Tagged: பா.சண்முகசுந்தரம்

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

22-05-2014 வியாழக்கிழமை மாலை 6-00 மணியளவில், கர்நாடக மாநிலம், பெங்களூர்த் தமிழ்ச் சங்க கட்டிடம், திருவள்ளுவர் அரங்கில் மறைந்த, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், கர்நாடகத் தமிழர்ப் பேரவையின் தலைவருமாகிய திரு பா.சண்முகசுந்தரம் (எ) அண்ணாச்சி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. மறைத்திரு பா.சண்முகசுந்தரம் நினைவு அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் “அண்ணாச்சி சிறப்பு மலர்” வெளியிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மலரை வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். காவேரிக் கலவரம், தொடர்வண்டித் துறையினரின் நிலம் கையகப்படுத்துதல், தலைமுறைக் கணக்காய் வாழ்ந்தோரை வனத்துறையினர் விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளில் கருநாடகத் தமிழரின் உரிமை காக்க முன் நின்றவரும்; ஈழ விடுதலை ஆதரவாளரும்; விடுதலைப் புலிகளின் தோழருமான அண்ணாச்சி அவர்களை நினைவு கூர்ந்து, பலரும் உரையாற்றினர். கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்: கொளத்தூரில்...