ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்
சென்ற வாரம் “சுயராஜ்யா” பத்திரிகையின் விஷமப்பிரசாரத்தைக் குறித்து எழுதியிருந்தோம். இவ்வாரம் “சுதேசமித்திரன்” பத்திரிகையினுடை யவும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரினுடையவும் விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் எழுதும்படி வந்து விட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் சென்னையில் சுயராஜ்யக்கட்சியாரின் வெற்றியைக் கொண்டாட “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” என்றும் “ வேலியே பயிரை மேய்கிறது” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கும் பல பொய்களுக்கு பதில் எழுதாவிட்டாலும் ஈரோட்டில் தனது தம்பி முனிசிபல் சபையில் °தானம் பெறும்படி செய்வதற்காக காங்கிர° பெயரையும் மகாத்மாவின் பெயரையும் ஸ்ரீ நாயக்கர் உபயோகப்படுத்திக்கொண்டது ஞாபகமில்லையா என்று பெரிய பொய்யை எழுதியிருக்கிறது. முதலாவது ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு தம்பியே கிடையாது. சென்ற வருஷத்தில் நடந்த ஈரோடு முனிசிபல் தேர்தலில் அவர் தமையனார் முனிசிபல் அபேட்சகராய் நிற்கிற காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அவர் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்த பொழுது முனிசிபல் தேர்தலுக்கு மூன்று நாட்கள்தானிருந்தன. ஈரோட்டிற்கு வந்த உடனே வேறு...