Tagged: தேசிய கீதம்

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கனமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி பேசிய செய்தி ஏடுகளில் வெளி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இப்போது பய்யாஜி அப்படி கூறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (இந்தப் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் ‘பிரச்சார் பிரமுக்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது) எம்.ஜி.வைத்யா, பய்யாஜி ஜோஷியின் கருத்துக்கு தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். “மூவர்ண தேசியக் கொடியை அரசியல் சட்டம் ஏற்றுள்ளது. இதை மதிக்க வேண்டும்; அதே நேரத்தல், நமது ‘பாரதத்தின்’ பூர்வீக கலாச்சாரத்தின் சின்னமாக காவிக் கொடி ‘தேசியக் கொடி’ உருவாவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதேபோல் ‘ஜனகணமன’ பாடல் நமது ‘இராஜ்யம்’ பற்றி கூறுகிறது. ஆனால், ‘வந்தே மாதரம்’, நமது கலாச்சாரத்தின் அடையாளம். எனவே நாம் காவிக் கொடி,...

ஜன கண மன…

ஜன கண மன…

தேசபக்தியை திரையரங்குகள் வழியாகத்தான் ஊட்டி வளர்க்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு உச்சநீதி மன்றம் வந்திருக்கிறது. இனி திரைப்படம் தொடங்கு வதற்கு முன்பு திரையரங்க கதவுகளை இழுத்து மூடிவிட்டு திரையில் தேசியக் கொடியை காட்டி ‘ஜன கண மன’ பாடலை பாட வேண்டுமாம்! அப்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமாம்! திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு புகைப் பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்; மது அருந்துவது உடலுக்குக் கேடு தரும் என்ற விளம்பரங்கள் போடுவது கட்டாயப் படுத்தப்பட்டிருந்தது. இந்த வரிசையில் “ஜன கண மன பாடுவது  தேச பக்தியை வளர்க்கும்; அப்போது எழுந்து நின்றால், கால் வலி, மூட்டு உபாதை நீங்கும்” என்ற விளம்பரத்தையும் சேர்த்துக் கொள்ள லாம்! இதேபோல் ‘டா°மாக்’ கடைகள் நட்சத்திர ஓட்டல், மதுபான விடுதிகளில் ஜன கண மன’ பாடலை திறக்கும் போதும், மூடும் போதும் ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடுமோ? வேண்டாமய்யா… அங்கே...