Tagged: பிரபாகரன்

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 50 ஆவது பிறந்தநாளையொட்டி 2004 ஆம் ஆண்டு ‘ஈழ முரசு’ சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தினேஷ் என்ற போராளி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப் பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழி தவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணி யும் அவனை அடையாளங் காட்டிவிட்டார். அவ்வாலிபன்...

குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம்: ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி

குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம்: ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி

நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு கொளத்தூர் புலியூர் பிரிவு, தண்டாசாலையில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். பொது மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் தோழமை அமைப்புகள் உட்பட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்க நிகழ்வுக்கு பின் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, காமராசு, கழகப் பொருளாளர் இரத்தினசாமி ஆகியோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். சரியாக 6.04 மணிக்கு மாவீரர்...