Tagged: பரோல்

சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா?

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்கு திடீர் ‘ஞானோதயம்’ வந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நவம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்தப் பிறகு, 3 மாத காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜுனா, இந்த 7 தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது; அவர்கள் தேச விரோதிகள்என்று சோனியா சொல்லிக் கொடுத்த மொழி களில் பா.ஜ.க. ஆட்சியை மிரட்டி விட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று கூறி விட்டார். இந்த 7 தமிழர்களும், ராஜீவ் கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; ‘தடா’ சட்டத்தின் கீழ் மிரட்டி, சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு...