Author: admin

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

சென்ற வாரம்  “சுயராஜ்யா” பத்திரிகையின் விஷமப்பிரசாரத்தைக் குறித்து எழுதியிருந்தோம். இவ்வாரம் “சுதேசமித்திரன்” பத்திரிகையினுடை யவும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரினுடையவும் விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் எழுதும்படி வந்து விட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் சென்னையில் சுயராஜ்யக்கட்சியாரின் வெற்றியைக் கொண்டாட “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” என்றும் “ வேலியே பயிரை மேய்கிறது” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கும் பல பொய்களுக்கு பதில் எழுதாவிட்டாலும் ஈரோட்டில் தனது தம்பி முனிசிபல் சபையில் °தானம் பெறும்படி செய்வதற்காக காங்கிர° பெயரையும் மகாத்மாவின் பெயரையும் ஸ்ரீ நாயக்கர் உபயோகப்படுத்திக்கொண்டது ஞாபகமில்லையா என்று பெரிய பொய்யை எழுதியிருக்கிறது.  முதலாவது ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு தம்பியே கிடையாது.  சென்ற வருஷத்தில் நடந்த ஈரோடு முனிசிபல் தேர்தலில் அவர் தமையனார் முனிசிபல் அபேட்சகராய் நிற்கிற காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அவர் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்த பொழுது முனிசிபல் தேர்தலுக்கு மூன்று நாட்கள்தானிருந்தன.  ஈரோட்டிற்கு வந்த உடனே வேறு...

கஞ்சீவரம் மகாநாட்டுத் தலைவர்

கஞ்சீவரம் மகாநாட்டுத் தலைவர்

கஞ்சீவரத்தில் நடைபெறப்போகும் தமிழ்மாகாண மகாநாட்டிற்கு தலைவர் தெரிந்தெடுப்பதில் பலவிதமான அபிப்பிராயங்களும் வதந்திகளும் உலவி வருகின்றன.  முதன் முதலாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவை யாம் சிபார்சு செய்தோம்.  அதை அவர் மறுத்துவிட்டதோடு நில்லாமல் பொது ஜனங்களுக்கு, தன்னை யாரும் சிபார்சு செய்யக்கூடாது என புத்திமதியும் கூறிவிட்டார்.  இப்படி அவர் புத்திமதி கூறியது தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது.  ஸ்ரீமான் தங்கப் பெருமாள்பிள்ளை அவர்களைத் தலைவராகத் தெரிந்தெடுக்கக்கூடுமென்று வதந்தி உலவுவதாக ஜ°டி° பத்திரிகையும், திராவிடன் பத்திரிகையும் எழுதியதோடு அதற்குச் சில காரணங்களையும் கூறுகின்றன.  இப்படி அப்பத்திரிகைகள் எழுதுவதற்குக் காரணம் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்களை இப்பத்திரிகைகள் நன்கு அறிந்து கொள்ளாததுதான் என்று சொல்லுவோம்.  ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்கள் குருகுலப் போராட்டத்தில் ஸ்ரீமான் அய்யரை ஆதரித்தார் என்னும் கூற்றுக்குச் சிறிதும் ஆதாரமில்லை.  தமிழ்நாட்டிலுள்ள எவரையும் விட நாம் அவரிடத்தில் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம்.  சில பிராமணரல்லாத பெரியோர் என்று சொல்லப் படுகின்றவர்களைப்...

கண்ணியமற்ற ஒத்துழைப்பு

கண்ணியமற்ற ஒத்துழைப்பு

மிதவாதக் கட்சியினரும் ஜ°டி° கட்சியினரும் வெளிப்படையாக அரசாங்கத்தினோடு ஒத்துழைத்து வருகின்றனர்.  அவர்களது கொள்கை களில் யாம் அபிப்பிராயபேதம் கொள்ளினும் அவர்களது ஒத்துழைப்பு எண்ணம் கண்ணியமாக வெளிப்படையாகவுள்ளது என்றே சொல்லுவோம்.  அவர்கள் சுயராஜ்யக்கட்சியினரைப் போல் ஒத்துழையாப் போர்வையைத் தாங்கி ஒத்து ழைக்க முற்படவில்லை.  அவர்கள் எப்பொழுதும் பகிரங்கமாகவே ஒத்து ழைத்து வருகின்றனர்.  சுயராஜ்யக் கட்சியினர் அப்படி அல்லாது தேச மக்களி டம் பொய்யைக்கூறி ஓட்டுப் பெற்றுத் தங்களது பிரதிநிதித்துவத்தை மாறான வழிகளில், காங்கிரஸின் கொள்கைகளுக்கே விரோதமாக  உபயோகித்து வருகின்றனர்.  சட்டசபைகளுக்குச் செல்வதினால் ஒத்துழையாமையை இன்னும் தீவிரமாக அங்கு அனுஷ்டிக்க முடியும் எனக்கூறிய இவர்கள் காங்கிரஸிற்கே உலை வைத்து விட்டனர்.  ஒத்துழை யாமை என்னும் பதம்கூட இப்புண்ணிய சீலர்களின் சூழ்ச்சிகளால் மறைந்துவிட்டது.  சுயராஜ்யக் கட்சியினர் பலம் உடையவர்கள் என்று அரசாங்கத்தினர் கருதியிருப்பார் களாயின் இவர்கள் வேண்டுவதெல்லாம் தாங்களாகவே வலுவில் கொடுக்க முன் வந்திருப்பார்கள்.  இவர்களது செயல்களினால் இவர்கள் நம்முடன் ஒத்துழைப் பார்கள் என்பதில் சிறிதும்...

போர்  “சுயராஜ்யா” என்று சொல்லப்படும் பிராமணப் பத்திரிகை

போர் “சுயராஜ்யா” என்று சொல்லப்படும் பிராமணப் பத்திரிகை

  சுயராஜ்யா என்ற போலிப் பெயரை அணிந்து பிராமணர்களின் சுயநலத் திற்கும் பிராமணரல்லாதார் சமுகத்திற்கு துரோகம் செய்வதற்குமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சில பிராமணர்களால் நடத்தப் பட்டுவரும் ஒரு சென்னை தினசரிப் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சமாக தனது விஷத்தை நாலுங் கக்கிக்கொண்டே வருகிறது. அதாவது இம் µ  10.9.25ல் வெளியான சுயராஜ்யா பத்திரிகையில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சில சென்னை ஓட்டர்கள் சுயராஜ்யக் கட்சியினரின் தூண்டுகோளின்படி சென்னைக்குச்சென்று ஓட்டர்கள் மகாநாட்டில் பேசிய பேச்சை அரைகுறை யாக மனதில் வைத்துக்கொண்டு   மின்னொளி என்ற தலைப்பின் கீழ் சில வார்த்தைகள் காணப்படுகின்றன.  ‘காவாலித்தனம்’ தலை மிஞ்சுகிறது. நகரசபைகளைக் கைப்பற்ற காங்கிர° முயலுமிடங்களிலெல்லாம் எதிர்க்கட்சியினர் குறும்பு பண்ணுகின்றனர். தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்கிக்கொள்வோம் என்கிறார்கள். வகுப்பு வேற்றுமைப் பேயைக் கிளப்பி விடுகின்றனர். நம்மவரிலே பலர் குட்டிக்கரணம் போடுகின்றனர். சின்னாட்களுக்கு முன் மகா தீவிர ஒத்துழையாதாரராகவிருந்தோர் இப்பொழுது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் மயங்கிக் கிடக் கின்றனர். சுதந்திரப்போரில்...

தேர்தல்  ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவின் அபிப்பிராயம்

தேர்தல் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவின் அபிப்பிராயம்

  °தல °தாபனங்களின் தேர்தல்கள் விஷயமாக ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு பொதுமக்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கும் விதமாக தன்னுடைய கருத்து இன்னதுதான் என்பதைப் பிறர் அறிந்து கொள்ள முடியாதபடி ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக எழுதிவருகிறார்.  இரண்டொரு விஷயத்தை மாத்திரம் இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.  கோயம் புத்தூர் தேர்தலின்பொழுது காங்கிர° பிரசாரகர் ஒருவர் எழுதிக் கேட்டதற்கு தேர்தல்களில் நின்ற அபேட்சகர்களை அறிந்தோ அறியாமலோ சுயராஜ்யக் கட்சிக்காரருக்காக வேலை செய்தவர்களைப் பாராட்டியும் சுயராஜ்யக் கட்சிக்காரருக்கே வெற்றி கிடைக்கவேண்டுமென்றும் ஒரு ஆசிர்வாத ஸ்ரீமுகம் அனுப்பினார்.  அதற்கடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சிக்கு விரோத மாக இருந்த ஒருவர் ஸ்ரீமான் நாயுடுவுக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார்.  அந்த விண்ணப்பத்திற்கு மனதிரங்கி அடியிற் கண்டபடி மீண்டும் ஒரு ஸ்ரீமுகம் அனுப்பினார்.  “சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்கு உள்ளே சென்று அதை ஓடவிடாது தடுக்கவே முன்னால் கைப்பற்றுவதாகச் சொன்னார்கள்.  சட்ட சபைகளைத் தவிர °தல °தாபனங்களில் ஒற்றுழை யாமைக்கோ, முட்டுக் கட்டைக்கோ வழியில்லை.  முனிசிபாலிடிகளில்...

கும்பகோணம் பிராமணர்களின் தேர்தல் தந்திரம்

கும்பகோணம் பிராமணர்களின் தேர்தல் தந்திரம்

  கும்பகோணம் முனிசிபல் தேர்தலுக்கு காங்கிர° சுயராஜ்யக்கட்சி பெயரைச் சொல்லிக்கொண்டு இரண்டு அய்யர்களும் ஒரு அய்யங்காரும் ஒரு சா°திரியாரும் அபேட்சகர்களாய் நிற்கிறார்கள்.  காங்கிர° வேலைகள் நடந்த காலத்தில் இவர்கள் எங்கு இருந்தவர்கள்? காங்கிரசுக்கு இவர்கள் என்ன செய்தவர்கள்? காங்கிர° கொள்கையில் எதெதை இவர்கள் ஒப்புக் கொண்டவர்கள்? கும்பகோணம் பொது ஜனங்களும் காங்கிர° தொண்டர் களும் செய்த காங்கிர° கைங்கர்யங்கள் இந்த அய்யர்கள் அய்யங்கார்கள் சா°திரிகள் முனிசிபாலிட்டியில் °தானம் பெறத்தான் உதவவேண்டுமா? தீண்டாமை விலக்கைப்பற்றியும், குருகுலத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்க் காமை விலக்கைப் பற்றியும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு செய்த பிரசாரத்தின் பலனாய் காங்கிர° கமிட்டிக்கு நூல் சந்தாவே அனுப்பக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்ட கூட்டத்தாருக்கும், காங்கிர° பதவியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து ஓடிப்போன கூட்டத்தாருக்கும் முனிசிபல் தேர்தல் வந்தவுடன் தங்கள் மானம் வெட்கத்தை யெல்லாம் விட்டு காங்கிர° காரர்களின் தியாகத்தின் மறைவில் °தானம் பெற ஆசைப்பட்டு, காங்கிர° பேரால் °தானம்...

கோவைத் தேர்தல்  – சித்திரபுத்திரன்

கோவைத் தேர்தல் – சித்திரபுத்திரன்

  கோயம்புத்தூர் நகர பரிபாலன சபையின் தேர்தல் முடிந்தது.  எட்டுக் கனவான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். தேர்தல் பிரசாரங்களில் இரண்டு கட்சிகளின் பெயர் சொல்லிக் கொள்ளப்பட்டன. ஒன்று சுயராஜ்யக் கட்சி, மற்றொன்று ஜ°டி° கட்சி. சுயராஜ்யக் கட்சிக்கென கோயம்புத்தூர் காங்கிர° நிர்வாகிகள் என்போர் பிரசாரம் செய்தனர். ஜ°டி° கட்சிக்காக எவ்விதப் பிரசாரமும் நடைபெறாவிட்டாலும் காங்கிரஸுக்காரர்கள் நடந்துகொண்ட மாதிரியே, ஜ°டி° கட்சிக்குப் பிரசாரம் தேவையில்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற கனவான்கள் எவ்விதப் பிரசாரத்தினாலும் பாதகமோ, சாதகமோ அடைய முடியாதவர்கள். இவர்கள் எட்டுப் பேரும் உண்மையில் எவ்வித தனிக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. “அரண்மனை நெல்லுக்குப் பெருச் சாளிகள் சண்டையிட்டுக் கொள்வது போல் ” அநாவசியமாய் சொந்த விரோதங்களையும், சுயநலன்களையும் உத்தேசித்து ஒருவரை ஒருவர் திட்டியும், பழி  சுமத்தியும் ஆசை  தீர்த்துக் கொண்டதல்லாமல் வேறு எவ்வித பொது நன்மையும் பிரசாரங்களில் தோன்றவில்லை. சுயராஜ்யக் கட்சியின் பேரால் வெற்றி பெற்றதாகச் சொல்லப்படும் மூன்று கனவான்களும்...

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

சுயராஜ்யக் கட்சியாரின் நிலை நாளுக்கு நாள் கேவலமாகி வரு வதைப் பொது மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர்.  சுயராஜ்யக் கட்சியினர் அரசாங்கத்தோடு உறவாடும் எண்ணத்தோடுதான் தங் கட்சியைத் தோற்று வித்தார் என்பதின் உண்மை இப்பொழுது வெளியாகிவிட்டது.  முதலில் சட்டசபையில் புகுந்து மானத்தை வில்லாய் வளைத்துவிடப் போவதாகக் கூறிய இப்புலிகள் அரசாங்கத்தோடுக் கட்டிக் குலாவ முற்பட்டு விட்டனர்.  இவர்களால் தேசத்தில் கட்சிபேதங்களும், உலக சிரேஷ்டர் எம்பெருமான் காந்தி அடிகளின் தூய இயக்கத்திற்கு அழிவுந்தான் ஏற்பட்டதே அன்றி வேறல்ல.  இரண்டாண்டிற்கு முன் தேசமிருந்த நிலையை நன்கறிந்த உண்மையாளரின் மனம் இச் சுயராஜ்யக் கட்சியினரின் செயல்களைக் கண்டு நோகாமலிராது.  சிறிது சிறிதாக தம் மனத்தில் கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படையாகவே செய்ய முற்பட்டு விட்டனர்.  பண்டித நேரு ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றார்.  ஸ்ரீமான் படேல் இந்திய சட்டசபைக்குத் தலைவரானார்.  மீண்டும் நேரு, ஸ்ரீமான்கள் கெல்கார், அரங்கசாமி அய்யங்கார் மூவரும் “கோர்ட்டு அவமதிப்பு மசோதாவை”ப் பரிசீலனை செய்ய...

பதவியா? பொதுஜன சேவையா?

பதவியா? பொதுஜன சேவையா?

  பொதுவாக °தல °தாபனங்களின் நிர்வாகத்தையும் பொறுப் பையும் உத்தேசிக்கையில் °தல °தாபனங்களில் °தானம் பெறுவது தொண்டு செய்வதற்காகவா பதவியை அனுபவிப்பதற்காகவா என்பதை பெரும்பான்மையான ஓட்டர்கள் உணர்வதே இல்லை.  நம்மைப் பொறுத்தவரையிலும் நாம் அதை ஒரு பதவியெனக் கருதுகிறோமேயன்றி அதை ஒரு பொது ஜனசேவையென நாம் கருதுவதேயில்லை.  உதாரணமாக, எவ்வித பொது °தல °தாபனங்களில் அங்கம் பெற்றாலும் அங்கம் பெற்றவர் அதை ஒரு பதவியாகவே மதித்து அதைப் பிறருக்குக் காட்டிப் பெருமை அடைவதின் பொருட்டாக தம்முடைய பெயருக்குக் கீழ் அப்பதவியின் பெயரையும் அச்சடித்துக் கொள்ளுகிறார்.  தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளு கிறார்.  அந்நியர் இவருடைய கவுரவங்களைப் பற்றிப் பேசும் பொழுதும் அதை சுட்டிக் காட்டுகின்றனர்.  அல்லாமலும் இந்தத் தேர்தல் °தானம் பெறுவதின் பொருட்டு ஆயிரம், பதினாயிரம், இருபதினாயிரம் செலவும் செய்கின்றனர்.  யாரைப்பிடித்தால் தாங்கள் தேர்தலில் வெற்றி பெறலாமெனக் கருதி லஞ்சம் கொடுத்து ஏஜண்டுகளையும் நியமிக்கிறார்கள்.  தேர்தல் காலங்களில் தங்களுக்கு...

ஸ்ரீமான் ஆதிநாராயணன் செட்டியாரின் கூற்று

ஸ்ரீமான் ஆதிநாராயணன் செட்டியாரின் கூற்று

  மாயவரம் தாலூகா ராஜீய மகாநாட்டில் அக்கிராசனம் வகிக்க நேர்ந்து ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியார் தமிழ்நாடு காங்கிர° கமிட்டி யின் நிலைமையயைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்.  அதாவது:- “மாகாண காங்கிர° கமிட்டியுடன் நில்லாமல் ஜில்லா, தாலூகா கமிட்டிகளும் மிக்க துரதிர்ஷ்டமான நிலையில் இருக்கின்றன.  இப்பொழு துள்ள தமிழ்நாடு காங்கிர° கமிட்டியின் நிர்வாகத்தைக்  கவனித்தால் இதைவிடக் கேவலமாக இனி நடத்த முடியாது.  முக்கிய நிர்வாக உத்தி யோக°தர்கள் ஜாதிக் கொள்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஒருவர் (ஸ்ரீமான். பி. வரதராஜலு நாயுடுவை மனதில் வைத்துக்கொண்டு) பகிரங்க மாகவே மிகவும் பிற்போக்கான (ஜ°டி° கட்சியில்) கோஷ்டியில் தாம் சேரத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.  ஆனால், பிராமணர்களை எதிர்த்துப் போராடுவதற்காகவே சேர்வதாக பத்திரமாகக் கூறுகிறார்.  ஏனெனில் பிராமணர்களை எதிர்த்துப் போராடுவது காங்கிர° கொள்கைகளில் ஒரு பாகம் போலும்! மற்றொருவர் (ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை மனதில் வைத்துக்கொண்டு) °தல°தாபனங்களின் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியாரை தேர்ந்தெடுக்கக்கூடாதென்று விளம்பரப்படுத்துகிறார்.  வகுப்பு...

சுயராஜ்யக்கட்சியின் முக்கிய வேலை

சுயராஜ்யக்கட்சியின் முக்கிய வேலை

சுயராஜ்யக் கட்சியென்று சொல்லப்படும்  ராஜுயகட்சி அங்கத்தினர் களுக்கு வேலையென்னவென்றால் தாங்கள் யோக்கியர்களென்பதிலும் தங்கள் கட்சிக்கு பலம் குறையவில்லையென்பதிலும், தங்களுக்கு செல்வாக்கு இருக்கிற தென்பதிலும்  சந்தேகமேற்பட்ட காலங்களிலெல்லாம்  மகாத்மா விடம்போய்  நற்சாட்சிப் பத்திரம் வாங்குவதான வேலையையே அவர்களது தலையில் கடவுள் விதித்து விட்டார் போலும்! இப்படியே இருந்தால் இக்கட்சியின் “செல்வாக்கும் ,  பலமும், பெருந்தன்மையும்” மக்களுக்கு உபயோகப்படுவது தான் எப்பொழுது என்று தெரியவில்லை. குடி அரசு – குறிப்புரை – 30.08.1925  

எல்லா இந்திய காங்கிர° கமிட்டி 28.12.24 தேதியின் ஆறாவது தீர்மானத்தின் உண்மை

எல்லா இந்திய காங்கிர° கமிட்டி 28.12.24 தேதியின் ஆறாவது தீர்மானத்தின் உண்மை

இதற்கு முன் நான் பேசியும் எழுதியும் வந்ததில் முனிசிபாலிட்டி தாலூகா போர்டு டி°டிரிக்ட் போர்டு முதலிய °தாபனங்களை காங்கிரஸின் பெயரால் கைப்பற்ற எல்லா இந்திய காங்கிரசோ மாகாண கான்பரன்சோ ஜில்லா கான்பரன்சோ உத்திரவு கொடுக்கவில்லை என்று வெகு காலமாய் நான் சொல்லி வந்திருப்பதோடு அவ்விதமான ஒரு உத்தரவோ சிபார்சோ காங்கிர° °தாபனங்கள் செய்யக்கூடாதென்றும் நானும் எனது நண்பர்கள் சிலரும் வாதாடி வந்திருக்கிறோம்.  அவ்வித ஒரு தீர்மானம் காங்கிரஸில் இல்லாமல் செய்துமிருக்கிறோம்.  அப்படி இருக்க கோயமுத்தூர் நகர காங்கிர° கமிட்டியின் பேரால் 22. 8. 25 ல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு துண்டு பிரசுரத்தில் எல்லா இந்திய காங்கிர° கமிட்டியின் ஒரு தீர்மானத்தை தமிழில் தப்பாய் வெளியிட்டு ஜனங்களை ஏமாறும்படி செய்திருப்பதைக் கண்டு நான் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.  அத்தோடு பொது ஜனங்களும் இந்தத் தப்பு பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கும்படி ஒரு தெளிவு பிரசுரம் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.  அதாவது ³ நோட்டீசில். “எங்கெங்கே...

தஞ்சையில் பிராமணரல்லாதார் மகாநாட்டுக்குப் போட்டியான தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு

தஞ்சையில் பிராமணரல்லாதார் மகாநாட்டுக்குப் போட்டியான தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு

ஜ°டி° கட்சியாரால் ஏமாறப்பட்ட தேசீய பிராமணரல்லாதார் களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள்.  தேசீயவேலை தீவிரமாய் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவர்கள் எங்கு போயிருந்தார்கள்? தேசீய பிராமணரல்லாதாரென்பதற்கு என்ன யோக்கியதை வைத்திருக் கிறார்கள்? சுயராஜ்யக்கட்சியைப் போல் கைச்சாத்து மட்டும் போட்டால் போதுமா? அல்லது காரியத்தில் ஏதாவது பரீiக்ஷ உண்டா? அப்படியானால் இக்கூட்டத்தைத் தவிர வேறு யாரும் அக்காரியப் பரீiக்ஷயில் தேறினவர்கள் இல்லையா? தேசீயம் என்கிற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம்? உத்தியோகத்திற்கு ஆசைப்படுவதாக இருந்தாலே போதுமா? பிறரை ஏமாற்றுவதாக இருந்தால் போதுமா? மற்றொருவரைத் திட்டுவதாக இருந்தால் போதுமா? அல்லது ஏழைகளின் நன்மைக்கு ஏதாவது செய்யவேண்டுமா? இன்னும் எப்படி இருந்தாலும் சரி.  ஒரு விசேஷம் என்னவென்றால் மகாத்மா பெயரையும் காங்கிர° பெயரையும் சொல்லிக்கொண்டு சுயநலத்திற் காகத் திரியும் தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சியைவிட எத்தனையோ மடங்கு இது மேலானதுதான், மற்றொரு விசேஷம் என்னவெனின் சில தேசீய பிராமணரல்லாதாரைப்போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றாலே உடம்பு சிலிர்க்கவும் மனச்சான்றுக்காக வருந்துவதும் போலல்லாமல்...

ஜ°டி°கட்சி மகாநாடு

ஜ°டி°கட்சி மகாநாடு

  தஞ்சையில் நடைபெற்ற ஜ°டி°கட்சி மகாநாட்டின் நடவடிக்கை    களையும் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரின் புலம்பலையும் பத்திரிகைகள் வாயிலாக நேயர்கள் வாசித்திருக்கலாம்.  இவரது பிரசங்கத்தினின்று ஜ°டி°கட்சியின் நிலை எல்லோருக்கும் நன்கு விளங்கிவிட்டது.  பிராமணரல்லாதார்களில் அநேகர் இக்கட்சியில் சேராம லிருந்ததற்குக் காரணம் கூலிக்கு ராஜபக்தியும் உத்தியோகவேட்டையும் மிகுந்திருப்பதேயன்றி வேறல்ல. இக்குணங்கள் இக்கட்சியினின்றும் ஒழிந்து இக்கட்சிக்கு இவ்வரசாங்கத்தினிடம் இருக்கும் கூலிபக்தியும் ஒழியுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் இதில் சேருவார்கள்.  இல்லாவிடின் செட்டி யாரைப்போன்ற இக்கட்சியார் எல்லோரும் மந்திரிகளுள்பட ஒவ்வொரு வராய் ஒப்பாரியிட வேண்டியதாகத்தான் முடியும்.  சுயராஜ்யக்கட்சியாரும் இவர்கள்போலவே உத்தியோக வேட்டையிலும் பதவிவேட்டையிலும்  நுழைந்துள்ளார்கள்.  இவர்களது ஆர்ப்பாட்டங்களைக்கண்டு தேசமக்கள் முதலில் ஏமார்ந்து போனாலும் இவர்களது யோக்கியதையையும் விரைவில் அறிந்துவிடுவாhர்கள். பாமரஜனங்களை ஏமாற்றுவதால் எந்தக் கட்சி முன்னுக்கு வருவதா யிருந்தாலும் அது வெகு நாளைக்கு நீடித்திருக்காது என்பதை ஜ°டி° கட்சியாரும் சுயராஜ்யக்கட்சியாரும் அறியவேண்டுமென விரும்புகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.08.1925    ...

மதுரையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் கூற்று

மதுரையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் கூற்று

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரவர்களை மதுரை பொதுமக்கள் பகிரங்க மாகத் திறந்தவெளியில் பேசுவதற்கில்லாமல் செய்துவிட்டதின் பலனாய், ஒரு கட்டடத்திற்குள் பேச நேரிட்டு அதை ஸ்ரீமான் அய்யங்கார் பொதுமக்கள் நிறைந்த கூட்டமல்லவென்றும், ஆதலின் அங்கு என்ன வேண்டுமானாலும் பேசலாமென்று நினைத்துப் பேசி இருப்பதாகத் தெரிகிறது.  அவ் விஷயத்தைப் பொது ஜனங்கள் சரியாய் அறிந்துகொள்ளக்கூடாதவாறும், தந்திரமாய் ஜனங்களை ஏமாற்றத்தக்க மாதிரியாயும், தேசீயப் பத்திரிகை யென்ற போர்வையைப் போர்த்துக்கொண்டிருக்கும் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிகை கீழ்க்கண்டவாறு பிரசுரித்திருக்கிறது.  ஸ்ரீமான் அய்யங்கார் பிரசங்கத்தின் சாராம்சமாவது:- “பெஜவாடாவில் கூடிய சென்ற காங்கிரஸில் எல்லா °தாபனங்களையும் காங்கிர° சுயராஜ்யக்கட்சியினர்…… மகாத்மா காந்தியும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.  ஆகவே, எதிரிகளின் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு மோசம் போகாதீர்கள்.  அவர்கள் நமக்குள் கட்சிகளை உண்டாக்கப் பலவிதங்களிலும் வழி தேடுவார்கள்.  அதற்கு நீங்கள் கவலைப்படவாவது கவனஞ்செலுத்தவாவது கூடாது” என்று பேசியிருக்கிறார்.  இவற்றில், முதல் வாக்கியத்தில் நிருபர் ஏதாவது இரண்டொரு வார்த்தைகளை விட்டு விட்டாரோ, அல்லது அங்குள்ள மீதி வாக்கியங்களை...

வேம்பு இனிக்குமா?

வேம்பு இனிக்குமா?

தஞ்சை பிராமணரல்லாதார் மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தணிகாசலஞ் செட்டியாரவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் தாம் சென்னை நகரசபையில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு காரணம் கூறு கையில், தம்முடைய வண்டியில் 649 ஓட்டர்கள் போனதாகவும், 358 ஓட்டுகள் தான் தமக்குக் கிடைத்ததாகவும், அவர்களில் 108 பேர்கள்தான் பிராமணர் களென்றும், பெரும்பாலோர்கள் தமக்கு ஓட்டுக் கொடுக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.  ஜ°டி° கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு தேர்தலில் நிற்கும் ஓர் பார்ப்பனரல்லாதார் எப்படி பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்க்கலாம்? ஆகையால், பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்த்தது முட்டாள் தனமா? இவருக்கு ஓட் செய்வதாய் சொல்லி இவர் வண்டியிலேயே வந்து மற்றொருவருக்கு ஓட்டு செய்திருந்தால் அது அயோக்கியத்தனமா? என்பதை வாசகர்களே கவனிக்கவேண்டும். குடி அரசு – குறிப்புரை – 30.08.1925          

சென்னையில் சர்வகலாசாலைப்            பட்டமளிப்பு விழா

சென்னையில் சர்வகலாசாலைப்            பட்டமளிப்பு விழா

  இவ்வருடம் சென்னை மாகாணத்தில் 84 °திரீகளுள்பட, 1744 பேருக்கு அடிமை முத்திரை வைக்கப்பட்டது. மணிகளாகவும், மாணிக்கங்களாகவும் உள்ள பல வாலிபர்களும், °திரீ ரத்னங்களும், அடிமை முத்திரையைப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள். அதாவது இவ்வருடம் சர்வகலா சாலைப் பட்டம் வழங்கிய விழாவில்;   எம்.எல்.                                பரீட்சையில்    4 பேர்கள் பி.எல்.                             ,,                                       234  ,, பி.எ°.எ°ஸி.                                             1      ,, எம்.பி.பி.எ°.                                                                  ,,                                       22    ,, எல்.எம்.எ°                                                                     ,,                                       14     ,, பி.இ.                              ,,                                       11      ,, பி.எ°.ஸி.                                  ,,                                       74    ,, எல்.டி.                             ,,                                       50    ,, எம்.ஏ.                             ,,                                       52    ,, பி.ஏ. (ஆனர்°)                                                            ,,                                       89    ,, பி.ஏ.                              ,,                                       ...

சுயராஜ்யக்  கட்சியும்  ஸ்ரீமான் படேலின் உத்தியோகமும்

சுயராஜ்யக்  கட்சியும்  ஸ்ரீமான் படேலின் உத்தியோகமும்

  சுயராஜ்யக் கட்சியார் தங்கள் கட்சியை ஆரம்பிக்கும்போதே கயா காங்கிர° தீர்மானத்தை மீறிக் கலகம் செய்து காங்கிரசுக்கு  விரோதமாய் ஆரம்பித்தார்கள். அதுசமயம் காங்கிரஸில் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களின் கோழை மனத்தாலும் ஜாதியபிமானத்தாலும் சுயராஜ்யக்  கட்சியாருக்கு சட்டசபைப் பிரவேசம் பிறகு அனுமதிக்கப்பட்டுப் போய்விட்டது. காங்கிர° அனுமதித்தாலும் பொது ஜனங்களில் மிகுதி யானவர்கள் தங்கள் பேரால் சட்டசபைப் பிரவேசத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்யலானார்கள். ஆனாலும் அதுசமயம் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையைப் பற்றி ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நம்பிப் பலர் அனுமதித்தார்கள். சுயராஜ்யக் கட்சியாருக்கே ஓட்டும் செய்தார்கள். இவ்வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டனவா? அல்லது பிரிட்டிஷாரின் வாக்குறுதிகள் போலாயினவா? அன்றி அதைவிடமோசமாயினவா? என்று பார்ப்போம். வாக்குறுதிகளாவன : தாங்கள் சட்டசபைக்குப் போவது சர்க்காரின் ராஜ்யபாரம் நடை பெறவிடாமல் செய்வதற்கென்றும், அதற்காக எவ்வித தீர்மானங்கள் வந்தாலும் முட்டுக்கட்டை போட்டு எதிர்ப்பது என்றும், தங்களுக்கு ( மெஜாரிட்டி ) பெரும்பான்மையோர் கிடைக்கா விட் டால் தாங்கள் சட்டசபை...

வக்கீல்கள் வாய்தா வாங்குவது

வக்கீல்கள் வாய்தா வாங்குவது

வக்கீல்:- வா கவுண்டா என்ன சங்கதி. கட்சிக்காரன்:-   எசமான்று கிட்டதான் ஒரு காரியமாய் வந்தேன். வக்கீல்:- என்ன காரியம். கட்சிக்காரன்:-   நான் ஒருத்தருக்கு 1000 ரூபாயும் வட்டியும் கொடுக்க வேண்டும் வாங்கி 2 வருசமாச்சிங்கோ. வாய்தா சொல்லி கடந்தும் ஒரு வருச மாச்சிங்கோ. கடைசியா 2 மாச வாய்தா கேட்டேன் அதுக்குள்ளே பிராது போட்டுட்டானுங்கோ. எசமான்று எப்படியாவது ஒரு இரண்டு மாச வாய்தா வாங்கி கொடுத்தாக்க பணம் கட்டிப்போட்ரனுங்கோ. வக்கீல்:- இரண்டு மாதம் தானா இரண்டு வருஷ வாய்தா வாங்கிக் கொடுக்கிறேன் கடைசியாய் அவன் உன்னிடம் பணம் வாங்குகிறதையே நான் பார்த்து விடுகிறேன். கட்சிக்காரன்:-   சாமி சாமி அப்படிச் செய்யாதிங்கோ. அவன் மொதுலுக்கு நானா பிள்ளை. எம் மொதுலை எத்தனையோ பேர் திங்கி ராங்கோ. இரண்டு மாசம் இல்லாட்டா மூணு மாச வாய்தா கிடைத்தால் போரும். வக்கீல்:- சரி, பீசு என்ன கொடுக்கறே. கட்சிக்காரன்:-   எசமாங்க சொன்னாச் சரி. வக்கீல்:-...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்  “பகற்கொள்ளைக்காரருக்கு இராத்திரிக் கொள்ளைக்காரர்களே சாட்சி”

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் “பகற்கொள்ளைக்காரருக்கு இராத்திரிக் கொள்ளைக்காரர்களே சாட்சி”

  இம்மாதம் இருபதாந்தேதி தமிழ் சுயராஜ்யா பத்திரிகையில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபித்து எழுதுவதில் ஜனங்களை மகம்மதியர் என்றும், இந்தியக் கிறி°தவரென்றும், ஐரோப்பியரென்றும், ஆங்கிலோ இந்தியரென்றும், ஒவ்வொரு வகுப்புக்காரர்களால் அவ்வவ் வகுப்பிலுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதால் தங்கள் வகுப்புக் காரியங் களைப் பார்க்கிறார்களே யல்லாமல் பொதுக்காரியம் பார்ப்பதில்லை என்றும் இதனால் வகுப்புத் துவேஷமும் வகுப்புப் பிரிவினையும் ஏற்படுகின்றன என்றும் எழுதியிருக்கிறது.  இதற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒரு சா°திரி யாரின் உபதேசத்தைக் காட்டுகிறது.  சுயராஜ்யா பத்திரிகையோ தேசீய பிராமணர் என்று சொல்லப்படும் “பகற்கொள்ளை”க்காரருடைய பத்திரிகை. திரு சா°திரியார் அவர்களோ மிதவாதப் பிராமணர் என்று சொல்லப்படும் “இராத்திரிக் கொள்ளை”க் கட்சியைச் சேர்ந்த பிராமணர்.  இப்பகற் கொள்ளைக் கட்சிக்கு ராத்திரிக் கொள்ளைக் கட்சியார் சாட்சியைத்தான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.  போராக் குறைக்கு ஒரு பெரிய பிரட்டு என்னவென்றால் ஒரு பிராமணரல்லாத மந்திரியான ஸ்ரீமான் பாத்ரோ வும் இதை அங்கீகரித்திருக்கிறாராம்.  இந்த ஒரு விஷயம் பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சி என்று குடிஅரசும்...

சுயராஜ்யக் கட்சிக்கு கருவேப்பிலை

சுயராஜ்யக் கட்சிக்கு கருவேப்பிலை

வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த மு°லீம்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள்.  கடைசியாக வங்காள மு°லீம்களின்  தலைவரும் வங்காள நகர சபையின் டிப்டி மேயருமான டாக்டர் அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் °தானத்தை ராஜிநாமாக் கொடுத்து விட்டார்.  அவர் மேற்படி ராஜிநாமாவுக்குக் காரணம் கூறுகையில் சுயராஜ்யக்கட்சியின் தத்துவம் தமக்குப் பிடிக்கவில்லை யென்றும், அதனால்தான் தாம் ராஜிநாமாக் கொடுத்து விட்டதாகவும், தாம் இன்னமும் தேசத்திர்க்கு உழைக்கத் தயாராயிருப்பதாகவும், தாம் ராஜிநாமாக் கொடுத்ததின் காரணமாக தனக்கு ராஜிய உலகிலிருந்த செல்வாக்குகள் குறைந்தபோதிலும் ஒரு புதிய கொடுமைக்கு உட்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட அரசியல் தற்கொலை செய்துகொள்வது மேல் என எண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.  வங்காளத்தில் இப்படியென்றால், பம்பாயிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கும், சிந்து மு°லீம்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருவருக்குள்ளும், ஒத்துழைக்க முடியாதெனக் கூறி அவர்களுடன் ஒத்துழையாமை ஆரம்பித்திருப்பதாய் தெரியவருகிறது.  நமது மாகாணத்திலும் மதுரையில் சில சுயராஜ்யக் கட்சியார் சில மு°லீம்கள் விஷயமாய் நடந்துகொண்டது மதுரையில் சுயராஜ்யக்...

தேர்தல் பேய்

தேர்தல் பேய்

  இதைப்பற்றி பல தடவைகளில் நமது பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தேர்தல்கள் என்பது ஒரு பாத்தியமற்ற, கேள்வியற்ற சொத்தைப்போல் பிடித்தவனுக்குப் பொண்டாட்டி என மதித்து பலாத் காரமான செய்கைக்கொப்ப பல கொடுமைகள் நமது நாட்டில் இதுசமயம் நடந்து வருகின்றன. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் இன்னும் மற்ற இடங்களிலும் நடக்கும் தேர்தல் பிரசாரங்கள் இந்தியா நாகரீகமற்ற தேசம் என்பாருக்கும்  இந்திய மக்கள் சுயராஜ்யத்திற்கு யோக்கியதையற்ற வர்கள் என்பாருக்கும் தங்கள் கட்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உபயோகப்படுத்திக்கொள்ளத்தக்கதான சாட்சியாய் விளங்குகிறது. ஆனபோ திலும் நமக்கு இவைகளை மறுக்கும் மார்க்கம் ஏதாவது உண்டா என்று பார்த் தால் பிரஞ்சு தேசத்தில் இப்படி இல்லையா? பிரிட்டிஷ் தேசத்தில் இப்படி இல்லையா? என்று சொல்லித்தான் தப்பித்துக் கொள்ளக் கூடுமாயிருக்கிறதே அல்லாமல் அவர்கள் சொல்லுவதைப் பொய்யென்றும் மறுக்க யோக்கியதை இல்லாதவர்களாயிருக்கிறோம். இதோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவின் விடுதலைக்கேற்பட்டதும் 2 ´த்திற்கு முன்பு மிகமிக பரிசுத்தத் தன்மையுடையதென்று சொல்லிக்  கொள்ளப்பட்டிருந்ததுமான காங்கிரஸின் பெயரும்...

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

ஒத்துழையாமை திட்டத்தில் சர்க்காரும் பொது ஜனங்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பாகம் ஒன்று உண்டு.  அதாவது, விவகாரங்களைக் கோர்ட் டுக்குப் போய் பைசல் செய்து கொள்ள நினையாமல் உள்ளூர் பஞ்சாயத்தார் மூலம் வழக்குகளைப் பைசல் செய்து கொள்வது, இருகட்சிக்காரருக்கும் அனுகூலம் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.  இந்த யோசனை கொஞ் சமும் புதிதானதல்ல ஆதியில் ஜனங்கள் பஞ்சாயத்து மூலமாய் தான் தங்கள் வழக்குகளை பைசல் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.  ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தனக்குத் தானே பஞ்சாயத்தாராகத்தான் இருந்திருக்கிறார். இந்த தன்னுடைய பஞ்சாயத்தை ஒப்புக்கொள்ளாத காலத்தில் மனிதன் பலாத்காரத்தினால் அதை அமுலுக்குக் கொண்டுவரப் பார்க்கிறான்.  இது ஒருவருக்கொருவர் இரத்தம் சொரியக் கொண்டு வந்துவிட்டதினால், தனக்குத் தானே பஞ்சாயத்தாராக இருக்கக்கூடாது என்று அறிந்து மூன்றாவது மனிதரை பஞ்சாயத்தாராக ஏற்படுத்திக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.  அது நாளா வட்டத்தில் வளர்ந்து கிரமமான உபயோகமான பஞ்சாயத்தாக ஏற் பட்டது.  பொதுஜனங்கள் தற்கால நிலையில் வக்கீல்களின் ஆசை வார்த்தை களையும்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்  -சித்திரபுத்திரன்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் -சித்திரபுத்திரன்

  தற்காலம் இந்தியாவின் அபிப்பிராய பேதத்திற்கும், ஒற்றுமை யின்மைக்கும், வகுப்புத் துவேஷங்களுக்கும் ஒரே மருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான் என்று சில நாட்களுக்கு முன்னர் “குடி அரசி”ன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதைப்பற்றி வெளிப்படையான ஆட்சேபங்கள் ஒன்றும் வரவில்லை. ஆனாலும், அதனால் பாதிக்கப்படக் கூடிய வகுப்பைச் சேர்ந்ததான “சுதேசமித்திரன்” பத்திரிகை மந்திரி ஒப்புக்கொள்ளுகிறார் என்கிற தலைப்பின் கீழ் ஒரு சொற்பெருக்கில் தனக்கு அநுகூலமான பாகத்தை மட்டும் எடுத்து எழுதி ஜனங்களை ஏமாற்றி, யோசித்துப்பாருங்கள் என்று கேட்டிருக்கிறது.  “அதாவது பிரதிநிதிச் சபைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே ஜ°டி° கட்சியாரின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது.  ஆனால் அது தற்கால ஏற்பாடு.  அதை ஒரு °திரமான ஏற்பாடாகக் கொண்டால், அது நம் தேசிய இயக்கம் சிதருண்டு போகும்படி செய்யக்கூடியது”. “திராவிடன்” பத்திரிகை மேற்படி மந்திரியின் சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறது.  “சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றிமையாதது.  இக் கொள்கை புதிதானதல்ல.  சீர்திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்தபின்னர் ஏற் பட்டதுமல்ல,...

கள்ளுக்கும் விஷத்திர்க்கும் வாக்குவாதம்

கள்ளுக்கும் விஷத்திர்க்கும் வாக்குவாதம்

விஷம்- ஓ கள்ளே! நீ என்ன மகா கெட்டிக்காரன்போல் பேசுகிறாய், ஒரு கடுகளவு ஒரு மனிதனுக்குள் பிரவேசித்தேனேயானால் உடனே அவன் உயிரை வாங்கி பிணமாக்கிவிடுவேன்.  நீ பீப்பாயளவு உள்ளே போனாலும் ஒன்றும் செய்வதில்லை. கள்ளு:- அப்படியா, உன்னால் என்ன செய்யமுடியும்? ஒரு மனிதன் உயிரை மாத்திரம் தான் வாங்கமுடியும்.  இது யாரும் செய்து விடுவார்கள்.  என் சங்கதியைக் கேள்.  நான் ஒரு மனிதனுக்குள் சென்றேனேயானால் அவன் புத்தி, மானம், சொத்து இவ்வளவையும் பிடுங்கிக் கொள்வதோடு உயிர் இருக்கவே பிணமாக்கிவிடுவேன்.  இது உன்னாலாகுமா? குடி அரசு – உரையாடல் – 16.08.1925  

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம்

  ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சா°திரி வந்தார். பெரியமனிதர்:-  வாருங்கள் சா°திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டு மென்றிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள். சா°திரிகள்:-     அப்படியா, என்ன விசேஷம்? பெரியமனிதர்:-  ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதர்க்கேதாவது பிராயச்சித்தம் உண்டா? சா°திரிகள்:-     ஆஹா உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்.  இல்லாவிட்டால் அந்தப் பையனை பார்க்கவே கூடாது. பெரியமனிதர்:-  தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன்தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள். சா°திரிகள்:-     ஓஹோ! பிராமண பையனா அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும். குடி அரசு – உரையாடல் – 16.08.1925

பெரிய வக்கீல்கள்

பெரிய வக்கீல்கள்

  ஒரு வக்கீல் வீட்டிற்கு ஒரு கக்ஷிக்காரர் வருகிறார். வக்கீல்:-        வாங்க கவுண்டரே, சவுக்கியமா என்ன விசேஷம்? கட்சிக்காரன்:-   ஒரு கேசு கீழ் கோர்ட்டில் நமக்கு விரோதமாய்ப் போய் விட்டது. அப்பீல் போடவேண்டும் தயவுசெய்து கட்டை பாருங்கள். வக்கீல்:-        கட்டில் ஒரு ரிகார்ட், அதாவது ஜட்ஜ்மெண்டை எடுத்து பார்த்துக்கொண்டு தன்னுடைய குமா°தாவிடம் பேசுவதுபோல் “ஏண்டா ரங்கநாதா, யாரடா ஜட்ஜிமெண்ட் எழுதிய சப்ஜட்ஜி சுத்த முட்டாளாயிருக் கிறானே.  அவன் தனக்குமேல் ஏதாவது கோர்ட்டு இருப்பதாக நினைத்தானா அவனேதான் முடிவான ஜட்ஜி என்று நினைத்துக்கொண்டானா? இந்த ஜட்ஜ்மெண்ட் நம்ம ஜட்ஜி துரையிடம் அரை நிமிஷம் நிற்குமா? அல்லாமலும் இந்த சப்ஜட்ஜை சும்மா விட்டுவிடுவார்களா?” கட்சிக்காரன்:-   (என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே கட்சிக்காரன் ஆனந்தத்துடன்) ஏனுங்கொ எஜமான்றே எதிர்கட்சிக்கு நோட்டீசு அனுப்பி மாற்றுவார்களா? அதில்லாமலே கீழ்கோர்ட் தீர்ப்பை மாற்றிவிடுவார்களா? வக்கீல்:- அதெல்லாம் உங்களுக்கெதற்கு? நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.  700 ரூ. பீசு கொடுத்தால் கேசு அப்பீல் போடுவேன்....

மதுபானம்

மதுபானம்

1920 – ம் ´ சென்னை ராஜதானியில் உள்ள கள்ளுக்கடைகள் 11,034  இவைகளில் விற்ற கள்ளு 11 கோடி காலன். 8 திராம் புட்டி 1 க்கு 2 அணா வீதம் 66 கோடி புட்டிக்கு கிரயம் ரூ. 8 1/2 கோடி கிரயம் ஆகிறது. இதற்கு அனுகூலமாய் செலவாகும் மாமிசம், புட்டு, தோசை, முட்டை  முதலிய உபகருவிகளுக்கு 2 கோடி ரூபாய் ஆக ரூ.101/2  கோடி. சென்னை ராஜதானியில் உள்ள சாராயக்கடைகள் 6,352. இவைகளில் விற்ற சாராயம் 16,75,000 காலன்கள். காலன் ஒன்றுக்கு  12 ரூ. வீதம் 2 கோடியே 1 லட்சம்  ரூபாய்.  இதற்கு மாமிசம், தோசை, புட்டு முதலிய உபகருவிகள் 25 லட்சம். ஆக இரண்டும் சேர்ந்து 12 1/2 கோடி ரூபாய் செலவாகிறது. இந்தப் பனிரண்டரைக்கோடி ரூபாய் நமது ராஜதானியில் கள், சாராயத் திற்காக 3 1/2 கோடி ஜனங்களால் சிலவு செய்யப்படுகிறது. இது  அல்லாமல் ...

அந்தணர்ப்பேட்டை

அந்தணர்ப்பேட்டை

அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும்  மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்தி சாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நான் ஸ்ரீமான் சாரநாதனுடன் சென்றி ருந்தேன். ஆண்டு விழாவின் ஊர்வலத்தையும் அதில் வாசித்த உபசாரப் பத்திரங்களையும் இங்கு எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இச்சிறு கிராமத்தில் உள்ள ஜனங்களுக்கு கதரின் மீதுள்ள ஆர்வத் தைக் காட்டுவதற்கு இது குறிக்க வேண்டியதாயிற்று. ஆண்டு விழாவில் அதன் நிர்வாகிகளால் வாசிக்கப்பட்ட கதர் உற்பத்தி சாலையின் யாதா°தி லிருந்து நான் தெரிந்துகொண்ட சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அவ்வூர் பிரமுகர்கள் பங்கு முறையில் மூவாயிரம் ரூபாய் சேர்த்து வியாபார முறையில் நடத்தி வருகிறார்கள். இதற்காக கதர்ச்சாலையாரின் இராட்டினம் நாற்பத்தேழும், கூலிக்கு நூற்பவர்கள் இராட்டினம் நாற்பத்தைந்தும்  ஆக இராட்டினங்கள் தொண்ணூற்றிரண்டு சுழலுகின்றன. ஆறு தறிகளுக்கும் பூரா...

சுரேந்திர நாதரின் மறைவு

சுரேந்திர நாதரின் மறைவு

  வங்கத்தின் முடி சூடா மன்னன் என அழைக்கப்படும் ஸ்ரீ சுரேந்திர நாத பானர்ஜி வியாழனன்று இம்மண்ணுலகினின்று மறைந்தார் என்ற செய்தியைக் கேட்க மிகுந்த விசனத்திலாழ்கிறோம்.  அப்பெரியார் ஐம்பது ஆண்டுகள் தேசத்திற்குத் தனக்குத் தோன்றிய வழி நின்று சலியாது தொண்டு புரிந்தார்.  முதன்முதலாக கலெக்டர் உத்தியோகத்தில் சில மாதங்களிருந்து பின்னர் விலக்கப்பட்டார்.  உடனே கல்வி வளர்ச்சிக்காக உழைக்க முற்பட்டு ரிப்பன் கல்லூரியைக் கண்டு அதில் போதகாசிரியராகவுமிருந்தார்.  தேசீய உணர்ச்சி பரவாத அக்காலத்தில் இளம் வங்க வாலிப வீரர்களுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தார்.  பழைய காங்கிரஸில் ஓர் முக்கியத் தலைவராக நின்று ஊழியம் புரிந்தார்.  இரண்டுமுறை காங்கிரஸில் தலைமையும் வகித் துள்ளார்.  ஒத்துழையாமை தோன்றிய காலத்தில், நம் தேசமானது அவ்வியக் கத்திற்குத் தயாராக இல்லை எனப் பலர் கருதியதுபோல் சுரேந்திர நாதரும் கருதி மிதவாதக் கொள்கையையே பின்பற்றி வந்தார். ஸ்ரீ சுரேந்திர நாதர் மீது இந்திய மக்கள் ஏதாவது ஒரு வழியில் அதிருப்தி...

ஒரு கோடி ரூபாயும்,  இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும்  முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்

ஒரு கோடி ரூபாயும்,  இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும்  முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்

  இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத்தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்தக் காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒரு பொழுதும் கொடுத்திராதென்றே நினைக்கிறோம். ஆனால், நமது தேசத்திற்கு மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும். மூன்று மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், ஐம்பதினாயிரம் ரூபாய் வரும்படி உள்ள வக்கீல்கள் உள்பட சுமார் ஐநூறு பேர் தங்கள் தொழிலை நிறுத்தி தேசத் தொண்டில் இறங்கியும்,  அரசபோகத்தில் இருந்தவர்கள் முதற்கொண்டு ஜமீன்தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் உள்பட ஏழைகள் வரை முப்பதி னாயிரம் பேர் சிறைக்குச் சென்றும் மகாத்மாவே இரண்டு வருடங்கள் சிறை யில் வதிந்தும் சிறையினின்று வெளிப்போந்து இருபத்தொருநாள் உண்ணா விரதமிருந்தும் இந்தியா சுயராஜ்யம் அடையவில்லை என்று சொன்னால் இனி எப்படி, எப்பொழுது, எவரால் விடுதலை அடையமுடியும்? இனி மறுபடியும் இந்தியா சுயராஜ்யமடைய நாம் பாடுபட வேண்டுமானால்...

மாஜி°டிரேட்டின் மயக்கம்   – குட்டிச்சாத்தான்

மாஜி°டிரேட்டின் மயக்கம்  – குட்டிச்சாத்தான்

  ஒரு மாஜி°ட்ரேட் வீட்டுக்கு ஒரு கிழ வக்கீல் வருகிறார். மாஜி°ட்ரேட்:-   வாருங்கோ சார், சௌக்கியமா? வக்கீல்:- என்ன சௌக்கியம் போங்கள், குளிக்கவும் விபூதி பூசவும் சரி அதற்குமேல் சாப்பாடு முதலியதைப்பற்றிக் கேட்காதீர்கள்; வக்கீல்களுக்கு ஏதாவது வேலையிருந்தால்தானே. மாஜி°ட்ரேட்:-   ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? கொஞ்சகால மாகத்தான் நம்ம கோர்ட்டுக்கு நீங்கள் வருகிறதில்லை.  முனிசீப்கோர்ட் டெபுடி மாஜி°ட்ரேட் கோர்ட்டு இதெல்லாம் இல்லையோ? வக்கீல்:- முனிசீப்கோர்ட் டெபுடி கெலக்டர் கோர்ட்டு விசேஷம் சாவ காசமாய்ச் சொல்லுகிறேன்.  எஜமானர் கோர்ட்டுக்கோ முன்போல் கேசே வருகிறதில்லை.  வந்தாலும் பிராது வாங்கும்போதே தள்ளிவிடப் பார்க் கிறீர்கள்.  இல்லாவிட்டால் வாதி பிரதிவாதி இரண்டுபேரையும் தண்டித்து விடு கிறீர்கள்.  எஜமானர் கோர்டுக்கே கட்சிக்காரர்கள் வர பயப்படுகிறார்கள். ஏதா வது தைரியமாய் வக்கீல் வைத்துக் கொண்டு வந்தால் அந்த வக்கீலை எஜ மானர் மதிப்பதேயில்லை. அவனை வாயெடுக்க விடுவதில்லை. எல்லாக் கேள்விகளையும் கிராசுகளையும் எஜமானரே கேட்டு முடிவு செய்து விடு கிறீர்கள். பிறகு...

மலையாளச் சம்பிரதாயம்   – சித்திரபுத்திரன்

மலையாளச் சம்பிரதாயம்  – சித்திரபுத்திரன்

  “கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்றவாண்டில் கிடைத்தது.  ஆங்கு நான் கண்டும் கேட்டவைகளில் சில வற்றைக் கீழே குறிப்பிடுகிறேன். வவவ நீர் நில வளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா, பலா, முந்திரி, வாழை முதலியனவும் மரவள்ளிக் கிழங்கும், நெல்லும் ஏராளமாயுண்டு.  வருடத்தில் 6 மாதம் நல்ல மழை பெய் கிறது.  இயற்கை தேவியின் வனப்பை அந்நாட்டில் தான் கண்டுகளிக்க வேண்டும்.  ஆண்களும், பெண்களும் அதி சௌந்திரியமுள்ளவர்கள். நகரங் களிலும் கிராமங்களிலும் வீடுகள் விட்டு விட்டு விசாலமாகவே இருக்கின்றன. வவவ மலையாளிகள் மிகச் சிக்கனமுள்ளவர்கள்.  ஆடம்பர வாழ்க்கை அவர்களிடமில்லை.  ஆடவருக்கும், பெண்களுக்கும் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாகும்.  பெண்கள் தங்கள் மார்பை மூடுவதை நாகரிகமென்று கருதுவதில்லை.  அவர்கள் உணவும் மிகச் சிக்கனமானதே.  தமிழரைப்போல் பற்பல சாம்பார் தினுசுகளும், வெகு பல பொறியல்களும் அவர்களுக்குத்...

உலகம் போற்றும் மகாத்மா

உலகம் போற்றும் மகாத்மா

அரசியல் விஷயத்தில் பேதம் கொண்ட சிலர் காந்தியடிகளுக்கு செல்வாக்குக் குறைந்து வருகின்றதெனக்கூறி வருகின்றனர். இக்கூற்று ஆதாரமற்றது. காந்தியடிகளின் அன்பரும், சீடருமாகிய  பூஜ்யர் ஆண்டுரூ° ஒரு பத்திரிகையில் இந்திய சட்டசபையின் அங்கத்தினர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள் போன்று தற்கால நாகரீகத் தில் மயக்க முற்றுள்ளார்கள். பாமர ஜனங்களே, காந்தியடிகளின் உண்மை உபதே சத்தை அறிந்து நிர்மாண வேலையில் திளைத்து நிற்கின்றனர் என வரைந்துள்ளார். இதை உண்மையென்று எவரும் கூறுவர். மேனாட்டு நாகரீகத் தில் மயக்க முற்று நிற்கும் அரசியல்தந்திரிகளுக்கு,எம்பெருமானின் திட்டம் கூடாதுதான். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமே. நம் நாட்டைப் போன்றே சீன தேசத்தில் இதுகாலை வாடும் எளிய மக்கள் மகாத் மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். உலகில் சுதந்திரமற்று வாடும் நாடுகள் எல்லாம் காந்திய டிகளைத் துணைக்குக் கூவுகின்றன. எல்லாச் சுதந்திரம் பெற்ற மேல்நாட்டி னரும் காந்தியை ஏசுநாதர் எனப் போற்றிப் புகழ்கின்றனர். இந்நிலையில் அப் பெரியாருக்கு மதிப்புக் குறைந்து வருகின்றதெனக்...

சீனர்களின் கதி

சீனர்களின் கதி

நாகரீகத்தில் சிறந்து விளங்கிய சீனர்களின் நிலை வரவரத் தாழ்மை யுற்று வருகின்றது. இந்தியர்களைக் காட்டிலும் கீழ்நிலை அடைந்து வருகின் றார்கள். தங்கள் நாட்டில் சுதந்திரமில்லாது அந்நியர்களால் மிருகங்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களது நிலையைக் கூறுங்கால் உள்ளம் துடிக்கின்றது. என்று முதலாளிகளின் எதேச்சாதிகாரம் உலகினின்றும் ஒழியுமோ அன்றே உலகிற்கு விடுதலை. ஏழைகள் புத்துயிர் பெற்று இன் புறுவார்கள். ஜப்பான் உட்பட இருபது அந்நிய நாட்டினர் சீனத் தேசத்தினின் றும் மூலப்பொருள்களை சுரண்டுவதில் குந்தகம் ஏற்படுமோ? என்கிற பயத்தால் சீன மக்களைப் பல அட்டூழியங்களுக்கு ஆட்படுத்தி வருகின்ற னர். அக்கொடுமைகளைச் சொல்லவேண்டுவதில்லை. சீனத் தொழிலாளர் களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். இவர்கள் தங்களது நாட்டைக் காட்டிலும் சீன தேசத்தில் அதிகம் உரிமை பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், சீனர்கள் ஆட்படும் கொடுமைகளை அறியாது, அவற்றைக் களையவும் வழி தேட ஆற்றல் இல்லாத பர்க்கன் ஹெத் பிரபு சீன மாணவர்கள் மீது பாய்கிறார். ஏழை மாணவர்கள் கொடுமை செய்கின்றனரா?...

இதற்குப் பெயரென்ன ?

இதற்குப் பெயரென்ன ?

சுயராஜ்யக் கட்சியார் காங்கிர° ஒத்துழையாமையைக் கைவிட்ட போதிலும் தாங்கள் ஒத்துழையாமையை விடப்போவதில்லையென்றும், மிதவாதக்  கட்சியும் ஜ°டி° கட்சியும் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகவும், ஒத்துழையாதாருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்றும், தேர்தல் சமயங் களில் மேடைமீது நின்று பேசி பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறார் கள். சுயராஜ்யக் கட்சியின் எல்லா இந்தியத் தலைவ ரான மோதிலால்நேரு அவர்கள் திடீரென்று  சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ட ராணுவக் கமிட்டியில் அங்கத்தினர் வேலையை ஒப்புக்கொண்டார். இதற்கு மாதக்கணக்கான சம்பளம் வராவிட்டாலும் தினக்கணக்கான சம்பளம் உண்டு. தினம் 100, 200 வீதம் சர்க்காரார் கொடுப்பார்கள். ‘மட்டிமன்’ கமிட்டியில் அங்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி சர்க்காரார் சொன்னபோதும்,  தங்கள் அபிப்பிராயத்தையாவது சொல்லுங்கள் என்று கேட்டபோதும், அங்கம் பெற முடியாதென்றும், சர்க்கார் கமிட்டியின் முன் சாட்சியம் சொல்ல முடியா தென்றும் சொன்னவர் அதற் குள்ளாக சர்க்காரிடத்தில் என்ன நல்ல யோக்கிய தையைக் கண்டுவிட்டார்? சர்க்காரோடு ஒத்துழைத்து கமிட்டியில் அங்கம் பெற்று சர்க்கார் அதிகாரி களோடு ஊர்...

லஞ்சம்

லஞ்சம்

நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழி வாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு  வந்தால் முதன் முதலாக அந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவது தான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது. பொதுமக்களும் அரசாங்க நீதிமன்றங்களிலோ, நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் நியாய மன்றங்களில் விவகாரங் களைத் தாக்கல் செய்யவேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதி பதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லு கின்றனர். சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு, நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர்....

நான்கு சித்திரங்கள்

நான்கு சித்திரங்கள்

ஒரு தமிழ் நாட்டுப் பெண் நாட்டியமாடுவது போலவும் ஒரு தமிழ் நாட்டு…………….ன் ஆட்டுவிப்பது போலவும் சித்திரம் எழுதி, இங்கிலாந்தில் தேசியக் கூத்து என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு சுயராஜ்யக்கட்சி காரியதரிசியாய் இருந்த ஒருவர் இங்கிலாந்துக்கு தேசிய பிரசாரத்திற்கு போவதாகச் சொன்னதையும், அவர் போகும்போது ஒரு நாட்டியப் பெண்ணும் கூடப் போயிருக்கிறது என்று சொல்வதையும் குறிக்கிறது போல் இருக்கிறது. மற்றொன்று ஒருவர் ஒரு மாளிகையில் அன்னிய உடையுடன் ஒரு கையில் சிகரெட்டும் மற்றொரு கையில் பிராந்திக் கோப்பையும் பக்கத்தில் ஒரு சாராயக் குப்பியும் அருகில் ஒரு பொட்லரும் இருக்க அதுசமயம் மகாத்மா உள்ளே வர உடனே வேலைக்காரனைக் கூப்பிட்டு மீட்டிங்குக்குப் போக வேண்டும், மீட்டிங்குக்கு உடுத்துவதான கதர் உடை கொண்டுவா என்று சொல்வது போல் ஒரு சித்திரம்  மகாத்மாவின் புது சிஷ்யர்களின் பெருமை யைக் காட்டுவதுபோல் வரையப்பட்டிருக்கிறதுபோல் இருக்கிறது. இது கல்கத்தாவில் மகாத்மாவின் பிரயத்தனத்தால் மேயர் ஆன ஸ்ரீமான் சென்குப்தா அவர்களின் தன்மையைக்...

அகில இந்திய தேசபந்து ஞாபக நிதி

அகில இந்திய தேசபந்து ஞாபக நிதி

தேசபந்து தாசர் இரவு பகலாய்ச் செய்யவேண்டுமெனக் கருதி வந்த கிராம நிர்மாண வேலை செய்யும்பொருட்டு இந்நிதி வசூலிக்க காந்தி அடிகள், பண்டித மதிலால் நேரு, சரோஜனி தேவியார், ஜம்னாலால் பஜாஜ், பி.ஸி.ரே, சௌகத் அலி, ஜவஹரிலால் நேரு முதலிய அரிய தலைவர்கள் ஓர் வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.  இந்நிதியைப் பிரசாரத்திற்குச் செலவு செய்யப்படப் போவதில்லை.  படித்தவர்களை கிராமங்களுக்கு அனுப்பி அங்கு அவர்கள் கிராம நிர்மாண வேலைகள் செய்வதற்கே செலவு செய்யப்படும்.  தாசர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தார்ஜிலிங்கில் “எனது நோய் குணப்பட்டவுடன் கிராமங்களில் இராட்டினங்களைப் பரவச் செய்வதற்கே வேண்டிய முயற்சி செய்யப்போகிறேன்” என்று காந்தி அடிகளிடம் கூறி னாராம்.  உணவில்லாது வாடும் மக்களைக் காப்பதற்கு இந்நிதி வேண்டு வது மிகவும் அவசியமாகும்.  இக்கிராம நிர்மாண வேலையே நமக்குச் சுதந்த ரத்தை அளிக்கக்கூடியது.  நகரங்கள் என்னும் பேய்களின் நாகரீகம் என்னும் மாயை ஒழித்து மக்கள் எல்லோரும் கிராம வாழ்வு வாழ்ந்து, பண்டைக்...

சா°திரியாரின் தேசாபிமானம்

சா°திரியாரின் தேசாபிமானம்

திரு.வி.எ°.சீனிவாச சா°திரியாரை அறியாத இந்தியர் இரார் என்பது உறுதி.  நமது தேசாபிமானிகளில் ஒருவராக அவரும் விளங்கி வருகின்றார்.  ஆங்கிலேயர் இதுவரையிலும் இந்தியர்களுக்கு அளித்த பட்டங்களில் உயரிய பட்டத்தைப் பெற்றவராவர்.  இரண்டொரு நாட்களுக்கு முன்னர் அவர் தமது தேசாபிமானத்தின் ஆழத்தை இந்தியருக்கு அளந்து காட்டியிருக்கிறார்.  நாட்டின் தற்கால அரசியல் நிலையைப் பற்றிச் சிறந்த தேசாபிமானிகளின் அபிப்பிராயங்களை அறிய வேண்டி ‘பம்பாய் கிரானி கல்’ பத்திரிகை சில கேள்விகளை விடுத்திருக்கிறது.  அக்கேள்வி களுக்குப் பதில் அளித்த பெரியார்களில் நமது சா°திரியாரும் ஒருவர்.  அக் கேள்வி களில் ஒன்று பின்வருமாறு:- “அந்நிய நாட்டு ஆடை அணிவதை விட்டு விடத் தாங்கள் தயாராக இருக்கிறீர்களா? தாங்கள் அந்நிய ஆடையை உபயோகித்துக் கொண்டு  வரின், சுதேசி இயக்கம் முன்னேற்றமடைய அதை விட்டுவிட ஒருப்படுகிறீர்களா?”  இக்கேள்விக்கு ‘இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நமது சா°திரியார் பதில் கூறிவிட்டார்.  என்னே இவரது தேசாபிமானம்! என்னே ஏழை இந்திய மக்களிடத்து இவருக்குள்ள பேரன்பு!...

ஸ்ரீ சிவம் மறைந்தார்

ஸ்ரீ சிவம் மறைந்தார்

சென்ற இரண்டு மூன்று வாரங்களாக மறைந்திருந்த துக்கம் நம்மை மீண்டும் சூழ்ந்து விட்டது.  இது, தேசத்தின் பிற்கால வாழ்வில் மேலும், மேலும் சலிப்பிற்கே இடம் கொடுத்து வருகின்றது.  சின்னாட்களுக்கு முன்பாக ஸ்ரீ ஜத் சுப்பிரமணிய சிவனார் மதுரையில் நோய்வாய்ப்பட்டு மிக வருந்துகிறார் எனப் பத்திரிகைகளில் பார்த்தோம்.  கொடிய கூற்றுவன் இவ்வளவு விரைவில் நமது அரிய தேச பக்தரைக் கொள்ளை கொள்வான் எனக் கனவினும் கருதவில்லை.  நமது சிவனார் பழைய தேச பக்த வீரர்களில் ஒருவர்.  1907ம் ஆண்டில் நமது நாட்டிடை ஏற்பட்ட சுதேசியக் கிளர்ச்சியின் பொழுதே முக்கியமானவராக நின்று தொண்டாற்றியதன் பலனாய் ஸ்ரீமான்கள் வ.உ.சிதம்பரம்பிள்ளை, குருதாதய்யர் முதலிய நண்பர்களுடன் ஆறு வருட தண்டனை அடைந்து சிறையில் பட்ட கடினங்கட்கு ஓர் அளவில்லை.  அப்பொழுது அவரைக் கொண்ட நோய்தான் இதுகாலை அவரை வீழ்த்தியது.  அக்காலத்தில் சிறை என்றால் எவ்வளவு இழிவும் பயமும் என்பது யாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.  அப்படி யிருந்தும்  சிறையினின்றும்...

காவேரி அணை

காவேரி அணை

ஈரோட்டிற்கு முப்பத்தேழு மைல் தூரத்தில் மேட்டூர் என்னும் கிராமத் திற்கு அருகில் ஓடும் காவேரிநதியின் இருகரைகளிலும் இரண்டு பெரிய மலைச்சரிவுகள் இருக்கின்றன. அவ்விரு சரிவுகளுக்கு இடையில் ஓடும் காவேரிநதியின் பிரவாக ஜலத்தை இச்சரிவுகளை ஆதாரமாகக்கொண்டு அணை கட்டி நிறுத்திவிட்டால், வேடைகாலத்திற்கு நீர்ப்பாசனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்று சுமார் 50, 60 வருஷ காலமாக சென்னை அரசாங்கத்தாருக்கு நிபுணர்களால் யோசனை சொல்லப்பட்டு வந்தது. அந்த யோசனையின் மேல் சுமார் 25 வருடத்திற்கு முன்பாக ஸ்ரீமான் பி.வி.மாணிக்க நாயக்கர் முதலிய இஞ்சினியர்களால் இந்த அணைக்குத் திட்டம் போடப்பட்டிருந்தும் நாளது வரையிலும் வேலைத் துவக்கப்படாமல் இப்பொழுதுதான் வேலைத் துவக்கத்திற்கு ஏற்பாடாக, சென்னை கவர்னர் அவர்களால் மேட்டூரில் சூலை 20 தேதி அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது. இவ்வேலைக்கு 6 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வேலை முடிய குறைந்தது பத்து வருஷம் ஆகும் என்று கருதப்படுகிறது. இந்த அணையின் நீளம் ஆறாயிரம் அடி.  நீர்தேக்கத்தின் பரப்பு சுமார் இருபது சதுரமைல். இதன்...

குரோதன வருஷத்தின் பலன்

குரோதன வருஷத்தின் பலன்

இவ்வருஷம் சங்கராந்தி வியாபாரிகளின் மேலும், லேவாதேவிக் காரர்கள் மேலும், ஜாதி ஆணவத்தின் மேலும் வந்திருக்கிறது போல் காணப் படுகிறது. ஏனெனில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று லட்சக்கணக்கான துகைக்குச் சில வியாபாரிகளும், 25 லட்சம், 50 லட்சம், 75 லட்சம் என்று பத்து லட்சக்கணக்கான துகைக்கு லேவாதேவி செய்யும் சில நாட்டுக்கோட்டை செட்டிமார் முதலியவர்களும் தீவாளி ஆகிவருவதாகவும், பார்ப்பது தோஷம், தெருவில் நடப்பது தோஷம் என்கின்ற ஆணவத் தத்துவங்கள் அழிந்து வருவதாகவும், இன்னும் அடியுடன் அழியப் பொதுமக்கள் உணர்ச்சியுடன் முயர்ச்சி செய்வதாகவும் பத்திரிகைகளில் பார்த்துவருகிறோம். குடி  அரசு – செய்திக் குறிப்பு –  26.07.1925      

ஈரோடு முனிசிபல் நிர்வாகம்  – பழைய கறுப்பன் 

ஈரோடு முனிசிபல் நிர்வாகம் – பழைய கறுப்பன் 

  நான் யார் ? பழைய கறுப்பன் என்பவர் யார்? என்று அநேகர் என்னையே கேட்டார்கள். அவ்வப்பொழுது என் மனதில் தோன்றின பதிலை அவரவர் களுக்குச் சொன்னேன். சிலருக்கு திருப்தி, சிலருக்கு அதிருப்தி. உலகத்தில் எல்லாருக்கும் நல்லவனாய், எல்லாரையும் திருப்தி செய்ய நினைப்பது முடியாத காரியம். அவ்வித முயற்சி “கிழவனும், மகனும், கழுதையும்” என்ற கதையாய்த்தான் முடியும். ஆகையினால் அதிருப்தியினால் நான் கவலைப்படவேயில்லை. ஆனால் இந்தக் கேள்வியில் அடங்கிக் கிடக்கிற ஒரு உண்மையை எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும். விஷயம் முக்கி யமா? விஷயகர்த்தா முக்கியமா? என்பதுதான். விஷயகர்த்தா முக்கியத் தினால்தான் இந்தக் கேள்வி பிறந்தது என்று  அறிந்தேன். விஷயகர்த்தாவைக் குறித்துதான்  விஷயம் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்று நமது ஜனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனப் பான்மைதான் நம்மையும் நமது நாட்டையும் தற்கால கதிக்குக் கொண்டுவந்து விட்டது. நான் யாராயிருந்தாலென்ன? சொன்னதெல்லாம் சரியென்று தோன் றினால் அந்தக்...

சுதேசமித்திரனின்  மதுவிலக்குப் பிரசாரம்

சுதேசமித்திரனின்  மதுவிலக்குப் பிரசாரம்

  சென்ற 22.7.25 ல் வெளியான சுதேசமித்திரன் மதுவிலக்கு விஷய மாகச் “சென்னை பிஷப்பின் யோசனை” என்று மகுடமிட்டு எழுதிய குறிப்பைக் காண எமக்கு பெரும் நகைப்பு உண்டாயிற்று. கட்டாயப்படுத்திக் கட்குடியைத் தடுக்க முடியாதெனப் பல்லாயிரக்கணக்கான கிறி°தவ சகோத ரர்களை முக்திக்குச் செலுத்தும் உபதேசியாகிய ³ பிஷப் கூறியது சுதேச மித்திரனுக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தையும் கோபத்தையும் மூட்டி விட்டது. சுதேசமித்திரனின் இக்கோபக்குறிப்பு எமக்கு வெறுஞ் சிரிப்பையே விளைவித்தது. “கண்ணாடி வீட்டில் வசிப்பவன் பிறன் வீட்டின் மேல் கல் எறிதல் கூடாது”என்ற சிறிய அறிவும் சுதேசமித்திரனுக்கு இல்லாமற் போனது எமக்குப் பெருத்த ஆச்சரியம். அதே சுதேசமித்திரனின் இதழில் முதல் பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் பெரிய எழுத்துகளில் ‘புட்டி’ படத்துடன் “எக்°ஷாஷ்” பிராண்டியைப் பற்றிப் புகழ் மிகுந்த விளம்பரஞ் செய்து பொருள் சம்பாதித்துவரும் சுதேசமித்திரன் மெய்மறந்து பாவம் எழுதி விட்டான் என்றே நினைக்கிறோம். இத்தகைய விளம்பரங்களின் வாயிலாகத் தான் நமது சுதேசமித்திரன் மதுவிலக்குப் பிரசாரம்...

தெய்வ வரி

தெய்வ வரி

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை.  அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி. துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல் லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி  நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, °தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிராயணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி...

ஊழியன்

ஊழியன்

காரைக்குடியினின்றும் வாரந்தோறும் வெளியாகும் “தனவைசிய ஊழியன்’’ தனது சிறிய தொண்டை விடுத்து உலகிற்கெல்லாம் தொண்டு செய்தல் வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு இவ்வாரம் “ஊழியன்” என்ற பெரிய பெயர் தாங்கி வெளிப்போந்துள்ளான். “தனவைசிய ஊழியன்” முதலில் தன் சமூகத்திற்கு அதிக ஊழியம் புரிந்து வந்தானாயினும் எம்பெருமான் அறவாழி அந்தணன் காந்தி அடிகளின் ஒற்றுழையா இயக்கம் அத் தனவைசிய நாட்டின்கண் பரவி, அச்சமூகத்தினர்க்குச் சுதந்தர உணர்ச்சி யைக் கொடுத்தவன் தனவைசிய ஊழியனே. அதுவும் ஈராண்டுகளாகத் தன் சமூகத்தைவிடத் தேசமே பெரிதெனக்கொண்டு கதர், தீண்டாமை ஒழித்தல் முதலிய தொண்டுகளில் தனது கவனத்தை இடைவிடாது செலுத்தி வருகின்றான். ஊழியனின் ஆசிரியரைப்பற்றி யாம் அதிகம் கூறவேண்டு வதில்லை. நமது அன்பர் திருவாளர் ராய. சொக்கலிங்கன் அவர்கள் தமிழ் ஆராய்ச்சி மிக்குடையார். காந்தி அடிகளிடத்தில் அளவற்ற பற்றுடையார்.  “காந்தி பிள்ளைத்தமிழ்” என்ற ஓர் நூலும் ஆக்கியுள்ளார். சீரிய ஒழுக்க முடையார். இளம்வயது உடையவர். சுமார் நான்கு ஆண்டுகளாக இப் பத்திரிகையின்...

திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை

திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை

திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை   ராஜ்யத்தின் விஸ்தீரணம் சதுர மைல் –        7,625 அதிலுள்ள கிராமங்கள்                                 –        3,897 இவற்றின் பட்டணங்கள்                              –        38 பட்டணங்களிலுள்ள வீடுகள்                     –        72,011 கிராம வீடுகள்                                                    –        681,816 ஜனத்தொகை மொத்தம்          ...

தேர்தல்களின் யோக்கியதையும் புதுச்சட்டத்தின் பலனும்

தேர்தல்களின் யோக்கியதையும் புதுச்சட்டத்தின் பலனும்

தேர்தல் சம்பந்தமான ஆட்சேபனை விண்ணப்பங்கள் கொஞ்சகாலத் திற்கு முன் நிர்வாக அதிகாரிகளாகிய கலெக்டர், அரசாங்க முனிசிபல் நிர்வாக அங்கத்தினர் இவர்களுக்குள்ளாகவே முடிவு பெறக்கூடிய தாகவிருந்தது. ஆனால் இப்படி நடப்பதில் தாட்சண்யங்களும், விருப்பு வெறுப்புகளும், சப்ளைகளும் சில்லரை அதிகாரிகளை விலைக்கு வாங்கப் படக்கூடியது களும் நியாயத்தைக் கெடுத்துவிடுகின்றனவென்கிற அனுபோகங்கள் ஏற்பட்டு, இந்த அதிகாரங்களை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து பிடுங்கி நீதிபதிகளுக்குக் கொடுக்கவேண்டுமென்று பொதுஜனங்களில் சிலர் வாதாடி னார்கள். அவைகளில் ஒன்றுதான் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தன் முனிசிபல் சேர்மன் பதவியையும், ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு முதலியவைகளில் வகித்துவந்த பதவிகளையும் ராஜீனாமாச் செய்தது. முனிசிபல் புதுச் சட்டம் இயற்றும்போது இவற்றைக் கவனித்து. தேர்தல் சம்பந்தமான ஆnக்ஷபனைகள் இனிமேல் நீதிபதிகளிடம்தான் தெரிவிக்க வேண்டுமென்று சட்டமும் செய்தார்கள். இந்த சட்டம் செய்யப்பட்ட பிறகு விலங்கைத் தறித்துக் குட்டையில் போட்டதுபோல் ஆகிவிட்டது. நீதி ஸ்தலத்திற்குப் போகிற விஷயத்தில் நிர்வாகஸ்தர்களிடம் அனுபவிக்கிற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்ட தென்று சொல்வதற்கு...

சென்னைத் தேர்தல்

சென்னைத் தேர்தல்

சென்னையில் இப்பொழுது நடந்துவரும் தேர்தல் பிரசாரங்களின் யோக்கியதையைப் பார்த்தால் புதுச்சேரி தேர்தலுக்கு சமமாய் வந்துவிடும் போல் இருக்கிறது.  கூட்டங்களில் ஒரு கட்சியார் மற்றொரு கட்சியார் மீது காலிகளைவிட்டுக் கல்லெறியச் செய்வதும், நூற்றுக்கணக்கான போக்கிரி களை விட்டுக் கூட்டத்தைக் கலைப்பதும் போன்ற  காரியங்கள் நடைபெறுவ தாய் இரண்டு கட்சிப் பத்திரிகைகளிலும் பார்த்து வருகிறோம். யார் கலகத் திற்குக் காரணம்? யார் தூண்டுதலின் மேல் இம்மாதிரியான காரியங்கள் நடக்கின்றன என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வராவிடினும் இம்மாதிரியான காரியங்கள் நடந்தன என்பதைப்பற்றிச் சந்தேகங் கொள்ள இடமில்லை. “குருட்டுக் கோமுட்டிக்கடையில் திருடாதவன் பாவி” என்பது போல், சரியான கல்வி அறிவும், நன்மை தீமைகளை அறிய ஆற்றலும் இல்லாத ஜனங்களிடமிருந்து ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டு மாயின் கையில் பலத்தவன்தான் காரியத்தை அடைவான். எவனுக்குப் பொய் சொல்லத் தைரியம் இருக்கின்றதோ, எவனுக்குப் பொருள் செலவு செய்யச் சக்தியிருக்கின்றதோ எவனுக்குப் பொய்ப் பிரசாரம் செய்ய சௌகரியமிருக்...