Tagged: தீட்சதர்கள்

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள் என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ் மறை! அந்தப் பாடல்களை நியாயமாக தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்று அதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்து கரையானுக்கு ‘அமுது’ செய்தனர். அந்தக் காலங்களில் எழுத்துக்கள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில் தானே? ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல சந்தையில் கிடைக்கக் கூடியதும் அல்ல. கோயில்களிலும், மடங் களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப் பற்றாளர் களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவையாகும். அவை முழுமையாகக் கிடைப்பது முற்றிலும் அரிது. தேவாரப் பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை. தேவாரப் பாடல்களைக் கேட்டு ரசித்த ராஜராஜ சோழன்...

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன. தீட்சதர்கள் – இந்து மதத்துக்குள்ளேயே தனிப் பிரிவினர். இவர்களின் உரிமைகளை அரசி யலமைப்புச் சட்டத்தின் 26 பிரிவு உறுதி செய்கிறது. எனவே, தீட்சதர்கள், தில்லை நடராசன் கோயிலை நிர்வகிக்கும் உரிமையில் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு, பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பு ஆயுதமாக இருந்து வருகிறது. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் எரிக்கப்பட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்று. சமணர்கள் தனிப் பிரிவாக இருந்தாலும்கூட, சமணக் கோயில்கள், இந்து சட்டத்தின் கீழ்தான் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் ‘முன் குடுமி’ ஒன்றைத் தவிர, ஏனைய ஸ்மார்த்தப் பார்ப்பனர்களைப் போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தீட்சதப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்து, தங்களை “பிராமணர்கள்” என்றுதான் அறிவித்துக் கொள்கிறார்கள். கோயிலுக்குள் ‘ஓதுவார்’...