Tagged: தமிழ்நாடு தமிழருக்கே

மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது- கொளத்தூர் மணி எச்சரிக்கை

தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று திவிக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படும் இப்போதுதான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1956-ம் ஆண்டு வரை சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷாவின் பகுதிகள் இணைந்து இருந்தன. ஆனால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் திருப்பதி, திருத்தணி, உள்ளிட்ட பல பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கொள்ளேகால், காவிரி பிறக்கும் குடகு, கோலார் தங்கவயல் உள்ளிட்டவை கர்நாடகாவோடு இணைந்தன. உயிர்த்தியாகங்கள்.. திருத்தணியும் கன்னியாகுமரியும் உயிர்த் தியாகங்களுக்குப்...

அந்நியர் பிரதமர்

அந்நியர் பிரதமர்

நம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத்தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன? திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? – பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று. தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்

தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்

பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம். உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட...

சுதந்திர இந்தியாவின் கொடி

சுதந்திர இந்தியாவின் கொடி

‘சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்’ என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் ‘ஹிந்துஸ்தான்’ கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் ‘ஹிந்துஸ்தானில்’ இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்” – பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு முழக்கம் – நீதிமன்றத்தில் பெரியார்

தமிழ்நாடு முழக்கம் – நீதிமன்றத்தில் பெரியார்

இந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். – நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்  

தமிழ்நாடு தமிழருக்கே – தமிழ்நாடு பிரிவினை

தமிழ்நாடு தமிழருக்கே – தமிழ்நாடு பிரிவினை

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ 27111950 சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்