Author: admin

இன்னுமா காந்தீயம்?

இன்னுமா காந்தீயம்?

காந்தீயம் படுத்துவிட்ட தென்றும், அதனால் இதுவரையில் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும், அதை இனியும் பரீக்ஷிப்பதால் யாதொரு பயனும் ஏற்படாது என்பதோடு அது முட்டாள் தனமும், தற்கொலையு மாகும் என்றும், இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இன்று ஒரே அபிப் பிராயமாக இருந்து வருகின்றது. ஆனால் தோழர் காந்தியவர்கள் மாத்திரம் தான் “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்ற பழமொழிபோல் தன்னுடைய சொந்த கௌரவத்தை முன்னிட்டு இதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாக காட்டிக்கொண்டு இருப்பது தான் தோல்வி அடையவில்லை என்றும் தனது கொள்கை பயனற்று (வெத்தி வேட்டாய் பு°°ஸென்று) போகவில்லை யென்றும், பாமர ஜனங்களைக் கருதும்படி செய்யவேண்டும் என்கிற துறை யிலேயே தனது முயற்சியை எல்லாம் செலவழித்து வெகுதீவிரமாய் உழைத்து வருகிறார். இந்த உழைப்புக்கு அவருடைய பிரதம சிஷ்யர்கள் சிலரும் காந்தீயத்தாலன்றி வாழ முடியாத சில காந்தீய சன்னியாசிகளும், காந்திமட சன்னியாசிகளும் தங்கள் தங்களால் கூடிய அளவு உதவி புரிந்து வருகின்றார்கள். என்றாலும்...

ஜன  நாயகமா?  பண  நாயகமா?

ஜன  நாயகமா?  பண  நாயகமா?

  உலகில்   ஜனநாயகம்  என்னும்  வார்த்தை  மிகவும்  செல்வாக்குப்  பெற்றது  என்பதில்  யாருக்கும்  ஆட்சேபனை  இருக்காது. செல்வாக்குப்  பெற்ற  வார்த்தைகள்  எல்லாம்  உண்மையானதும்,  நேர்மையானதும்  என்று  சொல்லிவிட  முடியாது. செல்வாக்குப்  பெற்ற  வார்த்தைகள்  பெரும்பான்மையும்  சில  சுயநலங்கொண்ட  மக்களால்  உள்  எண்ணத்தோடு  கற்பிக்கப்பட்டு  பாமர  மக்களுக்குள்  பிரசாரம்  செய்யப்பட்டதின்  பயனாகவே  செல்வாக்கடைய  முடிந்ததாக  இருக்குமே  தவிர  உண்மையில்  அதன்  யோக்கியதையால்    ஏற்படும்  பயன்களால்  செல்வாக்கு  ஏற்பட்டதென்று  சொல்லிவிடவும்  முடியாது. புண்ணியம்,  சத்தியம்,  அஹிம்சை,  ஜீவகாருண்யம்,  ஒழுக்கம்,  கற்பு  என்பன  போன்ற  வார்த்தைகளுக்கு  நாட்டில்  மதிப்பும்  செல்வாக்கும்  இருந்து  வருகின்றது  என்றாலும்  அவைகள்  உபயோகப்படும்  மாதிரியும்  காரியத்தில்  அனுஷ்டிக்கப்படும்  தன்மையும்  எப்படி  இருந்து  வருகின்றது  என்பதை  நாம்  எடுத்துக் காட்ட  வேண்டியதில்லை.  இவை  பெரும்பாலும்  வலுத்தவன்  இளைத்தவனை  அடக்கியாளும்  காரியத்திற்கும்  தன்  தன்  சுயநலத்துக்குமே  பெரிதும்  பயன்படுத்தப்படுகின்றன  என்பது  கண்கூடு. இம்மாதிரியிலேயே  தான்  ஜனநாயகம்  என்கின்ற  வார்த்தையும்,  பணநாயகத்துக்கு  அடிமை  அதாவது  பாமர ...

பார்ப்பன  பத்திரிகைகளும்

பார்ப்பன  பத்திரிகைகளும்

  சர்.  ஷண்முகமும் தோழர்  ஆர்.கே.  ஷண்முகம்  இந்தியா  முழுவதுக்கும்  தெரிந்த  ஒரு  முக்கியஸ்தர்.  அவருடைய  நடவடிக்கைகளும்,  பேச்சுக்களும்  மக்கள்  கவனிக்கப்படத்தக்கது  என்பதில்  யாருக்கும்  ஆ÷க்ஷபனை  இருக்காது.  பலர்  எதிர்பார்க்கவும்  கூடும்.  இந்நிலையில்  தேசியப்  பத்திரிகைகள்  என்று  சொல்லிக்  கொள்ளும்  பார்ப்பனப்  பத்திரிகைகள்  அவரது  நடவடிக்கைகளை  யோக்கியமாய்  பிரசுரிக்காமலும்,  பிரசங்கங்களையும்  கேள்விகளையும்,  பதில்களையும்  சிறிது  கூட  பிரசுரிக்காமலும்  இருந்து  வருகின்றன.  சர். ஷண்முகம்  அவர்கள்  இந்திய  சட்ட  சபையில்  ராணுவ  சம்மந்தமான  பிரச்சினையில்  கொடுத்த  ஒரு  தீர்ப்பு  விஷயமாய்  பார்ப்பனப்  பத்திரிகைகள்  பாராட்டாவிட்டாலும்,    விஷமத்தனமான  பரிகாசங்களைச்  செய்தன. தோழர்கள்  ராஜகோபாலாச்சாரியார்,  சத்தியமூர்த்தி  அய்யர்,  ஜம்பை  வைத்தியனாத  பாகவதர்,  ரமண  ரிஷி  போன்றவர்கள்  விஷயங்களைப்  பெருக்கி  கண்ணு,  மூக்கு  வைத்து  கலம்  கலமாய்  அலங்கரிக்கின்றன. இந்த  மாதிரியான  காரியங்களால்  பார்ப்பனர்களுக்குக்  கீர்த்தியும்,  மேன்மையும்  ஏற்பட்டு  விட்டதாகவோ,  பார்ப்பனரல்லாதாருக்கு  அபகீர்த்தியும்,  தாழ்மையும்  ஏற்பட்டு  விட்டதாகவோ  நாம்  சொல்ல  வரவில்லை.  இந்த  மாதிரியான  நிலையில்  பார்ப்பனர் ...

நான்

நான்

  நான்  காங்கிரசில்  சேர்ந்து  விடப்  போகிறேன்  என்பதாக  பலர்  எனக்குப்  பரிகாசக்  கடிதங்களும்,  சில  துர்  எண்ணங்கள்  கற்பிக்கிற  கடிதங்களும்  எழுதி  வருகிறார்கள்.  நான்  காங்கிரசில்  சேருவதாக  வைத்துக்  கொண்டு  பார்த்தாலும்,  காங்கிரசுக்கு  மகத்தான  செல்வாக்கும்,  பெருமையும்  இருக்கின்ற  காலத்தில்  நான்  அதில்  சேருவதானால்  எனக்கு  உள்  எண்ணம்  ஏதாவது  கற்பித்தால்  அதற்கு  அர்த்தமுண்டு. இன்று  அப்படி  ஒன்றும்  இல்லை.  அது  எப்படி  இருக்கின்றது  என்றால்  ஜஸ்டிஸ்  கட்சியானது  1926ம்  M முடிவில்  எப்படி  கடைசி  மூச்சு  வாங்கும்  நிலையில்  ஜீவநாடிகள்  எல்லாம்  விழுந்து  போய்  எடுத்துப்  புதைப்பதற்கும்  ஆளில்லாத  ஸ்திதியில்  இருந்ததோ,  அந்த  நிலையில்  அதைவிட  மோசமான  நிலையில்  கொள்கையற்று,  தலைவர்களற்று,  மானமற்று,  நாணையமற்று,  அழுவாரற்று  சாகும்  தருவாயில்  இருக்கும்  காங்கிரசில்  நான்  போய்  சேருவதாய்  இருந்தால்  அதில்  எனக்கு  என்ன  லாபம்  அல்லது  உள்  எண்ணம்  இருக்க  முடியும்  என்று  எனது  தோழர்களைக்  கேட்கின்றேன். ஜஸ்டிஸ்  கட்சியை ...

மார்க்கட்டு  நிலவரம்

மார்க்கட்டு  நிலவரம்

  சித்திரபுத்திரன் தமிழ்நாட்டில்  மார்க்கட்டு  நிலவரம்  தெரியப்படுத்தி  வெகுநாள்  ஆகிவிட்டதால் இதுசமயம்  இரண்டொரு  சரக்குகளுக்கு  மாத்திரம்  நிலவரம்  எழுதுகிறோம். பெண்கள் செட்டிநாட்டில்  ஒரு  பெண்ணுக்கு  (முன்  விலை)  35000  முதல்,  45000  ரூபாய்  வரை  இருந்து  வந்ததானது  இப்போது  சவுத்துப்போய்  ஒரு  சைபருக்கே  மோசமேற்பட்டு  4000,  5000  ம் விலையில்  அசல்  செட்டி  நாட்டுப்  பெண்கள்  தாராளமாய்  கிடைக்கும்  நிலைமைக்கு  வந்துவிட்டது.  காரணம்  சுயமரியாதை  தேசத்திலிருந்து  ஏராளமான  சரக்குகள்  (பெண்கள்)  வந்து  இறங்கத்  தலைப்பட்டு  விட்டன.  ஆதலால்  வெளிநாட்டுச்  சரக்குகளை  (சுயமரியாதைப்  பெண்களை)  செட்டி  நாட்டுக்குள்  வராதபடி  வெளிநாட்டுச்  சரக்குகளுக்கு  வரி  போட  வேண்டுமாய்  செட்டிமார்களுள்  சர்க்காருக்கு  (சமூகத்தாருக்கு)    விண்ணப்பம்  போட்டிருக்கிறார்கள்.  அப்படி  அரசாங்கத்தார்  (சமூகத்தார்)  வரி  போடுவார்களானால்  பெண்கள்  இருக்கிற  நாட்டுக்கே,  குடிபோய்விடுவதாக  பெண்  வாங்குவோர்கள்  கூடிப்  பேசி  முடிவு  செய்து  தீர்மானத்தை  அரசாங்கத்துக்கு  (தங்கள்  சமூகத்தாருக்கு)  தெரிவித்து  இருப்பதாகத்  தெரிகிறது. ஓட்டுகள் முனிசிபல்  ஓட்டர்களுக்கு  இது  சமயம்  கிராக்கி ...

ஜஸ்டிஸ்  பத்திரிகையின்  நிர்வாகம்

ஜஸ்டிஸ்  பத்திரிகையின்  நிர்வாகம்

  ஜஸ்டிஸ்  பத்திரிகைக்காக  இதுவரை  சுமார்  4,  5  லக்ஷ  ரூபாய்  வரையில்  பொதுமக்களிடமிருந்து  உதவித்  தொகையாகவும்  மந்திரிகள்  சம்பளத்திலிருந்து  பார்ட்டி  (கக்ஷி) உதவித்  தொகையாகவும்  பெற்றிருக்கலாம்.  இது  தவிர  இன்றும்  பொப்பிலி ராஜா  அவர்களால்  N  2000,  3000  கொடுக்கப்பட்டு  வருகிறது.  இவ்வளவு  இருந்தும்  அப்பத்திரிகை  ஒரு  தடவை  “”இன்சால்வெண்டு”  கொடுத்தாய்  விட்டது.  பலரது  கடனுக்கு  நாமம்  சாத்தியுமாய்விட்டது.  மறுபடியும்  பொப்பிலி  ராஜா  சுமார்  50 ஆயிரம்  ரூபாய்  போல்  செலவழித்துமாய்விட்டது.  இந்த  நிலையில்  பத்திரிகை  எவ்வளவு  போகின்றது  என்று  சொல்ல  நமக்கே  வெட்கமாய்  இருக்கிறது.  இவ்வளவு  யோக்கியதையில்  அது  பிரசுரிக்கிற  முறையும்  சிரிப்புக்கிடமானது  என்றுதான்  சொல்ல  வேண்டி  இருக்கிறது. தோழர்  சர்.  ஷண்முகம்  அவர்களுடைய  பிரசங்கங்களையும்,  நடவடிக்கைகளையும்  கூட  சரிவரப்  பிரசுரிப்பதில்லை.  சுயமரியாதைக்காரரின்  சமூக  சம்மந்தமான  வேலைகளைக்  கூட  சரிவர  பிரசுரிப்பதும்  இல்லை.  இன்னும்  அதன்  யோக்கியதை  சொல்வதென்றால்  நமது  பல்லைக்  குத்தி நாமே  முகர்ந்து  பார்ப்பது  போல் ...

சேலம் மகாநாடுகள்

சேலம் மகாநாடுகள்

சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 19, 20-தேதிகளில் ராசிபுரத்தில் நடைபெற்றதின் நடவடிக்கை விபரங்களும், மகா நாட்டுத் தலைவர், வரவேற்புத் தலைவர் முதலியவர்கள் உபன்யாசங்களும், தீர்மானங்களும் மற்றொரு பக்கத்தில் காணலாம். சென்ற வருஷம் சேலத்தில் நடந்த முதலாவது ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும், சுமார் 3 வருஷங்களுக்குமுன் ராசிபுரத்தில் நடந்த முத லாவது தாலூக்கா மகாநாட்டிலும் சிலரால் உண்டாக்கப்பட்ட இரண்டொரு அசௌகரியங்களும், இடையூறுகளும் மற்றும் எதிர்ப்பிரசாரங்கள் முதலிய வைகளும், இந்த மகாநாட்டில் சிறிதுகூட தலைகாட்டுவதற்கில்லாமல் மறைந்து போனதும் இச் ஜில்லாவாசிகளுடைய பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் தாராள மாய்க் கொண்டிருந்ததல்லாமல் சுமார் 2000 பேர் களுக்கு மேற்பட்ட பிரதி நிதிகள் ஜில்லாவின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விஜயம் செய்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றுதும் இச் ஜில்லாவில் இந்த இரண்டு வருஷத் திற்குள் பகுத்தறிவு வளர்ச்சியும், சமதர்ம உணர்ச்சியும் மிகத் தாராளமாய் பரவியிருப்பதற்குத் தக்கதோர் சான்றாகும். நிற்க, மற் றொரு விசேஷம் என்ன வென்று பார்ப்போமானால்...

இந்திய  சட்டசபை

இந்திய  சட்டசபை

  மாஜி  முதல்  மந்திரியான  டாக்டர்  க.சுப்பராயன்  அவர்கள்  லண்டனுக்குச்  சென்றிருந்தவர்  வந்து  விட்டார்.  அவரது  மனைவியார்  தோழர்  ராதாபாய்  அம்மாள்  அவர்கள்  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்கு  ஒரு  அபேக்ஷகராய்  நிற்கப்  போகும்  செய்தி  மறுபடியும்  கிளம்பி  இருக்கிறது.  இதன்  பயனாய்த்  தமிழ்நாட்டில்  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  விஷயத்தில்  ஒரு  மாற்றம்  ஏற்படலாம். அதாவது  கோவை  ஜில்லாவிலும்,  சேலம்  ஜில்லாவிலும்  கொங்கு  வேளாள  சமூகம்  அதிகமாக  உண்டு.  இந்த  இரண்டு  ஜில்லாவில்  உள்ள  வேளாள  சமூகம்  ஒரு  வேளாள  சமூக  அபேக்ஷகரைத்தான்  ஆதரிப்பார்கள்.  வேளாள  சமூகத்தில்  ஒரு  அபேக்ஷகர்  இல்லை  என்கின்ற  காரணத்தினாலேயே  கோவை  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  தோழர்  வெள்ளியங்கிரிக்  கவுண்டர்  தனது  ஜில்லா  போர்டு  ஸ்தாபனத்தின்  பயனாய்  உள்ள  செல்வாக்கைத்  தோழர்  அவனாசிலிங்கத்துக்காகப்  பயன்படுத்துவதாகவும்,  கோவை  ஜில்லா  போர்டு  வைஸ்  பிரசிடெண்டும்,  கொங்கு  வேளாள  குலத்  தலைவரும்,  மடாதிபதியுமான  பழய  கோட்டைப்  பட்டக்காரர்  அவர்கள்  தனது  செல்வாக்கை  டாக்டர் ...

வாலிபர் கடமை

வாலிபர் கடமை

பொதுவுடமைக்கும் சுயராஜ்யத்துக்கும் சம்மந்தமில்லை சுயராஜ்யம் என்பது அரசியலைப் பொருத்தது. அது எந்த தேசத்தை, யார் ஆளுகிறது என்பதையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமை என்பது பொருளாதாரத்தையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுட மைக் கொள்கையைப்பற்றிய விஷயத்தில் ஆட்சிசெய்பவர்கள் யார் என் பதைப் பற்றியோ, எந்த தேசம் ஆதிக்கமுள்ளதாய் இருக்க வேண்டு மென்று எல்லை கட்டுவதிலோ பிரவேசிக்கவேண்டிய அவசியமே இல்லை. பொது உடமை என்பது மேல் குறிப்பிட்டபடி வெறும் பொருளாதாரப் பிரச்சி னையே ஆகும். அதுவொரு கணக்குப் பிரச்சினை என்றும் சொல்லலாம். உலகத்தை ஒரு குடும்பமாக்கி உலக மக்களை ஒரு குடும்பமக்களாக்கி உலக செல்வத்தையும் சுக துக்கதையும் அக்குடும்பத்துக்குப் பொதுவாக்கி அக்குடும்ப மக்கள் எல்லோரும் அக்குடும்ப சொத்துக்களை சரிசமமாய் அனுபவிக்கும்படி செய்யும்முறையே பொது உடமைத் தத்துவமாகும். இதனால் யாருக்கும் ஏற்றத்தாழ்வோ ஜா°தி கம்மியோ இல்லாமல் இருக்கும் என்கின்ற முடிவின்பேரிலும் உலகவாழ்க்கையில் மக்கள் உயர்வு தாழ்வும் ஜா°திகம்மியும் அனுபவிப்பது மனித இயற்கை என்றும் இந்தப் படி இருக்கவே...

°தல °தாபன அலங்கோலம்

°தல °தாபன அலங்கோலம்

ஈரோடு தாலூகா போர்டு தலைவர் தேர்தல் சம்மந்தமாய் ஏற்பட்ட வழக்குகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுசமயம் ஹைகோர்ட்டில் இரண்டு அப்பீல்கள் °டே புரசீடிங்° ஆர்டர் களுடன் இருந்து வருகின்றன. ஈரோடு டி°டிரிக்ட் முன்சீப் கோர்ட்டில் இன்ஜங்ஷனுடன் ஒரு சூட் இருந்து வருகிறது. ஈரோடு °டேஷனரி சப்மேஜி°டிரேட் கோர்ட்டில் பழய பிரசி டெண்டு மீது சட்டப்படி அதிகாரமில்லாத காலத்தில் பிரசிடெண்டு செய்யவேண்டிய வேலைகளை செய்ததாக ஒரு பிராது, ஆக 3 இடங்களில் விவகாரங்கள் நடக்கின்றன. ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டாயிருந்த தோழர் பழைய கோட்டை பட்டக்காரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லா போர்டு வை°பிரசி டெண்டானவுடன் ஈ.தா.போ. பிரசிடெண்டு வேலைகாலியானதினால் அதற்கு முன்பு ஈ.தா.போ. வை°பிரசிடெண்டாயிருந்த தோழர் வி.எ°. ராஜாக் கவுண்டரும், தோழர் எ°.கே. சென்னியப்ப கவுண்டரும் அபேக்ஷகர்களாயிருந்ததில் தோழர் வி.எ°.ராஜாக்கவுண்டர் வெற்றிபெற் றார். தோல்வி உற்றவர் இந்த எலக்ஷனை மாற்றி தன்னை தெரிந்தெடுத் ததாகக் கருத வேண்டுமென்று ஆnக்ஷபித்து ஒரு விண்ணப்பம்...

ஷண்முகமும்  ஒட்டவாவும்

ஷண்முகமும்  ஒட்டவாவும்

  தோழர்  ஷண்முகம்  அவர்களைப்  பற்றிப்  பார்ப்பனர்கள்  பொறாமைப்பட்டு  இந்த  சுமார்  இரண்டு  வருஷ  காலமாகச்  செய்து  வரும்  விஷமப்  பிரசாரத்திற்கு  முக்கிய  ஆஸ்பதமாய்  கொண்டது  ஒட்டவா  ஒப்பந்தத்தில்  தோழர்  ஷண்முகம்  கலந்திருந்தார்  என்பதே. இந்த  ஒட்டவா  ஒப்பந்தம்  என்கின்ற  ஓலமே  “”கீழ்”  முதல்  “”மேல்”  வரையில்  தங்களது  விஷமத்தனத்துக்கும்,  இழி  பிரசாரத்துக்கும்  பயன்படுத்தப்பட்டு  வருகின்றது  என்றாலும்,  அந்த  ஒட்டவா  ஓலம்தான்  என்ன  என்று  பார்ப்போம். இழவு  வீடுகளில்  துக்கத்துக்குச்  சிறிதும்  சம்பந்தப்படாத  பெண்கள்  கூலிக்கு  மார்பு  வீங்கும்படி  மாரடித்துக்  கொண்டு  புரளுவது  போல்  “”ஒட்டவா  விஷயம்  என்றால்  என்ன?  அதற்கும்  நமக்கும்  என்ன  சம்பந்தம்?”  என்கின்ற  விஷயங்களே  தெரியாமல்  ஒரே  கூப்பாடாக  கத்திக்  கொண்டு  “”ஒட்டவா  வீரர்”  “”ஒட்டவா  வீரர்”  என்று  எழுதி  வருகின்றனர். ஒருவன்  “”எல்லா  வகுப்பு  மக்களுக்கும்  சம  சுதந்திரம்  வேண்டுமென்று”  கேட்டால்  அவனை  வகுப்புவாதி என்பதும்,  “”உங்கள்  சுயராஜ்யத்துக்கு  அர்த்தமென்ன”  என்று  கேட்டால்  அவனை  தேசத்துரோகி ...

“ஹரிஜன” இயக்க ரகசியம்

“ஹரிஜன” இயக்க ரகசியம்

ஆக்ராவில் கூடிய “ஹரிஜன ” (தீண்டப்படாதார்) மகாநாட்டில் “ஹரிஜனங்களுக்கு பொருளாதார விஷயத்திலும், கல்வி விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்பாடு செய்வதைவிட ஆலயப்பிரவேசத்தைப் பற்றியே அதிகமாக வற்புறுத்துவது ஒப்புக் கொள்ளத்தக்கதல்ல” என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தோழர் காந்தியவர்கள் “ஹரிஜனம்” பத்திரிகையில் பதில் சொல்லுகையில், “ஹரிஜனங்களுக்குப் பொருளாதார முன்னேற்றமும், கல்வி முன் னேற்றமும் ஜாதி இந்துக்கள் தாங்களாகவே செய்யவேண்டிய காரியமாகும். பொருளாதாரம், கல்வி ஆகிய துரைகளில் ஹரிஜனங்கள் உயர்த்தப்பட்டு விட்டால் மதத்துரையில் அவர்கள் சமத்துவமானவர்களாகி விடமாட்டார் கள். ஆதலால் ஹரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஜாதி இந்துக்கள் தங்களுக்கு எந்த நிபந்தனைகள் மீது கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றனவோ அதே நிபந்தனைகளின் மீது ஹரிஜனங்களுக்கு கோவில்களை திறந்துவிடவேண்டும்” என்பதாக எழுதியிருக்கிறார். இதிலிருந்து ஹரிஜன வேலையின் இரகசியம் என்ன என்பதைப்பற்றி நாம் இதற்கு முன் எழுதிவந்த விஷயம் உண்மை என்பது நன்றாய் விங்கும். “ஹரி” ஜனங்களுக்கு வேண்டியதெல்லாம் ஜாதி இந்துக்களைப் போன்ற கல்வியும், ஆகாரமுமாகும். ஆனால் காங்கிரசும்,...

காங்கிரசை  விட்டு  காந்தியார்  விலகுகிறாராம்

காங்கிரசை  விட்டு  காந்தியார்  விலகுகிறாராம்

  வழ  வழா  அறிக்கை தோழர்  காந்தி  அவர்கள்  “”காங்கிரசை  விட்டு நான் விலகப்  போவதாக  ஏற்பட்ட  செய்தி  உண்மைதான்”  என்ற  தலைப்பில்  ஒரு  நீண்ட  அறிக்கை  விடுத்திருக்கிறார். அதில்  அவர்  “”என்  இஷ்டப்படி  காங்கிரசுக்காரர்கள்  நடக்க வில்லை. காங்கிரஸ்காரர்கள்  பலரிடத்தில்  நாணையமில்லை. என்  கொள்கையில்  நம்பிக்கை  யில்லாமலே  பல  முக்கிய  காங்கிரஸ்வாதிகள்  என்னைப்  பின்பற்றுவதாய்  நடித்திருக்கிறார்கள். மற்றும்  பலர்  அஹிம்சையிலும்  சத்தியத்திலும்  நம்பிக்கை  இல்லாமல்  அது  இருப்பது  போல  வேஷம்  போடுகிறார்கள். அஹிம்சையையும்,  சத்தியத்தையும்  தற்சமயத்துக்கு  ஒரு  வேலைத்  திட்டமாய்க்  கொண்டிருக்கிறார்களே  தவிர,  அவர்களுக்கு  அவை  ஒரு  வாழ்க்கைச்  சாதனமாக  இல்லை. கதரில்  நம்பிக்கை  இல்லாதவர்கள்  கதரைக்  கட்டிக்கொண்டு  ஏமாற்றுகிறார்கள்.  சிலர்  சமயத்துக்குக்  கட்டிக்  கொள்ளுகிறார்களே  தவிர  உண்மையில்  கட்டுவதில்லை. என்னை  உபயோகித்துக்  கொள்ளுகிறதற்காகவே  என்னிடம்  பக்தி விசுவாம்  காட்டுகிறார்கள்.” என்றெல்லாம்  குறிப்புக்  காட்டிவிட்டு  “”நான்  சில  தீர்மானங்களை  வரப்போகும்  காங்கிரசில்  பிரேரேபித்துவிட்டு  அவை  ஒப்புக்  கொள்ளப்படவில்லையானால்  காட்டுக்குப்  போய்விடுவேன்” ...

ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார்  – சித்திரபுத்திரன்   

ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார் – சித்திரபுத்திரன்  

  ஸ்ரீரங்கம் ரங்கனாதர் குடும்பச் செலவுக்கு இந்தபத்து வருஷகாலமாய் லாட்டரி அடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைப் பார்த்து நான் ஒரு சிறிதும் வருத்தமோ-அதிசயமோ அடையவில்லை, ஏனெனில் உலகில் சோம்பேறிகள் கஞ்சிக்கே லாட்டரி அடிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த ரங்கனாதன் என்னும் ஆசாமி ஒரு பெண்டாட்டிக்கு இரண்டு பெண்டாட்டி கட்டிக்கொண்டு போதாக்குறைக்கு ஒரு கூத்தியாரையும் வைத்துக்கொண்டு இருக்கும் மனிதன். இவன் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியது சகஜமேயாகும். அதிலும் இந்த பாழும் ரங்கனாதன் யாதொரு வேலையும் செய்யாமல் தினம் ஐந்துவேளை சாப்பிட்டுவிட்டு என்னேரமும் விட்டம்போல் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டேயிருந்தால் இப்படிப்பட்ட சோம்பேறிகள் சோத்துக்கு லாட்டரி அடிக்கவேண்டியது அவசியம்தானே. இதில் அதிசயமென்ன இருக்கின்றது? நமது ஜனங்களுக்கு புத்தி இருக்கு மானால் இந்த ரங்கனாதனை இந்த பூலோகத்தைவிட்டு வைகுண்டத்திற்கே அனுப்பி இருப்பார்கள். நமது ஜனங்களுக்கோ கடுகளவு புத்தியும் கிடையாது. பிரத்தியார் சொல்லையும் கேழ்ப்பதில்லை. ஆகையால் இந்த ரங்கனாதன் லாட்டரி அடிக்கிறது மாத்திரமல்லாமல் இந்த...

விஷமத்துக்கு  விஷமமா? 

விஷமத்துக்கு  விஷமமா? 

  அல்லது  உண்மையா? திருச்சி  “”நகர  தூதன்”  பத்திரிக்கையில்  தோழர்  அவனாசிலிங்கம்  நிற்கவில்லை  என்கின்ற  தலைப்பின்  கீழ்  “”கோயமுத்தூர்,  சேலம்,  வடாற்காடு  ஜில்லாக்களின்  இந்திய  சட்டசபைத்  தொகுதிக்கு  காங்கிரஸ்  சார்பாக  அபேட்சகராய்  நிறுத்தப்பட்டதாகச்  சொல்லப்படும்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியார்  கடைசிவரை  அபேக்ஷகராய்  நிற்க  மாட்டாராம்.  காங்கிரசின்  பெயரால்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியாரை  முன்  நிறுத்தி  அத்தொகுதியைப்  பண்படுத்தி  முடிந்ததும்  கடைசியில்  இருக்கக்  கூடிய  நிலைமையை  அனுசரித்து  இறுதியாகத்  தோழர்  இராஜகோபாலாச்சாரியாரே  அதில்  அபேட்சகராக  நின்றுவிட  ஏற்கனவே  முடிவு  செய்யப்பட்டு  விட்டதாக  நம்பத்தகுந்த  இடத்திலிருந்து  தெரியவருகிறது”  என்று  ஒரு  சிறு  குறிப்புக்  காணப்படுகிறது. “”பொய்க்கு  பொய்,  கோளுக்குக்  கோள்,  விஷமத்துக்கு  விஷமம்  செய்யத்  தகுதி  உள்ளவனுக்குத்தான்  உலகில்  இடமுண்டு”  என்கின்ற  ஒரு  ஆப்த  வாக்கியம்  உண்டு. நகர  தூதனில்  காணப்படும்  இந்தக்  குறிப்பானது  நகர  தூதனுக்கு  நம்பத்  தகுந்த  இடத்திலிருந்து  வந்திருந்தாலும்  இருக்கலாம்  என்றாலும்  அந்த  நம்பத்  தகுந்த  இடத்துக்கு,  நம்பத்தகுந்த  இடத்திலிருந்து ...

இரகசிய காரணங்கள்  பர°பர புகழ்ச்சி சங்கம்  – சித்திரபுத்திரன்

இரகசிய காரணங்கள் பர°பர புகழ்ச்சி சங்கம் – சித்திரபுத்திரன்

  கேள்வி:- தோழர் ஊ.கு. ஆண்ட்ரூ°  அவர்கள் தோழர் காந்தியாரி டத்தில் அதிக அன்புகாட்டிவருவதன் காரணம் என்ன? பதில்:- தோழர் காந்தியாருக்கு இந்தியப் பாமர மக்களிடம் அதிக மதிப்பு இருக்கிறது. ஆதலால் வெள்ளைக்காரர் காந்தியாரிடம் அதிக அன்பு இருப்பதாய் காட்டிக் கொண்டால் அந்த வெள்ளைக்காரரிடம் இந்தியர் களுக்கு அன்பு ஏற்படுமல்லவா? இதற்கு உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகிறேன். தோழர் காந்தியவர்களை தனக்கு சரிசமமாய் பாவித்து சர்க்காரோடு ராஜிபேசிய தோரணையில் சம்பாஷணை நடத்தி ஒப்பந்தம் செய்து இருவர் கையெழுத்தும் ஒரு ஆதாரத்தில் இருக்கத்தக்க மாதிரியாய் நடந்து காந்தியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் இருப்பதுபோல் காட்டிக்கொண்ட இர்வின் பிரபு இந்தியர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்று காந்தியார் வாயிலேயே இர்வின் பிரபுவை மகாத்மா என்று சொல்லும் படியாகக் கூட ஏற்பட்டு விடவில்லையா? ஆதலால் காந்தியாரிடம் மரியா தையும், மதிப்பும், பக்தியும் இருப்பதாக ஆண்ட்ரூ° துரை இர்வின் பிரபு போன்றவர்கள் அல்லாமல் ஒரு சாதாரண ஜீவன்-அதாவது வெருப்பாகவும், கேவலமாகவும்...

சுயமரியாதைத்  திருமணங்கள்

சுயமரியாதைத்  திருமணங்கள்

  பௌனாம்பாள்  அழகப்பா  திருமணம் தோழர்களே!  இன்று  மணமகனாக  வீற்றிருக்கும்  எம்.கே.  அழகப்பா  “”நாட்டுக்கோட்டை  செட்டிமார்”  வம்சத்தைச்  சேர்ந்தவர்.  மணமகள்  பௌனாம்பாள்  “”வேளாள”  வம்சத்தைச்  சார்ந்தவர்.  இந்த  மணம்  புரோகிதச்சடங்கு  முதலிய  அனாச்சார  வழக்கங்களின்றி  நடைபெறுகிறது.  மணமக்கள்  இருவரும்  தாங்களே  மனமொத்து  மண  ஒப்பந்தம்  செய்து  கொள்ள  முன்  வந்தது  பாராட்டத்தக்கது.  வைதீகர்கள்  பழைய  சாஸ்திரத்தை  அனுசரித்து  அறிவுக்கும்,  ஞாயத்திற்கும்  பொருந்தாத  முறையில்  நூற்றுக்கு  90  கல்யாணங்களைச்  செய்து  விடுகின்றனர்.  அது  கடைசியில்  யாதொரு  பிரயோஜனத்தையும்  அளிக்காமல்  கஷ்டத்தையே  விளைவிக்கின்றது.  யெப்படியாவது  கல்யாணம்  ஆனால்  போதுமென்று  முயர்ச்சிக்கின்றனர்.  தாங்களே  தங்களுக்கு  இஷ்டமானவர்களைத்  தேர்ந்தெடுத்துக்  கொள்ள  மணமக்களுக்கு  சுதந்தரம்  கிடையாது.  பெண்  கொள்வதை  சந்தையில்  மாடுவாங்குவதாக நினைத்து  செய்து  விடுகின்றனர்.  பொருத்தம்  பார்ப்பதில்  மணமக்களுக்கு  இருக்க  வேண்டிய  மனப்  பொருத்தம்  பார்க்கப்  படுவதில்லை. வழியே  போகும்  ஒரு பார்ப்பானையோ,  வள்ளுவனையோ  கூப்பிட்டுப்  பொருத்தம்  பார்க்கச்  சொல்லி  மணத்தை  நடத்தி  விடுகின்றனர்.  மாப்பிள்ளை  7லீ ...

கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்

கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்

கடன்பட்டவர்கள் கொடுக்க சக்தி அற்றுப்போவது ஒரு சாதாரண சம்பவமேயன்றி அது ஒரு குற்ற (கிரிமினல்) நடவடிக்கையாகாது. கடன் கொடுத்து வாங்குவது என்பது ஒரு சூதாடுவது போன்ற காரியம். அதாவது பிரை°சீட்டு போட்டவன் தனக்கு பிரை° (லாபம்) எதிர்பார்ப்பது போன்ற காரியமாகும். எப்படியெனில் கடன் கொடுத்து வாங்குவது என்பதில் எவ்வித கருணையும், அன்பும், தரும சிந்தனையும், உபகாரமும் கிடை யவே கிடையாது. வெரும் லாபத்தை வெளிப்படையாய் எதிர்பார்த்துக் கடன் கொடுப்பது தவிர வேறில்லை. பிரை° சீட்டு போடுபவனும், லாபத்தை எதிர்பார்த்தே போடுகிறானே ஒழிய வேறில்லை. ஆகவே ஒருவனுக்குப் பிரை° வரவில்லையானால் பிரை° சேர்த்தவனை ஜெயிலில் வைக்க முடியுமா? அதுபோல் கடன் கொடுக்கப் பட்டவன் திருப்பிக் கொடுக்க சக்தியற்றுப் போனால் அதை ஒரு குற்றமாகக் கருதுவதும், அதை ஒரு குறைவாகக் கருதுவதும் முதலாளி ஆதிக்கத் தன் மையாகுமே ஒழிய அது சமதர்ம நீதியாகாது. அன்றியும் அது கொடுமை யானதும், முட்டாள் தனமானதுமான குணமுமாகும். கடன்...

இரணியன்  நாடகத்தில்   தோழர்  ஈ.வெ.ரா.

இரணியன்  நாடகத்தில்  தோழர்  ஈ.வெ.ரா.

  தோழர்களே! சென்னை  சீர்திருத்த  நாடக  சங்கத்தாரால்  நடிக்கப்பட்ட  இந்த  முதல்  நாடகத்துக்குத்  தலைமை  வகிக்கும்  பெருமை  எனக்களித்ததற்கு  நன்றி  செலுத்துகிறேன். நாடகம்  என்பது  ஒரு  விஷயத்தை  தத்ரூபமாய்  நடித்துக் காட்டுவது  என்பதோடு,  அதைப்  பெரிதும்  மக்களின்  நடத்தைக்கு  வழி  காட்டியாகவும்,  ஒழுக்கங்கள்  கற்பிக்கப்படுவதற்கும்  பயன் படுத்தப்படுகின்றது  என்றும்  சொல்லப்படுகின்றது. ஆனால்  அது  அந்தப்படி  தத்ரூபமாய்  நடத்திக்  காட்டப்படுவதும்  இல்லை.  மக்கள்  ஒழுக்கத்துக்கும்,  நடப்புக்கும்  வழிகாட்டியாய்  நடப்பிப்பதும்  இல்லை  என்று  சொல்லுவதற்கு  நாடக  அபிமானிகள்  மன்னிக்க  வேண்டுகிறேன். தத்ரூபம்  என்பதில்  விஷயங்களின்  ரசபாவங்களும்,  உண்மை யாய்  நடந்திருக்கும்  என்று  நினைக்கும்படியான  எண்ணமும்  ஜனங்களுக்கு  விளங்க  வேண்டும். அந்தப்படி  இல்லாமல்  நமது  நாடகங்கள்  பெரிதும்  சங்கீதக்  கச்சேரி  போலவும்,  கால÷க்ஷப  சபை  போலவும்,  விகட  சபை  போலவும்,  நகைகள்  உடுப்புகள்  காக்ஷி  சாலைகள்  போலவும்,  விஷயங்களுக்குப்  பொருத்தமில்லாத  பேச்சுக்களை  அடுக்கி  பேசும்  பேச்சுவாத  சபை  போலவும்  விளங்குகின்றது  என்று  தான்  சொல்ல  வேண்டியிருக்கிறது. ...

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  காங்கிரஸ்காரர்கள்  போட்டி  போட  முடிவு  செய்து  ஆங்காங்கு  மாகாணம்  தோறும்  காங்கிரசின்  சார்பாய்  அபேட்சகர்களை  நிறுத்திப்  போட்டி  போடுகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே  இவ்விஷயத்தில்  அபிப்பிராய  பேதம்  ஏற்பட்டுத்  தேர்தலில்  பிரவேசிக்கக்  கூடாது  என்று  சொல்லி  ஒரு  கூட்டத்தார்  விலகிக்  கொண்டார்கள். மற்றொரு  கூட்டத்தார்  தாங்கள்  நேரே  தேர்தலில்  நிற்காமல்  மற்றவர்களுக்கு  உதவி  செய்து  “”காங்கிரசின்  கௌரவத்தைக்  காப்பாற்று கின்றோம்”  என்று  அபேட்சகர்களாக  நிற்பதில்  இருந்து  விலகி  இருக்கிறார்கள். மற்றொரு  கூட்டத்தாரோ!  காங்கிரஸ்  அபிமானிகள்  என்று  தங்களைச்  சொல்லிக்கொண்ட  போதிலும்  கூட  காங்கிரஸ்  கொள்கைகள்  சில  தங்களுக்குப்  பிடிக்கவில்லை  என்றும்,  அக்கொள்கைகளுக்கு  மாறாகத்  தாங்கள்  நடக்க  வேண்டி  இருக்கிறதென்றும்  சொல்லி  கட்டுப்பாட்டிலிருந்து  விலகி  காங்கிரஸ்  கட்டளைக்கு  விரோதமாய்  நடக்கத்  தீர்மானித்து  எதிர்ப்பு  முறையில்  ஒரு  கட்சி  ஏற்படுத்தி  அதன்  பெயரால்  காங்கிரசோடு  போட்டி  போட  முடிவு  செய்து  கொண்டிருக்கிறார்கள். மற்றொரு  கூட்டமோ!  காங்கிரசுவாதியாய்  இருந்து  காங்கிரசை  ஆதரித்து  வந்து ...

பொது உடமை

பொது உடமை

பொது உடமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. கொஞ்ச காலத்திற்குமுன் நா°திகம் என்கின்ற வார்த்தையும் இந்தப்படிதான் மக்கள் காதுக்கு ஒரு பெரிய அதிருப்தியானதும், வெறுப்பானதுமான சப்தமாகக் கருதப்பட்டுவந்தது. என்றாலும் இப்போது, அது ஒரு தர்க்கவாதத்துக்கு ஏற்றதாகவும், சிலர் அதை ஒரு நாகரீகமாகக் கருதவும் சிலர் அவ்வார்த் தையின் கருத்தை, சாதாரண நோக்கத்தோடு கவனித்து “அது அவரவர்கள் அபிப்பிராயம்” என்பதாகவும், சிலர் ஜனசமூக வாழ்க்கைக் கட்டுப்பாட்டிற்கு “அந்தப்படி (கடவுள் என்பதான) ஒரு அபிப்பிராயம் இருந்தால் நல்லது” என்றும் கருதும் படியாகவும் இருந்துவருகின்றது. நா°திக விஷயத்தில் இப்போது ஆத்திரங்காட்டுபவர்கள் எல்லாம் மதப்பிரசாரத்தினால் வாழ லாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரசாரத்தை தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர மற்றவர்களுக்கு அதைப்பற்றி சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நா°திகத்தைப்பற்றி எந்தக் கூட்டத்திற்காவது சிறிது அதிருப்தி இருக்கும் என்று கருத வேண்டுமானால் அது போதிய...

வேலையில்லாத்  திண்டாட்டம்

வேலையில்லாத்  திண்டாட்டம்

  செல்வம்  பொழியும்  அமரிக்கர்  தேசத்தில்  இன்று  கோடிக்கணக்கான  மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதுடன், 10 லக்ஷக்கணக்கான  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தம்  செய்து  பெருத்த  கலவரம்  ஏற்பட்டு  இருக்கிறது. இந்நிலையில்  அமரிக்க  குடி  அரசு  தலைவர்  வேலையில்லாதவர் களுக்கு  வேலை  கொடுப்பதற்காக  ஒரு  காரியம்  செய்து  வருகிறார்.  அதாவது  தொழிலாளிகளின்  வேலை  நேரத்தைக்  குறைத்து  அதிக  தொழிலாளிகளுக்கு  வேலை  ஏற்படும்படி  செய்து  வருகிறார்.  எப்படியெனில்  ஒரு  தொழில்சாலையில்  ஒரு  தொழிலாளி  வாரத்துக்கு  40  மணி  நேரம்  வேலை  செய்து  வந்ததை  இப்போது  மாற்றி  வாரம்  ஒன்றுக்கு  ஒரு  தொழிலாளி  36  மணி  நேரம்  வேலை  செய்தால்  போதும்  என்றும்,  பழய  கூலியே  கொடுக்கப்பட  வேண்டும்  என்றும்  உத்திர  விட்டுவிட்டார். அதன்  பயனாக  ஒரு  மாகாணத்தில்  பருத்தி  இயந்திரத்  தொழில்  இலாக்காவில்  மாத்திரம்  10000  பதிறாயிரம்  பேருக்கு  புதிதாக  வேலை  கொடுக்கப்பட்டிருக்கிறது.  இது  போல்  இன்னும்  அநேக  இலாக்காவில்  ஏற்பாடு  செய்வதன்  மூலம் ...

கல்யாணக் கஷ்டம்

கல்யாணக் கஷ்டம்

நமது நாட்டில் சிறப்பாக இந்து சமூகம் என்பதில் கல்யாணம் என்னும் விஷயம் மிகவும் கஷ்டமும், நஷ்டமும் தரத்தக்க காரியமாயிருந்து வரு கின்றது. ஆனால் கல்யாணம் செய்கின்றவர்களோ, செய்து கொள்ளுகின்ற வர்களோ இந்த கஷ்ட நஷ்டங் களைப் பற்றி கவனியாதவர்கள் போலவும், இது எவ்வளவு கஷ்டமானாலும் நஷ்டமானாலும் அடைந்துதான் தீரவேண்டும் என்றும், இது சமூக வாழ்க்கைக்கு அவசியமாய் அடைந்துதீர வேண்டிய கஷ்ட நஷ்டமென்றும் கருதுகிறார்கள். இது மாத்திரமல்லாமல் இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகி நடைபெறும் கல்யாணங்கள் நடக்கும் போது ஒருவித சந்தோஷத்தையும், பெருமையையும் கூட அடை கின்றார்கள். இது பழக்கத்தினாலும் வழக்கத்தினாலுமேயாகும். கல்யாண காலங்களில் கல்யாணக்காரருக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைப் போலவே கல்யாணத்துக்கு வரும் மக்களுக்கும் கஷ்ட நஷ்டம், வேலைக்கேடு முதலிய பல தொல்லைகளும் விளைகின்றன. 100க்கு 90 கல்யாணங்கள் தங்கள் நிலைமையை சிறிதும் லட்சியம் செய்யாமல் கௌரவத்தையும், ஜம்பத்தையுமே பிரதானமாகக் கருதி பிரத்தி யார் பெருமையாய் பேசிக்கொள்ள வேண்டுமே என்கின்ற காரியத்திற்...

சம்பாஷணை                                      வம்பனுக்கும் – கம்பனுக்கும்  – சித்திரபுத்திரன்

சம்பாஷணை                                      வம்பனுக்கும் – கம்பனுக்கும் – சித்திரபுத்திரன்

  வம்பன்:- என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக் காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில்போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா? கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப்போய்விட்டது. அவர் களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா? ஜனமா? போ என்றால் போகவேண்டியதுதானே? வம்பன்:- அப்படிச் சொல்லிவிடலாமா திடீரென்று. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே; இந்த நாட்டுக்கு அவர்கள் வந்து சுமார் 400, 500 வருஷத்துக்கு மேலாகின்றது. அதுமாத்திரமல்ல இந்த நாட்டு அரசாட்சி பெற்று சுமார் 200 வருஷமாகின்றது. அப்படியிருக்க நீ போ வெளியில் என்று சொல்லுவது நியாயமா? கம்பன்:- 400, 500 வருஷமாய் விட்டதால் ஒருவனுக்குப் பாத்தியம் வந்துவிடுமா? 200 வருஷம் ஆண்டால் அவனுக்கே என்றைக்கும் நிரந்தர மாகிவிடுமா? ஆயிரம் வருஷம் ஐந்நூறு வருஷம் இருந்த மரஞ்செடிகளை வெட்டித்தள்ளி காடுகளைத் திருத்துவதில்லையா? 4000 வருஷம் 5000 வருஷமாய் இருக்கிற பாறைக் கல்லுகளையெல்லாம் டைனாமெட்டு வைத்து உடைத்து...

இந்திய சுதேச சம°தானங்கள்

இந்திய சுதேச சம°தானங்கள்

இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சம°தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர் பெரு மானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சம°தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டுவரப் பட்டிக் கிறது. இந்தச் சட்டம் இப்போது கொண்டுவருவதற்குள்ள அவசியத்தை இந்திய அரசாங்க ஹோம்மெம்பர் எடுத்துச் சொல்லும்போது “இந்தியாவில் அரசர் பெருமானின் சர்வாதிகாரத்திலுள்ள சம°தானங்களின் நிர்வாகத் தைக் கவிழ்க்கவோ, அச்சம°தானங்கள் விஷயமாய் பிறர் துவேஷங் கொள்ளும் படி செய்யவோ செய்யப்படும் முயற்சிகளைத் தடுக்க இச்சட்டம் செய்யப்படுகின்றது” என்று சொல்லியிருக்கிறார். சுதேச சம°தானங்கள் என்பவைகள் பிடிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்தகாலம் முதல்கொண்டே இருந்து வருபவையாகும். சில அதற்கு முன்பு இருந்தே – இருந்து வருவனவுமாகும். அப்படியிருக்க இத்தனை காலம் பொருத்து இப்பொழுது அவைகளைக் காப்பாற்ற என்ப தாக புதியசட்டம் ஒன்று ஏன் செய்யப்படவேண்டும் என்பதைக் கவனித்தால் அதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்கவேண்டுமென்பது விளங்காமல் போகாது. இதுபோலவே...

நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்

நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்

  வரப்போகும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  சுயமரியாதைக்  காரர்கள்  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டும்  என்பதைப்  பற்றியும்,  மேலால்  நடக்க  வேண்டிய  பிரசாரங்களைப்  பற்றியும்  எனக்குப்  பல  கடிதங்களும்,  கேள்விகளும்  வந்து  கொண்டிருக்கின்றன.  இவற்றுள்  தோழர்  இ.ஈ.நாயகம்  அவர்களுடைய  கடிதம்  முக்கியமானது.  சுயமரியாதைக்காரர்களுக்குத்  தேர்தல்  விஷயத்தில்  இன்ன  கட்சியைத்  தான்  ஆதரிப்பது  என்கின்ற  எவ்வித  நிபந்தனையும்  இது வரை  ஏற்படவில்லை  என்பது  யாவரும்  அறிந்ததே.  தேர்தல்களில் பார்ப்பனர்    பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  தன்மையை  மாத்திரம்  தான்  இதுவரை  சு.ம.காரர்கள்  கவனித்து  வருகிறார்கள்.  சுயமரியாதைக்காரர்கள்  ஏதாவது  ஒரு  கட்சியை  ஆதரிப்பது  என்கின்ற  நிலை  ஏற்பட  வேண்டுமானால்  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்  என்கின்ற  கொள்கைக்குப்  பாதகமில்லாமல்  நமது  குறைந்த  பட்சக்  கொள்கையை  ஒப்புக்  கொள்ளக்  கூடிய  கட்சியைத்தான்  ஆதரிக்க  வேண்டி  வரும். ஜஸ்டிஸ்  கட்சியோ!  பார்ப்பனர்களைச்  சேர்த்துக்  கொள்ளப்  போகின்றது.  அதற்கேற்றாப்  போல்  சுயமரியாதைக்காரர்  பலருக்கும்  காங்கிரசில்  சேரலாமா  என்கின்ற  எண்ணம்  இருந்து  வருகின்றது.  சுயமரியாதைக்காரர்களுக்கு  ஜஸ்டிஸ் ...

காங்கிரசின்  வீரம்

காங்கிரசின்  வீரம்

  வெட்கம்!  வெட்கம்!!  வெட்கம்!!! காங்கிரசுக்காரர்கள்  என்று  தங்களைச்  சொல்லிக்  கொள்ளும்  ஒரு  கூட்டம்  சிற்சில  ஊர்களில்  இருந்து  கொண்டு  காலித்தனம்  செய்து  வருவதைப்  பற்றி  இதற்கு  முன்  பல  தடவை  “”குடி  அரசு”,  “”புரட்சி”  பத்திரிக்கைகளில்  எழுதப்பட்டிருந்தது  வாசகர்களுக்குத்  தெரியுமென்று  நினைக்கிறோம். இந்தக்  கூட்டங்களுக்கு  ஏற்பட்ட  வேலையெல்லாம்  காங்கிரஸ்  பேரால்  வயிறு  வளர்ப்பதும்,  அதற்குக்  கூலியாகக்  காங்கிரஸ் காரர்களல்லாதார்  என்பவர்கள்  போடும்  கூட்டங்களில்  போய்  காலித்தனம்  செய்வதும்,  சரிசமமான  காலித்தனத்தையோ,  போலீசாரையோ  கண்டால்  ஓட்டமெடுப்பதும்  வழக்கமாயிருந்து  வருகிறது. தேசியப்  பத்திரிக்கை  என்று  சொல்லிக்  கொள்ளும்  சில,  அதாவது  காலித்தனத்தில்  பிரியமும்,  ஆசையும்  உள்ள  சில  பத்திரிக்கைகள்  “”போலீசார்  பந்தோபஸ்தில்  கூட்டம்  நடந்தது”  என்றும்  “”கூட்டத்தில்  கலவரம்,  குழப்பம்”  என்றும்  எழுதி  அவற்றை  ஆதரிப்பதுமாய்  இருந்து  வருவதும்,  காங்கிரசுக்கும்,  தேசியத்துக்கும்  வெட்கக்  கேடு  என்பதுடன்  தங்களுடைய  யோக்கியதையானது  வெளியாகக்  கூடாத  அவ்வளவு  இழிவானது  என்று  அவர்களே  கருதி  காலித்தனத்தின்  மூலம்  எதிரிகளின் ...

கபடநாடகக் கடவுள்  – சித்திரபுத்திரன்   

கபடநாடகக் கடவுள் – சித்திரபுத்திரன்  

  தோழர் காந்தியவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கட் டளைப்படி செய்வதாகச் சொல்லி வருவது யாவரும் அறிந்ததாகும். பலர் அதை உண்மையென்று நம்பியும் வருகிறார்கள். ஏன் அந்தப்படி இருக்கக் கூடாது என்று வாதமும் பேசுகிறார்கள். தோழர் காந்தியவர்கள் ஏர்வாடா சிறையில் சென்றவாரம் இருந்தகாலத்தில் ஹரிஜனங்களுக்கு வேலை செய்ய சகல சௌகர்யங்களும் சர்க்கார் தனக்கு அளிக்காவிட்டால் பட்டினிகிடக்க வேண்டுமென்று கடவுள் கட்டளை இட்டதாகச் சொல்லி பட்டினி இருந்தார். சர்க்காரை எந்தவிதமான தனி சுதந்திரமும் கடவுள் கேட்க வேண்டாம் என்று சொன்னார் என்று, வேண்டியதில்லை என்றார். பிறகு ஹரிஜன சேவை செய்ய கடவுள் சொல்லுகின்றார் என்று சொல்லி சில சுதந்திரம் கேட்டார். சர்க்கார் சில சௌகரியங்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தவுடன் பட்டினியை நிறுத்தும் படி கடவுள் கட்டளையிட்டதின் பிரகாரம் பட்டி னியை நிறுத்திவிட்டதாக சர்க்காருக்கு வாக்கு கொடுத்துவிட்டார். பிறகு மாலையில் கடவுள் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாமல் மறுபடியும் காந்தியாரைப் பட்டினி கிடக்கும்படி செய்ததுமாத்திரமல்லாமல் காந்தி யாரை...

மனிதன் ஒரு ஜீவப்பிராணியே                 உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு  – தோழர் ஈ.வெ.ராமசாமி

மனிதன் ஒரு ஜீவப்பிராணியே                 உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு – தோழர் ஈ.வெ.ராமசாமி

  உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன் தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாவே இருந்துவருகின்றன. அந்தச் சரீரப்பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடை யவே கிடையாதெனலாம். ஆனால் எல்லா ஜீவராசிகளும் என்றைக்காவது ஒரு நாள் ஜீவிப்பற்று செத்தே போகும் என்பது மாத்திரம் அனுபவ சித்தாந்தமாகும். உலகிலுள்ள மற்ற எல்லா ஜீவராசிகளைப்போலவே மனிதவர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும் ஒரு யானையும்  ஒரு எறும்பும் ஒருசிறு பேனும் பூதக் கண்ணாடிமூலம் பார்த்தரியத் தக்க அதி நுட்பமான ஒரு கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவ ராசிகளாகும். ஆனால் அவை தோற்றத்திலும்-செயலிலும் வேறுபட்டிருக்கலாம். அப்படியானால் “மனிதனுக்கும் கழுதைக்கும் வித்தியாசமில்லையா?” என்று ஒருவர் கேட்கலாம். ஜீவ தத்துவத்தில் வித்தியாசமில்லை என்றுதான் பதில் சொல்லுவேன். ஏதாவது வித்தியாசம் உண்டு என்று சொல்லவேண்டு மானால், ஒரு நாய் ஜீவனுக்கும் ஒரு கழுதை ஜீவனுக்கும்...

இது  தானா  தேசியம்?

இது  தானா  தேசியம்?

  மத  விஷயங்களிலுள்ள  குற்றங்களும்,  கொடுமைகளும்,  ஒழுக்கக்  குறைவுகளும் தேசிய விஷயத்தில் இல்லையென்று  யாராலும்  சொல்ல  முடியாது. பொதுவாகவே  தேசியம்  என்னும்  வார்த்தையை  அர்த்தமற்றது  என்றும்,  மோசக்  கருத்துக்  கொண்டது  என்றும்,  அதில்  பணக்காரத்  தன்மை  பிரதிபலிப்பதோடு,  அது  பணக்காரத்  தன்மையை  ஆதரிப்பதற்கென்று  கற்பிக்கப்பட்டதென்றும்  பல  தடவை  கூறி  வந்திருக்கிறோம். நாம்  மாத்திரமல்லாமல்  பல  மேல்நாட்டு  அறிஞர்களும்  தேசியத்தின்  தன்மையைப்  பற்றிக்  குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஜான்சன்  என்கின்ற  ஒரு  மேதாவி  “”தேசியம்  (தேசாபிமானம்)  என்பது  வடிகட்டின  அயோக்கியத்தனம்”  என்று  அதாவது  “”பிழைப்புக்கு  வழியில்லாதவர்களின்  கடைசியான  இழி  பிழைப்புக்கு  மார்க்கமானது”  என்று  கூறி  இருக்கிறார். இந்த  அபிப்பிராயம்  முதல்  முதல்  தேசியம்,  தேசாபிமானம்  என்கின்ற  வார்த்தைகள்  எங்கு  உண்டானதோ,  அங்கு  ஏற்பட்ட  அபிப்ராயமே  தவிர இந்தியாவில்  “”தேசிய  விரோதிகள்”  “”தேசத்  துரோகிகள்”  “”சர்க்கார்  குலாம்கள்”  என்று  “”தேசாபிமானி”களால்  கருதப்படுகின்றவர்களால்  சொல்லப்பட்டதல்ல.  இது  எப்படியோ  இருக்கட்டும்  என்று  வைத்துக்  கொள்ளுவோம். இன்று  இந்திய  தேசியவாதிகள்,  தேசாபிமானிகள் ...

“வெடிகுண்டு”

“வெடிகுண்டு”

சுயமரியாதை இயக்கக் கொள்கையை ஆதரித்து மதுரையில் ‘வெடி குண்டு’ என்னும் பத்திரிகை தோன்றி தொண்டாற்றி வருவது யாவரும் அறிந்ததேயாகும். வியாபார முறையை விட்டும், சமயத்திற்கு தகுந்தபடி மாறிக்கொள்வதை விட்டும், தனக்கு என்று ஏதாவது ஒரு கொள்கையும் இல்லாமல் “பரிசுத்தமாய்” இருக்கும் நிலையை விட்டும் நடைபெறும் பத்திரிக்கைகள் நமது நாட்டில் அதாவது பகுத்தறிவற்று பாமரத்தன்மை பூண்டு இருக்கும் ஜனங்கள் மலிந்தநாட்டில், கவலையற்று நடைபெறுவது என்பது மிக மிக கஷ்டமான காரியமாகும். இந்தக் காரணத்தால் இதுசமயம் “வெடிகுண்டு” பத்திரிகை மிக்க நெருக்கடியில் நடைபெறுகிறது என்று நாம் கேள்விப்படுவதில் அதிசயமொன்றுமில்லை. இருந்தபோதிலும் மதுரை சுயமரியாதை சங்கத்துக்கு மிகுதியும் ஆதரவளித்து வருபவரும், முனிசிபல் கௌன்சிலரும் செல்வாக்கும், செல்வமும் பொருந்தியவருமான தோழர் ஆ. அ. ஆறுமுகம் அவர்களது உதவியாலும் ஆதரவாலும் ஒருவாரு நடத்தப் பட்டு வருகிறது என்றாலும் சதா சர்வகாலமும் ஒரு பத்திரிகை ஒருவரின் ஆதரவையும், உதவியையும் கோறி நிற்காமல் தன் காலிலே தைரியமாய் நிற்கவேண்டுமாதலால் சுயமரியாதை இயக்க...

*ஜமீன்கள் பெயர்                                          ஜமீன்கள்                                       ஜமீன்கள்                                                                                                                    ...

காங்கிரஸ்காரர்களின்

காங்கிரஸ்காரர்களின்

  தேர்தல்  பிரசார  யோக்கியதை தோழர்  வரதராஜுலு  நாயுடு  M.ஃ.அ. க்கு  நிற்பதில்லை  என்றும்  தோழர்  ஸர்.ஆர்.கே.ஷண்முகம்  வர்த்தகத்  தொகுதிக்கு  நிற்பதில்லை  என்றும்  தெரிய வருவதாகக்  காங்கிரஸ்  தேசியப்  பத்திரிகைகள்  எழுதுகின்றன.  தோழர்  வரதராஜுலு  இதை  மறுக்கிறார்.  எனவே  இதை  விடக்  கேவலமான  முறை  கொண்ட  ஒரு  பிரசாரம்  வேறு  யாரும்  எப்படிப்பட்ட  மோசமான  வாழ்க்கைக்காரரும்  செய்ய  முடியாதென்றே  சொல்லுவோம். சத்தியம்,  தர்மம்,  நீதி,  ஒழுங்கு,  நாணையம்  ஆகியவைகளின்  பெயரைச்  சொல்லிக்  கொண்டு  இருக்கும்  ஸ்தாபனங்கள்,  கொள்கைகள்  ஆகியவைகளைச்  சேர்ந்தவர்களாலேயே  இவ்வித  பிரசாரங்கள்  நடக்குமானால்,  சாதாரண  வாழ்வில்  இருப்பவர்களால்  இனியும்  என்ன  என்ன  காரியம்  நடக்காது  என்று  கேழ்க்கின்றோம்.  தேர்தல் முறை  என்ன  என்பது  பற்றியும்  தேர்தலில்  ஒருவருக் கொருவர்  பேசிக்  கொள்வதிலும்,  எழுதிக்  கொள்வதிலும்  எவ்வளவு  நாணையமும்,  உண்மையும்  இருக்கக்  கூடும்  என்பதைப்  பற்றியும்  பொது  மக்கள்  தெரிந்து  கொள்ள  இந்த  ஒரு  உதாரணம்  போதாதா  என்று  மாத்திரம்  கேட்டுவிட்டு ...

மதம்  ஏன்  ஒழிய  வேண்டும்?

மதம்  ஏன்  ஒழிய  வேண்டும்?

  மதம்  என்பதைப்  பற்றி  இதற்கு  முன்  “”குடி  அரசு” ,  “”புரட்சி”  முதலிய  பத்திரிகைகளில்  அநேக  வியாசங்கள்  பல  தலைப்புகளின்  கீழ்  எழுதப்பட்டிருப்பது  யாவருக்கும்  தெரியும். மதமானது  இன்று  உலகில்  மனித  சமூகத்தின்  வாழ்வைத்  துக்கமயமாக்கி,  ஜீவராசிகளில்  மனிதனுக்கென்று  உள்ள  பகுத்தறிவை  அடிமைப்படுத்தி,  ஒற்றுமையைக்  குலைத்து,  மனிதனுக்கு  மனிதன்  வெவ்வேறு  இனம்  என்று  எண்ணும்படி  செய்து  வருகின்றது  என்பதற்கு  உதாரணம்  தேவையில்லை  என்றே  கருதுகின்றோம். “”தேசிய  சிங்கங்”களான  அலி  சகோதரர்கள்  ஒரு  காலத்தில்  “”நாங்கள்  முதலில்  மகம்மதியர்கள்,  பிறகுதான்  இந்தியர்கள்”  அதாவது  முதலாவது  மதம்,  பிறகு  தான்  தேசம்  என்றும்,  “”உலகம்  போற்றும்  உத்தமர்  மகாத்மா”  காந்தி  “”நானே  இந்து  மதத்தின்  உருவம்!  நான்  மூச்சுவிடுவதும்,  வாங்குவதும்  இந்து  மதத்திற்காகவே!!  நான் உண்பதும் உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே!!! மதத்தைக்  காக்கவே  நான்  சுயராஜ்யம்  கேட்கின்றேன்!!!!  அதாவது  இந்து  மதம்  தான்  எனக்கு  முதலும்  கடைசியும்”  என்றும்,  “”பழைய  காங்கிரஸ்வாதி, ...

ஈரோடு  முனிசிபாலிட்டிக்குப்  பாராட்டு

ஈரோடு  முனிசிபாலிட்டிக்குப்  பாராட்டு

  ஈரோடு  முனிசிபாலிட்டியானது  ஒரு  பத்து  வருஷ  காலம்  பொருப்பும்,  நாணையமும்  இல்லாமல்  லஞ்சம்,  திருட்டு,  புரட்டு,  பொய்,  போர்ஜரி  முதலிய  குணங்களை  அணிகலமாகக்  கொண்டு  நடந்து வந்ததும்,  அதன்  பயனாக  நிர்வாகமும்,  செல்வ  நிலையும்  மிகக்  கேவலமாய்  இருந்து  வந்ததும்,  அவ்வப்போது,  வெளியான  விஷயங்களில்  இருந்தும்,  சர்க்கார்  கணக்குப்  பரிசோதகர்கள்  அறிக்கைகளில்  இருந்தும்,  அரசாங்கத்தார்  நிர்வாக  அறிக்கைக்  குறிப்புகளிலிருந்தும்,  பொது  ஜனங்களும்  சிறப்பாக  ஈரோடு  வாசிகளும்  உணர்ந்திருக்கலாம். சுருக்கமாகச்  சொல்ல  வேண்டுமானால்  இந்த  10,  15  வருஷ  காலமாய்  அரசாங்கத்தார்  முனிசிபாலிட்டிக்குள்ள  அதிகாரங்களையும்,  கவுன்சிலர்களுக்கும்,  சேர்மென்களுக்கும்  உள்ள  அதிகாரங்களையும்  நாளுக்கு  நாள்  குறைத்து  வந்ததோடு,  சில  அதிகாரங்களை  அடியோடு  பறித்துக்  கொண்டதற்கும்  முக்கியமாக  ஈரோடு  முனிசிபாலிட்டியின்  நடத்தையே  காரணமென்று  சொல்லலாம். அவை  மாத்திரல்லாமல்  முனிசிபல்  ஆபிஸ்  நிர்வாகங்கள்  சேர்மென்கள்  கையிலிருந்தவைகளையும்  பிடுங்கிக்  கொண்டு  அவற்றை  நிர்வகிப்பதற்கு  மாதம்  60,  70,  100,  150  ரூபாய்  சம்பளமுள்ள  சாதாரண  சிப்பந்திகளை  நிர்வாக ...

ஈரோடு  முனிசிபல்  எலக்ஷன்

ஈரோடு  முனிசிபல்  எலக்ஷன்

  ஈரோடு  முனிசிபாலிட்டிக்கு  எலக்ஷன்கள்  நடக்க  தேதிகள்  குறிப்பிட்டாய்  விட்டன.  செப்டம்பர்  மாதம்  15ந்  தேதி  நியமனச்  சீட்டுகள்  (நாமினேஷன்  ஸ்லிப்பு)  தாக்கல்  செய்ய  வேண்டுமென்றும்,  17ந்  தேதி  அவை  பரிசீலனை  செய்யப்படும்  என்றும்,  27ந்  தேதி  எலக்ஷன்  நடைபெறுமென்றும்,  28ந்  தேதி  முடிவு  தெரிவிக்கப்படுமென்றும்  குறிப்பிடப்பட்டு  வெளிப்படுத்தியாய்  விட்டது.  இதன்  பிறகு  ஈரோட்டில்  தேர்தல்  பேச்சுகளும்  பிரசாரங்களும்  வெகு  தடபுடலாய்  நடக்கின்றன. யார் வருவதைப்  பற்றியும்,  யார்  போவதைப்  பற்றியும்  நாம்  கவலைப்படவோ  யாருக்கும்  யோசனை  சொல்லவோ  வரவில்லை.  ஆனால்  கக்ஷிகள்    இயக்கங்கள்,  பெயர்களைச்  சொல்லிக் கொண்டு, தனிப்பட்ட மக்களின் யோக்கியதாம்சங்களைப்  பற்றி  கவனிக்காமல்  நடத்தும்  சூழ்ச்சிப்  பிரசாரம்  மாத்திரம்  வேண்டாம்  என்று  தெரிவித்துக்  கொள்ளுகிறோம்.  எல்லா  வகுப்பாருக்கும்  சந்தர்ப்பங்கள்  அளிக்கப்பட  வேண்டும்  என்பதும்,  கை  பலமும்  பண  பலமுமே  ஒரு  மனிதனுடைய  தேர்தலுக்கு  யோக்கியதாபக்ஷமாய்   இருந்து  வரக்கூடாது  என்பதும்  நமது  விருப்பமாகும்.  எப்படி  இருந்தாலும்  இதுவரை  கிடைத்த  செய்திகளில் ...

ஏழைகள்  துயரம்  நீங்க  வழி

ஏழைகள்  துயரம்  நீங்க  வழி

  தோழர்களே! இந்த  தேசத்தில்  ஏற்பட்டிருக்கும்  ஜன  சமூக  அமைப்பின்  அஸ்திவாரமே  சரியாய்  இல்லாமல்  இருக்கிறது.  இந்த  அஸ்திவாரத்தின்  மீது  கட்டக்  கூடிய  எந்த  அமைப்பும்,  ஜன  சமூகத்திற்கு  நன்மையளிக்கக்  கூடியதல்ல.  ஒரு  தகப்பன்  வயிற்றில்  பிறந்த  பிள்ளைகளுக்கு  எப்படிச்  சம  அந்தஸ்தும்,  சம  உரிமையும்  உண்டோ  அப்படியே  ஒரு  தேசத்தில்  பிறந்தவர்களுக்கும்  இருக்க  வேண்டியது  அவசியமாகும்.  அப்போதுதான்  மக்கள்   சுகமாக  வாழ  முடியும்.  ஏதோ  தான்  பிறந்த  வேளையின்  பலன்  கஷ்டத்தை  அனுபவிக்க  வேண்டியதுதான்;  மற்றொருவன்  சுகத்தை  அனுபவிக்க  பாத்தியதை  யுடையவன்  தான்  என்னும்  சோம்பேறி  எண்ணமே  மக்களை  அழித்து  வருவதற்கு  முக்கிய  கருவியாய்  இருக்கிறது.  இந்த  எண்ணம்  மாறுபட  வேண்டியது  அவசியமாகும்.  இதற்காக  எவ்வளவு  தியாகம்  செய்தாலும்  அது  வீணாகாது.  ஜனங்களின்  மனோபாவமும்,  வாழ்க்கையை  நடத்தும்  முறையும்  மாறினாலொழிய  வேறொரு  முறையாலும்  நன்மை  உண்டாகாது  என்பது  திண்ணம்.  தற்போதிருக்கும்  நிலைமையில்  சுயராஜ்ஜியம்  வந்தால்  குருட்டு  நம்பிக்கையும்,  வைதீகமும்  தான் ...

“”மனித  உற்பவம்”

“”மனித  உற்பவம்”

  இந்நூல்  செப்டம்பர்  முதலில்  வெளிவரும்.  தமிழ்  பாஷையிலும்,  மற்றும்  எந்த  இந்திய  பாஷையிலும்,  இதுகாரும்  எழுதிராத  நூல்  இதுவொன்றே.  இந்  நூல்  நாட்டில்  3035  கோடி  மக்களுக்கு,  மனிதன்  உலகில்  எவ்விதம்  உற்பத்தியானான்  என்ற  விஷயம்  தெரியாமலே  இருந்து  வருகிறது.  இந்தியாவில்,  தற்போது  வாழ்ந்து  வரும்  முதியோருக்கும்  இளைஞருக்கும்  மனிதன்  எவ்விதமாக  உலகில்  தோன்றி  இருக்கக்கூடுமென்று  சிந்திக்கக்  கூடாமலே  இருக்கின்றது.  ஏனெனில்  மதங்களாலும்,  ஜாதிகளாலும்  கட்டுண்ட  நமது  இந்திய  மக்களுக்கு,  எங்கே  மனித  உற்பவ  உண்மையைத்  தெரிந்துகொண்டால்,  மதங்கள்  பேரிலும்,  ஜாதிகள்  பேரிலும்  பற்று  ஒழிந்து  போகுமோ  என்ற  மோச  எண்ணத்தால்,  மனித  உற்பவத்தியைப்  பற்றி  விஞ்ஞானம்  கூறும்  உண்மையை,  நமது  பாமர  மக்களுக்கு  எடுத்துறைக்காமலே  இதுகாரும்  நமது  அறிஞர்களும்  இருந்து  வந்திருக்கின்றனர்.  இந்த  மோசடியைப்  போக்கவும்,  மதங்களிலுள்ள  பற்று  ஒழியவும்  ஏற்பட்டதாகும்  இந்நூல்.  இதனை  வாசித்து,  நமது  பாமர  மக்களுக்கு  மனிதனுடைய  உண்மை  வரலாற்றைத்  தெரிவிக்க,  ஒவ்வொரு  சமதர்மியும், ...

இதற்கு  என்ன  சமாதானம்?

இதற்கு  என்ன  சமாதானம்?

  ஹிட்லரே ஜர்மனியின்  மொத்த  ஜனத்தொகை  66000000  ஆறுகோடியே  அருபது  லக்ஷம்.  இதில்  3  கோடியே  21  லக்ஷம்  ஆண்கள்.  பெண்கள்  3  கோடியே  39  லக்ஷம்.  ஆகவே  பெண்கள்  ஆண்களை  விட  18  லட்சம்  பேர்கள்  அதிகமாய்  இருக்கிறார்கள்.  பெண்கள்  அடுப்பங்கரைக்கும்,  படுக்கை  அரைக்குத்தான்  லாயக்கென்று  சொல்லி  இந்தியப்  பெண்களைக்  கூட  அந்தப்படி  நினைக்கும்படி  செய்துவிட்ட  ஹிட்லரே  இந்த  18  லக்ஷம்  பெண்களைப்  பாதிரியாகச்  சொல்லுகின்றீர்களா?  அல்லது  சங்கறாச்சாரி களாகவும்,  மடாதிபதி,  தம்பிரான்களாகவும்  ஆகச்  சொல்லுகிறீர்களா?  அல்லது  ஆளுக்கு  60,000  பெண்களை  கலியாணம்  செய்துகொண்ட  தசரத  மகாராஜாவைப்போல்  ஒரு  ஐம்பது  தசரத  மகாராஜாவை  சிருஸ்டிக்கிறீரா?  என்ன  செய்யப்போகிறீர்.  மற்றும்  இந்தப்  பெண்கள்  சராசரி  4  வருஷத்திற்கு  ஒரு  குழந்தை  வீதம்  பெற்றாலும்  வருஷம்  4லீ  லக்ஷம்  பிரஜைகள்  அதிகமாகுமே.  ஆதலால்  அதை  தடுக்க  என்று  கர்ப்பத்தடைப்  பிரசாரம்  செய்வதற்காக  இவர்களை  கன்னியா  மாடத்துக்காவது  அனுப்ப  உத்தேசித்து  இருக்கிறீரா? பகுத்தறிவு  துணைத்...

வைசிராய்  பேச்சு

வைசிராய்  பேச்சு

  சட்டமறுப்பு  இயக்கம்  செத்தது சட்ட  மறுப்பு காலகிரமத்தில்  சட்ட  மறுப்பு  இயக்கத்  தலைவர்கள்  பயனற்ற  தடை  வேலை,  நாசவேலை  ஆகியவைகளைக்  கைவிட்டு  விடுவார்கள்  என்று  ஏற்கனவே  நான்  சொல்லியிருக்கிறேன்.  நான்  முன்  ஒரு  தடவை  அதைப்  பற்றிப்  பேசியபோது  சட்ட  மறுப்பு  உயிருக்கு  ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.  மகா  ஜனங்கள்  அதை  வேண்டவில்லை  யென்பது  தெளிவுபட  ஆரம்பித்துவிட்டது.  சென்ற  12  மாத  காலத்திய  சம்பவங்களிலிருந்து,  அவ்வுணர்ச்சி  இன்னும்  வலுத்து,  கடைசியாக  சென்ற  ஏப்ரல்  மாதம்  அப்புரட்சி  இயக்கத்தின்  மூல  புருஷரே  சட்டமறுப்பு  இயக்கத்தை  நிறுத்தி  வைக்கும்படி  எல்லா  காங்கிரஸ்காரர் களுக்கும்  யோசனை  சொல்லப்  புறப்பட்டார்.  ஸ்வராஜ்யத்திற்காக  சட்டமறுப்புச்  செய்வதை  நிறுத்தும்படி  அவர்  சொன்னார்.  இப்பால்  காங்கிரஸ்  காரியக்  கமிட்டி  கூடி,  அதை  ஊர்ஞ்ஜிதம்  செய்ததுடன்,  சட்ட  சபைப்  பிரவேசம்  செய்யவேண்டுமென்றும்  முடிவு  செய்தது.  ஒரு  காலத்தில்  அது  பயனற்ற  முறையென்று  பல  காங்கிரஸ்  தலைவர்கள்  கூறி  வந்தது  ஞாபகமிருக்கும்.  இவ்  விஷயங்களைப்பற்றி ...

நமது  மாகாணத்தில்  பெண்  வக்கீல்கள்

நமது  மாகாணத்தில்  பெண்  வக்கீல்கள்

  நமது  நாட்டில்  பெண்கள்  சமயலுக்கும்,  படுக்கைக்கும்  மாத்திரம்  பயன்படக்கூடியவர்கள்  என்கின்ற  எண்ணம்  வைதீகர்களுக்குள்ளும்,  வயோதிகர்களுக்குள்ளும்  இருந்து  வருவதோடு  பல  பெண்களும்  அப்படியே  நினைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். சில  பெண்கள்  இந்த  இரண்டு  வேலைகளுக்கும்  இடையூறு  இல்லாமல்  ஏதாவது  வேலை  கிடைத்தால்  மாத்திரம்  செய்யலாமே  தவிர  மற்றபடி  பெண்கள்  ஆண்களைப்  போல்  வேலை  பார்ப்பது  பாவமென்றும்  கருதி  இருக்கிறார்கள்.  சில  பெண்கள்  சட்டசபையில்  இருந்தவர்களும்,  இருக்க  பாக்கியம்  பெற்றவர்களும்  கூட  பெண்களுக்கு  கும்மி,  கோலாட்டம்,  கோலம்,  தையலில்  பூப்போடுதல்  ஆகிய  வேலைகள்  சம்மந்தமான  கல்வி  கற்றால்  போதும்  என்றும்  சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள். நம்முடைய  தேசத்து  தேசியத்தலைவர்களும்,  மகாத்மாக்கள்  என்போர்களுக்கும்  பெண்கள்  சந்திரமதி  போலும்,  சீதை  போலும்,  நளாயினிபோலும்  இருக்க  வேண்டும்  என்று  சொல்லி  அதற்குத்  தகுந்த  பிரசாரமும்  செய்து  வருகின்றார்கள்.  இப்படிப்பட்ட  கஷ்டமான  நிலையில்  நம்  தென்  இந்தியாவில்  சென்னையில்  பெண்கள்  பி.ஏ.,  பி.எல்.,  படித்து  வக்கீல்களாகி,  அட்வகேட்டுகளும்  ஆகி  இருக்கின்றார்கள்  என்றால்  பெண்களை ...

வடநாட்டுத்  “”தலைவர்கள்”

வடநாட்டுத்  “”தலைவர்கள்”

  பூலாபாய் தேசாய்    சர்தார்  சாதூல்  சிங் தோழர்  பூலாபாய்  தேசாய்  அவர்கள்  சென்ற  மாதம்  சென்னை  மாகாணத்திற்குத்  தருவிக்கப்பட்டு,  பல  இடங்களில்  சொற் பொழி வாற்றும்படி  செய்யப்பட்டதில்  அவர்  சொற்பொழிவிலிருந்து  மிக  மோசமான  வாக்கியங்கள்  காணப்பட்டதை  வாசகர்கள்  பல  பத்திரிகைகளில்  பார்த்திருக்கலாம். அவற்றில்  கவனிக்கத்தக்க  ஒரு  வாக்கியம்  என்னவென்றால்  “”சென்னை  மாகாணத்தில்  சர்க்காரை  ஆதரிக்க  சுயமரியாதை  இயக்கம்  என்பதாக  ஒன்று  இருந்து  வருகின்றது” என்பது. அதே  மாதிரி  தமிழ்நாட்டுக்கு  வந்த  மற்றொரு  தோழர்  சர்தார்  சாதூல்சிங்  என்பவர்  “”காங்கிரஸ்  குதிரை  போன்றது,  மற்ற  ஜஸ்டிஸ்  கக்ஷி  முதலியவைகள்  கழுதை  போன்றது”  என்றும்  பேசிவிட்டு  போயிருக்கிறார்.  இவர்களைப்  பற்றி  நாம்  பரிதாபப்படுகின்றோம்.  ஏனெனில்  இவர்கள்  தமிழ்நாட்டைப்  பற்றியோ,  ஜஸ்டிஸ்  கக்ஷியைப்  பற்றியோ,  சுயமரியாதை  இயக்கத்தைப்  பற்றியோ  ஒன்றும்  அறியாதவர்கள். தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  சர்க்கிஸ்  மாஸ்டர்கள்  மாதிரி  வடநாட்டு  ஆசாமிகளை  சர்க்கிஸ்  வளையத்துக்குள்  ஆட்டுவிக்கும்  மிருகங்களைப்  போலப்  பிடித்துக்  கொண்டு  வந்து  ஆட்டுவிப்பதன் ...

லார்ட்  வில்லிங்டனின்  வீர  முழக்கம்

லார்ட்  வில்லிங்டனின்  வீர  முழக்கம்

  ஜோசியம்  பலித்ததாம் லார்டு  வில்லிங்டன்  பிரபு  இந்திய  சட்டசபையில்  பேசும்போது  சட்ட  மறுப்பு  இயக்கத்  தலைவர்கள்  தங்களுடைய  பயனற்ற  தடை  வேலைகளை  சீக்கிரத்தில்  கைவிட்டு  விடுவார்கள்  என்று  முன்னமே  ஜோசியம்  சொன்னதாகவும்  கொஞ்ச  நாளைக்கு  முன்  உயிருக்கு  மன்றாடிக்  கொண்டிருந்த  சட்டமறுப்பு  இயக்கம்  செத்துப்போய்  விட்டதென்றும்  இதை  பல  காங்கிரஸ்  தலைவர்கள்  கூட  அப்போதே  சொன்னார்கள்  என்றும்,  இனி  அது  எந்தக்  காலத்திலும்  தலை  எடுக்காமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  என்றும்,  இப்போது  காங்கிரஸ்  ஸ்தாபனங்களின்  மீதுள்ள  தடையை நீக்கிவிட்டோம் என்றும் சட்டமறுப்பு இயக்கம் அடியோடு செத்துப்   போய்விட்டதென்று  தான்  நம்புவதாகவும்,  இது  விஷயமாய்  தான்  கையாண்ட  முறைகள்  எல்லாம்  வெற்றி  அளித்து  விட்டதென்றும்,  அவை  வெற்றியளித்ததற்கு  காரணம்  பொது  ஜனங்களுக்கு  நல்ல  புத்தி  வந்து  சட்ட  மறுப்பைக்  கைவிட்டதே  காரணமென்றும்  சொல்லி  கடைசியாக  இந்த  அளவுக்கு  வில்லிங்டன்  பிரபு  ஜோசியம்  பலித்துவிட்டது   என்பதோடு   இந்த  ஜோசியம்  வில்லிங்டன்  பிரபு ...

மண்  குதிரையை  நம்பின  பலன் 

மண்  குதிரையை  நம்பின  பலன் 

  கருப்புக்  கொடியும்,  தடி  அடியும்  வெடிகுண்டும் தோழர்  காந்தியாருக்கும்,  காங்கிரசுக்கும்  அரசியல்  வாய்ப்பூட்டு  ஏற்பட்டு  விட்டதின்  பிறகு  ஏதாவது  ஒரு  வேலை  செய்து  கொண்டிருக்கா விட்டால்  தங்களை  உலகம்  மறந்து  விடுமோ  என்று  பயந்து  சமுதாயத்  துறையில்  வேலை  செய்ய  எண்ணங்கொண்டு  ஹரிஜன  சேவை,  ஆலயப்  பிரவேசம்  என்னும்  பெயர்களால்  சுற்றுப்பிரயாணம்  செய்ததும்,  பணம்  தண்டினதும்  யாவரும்  அறிந்ததாகும்.  இதை  மெய்யென்று  நம்பின  சில  அரசியல்  பிழைப்புக்காரர்கள்  ஆலயப்  பிரவசே  மசோதா,  தீண்டாமை  விலக்கு  மசோதா  முதலியவைகள்  கொண்டு  வந்து  விளம்பரம்  செய்து  கொண்டதும்  இந்தியர்கள்  அறிவார்கள். பிறகு  என்ன  ஏற்பட்டது?  மண்  குதிரையை  நம்பி  ஆற்றில்  இறங்கின  பலன்தான்  ஏற்பட்டது.  ஏன்  ஏற்பட்டது  என்றால்  தோழர்  காந்தியார்  தமது  பரிவாரங்களுடனும்  சுற்றுப்  பிரயாணம்  செல்லுகையில்  அவருக்கு  ஏற்பட்ட  கருப்புக்  கொடி,  தடியடி,  வெடிகுண்டு  ஆகியவைகள்  பிரயோகமும்,  காந்தி  கூட்டத்தார்  மற்றவர்கள்  மீது  பிரயோகித்த  தடியடி  பிரசாரமும்  சேர்ந்து  காந்தியாரைப் ...

“”கர்ம  பலன்”

“”கர்ம  பலன்”

  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  அவர்களுக்கு  விபரம்  தெரிந்த  காலம்  முதல்  இன்று  வரை  இன்னமும்  தேசீய  பல்லவி  பாடிக்  கொண்டிருந்தது  யாவருக்கும்  தெரிந்ததாகும்.  அதோடு  கூடவே,  இந்த  சர்க்காரை,  அதன்  அன்னிய  ஆக்ஷியை  ஒழித்து  சுயராஜ்ஜியம்  ஏற்படுத்த  வேண்டும்  என்ற  அனுபல்லவியையும்  பாடி  வந்ததும்,  வருவதும்  யாவருக்கும்  தெரியும். தேசீயம்  என்பது  வயிற்று  பிழைப்பு  நாடகம்  என்றும்,  அன்னிய  ஆக்ஷி,  சுய  ஆக்ஷி,  சுயராஜ்ஜியம்  என்பவைகள்  எல்லாம்  பார்ப்பனர்களுக்கும்,  பணக்காரர்களுக்கும்  பாடுபாடும்  சோம்பேறி  நாடகம்  என்று  நாம்  சொல்லி வருகிறோம். இதை  ஈணூ.நாயுடு  அவர்கள்  எதிர்த்துப்  பழித்து  தூஷித்தும்  வந்திருக்கிறார்  என்றாலும்  இந்தப்  பிரசாரத்தின்  பலனை  இவர்  என்றைக்காவது  ஒரு  நாளைக்கு  அதாவது   அனுபவிப்பார்  என்றே  கருதி  அதை  லக்ஷியம்  செய்யாமல்  இருந்து  வந்தோம்.  எனினும்  “”கர்மத்தின்  பலனை”  இன்று  அவர்  அடைய  நேர்ந்ததை  அவரே  மறுக்க  மாட்டார்  என்று  கருதுகிறோம்.  அதாவது  இந்த  நாட்டுக்கு,  இந்திய  தேசீயத்துக்கு, ...

ஆலயப்பிரவேச  மசோதா 

ஆலயப்பிரவேச  மசோதா 

  கருவிலேயே  கருகிவிட்டது இந்திய  சட்டசபையில்  இருந்த  ஆலயப்பிரவேச  மசோதா  23ந்தேதி  இந்திய  சட்டசபை  கூட்டத்துக்கு  வந்து  பொதுஜன  அபிப்பிராயம்  விரோதமாய்  இருக்கின்றது  என்கின்ற  காரணத்தால்  சர்க்காராரால்  வாப்பீசு  வாங்கிக்கொள்ளும்படி  கேழ்க்கப்பட்டு  அது  வாப்பீசு  வாங்கிக்  கொள்ளப்பட்டதால்  அது  கருவிலேயே  கருகி  விட்டது. பகுத்தறிவு  செய்திக் குறிப்பு  26.08.1934

தோழர்  திரு.வி.க.  முதலியார்

தோழர்  திரு.வி.க.  முதலியார்

  தோழர்  திரு.வி. கல்யாணசுந்திர  முதலியார்  அவர்கள்  திருச்சிக்கும், ராசீபுரத்துக்கும்  வருவதாக  பத்திரிகையிலும்,  துண்டுப்  பிரசுரங்களிலும்  வெளியானபடி  அவர்  வரவில்லை.  ஆதலால்  பார்ப்பனக்  கூலிப்  பத்திரிகைகள்  கல்யாணசுந்திர  முதலியார்  வரமாட்டார்.  அவர்  பெயரை  வேண்டுமென்றே  தப்பிதமாய்  உபயோகித்துக்கொள்ளுகிறார்கள்  என்று  எழுதிய  வாசகம்  உண்மையாய்  இருக்கலாம்  என்று  சிலர்  கருதக்கூடும்.  ஆதலால்  நடந்த  விபரங்களை  எழுதுகின்றோம்.  ஒரு  சுற்றுப்பிரயாணம்  ஏற்படுத்த  வேண்டுமென்றும்,  தானும்  அதில்  கலந்து  கொள்ளுவதாகவும்  தோழர்  முதலியார்  அவர்களே  பிரஸ்தாபித்ததை  ஒட்டித்தான்  சுற்றுப்பிரயாணம்  பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும்,  அவருடைய  சம்மதத்தின்  பேரிலேயேதான்  பத்திரிக்கைகளிலும்,  துண்டு  பிரசுரங்களிலும்  பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும்  நாம்  நமது  தோழர்களுக்குத்  தெரிவித்துக்  கொள்வதுடன்,  அதை  நம்பியே  தோழர்  ஈ.வெ.ரா.  ஒவ்வொரு  ஊருக்கும்  சென்றார்  என்றும்  தெரிவித்துக் கொள்வதோடு  தோழர்  முதலியார்  அவர்கள்  இரண்டு  இடத்திற்கும்  விஜயம்  செய்யாத  காரணம்  திருச்சிக்கு  மூலவியாதி  தொந்திரவால் வரவில்லை  என்றும்,  ராசீபுரத்துக்கு  வறாதது  அவரது  நெருங்கிய  பந்து  ஒருவரின்  மரணம்  காரணம்  என்றும்  சேதி  வந்திருப்பதையும் ...

சர்.ஆர்.கே.  ஷண்முகம்

சர்.ஆர்.கே.  ஷண்முகம்

  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  சமீபத்தில்  வரப்போகும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்கு  ஒரு  அபேக்ஷகராக  நிற்கின்றார்.  அவர்  சென்னை  மாகாண  வர்த்தக  தொகுதிக்கு  அபேக்ஷகராய்  நிற்க  உத்தேசித்திருப்பதாய்  தெரிகின்றது.  அவர்  இப்போது  பொது  (கோவை,  சேலம்,  வட  ஆற்காடு  ஜில்லாக்கள்)  தொகுதியின்  பிரதிநிதியாய் இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு அவரது மேன்மையாலும் தகுதியாலும்  இந்திய  சட்டசபைக்கே  தலைவராய்,  அதாவது  கௌரதையில்  வைஸ்றாய்  பிரபுவுக்கு  அடுத்தபடியாய்  விளங்குகிறார். அவர்  காங்கிரசில்  பலகாலம்  இருந்தவர்.  சமீப  காலத்தில்  அதாவது  1925,  26ம்  வருடங்களில்  தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  தமிழ்நாட்டில்  காங்கிரசின்  பேரால்  தனித்து  நின்று  மேடையேறுவதற்கு  தகுதி  இல்லாமல்  முறியடிக்கப்பட்ட  காலத்தில்  (தோழர்கள்  கு. சீனிவாசய்யங்கார்,  சி.ராஜகோபாலாச்சாரியார்,  சத்தியமூர்த்தி  முதலியவர்கள்)  தோழர்  சண்முகம்  அவர்களை  முன்னிலையில்  நிறுத்தி  அவரது  நிழலில்  மறைந்து  கொண்டு  மேடைகளில்  ஆள்  அடையாளம்  தெரியாமல்  உட்கார்ந்திருந்ததை  இதற்குள்  அவர்களும்  மறந்திருக்க  மாட்டார்கள்.  பொது  ஜனங்களும்  மறந்திருக்க  மாட்டார்கள்.  தோழர்  ஷண்முகமும்  மறந்திருக்க ...

எதிர்  பாருங்கள்!  எதிர்  பாருங்கள்!! 

எதிர்  பாருங்கள்!  எதிர்  பாருங்கள்!! 

  எதிர்  பாருங்கள்!!! காங்கிரஸ்  சுயராஜ்ஜியக்  கக்ஷிக்காரர்கள்  முன்  ஒரு  காலத்தில்  இந்திய  சட்டசபையில்  செல்வாக்காய்  இருந்தபோது  அங்கு  நடந்து  கொண்ட  மாதிரியும்,  அவர்கள்  சட்டசபை  அங்கத்தினர்  பதவியை  உபயோகித்து  பணம்  சம்பாதித்த  மாதிரியும்,  தலைவர்கள்  என்பவர்கள்  சிலர்  அந்தப்  பணத்தில்  பெரும்பாகம்  தங்கள்  சொந்தத்திற்கு  ஸ்வஹா  செய்து  கொண்ட  கதைகளும்  பகுத்தறிவில்  வரும்  நாளை  எதிர்  பாருங்கள். மற்றும்  இன்றைய  காங்கிரஸ்  அபேக்ஷகர்களில்  சிலரின்  யோக்கியதையையும்  அவர்களின்  வாழ்க்கையையும்  யாருடைய  செலவில்  அவர்கள்  அபேக்ஷகறாய்  இருக்கிறார்கள்  என்பதும்  வெளியாகலாம். ஏனெனில்  காங்கிரஸ்  கக்ஷி  தவிர  மற்றக்  கக்ஷி  கழுதைக்கு  சமானம்  என்றும்  காங்கிரசின்  பேரால்  கழுதை  நின்றாலும்  அதற்குத்தான்  ஓட்டுச்  செய்ய  வேண்டுமென்றும்,  சுயமரியாதைக்  கக்ஷி  சர்க்கார்  அடிமைக்  கக்ஷி  என்றும்,  தேசத்  துரோகக்  கக்ஷி  என்றும்  சொல்லுவதற்குப்  பதில்  சொல்லுமுகத்தான்  அவை  வெளியாகும். பகுத்தறிவு  அறிவிப்பு  26.08.1934

தேர்தல்  பிரசாரம்  என்னும்  ஏமாற்றுப்  பிரசாரமும்  வயிற்றுப்பிழைப்பு  வசவுகளும்

தேர்தல்  பிரசாரம்  என்னும்  ஏமாற்றுப்  பிரசாரமும்  வயிற்றுப்பிழைப்பு  வசவுகளும்

  சித்திரபுத்திரன் சித்திரபுத்திரனுக்குப்  பழய  பாடம்  படிக்க  நேர்ந்துவிட்டது.  இது  இஷ்டமில்லாத  காரியமானாலும்  அது  இன்றியமையாததாய்  போய் விட்டது!  கர்மபலன்  யாரை  விட்டது? இந்திய  சட்ட  சபைத்  தேர்தல்  ஆரம்பமாகி  விட்டது.  இது  வேலையில்லா  வாலிபர்களின்  கஷ்டத்தை  ஒருவாறு  குறைக்க  அனுகூலமாயிருக்கிறது  என்று  சொல்லலாம்.  அது  போலவே  கொள்கையோ,  விஷயமோ  இல்லாத  பத்திரிக்கைகாரர்களுக்கும்  ஒரு  அளவு  கஷ்டம்  நீங்கிற்று  என்றும்  சொல்லலாம்.  நாட்டுக்கோ,  நகரத்துக்கோ,  ஏழைப்  பாட்டாளி  மக்களுக்கோ  இதனால்  ஏதாவது  பயன்  உண்டா  என்று  பார்ப்போமானால்  தேர்தல்களுடையவும்,  தேர்தல்  முடிவுகளுடையவும்  பயன்  கடைசியாக  “”பிச்சை  போடாவிட்டாலும்  பரவாயில்லை  நாயைப்  பிடித்துக்  கட்டுங்கள்”  என்கின்ற  மாதிரிக்குத்  தான்  அதாவது  நன்மை  ஏற்படா விட்டாலும்  கெடுதியாவது  இல்லாமல்  இருந்தால்  போதும்  என்று  பிறார்த்திக்க  வேண்டிய  அளவில்தான்  வந்து  முடியப்  போகின்றதே  ஒழிய  வேறில்லை  என்பது  உறுதி. காங்கிரசும்,  சுயராஜ்ஜியக்  கிளர்ச்சியும்,  சீர்திருத்த  முயற்சியும்  ஆதியில்  நம்  நாட்டில்  எப்படி  ஏற்பட்டது  என்பதை  வாசகர்கள் ...