Tagged: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம்

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்! 0

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்!

நாமக்கல் மாவட்டத்தை கடந்த சில மாதங்களாகவே ஜாதிவெறி சக்திகள் தங்களின் மேலாதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இப்போது ஒரு காவல்துறை பெண் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை வரை சென்றிருக்கிறது. தலித் சமூகத்திலிருந்து அதுவும் ஒரு பெண் டி.எஸ்.பி தேர்வு பெற்று காவல்துறையில் பணியாற்ற வருகிறார் என்றால், அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அவர்,எத்தனையோ தடைகளை தனது கடும் முயற்சியாலும் திறமையாலும் வென்று, கடந்து வந்திருப்பார் என்பதில் இருவித கருத்துக்கு இடமிருக்க முடியாது. கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியும், உள்ளூர் ஆதிக்க ஜாதியைச் சார்ந்த பெண்ணும் சந்தித்தார்கள் என்ற ‘குற்ற’த்துக்காக ஜாதி வெறி கும்பல் ஒன்று கோகுல் ராஜ் தலையை துண்டித்து, தண்டவாளத்தில் வீசியது. இதில் தேடப்படும் முதன்மை குற்றவாளியான கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த யுவராஜ் என்ற நபர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நபர் தலைமறைவாக இருந்து கொண்டு ‘வாட்ஸ்அப்’ வழியாக காவல்துறைக்கு சவால்விட்டு ஜாதி வெறியைத் தூண்டி,...