சுயராஜ்யக் கக்ஷியின் பேராசையும் அதன் முயற்சியும்
“எச்சில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிடவேண்டும், ஏய்த்து பலனடைவதானாலும் ஆசை தீர அடையவேண்டும்” என்று ஒரு பழமொழி யுண்டு, அதுபோலவே நமது சுயராஜ்யக் கட்சியார் ஆதியில் காங்கிரசை மீறிவிட்டு போனார்கள்; பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று காங்கிரசைக் கேட்டார்கள். பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடப்பதை பிறர் ஆnக்ஷபிக்கக்கூடாது என்றனர். பின்பு தங்களுக்கு வேண்டிய உதவியைக் காங்கிர°, தனது மன சாக்ஷிக்கு விரோதமில்லாமல் செய்யவேண்டும் என்று கேட்டனர். பிறகு காங்கிரசில் தாங்களும் ஒரு சரியான பாகமாயிருக்க வேண்டு மென்று கேட்டனர். பிறகு காங்கிரசில் தாங்களே முக்கிய°தர்களாக வேண்டும் என்று கேட்டனர். இவ்வளவும் அடைந்தார்கள். இப்போது தாங்களே காங்கிரசாகி விட வேண்டும்; தங்களுக்கு பதவிகளும், உத்தியோகமும், காங்கிரசே வாங்கி கொடுக்க வேண்டும்; அப்படி காங்கிர°காரரே எல்லா பதவியும், உத்தியோ கமும் சம்பாதித்து கொடுப்பதானாலும், தங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது; தங்கள் உத்திரவில்லாமல் காங்கிர°காரரும் அனுபவிக் கக் கூடாது;...
