மற்றுமொரு தொல்லை
மதங்களின் பெயரால் கடவுளின் பெயரால் ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில் ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிக்கல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக்கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்மந்தமான தெய்வ சம்மந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம் தோறும் வந்து கொண்டுள்ளன. தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்த பாடில்லை. முதலாளிகளின் கோடியாடைகளின்னும் மழுங்கவில்லை. பலகார பக்ஷணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை. மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்ட கடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த லக்ஷணத்தில் “”கார்த்திகை தீபம்” என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது. தீபாவளித் தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களைப் பிடித்தாட்டி விட்டு போய்விட்டது. இதுவோ ( அண்ணாமலை தீபமோ) கடவுளே ( சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறாரென்பதாக அண்ணாமலை ...