Tagged: யாழ் நகர்

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப் பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கையை கண்டித்தும் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைக் கோரியும் மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இந்தப் பேரணியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், கஜேந்திர குமார் தலைமையிலான தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேம சந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம், சர்வ மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடக வியலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் ஒன்றுபட்ட எழுச்சி மீண்டும் ஈழத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழர்களின் ஒருங்கிணைந்த உரிமைப் போராட்டம் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. பெரியார் முழக்கம் 15092016 இதழ்