Tagged: பெரியார் முழக்கம் 2906014 இதழ்

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

இதயத்தின் துடிப்புக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. தேசம்-மொழிகளையும் கடந்து நிற்கிறது. இந்த உடலின் இயக்கம்; மனித உடலும், உடல் இயக்கமும் வெளிப் படுத்தும் ஒரே அடையாளம் மனிதர்கள் என்ற ஒன்றை மட்டும்தான். 27 வயதே நிறைந்த இளைஞன் லோகநாதன் சாலை விபத்துக்குள்ளாகி அவரது மூளையின் இயக்கம் மரணித்துவிட்ட நிலையில் இதயம் மட்டும் உயிர்ப்புடன் துடித்தது. அதே நேரத்தில் அடையாறு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பாதிப்புக்கு உள்ளான மும்பையைச் சார்ந்த அலோவி என்ற 27 வயது பெண்ணுக்கு மாற்று  இருதயம் ஒன்று கிடைத்துவிட்டால் உயிர் பிழைத்துவிட முடியும்! மரணத்தைத்தழுவிவிட்ட தனது மகனின் இருதயம் வேறு ஒரு உடலில் துடித்துக் கொண்டிருக்குமானால் – அன்பு மகனின் மறக்க முடியாத நிலைத்த நினைவாக இருக்குமல்லவா? அப்படி ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வந்தார் அந்தத் தாய். அவர் அரசு மருத்துவமனையில் செவிலியர். பெருமைக்குரிய அவரது பெயர் இராஜலட்சுமி. துடிக்கும் இருதயத்தை...