Author: admin

பொப்பிலியும்    செட்டிநாடும்

பொப்பிலியும்    செட்டிநாடும்

  செட்டிநாட்டு  கோடீஸ்வரரும்,  பரம்பரை  ராஜா  பட்டம்  பெற்றவரும்,  தர்மப்பிரபுவுமான  ராஜா  சர்.  அண்ணாமலை  செட்டியாரின்  குமாரர்  சென்னை  கார்ப்பரேஷன்  மேயர்  குமாரராஜா  என்றழைக்கப்படும்  முத்தையா  செட்டியார்  அவர்கள்  மீது  ஜஸ்டிஸ்  கட்சியார்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  நிறைவேற்றத்  துணிந்து  அவரிடம்  அதாவது  முத்தையா  செட்டியார்  அவர்களிடம்  சென்னை  சட்டசபைக்  கொரடா  பதவியையும்,  ஜஸ்டிஸ்  கட்சியின்  நிர்வாக  சபையின்  தலைவர்  பதவியையும்  ராஜிநாமா  பெற்றுவிட்டார்கள். இந்தக்  காரியமானது  இந்தியாவின்  சரித்திரத்திலேயே    ஏன்  உலக  சரித்திரத்திலேயே புதுமையானதும், இதற்கு முன் எவரும் செய்யத்  துணியாததும், பார்த்திராததும்,  கேட்டிராததுமான  காரியமென்றே  சொல்ல  வேண்டும். செட்டிநாட்டுப்  பிரபுவுக்கு  அதிகாரம்,  பதவி,  பட்டம்,  பணம்,  செல்வாக்கு  ஆகியவை  எல்லாம்  நிறைந்து  இருந்தும்  கட்சி  முறை,  கொள்கை  முறை,  சிநேக  முறை  என்பவைகள்  அல்லாமல்  தனிப்பட்ட  முறையிலும்,  செல்வ  முறையிலும்,  பின்பற்றுவோர்  முறையிலும்  ஏராளமான  பலமும்,  சாய்காலும்  இருந்தும்  ஒன்றும்  பயன்படாமல்  கோழிக்குஞ்சை  ராஜாளி  தூக்கிக்  கொண்டு  போவதுபோல்  ஒரு ...

ஆந்திரர்    தமிழர்  என்று  பிரிக்கப்பார்ப்பது

ஆந்திரர்    தமிழர்  என்று  பிரிக்கப்பார்ப்பது

  ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள்.  “”பசி  வந்திடப்  பத்தும்  பறந்துபோம்”  என்கின்ற  பழமொழிப்படி  ஏதாவது  ஒரு  விஷயத்தில்  பசி  ஏற்பட்டு  விட்டால்  மானம்,  குலம்,  கல்வி,  அறிவு  ஆகியவைகளை  அவர்களில்  பலர்  வந்த  விலைக்கு  விற்று  விட்டு  மிக  இழிவான  காரியங்களில்  சிலர்  இறங்கி  விட்டதானது  மிகவும்  வெறுக்கத்தக்கதும்,  பரிதாபப்படத்  தக்கதுமான  விஷயமாக  ஆகிவிட்டது. தோழர்  குமாரராஜா  அவர்கள்  மீது  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு  வருவதற்கு  ஆதாரமான  பிரஸ்தாப  விஷயம்  தோழர்  ஆர்.கே.ஷண்முகம்  அவர்களுடைய  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  செட்டிநாடு  ராஜா  சர்.அண்ணாமலையார்  அவர்களும்,  அவர்களது  குமாரரான  முத்தையா  அவர்களும்  நம்பிக்கைக்  குறைவாய்  நடந்து கொண்டார்கள் ...

சென்னை  சட்டசபை  உப  தேர்தல்

சென்னை  சட்டசபை  உப  தேர்தல்

  சென்னை  சட்ட  சபைக்கு  சாமி  வெங்கடாசலம்  செட்டியார்  அவர்களால்  காலி  செய்த  ஸ்தானமானது  பூர்த்தி  செய்யப்படுவதற்கு  காங்கிரசுக்காரர்கள்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்கள்  வெற்றியைப்  பார்த்த  பிறகு  அதற்கும்  பார்ப்பனர்களாகவே  பார்த்து  நிருத்த  முயற்சித்து  வருகிறார்கள்.  தோழர்  லக்ஷிமிபதி  அம்மாள்  அவர்கள்  பெயர்  பிரஸ்தாபிக்கப்பட்டது.  பிறகு  தோழர்  டி. பிரகாசம்  பந்துலு  அவர்கள்  பெயர்  பிரஸ்தாபிக்கப்படுகிறது.  அவர்கள்  பெயர்  ஓட்டர்  லிஸ்டில்  காணப்படவில்லை  என்றும்  சொல்லிக்  கொள்ளப்படுகிறது  என்றாலும்  மறுபடியும்  ஒரு  அரைப்பார்ப்பனரையாவது  அந்த  ஸ்தானத்துக்கு  போட  பார்க்கின்றார்களே  ஒழிய  தோழர்  கத்தே  ரங்கய்ய  நாயுடு  அவர்கள்  காங்கிரசுக்காக  என்று  எவ்வளவோ  உழைத்து  வந்தும்  அவர்  பார்ப்பனரல்லாதாராய்  இருப்பதால்  அவர்  பெயரை  பிரஸ்தாபிப்பாரையே  காணோம்.  அவர்  எந்தக்  காரணத்தினால்  பிடித்தமில்லை  ஆனாலும்  வேறு  ஒரு  பார்ப்பனரல்லாதாரையாவது  போடலாம். ஆகவே  இந்த  சந்தர்ப்பத்திலேயே  எவ்வளவு  பார்ப்பனர்களை  புகுத்திக்  கொள்ள  முடியுமோ  அவ்வளவு  பெயர்களையும்  புகுத்திக்  கொள்ள  முடிவு  செய்து  தோழர்  டாக்டர் ...

வேஷம்  விளங்கி  விட்டது

வேஷம்  விளங்கி  விட்டது

  “”வெள்ளை  அறிக்கையை  பஹிஷ்காரம்  செய்கின்றோம்.”  “”வைசிராய்  வந்தவுடன்  வெளியில்  எழுந்து  வந்து  விடுகின்றோம்.”  என்றெல்லாம்  கூறி  ஓட்டு  வாங்கி  சட்டசபைக்குச்  சென்று  இருக்கும்  நமது  காங்கிரஸ்  வீரர்கள்  இப்போது  மெள்ள  மெள்ள  தங்கள்  திரையை  நீக்கிக்  கொண்டு  வெளியில்  வர  ஆரம்பித்து  விட்டார்கள். அதாவது  வெள்ளை  அறிக்கையின்  பயனாய்  கிடைக்கக்  கூடிய  பதவிகளையும்,  உத்தியோகங்களையும்,  சம்பளங்களையும்  கைப்பற்ற  வேண்டுமென்றும்,  அந்தப்படி  செய்யாவிட்டால்  பிற்போக்காளர்கள்  (காங்கிரஸ்காரர்கள்  அல்லாதார்கள்)  அதை  அனுபவித்து  விடுவார்களென்றும்  சொல்லி  இப்போதே  பழய  பாடம்  படிக்க  ஆரம்பித்து  விட்டார்கள். முன்பு  ஒரு தடவையும்  கூட  இந்தப்படியே  அதாவது  காங்கிரஸ்காரர்கள்  சட்டசபைக்குச்  சென்றால்  மந்திரி  வேலையை  ஒப்புக்கொள்ளக்கூடாது  என்றும்,  மந்திரிகளை  ஆதரிக்கக்  கூடாதென்றும்  செய்திருந்த  காங்கிரஸ்  தீர்மானத்துக்கு  விரோதமாய்  மந்திரி  உத்தியோகம்  பெற  ஆசைப்பட்டு  அது  சௌகரியப்படாமல்  போகவே  தங்கள்  இஷ்டப்படி  மந்திரிகளை  ஆதரிக்கத்  தொடங்கி  மந்திரிகளின்  கையாள்களாகவும்  இருந்து  வந்தார்கள். அதை  மற்ற  மாகாண  காங்கிரஸ்வாதிகள்  கண்டித்து  சமாதானம் ...

தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்

தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்

  “”யாருக்காவது  பயித்தியம்  பிடிக்கச்  செய்ய  வேண்டுமானால்  அவருடைய  யோக்கியதைக்கு  மீறிய  பவுசு  வரும்படி  செய்து  விட்டால்  போதும்”  என்று  ஒரு  பழமொழி  உண்டு. அதுபோல்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்களுக்கு  அவர்  யோக்கியதைக்கு  மீறின  (அதாவது  8பங்கு  10பங்கு  அதிகமான)  பவுசு  ஏற்பட்டவுடன்  இப்போது  அவர்  பைத்தியக்கார  ஆஸ்பத்திரியில்  வைக்கப்பட  வேண்டிய  அளவுக்கு  வந்து  விட்டார்.  தலைகால்  தெரியாமல்  தாண்டவமாடுகிறார். இந்திய  சட்டசபைக்கு  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்கள்  மெம்பராய்  விட்டார்  என்று  சொல்லப்பட்டவுடன்  அவர்  பேச  வாயைத்  திறந்ததும்  சென்னை  கவர்னர்  பிரபுவுக்கு  ஒரு  உத்திரவு  போட்டார். அதாவது  “”இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  காங்கிரஸ்காரர்கள்  வெற்றி  பெற்று  விட்டதால்  கவர்னர்  மாகாண  சட்டசபையை  கலைத்து  மந்திரிகளை  வீட்டுக்கு  ஓட்டி  விடவேண்டும்”  என்று  சொல்லி  விட்டார். இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  காங்கிரஸ்காரர்  ஜெயித்ததற்கும்,  மாகாண  சட்டசபைக்கும்,  என்ன  சம்மந்தம்  என்பது  தோழர்  சத்தியமூர்த்திக்கு  சுய  அறிவு  இருந்தால்  புரியாமல்  இருக்குமா  என்று ...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அசார்சமாய்                –              ஈடுபாடு காட்டாமல், கவலையற்று அமரிக்கை   –              அமைதி ஆதிக்யம்      –              தலைமை இடை                –              எடை உதாரத்தன்மை       –              பெருங்கொடைத் தன்மை உத்திரணி     –              பஞ்ச பாத்திரக் கரண்டி, தீர்த்தம், எடுத்தற்குரிய சிறுகரண்டி ஐஸ்வர்யம்                 –              செல்வம் கனப்படவில்லை –              இறுமாப்படையவில்லை கியாதி              –              புகழ் கெண்டி            –              கமண்டலம் சிக்ஷித்து       –              தண்டித்து சுயகாரிய சித்திபெற           –              தன் காரியம் கைகூட தர்க்கிக்கப்படுதல்                 –              விவாதித்தல் தற்பித்து        –              பயிற்சி, தகுதியாக்கல் தனிகர்             –              செல்வர் தியங்கும்படி              –              கவலையடையும்படி திரவிய சகாயம்      –              பொருளுதவி நிர்த்தாக்ஷண்யம் –              இரக்கமின்மை...

ஒரு  தோழரின்  கடிதத்திற்கு   ஈ.வெ.ராமசாமி  பதில்

ஒரு  தோழரின்  கடிதத்திற்கு  ஈ.வெ.ராமசாமி  பதில்

    தோழரின்  கடிதம் @ “”அன்புடைய  ஈ.வெ.ராமசாமி  நாயக்கர் அவர்கட்கு  ÷க்ஷமம். ÷க்ஷமத்துக்கு எழுதுங்கள்.  வெகு  நாளாகக்  கடிதப் போக்கு வரத்தில்லை.  நானும்  உங்களுக்குச்  சில  விஷயங்கள்  பற்றிக்  கடிதம்  எழுத வேண்டும்  என  எண்ணியெண்ணி முடியாது  போயிற்று. நான்  சொல்ல  விரும்பும்  விஷயம்  சிலவுண்டு.  உங்கள் இயக்கம்  உயர்வானது. அவ்வியக்கம்  பலப்பட்டு  எல்லா  வகுப்பாருடைய உதவியும்  பெறவேண்டுமானால்  நீங்கள் தற்காலம்  அனுஷ்டித்து  வரும்  முறை  சரியல்லவென்பது  எனது  உண்மையான  எண்ணம். உங்கள் இயக்கத்தில்  எனக்கு ஆர்வமுண்டு. 10, 15  வருஷ காலமாக  இவ்வியக்கத்தின்  கொள்கை  காரணமாய் நான்  இந்தியாவில்  நடைபெறும்   ஒரு  இயக்கத்திலும்  நேர்முகமாய்க் கலந்து கொள்ளாது  இருந்து வந்திருக்கிறேன்.  ஏனெனில்  ஒவ்வொரு இயக்கத்திலும், சிற்சில  நல்ல அம்சங்களிருக்கின்றன;  பல  கெட்ட அம்சங்களும்  உண்டு. சமதர்மக்  கொள்கையை  ருஷ்யாவில்  கொண்டாடும் முறையில்  இந்தியாவில்  புகுத்துவது  முடியாது. அவர்களது பழைய கொள்கைகளையே  மாற்றிக்  கொண்டு வருகிறார்கள். நீங்கள் செய்துவரும்  பிரசாரத்தில்...

நாகரீகமென்றால் என்ன?

நாகரீகமென்றால் என்ன?

தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான – முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது. விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன். நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது...

கோவைச் சிறையில் தோழர் ராமசாமி  இந்திய சட்டசபைத் தலைவரின் சந்திப்பு கண்ணம்மாள் ஜாமீனில் விடுதலை

கோவைச் சிறையில் தோழர் ராமசாமி  இந்திய சட்டசபைத் தலைவரின் சந்திப்பு கண்ணம்மாள் ஜாமீனில் விடுதலை

26-12-33 ² அன்று 11 மணிக்கு கோயம்புத்தூர் ஜில்லா மாஜி°டிரேட் தோழர் வெல்° ஐ.சி.ஏ°. முன்பு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சகோதரியும் குடி அரசுப் பத்திரிகையின் பிரசுதாரருமான தோழர் கண்ணம் மாளை ஜாமீனில் விடவேண்டுமென கொடுத்திருந்த மனுவின்பேரில் விவாதம் நடைபெற்றது. தோழர் கண்ணம்மாள் சென்ற வாரம் தோழர் ராமசாமியுடன் கைது செய்யப்பட்ட விவரம் நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜாமீனில் தோழர் கண்ணம்மாளை விடவேண்டுமென்று தோழர் டி.டி. ரத்தினசபாபதி பிள்ளை இன்று கலெக்டர் முன்பு வாதிக்கையில் அக்டோபர் மாதம் 29 தேதி வெளிவந்துள்ள குடி அரசுப் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ள கட்டுரைக்கு தோழர் கண்ணம்மாள் நேர் ஜவாப் தாரியல்ல வென்பதாகவும் ³ வியாசமானது வாக்குத்தாரர்களுக்குக் கூறப் பட்ட ஓர் சாதாரண போதனைதான் ஆகும் என்பதாகவும். எனவே அது ராஜ நிந்தனையாகாது என்பதாகவும், இப்போது வியாசத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதோடு எதிரி ஒரு பெண்ணாக இருப்பதை முன்னிட்டும், தேக அசௌகரியத்துடன் இருப்பதை...

தமிழன்பர் மகாநாடு  -ஈ.வெ.கி

தமிழன்பர் மகாநாடு -ஈ.வெ.கி

  சென்னையில் இம்மாதம் 23, 24 களில் கூடிய தமிழன்பர் மகாநாடு ஒரு சுயநலக் கூட்டத்தார்களால் கூட்டப்பட்டு அதன் பலன்களை அச்சுய நலக் கூட்டத்தவர்களுக்கே பயன்படுமாறு உபயோகப்படும்படியான முறை யில் கடத்தப்போவதாக நம் புரட்சியில் பல கட்டுரைகளும், தலையங்கமும் எழுதப்பட்டன. அதைக் கண்டிப்பாய் பகிஷ்கரிக்கும்படி இரண்டு ஜில்லா மகாநாடுகளும், பல சங்கங்களும் தீர்மானங்கள் நிறைவேற்றி பத்திரிகை களில் வெளிவந்துள்ளன. தென்னாட்டில் தமிழ் கற்று அதில் பாண்டித்யம் பெற்று அன்பு பூண்டி ருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மலித்திருக்க, தமிழென்றால் வேப்பங்காயெனக் கருதும் சில ஆரியப்பார்ப்பனர்கள் பெருக்காக தங்க ளுக்கு இசைந்த இரண்டொரு தமிழர்களையும், இரண்டொரு மகம்மதியர் களையும், கிறி°தவர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழர் மகாநாடு என்று போடாது தமிழன்பர் மகாநாடு என்று ஓர் மகாநாட்டைக் கூட்ட ஆரம்பித் ததே இம்மகாநாட்டைக் கூட்டியவர்களின் சூழ்ச்சியை விளக்கப் போதிய சான்றாகும். அடுத்தபடியாக அதன் நடவடிக்ககைகளில் அங்கம் பெற்றவர்க ளாகிய புத்தகாலய பிரசார சங்கத்தலைவர், வரவேற்புக்கழகத் தலைவர்...

ஜஸ்டிஸ்  கட்சியின்  புனருத்தாரணம்

ஜஸ்டிஸ்  கட்சியின்  புனருத்தாரணம்

  ஜஸ்டிஸ்  கட்சியில்  சட்டசபை  நடவடிக்கைகளைப்  பொருத்தவரை  கவனிப்பதற்கு  என்று  கவுன்சில்  பார்ட்டி  என்பதாக  ஒரு  பிரிவு  இருந்து  வரும்  விஷயம் யாவரும்  அறிந்ததாகும்.  அந்தப்  பிரிவுக்கு  முக்கிய  கொரடாவாக  அதாவது  சட்டசபையைப்  பொருத்தவரையில்  மெம்பர்கள்  எப்படி நடந்து கொள்ள வேண்டும்  என்பதைக்  கட்சி  சார்பாய் தெரிவிப்பதற்காக  தெரிந்தெடுக்கப்பட்டவரை  கொரடா  என்று  சொல்லுவது.  அந்த  ஸ்தானத்தில்  தோழர்  குமாரராஜா  முத்தய்யா  அவர்கள் இருந்து  வருகிறார். சமீபத்தில்  இந்திய  சட்டசபைக்கு  நடந்த தேர்தல்கள்  விஷயமாய்  தோழர்  ஷண்முகம்  அவர்களுக்கும்  தோழர்  ராமசாமி  முதலியார் அவர்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு  முக்கிய  காரணம்,  தோழர்  குமாரராஜா  முத்தய்யா செட்டியார்  அவர்கள்  சரியானபடி  நடந்து கொள்ளாததே  என்ற  ஒரு  அபிப்பிராயம்  கட்சிப்  பிரமுகர்களுக்குள்  ஏற்பட்டுவிட்டது. மேற்படி  தோல்விகளானது  தமிழ்  நாட்டில்  ஜஸ்டிஸ்  கட்சியின்  நிலைமையை  பாதிக்கக் கூடியதாய்  போய்விட்டதால்,  அந்த  வருத்தத்தை  உத்தேசித்தும் மேலால்  இந்தப்படி நேராமல்  இருக்க வேண்டும்  என்பதை  உத்தேசித்தும்  சில  முன் ஜாக்கிரதையான ...

காந்தி பிரசாரம் பார்ப்பன சூட்சியே

காந்தி பிரசாரம் பார்ப்பன சூட்சியே

காந்தி பகிஷ்காரக் கிளர்ச்சிகளைப்பற்றி குற்றமாகவும், பரிகாசமாக வும் பாமர ஜனங்களை நினைக்கச் செய்ய, பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுப் பாடாக சூட்சி செய்கின்றன. இதற்கு  ஆதாரமாக அவைகள் எழுதிக்காட்டும் ஒரே ஆதாரம்  என்னவென்றால் காந்தியை சனாதன தர்மிகளும் பகிஷ்கரிக்கிறார்கள். அரசாங்கத்தாரும் பகிஷ்கரிக்கிறார்கள். அதுபோலவேதான் சுயமரியாதைக் காரர்களும் பகிஷ்கரிக்கிறார்கள் என்று பல்லவி ஆரம்பித்து மூன்று பேரை யும் ஒன்றாக்கி இவைகள் ஏதோ சுயநலம் என்றும் வைத்து பிரமாதமான பொதுநலத்துக்கு விரோதமாய் ஏதோ பெரிய அக்கிரமம் செய்கிறார்கள் என்று படும்படியாக எழுதிவருகிறார்கள்.  இதுபரம்பரை வழக்கம்போல் பார்ப்பன தந்திரமே ஒழிய வேறில்லை என்பதை  பார்ப்பனரை அறிந்தவர் கள் யாவரும் அறிவார்கள். ஆங்கிலோ இந்திய சர்க்கார் காந்தி விஜயத்திற்கு அனுகூலமாகச் சகல ஏற்பாடுகளும்  செய்து இருக்கிறார்கள் என்பதை  ஜனங்களுக்குத் தெரியாது என்று கருதி இப்படி எழுதுகின்றனபோலும். சர்க் காரார், சர்க்கார் அதிகாரிகளை மாத்திரம் அதில் கலந்துகொள்ள வேண்டா மென்று சொல்லுகின்றார்களே யொழிய ஜனங்கள் காந்தியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று ...

முடிந்து  போன  விஷயமாம்

முடிந்து  போன  விஷயமாம்

  கும்பகோணத்தில்  தேர்தல் கொண்டாட்டம்  கொண்டாட  வந்த  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்களை  கூட்டத்தில்  ஒரு  கேள்வி  கேட்டார்கள். அதாவது  “”இந்திய  சட்டசபை  மெம்பர்  ஆகிவிட்டதற்காக  இவ்வளவு  பிரமாதமான  வெற்றிக் கொண்டாட்டம்  கொண்டாடு கின்றீர்களே!  நீங்கள்  எல்லோரும்  அங்கு  போய்  என்ன  செய்யப் போகிறீர்கள்?”  என்று  கேட்டார்கள்.  அதற்க  ராஜகோபாலாச்சாரியார்  ஒரே  வார்த்தையில்  பதில்  சொல்லி  விட்டார். அதாவது  “”இது  முடிந்து போன  விஷயம்.  எப்படியோ ஒரு  விதத்தில் நாங்கள்  ஜெயித்து  விட்டோமாகையால்  முடிந்து  போன  விஷயத்துக்கு  இனி  கேள்வி  கேட்கவோ  பதிலளிக்கவோ இடமில்லை”  என்று  சொல்லிவிட்டாராம்.  எந்த  விதத்திலோ  காரியம்  கைகூடின  பிறகு  வெற்றி பெற்றவர்கள் சொல்ல  வேண்டிய  பதில்  இதுதான்.  அவர்களது  தைரியத்தைக்  கண்டு  நாம்   அதிசயிக்காமல்  இருக்க முடியவில்லை. பகுத்தறிவு  செய்தி விளக்கக் குறிப்பு  02.12.1934

சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம்  கடற்கரைக் கூட்டம் குழப்பத்தில் கலைந்தது               காந்தி-சுயமரியாதைக்காரர் பேட்டி

சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம் கடற்கரைக் கூட்டம் குழப்பத்தில் கலைந்தது               காந்தி-சுயமரியாதைக்காரர் பேட்டி

தோழர் காந்தி சென்னைக்கு  விஜயம் செய்ததானது பெரிதும் அலங் கோலத்தில் முடிந்ததாகத்தெரிகிறது. பொது ஜனங்கள் காந்தியை வரவேற்க விரும்பவில்லை என்பதை சந்தேகமற வெளிப்படுத்தி விட்டார்கள். ஆதிதிராவிடர் குடியிருக்கும் பல இடங்களிலும் கருப்புக் கொடிகளும், காந்தி பகிஷ்கார விளம்பரங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சென்ற 20 ² மாலை சென்னை  கடற்கரையில் காந்தியாரை வரவேற்க கூட்டப்பட்ட கூட்டம் குழப்பத்திலும் கூக்குரலிலுமே முடிந்த தாகத் தெரிகிறது.  அன்று மாலை ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடியிருந்ததாகவும் முதலிலி ருந்தே அமளி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்தக் கூட்டத் தைப்பற்றி பத்திரிகைகளில் காணப்படும் விபரங்களைக் கவனித்தால் காந்தியார் சென்னையில் பட்ட அவதியை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். “தமிழ் நாடு” பத்திரிகையில் அந்தக்கூட்டத்தைப்பற்றி காண்ப்படும் விபரத்தின் சாரம் வருமாறு :- “கூட்டம் குழப்பத்திலும், பெண்கள் குழந்தை கள் துயரத்திலும் முடிந்தது. அனேக பெண்களும் குழந்தைகளும் கூட்டத் தில் மிதிபட்டும் நசுக்குண்டும் காயங்கள் அடைந்ததாகவும், அனேகர் தங்கள்...

பொது  தொகுதியின்  யோக்கியதை

பொது  தொகுதியின்  யோக்கியதை

  இந்திய  சட்டசபைப்  பொதுத்  தொகுதியின்  பொது ஓட்டர்  தொகுதியில்  ஒரு  கிருஸ்தவர்  வெற்றி பெற்றுவிட்டதற்காகப்  பார்ப்பனர்கள்  வகுப்புவாரி  ஓட்டர்  தொகுதி  இனி வேண்டியதில்லை  என்றும்,  பொதுத்  தொகுதியே  போதும்  என்றும்,  அதிலும்  கிருஸ்தவர்களுக்கு  என்று  ஸ்தானம்  ஒதுக்கி  வைக்கக்கூட  வேண்டியதில்லை  என்றும்  இப்போது  முன்னிலும்  அதிகமாக  கூப்பாடு  போடுகிறார்கள். ஆனால்  எப்படிப்பட்ட  கிருஸ்தவர்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள்   என்றால்  அவர்கள்  சமூக  முடிவுக்கு  விரோதமான  கருத்துடைய  கிருஸ்தவர்தான்   பொதுத்தொகுதியில்  வெற்றி  பெற்றிருக்கிறாரே  தவிர,  கிருஸ்தவ  சமூக  நலனுக்கு  ஏற்பட்ட  கருத்தை  நிலைநிறுத்தப்  பாடுபடும்  கிருஸ்தவர்  வெற்றி  பெறவில்லை  என்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவம்  வேண்டாம்  என்பதும், வெள்ளை  அறிக்கையை  பகிஷ்கரிக்க வேண்டும்  என்பதும்,  காங்கிரசினுடன்  கூட்டுறவு  கொள்ளவேண்டும்  என்பதும்,  காங்கிரசு  கிருஸ்தவ  சமூகத்துக்கும்  பிரதிநிதித்துவம்  உடையது  என்பதும்,  பெரும்பான்மையான  அல்லது  100 க்கு  99 பேர்களான  கிருஸ்தவர் களுடைய  எண்ணமா?  அவர்களுடைய  சமூக  சங்கத்தினுடைய  முடிவா?  என்பதை  உணர்ந்து  பார்த்தால் ...

தமிழ் அன்பர் மகாநாடு                         அதிகாரிகள் மறுப்பு

தமிழ் அன்பர் மகாநாடு                         அதிகாரிகள் மறுப்பு

தமிழன்பர் மகாநாடு என்ற பார்ப்பனர் சூழ்ச்சி மகாநாட்டு சார்பில் நடைபெறப் போகிற புத்தகக் காட்சியை திறந்து வைப்பதாக வெளியிட்டி ருந்த கல்வி இலாக்கா தலைவர், டைரக்டர் ஆப் பப்பிளிக் இன்°ட்ரஷன் என்னும் அதிகாரியானவர் இப்போது மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் அவருக்கு பதிலாக இராமநாதபுரம் இராஜாவை அந்தக் காட்சியை திறந்து வைக்கக் கேட்டு அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே மிகச்சிறு வயதுள்ளவரான ஒரு பெரியாரைத் தேடிப்பிடித்தது மிக புத்திசாலித்தனமான காரியமென்பதற்காக பாராட் டுகிறோம். புரட்சி – செய்தி விளக்கம் – 17.12.1933  

தரகர்கள்  ஒழிப்பு

தரகர்கள்  ஒழிப்பு

  தரகர்கள்  என்பது  பெரும்பாலும்  வியாபாரிகள்  என்பதையே  குறிக்கும். வியாபாரிகள்  என்பவர்கள்  அனேகமாக  சரக்குகளை   உற்பத்தி  செய்யும்  விவசாயக்காரர்கள்,  தொழிலாளர்கள்  ஆகியவர்களுக்கும்  அச் சரக்குகளை  வாங்கி  உபயோகிக்கும்  பொது ஜனங்கள்  என்பவர்களுக்கும்  இடையில்  இருந்து  கொண்டு  குறைந்த  விலைக்கு  வாங்கி   அதிக  விலைக்கு  விற்று  லாபம்  சம்பாதிப்பவர்களே  ஆவார்கள். பணம்  சம்பாதித்து  முதலாளிகளாக  ஆவது  என்பதற்கு அல்லாமல்  வேறு  எந்தக்  காரியத்திற்கும்  இந்தக்கூட்டத்தார்கள்  உலகிற்கு  தேவையே  இல்லை. இவர்களாலேயே  தான்  வெள்ளாமை  செய்யும்  விவசாயியும்,  சாமான்கள் செய்யும்  தொழிலாளியும்  என்றென்றைக்கும்  ஏழைகளாயும்  தரித்திரர்களாகவும்  இருக்க வேண்டி இருக்கிறது.  ஆனால்  இந்த  இரு  தரத்தாருமே  தான் உலகம்   நடைபெறுவதற்கு  ஆதாரமாய் இருந்து  வருகின்றார்கள்.  அப்படி  இருந்தும்  இவர்களது  குறைந்த  அளவு  தேவைகளையோ,  நலனையோ கூட  கவனிக்க உலகில்  எந்த மதமும்,  எந்த  அரசாங்கமும்  நாளது  வரை  கவலை  எடுத்துக்  கொண்டதே   இல்லை. மனிதன்  எப்பொழுது இயற்கைக்கு  விரோதமாக  வாழ்க்கை  நடத்த  நினைத்தானோ  அல்லது ...

வடநாட்டில் சுயமரியாதை வெற்றி

வடநாட்டில் சுயமரியாதை வெற்றி

மத்திய மாகாணம், பீரார் ஆகிய இருமாகாணங்களின் தொழிலாளர் கள் விவசாயிகள் கட்சி (கூhந றடிசமநசள யனே ஞநயளயவேள’ ஞயசவல)யென்று சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டி ருக்கிறது. இதன் காரிய நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களாக பிரபல தொழிற் சங்கத் தலைவர்களும், சோஷியலி°ட் தலைவர்களுமாக பலர் இருக்கின்ற னர். முக்கியமாக குறிப்பிடத்தக்க நாகபுரி தோழர் ஆர்.எ°.ராய்க்கர் எம்.ஏ., எல்.எல்.பி. அவர்களும், அம்ரோதி பி.ஜி.தேஷ்பாண்டே அவர்களும் பெரிதும் இதில் அதிக ஊக்கமெடுத்து உழைக்கின்றார்கள். நமது சுயமரியாதை லட்சியத்தின் வெற்றிக்கு இதுவும் எடுத்துக் காட்டாகும். புரட்சி – செய்தி விளக்கம் – 17.12.1933

இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள்  எதற்காக  தெரியுமா?

இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள் எதற்காக  தெரியுமா?

  நீங்கள்  ஒவ்வொருவரும்  எப்படியாவது  கஷ்டப்பட்டு  இரண்டு  அல்லது  ஒரு  சந்தாதாரரையாவது  சேர்த்து  8  அணாவாவது  அட்வான்ஸ்  வாங்கி  விலாசத்துடன்  நமக்கு  அனுப்பிக் கொடுங்கள். ஏன்? பகுத்தறிவு  ஒரு  தனி  மனிதனுடைய  சுயநலத்துக்கோ  ஒரு  தனி  வகுப்பாருடைய  நன்மைக்கோ  நடைபெறுவதல்ல. ஆனால்  இன்று  ஆதிக்கத்திலிருக்கும்  வகுப்பாருடைய  விஷமமும்  சூழ்ச்சியும்  நிறைந்த  எவ்வளவோ  எதிர்ப்புகளையும்  தொல்லைகளையும்  சமாளித்துக் கொண்டு  இழிவுபடுத்தப்பட்ட  மக்களுக்காகவும்,  ஏழ்மைப்படுத்தப் பட்ட  மக்களுக்காகவும்  பின்தள்ளப்பட்ட   மக்களுக்காகவும்  நடை பெறுகின்றது. இந்த  வருஷத்தில்   மாத்திரம்  3  தடவை பத்திரிகை  நிறுத்தப்பட்டு  விட்டதாலும்  2, 3  தடவை  ஜாமீன்  கட்டும்படி  உத்திரவு  செய்யப்பட்டதாலும்,  பத்திரிகை  விஷயமாய்  3  கேசுகள் ஏற்பட்டு  அபராதங்களும்  தண்டனைகளும்  விதிக்கப்பட்டதாலும்,  கேசுகளை  எதிர்வழக்காடியதாலும்  5000  ரூபாய்க்கு  மேற்பட்ட   நஷ்டங்களேற் பட்டதோடு  பத்திரிகை  சந்தா  எண்ணிக்கையும்  குறையத்  தலைப்பட்டு விட்டது.  ஏஜண்டுகள்  பெரும்பாலோர்  அதாவது  இயக்கத்தின்  மேல்  உள்ள  ஆர்வத்தினால்  இயக்கத்தில்  உள்ளவர்களால்  இயக்க  நன்மைக்காகப்  பாடுபட்டவர்கள்  என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் ...

ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?

ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?

  அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது. அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது. அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர் களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுப விக்க வேண்டும் என்று கூறி...

வகுப்புவாதிகளே   வெற்றியடைந்தார்கள்

வகுப்புவாதிகளே  வெற்றியடைந்தார்கள்

  சென்னை  மாகாணத்தில்  நடந்த இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வெற்றி பெற்ற  வீரர்கள்  “”வகுப்பு  வாதம்  தோற்றுவிட்டது”  என்றும்  “”வகுப்பு  வாதத்தை ஜனங்கள்  விரும்பவில்லை”  என்றும் பேசி  மக்களை  மனதார  ஏய்க்கின்றார்கள்.  ஆனால்  உண்மையில் பார்க்கப்  போனால்  கடுகளவு  அறிவுள்ள  எவனும்  வகுப்பு வாதம்  வெற்றி  பெற்றுவிட்டது  என்று  தான்  சொல்ல  வேண்டும். இன்று  இந்த  நாட்டில்  உள்ள ஜஸ்டிஸ்  கட்சி  ஆகட்டும்  அல்லது  சுயமரியாதைக்  கட்சி  யாகட்டும்  உண்மையில் வகுப்பு  வித்தியாசங்கள்,  வகுப்பு  உயர்வு  தாழ்வுகள்,  வகுப்புப்  பிரிவுகள்  ஆகியவை  ஒழிய  வேண்டுமென்று  பாடுபடுகின்றனவா  அல்லது  இருக்கவேண்டுமென்று  பாடுபடுகின்றனவா  என்று  கேழ்க்கின்றோம்.  யாரைக்  கேழ்க்கின்றோம்  என்றால்  ஜஸ்டிஸ்  கட்சியும்,  சுயமரியாதைக்  கட்சியும்  வகுப்புவாதக்  கட்சி  என்று  யார்  யார்  சொல்லுகின்றார்களோ அவர்கள்  ஒவ்வொருவரையுமே  கேழ்க்கின்றோம். தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்கள்  ஆகட்டும்,  தோழர்  சத்தியமூர்த்தி அய்யர்  அவர்கள்தானாகட்டும்  உண்மையில் இந்தியாவில்  மக்களிடையில்  ஜாதியின் பேராலோ,  சமையத்தின் பேராலோ,  உள்வகுப்பின்  பேராலோ  எவ்வித ...

ஜவார்லாலும் பொது உடமையும்

ஜவார்லாலும் பொது உடமையும்

தோழர் ஜவர்லால் அவர்கள் தனது அரசியல் கொள்கையை விளக்கி பிரிட்டீஷ் ஜனங்களுக்குத் தெரியச் செய்வதற்காக ஒரு லண்டன் நிருபருக்கு எழுதிய கடிதத்தில் பொதுவுடமைக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக வும், ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடமை எனக் கருதும் கொள்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்றும், அத்தகைய பொது வுடமைக் கட்சியைத் தான் சேர்ந்தவரல்லவென்றும் குறிப்பிட்டிருப்பதாக ராய்ட்டர் தந்தி கிடைத்திருக்கிறதாகப் பத்திரிக்கைகளில் காணக் கிடக்கிறது. இது உண்மையானால் தோழர் ஜவார்லாலுக்கு இந்தக் குணம் காந்தியாரின் சாவகாசத்தால் ஏற்பட்ட குணம் என்றுதான் சொல்லவேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாரிடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ் விதத் தந்திர மொழிகள் கூறி இருகட்சியாரையும் ஏமாற்றிப் பெருமை அடைவதை அனுசரித்துவருகிறார். உதாரணமாக “வர்ணாச்சிரமதர்மம் வேண்டும். ஆனால் எனது வர்ணாச்சிரமம் வேறு” என்பார். “ராம ராஜ்யத்துக்காக நான் பாடுபடுகிறேன். ஆனால் எனது ராமன் வேறு” என்பார். “ஜாதிபாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்துவேறு” என்பார்....

வருணாச்சிரமமும்  சுயமரியாதையும்

வருணாச்சிரமமும்  சுயமரியாதையும்

  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வருணாச்சிரமக்காரர்களைச்  சுயமரியாதைக்காரர்கள்  ஆதரித்ததாகவும்  அதனால்  சுயமரியாதைக் காரர்களுக்கு  யாதொரு  கொள்கையும்  இல்லை  என்றும்  சில  பத்திரிக்கைகள்  எழுதி  வருகின்றன. அது  மாத்திரமல்லாமல்  சில  தோழர்களும்  அந்தப்படியே  பேசி  வருகின்றார்கள். இதற்கு  நம்மை  சமாதானம்  சொல்ல வேண்டுமென்று  இரண்டொரு  நண்பர்கள்  எழுதியும்  இருக்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள்  அந்தப்படி  செய்தார்களா  இல்லையா  என்பது  ஒரு  புறமிருந்தாலும்,  எலக்ஷன்  பிரச்சினை  இன்னதென்றும்  ஒவ்வொருவரும்  என்ன  பிரச்சினையின்  மீது  பிரசாரம் செய்தார்கள்  என்றும்  தெரிந்து கொண்டால்  பிறகு  யார்  யார்   யாருடன்  சேர்ந்து வேலை  செய்ய வேண்டியதென்பதையும்  யார்  யார்  யாருக்கு  உதவி செய்ய வேண்டியது  நியாயம்  என்பதையும்  ஒருவாறு  முடிவு  செய்து  கொள்ளலாம். காங்கிரசுக்காரருடைய  பிரச்சினையெல்லாம்  ஜஸ்டிஸ்  கட்சியை  எப்படியாவது   ஒழித்துவிட  வேண்டும்  என்பதும்,  அரசியலில்  பார்ப்பனரல்லாதார்  பெற்றிருக்கும்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்தை  அழித்துவிட வேண்டும் என்பதும்,  மற்றும்  பல  துறைகளில்  பார்ப்பனரல்லாதார்   அடைந்திருக்கும்  சிறிது  முன்னேற்றத்தையும்  கெடுத்து  சகல  துறைகளிலும்  பார்ப்பனர்களே ...

இனிப் பலிக்காது                                          சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும்  – சித்திரபுத்திரன்

இனிப் பலிக்காது                                          சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும் – சித்திரபுத்திரன்

  °பெயின் தேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் சோம்பேரி மடங்களுக்கும் ஏமாற்றுக்கூட்டத்திற்கும் யோக்கியக் கூட்டத்திற்கும் சரியான ஆபத்துகள் வந்திருக்கின்றதை பத்திரிக்கை சேதிகளில் காணலாம். அதாவது °பெயின் தலைநகராகிய மேட்ரிட் நகரில் இருந்து கிரு°த்துவ கோயில்கள் என்னும் சோம்பேரி மடங்கள் இடிக்கப்பட்டும் கன்யாமாடங் கள் என்னும் ஏமாற்றுக் கூட்டத்தாரின் மடங்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டும் பணக்காரர்கள் என்னும் அயோக்கியக்கூட்டம் உயி ரோடு ஒரு கட்டிடத் திற்குள் அடைந்து நெருப்பு வைத்துக்கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் வருவதாக அறிவிக்கப்படுகின்றது. கோயில்களில் கடவுள் இருப்பதாகவோ அல்லது அவைகள் கடவுள் பிரார்த்தனைக்காக ஏற்பட்டவைகளாகவோ இருக்குமானால் –கன்னிகா °திரீகள் கடவுள் சேவை செய்பவர்களாகவோ அல்லது கடவுளுக்கு ஆக ஒழுக்கமுள்ளவர்களாக நடப்பவர்களாகவோ இருப்பார்களானால்-பணக் காரர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த நற்கருமங்களால் செல்வம் பெற்ற வர்களாகவோ அல்லது கடவுளின் திருச்சித்தால் செல்வம் அடைந்த வர்களாகவோ இருப்பார்களேயானால் இவைகள் முறையே இடிபடவும் நெருப்பு வைத்து எரிக்கவும், உயிருடன் அடைந்து கொள்ளி வைத்துக் கொளுத்தவும்...

ஆ°திகனா? – நா°திகனா?  – சித்திரபுத்திரன்

ஆ°திகனா? – நா°திகனா? – சித்திரபுத்திரன்

  நா°திகன்:- “பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய் விக்க வேண்டும்” என்று பேசுகிற, பாடுபடுகிற தேசாபிமானிகள், தேசிய வாதிகள், தேச பக்தர்கள் ஆகியவர்கள் ஆ°திகர்களா? நா°திகர்களா? ஆ°திகன்:- ஆ°திகர் என்றால் என்ன? நா:- சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உள்ள சர்வே°வரன் ஒருவன் உண்டு. உலகம் முழுமையும் உண்டாக்கி ஆண்டு வருகிறான். அவ(னது சித்தம்) னன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்ற முடிவை உடையவர்கள். ஆ:- நா°திகர் என்றால் என்ன? நா:- மேற்கண்ட முடிவை ஒப்புக் கொள்ளாதவர்கள். ஆகவே “பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும்” என்ற தேச பக்தர்கள் முதலிய வர்கள் ஆ°திகர்களா? நா°திகர்களா? ஆ:- பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்களுக் கும் ஆ°திக நா°திகத்துக்கும் என்ன சம்பந்தம்? நா:- சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள கடவுளின் திருச்சித்தமில்லாமல் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்திருக்க முடியுமா? ஆ:- ஒரு நாளும் வந்திருக்க முடியாது. நா:- அப்படிப்பட்ட கடவுளுக்கு பிரிட்டிஷ்...

“”வகுப்பு  வாதம்  கூடாது  ஆனால்  100க்கு  50 நமக்கே  வேண்டும்”

“”வகுப்பு  வாதம்  கூடாது ஆனால்  100க்கு  50 நமக்கே  வேண்டும்”

  சென்னை  மாகாண  சார்பாய்  இந்திய  சட்டசபை  பொதுத்  தொகுதிக்கு  10 ஸ்தானங்களுக்கும்  தேர்தல்  நடந்துவிட்டது.  அவற்றின்  முடிவு. சென்னை  நகரத்திற்கு தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  (பார்ப்பனர்) தஞ்சை  திருச்சிக்கு தோழர்  ஈணூ.ராஜ  அய்யங்கார்  (பார்ப்பனர்) கிருஷ்ணா  கோதாவரி தோழர் நாகேஸ்வரராவ் பந்துலு (பார்ப்பனர்) சித்தூர் தோழர்  யம்.அனந்தசயன  அய்யங்கார்  (பார்ப்பனர்) கஞ்சம்  விசாகபட்டணம் தோழர்  வி.வி.கிரி  பந்துலு  (பார்ப்பனர்) குண்டூர்  நெல்லூர் தோழர்  யன்.ஜீ.ரங்கா  (தெரியாது) மலையாளம் தோழர்  சாமுவேல்  ஆரன்  (கிருஸ்தவர்) கோவை,  சேலம்,  வடஆற்காடு தோழர்   டி.எஸ்.அவனாசிலிங்கம் செட்டியார்   (பார்ப்பனரல்லாதார்) செங்கல்பட்டு தென் ஆற்காடு தோழர் சி.என்.முத்துரங்க முதலியார்  (பார்ப்பனரல்லாதார்) மதுரை  ராமநாதபுரம் தோழர் பி.எஸ்.குமாரசாமி ராஜா ( பார்ப்பனரல்லாதார்) ஆகவே  மேற்படி  பத்து  ஸ்தானங்களில் 5  பார்ப்பனர்களும், 1 கிருஸ்தவரும், 1  நமக்கு விபரம்  தெரியாதவரும்,  3  பார்ப்பனரல்லாதாரும் வெற்றி  பெற்றிருக்கிறார்கள்.  எனவே  பார்ப்பனர்களே  பார்ப்பனரல்லாதார் களைவிட  மெஜாரிட்டியாய்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள்.  வகுப்பு  வாதம்  கூடாது. ...

“”இன்னமும்  பார்ப்பனர்  அல்லாதார் பிரச்சினை  ஏன்?”

“”இன்னமும்  பார்ப்பனர்  அல்லாதார் பிரச்சினை  ஏன்?”

    பார்ப்பனர்களை   ஜஸ்டிஸ்  கட்சியில்  சேர்த்துக்  கொள்வது  என்று  தீர்மானம் செய்து கொண்ட  பிறகு  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  பிரச்சினை ஏன்  தேர்தலில்  உபயோகப்படுத்தப்பட்டது?”  என்று  சிலர் கேழ்வி  கேட்கிறார்கள். இதற்கும்  சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஜஸ்டிஸ்  கட்சியில்  பார்ப்பனர்களைச்  சேர்த்துக் கொள்வது  என்கின்ற  பிரச்சினை வந்த  காலங்களில்  அதாவது  ஜஸ்டிஸ்  கட்சியாரின்  ஒரு சாதாரண  கூட்டத்திலும்,  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாடு   கூட்டத்திலும்  தோழர்  ஈ.வெ.ராமசாமி அவர்கள்  எதற்காக  சேர்த்துக் கொள்ளப்படுகின்றது  என்றும்,  எப்படிப்பட்டவர்களை  சேர்த்துக் கொள்வது  என்றும்,   இதுவரை  ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை  என்பதைப்  பற்றியும்,  சேர்த்துக் கொண்ட  பிறகும்  நாம்  எப்படி  நடந்து  கொள்ள வேண்டும்  என்பதைப்பற்றியும்  விபரமாய்  பேசியிருக்கின்றார். அதை  ஒரு தரமாவது  படித்துப்  பார்ப்பவர்களுக்கு  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  பிரச்சினை அடியோடு  போய்விட வேண்டியது   தானா  அல்லது  இன்னமும்  இருக்க வேண்டியது  தானா என்பது  நன்றாய்  விளங்கும். ஜஸ்டிஸ்  கட்சியில்  பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது  என்பதில் ...

நகர பரிபாலன சபை அமைப்பு

நகர பரிபாலன சபை அமைப்பு

தோழர்களே! இன்று இந்நகர பரிபாலன சபை ஆண்டுவிழாவிற்கு நான் பேச வேண்டுமென்றோ பேசச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றோ சிறிதும் நினைக் கவே இல்லை. இவ்வூர் வாலிபர்கள் பலர் நான் பேசியாக வேண்டுமென்று ஆசைப்படுவ தாகவும், மற்றும் எனது மேல்நாட்டுப் பிரயாணத்திற்குப் பிறகு முதன் முதலாக இங்கு வந்திருப்பதால் எனது பழைய நண்பர்கள் பலர் நான் பேச வேண்டுமென்று விரும்புவதாகவும் முனிசிபல் மானேஜர் அவர்கள் சொல்லி விரும்புவதால் ஏதாவது பேசலாமென்று முன்வந்திருக் கிறேன். ஆனால் இவ்விழா பிரமுகர்களுக்கு நான் ஏதாவது விபரீதமாய் பேசி விடுவேனோ என்கின்ற பயம் அதிகமாய் இருப்பதாகத் தெரிகிறது கண்டு பரிதாபப்படுகிறேன். என்றாலும் நான் பேசுவதில் பலருக்கு அதிருப் தியும், அபிப்பிராயபேதமும் காணப்படுவது மிக சகஜமேயாகும். அபிப்பி ராய பேதங்களுக்கு முக்கிய காரணமென்னவென்றால் நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் பழக்கவழக்கங் களிலும், பழைமைகளிலும் பழங்கால நூல் களிலும் பழங்காலப் பெரியோர்கள் என்பவர்கள் வாக்குகளிலுமே முழு நம்பிக்கைவைத்து தண்டவாளத்தின்மீது ரயில் போவதுபோல்...

ஐ.இ.கு.  செங்கோடையன் முடிவெய்தினார்

ஐ.இ.கு.  செங்கோடையன் முடிவெய்தினார்

  ஐ.சி.எஸ்.  செங்கோடையன்  அவர்கள்  ஒரு சிறு  பருவில்  காயம்  பட்டதின்  காரணமாக  இரத்தம்  விஷமாகி 29  ந்  தேதி  சென்னையில்  காலமானதாகக் கேட்டு  மிகவும்  வருந்துகிறோம். அவர்  ஈரோட்டிற்கு  6வது  மைலில்  உள்ள நஞ்சை  ஊத்துக்குளி  என்னும் கிராமத்தில் உள்ள ஒரு கொங்குவேளாள குலத்தில் பிறந்து  வளர்ந்து,  ஈரோட்டிலும்  கரூரிலும்  கல்வி  கற்று  அவரது  திறமையினால்  நமது  சர்க்காரால்  லண்டனுக்கு  ஐ.சி.எஸ். பரீட்øக்ஷக்கு அனுப்பப்பட்டு  அதில் தேறி  கலெக்ட்டராக  ஆனவர்.  கோயமுத்தூரில்  பிரபல  குடும்பஸ்தராய்  இருக்கும்  தோழர்  வெள்ளியங்கிரி  கவுண்டர்  அவர்களது வீட்டில்  அவரது சகோதரர்  தோழர்  பழனிச்சாமிக்  கவுண்டர்  அவர்களது  குமாரத்தியை  மணந்தவர். சமீபத்தில்  அவர்  அனந்தப்பூர்  ஜில்லாவுக்கு  கலெக்ட்டராக  மாற்றப்பட்டதாகக்  கேள்வி. மிகவும்  வருணாச்சிரமச்  சார்பான  வீட்டில்  பெண் கொண்டிருந்தாலும்  கூட  தோழர்  செங்கோடையன்  அவர்கள்  சீர்திருத்தத்  துறையில்  மிகுதியும்  ஆர்வமுடையவர். அவர்  முதல்  முதல்  1919ல்  ஐ.சி.எஸ்.  பாஸ் செய்துவிட்டு  1920ல்  இங்கு  வந்த சமயம்...

“தமிழ் அன்பர்”மகாநாடு

“தமிழ் அன்பர்”மகாநாடு

சென்னையில் நடைபெற இருக்கும் தமிழ் அன்பர் மாகாநாட்டைப் பற்றி இரண்டொரு சுயமரியாதை மகாநாடுகளிலும், பல சுயமரியாதை சங்கங்களிலும் அம்மகாநாடானது பார்ப்பனர்கள் தமிழர் மீது ஆட்சி செலுத்த வும் தமிழ்ப்பண்டிதர்களை அடிமை ஆக்கிக்கொள்ளவும் பார்ப்பன ரல்லாத உபாத்தியார்களை அடக்கிவைக்கவும் பார்ப்பனர்களில் பலருக்கு உத்தியோகமும் வருவாயும் ஏற்படுத்தவும் செய்யப்படும் ஒரு சூழ்ச்சி என்ப தோடு தமிழ் கல்வி என்பதையே தங்கள் இஷ்டப்படி மாணாக்கர்களுக்கு ஊட்டுவதற்கு ஏற்ற தந்திரம் என்றும் பேசி அதை பகிஷ்கரிக்கத் தீர்மானித் திருப்பது யாவரும் அறிந்திருக்கலாம். அந்தப்படியே ஒரு பலமான உணர்ச்சியும் தமிழ் மக்களுக்குள் இருந்து வருவதையும் பார்க்கலாம். ஆனால் இதை அறிந்த பார்ப்பனர்கள், கவர்னர் பிரபு தங்கள் மகா நாட்டை ஆசீர்வதித்திருப்பதாவும், யூனிவர்சிட்டியார் தங்களை ஒப்புக் கொண்டு தங்களுக்குப் பணம் கொடுத்திருப்பதாகவும் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தங்களுடன் கலந்திருப்பதாகவும் பிறர் நம்பும்படி எவ்வளவோ தந்திரங்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு பயந்த சிலர் தங்கள் பெயரைக் கொடுத்திருப்பதுடன், சில பத்திரிகைகளும் அந்த...

இராமநாதபுரம் ஜில்லா சு.ம.மகாநாடு           காந்தி பகிஷ்காரம்

இராமநாதபுரம் ஜில்லா சு.ம.மகாநாடு           காந்தி பகிஷ்காரம்

இராமநாதபுரம் ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு சென்ற வாரம் சிவகங்கையில் வெகு சிறப்பாய் நடந்தேறியிருக்கும் விபரம் மற்ற பக்கங்களில் காணலாம். அவற்றுள் மகாநாட்டுத் தலைவர் தோழர் எ°.ராமநாதன் அவர்கள் “இயக்கக்கொள்கைக்குத்தக்க திட்டங்களை வகுத்துக்கொள்ளவில்லை” என்றும் “காரியத்திற் கடமைகளை உணரவில்லை, வேலை தொடங்க வில்லை” என்றும் கூறியிருப்பதையும், வேறு சிலர், காந்தியவர்கள் வரவை பகிஷ்காரம் செய்த தீர்மானத்தை தவறு என்று கூறி கண்டித்திருப்பதையும்பற்றி சிறிது சமாதானம் கூற வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேம். முதலாவது, தோழர் ராமநாதன் அவர்கள் கூறும் குறைக்குச் சமாதா னம் இயக்கத்திற்கு கொள்கைகளும் திட்டங்களும் வகுக்க என்று ஈரோட்டில் சென்ற வருஷம் டிசம்பர் மாதத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 250 தோழர்கள் வரை விஜயம் செய்து, இரண்டு நாள் தாராள விவகாரத்திற்குப் பிறகு இயக்கத்திற்கென்று ஒரு லக்ஷியமும் ஒரு திட்டமும் வகுக்கப்பட்டிருப்பதை யாவரும் அறிவார் கள். அந்த லக்ஷியமும் திட்டமும்...

கோவை ஜில்லா (ஈரோடு) மகாநாடு

கோவை ஜில்லா (ஈரோடு) மகாநாடு

கோயமுத்தூர் ஜில்லா மகாநாடு ஈரோட்டில் சென்ற மாதம் 25, 26 தேதிகளில் நடைபெற்ற விபரம் மற்ற பக்கங்களில் பார்க்கலாம். மகாநாடு மிக்கச் சிறப்பாகவும், பிரதிநிதி ஜனங்களின் மனதைக் கவரத் தக்கதாகவும் நடை பெற்றிருக்கின்ற தென்பதை அதிலிருந்து உணரலாம். அதோடு இம் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்கள், திறப் பாளர்கள், வரவேற்புத் தலைவர்கள், உருவப் படத் திறப்பாளர்கள் ஆகிய வர்கள் பெரிதும் நமது மகாநாட்டுக்குப் புதிதானவர்களென்றும் காணப் படலாம். சுயமரியாதை மகாநாட்டுக்குத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்கள் கொச்சி ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் மகாநாட்டுத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்களில் தலைவர் தோழர் நாயகம்-சிதம்பரம் அம்மாள் அவர்கள் இதற்குமுன் நமது மகாநாடுகளில் கலந்திருந்தாலும் அவர்கள் நமது மகாநாட்டில் தலைமை வகித்தது இதுவே முதல் தடவை. திறப்பாள ராகிய தோழர் பண்டிதை லி.ரா. ரங்கநாயகி அம்மாள் அவர்கள் சுய மரியாதை உலகத்துக்குப் புதியவர்களேயாவார்கள். உருவப்படத் திறப்புவிழாவுக்கு தலைமை வகிக்கவும், விழா நடத்தவும் வந்த தோழர்கள் னுச.வரதராஜுலு, கல்யாண சுந்தர...

லெனின் – நாகம்மாள்                          உருவப்படத் திறப்புவிழா

லெனின் – நாகம்மாள்                          உருவப்படத் திறப்புவிழா

தோழர்களே! இப்போது நடக்கப்போவது படத் திறப்புவிழா. இதை நடத்திக் கொடுக்கச் சென்னை தோழர்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் கல்யாணசுந்திர முதலியாரவர்களையும் கேட்டுக் கொண் டோம். அவ்விரு பெரியார்களும் நமது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இங்கு விஜயம் செய்துள்ளார்கள். நமது இயக்கக் கொள்கைகள் முழுமையும் அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றவர்களல்ல. பல விஷயங்களில் நமக்கும் அவர்களுக்கும் பலமான அபிப்பிராய பேதம் உண்டென்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும் நாம் ஏன் அவர்களைத் தேடிப் போனோம்? அவர்களது விஜயத்தால் நமது கொள்கைகளுக்கும், அபிப்பி ராயங்களுக்கும் ஆதரவும் பலமும் கிடைக்குமென்கின்ற எண்ணத்தி னால்தான். இந்தச் சங்கதிகள் அவர்கள் தெரிந்தே தங்களது ஆதரவும் இவ்வியக்கத்துக்கு இருக்கட்டும் என்கின்ற பெருந்தன்மையான தயாள குணத்துடனேயே இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள். எனக்கும் அவர் களுக்கும் சில காலமாய் அபிப்பிராயபேதம் இருந்து வந்தது. அதைப்பற்றி நாங்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும் வந்திருக்கிறோம். ஆனால் எல்லாம் ஒரே தத்துவத்தின் மீதேயொழிய வேறில்லை. அதாவது மனித சமூகத்துக்கு...

கோவை  முனிசிபாலிட்டி

கோவை  முனிசிபாலிட்டி

  கோயமுத்தூர்  முனிசிபாலிட்டியில்  திவான்பகதூர்  இ.கு. ரத்தினசபாபதி  முதலியார்  அவர்கள்  சுமார்  15  வருஷ  காலமாக  சேர்மனாக  இருந்து  வந்ததும், கோவை  முனிசிபல்  நிருவாகம்  சென்னை   மாகாண  முனிசிபாலிட்டிகளில்  எல்லாம்  தலைசிறந்து  விளங்கியதும்,  அந்த  நிர்வாகத்தைப்  பற்றி  அரசாங்க  யாதாஸ்தில்  கோயமுத்தூர்  முனிசிபல்  நிர்வாகம் முதல்தர  நிர்வாகத்தில்  முதன்மையானதாக  கருதப்படக்  கூடியது  என்று  பல  வருஷங்களாகக்  குறித்து  வந்ததும்  யாவரும்  அறிந்ததாகும். அப்படிப்பட்ட  தோழர்  இ.கு.கீ.  அவர்கள்  சென்ற  மூன்று  வருஷத்திய  நிருவாகத்தின்  கடைசி  மீட்டிங்கில்  கவுன்சிலர்கள் அவரைப்  பாராட்டிப்  பேசியதற்குப்  பதிலளிக்கையில், தான்  இதுவரை  சேர்மன்  அலுவல்  பார்த்ததற்கும், அதற்காக  தன்னை  கவுன்சிலர்கள்  பாராட்டியதற்கும்  எல்லாம்  கவுன்சிலர்களுடைய  ஒத்துழைப்பே  காரணம்  என்று  சொன்னதோடு  தான் இனி சேர்மென்  பதவியில்  இருந்து  விலகி  விடுவதற்கு  கவுன்சிலர்கள்  அனுமதிக்க  வேண்டும்  என்றும், வேறு  தக்கவரை  தெரிந்தெடுத்துக்  கொள்ள வேண்டும் என்றும்  தானும்  ஒத்துழைத்து  தன்னால் கூடியதை  கவுன்சிலர்  என்கின்ற  முறையிலேயே  செய்து  வருவதாயும் ...

கோவை ஜில்லா                                                                          சுயமரியாதை மகாநாடு – பெண்கள்மகாநாடு  சுயமரியாதை மகாநாடு

கோவை ஜில்லா                                                                          சுயமரியாதை மகாநாடு – பெண்கள்மகாநாடு சுயமரியாதை மகாநாடு

தோழர்களே! தோழர் அய்யப்பன் அவர்களை நான் சுமார் 9, 10 வருஷமாய் அறிவேன். வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அறிமுகமானோம். வைக்கம் சத்தியாக்கிரகக் கிளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கிய காரண°தர். அவர் இந்துமதப்படியும், மலையாள நாட்டுச் சம்பிரதாயப்படியும் வர்ணாச்சிரமத் தர்மப்படியும் தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு மலையாள தேசம் 30,40 வருஷங்களாகத் தெரியும். வியாபார முறையில் அங்கு சென்று தாமதிப்பதுண்டு. அந்தக் காலத்தில் அய்யப்பன் வகுப்பார் வீதியில் நடந்தால் மோட்டார் கார் ஆரன்கொடுப்பதுபோல் அவர்கள் ஹா, ஹா என்று கத்திக் கொண்டு போக வேண்டும். ஏனெனில் மோட்டார் கார் எப்படி ஜனங்கள் தனது சக்கரத்தில் சிக்காமல் இருப்பதற்காக ஆரன் ஊதித் தான் வருவதை முதலிலேயே தெரிவிக்கிறதோ அதுபோல் ஈழவர் முதலியவர்கள் மற்றவர் கள் தங்கள் அருகாமையில் வந்து தீட்டுப்பட்டு தோஷமடை யாமலிருப்பதற்கு, ஹா, ஹா என்ற கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள். ஆனால் இப்போது தோழர் நாராயணகுரு°வாமி அவர்கள் முயற்சியாலும், அய்யப்பன்...

புரட்சி

புரட்சி

“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லை யானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும். அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் “புரட்சி”யை புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை. நமது முதலாளிவர்க்க ஆக்ஷியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு  அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் “குடி அரசை” அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது “பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும்” என்ற ஞான போதத்தை உறுதிப்படுத்திவிட்டது. ஆதலால் நமது “புரட்சி”யானது “குடி அரசை”க்காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரசார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவரவேண்டி யதாகிவிட்டது. இதன் காரணமாய் “புரட்சி” எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும் படலாம். எந்த வினாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம்....

துறையூர் சப் ரிஜி°டிரார் அமுல்

துறையூர் சப் ரிஜி°டிரார் அமுல்

பொதுஜன ஊழியன் தோழர் வி.ஜி.பிச்சை எழுதுகிறார்:- துறையூரில் திரு. சி.எம். சுப்பிரமணிய சா°திரி என்பவர் சப் ரிஜி°ட ரராயிருக்கிறார். அவர் பத்திரம் ரிஜி°ட் செய்யப்போகும் விபரந்தெரியாத பார்ப்பனரல்லாதாருக்கு ரிஜி°டர் விஷயமாக தெரியாத சங்கதிகளை சொல்லிக் கொடுத்தும் உதவி செய்வதற்கு பதிலாக அவர்களை மிரட்டி நஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார். உதாரணமாக சென்ற 10-ந் தேதி பழனியாண்டி முத்திரியன் என்ப வரும், நானும் ஒரு வீட்டுக் கடன் பத்திரம் ரிஜி°டர் செய்ய அவரிடம் போனோம். அவர் மேற்படி பழனியாண்டி முத்திரியனைக் கூப்பிட்டு எந்த ஊர் என்று கேட்க அவர் ஆதனூர் என்று சொன்னாராம். அதற்கு, பத்திரத் தில் உள்ளூர் என்றுதான் இருக்கிறது. ஆதனூர் என்று போடவில்லை என்று அவர் மிரட்ட, பழனியாண்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் போய் உள்ளூர் என்பது ஆதனூரில் ஒரு பாகம் என்றும் அப்படியே சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அவர் அதைக் கேட் காமல் துறையூர் டிவிஷனில் உள்ளூர்...

தமிழ் அன்பர் மகாநாடு

தமிழ் அன்பர் மகாநாடு

தமிழ் அன்பர் மகாநாடு என்பதாக பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதரவு தேடும் ஒரு மகாநாடு சென்னையில் அடுத்த மாதம் கிரு°தும° வாரத்தில் நடக்கப்போவதாக அறிக்கைகள் வெளியாகிக்கொண்டு வரு கின்றன. இம்மகாநாட்டைப் பற்றி சென்றவாரத்திற்கு முந்திய வார இதழில் தோழர் அ. இராகவன் அவர்களால் “தமிழ் அன்பர் மகாநாடு மற்றொரு பார்ப்பன சூக்ஷியே” என்னும் தலைப்பின்கீழ் ஒரு நீண்ட வியாசம் எழுதப் பட்டதை “குடி அரசு” வாசகர்கள் படித்திருக்கலாம். ஆனால் அவ் வியாசத்தில் கண்ட இரண்டொரு விஷயங்களை மாத்திரம் நாம் ஆதரிக்க முடியவில்லை. அவற்றுள் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் “இக் கமிட்டிக்கு கடிதம் எழுதி தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும், தைரியமாக அஞ்சாது போரிடும் ஆற்றல்மிக்க தோழர்களான ஈ.வெ.ராமசாமி, நாகர் கோவில் பி.சிதம்பரம், டாக்டர் வரதராஜலு, கா. சுப்பிரமணிபிள்ளை, சாத்தூர் கந்தசாமி முதலியார், சுவாமி வேதாசலம், மதுரை கார்மேகக் கோனார் போன்ற சுமார் 10 பேர்களை சேர்க்கவேண்டும். இன்றேல் அம்மகாநாட்டில் கலந்து கொள்ள மறுக்கவேண்டும்” என்று...

கொள்கை  இல்லாதவர்களுக்கு  வெற்றி

கொள்கை  இல்லாதவர்களுக்கு  வெற்றி

  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  இந்தியா  முழுவதிலும்  அனேகமாக  நடந்தாகிவிட்டது. இவற்றுள்  சென்னையே  பார்ப்பனர்களுக்கு  பெருமித  வெற்றி  அளித்து  எங்கு  பார்த்தாலும்  பார்ப்பன  வெற்றிக்  கொண்டாட்டத்  திருநாள்கள்  நடைபெறச்  செய்திருக்கிறது.  இத்திருநாள்களை  புராணத்  திருநாள்கள்  அதாவது  “”நரகாசூரன்  தோற்ற  நாள்”  (அல்லது)  “”நரகாசூரனைக்  கொன்ற  நாள்”  என்று  தீபாவளி  கொண்டாடுவது  போல்  “”பார்ப்பனரல்லாதார்  இயக்கம்  தோற்ற  நாள்  (அல்லது)  ஜஸ்டிஸ்  கட்சியை  வெட்டிப்  புதைத்த  நாள்”  என்று  இப்போது  ஊர்  ஊராய்  கொண்டாடப்  புறப்பட்டு விட்டார்கள்  நம்  பார்ப்பனர்கள்.  இத்திருநாள்  இனி  வருஷா  வருஷம்  (காந்தி  ஜயந்தி  முதலியவை  போல்)  கொண்டாடப்படலாம்.  இதில்  பார்ப்பனரல்லாதாரும்  பெருமிதமாய்  கலந்து  கொண்டு  எண்ணெய்  ஸ்நானம்  செய்து  புதுவேஷ்டி  அணிந்து  பலகாரம்  செய்து  சாப்பிடலாம்.  என்றாலும்  இத்திருநாள்  கொண்டாட்டத்தின்  பயனாய்  ஏற்பட்ட  லாபம்  என்ன  என்று  பார்ப்போமானால்  தோழர்கள்  சத்தியமூர்த்தி  அய்யர்,  ராஜகோபாலாச்சாரியார்,  டாக்டர்  ராஜ  அய்யங்கார்  இன்னும்  ஏதோ  இரண்டொரு  சாஸ்திரியார்கள்,  ராவுஜீக்கள்  ஆகியவர்கள் ...

நாதர்ஷா படுகொலை  தோழர் அமாநுல்லா கருத்து

நாதர்ஷா படுகொலை தோழர் அமாநுல்லா கருத்து

  தோழர் அமாநுல்லா ஆப்கானி°தான் அரசராயிருந்த காலத்தில் அந்நாட்டு மக்களிடை இருந்துவந்த மூடபழக்கவழக்கங்களை அகற்றி நாட்டை முன்னேற்ற முயன்றார். அது முல்லாக்களுக்கும் வைதீகர்களுக்கும் பிடியாததால் அவர்கள் சதி செய்து அவரை நாட்டைவிட்டு ஓடும்படி செய் தார்கள். அதன்பின் தண்ணீர்க்காரன்மகன் பாட்சா சாக்கோ சிலநாள் அரசைக் கைப்பற்றி அட்டகாசம் செய்தான். பிறகு அவனை தொலைத்து விட்டு மீண்டும் தோழர் அமாநுல்லாவை அமீர் ஆக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு ஜெனரல் நாதர்கான் பாட்சா சாக்கோவின் மீதுபடை எடுத்து சென்று வெற்றி பெற்றதும், அதன் பின் மாஜி அமீரை அழையாமல் தாமே ஆப்கானி°தான் அரசராக முடி சூடிக்கொண்டதும் பத்திரிகை வாசகர்கள் எல்லாருக்கும் ஞாபகமிருக்கலாம். அப்படியிருக்க சென்ற 8-ந் தேதி மாலை 2-45மணிக்கு நாதர்ஷா தமது அரண்மனை அந்தப்புரத்திலிருந்து வந்து கொண்டிருக்கையில் ஒரு ஆப்கன் மாணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையைப்பற்றி “ராய்ட்டா” பிரதிநிதி அமாநுல்லாவைக் கண்டு பேசியதில் அவர் கூறியதாவது:- என் சீர்திருத்த முறைகளை கைக்கொண்டு, நான் ஆப்கானி°...

தோழர்  வரதராஜுலு

தோழர்  வரதராஜுலு

  தோழர்  வரதராஜுலு  அவர்கள்  தோற்றுவிட்டார்  என்பதில் நாம்  சிறிதும்  ஆ÷க்ஷபிக்காமலும்   ஆ÷க்ஷபிப்பதும்  முடியாத   காரியம்  என்றும்  பலமான  தோல்விதான்  என்பதையும்  ஒப்புக்  கொள்ளுகிறோம். அவருக்கு  ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்  உள்பட  அநேகர்  ஆதரவளித்தார்கள்  என்றாலும்  தோல்வியே  ஏற்பட்டது  என்பது  உண்மைதான். ஆனால்  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  தேர்தலுக்கும்  தோழர்  எ.ராமசாமி  முதலியார்  அவர்கள்   தேர்தலுக்கும்  நடந்த  காரியங்கள்  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  தேர்தலுக்கும்  நடந்ததா  இல்லையா  என்றால்  நடந்தது  என்றுதான்  சொல்ல வேண்டும்.  அதுவும்  நன்றாய்  நடந்தது  என்றுதான் சொல்ல வேண்டும்.  தோழர்  வரதராஜுலு   அவர்கள்  தேர்தலுக்கு  நிற்கும்  விஷயத்தைப்  பற்றி  தானே  முடிவு  செய்து  கொள்ளாமல்  தன்னையொத்த  இரண்டொரு  பார்ப்பனரல்லாத  காங்கிரஸ்வாதி,  தேசபக்தர்கள்  என்று  சொல்லப்படுகின்றவர்களை  கலந்து  ஆலோசித்தார்.  அதில்  சிலர்  அவரை  நிற்கச்   சொல்லி கட்டாயப்படுத்தியதோடு  தாங்கள்  ஊர்  ஊராய்,  கிராமம்  கிராமமாய்  தன்  சொந்தத்தில்  போய்க்கூட  நாயுடுவுக்காக  பிரசாரம்  செய்வதாய்  ஒப்புக்  கொண்டு   அவருக்கு ...

குடி அரசுக்கு நோட்டீ°

குடி அரசுக்கு நோட்டீ°

(1931-ம் வருஷத்திய இந்திய பத்திரிக்கைகள் (அவசர அதிகார) சட்டத்தின் 3-வது பிரிவினுடைய (3-வது) உட்பிரிவின்படி) கோயமுத்தூர் ஜில்லா ஈரோட்டிலிருந்து பிரசுரிக்கப்படுகின்றதும் 1931ம் வருடத்திய இந்தியபத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டப்பிரிவு களின்படி செக்யூரிட்டி வாங்கப்படாததுமான, “குடி அரசு” என்ற பெய ருள்ள பத்திரி கையின் 1933 ஜுலை 30ம்தேதி இதழிலே 1932ம் வருஷத்திய கிரிமினல் சட்ட திருத்தச்சட்டத்தினால் (ஓஓகுஐ டிக 1932) திருத்தபெற்ற ³ சட்டத்தின் 4வது செக்ஷன், (1) சப்செக்ஷனின் (டி) பிரிவில் விவரிக்கப்பட்ட தன்மையுள்ள வார்த்தைகள் (அதன் இங்லீஷ் மொழிபெயர்ப்பு ஒன்று இத் துடன் அனுப்பப் பட்டிருக்கிறது) பிரசுரிக்கப்பட்டிருப்பதாக லோக்கல் கவர்ன்மெண்டுக்கு தெரியவருகிறபடியால் 1931ம் வருஷத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டம் (ஓஓஐஐஐ டிக 1931) 7-வது செக்ஷனில் (3) சப்செக்ஷனின்படி , ³ பத்திரிகையின் பிரசுரதாரராகிய எ°.இராமசாமி நாயக்கர் மனைவி எ°.ஆர். கண்ணம்மாள், 1933 நவம்பர் 20-ந் தேதி அல்லது அதற்கு முந்தி ரூ.1,000 (ஆயிரம் ரூபாய்)...

ஜஸ்டிஸ்  கட்சிக்கு  ஒரு  வார்த்தை

ஜஸ்டிஸ்  கட்சிக்கு  ஒரு  வார்த்தை

இந்திய  சட்டசபை  தேர்தலில்  ஜஸ்டிஸ்  கட்சி  தோற்றுவிட்டது.  தேர்தலில்  அதிகாரத்திலிருக்கும்  கட்சிக்கு  எப்பொழுதும்  பலம்  குறைவு  என்பதையும்,  எதிர்கட்சியில் இருப்பவர்களுக்கு  பலம்  அதிகம்  என்பதையும்,  அதிகாரத்தில்  இருப்பவர்கள்  மனதில்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  ஆதலால்  தேர்தல்  வந்தால்  எதிரிகளை  விட  அதிகாரத்தில்  இருப்பவர்கள் இரண்டு  பங்கு  பலமுடையவர்களாக  இருக்கக்  கணக்குப்  போட்டுக்  கொண்டால்தான்  தேர்தலில்  முகம்  கொடுக்க முடியும். இன்றைய  ஜஸ்டிஸ்  கட்சியார்  தங்கள்  கட்சியில்  யார்  யார் இருக்கிறார்கள்  என்று  சொல்லுவதற்கே  முடியாத  நிலையில்  இருக்கிறார்கள்.மந்திரிகள் வக்கிரமாகவே இருக்கிறார்கள். ஒரு  சமயம்  ஒற்றுமையாக  இருக்கிறார்கள்  என்றாலும்  அடுத்த  மந்திரி  பதவியும்  தங்களுக்கே  வரும்  என்றால்தான்  ஒற்றுமை  என்று  காட்டிக் கொள்வார்களே  தவிர மற்றபடி  ஒருவரை  ஒருவர்   கவிழ்க்கவே  தபஞ்  செய்து கொண்டிருப்பார்கள்  என்று  சொல்ல வேண்டி  இருக்கிறதற்கு  வருந்துகிறோம். வெளியில்  ஒவ்வொரு  ஜில்லா  தாலூக்காக்களில்  உள்ள  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  சேர்மன்  முதலியவர்கள்  அடுத்த  தடவையும்  பிரசிடெண்டு  சேர்மன்  ஆவதற்கு  யாருடைய ...

கமிஷனர்  அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்

கமிஷனர்  அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்

  ஈரோடு  முனிசிபாலிட்டிக்கு  கமிஷனர்  ஏற்பட்டு  சுமார் 2 மாத  காலமே  ஆன  போதிலும்  இதற்குள்  பல  துரைகளிலும்  சீர்திருத்தங்கள்  நடந்து  வருகின்றதானது  மகிழ்ச்சியடையக் கூடிய  காரியமேயாகும். என்றாலும்  சுகாதார  விஷயத்திலும்  தெருக்கள்  ஆக்கிரமிப்பு  விஷயத்திலும்  இன்னும்  அதிக  கவனம்  செலுத்தப்பட வேண்டியிருக்கிறது  என்பதை  தெரிவித்துக் கொள்ள வேண்டியவர்களாய்  இருக்கின்றோம். தெருக்கள் தெருக்கள்  அதாவது  ஜனங்கள்  குடி இருக்கும்  பாக  வீதிகள்  பெரிதும்  கக்கூசாகவே  உபயோகப்படுத்தப்பட்டு  வருகின்றன. குழந்தைகளை  பகல்  காலங்களில்  தாய்மார்கள்  தாராளமாக  தெருக்களில்  மலஜலம்  கழிக்க விடுகின்றார்கள். இரவு  நேரங்களில்  பெரியவர்களே  தெருக்களை  கக்கூசாக  உபயோகிக்கிறார்கள். குழாய்கள் தெருக்குழாய்களின்  பக்கத்தில் பாத்திரம்,  மாடு  கன்றுகள்  கழுவுகின்றார்கள்.  தெருக்குழாய்களில் துணிகள்  துவைக்கிறார்கள்.  தெருக்குழாய்களில்    ஸ்நானம் செய்கின்றார்கள். இக்காரியங்கள்  பெரிதும்  மேல்  ஜாதிக்காரர்கள் என்று  தங்களை  சொல்லிக்  கொள்ளுபவர்கள் குடி  இருக்கும்  வீதிகளிலேயே  அதிகமாய்  நடக்கின்றன. சில  சந்து  பொந்துகள்,  நடக்க  யோக்கியதையற்றவைகளாகவே  காணப்படுகின்றன. தெருக்களில்  குப்பைத்  தொட்டிகள்  அல்லாத  இடங்களில் ...

குழந்தை  வளர்ப்பும்  சுகாதாரமும்

குழந்தை  வளர்ப்பும்  சுகாதாரமும்

  நமது  நாட்டு  மக்களில்  100க்கு  95  பேர்  சுகாதாரத்தின்  பயனை  யறியாதவர்களாயும்  அதையறிந்து  கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள்.  காரணம்  படிப்பின்மையும்,  பழக்க  வழக்கமுமேயாகும்.  இதையனுசரித்தே  மேல்  நாட்டார்  நம்மை  சுகாதாரமற்றவர்கள்  என்றும்,  நாகரிகமற்றவர்கள்   என்றும்  நினைக்கிறார்கள்.  நம்  நாட்டிலும்  மேல்  ஜாதிக்காரர்கள்  என்போர்  தங்களை  நாகரிகஸ்தர்  என்றும்,  சுகாதாரமுடையவர்கள்  என்றும்  நினைத்துக் கொண்டு,  மற்றவர்களை  சுகாதாரமற்றவர்கள்  என்றும்  நாகரிகமற்றவர்கள்  என்றும்  தாழ்ந்த  ஜாதியார்கள்  என்றும்  குறிப்பிடுகிறார்கள்.  சுகாதாரமின்மையாலேயே  ஒரு  கூட்டத்தாரைத்  தாழ்த்தப்பட்டவர்கள்  என்று  காரணமும் தத்துவார்த்தமும் கூறப்படுகிறது.  அப்படிப்பட்ட  சுகாதாரத்தைக்  கைக் கொள்ளாத  தாழ்த்தப்பட்ட  மக்களை  சுகாதாரத்தைக்  கைக்  கொள்ள முடியாமல்  கிணறு,  குளம்,  நல்ல  வாழ்க்கை  முதலியவைகளை  கடவுள்  பேராலும்  மதத்தின்  பேராலும்  தடைப்படுத்தி  வைக்கப்பட்டிருக்கின்றது.  நம்மில்  அத்தகைய  இழிவும்  தடையும்  கற்பிக்கும்  மக்களின்  கெட்ட  எண்ணத்தையும்,  அதன்  பயனாய்  சுகாதார  வசதியை  அனுபவிக்க  முடியாமல்  தாழ்த்தப்பட்டவர்கள்  என்று  ஒதுக்கப்பட்டிருக்கும்  மக்களின்  பரிதாப  நிலைமையையும்  கண்கூடாகப்  பார்த்து  வருகிறோம். ...

தோழர். ஜே.என்.இராமநாதன்

தோழர். ஜே.என்.இராமநாதன்

  பார்ப்பனரல்லாத  மக்களின்  நலத்திற்காக  உழைத்து  வந்த  தோழர் ஜே.என்.  இராமநாதன்  அவர்கள்  15.11.34  ல்  சென்னையில்  மரணமடைந்தாரென்பதையறிந்து  வருந்துகிறோம்.  நமது  அனுதாபத்தை  அவர்  குடும்பத்தாருக்குத்  தெரிவித்துக்  கொள்கிறேம். பகுத்தறிவு  இரங்கல் செய்தி  18.11.1934

* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி   

* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி   

  6 மாதத்திற்கு  முன் செய்த  எச்சரிக்கை தலைவரவர்களே!  தோழர்களே! ! தலைவரவர்கள்  தெரிவித்த  விஷயங்கள்  இயக்கநலனைக்  கருதி  அவசியம்  கவனிக்கத்  தக்கதாகும்.  எல்லா  விஷயத்தையும்  விட  நமது  கொள்கை  என்ன?  திட்டம்  என்ன?  என்பதைப்  பொது  ஜனங்கள்  அறியும்படி  செய்ய வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சி  என்றால்  மாதம்  4000 ரூ.  சம்பளத்துக்கும்  மந்திரி  பதவிக்கும்  ஊர்  சிரிக்கச்  சண்டை  போட்டுக் கொண்டிருக்கும்  கூட்டம்  என்று  இனியும்  பாமர  ஜனங்கள்  சொல்லும்படி  நாம்  விட்டுக் கொண்டிருக்கக் கூடாது.  காங்கிரசுக்காரர்கள்  என்பவர்களின்  உள்  எண்ணமும்,  நாணையமும்  எப்படியிருந்தாலும்  அவர்கள்  ஏதோ  இரண்டொரு கொள்கைகளைச் சொல்லி, அதைப்  பெரிதாக்கிக்  காட்டி  அதற்காக  அடியும்,  உதையும்,  நஷ்டமும்,  கஷ்டமும்,  சிறைவாசமும்  பெற்றவர்கள்  என்கின்ற  பெயரைப்  பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு  இப்பொழுது  திடீரென்று  போட்டி போடுவதென்றால் அதுவும் ஒரு விளக்கமான  யாவருக்கும் தெரியும்படியான ஒரு கொள்கையும், திட்டமும் இல்லாமல் போட்டி  போடுவதென்றால்    சுலபமான  காரியமல்ல  என்பதே  எனது  அபிப்பிராயம். ...

தோல்வி  ஆனால்  நன்மைக்கே

தோல்வி  ஆனால்  நன்மைக்கே

  சென்ற  வாரம்  நடந்த  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  பார்ப்பனரல்லாதார்  இயக்க  சார்பாய்  நிறுத்தப்பட்ட  அபேக்ஷகர்களும்  பார்ப்பனரல்லாதார்   இயக்கப்  பிரமுகர்களால் ஆதரிக்கப்பட்ட  அபேக்ஷகர்களும்  அனேகமாக  எல்லோரும்  தோல்வி  என்பதை  அடைந்துவிட்டார்கள்.  தோல்வி  என்றால்  நல்ல  பரிசுத்தமான   பாதாளத்துக்குக்  கொண்டு போகும்படியான  தோல்வி  என்று  சொல்லத்தக்க  வண்ணம் தோல்வி  அடைந்திருக்கிறார்கள்  என்று  தான் சொல்ல  வேண்டும். பார்ப்பனரல்லாதார் சார்பாய்  வெற்றி ,  வெற்றி,  வெற்றி  என்று  வீரம்  பேசிய  நமது  வாயும்  கையும்  வெட்கப்படத்  தக்க தோல்வி  என்று  சொன்னால் தலைகுனிந்து  பொருத்துக் கொள்ள  வேண்டியது  தான்.  அதற்குக்  காரணமும்  சமாதானமும்  பதினாயிரம்  இருந்தாலும்  தேர்தல் முடிவு  தோல்வி  தான் என்பதில் சிறிதும்  ஆ÷க்ஷபனையோ,  விவகாரத்துக்கு  இடமோ  இல்லை  என்பதே  நமதபிப்பிராயம்.  அதுவே  நம்  வீரத்துக்கு  அறிகுறியாகும். எனவே  நல்ல  தோல்வி  அடைந்துவிட்டோம்  என்பதை  ஒப்புக் கொள்ளத்தக்க  தைரியம்  நம்  எல்லோருக்கும்  இருக்க வேண்டியது  மிகவும்  அவசியமாகும். ஆனால்  இத்  தோல்வியின்  பயன் ...

குடி அரசுக்கு பாணம்  – ஈ.வெ.ரா

குடி அரசுக்கு பாணம் – ஈ.வெ.ரா

  குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எ°.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக் காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கை யின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜி°டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீ° சார்வு செய்யப்பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச்செய்யாமல் விட்டுவைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டி ருக்கிறோம். முதலாளிவர்க்க ஆக்ஷியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்....

ஈரோடு அர்பன் பாங்கு                           அறிக்கைப் பத்திரக் குறிப்பு

ஈரோடு அர்பன் பாங்கு                           அறிக்கைப் பத்திரக் குறிப்பு

ஈரோடு அர்பன் பாங்கியானது சுமார் 20 வருஷத்துக்கு முன் இவ்வூரில் °தாபிக்கப்பட்ட பொழுது அதற்கு பெரிதும் பார்ப்பனரல்லாத மக்களே பிரயத்தனக் காரராகவும், ஆதரவுக்காரர்களாகவும் இருந்தாலும் அது நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும், ஆதிக்கத்துக்கும் உள்ளாகி பாங்கி சிப்பந்திகளும், நிர்வாகிகளும் பார்ப்பன அக்கிரமமாகவும் பார்ப்பன நன்மைக்கு ஒரு கோட்டையாகவும் வந்து முடிந்ததுடன் மற்ற ஊர்ப் பொதுக்காரியங்களிலும் பார்ப்பன ஆதிக்கத் தைப் புகுத்துவதற்கு பாங்கியின் செல்வாக்கை உபயோகப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் பிறகே சமீப காலத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இதையறிந்து பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிவந்ததின் பயனாய் சிருகச்சிருக பார்ப்பன ஆதிக்கம் குறையத் தலைப்பட்டு இப்போது இந்த இரண்டு வருஷமாய் அப்பாங்கின் நிர்வாகத் தைப் பொருத்தவரை அடியோடு பார்ப்பனரல்லாதார் கைக்கு வந்திருக் கின்றது என்றே சொல்லலாம். இதன் பயனாய் அப்பாங்கின் நல்ல நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை யாய் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் அளவிடற்பாலதன்று. பதவி இழக்க நேரிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத ஆளுகளையே...