Tagged: திராவிடர் பண்பாட்டு மலர்

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வா°து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து – கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் – விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன. ‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத்...