Tagged: சொர்க்கம்

‘சொர்க்கம்’ போக ‘ரொக்கம்’ செல்லாது!

நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ‘பகவான்’ களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது. கோயில் உண்டியல் காணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாம்! அவ்வள வும் 500, 1000 நோட்டுகளாம். திருப்பதி, பழனி, திரு வரங்கம், திருத்தணி கோயில் களில் உண்டியல் நவீன மய மாக்கப்பட்டுள்ளது, அதற்குப் பெயர் ‘ஈ உண்டியல்’. இனி பக்தர்கள் ரொக்கமாக காணிக்கை செலுத்த முடியாது. டெபிட், கிரடிட் கார்டுகள் வழியாகவே ‘பகவானுக்கு’ காணிக்கை  செலுத்த முடியும். உண்டியல் காணிக்கை வங்கிக் கணக்குக்கு மாற்றப் பட்டு, பிறகு வங்கியிலிருந்து ‘பகவானுக்கு’ போய்ச் சேரும் போலும். ‘ரொக்கம்’ இல்லாத பணமாற்றத்துக்கு கடவுள்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். சிவன், பெருமாள் உள்ளிட்ட அனைத்து கடவுள் களையும் கறுப்புப் பணத்தையோ, செல்லாத நோட்டுகளையோ போட்டு பக்தர்கள் இனியும் ஏமாற்ற முடியாது. “கடவுளுக்கே இப்படி கருப்புப் பணத்தை காணிக்கை யாக்குகிறோமே இது தெய்வக் குற்றமாகிவிடுமே” என்ற அச்சம், பயம் எல்லாம் பறந்து போய் வெகு நாளாச்சு! இது குறித்து முகநூலில்...