Tagged: நா.ப. இராமசாமி

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

10.10.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல் சுப்புலட்சுமி மகாலில் (23.9.2013 அன்று மறைந்த) தமிழினப் போராளி நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நா.ப. இராமசாமி படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெ. மணியரசன், வழக்கறிஞர் இரத்தினம், முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன், எழுத்தாளர் வேலுச்சாமி, கன. குறிஞ்சி, நிலவன், கி.வெ. பொன்னையன், பரமத்தி சண்முகம் உள்பட பலர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக நா.ப.இராமசாமி மகன் இரா. அன்பழகன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 17102013 இதழ்