பொப்பிலியும் செட்டிநாடும்
செட்டிநாட்டு கோடீஸ்வரரும், பரம்பரை ராஜா பட்டம் பெற்றவரும், தர்மப்பிரபுவுமான ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் குமாரர் சென்னை கார்ப்பரேஷன் மேயர் குமாரராஜா என்றழைக்கப்படும் முத்தையா செட்டியார் அவர்கள் மீது ஜஸ்டிஸ் கட்சியார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றத் துணிந்து அவரிடம் அதாவது முத்தையா செட்டியார் அவர்களிடம் சென்னை சட்டசபைக் கொரடா பதவியையும், ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாக சபையின் தலைவர் பதவியையும் ராஜிநாமா பெற்றுவிட்டார்கள். இந்தக் காரியமானது இந்தியாவின் சரித்திரத்திலேயே ஏன் உலக சரித்திரத்திலேயே புதுமையானதும், இதற்கு முன் எவரும் செய்யத் துணியாததும், பார்த்திராததும், கேட்டிராததுமான காரியமென்றே சொல்ல வேண்டும். செட்டிநாட்டுப் பிரபுவுக்கு அதிகாரம், பதவி, பட்டம், பணம், செல்வாக்கு ஆகியவை எல்லாம் நிறைந்து இருந்தும் கட்சி முறை, கொள்கை முறை, சிநேக முறை என்பவைகள் அல்லாமல் தனிப்பட்ட முறையிலும், செல்வ முறையிலும், பின்பற்றுவோர் முறையிலும் ஏராளமான பலமும், சாய்காலும் இருந்தும் ஒன்றும் பயன்படாமல் கோழிக்குஞ்சை ராஜாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் ஒரு ...