது என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாவேயிருக்கின்றது. இதற்காகவே குற்றாலத்தி லிருந்து தேக அசௌக்கியத்தை கவனிக்காமல் வந்திருக்கின்றேன். தோழர் சிதம்பரம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு தூண் போன்றவர் அவரது எழுத்துக்களும், அபிப்பிராயங்களும் எனக்கு தீவிரமாய் செல்ல படிகள் போல் உதவின. நமது நாட்டில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் களில் தோழர் சிதம்பரம் முக்கியமான ஒருவராவர். அவர் இந்த 6, 7 வருஷ காலமாய் இயக்கத்துக்கு செய்துவந்திருக்கும் தொண்டு மிகவும் போற்றக் குரியதாகும். இயக்கத்தின் பேரால் அவர் யாதொரு பயனையும் அடைந்த தில்லை என்பதையும், இயக்கத்தால்  அவருக்கு பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டதும் எனக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட ஒருவரை சுயமரியாதைச் சங்கம் பாராட்ட வேண்டியது கடமையாகும். ஆதலால் தான் நான் இத் தலைமைப் பதவியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்கவந்தேன் ஆனால் இந்த சமயத்தில் எனது பழய...

திருப்பூர்  செங்குந்த  மகாஜன  சங்க  மகாநாட்டில்  தோழர்  ஈ.வெ.ரா.  சமதர்மம்

திருப்பூர்  செங்குந்த  மகாஜன  சங்க  மகாநாட்டில்  தோழர்  ஈ.வெ.ரா. சமதர்மம்

  தோழர்களே!  இன்று  இக்கூட்டத்தில்  “”சமதர்மம்”  என்னும்  பொருள்  பற்றிப்  பேசும்படியான  ஒரு  சந்தர்ப்பம்  கிடைத்தது  பற்றி நான்  பெரிதும்  மகிழ்ச்சியடைகின்றேன்.  சமதர்மம்  என்பதற்குப்  பலவேறு  தேசங்களிலும்,  சமூகங்களிலும்  பலவேறு  அர்த்தத்தில்  வழங்கி  வருகிறது.  சமதர்மம்  என்பது  சிற்சில  இடங்களில்  மதத்துக்கும்,  சில  இடங்களில்  கடவுளுக்கும்,  பிறிதும்  சில  இடங்களில்  பணக்காரனுக்கும்,  புரோகிதனுக்கும்  விரோதம்  என்றும்  கூறப்படுகிறது.  ஆனால்  பொதுவாக  இன்று  சமதர்மம்  என்னும்  சொல்  நாட்டிலுள்ள  ஏழை  மக்களின்  உள்ளத்திலே  கிளர்ச்சியூட்டி  ஆவலோடு  சமதர்மமொன்றே  தங்களின்  வாழ்வை  இன்பமயமாக்கும்  என்கின்ற  மனப்பான்மையை  உண்டாக்கி யிருக்கிறது.  ஆகவே  இன்று  சமதர்மத்தை  உச்சரிப்பது  மிக  சகஜமாகப்  போய்விட்டது.  சமீபத்தில்  ராஞ்சியிலும்  பாட்னாவிலும்  கூடிய  சமதர்மவாதிகளால்  சமதர்ம  திட்டம்  வகுக்கப்பட்டிருக்கிறது.  காந்தியாரும்  கூட  சமதர்மம்  ஆ÷க்ஷபகரமானதல்ல  என்கிறார்.  தோழர்  ஜவஹர்லால்  தான்  சமதர்மவாதி  என்றும்,  மக்கள்  சமூக  நலனுக்கேற்றது  சமதர்மம்  ஒன்றே  என்றும்  தெளிவாக  எடுத்துக்  கூறியிருக்கிறார்.  மனித சமூகத்தில்  100க்கு  90க்கு  மேற்பட்ட ...

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

  தோழர்  சத்தியமூர்த்தி  யாரை  ஏமாற்றப்போகிறார்? தோழர்  கு. சத்தியமூர்த்தி  சாஸ்திரிக்கு  இப்போது  சிறிது நெருக்கடியான  சமயம்  என்று  சொல்லலாம். ஏனெனில்  அவர்  எப்படியாவது  சமீபத்தில்  நடைபெறப்  போகும்  இந்திய  சட்டசபை  அங்கத்தினர்  பதவிக்கு  ஒரு  அபேக்ஷகராக  நிற்க  வேண்டுமென்று  கருதி  இருக்கிறார்.  சென்னையில்  நிற்பதற்கு  அவருக்குத்  தைரியமில்லை,  இருக்கவும்  நியாயமில்லை.  ஏனென்றால்  சென்னை  ஜனங்கள்  தோழர்  சத்தியமூர்த்தியை  நேரில்  அறிவார்கள்.  இந்திய  சட்டசபையின்  சென்னைத்  தொகுதியானது  சென்னை  சட்டசபையின்  யுனிவர்சிட்டித்  தொகுதி  மாதிரி  100க்கு  95  பேர்கள்  பார்ப்பன  ஓட்டர்களாய்  இருக்கும்  தொகுதியல்ல.  பார்ப்பனரல்லாதார்  பெரும்பான்மையோருடைய  ஓட்டுகளைப்  பெற்றாக  வேண்டும்.  ஆதலால்  அங்கு  சென்னையில்  நின்றால்  கட்டின  பணம்  வாபீஸ்  பெறுவது  கூட  சில  சமயங்களில்  கஷ்டமாகிவிடும். நமது  மாகாணத்தில்  பொதுவாக  பார்ப்பனர்களுக்கு  சிறப்பாக  வர்ணாச்சிரமப்  பார்ப்பனர்களுக்கு  தகுதியாய்  இருக்கும்  தொகுதி  தஞ்சை,  திருச்சி  ஜில்லாக்களின்  தொகுதியாகும்.  இந்த  ஜில்லாக்களின்  பார்ப்பனரல்லாதாரே  உத்தியோகம்  பெறவும்  மந்திரியாகவும்  ஸ்தல  ஸ்தாபனங்களில்  தலைமைப் ...

சென்னையில்  ஜஸ்டிஸ்  கட்சிக்  கூட்டம்

சென்னையில்  ஜஸ்டிஸ்  கட்சிக்  கூட்டம்

  தலைவரவர்களே!  தோழர்களே!! தலைவரவர்கள்  தெரிவித்த  விஷயங்கள்  இயக்க  நலனைக்  கருதி  அவசியம்  கவனிக்கத்தக்கதாகும்.  எல்லா  விஷயத்தையும்விட  நமது  கொள்கை  என்ன?  திட்டம்  என்ன?  என்பதைப்  பொது  ஜனங்கள்  அறியும்படி  செய்ய  வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சி  என்றால்    N 4000  ரூபாய்  சம்பளத்துக்கும்  மந்திரி  பதவிக்கும்  ஊர்  சிரிக்கச்  சண்டை  போட்டுக்  கொண்டிருக்கும்  கூட்டம்  என்று  இனியும்  பாமர  ஜனங்கள்  சொல்லும்படி  நாம்  விட்டுக்  கொண்டிருக்கக்  கூடாது.  காங்கிரசுக்காரர்கள்  என்பவர்களின்  உள்  எண்ணமும்,  நாணையமும்  எப்படி  இருந்தாலும்  அவர்கள்  ஏதோ  இரண்டொரு  கொள்கைகளைச்  சொல்லி,  அதைப்  பெரிதாக்கிக்  காட்டி  அதற்காக  அடியும்  உதையும்,  நஷ்டமும்  கஷ்டமும்  சிறைவாசமும்  பெற்றவர்கள்  என்கின்ற  பெயரைப்  பெற்றிருக்கிறார்கள்.  அவர்களோடு  இப்பொழுது  திடீரென்று  போட்டி  போடுவதென்றால்  அதுவும்  ஒரு  விளக்கமான,  யாவருக்கும்  தெரியும்படியான  ஒரு  கொள்கையும்,  திட்டமும்  இல்லாமல்  போட்டி  போடுவதென்றால்  சுலபமான  காரியமல்ல  என்பதே  எனது  அபிப்பிராயம்.  “”கட்சிக்குக்  கொள்கை  இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  பணமும்,  அதிகாரமும், ...

யாகப்  புரட்டு   ஜீவகாருண்யம்

யாகப்  புரட்டு  ஜீவகாருண்யம்

  தலைவரவர்களே!  தோழர்களே! ஜீவகாருண்யத்தைப்  பற்றி  நான்  பேச  வந்திருப்பது  உங்களில்  பலருக்கு  வேடிக்கையாகக்  காணப்படலாம்.  ஏனெனில்,  நான்  நீங்கள்  பெரும்பாலும்  கருதி  இருக்கிற  ஜீவகாருண்யத்தைச்  சேர்ந்தவனல்ல  என்று  நீங்கள்  கருதி  இருப்பதேயாகும்.  ஜீவ காருண்யம்  என்கின்ற  வார்த்தைக்கு  ஒவ்வொருவர்  ஒவ்வொரு  விதமான  அர்த்தம்  கொண்டிருக்கிறார்கள்.  சிலர்  மாம்சம்   சாப்பிடாமல்  இருந்தால்  அதுவே  பெரிய  ஜீவகாருண்யமென்றும்,  மற்றப்படி  ஜீவர்களுக்கு  எவ்வித  மன  வருத்தத்தையும்,  உடல்  வருத்தத்தையும்  செய்தால்  குற்றமில்லை  என்றும்  கருதி  இருக்கிறார்கள்.  சிலர்  ஜீவர்களை  ஹிம்சைப்படுத்தாமல்  இருந்தால்  போதும்  என்றும்,  மாம்சம்  சாப்பிடுவதைப்  பற்றிக்  குற்றமில்லை  என்றும்  கருதி  இருக்கிறார்கள். சிலர்,  சில  ஜந்துக்களை  மாத்திரம்  இம்சைப்படுத்தக்  கூடாதென்றும்,  மற்ற  ஜந்துக்களைப்  பற்றிக்  கவலை  இல்லை  என்றும்  கருதி  இருக்கிறார்கள்.  ஜீவகாருண்யத்திற்கு  இந்தப்படி  எத்தனையோ  விதமான  கருத்துக்களும்,  தத்துவங்களும்  இருக்கின்றன. விவரமாய்ச்  சொல்ல  வேண்டுமானால்  ஜீவகாருண்யம்  என்பது  ஒவ்வொரு  தேசத்துக்கும்,  ஒவ்வொரு  மதத்துக்கும்,  ஒவ்வொரு  ஜாதிக்கும்  ஒவ்வொரு  விதமாய்க்  கருதப்படுகின்றது....

மோசம்போனேன்! ஈ°வரா!  – ஒரு தொழிலாளி

மோசம்போனேன்! ஈ°வரா! – ஒரு தொழிலாளி

  உலகில் நடைபெற்றுவரும் சகல காரியங்களும் ஈ°வரனாகிய உன்னாலேயே நடத்தப்பட்டு வருவதாக நான் நம்பி மதிமோசம் போனேன்! ‘அவனன்றி ஓரணுவுமசையாது’ என்ற சோம்பேரி வேதாந்தத்தை உண்மை யாக நம்பி இந்தக்கதிக்கு ஆளானேன். நான் பிறந்ததிலிருந்து இதுவரை அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறப்பதற்கு, நான் “முன்ஜென்ம” த்தில் செய்த “பாவமே” காரணமென நம்பி என்னை நானே கெடுத்துக் கொண் டேன்! ஒரு சில ஆசாமிகள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் என் போன்ற ஏழைத் தொழிலாளிகளின் உதவிகொண்டு இன்ப வாழ்வு நடாத்தி வருவதற்கு அவர் கள் “முன்ஜன்மத்தில்” செய்த “பூஜா” பலனே காரணம் என நம்பி நான் முழுமூடனானேன்! “கடவுளை நம்பினவர் கைவிடப்படார்” என்றதை மெய்யென நம்பி எனது தற்போதைய இழிந்த நிலைக்கு ஆளானேன்! நான் சுகவாழ்வை அடையவேண்டுமானால்-என்போன்ற ஏழைத் தொழிலாளிகள் இன்ப வாழ்க்கையை எய்த வேண்டுமானால் முதலில் ஈ°வர நம்பிக்கையிலிருந்து விடுவித்துக் கொள்வதன் மூலமே அதை அடைய முடியும் என்ற உண்மையை...

தோழர் பி. சிதம்பரம்

தோழர் பி. சிதம்பரம்

நாகர்கோவில் பிரபல வழக்கறிஞரும், நமது சுயமரியாதை இயக்கத் திற்கோர் தூண் போன்றவரும், நமது மகாநாடுகள் பலவற்றில் தலைமை வகித்து அரிய சொற்பொழிவாற்றியவருமான தோழர் பி. சிதம்பரம் பி.ஏ., பி. எல். அவர்கள் திருவிதாங்கூர் சட்டசபைக்கு வர்த்தகத் தொகுதியில் அபேட்சகராக நின்று போட்டியின்றித் தெரிந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். தோழர் சிதம்பரம் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைமிக்குடையார், சரித்திர ஆராய்ச்சியில் நிபுணத்துவமுடையார், சட்ட ஆராய்ச்சியில் வல்லுநர், சமய ஆராய்ச்சியில் பேரறிஞர். சமதர்மப் பற்றுடையார். இவர் சட்டசபைக் குத் தேர்ந்தெடுக்கப் பெற்றது, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு ஓர் பெரும் வெற்றியென்றே கருதுகிறோம். இவர் தேர்தலால் திருவிதாங்கூரில் வருணாச் சிரம ஆதிக்கம் ஒழிந்து எங்கும் சமத்துவமும், சுயமரியாதையும் பொங்கிப் பொலிந்து மக்களெல்லோரும் சாந்தியும், சமாதானமுமுற்று சமதர்ம நெறியை அடைவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 13.08.1935      

ஜஸ்டிஸ்  கட்சி

ஜஸ்டிஸ்  கட்சி

  ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்  தோழர்  பொப்லி  ராஜா  அவர்களும்,  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்க  அக்கிராசனர்  தோழர்  செட்டி  நாட்டுக்  குமாரராஜா  அவர்களும்  கக்ஷி  சம்மந்தமான  சில  விஷயங்களைப்  பற்றி  யோசிப்பதற்காகவென்று  இம்மாதம்  7,  8  தேதிகளில்  மீட்டிங்குகள்  கூட்ட  ஏற்பாடு  செய்திருப்பதாய்  கட்சி  அங்கத்தினர்களுக்குத்  தனித்தனி  அழைப்பு  அனுப்பி  இருக்கிறார்கள். அக்கட்சியானது  அதாவது  தென்னிந்திய  பார்ப்பனரல்லாதார்  கட்சியானது  அரசியலிலும்,  சமூக  இயலிலும்  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும்,  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கும்,  வாழ்க்கைப்  போட்டியில்  சம  சந்தர்ப்பம்  இல்லாத  மக்களுக்கும்  விடுதலையும்,  சமத்துவமும்  அளிப்பதற்காக  என்று  தோற்றுவிக்கப்பட்டது  என்கின்ற  உண்மை  யாவருமறிந்ததாகும்.  அப்படிப்பட்ட  ஜஸ்டிஸ்  கட்சியானது  இப்போது  நாளடைவில்  செல்வந்தர்களான  முதலாளிமார்கள்,  ஜமீன்தார்கள்  ஆகியவர்கள்  ஆதிக்கத்திற்குள்ளாகி  அவர்களது  நன்மைகளைப்  பாதுகாத்துக்  கொள்ளவும்,  பெருக்கிக்  கொள்ளவுமான  வழிகளுக்கே  பயன்படக்கூடிய  மார்க்கத்தில்  திருப்பப்பட்டு  வருகின்றது  என்கின்ற  விஷயம்  பார்ப்பனரல்லாத மக்களில்  பெரும்பான்மையோர்  அறிந்ததாகும். ஆனாலும்  அதை  பழயபடி  தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட  மக்கள்  விடுதலைக்கும்,  சமத்துவத்துக்கும்  திருப்ப ...

தொழிலாளிகள் தொண்டு

தொழிலாளிகள் தொண்டு

இயந்திர ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமானால் இன்றைய நிலையில் தொழிலாளி களுக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி போதிப்பதிலேயே உண்மையான அனுகூலம் ஏற்பட்டுவிடாது. தொழிலாளிகளுக்கு, மில் ஏஜண்டுகளும், நிர்வாகிகளும் அடிக்கும் கொள்ளையைப்பற்றி விளக்கிக் காட்டவேண்டும். ஏனென்றால் தொழிற் சாலைகளில் முதல் போட்ட முதலாளிகள் அடையும் லாபத்தைவிட நிர்வாகி களும், உத்தியோக°தர்களும் அடிக்கும் கொள்ளையே அதிகம். நிர்வாக ஏஜெண்டுகளுக்கு பொருப்புக் கிடையாது. உதாரணமாக ஒருவர் துணி நெய்யும் ஆலையையோ, ஒரு நூல் நூற்கும் ஆலையையோ ஏற் படுத்தி விட்டாரேயானால் அதன் நிர்வாக ஏஜெண்டு என்கின்ற முறையில் தனக்கு ஒருசம்பளம், கமிஷன் முதலிய லாபங்களை ஏற்படுத்திக் கொள் ளுகிறார். இவருக்கு இந்தச் சம்பளமும், கமிஷனும் மில்லுக்கு லாபம் வந்தா லும் நஷ்டம் வந்தாலும் அதைப்பற்றி பொருப்பு இல்லாமல் கிடைத்து வரும்படி ஏற்பாடு செய்துகொள்ளுகிறார். இது தவிர சுயநலமாகவும், நம்பிக்கைத் துரோகமாகவும் மற்ற தனது நண்பர்களுக்கு அல்லது தனக்குப் பலபேர்களில் வேண்டியவர்கள் என்பவர்களுக்கு...

ஸ்தல  ஸ்தாபனங்கள்

ஸ்தல  ஸ்தாபனங்கள்

  ஸ்தல  ஸ்தாபன  சுயாட்சி  என்று  சொல்லப்படும்  ஜில்லா  போர்டு,  முனிசிபாலிட்டி,  தாலூகாபோர்டு,  கிராமப்  பஞ்சாயத்து  முதலியவைகள்  அரசாங்கத்தின்  நேர்  பார்வையிலிருந்து  “”ஜனநாயகத்துவத்”திற்கு  மாற்றப்பட்டதின்  பயனாக,  சுமார்  இந்த  30  வருஷ  காலத்தில்  பொது  ஜனங்களுக்கு  ஏதாவது  பயனேற்பட்டதா  அல்லது  அரசாங்க  மேற்பார்வையின்  கீழ்  இருந்தை  விட  மோசமான  நிலையில்  இருக்கின்றனவா  என்பது  யோசிக்க  வேண்டியதும்,  அதன்  உண்மையைப்  பாமர  மக்கள்  அறியும்படி  செய்ய  வேண்டியதும்  அவசியமான  காரியமாகும். நம்மைப்  பொருத்தவரை ஸ்தல ஸ்தாபன  நிர்வாகத்தில்  கலந்திருந்ததைக்  கொண்டும்,  சில  ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குத்  தலைமை  வகித்து  நிர்வாகப்  பொருப்பை  ஏற்றிருந்ததைக் கொண்டும்  ஏற்பட்டுள்ள  அனுபவத்தையும்  மற்றும்  அனேக  ஸ்தல  ஸ்தாபன  நிர்வாக  விஷயங்களைப்  பார்த்தும்,  கேட்டும்  உள்ள  அனுபவத்தைக்  கொண்டும்,  ஏதாவது  சொல்ல  வேண்டுமென்றால்,  ஸ்தல ஸ்தாபன  ஆட்சி  என்பது  பொதுஜனங்கள்  ளகையில்  இருப்பதைவிட,  அரசாங்கத்தின்  நேர்ப்  பார்வையிலிருந்து  வந்ததும்,  இனியும்  அப்படியே  இருந்து  வருவதும்  மேலானது  எனக்  கூறுவோம்....

மீரத்கே° அப்பீல் முடிவு            பாராட்டத்தக்கதே

மீரத்கே° அப்பீல் முடிவு            பாராட்டத்தக்கதே

மீரத் சதி வழக்கு என்பது பொதுவுடமைக் கொள்கையை பிரசாரம் செய்ததற்காக ஏற்பட்டதென்பதும், அதில் பொதுவுடமைப் பிரசாரம் செய்த தாக ருஜுக்கள் விடப்பட்டிருப்பதோடு சில எதிரிகள் பொதுவுடமைக் கொள்கை தங்களுடைய கொள்கை என்பதாக ஒப்புக்கொண்டிருப்பதும், அவ் வழக்கை சிறிதாவது கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். எதிரிகளின் வக்கீல்கள் சிலரின் வாதங்களிலும் இந்த விஷயங்கள் ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பதாய் காணப்படுவதும் விளங்கும். இப்படி எல்லாம் இருந்தும் பலருக்கு (மெஜாரிட்டியாருக்கு) விடுதலையாகியிருப்பதும், மற்றும் பலருக்கு மாதக்கணக்கிலும், ஒன்று இரண்டு வருஷக்கணக்கிலும் தண்ட னையைக் குறைத்து இருப்பதையும் கவனித்துப்பார்த்தால் பொதுவுடமைக் கொள்கை விஷயமாக நமது மக்கள் பலருக்குள்ள பயமும், நடுக்கமும் நிவர்த்தியாகத் தக்க அம்சங்கள் பல அதில் மிகுந்து இருப்பதை உணரலாம். அதென்னவென்றால் ஒரு மனிதன் பொதுவுடமைக் கொள் கையை கொண்டவனாக இருப்பதும் அதை எடுத்து பிறருக்கு விளங்க உரைப்பதும் மற்றவர்களையும் பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி பிரசாரம் செய்வதும் எவ்விதத்தும் குற்றமாகாது என்பது விளங்கும். அன்றியும், பொதுவுடமைக் கொள்கைப்...

மரணம்   அநுதாபம்

மரணம்  அநுதாபம்

  நமது  இயக்க  அபிமானியான  கோட்டையூர்  தோழர்  ராம.  அள.  சிதம்பரம்  அவர்களின்  புதல்வன்  திடீரென்று  இறந்த  செய்திகேட்டு  திடுக்கிட்டோம்.  இச்செய்தி  கேட்ட  சில  நாட்களுக்குள்  அவரது  துணைவியாரும்  உயிர்  துறந்தார்  என்ற  செய்தி  கேட்க  பெரிதும்  வருந்துகிறோம்.  “”உலகில்  தோன்றி  மறைவது  இயற்கை”  என்றாலும்,  இத்தகைய  கஷ்ட  நஷ்டத்தைக்  கேட்க  மனம்  வருந்தாமலிருக்க  முடியவில்லை.  உலக  இயற்கையை யுணர்ந்த  தோழர்  ராம.அள. சிதம்பரம்  அவர்கட்கு  நாம்  ஒன்றும்  அதிகம்  கூறத்  தேவையில்லை.  நமது  அனுதாபம்  மட்டும்  அவருக்கு  உரித்தாகுக! புரட்சி  இரங்கல் செய்தி  27.05.1934

யந்திரத்தின் பெருமை

யந்திரத்தின் பெருமை

யந்திரங்களை எல்லாம் “பேயின்” அம்சம் என்று கூறி வந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக்காலம் மக்களுக்கு காட்டுமிராண்டி உணர்ச்சியைப் பரப்பப்பட்ட காலம் என்றே சொல்ல வேண்டும். அல்லது முதலாளித் தன்மையின் சூட்சிப் பிரசார காலம் என்றே சொல்ல வேண்டும். சுதந்திர அறிவை உபயோகித்து கூர்மையான ஆராய்ச்சி செய்தபின், எவருக்கும் பாமரத் தன்மையாலும் சூட்சிப்பிரசாரத்தாலும் ஏற்பட்ட தன்மைகள் மாறி விடும். உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரியான பாமரத்தன்மையும் சூட்சி ஆதிக்கமும் இருந்து வந்ததெனினும் அவை அறிவுக்கு மதிப்புத் தோன்றிய பிறகு மறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாகம் மறைந்தும் விட்டது. அதுபோல்தான் நம் இந்தியாவிலும் இன்னும் சில விஷயத்தில் காட்டுமிராண்டித் தன்மையும், பாமரத்தன்மையும்; புத்தியையும் அனுபவ பலன்களையும், உபயோகித்துப் பார்க்காத பல விஷயங்களும் இருந்துவரு கின்றன. அவற்றில் ஒன்றே யந்திரங்களைப் பேயின் தத்துவமென்பதும். இந்தத் தத்துவம் பெரும்பாலும் நீங்கிவிட்டதென்றாலும் சூட்சிப் பிரசாரத் தின் பயனாய் சிற்சில இடங்களில் இன்னும் சிறிது பேசப்பட்டே வருகின்றது. யந்திரங்கள் பேயின்...

மத நம்பிக்கையின்  விளைவு

மத நம்பிக்கையின்  விளைவு

  வங்காளத்தில்  ஒரு  பெண்  தனது  கணவன்  நோய்வாய்ப்பட்டு  சாகுந் தருவாயிலிருப்பதைக்  கண்டு  கணவனுக்கு  முன்  தான்  மாங்கல்ய  ஸ்திரீயாக  இருந்து  கணவனுடன்  உடன்கட்டை  ஏற  வேண்டுமென்று  கருதி  மண்ணெண்ணையை  மேலே  ஊற்றி  நெருப்பு  வைத்துக்  கொண்டு  இறந்து  போனதாக  அ.பி.  செய்தி கூறுகின்றது. இது  எவ்வளவு  பரிதாபகரமான  விஷயம்?  மத  நம்பிக்கையினால்  எவ்வளவு  கொடுமைகளும்,  கேடுகளும்  விளைகின்றன  என்பதற்கு  இதைவிட  வேறு  என்ன  சாக்ஷியம்  வேண்டும். “”இந்  நிகழ்ச்சிக்கு  மத  நம்பிக்கை  காரணமல்ல.  காதலே  காரணம்,  கற்பே  காரணம்”  என்று  சிலர்  தத்துவார்த்தம்  சொல்லி  மதத்தைக்  காப்பாற்ற  இருக்கிறார்கள்  என்பது  நமக்குத்  தெரியும்.  அப்படிப்பட்டவர்களை  ஒன்று கேட்கின்றோம். காதல்  என்றும்  கற்பு  என்றும்  ஒன்று  இருப்பதாகவே  வைத்துக்  கொண்டு  பார்ப்போமானாலும்  இன்று  உலகில்  புருஷனை  சாகக்  கொடுத்துவிட்டு  விதவையாகவோ  அல்லது  வேறு  ஒருவரை  மணந்தோ,  இரகசியமாகவோ  இயற்கையை  அனுபவித்துக்  கொண்டிருக்கும்  பெண்கள்  எல்லோரும்  அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல்  கற்பு இல்லாமல் ...

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை  – சித்திரபுத்திரன்

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

  சு-ம:- ஒரு மனிதன் உயர்தரப்படிப்பு அதாவது பி.ஏ., எம்.ஏ., ஐ.சி.எ° முதலிய படிப்புப் படி த்து பட்டதாரியாயிருப்பதற்கும் மற்றும் தொழில் சம்மந்தமான படிப்பில் நிபுணத்துவம் பெற்று இருப்பதற்கும், மற்றொரு மனிதன் அவற்றை அடையாமல் தன் கையெழுத்துப் போடக்கூடத் தகுதியில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் சொல்லுகிறாய்? பு-ம :- அவனுக்குப் போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அவன் அவற்றை கற்க முடியாமல் போயிருக்கும். சு-ம :- அப்படிச் சொல்ல முடியாது. இதோ பார் இந்த மனிதனை, அவன் எவ்வளவு சுருசுருப்பாகவும், புத்திசாலித்தனமாய் பேசக்கூடிய வனாகவும், மண்வெட்டுவதிலும், பாரம் சுமப்பதிலும், கோடாரியால் விறகை வெட்டுவதிலும் எவ்வளவு புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறான். நாம் நான்கு பேர் சேர்ந்தால் கூட செய்ய முடியாத வேலையை அவன் ஒருவனே செய் வது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பார். இப்படிப்பட்டவனை புத்தி யில்லாதவன் என்று சொல்லிவிட முடியுமா? ஆதலால் இவனுக்கு அறிவு இருக்கிறதே இவன் ஏன் பட்டதாரியாகவில்லை? பு-ம :-...

இந்திய  சட்டசபைத்  தேர்தலும்  கீ.ஓ.கு.ம்

இந்திய  சட்டசபைத்  தேர்தலும்  கீ.ஓ.கு.ம்

  இப்போது  அரசியல்  உலகில்  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  பேச்சே  எங்கு  பார்த்தாலும்  பிரமாதமாகப்  பேசிக்  கொள்ளப்படுகின்றது.  கூடிய  சீக்கிரத்தில்  இந்திய  சட்டசபை  கலைக்கப்பட்டு  இவ்வருஷத்திலேயே  புதிய  தேர்தல்  நடைபெறப்  போகின்றது  யாவரும் அறிந்ததே. இந்திய  சட்டசபை  ஏற்பட்டு  சமீபகாலம்  வரை  அதாவது  சுய  மரியாதை  இயக்கம்  தோன்றும்  வரை,  நமது  மாகாணத்தில்  அது  (இந்திய  சட்டசபை)  பார்ப்பனர்களுக்கே  ஏகபோக மான்யமாயிருந்தது.  இதன்  காரணமாகவே  தமிழ்நாட்டில்  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  சமூகம்  மனிதத்  தன்மையுடன்  இல்லையென்றும்,  அறிவிலும்  ஆற்றலிலும்  மிக  பிற்பட்டவர்கள்  என்றும்  இந்தியா  முழுவதும்  விஷமப்பிரசாரம்  செய்வதற்கு  பார்ப்பனர்களுக்கு  மிக  அனுகூலமுமிருந்து  வந்தது.  அதற்கேற்றார்ப் போல்  இந்திய  பத்திரிகை  உலகமும்  எங்கு  பார்த்தாலும்  ஏதாவது  ஒரு  வகையில்  பார்ப்பன  ஆதிக்கத்தில்  இருப்பதால்  பத்திரிகைகள்  மூலமும்  அவ்விஷமப்  பிரசாரம்  வெற்றி  பெற  அனுகூலமேற்பட்டது. இப்போது  தோழர்கள்  சர்.ஆர்.கே.  ஷண்முகம்,  ஏ.  ராமசாமி  முதலியார்  முதலியவர்கள்  இந்திய  சட்டசபைக்குப்  போக  ஏற்பட்டதால்  தென்னிந்தியப்  பார்ப்பனரல்லாத ...

சித்ரவதை

சித்ரவதை

  23  ஆண்டுகள்  சித்ரவதை “”மனித  சமூகத்திற்காக  என்று  சில  ஒழுக்கங்களையும்,  சில  நடவடிக்கைகளையும்  ஏற்படுத்தி  அவை  கிரமமாய்  நடந்தேறுவதற்காக  பயத்தை  உண்டு  பண்ணும்  படியான  நிபந்தனைகளைக்  கற்பித்து,  அக்கற்பனைகளுக்கு  மதக்  கொள்கை என்று  பெயரிட்டு,  அம்  மதக்  கொள்கைக்கு  காப்பளிப்பதற்காக  கடவுளை உண்டாக்கி  வைக்கப்பட்டிருக்கிறது”  என்பதும்  மதத்திலும்  கடவுளிலும்   நம்பிக்கையுள்ள  அறிவாளிகள்  என்று  தங்களை  சொல்லிக்  கொள்ளும்  கடவுள்  மதக்காப்பாளர்களின்  வாதமாகும். மேல்  குறிப்பிட்ட  ஒழுக்கமும்  நடவடிக்கைகளும்  நியாயமானதா,  பொதுவானதா,  அவசியமானதா  என்பதைப்  பற்றிய  விவகாரத்தில்  இப்போது  நாம்  தலையிடவில்லை  என்றாலும்,  கடவுளுக்கும்,  மதத்துக்கும்  காப்பளிப்பதற்காக  இந்த  அறிவாளிகள்  சொல்லும்  சமாதானம்  சரியானதா?  விவகாரத்துக்கு  நிற்கக்  கூடியதா?  என்பதைப்  பற்றி  நாம்  இந்த  வியாசத்தில்  விவரிக்கிறோம். மனிதனுக்குள்  புகுத்தப்பட்டிருக்கும்  மதப்பித்தானது  மதுவை  உட்கொண்டவனுக்கு  எப்படி  அவன்  சொந்த  புத்தி  மறைந்து  அவசியமற்றதும்,  ஒழுங்கும்  அறிவும்  அற்றதுமான  காரியங்களையே  நினைக்கவும்,  பேசவும்,  செய்யவும்  ஆளாகிறானோ  அதே  போல்  மத  வெறியானது  குறிப்பிட்ட ...

பகுத்தறிவு

பகுத்தறிவு

  “”பகுத்தறிவு”  பத்திரிகை  தொடங்கி  சற்று  ஏறக்குறைய  ஒரு  மாத  காலமே  ஆகின்றது.  நடந்த  வரை  லாபமும்  இல்லை  நஷ்டமும்  வெகு  சுருக்கமே  ஆகும்.  இந்தச்  சிறிது  காலத்தில்  சொல்ப  நஷ்டத்தில்  மக்களுக்கு  ஏதோ  ஒரு  அளவில் குறிப்பிடத்தக்க  ஒரு  பலனைக்  கொடுத்திருக்கின்றது  என்று  தைரியமாய்  சொல்லலாம்  என்றாலும்,  இனியும்  இது  நடத்தப்பட  வேண்டியது  அவசியமில்லை  என்றே  கருதுகிறோம்.  பத்திரிகைகள்  மனித  சமூகத்திற்கு  அவசியமானது  என்பதில்  நமக்குச்  சிறிதும்  அபிப்பிராய  பேதமில்லை.  ஆனால் அவை  இரண்டு  காரியங்களுக்கே  முக்கியமான  தேவையாகும்.  ஒன்று  உலக  வர்த்தமானங்களை  மக்களுக்கு  அறிவித்து  மக்களது  அறிவை  உலக  இயலை  உணர்ந்து  நடந்து  கொள்ளச்  செய்வது.  இரண்டு  புதிய  அபிப்பிராயங்களை  வெளிப்படுத்தி  மனித  சமூகத்தை  முற்போக்கடையச்  செய்வதாகும். ஆனால்  இன்றைய  பத்திரிகை  உலகமானது  இந்த  இரண்டு  காரியங்களின்  பேராலேயே  பெரிதும்  நடத்தப்படுவதாக  சொல்லப்படு மானாலும்,  உண்மையில்  பார்க்கப்  போனால்  வெகு  சில  பத்திரிகைகளே  இக்கொள்கைக்கேற்ப  நடத்தப்படுவதாகக்  காணப்படும். பத்திரிகை ...

தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார்

தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார்

தோழர் காந்தியவர்கள் தனது 35-சகாக்களுடன் ஆமதாபாத்தில் வைத்து சிறைப்படுத்தப்பட்டு விட்டார். இதைப்பற்றி சுதேசமித்திரனும், தமிழ் நாடும் ஹிந்துவும் எழுதி இருப்பதுபோல் இதில் ஒன்றும் அதிசய மில்லை. ஆனால் அப் பத்திரிகைகளுக்கு காங்கிரசின் குற்றத்தையும், காந்தியார் குற்றத்தையும், அவ்விருவர்களுடைய பயனற்ற வேலைக ளையும், எடுத்துக் காட்ட இப்பொழுதாவது ஓரளவு தைரியத்துடன் வெளி வந்தது ஒரு பெரிய ஆச்சரியமேயாகும். இதில் சுதேசமித்திரன் பத்திரிக்கையானது காந்தி அர°டைப் பற்றி தனது ஆக°டு 1-ந் தேதி தலையங்கத்தில் “மரண தண்டனைக்கு உள் பட்டிருக்கையில் ஜனங்களின் மதிப்புக்கு பாத்திரரான தலைவர்கள் காரிய சாத்தியமானவைகளாவும், பலன் தரத்தக்கவைகளாகவுமுள்ள வழிகளை விட்டுவிட்டு தங்களுடைய கொள்கையின் விசேஷத்தை மெய்பிப்பதி லேயே கருத்துடையவர்களாக இருக்கிறார்களென்றும், காங்கிரசை பின்பற்று வோரான சாமான்ய ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் உடனே – கைதியாகி சிறை செல்லுவதை விட்டுவிட்டு அனுபவ சாத்தியமான காரியங் களை கவனிக்கவேண்டும்” என்பதாகவும் எழுதியிருக்கிறது. இதன் கருத்து என்னவென்பதை நாம் அதிகம் விளக்க வேண்டிய...

ஏன் தோற்றார்?  – சித்திரபுத்திரன்   

ஏன் தோற்றார்? – சித்திரபுத்திரன்  

  கேள்வி :- தோழர் காந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்? பதில் :- காந்தியார் அரசியலில் தலையிட்டபோது சமூக சீர்திருத் தத்தைப்பற்றியே பிரதானமாய்ப் பேசி பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றார். அதாவது, தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் இந்து மு°லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும், மதுபானம் ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் சொன்னார். ஒவ்வொரு வீட்டிலும் ராட்டினம் சுற்றப்பட்டாலொழிய சுயராஜ்ஜியம் கிடைக்காதென்றார். நாளாக நாளாக தீண்டாமையை ஒழிப்பதை ஒரு பக்கம் பேசிக் கொண்டு மற்றொருபுரம் வருணாச்சிரம தர்மத்தை ஆதரித்தார். ஜாதிப்பிரிவு முறை ஜாதிப்படி தொழில் முறை அப்படியே இருக்கவேண்டும். ஆனால் ஜாதிகளில் மேல் கீழ் வித்தியாசம் கூடாது என்று சொல்லிப் பூசி மெழு குகிறார். பிராமணனாய் பிறந்தாலொழிய பிராமணனாக முடியாது என்று சொன்னார். அப்புரம் சுயராஜ்ஜியம் கிடைத்துவிட்டால் தீண்டாமை தானே ஒழிந்துவிடும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் கிளர்ச்சியால் தீண்டப்படாத வர்கள் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்...

“”சுயராஜ்யக்  கக்ஷி  செத்தது  அதுநீடூழி  வாழ்க”

“”சுயராஜ்யக்  கக்ஷி  செத்தது  அதுநீடூழி  வாழ்க”

  சுயராஜ்யக்  கக்ஷியாரின்  யோக்கியதை  நாடறிந்ததென்றும்  அதற்கு  நல்ல  பேர்  இல்லையென்றும்  ஒரு  வாரத்திற்குள்ளாகவே  அதன்  தலைவர்கள்  என்போர்கள்  தெரிந்து  கொண்டு  விட்டதால்,  அதை  அது  பிறந்த  “”தீட்டு”  வீட்டிற்குள்ளாகவே  கழுத்தைத்  திருகி  கொன்றுவிட்டு  காங்கிரசே  சட்ட  சபைகளுக்கு  போட்டி  போட  வேண்டும்;  ஆனால்  சுயராஜ்யக்  கக்ஷி  பிரமுகர்களே  சட்ட  சபை  போட்டி  கமிட்டியில்  இருக்க  வேண்டும்  என்று  ஏற்பாடு  செய்து  கொண்டார்கள்.  இது  மக்களை  ஏய்க்கச்  செய்த  சூழ்ச்சியே  ஒழிய,  மற்றபடி  சட்டசபையில்  போய்ச்  செய்யப்போகும்  காரியத்தில்  எவ்வித  மாறுதலும்  இல்லை  என்பதோடு,  சட்ட  சபைக்கு  அபேக்ஷகர்களாக  தெரிந்தெடுக்கப்  போகும்  நபர்களிலும்  எவ்வித  மாறுதல்களும்  ஏற்படப்  போவதில்லை. புரட்சி  துணைத் தலையங்கம்  27.05.1934  

தோழர்களே! கவலைப்படாதீர்கள்

தோழர்களே! கவலைப்படாதீர்கள்

காங்கிர° °தாபனங்கள் மூடப்பட்டது பற்றியும், காந்தீயம் தோற்றுப் போய் விட்டது பற்றியும் பலர் மகா விசனப்படுவதாகத் தெரிய வருகிறது. இன்றைய வரையில் காங்கிரசும், காந்தீயமும் நம் மக்களுக்கு என்ன வித மான பயனை உண்டாக்கிற்று என்பதைப்பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை. காங்கிர° ஏற்பட்டு ஏறக்குறைய ஐம்பது வருஷ காலமாகின்றது. ஐம்பது வருஷ காலத்தில் அரசாங்கத்தாரால் காங்கிர° கேட்டபடி (சீர்திருத் தங்கள் என்னும் பேரால்) எவ்வளவோ அதிகாரங்களும், பதவிகளும் இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்டுமிருக்கின்றன. இதன் பயனாய் நாட்டில் கோடீ°வரர்கள் பெருகினார்கள். பதினாயிரக்கணக்கான ஏக்கரா பூமியுடைய ஜமீன்தாரர்கள், மிரா°தாரர்கள் அதிகமானார்கள். மாதம் 1 க்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் பெரும் பதவியாளர் களும், உத்தியோக°தர்களும் ஏராளமானார்கள். மாதம் 1000, 10000 ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் வக்கீல்களும், டாக்டர்களும் லக்ஷக்கணக்கில் பெருகினார்கள். தவிர மற்றொருபுரம் பாடுபடாமல் தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழும் மக்கள் பலர் பெருகினார்கள். அதாவது...

தோழர்  ஈ.வெ.ரா.  ஈரோடு  விஜயம்

தோழர்  ஈ.வெ.ரா.  ஈரோடு  விஜயம்

  தோழர்களே! நான்  சிறைவாசம்  சென்றுவிட்டு  வந்ததைப்  பாராட்டுவதற்காக  என்று  இக்கூட்டம்  கூட்டப்பட்டு  என்னைப்பற்றி  பலர்  பலவிதமாகப்  புகழ்ந்து  பேசி  இருக்கிறார்கள்.  இது  ஒருவித  பழக்க  வழக்கத்தை  அனுசரித்திருப்பதாக  மாத்திரம்  நான்  கருதுகிறேனே  ஒழிய  இதில்  ஏதாவது  நல்ல  பொருள்  இருப்பதாக  நான்  கருதவில்லை.  முதலாவதாக  இப்பொழுது  நான்  மற்றவர்களைப்  போல்  சிறை  செல்ல  வேண்டுமென்று  கருதி  நானாக  சிரைக்குப்  போகவில்லை.  ஆனால்  சிறைக்குப்  போகக்  கூடிய  சந்தர்ப்பம்  ஏற்பட்டால்,  அதற்காக  பயந்து  பின்  வாங்காமல்  அதையும்  ஒரு  நன்மையாகவே  பயன்படுத்திக்  கொள்ளலாமென்பதைக்  காட்டுவதற்காகவே நான்  சிறை  செல்ல  நேர்ந்தது. அதாவது  குடி  அரசு  பத்திரிகையில்  என்னால்  எழுதப்பட்ட  ஒரு  சாதாரணமானதும்,  சப்பையானதுமான  வியாசத்திற்காகத்தான்  நான்  சிறைக்குப்  போக  நேரிட்டதே  தவிர,  மற்றப்படி  செல்லத்தக்க  ஒரு  சரியான காரியம்  செய்துவிட்டு  சிறைக்குப்  போகவில்லை.  சர்க்கார்  இந்தக்  “”குடி  அரசு”ப்  பத்திரிகையின்  பழைய  இதழ்களைப்  புரட்டிப்  பார்த்தால்  என்னை வருடக்கணக்காய்  தண்டிக்கக்கூடியதும்,  நாடு ...

தோழர்  ஈ.வெ.ரா.  விடுதலை

தோழர்  ஈ.வெ.ரா.  விடுதலை

  தோழர்  ஈ.வெ.ராமசாமி  அவர்கள்  15ந்  தேதி  ராஜமகேந்திரம்  ஜெயிலிலிருந்து  விடுதலையாகி,  16ந்  தேதி  சென்னை  வந்து  அங்கிருந்து  அன்றே  புறப்பட்டு  17ந்  தேதி  ஈரோடு  வந்து  சேர்ந்தார்.  அரக்கோணம்,  காட்பாடி,  ஜோலார்பேட்டை,  சேலம்  ஆகிய  ஸ்டேஷன்களுக்கு  ஆங்காங்குள்ள  சுயமரியாதை  இயக்கத்தைச்  சேர்ந்த  நண்பர்கள்  வந்து  சந்தித்துப்  பேசிப்  போனார்கள். ராஜமகேந்திரம்  ஜெயிலில்  வெயில்  கொடுமையால்  சிறிது  கருத்தும்  இளைத்தும்  போயிருக்கிறார்.  ஆனால்  உடல்  சௌக்கியமாய் இருப்பதாக  நினைத்துக்  கொண்டிருக்கிறார்.  சமீபத்தில்  வெயில்  கொடுமைக்காக  எங்காவது  குளிர்ச்சியான  இடத்துக்குப்  போகக்  கருதி  இருக்கிறார். ஜெயிலில்  தோழர்  ஈ.வெ.ரா.வுக்கு  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  முயற்சியில்  அகிலாஸ்  சௌகரியம்  கிடைக்கப்பட்டது  என்றாலும்,  அந்த  ஜெயிலில்  கிளாஸ்  பிரிவுகளுக்குப்  போதிய  சௌகரியம்  இல்லாததால்  ஆகிலாஸ்  கைதியாகவே  இருந்து  வருகிறேன்  என்று  ஜெயில்  அதிகாரிகளுக்குச்  சொல்லிவிட்டு  பி.கிளாஸ்   கைதியாகவே  இருந்து  வந்தார்.  அங்கு  சாப்பாடும்  ஒரு  பத்திரிகையும்  தவிர  மற்றபடி  இ  கிளாஸ்  கைதி  போலவே ...

ருஷியாவின் வெற்றி  ஐந்து வருட திட்டத்தின் பலன்

ருஷியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன்

  ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது.  சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன் குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர் களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு கின்றனர்.  ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடை முறை யில் சாத்தியமாகாது...

காங்கிரஸ்  நிலை

காங்கிரஸ்  நிலை

  அகில  இந்திய  தேசிய  காங்கிரஸ்  என்பது  தோழர்  காந்தியார்  அவர்கள்  கைப்பிள்ளையான  பிறகு,  தக்கதொரு  விளம்பரமும்,  மதிப்பும்  பெற்றது  என்பதை  யாரும்  மறுக்க  முடியாது.  ஆனால்,  அதனால்  ஏற்பட்ட  நன்மையென்ன  என்று  பார்ப்போமானால்  ஒன்றுமில்லை  என்று  சொல்லுவதோடு  மாத்திரம்  நின்று  விடுவதற்கில்லாமல்,  இந்திய  மனித  சமூகத்தின்  பத்து  வருஷத்திய  முன்னேற்றத்தைத்  தடுத்து  விட்டதோடு,  இந்தியா  தேசத்தை  இருபது  வருஷ  கால  தூரம்  பின்னால்  போகும்படியும்  திருப்பிவிட்ட  தென்பது  நமது  அபிப்பிராயம்.  இது  பொது  விஷயங்களைப்  பற்றியதாகும். இந்திய  அரசியல்  விஷயத்தைப்  பற்றி  கவனிப்போமானால்,  காங்கிரசின்  இன்றைய  நிலையானது  192324ம்  வருஷத்தின்  நிலையே  யாகும்.  எப்படி  என்றால்  “”ஒத்துழையாமை  தற்காலீகமாக  ஒத்திவைக்கப்பட்டது”  என்ற  தீர்மானம்  அப்போது  செய்தவுடன்  அது  எந்த  நிலை  அடைந்ததோ  அதே  நிலையை  அதாவது  “”சட்ட  மறுப்பை  தற்காலீகமாக  நிறுத்தி  வைக்கப்பட்டிருக்கிறது”  என்கின்ற  நிலைக்கு  வந்திருக்கின்றது.  இதைத்  தெளிவான  வார்த்தையில்  சொல்ல  வேண்டுமானால்,  காங்கிரஸ்  10  வருஷத்திற்கு  முன் ...

முஸ்லீமும்  பிராமணரும்  ஒன்றா?

முஸ்லீமும்  பிராமணரும்  ஒன்றா?

  வீரசிங்கம்பேட்டைக் கலவர வழக்கை  விசாரிக்க  ஆரம்பித்துவிட்டார்கள்.  அதற்காக  ஸ்பெஷல்  மாஜிஸ்ட்டிரேட்டும்  ஏற்படுத்தி  இருக்கிறார்கள்.  ஒருவாரமாக  விசாரணையும்  நடந்துவருகிறது. இவ்  வழக்கு  நடந்துவருகையில்  அப்பிரதேச  நிலையைச்  சரிப்படுத்தத்  தண்டப்  போலீசாரைச்  சர்க்கார்  நியமித்திருக்கிறார்கள்.    இத்  தண்டப்  போலீசின்  செலவினத்தை  இக்கிராமவாசிகளே  ஒப்புக்கொள்ள வேண்டுமென்று  சர்க்கார்  அறிக்கை  கூறுகிறது.  இதைப்பற்றி  நாமெதும்  கூற  விரும்பவில்லை.  ஆனால்  இத்  தண்டப்  போலீசுக்கு  ஆகும்  செலவீனம்  இருக்கிறதே  அதைப்  பற்றி  விபரம்  கூறும்போது  மேற்படி  கிராமவாசிகள்  கொடுக்க  வேண்டுமென்று  சொல்லிவிட்டு  மேற்படி  கிராமத்திலுள்ள  “பிராமணர்கள்  முஸ்லீம்கள்’  இவர்கள்  நீங்கலாக  என்று  கூறியிருப்பதுதான்  நமக்குப்  பெரும்  சந்தேகத்தை  உண்டாக்குகிறது. இன்றைக்கெல்லாம்  மாதம்  450  ரூபாய்க்குள்தான்  டிவிஷனல்  மாஜிஸ்ட்டிரேட்  தெண்டச்  சிலவு  மாதா மாதம்  விதிக்கக்கூடும்.  300  வீடுகள்  அங்கே  இருக்கிறதென்று  வைத்துக்கொண்டால்,  வீட்டுக்கு  மாதம்  ஒன்றரை  ரூபாய்  வரக்கூடும்.  ஒரு  வருடத்திற்குப்  பதினெட்டு  அல்லது  இருபது  ரூபாய்க்கு  அதிகம்  வருவதற்கில்லை.  இது  ஓர் பிரமாதமான  சிலவென்றுகூட  நாம் ...

கத்தோலிக்க மத°தர்கள் யோக்கியதை

கத்தோலிக்க மத°தர்கள் யோக்கியதை

அமெரிக்க கத்தோலிக்க தினசரியிலிருந்து கீழ்கண்ட செய்தியை நியூயார்க் உண்மை நாடுவோர் (கூசரவா ளநநமநச) பத்திரிகை பிரசுரித்திருக்கிறது.  அதாவது சிங்சிங் ஜெயிலில் உள்ள பல திறப்பட்ட மதங்களைச் சார்ந்த கைதிகளின் விபரம் கீழ் வருமாறு:- கத்தோலிக்கர்கள்                                                                 855 பிராட்ட°டண்ட்                                                      518 யூதர்கள்                                                                         177 கிறி°தவ விஞ்ஞானிகள்                                               20 மகமதியர்கள்                                                             2 புத்தர்கள்                                                                         1 மதமற்றவர்கள்                                                        8 1,581 சிங்சிங் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் கால்வாசிப் பேர்களே கத்தோலிக்கர்களாக இருந்தும், நாட்டில் குற்றம் செய்து சிறைக்காவலில் அடைபட்டிருக்கும் (அ) யோக்கியர்களின் கணக்கு 100-க்கு 50-க்கு மேல் ஆகின்றது.  ஆனால் மதமற்றவர்களின் கணக்கு 1/2 பர்செண்டேயாகும். மதவெறிக்குத் தகுந்தார்போல் குற்றவாளிகளின் எண்ணிக்கை விபரம் காணப்படுவதை வாசகர்கள் கவனிப்பதோடு, மதம் மக்களை யோக்கியப் பொருப்பற்றவர்களாக்கவே பயன்படுத்துகிறதென்பதையும் இதுசமயம் ஞாபகப் படுத்திக் கொள்ளவும் விழைகின்றோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 23.07.1933    

சுயராஜ்யக்  கட்சி

சுயராஜ்யக்  கட்சி

  அடுத்த  தேர்தலை  மனதில்  வைத்துக்கொண்டு  மீண்டும்  காங்கிரஸ்காரர்கள்  தங்கள்  தேர்தல்  முழக்கத்தை  ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்கள்  தேர்தல்  முழக்கம்  அளவு  கடந்தது  என்று  சொல்லத்தக்க  நிலைக்கு  அவர்கள்  வந்துவிட்டார்கள்.  அத்துடன்  மட்டுமல்ல.  இவர்கள்  இந்நாட்டு  மக்களை  என்றென்றும்  தங்கள்  காலின்  கீழ்  மிதித்தே  வாழ்வதற்கு  எதைச்  செய்ய  வேண்டுமோ  அதையும்  செய்து  வருகிறார்கள். இம்  முறையானது  இவர்கள்  ஏழை  மக்களை  இதுவரை  ஏமாற்றியதைவிட  கொடுமையானது. சீர்திருத்தத்தில்  வரும்  பங்குவிகிதங்கள்  இந்நாட்டில்  இதுவரையில்  இல்லாத  முறையிலெல்லாம்  வரவிருக்கிறது.  இதை  மக்கள்  சாதாரணமாகக்  கவனித்தால்  தங்களின்  தந்திர  முறைகளை  உணர்ந்து  தங்களைத்  தட்டிப்  பேசித்  தாக்க  ஆரம்பிப்பார்கள்.  இப்படி  மக்கள்  விழிக்காதிருக்க  என்ன  செய்வதென்று  யோசித்து  அத்  துறையில்  இறங்கிவிட்டார்கள்.  சீர்திருத்தத்தில்  தங்களுக்கு  வெறுப்பிருப்பது  போலவும்  வெறுப்புடைய  இந்த  சீர்திருத்தத்தால்  மகத்தான  பிளவு  இந்நாட்டில்  உண்டாகுமென்று  தாங்கள்  நம்புவதாகவும்  இத்தகைய  பயனற்றதையும்,  பிளவு  உடையதையும்,  வெள்ளைக்காரர்கள்  தங்கள்  மீதும்  தங்கள்  நாட்டுமீதும்  பலவந்தமாக  திணிப்பதாகவும், ...

காந்தீயத்தின் கதி

காந்தீயத்தின் கதி

தோழர் காந்தியவர்கள் அரசியலில் தலையிட்டு தலைமை °தா னத்தை அடைந்ததற்கு முக்கிய காரணம் ஒருபுறம் அவர் போட்டுக்கொண்ட மத சம்மந்தமான வேஷமும், கடவுள் சம்மந்தமான பேச்சும் மற்றும் சத்தி யம், அகிம்சை, சத்தியாக்கிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும், மற்றொரு புறம் அவரது சிஷ்யர்கள்  அரசிய லின் பேராலும், தேசீயத்தின் பேராலும், தங்கள் வாழ்நாளைக் கழிக்க ஏற்பாடு செய்துகொண்ட தொண்டர்கள், தேசீய வாதிகள், பத்திராதிபர்கள் ஆகிய கூட்டத்தார்கள் காந்தியாரைப்பற்றி அவர் ஒரு ரிஷி  என்றும், முனிவர் என்றும், கிறி°து என்றும், நபி என்றும் மகாத்மா என்றும் விஷ்ணுவின் அவதாரமென்றும், சொல்லி பிரசாரம் செய்ததும், இனி ஒருபுறம் காந்தியைக் கடவுளாகவும், விஷ்ணுவாகவும் மற்றும் பலவிதமாகவும் சித்திரங்கள் எழுதி படம் போட்டு விளம்பரம் செய்ததும், மற்றும் லௌகீகத்திலும், வைதீகத் திலும் விளம்பரம் பெறவும் சுயகாரிய சித்தி பெறவும் ஆசைப்பட்ட பணக் காரர்களும், படித்தவர்களும் முறையே லக்ஷக்கணக்காகத் திரவிய சகாயமும்...

அன்சாரியும்  அபேதவாதமும்

அன்சாரியும்  அபேதவாதமும்

  அளவுக்கு  மேற்பட்ட  பிரசாரத்துக்குப்  பின்  அகில  இந்திய  காங்கிரஸ்  காரியக்கமிட்டி  அங்கத்தினர்களும்,  அகில  இந்திய  சுயராஜ்யக்  கட்சியின்  தூண்களும்  ராஞ்சியில்  கூடினார்கள்.  காந்தியார்,  ஆச்சாரியார்,  சரோஜினியார்  முதலிய  பழைய  பிரபல  தலைவர்கள் அங்கு  விஜயமானார்கள்.  அந்தரங்கமாகவும்,  பகிரங்கமாகவும்,  சம்பாஷணை  மூலியமும், பல  கூட்டங்கள்  நடந்தது.  கடைசியாய்  சில  தீர்மானங்கள்  செய்ததாக  எல்லா  பத்திரிகைகளுக்கும்  கிடைக்கும்படி  செய்தி  அனுப்பி  இருக்கிறார்கள். இது  வரையில்,  சுயராஜ்யக்  கட்சியார்  சட்டசபையில்  போய்  என்ன  செய்யப்போகிறோம்  என்பதை  பற்றி  பல  பிரசங்கங்கள்  செய்திருக்கிறார்கள்.  இவையாவும்  ஒன்றுக்கொன்று  மிகுந்த  முரண்பட்டதாகவே  இருந்து  வந்தது.  சீர்திருத்த  அறிக்கையை  கண்டிப்பது  மட்டும்  எங்கள்  நோக்க  மென்பவர்களும்,  முஸ்லீம்களுக்கு  அதிக  சலுகை  காட்டப்பட்டதை  மட்டும்  கண்டித்தவர்களும்  சட்ட  சபையில்  புகுந்து  சர்க்காரை  திக்கு  முக்கலாடச்  செய்வதே  எங்கள்  நோக்கமென்றவர்களும்,  காந்தி  சொன்ன  ஆலயப்பிரவேச  தீர்மானத்துக்காகவே  சட்ட  சபை  போகிறோம்  என்றவர்களும்,  சட்ட  சபையில்  வரும்  ஆலயப்பிரவேச  மசோதாவை  தோற்கடிக்கவே  நான்  போகிறேன் ...

“ஊஹஞஐகூஹடு”                                                 (“மூலதனம்”)

“ஊஹஞஐகூஹடு”                                                 (“மூலதனம்”)

பொது உடமைக் கொள்கைகளைப் பற்றிய நூல்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவதும் அது சம்பந்தமான எவ்வித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சமாதானம் காணக் கூடியதுமான ஒரு புத்தகம் எது என்றால் காரல் மார்க்° அவர்களால் சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட (ஊயயீவையட)  கேப்பிட்டல் என்கின்ற ஆங்கிலப் பெயருடைய புத்தகமே யாகும். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் இதற்கு வேண்டிய விஷயங்களைத் தொகுக்கவும், மேல் ஆதாரங்களைக் கண்டு பிடிக்கவும் தோழர் காரல் மார்க்° அவர்கள் 1485 பு°தகங்களை வாசித்துப் பார்த்து விபரம் தெரிந்து கொண்ட பிறகு அந்நூலை எழுதி இருக்கிறார். ஜெர்மனியில் கென்சிங்டன் என்னுமிடத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு அரையில் இருந்து கொண்டு இந்த புத்தகம் எழுதி இருக்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன் மா°கோவில் காரல் மார்க்° இறந்த 51 வது வருடப் பூர்த்திவிழாக் கொண்டாடும்போது மேல்கண்ட கட்டிட அரை போல் மா°கோவில் ஒரு அரை கட்டி அதில் மேற்குறிப்பிட்ட 1485...

“குடி அரசை” ஒழிக்க பண வசூலாம்

“குடி அரசை” ஒழிக்க பண வசூலாம்

“குடி அரசை” எதிர்த்துப் போராட கத்தோலிக்கர்கள் நிதி என்ற பெரிய தலைப்பின் கீழ் “கத்தோலிக் லீடர்” என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு முறை யீடு காணப்படுகிறது. கத்தோலிக்க கிறி°தவ பாதிரிகள் சு.ம. இயக்கத்தின் மீதும், ‘குடி அரசின்’ மீகும், ஆத்திரங்கொண்டு, அவைகளை அழிப்பது என்கிற முடிவு கொண்டு நிதி வசூல் செய்து வருகிறார்கள்.  அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இது வரையிலும் ரூ. 250க்கு மேல் பணம் சேர்த்திருப்பதாகவும் நமக்குத் தெரிய வருகிறது.  சபாஷ்! கத்தோலிக்கர்களே!! மெச்சினோம் புத்திசாலித்தனத்தை!!! குடி அரசு – செய்திக் குறிப்பு – 16.07.1933

கதர்

கதர்

கதரைப் பற்றியும், அதை அரசியல் பிழைப்புக்காரர்கள் எப்படி உபயோகித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றியும், கதர் புரட்டு என்கின்ற தலைப்பின் கீழ் இதற்கு முன் பல வியாசங்கள் எழுதியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்திருக்கின்றோம். இதன் பயனாய் அரசியல் வாழ்வுக்காரர்களும், அரசியலில் கலந்து கொள்ளுவதன் மூலமாய் மக்களை ஏமாற்றி பயனடையக் கருதும் சில சுய நலக்காரர்களும், தவிர மற்ற மக்கள் யாவரும் கதரை அடியோடு பஹிஷ்கரித்து இருப்பதும் யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் இப்போதும் அதைப் பற்றி ஏன் எழுதுகிறோம் என்று சிலர் கருதலாம். இது எழுதவேண்டியதற்கு ஏற்பட்ட முக்கிய காரணம் என்னவென் றால், சுயமரியாதை இயக்கத்தை பழிக்கவும், தூற்றவும், அதன் மீது மூடப் பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாக்கவுமான, இழிதகைப் பிரசாரத்துக்கு அனுகூலமாக சில காங்கிர°காரர் என்று சொல்லிக்கொண்டு சோம்பேரி யாய் இருந்து வயிர்வளர்க்கும் வீணர்கள் “சுயமரியாதைக்காரர்கள் கதரை வெறுக்கிறார்கள்” என்றும் “ஏழை மக்களைக் காப்பாற்றும் கதருக்கு விரோதமாய் இருந்து ஏழைகளுக்கு துரோகம்...

சென்னை  கார்பரேஷனில்

சென்னை  கார்பரேஷனில்

  படைஎடுப்பா? சென்னையில்  மே  மாதம்  கடைசி  வாரத்தில்  நடக்கும்  கார்பரேஷன்  கூட்டத்தன்று,  சென்னையில்  வேலையற்று  பசி  பட்டினியால்  வருந்தி வாடும்  தொழிலாளர்களின் கூட்டம்  ஒன்று  திரண்டு  சென்று  சென்னைக்  கார்பரேஷன்  கட்டிட  வாயிலில்  முற்றுகையிடுமென்று  இன்று  ஓர்  செய்தி  கிடைத்திருக்கிறது.  இது  வாஸ்தவமானால்  எந்த  எண்ணத்துடன்  இது  ஆரம்பிக்கப்பட்ட  போதிலும்  இதை  வரவேற்கிறோம். இம்மாகாணத்தின்  தலைநகரான  சென்னையில்  “”உயர்தரப்  படிப்பு”  படித்தவர்கள்  மட்டும்  வேலையில்லாது  2400க்கு  அதிகம்  இருப்பதாகவும்,  இவையன்றி,  தங்க  இடமோ  செய்ய  வேலையோ  இல்லாது,  எச்சல்  இலை  சோற்றை  தின்றுவிட்டு டிராம்வே  லையன்களிலும்,  வால்டோக்ஸ்  ரோட்டிலும்,  சாக்கடை  ஓரங்களிலும்  படுத்துறங்கி  காலம்  கழிப்போர்  8000க்கு  அதிகம்  இருப்பதாகவும்,  இவைகளன்றி மாமூல்  தொழிலற்ற  தோழர்களும்  உண்டு.  உணர்ந்தவர்களுக்கு  இச்செய்தி  ஆச்சர்யத்தைக்  கொடுப்பதிற்கில்லை. ஆனால்  இந்த  வேலையற்ற  தொழிலாளிகளைத்  திரட்ட  முயலுகிறவர்கள்  பெயரைக்  கேட்டே  சிறிது  கவலைப்படுகிறோம்.  தான்  ஏழைகளின்  தாதா!  என்று  பத்திரிகைகளில்  விளம்பரப்படுத்திக்  கொண்டு  ஏமாந்தவர்களை  உனக்கு ...

காங்கிரஸ்

காங்கிரஸ்

  காங்கிரஸ்  காரியக்கமிட்டியும்  அகில  இந்தியக்  காங்கிரஸ்  கமிட்டியும்  மே  N  18,  19ந்  தேதிகளில்தான்,  பாட்னாவில்  நடைபெறுமாம்.  அதற்கு  முன்பு  2ந்தேதி  ராஞ்சியில்  அகில  இந்திய  சுயராஜ்யக்  கக்ஷி  கூட்டம்  நடைபெறும்  என்று  தெரிகிறது.  இவ்விரண்டு  கூட்டங்களின்  ஆரம்ப  வேகம்  தடைபெற்று  விட்டாலும்  கூட்டங்கள்  என்னமோ,  நடைபெறும்.  காந்தி  சொன்னபடி  சட்டசபை  பிரவேசமும்,  சட்ட  மறுப்பு  நிறுத்தத்தீர்மானமும்  முதலில்  நடைபெறும்.  எதிர்காலத்தில்  இவர்கள்  வேலைதிட்டம்  என்ன  என்பதை  கமிட்டி  முறையே  வெளியிட்டுவிடும்.  கமிட்டி  கூடும்  தேதிகளில்  சில  தலைவர்கள்  அபிப்பிராயப்  பேதப்படுவது  போலவே,  கமிட்டிகளின்  வேலைத்திட்டம்  தயாரிப்பதில்  அபிப்பிராய  பேதமிருக்கிறது.  புது  திட்டம்  என்ன  சொல்லப்போகிறது  என்பதை  பார்ப்போம். எப்போ அடிமையென்றும்  ஆரியனென்றும்  அகல  வைத்து  ஆண்டுவரும்  ஆண்மைகொண்ட  அர்ப்பப்  பயல்களின்  அகம்பாவங்கள்  அடியோடொழியும்  அன்னாள்  வருவதெப்போ? பெண்களெல்லாம்  பேதையென்றும்,  பிள்ளைபெறும்  பிண்டமென்றும்,  பின்புத்திக்காரரென்றும்,  பிராணன்போக  பித்து  தரும்  பிறவியென்றும்  பிராணிகள்  போல்  பிதற்றிவரும்  பிரகஸ்பதிகளின்  பேடித்தனம்  பிணமாகும்  கால ...

தொழிலாளர்

தொழிலாளர்

  மாமூல்  சம்பளத்தில்  பாதிக்குக்  குறைவாகக்  குறைப்பதை  பம்பாய்  நெசவு  ஆலைத்  தொழிலாளர்கள்  கண்டிக்கிறார்கள்.  இதற்கறிகுறியாகவே  ஒரு மாத  நோட்டீஸ்  கொடுத்து  நேற்று  23ந்  தேதியிலிருந்து  இன்றுடன்  ஏழு  தினங்கள்  பொது  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில்  வேலை  நிறுத்தக்காரர்களின்  எண்ணிக்கை  மூன்று  ஆயிரமேயாகும். இன்றுவரை சுமார்  ஒரு  லக்ஷத்துக்கு  மேல்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தத்தில்  கலந்திருக்கிறார்கள்.  பல  தலைவர்கள்  கைது  செய்யப்பட்டும்  இதுவரையில்  மில்  முதலாளிகளோ  சர்க்காரோ  சமாதானம்  செய்ய  முன்  வரவில்லை.  பம்பாய்  கார்ப்பரேஷன்  தலைவர்  இன்று  சமாதானத்துக்கு  முயல்கிறார்.  டெல்லியிலும்,  நாகபுரியிலும்,  கராச்சியிலும்  உள்ள  நெசவுத்  தொழிலாளிகள்  அனுதாபங்  காட்டுகிறார்கள்.  விரைவில்  பரிகாரம்  ஒரு  முடிவேற்படுமா? புரட்சி  துணைத் தலையங்கம்  29.04.1934

தொழிலாளர்

தொழிலாளர்

  மாமூல்  சம்பளத்தில்  பாதிக்குக்  குறைவாகக்  குறைப்பதை  பம்பாய்  நெசவு  ஆலைத்  தொழிலாளர்கள்  கண்டிக்கிறார்கள்.  இதற்கறிகுறியாகவே  ஒரு மாத  நோட்டீஸ்  கொடுத்து  நேற்று  23ந்  தேதியிலிருந்து  இன்றுடன்  ஏழு  தினங்கள்  பொது  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில்  வேலை  நிறுத்தக்காரர்களின்  எண்ணிக்கை  மூன்று  ஆயிரமேயாகும். இன்றுவரை சுமார்  ஒரு  லக்ஷத்துக்கு  மேல்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தத்தில்  கலந்திருக்கிறார்கள்.  பல  தலைவர்கள்  கைது  செய்யப்பட்டும்  இதுவரையில்  மில்  முதலாளிகளோ  சர்க்காரோ  சமாதானம்  செய்ய  முன்  வரவில்லை.  பம்பாய்  கார்ப்பரேஷன்  தலைவர்  இன்று  சமாதானத்துக்கு  முயல்கிறார்.  டெல்லியிலும்,  நாகபுரியிலும்,  கராச்சியிலும்  உள்ள  நெசவுத்  தொழிலாளிகள்  அனுதாபங்  காட்டுகிறார்கள்.  விரைவில்  பரிகாரம்  ஒரு  முடிவேற்படுமா? புரட்சி  துணைத் தலையங்கம்  29.04.1934

காளியப்பன்

காளியப்பன்

  நாகை  தோழர்  காளியப்பன்  அவர்கள்  மலாய்  நாடு  சுற்றுப்  பிரயாணம்  இவ்வாரமில்லை.  இன்னும்  இரண்டு  வாரத்திற்குள்  அவர்  மலாய்  நாட்டிற்குப்  புறப்படுவார். தோழர்  காளியப்பனின்  “”டார்வின்”  என்ற  குழந்தை  இறந்ததென்று  தெரிய  விசனிக்கிறோம்.  குழந்தையை  இழந்த  வருத்தத்திலுள்ள  அவருக்கு  ஆறுதல்  கூறுகிறோம்.  அடுத்தவாரம்  ஈரோட்டிற்கு  வருவார். புரட்சி  இரங்கல் செய்தி  29.04.1934

பகுத்தறிவு

பகுத்தறிவு

  நமது  “”பகுத்தறிவு”  தினசரியானது  நாம்  எதிர்பார்த்ததற்கு  அதிகம்  வளர்ச்சியடைந்து  வருகிறது.  நேற்றுடன்  ஒவ்வொரு நாளும்  3200  காப்பிகள்  வெளிவந்தது.  தமிழ்நாட்டில்  நமதியக்க  சம்பந்தமாக  உள்ள  சகல  செய்திகளும்  பிரதி தினமும்  தாராளமாக  வெளிவர வேண்டு மென்பதற்காகவே  இத்தினசரி  ஆரம்பிக்கப்பட்டது.  தினசரி  தனது  கடமையை  தைரியமாகச்  செய்ய  ஊக்கம்  காட்டிய  வெளியூர்  சந்தாதாரர்களையும்  ஏஜண்டுகளையும்  பாராட்டுகிறோம்.  மூவாயிரத்து  இருநூறாக  இருப்பது  இன்னம்  அதிகமாகாததற்கு காரணம்  சந்தா  அனுப்பாத  சந்தாதாரர்களுக்கும்  முன்பணம்  அனுப்பாத  ஏஜண்டுகளுக்கும்  நாம்  பத்திரிகை  அனுப்பாததேயாகும்.  இன்னும்  இரண்டு  தினத்துக்குள்  சேலம்,  திருச்சி,  திருப்பத்தூர்,  பொள்ளாச்சி,  கோவை  இவ்வூர்  ஏஜண்டுகள்  கேட்டுக்  கொண்டபடியால்  அன்றாடம்  பேப்பர்  மாலைக்குள்  கிடைக்கும்படி  செய்ய  ஏற்பாடு  செய்யப்படும். புரட்சி  அறிவிப்பு  29.04.1934

பம்பாயில்  பயங்கர  வேலை  நிறுத்தம்

பம்பாயில்  பயங்கர  வேலை  நிறுத்தம்

  உலக  முழுவதும்  தொழிலாளர்  நிலைமை  படுமோசம்.  இந்தியாவிலோ  சொல்ல  வேண்டியதில்லை.  எண்ணெய்க்  கொப்பரையில்  வெந்து  கொண்டிருக்கிறார்கள்  தொழிலாளிகள்.  பொருளாதார  நெருக்கடி  சில  காலமாக  மனித  வர்க்கத்தை  இறுகப்பிடித்து  உலுக்கி  வருகிறது.  கல்நெஞ்ச  முதலாளிகள்  ஈவிரக்கமின்றிச்  சம்பளக்  குறைப்பால்  தொழிலாளிகளை உயிரோடு  உடம்பை  உரிக்கும்  சித்திரவதை  செய்து  வருகிறார்கள்.  இன்றைய  இந்தியத்  தொழிலாளர்  வாழ்வோ  அழுவாரற்ற  பிணமாகவும்,  சீந்துவாரற்ற  சவமாகவுங்  கிடக்கிறது. கடந்த  ஒரு  வாரமாய்ச்  சம்பளத்தைக்  குறைத்ததினால் பம்பாய்த் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  பம்பாய்  ஆலைகள்  57ல்  43  ஆலைகள்  மூடப்பட்டுவிட்டன.  8  ஆலைகள்  மாத்திரம்  திண்டாட்டத்தின்  பேரில்  வேலை  நடத்தி வருகின்றன.  80  ஆயிரம்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  பம்பாயில்  துப்பாக்கிப் பிரயோகமும்,  அடிதடிகளும், கல்வீச்சும்  நடந்த  மயமாயிருக்கிறது.  உயிர்ச்  சேதமும்,  படுகாயமும்  கோரக்  காட்சியளிக்கிறது.  பம்பாய்  அமளி  துமளியாய்க்  கிடக்கிறது. பொறுப்பு  வாய்ந்த  இந்திய  சர்க்கார்  தொழிலாளிகளை  அனாதைக்  குழந்தைகளாய்ப்  பாவித்துக்  கைவிட்டுவிட்டதாக ...

மே தினம்

மே தினம்

மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள். தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து...