உத்தியோகத் தடை
“ஜஸ்டிஸ் கட்சி “தலைவர்களுக்கு” சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது” என்பதாக சேலம் ஜஸ்டிஸ் – சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக்கூட்டத்தில் ஒரு தோழரால் ஒரு தீர்மானம் பிரேரிக்கப்பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன காரணம் மிகவும் கவனிக்கத் தக்கதாகும். காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்றும் அவர்கள் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை யென்றும் அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள் என்றும், தான் அதில் ஒரு திருத்தம் செய்து அதே தீர்மானத்தையே பிரேரேபிக்கிறதாகவும் சொன்னார். அதாவது, உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு ஆக சொல்லப்படும் காரணத்தை மாத்திரம் மாற்ற வேண்டுமென்கிறேன் என்றும் சொன்னார். காரணம் என்னவென்றால் எந்தக் கட்சியின் பேரால் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் என்பவர் பெரும் பெரும் பதவி பெற்றார்களோ அந்தகட்சிக்கு அவர்கள் நன்றி காட்டவில்லை. பல வழிகளில் துரோகம் செய்துவிட்டார்கள். பொது ஜனங்களையும் சர்க்காரையும் திருப்தி...