Tagged: வழக்கு

விடுதலை இராசேந்திரன் மீதுகாவல்துறை வழக்கு

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மீது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மயிலாடு துறையில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக சுமார் ஓராண்டுக்குப் பிறகு காவல்துறை இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. “தந்தை பெரியாரை யார், எதற்காக எதிர்க்கிறார்கள்?” என்ற தலைப்பில் அப்பொதுக் கூட்டம் நடந்தது. இரு பிரிவினரிடையே வன்முறையை  தூண்டும் விதமாக பேசியதாக மயிலாடுதுறை காவல்துறை  இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 153 (பி), 504 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இவை பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளாகும். இதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் துரை. அருண், உயர்நீதிமன்றத்தில் விடுதலை இராசேந்திரன் சார்பாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த 28ஆம் தேதி மனு  விசாரணைக்கு வந்தது. “ஒரு வருடம் கழித்து, இப்போது  வழக்குப் பதிவு செய்வது ஏன்? இந்த பேச்சுக் குறித்து எவரிடமிருந்தும் புகாரும் வரவில்லை. இரு தரப்புக்கிடையே மோதல் உருவாகும் சூழலில்...